Thiruchchikkaaran's Blog

ஸ்ரீ சத்ய சாய் பாபாவினால் இந்திய சமூகத்திற்க்கு கிடைத்த நன்மை என்ன?

Posted on: April 25, 2011


பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா என்று பலராலும் வணங்கப் பட்டு வந்த திரு. சாய்  பாபா மரணம் அடைந்து விட்டார். அவருடைய பிரிவால் வருந்துவோர்க்கு நம் அனுதபங்களை தெரிவிக்கிறோம்.

http://www.youtube.com/watch?v=JpmqKdoriyg

நாற்பதாயிரம் கோடி சொத்து என்கிறார்கள், ஒரு லக்ஷத்து அம்பதாயிரம் கோடி 
சொத்து என்கிறார்கள்- எவ்வளவாக இருந்தாலும் அந்த கல்லூரி,மருத்துவமனைகளில்
 எந்த  அளவுக்கு நலிவுற்ற மக்களுக்கு, ஏழைகளுக்கு இலவசமாக கல்வியும், 
மருத்துவ உதவியும் வழங்கப் படுகிற்தோ அந்த அளவுக்கு ஸ்ரீ  சாயி பாபாவினால் 
நன்மை  உண்டாயிருக்கிறது எனக் கருதலாம்.

ஆன்மீக முன்னேற்றம் அடைவதன் முக்கிய பகுதிகளில் ஒன்று ஒரு மனிதன் 
அதிக கருணை உடையவனாக,பிறர் மேல் இரக்க சிந்தனை உடையவராக ஆவதும் 
ஆகும்.

அதே நேரம் ஒரு ஆன்மீகவாதியின் முக்கிய பணி என்னவென்றால், 
மற்றவர்களையும்  ஆன்மீக முன்னேற்றம் அடைய வைப்பதுதான். 


ஆன்மீக முன்னேற்றம் அடைவது என்றால், எல்லோரையும் நேசிப்பது,  நட்புடன் 
அணுகுவது, கருணையுடன் இருப்பது, உண்மையை  தேடுவது, வலிமையான 
மன நிலயை அடைவது,  குழப்பமான காலத்திலும் உறுதியாக  இருப்பது, 
இன்ப துன்பங்களில் கலங்காமல் இருப்பது, தன்னம்பிக்கை உடையவனாக  இருப்பது,
 கையறு நிலயிலும் சோர்வடையாமல் சரியான பாதையில் செல்வது,  
அகந்தை இல்லாமல் இருப்பது, சுய‌னலத்தைக் குறைத்து பிறர் நலத்தை எண்ணுத, 
விடுதலை நோக்கம், முயற்சி...கிய பண்புகளை உடைய மன நிலைக்கு செல்வதே.

இந்திய சமூகத்தில் ஆங்கிரஸர், யாக்வல்ங்கர், நசிகேதஸ், மார்க்கண்டேயன்,  
பிரஹலாதன், சித்தர்கள், ..... கிரிஷ்ணர், புத்தர், ஆதி சங்கரர், அப்பர், 
இராமனுஜர், மத்வர், பட்டினத்தார், குருனானக், கபீர், சைதன்யர், தியாகராசர்,  
இராமகிரிஷ்ணர்,  சுவாமி விவேகானந்தர்.... உள்ளிட்ட பலரும் மக்கள் தங்களை 
தாங்களே உயர்த்தி உயர்ந்த ஆன்மீக மன நிலயை அடையும் பகுத்தறிவு பாதையில்
 மக்களுக்கு ஆன்மீகத்தை  போதித்தனர்.

ஆனால் "பகவான்" ஸ்ரீ சத்ய சாய்  பாபாவோ,
மற்றவர் அவரை கடவுளாக கருதி போற்றும் படியான ஒன்றையே உருவாக்கி 
இருப்பதை பார்க்கிரோம். வாயில் இருந்து லிங்கம்  வரவழைப்பது, கையிலே தங்க 
சங்கிலி , மோதிரம் வர வழைப்பதுஇப்படையான "அதிசயங்களை" காட்டியதுதான்
 நடந்ததே தவிர பெரியதாக ஆன்மீக எழுச்சி எதுவும் தென்படவில்லை ,
 இதனால் ஒருவன் தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ள உதவும் இந்திய 
ஆன்மீகத்துக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது என்றே சிந்தனையாளர்கள் 
கருதுகின்றனர்.  

(தொடரும்)

Title:சாயி பாபாவினால் இந்திய சமூகத்திற்க்கு கிடைத்த நன்மை என்னா?

64 Responses to "ஸ்ரீ சத்ய சாய் பாபாவினால் இந்திய சமூகத்திற்க்கு கிடைத்த நன்மை என்ன?"

// பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா என்று பலராலும் வணங்கப் பட்டு வந்த திரு. சாய் பாபா மரணம் அடைந்து விட்டார் //

பகவான் மரணமடைந்துவிட்டார் எனும் கூற்று விஷமத்தனமானது;அது பகவானுக்கே பெருத்த அவமானமாகும்;அவர் இன்னும் சித்தியடைந்துவிட்டதாகவும் முக்தியடைந்துவிட்டதாகவும் பல்வேறு குழப்பமான கூற்றுகள் வெளிவந்துகொண்டிருக்கிறது;இவையெல்லாம் ஒன்றை மட்டும் தெளிவாக்குகிறது; எந்தவொரு இந்துவுக்கும் மரணத்தைக் குறித்தும் மறுமையைக் குறித்தும் சரியான பார்வையில்லை; மூடநம்பிக்கைகளை ஒழிக்க நினைக்கும் திருச்சிக்காரனே பெரிய மனது பண்ணி இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும்;தேள் கடிப்பதால் ஒருவன் இன்னொருவனாக முக்தியடைந்துவிடமுடியுமா? அல்லது இதுவரை சித்திபெற்றிராத ஒருவர் எப்படி 40 வருடத்துக்கு மேலாக அனைவருக்கும் அருள் பாலித்தார் என்பதெல்லாம் சாமான்யனுடைய ஞானத்துக்கு எட்டாத சிக்கலான கேள்விகளாகும்.

சாய் பாபாவால் ஆன்மிக முன்னேற்றம் நடந்ததோ இல்லையோ, நிச்சயம் எந்த வெறுப்பு கருத்தும் போதிக்கப்படவில்லை.
நீங்களே குறிப்பிட்டதுபோல சில நல்ல செயல்கள் (மருத்துவ,கல்வி மற்றும் பிற உதவிகள்) செய்யப்பட்டிருக்கிறது.
தன்னை கடவுள் என்று கூறிகொண்டாலும் (உங்கள் கூற்றுப்படி) தன்னை வணங்காதவர்கள் எல்லாம் நரகம் புகுவர் என்று சொல்ல வில்லை.
அவர் பெயரால் எந்த இனமும் கொலையாகவில்லை. யாரையும் பாவி என்று கூறவில்லை.
மேலும் அவர் தன்னை மகான் சாய்பாபாவின் அவதாரம் என்றுதான் கூறிகொண்டாரே ஒழிய கடவுள் என்று சொன்னதாக தெரியவில்லை.தவறு இருப்பின் விளக்கினால் திருத்திகொள்வேன்.
அவரது பக்தர்கள் கோவில்களிலும் மருத்துவமனைகளிலும் தன்னார்வத்துடன் சேவை செய்வதை பார்த்திருக்கிறேன். விளம்பரம் இல்லாத மதமாற்றம் வேறு எந்த உள்நோக்கமும் இல்லாத சேவைமட்டும் செய்தார்கள் அவரின் பக்தர்கள்
நான் அவரது பக்தன் இல்லை. எனக்கு தெரிந்தவரை சொன்னேன் அவ்வளவே.

சிலசம்,
சித்தி அடைதல் அல்லது முக்தி பெறுதல் என்பதற்கு தாங்கள் வைத்துள்ள விளக்கம் என்ன?சிலுவையில் உயிர்விடுவதுதான் முக்தியா?

// பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா என்று பலராலும் வணங்கப் பட்டு வந்த திரு. சாய் பாபா மரணம் அடைந்து விட்டார் //

பகவான் மரணமடைந்துவிட்டார் எனும் கூற்று விஷமத்தனமானது;அது பகவானுக்கே பெருத்த அவமானமாகும்;////////////////////
அவரின் கூற்றையும் உங்கள் குற்றியும் படித்தால் தெரியும் யார் செய்வது விசமத்தனம் என்று

ஆனால், கிறித்தவத்தின் பரமகுருமார்களாகிய John Chrysostom (CE 349), Bishop Ambrose (CE 340), Pope Innocent – III, Martin Luther முதலான துராத்மாக்கள் யூத இனத்தின்மேல் கொண்ட தீய வெறுப்பையும் வன்முறை நோக்கத்தையும் வன்முறைகளுக்கு வழிவகுத்ததையும் பார்க்கும்போது சாயி பாபா ஏதோ ஒரு அளவுக்குப் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

எனினும், சாயி பாபாவை நான் குருவாகவோ கடவுள் அவதாரமாகவோ ஏற்கவில்லை. அந்த இயக்கத்தின் அம்சங்கள் கேள்விக்குரியவையே என்பதை நான் மறுக்கவுமில்லை.

தகவல்கள் இங்கே:http://www.entheology.org/library/winters/JEWS.TXT

சுவிசேஷிகளால் மூளைச்சலவை செய்யப்படும் முன் அனைத்து இந்துக்களும் படிக்கவேண்டியவை இவை. சுருக்கமாக சில தகவல்கள்:

==============================
John Chrysostom and Bishop Ambrose (CE 349):

“I know that a great number of the faithful have a certain respect for the
Jews and hold their ceremonies in reverence. This provokes me to eradicate
completely such a disastrous opinion… Since they have disowned the
Father, crucified the Son, and rejected the Spirit’s help, who would not dare
to assert that the synagogue is not a home of demons? God is not worshiped
there; it is simply a home of idolatry…The Jews are possessed by demons,
they are handed over to impure spirits…Instead of greeting them and
addressing them by so much as a work you should turn away from them as
from the pest and a plague of the human race.”

“The Jews are the most worthless of all men. They are lecherous, greedy, rapacious. They are perfidious murderers of Christ. They worship the Devil. Their religion is a sickness. The Jews are the odious assassins of Christ and for killing God there is no expiation possible, no indulgence or pardon. Christians may never cease vengeance, and the Jew must live in servitude forever. God always hated the Jews. It is essential that all Christians hate them.”

Pope Innocent III (CE 1161-1216):

“The Jews like the fratricide Cain are doomed to wander through the earth
as fugitives and vagabonds, and their faces must be covered with shame.
They are under no circumstances to be protected by Christian princes but
are, on the contrary, to be condemned to serfdom. It is therefore
discreditable of Christian princes to receive Jews into their towns and
villages and to employ them as usurers in order to extort money from
Christians.” (Jeffrey Richards, op cit, p 94)

… and here comes the most notorious one, who inspired Hitler:

Martin Luther (15th-16th century CE Founding father of the protestant movement, praised and revered by Chillsam in his webpage as a godsend):

” … They are a heavy burden like a plague, pestilence, misfortune…”.

“that their synagogues or schools be set on fire… that their houses be broken up and destroyed…
and they be put under a roof or stable, like the gypsies…in misery and
captivity as they incessantly lament and complain to God about us.”

//ஆன்மீக முன்னேற்றம் அடைவதன் முக்கிய பகுதிகளில் ஒன்று ஒரு மனிதன்
அதிக கருணை உடையவனாக,பிறர் மேல் இரக்க சிந்தனை உடையவராக ஆவதும்
ஆகும்.

அதே நேரம் ஒரு ஆன்மீகவாதியின் முக்கிய பணி என்னவென்றால்,
மற்றவர்களையும் ஆன்மீக முன்னேற்றம் அடைய வைப்பதுதான்.

ஆன்மீக முன்னேற்றம் அடைவது என்றால், எல்லோரையும் நேசிப்பது, நட்புடன்
அணுகுவது, கருணையுடன் இருப்பது, உண்மையை தேடுவது, வலிமையான
மன நிலயை அடைவது, குழப்பமான காலத்திலும் உறுதியாக இருப்பது,
இன்ப துன்பங்களில் கலங்காமல் இருப்பது, தன்னம்பிக்கை உடையவனாக இருப்பது,
கையறு நிலயிலும் சோர்வடையாமல் சரியான பாதையில் செல்வது,
அகந்தை இல்லாமல் இருப்பது, சுய‌னலத்தைக் குறைத்து பிறர் நலத்தை எண்ணுத,
விடுதலை நோக்கம், முயற்சி…ஆகிய பண்புகளை உடைய மன நிலைக்கு செல்வதே.///

அருமையான கருத்தோட்டம் உள்ள பகுதிகள்!!! இப்படி எல்லா ஆன்மீக வாதிகளும் இருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஆனால் கிறிஸ்தவர்களாகிய எங்களுக்குள்ளே எத்தினை நயவங்ககர்கள், சுயநலவாதிகள்!!! ஒவ்வொருவரும் இவ்வாறு சுயநலமாக இருப்பதால் தான் தெய்வம் என்று ஒருவர் இருப்பதையே மக்கள் மறந்துவிடுகிறார்கள். நன்றி தொடருங்கள் நண்பரே …

http://abreham1975.wordpress.com/

///ஆனால், கிறித்தவத்தின் பரமகுருமார்களாகிய…///

நண்பர் கந்தர்வன் அவர்களே,
நாங்கள் கிறித்தவ பின்னணியிலிருந்து எழுதும் ஒரே காரணத்தினால் எந்த கருத்தையும் சொல்லுவதற்கோ கேள்வி கேட்பதற்கோ அருகதையற்றவர்களாகிவிட்டோமா?

எந்தவொரு பின்னூட்டமிட்டாலும் அதனை கிறித்தவ இந்து விவாதமாக மாற்ற முயற்சித்து எங்களை தூஷிக்கவே முந்தி நிற்பது கேவலமாக இருக்கிறது.உங்களிடம் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு மார்க்கம் இருக்கும்போதே இவ்வளவு ஆணவம் என்றால் உங்கள் மார்க்கம் ரூபிக்கப்பட்டதாக இருக்குமானால் என்ன செய்வீர்களோ..?

மக்கள் சேவை செய்வதால் மட்டுமே ஒருவன் மகானாக முடியும் என்றால் இன்னும் பகவானாக முடியும் என்றால் பெரியாரும் பகவான் தானே…அவரை ஏன் வணங்கவில்லை, நீங்கள்..?

சித்துவேலைகளும் மோசடிகளும் செய்து சொத்து சேர்த்து அதன்மூலம் சேவை செய்து புகழ்பெறுவதுதான் இந்து மார்க்கமா.?

முக்தி என்றால் என்ன,சித்தி பெறுதல் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு கிறித்தவத்தைக் குறித்து எழுதப்பாருங்கள்…(Ed)

chilsam,

உங்கள் தளத்தில் எழுதப்பட்டுள்ள பொய்யான அவதூறுகளைக் காட்டிலும் கிறித்தவ வரலாற்றின் உண்மைகளைக் கொண்டுள்ள என் மறுமொழி எவ்வளவோ நாகரீகமானது என்பதை நீங்களும் அறிவீர்கள். சுவிசேஷ சூழ்ச்சி சின்னாபின்னமாகிறதே என்பதால் உங்களுக்கு என் மேல் எரிச்சலும் ஆவேசமும்.

நன சாயி பாபாவை எல்லாம் கடவுளாகவோ, மகானாகவோ கருதவில்லை என்பதை முதல் மறுமொழியிலேயே கூறிவிட்டேன். அவரை வணன்குவது இந்து மதத்தின் அம்சம் என்று எவரும் கூறவில்லை. பாபா இயக்கம் என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு கல்ட் அவ்வளவே.

எனினும், இனவெறி பிடித்த Martin Luther போன்றோர் உங்களுக்குப் பரமகுருமார்களாகும்போது நீங்கள் சாயி பாபா கட்சியைக் கேலி செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

அதோடு, ’பகவானுக்கு இறப்பு இல்லை’ என்று கூறும் நீங்கள் ’ஏசு சிலுவையில் உண்மையாகவே மரித்தார்’ என்றால் வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

// உங்களிடம் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு மார்க்கம் இருக்கும்போதே இவ்வளவு ஆணவம் என்றால் உங்கள் மார்க்கம் ரூபிக்கப்பட்டதாக இருக்குமானால் என்ன செய்வீர்களோ..? //

மேற்கண்ட வரிகள் உங்களுடைய காழ்ப்புணர்ச்சியையும் வரலாற்று, சித்தாந்த, தர்க்க அறிவின்மையையும் தான் காட்டுகிறது.

//முக்தி என்றால் என்ன,சித்தி பெறுதல் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு//

உங்களுக்கெல்லாம் விளக்கக் கூடாது என்று கண்ணன் சொல்லியிருக்கிறார்:

“இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.”

“இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.”

(கீதை 18.67-68)

முடிந்தால் திறந்த மனத்துடன் குறைந்தபட்சம் கண்ணனை ஒரு ஞானியாகப் பார்க்க ஆரம்பியுங்கள், திறந்த மனத்துடன் கீதையை சங்கரர், ராமானுஜர் முதலானோருடைய உரைகளோடு படியுங்கள். அப்பொழுது புரியும் முக்தி என்றால் என்ன, சித்தி பெறுதல் என்றால் என்ன என்பது. அத்துடன், எங்கெங்கு கிறித்தவம் கீதையையும் உபநிடதத்தையும் (அரைகுறையாக, தப்பும் தவறுமாக) காப்பி அடித்தது என்றும், அப்படி நல்ல விஷயங்களைக் காப்பி அடித்தும் எப்படி காழ்ப்புணர்ச்சியையும் காட்டுமிராண்டித் தனத்தையும் கைவிடாமல் இருக்கிறது என்றும் தெரிய வரும்.

/

// உங்களுக்கெல்லாம் விளக்கக் கூடாது என்று கண்ணன் சொல்லியிருக்கிறார்:

“இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.”

“இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.”

(கீதை 18.67-68) //

அழகான அற்புதமான ஆர்ப்பாட்டமான இந்த வரிகளுக்காக கந்தர்வன் அவர்களுக்கு நன்றி; இப்போது புரிகிறது,பிரச்சினை எங்கிருந்து ஆரம்பித்தது;அறிவுக்கண்ணைப் பிடுங்கிப்போட்டுவிட்டு கண்ணே கண்ணாக கண்ணனை ஏற்றுக்கொண்டு வந்தால் கண்ணன் நமக்கு கண்ணாக விளங்குவான் என்கிறீர்கள்.

ஆனால் இறைமகன் இயேசுவோ கண் இல்லாதவனுக்கும் ஒளியாக விளங்கினார்;அவர் பரம்பொருளிடம் இருந்த ஒன்றையும் மறைக்காமல் விளம்பினார்;அவர் சுத்த கண்ணன் என்றும் புகழப்பட்டார்.

நீங்களே சொல்லுங்களேன், மனுக்குலம் ஈடேற சரியான வழியைக் காட்டுவது சுத்தக்கண்ணனா, மாயக்கண்ணனா,என்று..!

இயேசு மரித்தவர் மட்டுமல்ல, மீண்டும் உயிரோடு எழுந்தவராக்கும்.

Chillsam,

// அறிவுக்கண்ணைப் பிடுங்கிப்போட்டுவிட்டு கண்ணே கண்ணாக கண்ணனை ஏற்றுக்கொண்டு வந்தால் கண்ணன் நமக்கு கண்ணாக விளங்குவான் என்கிறீர்கள். //

ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதி, “இது தான் கண்ணன் சொன்னான்” என்ற பொய்யை அற்பத்தனமாகச் சாதிக்க முயல்கிறீர்கள். அறிவுக்கண்ணைப் பிடுங்கிப்போடு என்று கண்ணன் நான் காட்டிய இடத்திலோ அல்லது கீதையிலும் எங்கும் சொல்லவில்லை. இப்படி எவரும் வியாக்கியானமும் இடவில்லை.

LKG-இல் இருப்பவனுக்கு பனிரண்டாம் கிளாஸில் வரும் PhD syllabus எல்லாம் பற்றிச் சொன்னால் நேரம் தான் வீணாகும், அதனால் அவனுக்கு ஒரு பயனும் இருக்காது. அதுபோல, பக்குவமடையாத ஜீவாத்மாக்களுக்கு கீதை பற்றி உபதேசம் புரிவது சரி வராது. இதைத் தான் கண்ணன் கூறுகிறான்.

இன்னொரு விதமாக, “வியாதி வந்து படுத்திருப்பவனுக்குச் சக்கரைப் பொங்கல் கொடுக்கக் கூடாது (அவனுக்குத் தேவை மருந்து). கொடுத்தால் அவனுக்கு அது ஒவ்வாது.” — இதைத் தான் கண்ணன் சொல்கிறான்.

ஞானரூபமான பக்தியே பக்தி என்றும் பாஷ்யகாரர்கள் கீதை உரைகளில் விளக்கியுள்ளார்கள்.

மேலும், “அறிவுக்கண்ணைப் பிடுங்கிப்போடு” என்று சொல்லுவதற்கு அவருக்குப் பதினெட்டு அத்தியாயங்களும் தேவை இருக்காது; மேலை நாட்டவர் கீழை நாட்டவர் அனைவரும் போற்றும் நூற்றுக்கணக்கான விரிவுரைகளும் தேவை இருந்திருக்காது.

அறிவுக்கண் என்பது ஒருவருக்கு இருந்தால் முதல் பாவம் முதலான அபத்தங்களை அபத்தங்கள் என்ற முடிவுக்கு வருவார்கள்.

//நீங்களே சொல்லுங்களேன், மனுக்குலம் ஈடேற சரியான வழியைக் காட்டுவது சுத்தக்கண்ணனா, மாயக்கண்ணனா,என்று..! //

சுத்தக் கண்ணன், மாயக்கண்ணன் எல்லாம் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்த கண்ணன் தான். உலகத்திற்குக் கண்ணாக – ஸாக்ஷியாக விளங்குவதாலேயே அவனுக்குக் “கண்ணன்” என்ற பெயர் ஏற்பட்டது.

// இயேசு மரித்தவர் மட்டுமல்ல, மீண்டும் உயிரோடு எழுந்தவராக்கும். //

சிலுவையில் அறைபட்டு வேதனைப்படுவது, (உங்கள் தளத்தில் உங்கள் நண்பர் குறிப்பிட்டது போல) கடவுள் தன்மை தற்காலிகமாக நீங்குவது, மரிப்பது, மீண்டும் உயிருடன் எழுவது இதெல்லாம் எல்லா ஆற்றல்களையும் குறைவறப்பெற்று சர்வ வல்லமை கொண்ட கடவுளின் இலக்கணத்துக்கு ஒவ்வாது. (Trinity என்ற கொள்கையே அறிவுக்கும் தர்க்கத்துக்கும் ஒவ்வாது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.)

//அதுபோல, பக்குவமடையாத ஜீவாத்மாக்களுக்கு கீதை பற்றி உபதேசம் புரிவது சரி வராது. இதைத் தான் கண்ணன் கூறுகிறான்.//
அதாவது, உங்கள் கீதை யாரையும் பக்குவப்படுத்தாது என்கிறீர்கள். பக்குவப்பட்டவனுக்கு மட்டும்தான் கீதையா? பக்குவப்பட்டவனுக்கு பாடம் எதற்கு?
இந்த வரிகள், பக்குவப்பட்டவனுக்கு புரியும்.
எங்கள் பரிசுத்த வேதம், அதை படிப்பவனை, படித்து நடப்பவனை, பக்குவப்படுத்துவது மட்டுமன்றி பரிசுத்தமும் படுத்தும்.

//இன்னொரு விதமாக, “வியாதி வந்து படுத்திருப்பவனுக்குச் சக்கரைப் பொங்கல் கொடுக்கக் கூடாது (அவனுக்குத் தேவை மருந்து). கொடுத்தால் அவனுக்கு அது ஒவ்வாது.” — இதைத் தான் கண்ணன் சொல்கிறான்.//
கீதை சர்க்கரை பொங்கலா? பார்த்து அளவா சாப்பிடுங்க.
சுத்தமான ஞானப்பாலாகிய பரிசுத்த வேதம், நோய் கொண்ட ஆத்துமாவுக்கு மருந்தும் கூட.

///ஆனால், கிறித்தவத்தின் பரமகுருமார்களாகிய John Chrysostom (CE 349), Bishop Ambrose (CE 340), Pope Innocent – III, Martin Luther முதலான துராத்மாக்கள் யூத இனத்தின்மேல் கொண்ட தீய வெறுப்பையும் வன்முறை நோக்கத்தையும் வன்முறைகளுக்கு வழிவகுத்ததையும் பார்க்கும்போது சாயி பாபா ஏதோ ஒரு அளவுக்குப் பரவாயில்லை என்று தோன்றுகிறது.///

ஐயா கந்தர்வன் அவர்களே, நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் சரியே!!! இயேசு தெய்வமோ அல்லது தொழத்தக்கவரோ அல்ல!!! பைபல் சொல்கிறது:- இயேசு பிதாவின் மகன் என்றும் அவராலே அனுப்பப் பட்டவர் என்றும். இந்த சாதாரண விஷயம் கூட தெரியாத சில்சாம் என்பவருக்கு மார்டின் லுதேரைப் பற்றி சொன்னால் புரியவா போகின்றது.நன்றி Tamil Christian Assembly

அசோக் குமார் அவர்களே,

உங்களுக்கு எல்லாம் கருப்பு வெள்ளை தான் போல இருக்கிறது.

“பக்குவம்” என்று நான் சொன்னது கிருஷ்ணனைப் பரம்பொருளாக ஏற்கும் பக்குவத்தை. அதற்கு மேலும் ஆன்ம பக்குவம் தேவை அதற்கும் கீதையே வழி வகுக்குகிறது. நான் காட்டிய மேற்கொளிலேயே இது உள்ளது:

“இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.”

(18.68)

நான் சொன்ன பக்குவம் பனிரண்டாம் கிளாஸ் பக்குவம். இறுதி இலக்கு மோட்சம் — பேச்சுக்கு இதை IIT சீட் என்று வைத்துக் கொள்வோம். கண்ணனை தெய்வமாக ஏற்பது பனிரண்டாம் கிளாஸ். உங்களைப் போல கண்ணனை தூஷிப்பவர்கள் எல்.கே.ஜி. எல் கே ஜியில் இருப்பவனும் பனிரண்டாம் கிளாஸ் வருவான். எல். கே. ஜி இல் இருப்பவனுக்கு, அதாவது கண்ணனை ஏற்க மனமில்லாதவனுக்கு, IIT JEE கிளாஸ், அதாவது கீதை கூறும் மோட்ச உபாயம், தேவை இல்லை. இதைத் தான் கண்ணன் சொல்ல வருகிறான்.

“சரி, அப்படி எல் கே ஜியில் இருப்பவனைப் பாவனமாக்குவது எது? ஹிந்து மதத்தில் கீழே இருப்பவர்களைப் பக்குவப்படுத்த உபாயமே இல்லையா?” என்று நீங்கள் கேட்பீர்கள். அதற்கும் பதில் கூறுகிறேன் இதோ: நீங்கள் ஒரு நான்கைந்து முறை கண்ணன், நாராயணன், விஷ்ணு என்று த்வேஷத்தில் எழுதினால் கூட, கண்ணன் “ஓ என் நாமத்தைச் சொல்லுகிறானே” என்று grace marks கொடுக்கிறார். அத்தகைய அன்பு அவனுக்கு! உங்களைப் போலவே தன்னை இகழ்ந்த சிசுபாலனுக்கும் கூட மோட்சம் அளித்தவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்துடன் உங்கள் மார்க்கத்தில் உள்ள நல்ல விஷயம் எல்லாம் (சில மனிதர்கள், கற்பனைப் பாத்திரங்களைக் கருவியாகக் கொண்டு) உபதேசித்தவன் உண்மையில் கண்ணன் தான் என்று கீதை சொல்கிறது. அதை சற்று நீங்கள் கடைப்பிடித்து சில புண்ணிய காரியங்கள் செய்யலாம். அதவே உங்களைப் புனிதமாக்கும், நீங்களும் சில காலம் அல்லது ஜன்மங்கள் கழித்து பனிரண்டாம் வகுப்புக்கு வருவீர்கள், ஐ.ஐ.டி சீட் வாங்குவீர்கள். இது உறுதி.

ஒரு பிள்ளை தாயை நிந்தித்து வீட்டை விட்டு ஓடிப் போகிறானாம். “நீ சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுக்கிறவள்” என்று திட்டி விட்டுப் போய் ஒரு சத்திரத்தில் தாங்குகிறானாம். தாய் அந்த மகனுக்குத் தெரியாமல் சத்திரத்தின் பின்பக்கமாக வந்து காவல் காரனிடம், “இதோ இப்போது புதிதாக வந்திருக்கிறானே, அவன் என் மகன். அவனுக்காக நான் தயிர் சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இதை அவன் கிட்ட கொடு. ஆனால், நான் கொடுத்தேன் என்று சொல்லாதே” என்றாளாம். காவல் காரனும் அப்படியே செய்தானாம். அந்த பிள்ளை அதை நன்றாக சாப்பிட்டு விட்டு ஊரைக் கூட்டி “இதோ இந்த காவல் காரனைப் பார் எவ்வளவு அன்பிருந்தால் எனக்கு இவ்வளவு நன்றாக உணவு போடுகிறான். இருக்கவும் இருக்கிறாளே என் அம்மா” என்றானாம்.

மேற்கண்ட பாராவில் உள்ள கதையைப் போலத் தான் உள்ளது கண்ணனைத் திட்டும் உங்கள் நிலை.

நண்பர் கந்தர்வன் அவர்களே,
இப்போதுதான் தன் கருத்தை பிரதானப்படுத்தி, மரியாதையோடு விவாதிக்கும் பழைய நண்பர் கந்தர்வனை பார்க்க முடிகிறது. மகிழ்ச்சி.
//உங்களுக்கு எல்லாம் கருப்பு வெள்ளை தான் போல இருக்கிறது.//
வாழ்க்கையில் பல முக்கிய உண்மைகள் கருப்பு வெள்ளை தான் நண்பரே. இரண்டுக்கும் இடைப்பட்டது எல்லாம் முக்கிய இடத்தில் இருப்பதில்லை.
உதாரணமாக, நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்ற கேள்விக்கு, “ஆமாம்” அல்லது “இல்லை”, இதில் ஏதாவது ஒரு பதில்தான் இருக்க முடியும். இடைப்பட்டது எதுவும் இல்லை.

//அதவே உங்களைப் புனிதமாக்கும், நீங்களும் சில காலம் அல்லது ஜன்மங்கள் கழித்து பனிரண்டாம் வகுப்புக்கு வருவீர்கள், ஐ.ஐ.டி சீட் வாங்குவீர்கள். இது உறுதி.//
அனைவரும் எப்படியாவது மோட்சம் அடைவார்கள் என்பது கேட்க நல்லாத்தான் இருக்கு நண்பரே. ஆனால், உண்மையா???
பரிசுத்த வேதம் சொல்கிறது, நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு ஒன்றே, இந்த பிறவியே என. அதன்படி, நீங்கள் உங்கள் இந்த பிறவி முடிந்து இறந்த பிறகு, இன்னொரு பிறவி இல்லை என தெரிந்தால் என்ன செய்வீர்கள்?
நான் உங்களை பயமுறுத்த முயலவில்லை. கண்ணை மூடிக்கொண்டு எதையும் முடிவு செய்ய சொல்லவில்லை. சற்றே திறந்த மனதுடன் வேதத்தை வாசியுங்கள், அதில் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு நாங்கள் முடிந்தவரை பதில் சொல்கிறோம். அனைத்து கேள்விகளுக்கும் எங்களிடம் பதில்கள் இல்லை என்பதே உண்மை. ஆனால், போதுமான அளவுக்கு பதில்கள் உண்டு. உங்களை மதம் மாற்றுவதில் எனக்கு என்ன கிடைத்துவிட போகிறது. நான் கண்ட பொக்கிஷத்தை மற்றவரும் அடைய வேண்டுமெனவே இதை எழுதுகிறேன்.

//ஒரு பிள்ளை தாயை நிந்தித்து வீட்டை விட்டு ஓடிப் போகிறானாம். “நீ சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுக்கிறவள்” என்று திட்டி விட்டுப் போய் ஒரு சத்திரத்தில் தாங்குகிறானாம். தாய் அந்த மகனுக்குத் தெரியாமல் சத்திரத்தின் பின்பக்கமாக வந்து காவல் காரனிடம், “இதோ இப்போது புதிதாக வந்திருக்கிறானே, அவன் என் மகன். அவனுக்காக நான் தயிர் சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இதை அவன் கிட்ட கொடு. ஆனால், நான் கொடுத்தேன் என்று சொல்லாதே” என்றாளாம். காவல் காரனும் அப்படியே செய்தானாம். அந்த பிள்ளை அதை நன்றாக சாப்பிட்டு விட்டு ஊரைக் கூட்டி “இதோ இந்த காவல் காரனைப் பார் எவ்வளவு அன்பிருந்தால் எனக்கு இவ்வளவு நன்றாக உணவு போடுகிறான். இருக்கவும் இருக்கிறாளே என் அம்மா” என்றானாம்.//

என் பக்கமிருந்து பாருங்கள், நீங்கள் அந்த மகன் நிலையிலும், கிறிஸ்த்து அந்த தாயின் நிலையிலும் இருப்பது புரியும்.
நான் விவாதத்திற்கு அழைக்கவில்லை, உரையாடளுக்கே.

அன்பர்களே!
திருச்சிக்காரரோ அல்லது பின்னூட்டம் என்ற பெயரில் தங்கள் மேதமையை வெளிப்படுத்தி உள்ளவர்களில் யாராவது புட்டபர்த்தி சென்று அங்குள்ள குல்வந்த் சாய் அரங்கில் அமர்ந்து இருக்கிறீர்களா? சத்திய சாய் பல்கலைக் கழகம், சிறப்பு மருத்துவமனை மற்றும் சத்ய சாய் அறக்கட்டளை நடத்தும் அமைப்புக்களைப் பார்த்திருக்கிறீர்களா?
வெள்ளை வேளேர் என்று வெள்ளைச்சீருடை அணிந்து சாரி சாரியாகஎறும்புப் படைபோல, ஒழுங்கு, வாக்கினிலே இனிமை, மென்மை பூண்டு விரைந்து செல்லும் மாணவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?
பார்த்தவர்களின் பார்வை வேறு! பாராதவர்களின் பார்வை வேறு! கோளாறு பார்வையில்.

வழிப்போக்கரே,

சாய் பாபா ஆன்மீக வளர்ச்சிக்கு என்ன செய்தார் என்பது தான் இங்கு கேள்வி. அவர் சமூகத்துக்குச் செய்துள்ள நன்மைகளை இங்கு யாரும் சிறுமைப்படுத்தவுமில்லை.வாயிலிருந்து இலிங்கம் வரவழைப்பது, விபூதி வரவழைப்பது, வாட்ச் மோதரம் வரவழைப்பது – இதெல்லாம் மாயாஜால வித்தை அல்ல, உண்மையான யோகா சித்தி என்றே வைத்துக் கொள்வோம். இவற்றால் என்ன பயன்? கூடு விட்டு கூடு பாய்தல் மற்றும் வாட்ச் செயின் மோதிரம் முதலானவற்றை வரவழைப்பதில் தான் ஆன்ம தரிசனத்தையோ மோட்சத்தையோ கொடுக்குமா?

இவரைக் கடவுள் என்று நம்புவது எப்படி சாத்தியம்? இராமாவதாரமோ கிருஷ்ணாவதாரமோ தங்கள் அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ராஹத்துடன் வைகுந்தத்துக்கு எழுந்தருளி முடிந்த அவதாரம் என்று எல்லா இதிகாச்ச புராணங்களும் கூறுகின்றன.

(இங்கு ஒரு குறிப்பு: சிலர் கிருஷ்ணர் அம்பு தைத்து ‘இறந்தார்’ என்றும் இராமர் சரயு நதியில் விழுந்து ‘இறந்தார்’ என்பதும் பாகவதத்துக்கும் வால்மீகி இராமாயணத்துக்கும் ஒவ்வாது. உண்மையில் அம்பு தைத்ததும் நீரில் மூழ்கியதும் ஒரு playacting, ஒரு excuse என்று சுகப்பிரம்மமும் வால்மீகியும் முறையே பாகவதத்திலும் இராமாயணத்திலும் மிகத்தெளிவாகக் காட்டியுள்ளனர்).

மாமிசமும் இரத்தமும் கொண்ட மனித உடலை எடுப்பதும், நோய் வாய்ப்படுவதும், மனிதனைப் போல இறப்பதும் அவதாரத்துக்கு இலட்சணம் ஆகாது. இது கிறித்தவத்துக்கு வேண்டுமானால் பொருந்தும்.

//அதுபோல, பக்குவமடையாத ஜீவாத்மாக்களுக்கு கீதை பற்றி உபதேசம் புரிவது சரி வராது. இதைத் தான் கண்ணன் கூறுகிறான்.//
அதாவது, உங்கள் கீதை யாரையும் பக்குவப்படுத்தாது என்கிறீர்கள். பக்குவப்பட்டவனுக்கு மட்டும்தான் கீதையா? பக்குவப்பட்டவனுக்கு பாடம் எதற்கு?
இந்த வரிகள், பக்குவப்பட்டவனுக்கு புரியும்.
எங்கள் பரிசுத்த வேதம், அதை படிப்பவனை, படித்து நடப்பவனை, பக்குவப்படுத்துவது மட்டுமன்றி பரிசுத்தமும் படுத்தும்///////////
அருமை சொற்பொருள் (பொய்) பின் வரும் நிலை(இல்லாத)அணி.
நீங்கள் படித்துவிட்டீர்களா? பக்குவம் வந்துவிட்டதா? எழுத்தில் அப்படி தெரியவில்லையே?
ஒ நீங்கள் பரிசுத்தம் வேறா?
கீதை யாரையும் பக்குவபடுத்தாது என்று எங்கு இருக்கிறது நீங்கள் குறிப்பிட்டுள்ள கந்தர்வன் வரிகளில்? உங்க கடவுள் தன்னை பணியாதவரை பாவியாக்கி தனக்கு பிடிக்கதவங்களாக்கி நெருப்புக்குள் தள்ளி விடுவாரு. அது சரி, கிருஷ்ணன் முதிர்ச்சி அடையாத ஜீவாத்மாக்களை அத்தகுதி அடையும் வரை பொறுத்திருக்க சொல்வது உங்களுக்கு தவறு. இதில் டிவிஸ்ட் பண்ணி எப்படியாவது கீதையை மட்டம் தட்ட அலைகிறீர்கள். உங்களுக்கு எல்லாம் கீதை என்ற வார்த்தையை உச்சரிக்கும் தகுதி கூட இன்னும் வரவில்லை போலிருக்கிறது.
உண்மையிலேயே பரிசுத்தம் தான்

//இன்னொரு விதமாக, “வியாதி வந்து படுத்திருப்பவனுக்குச் சக்கரைப் பொங்கல் கொடுக்கக் கூடாது (அவனுக்குத் தேவை மருந்து). கொடுத்தால் அவனுக்கு அது ஒவ்வாது.” — இதைத் தான் கண்ணன் சொல்கிறான்.//
கீதை சர்க்கரை பொங்கலா? பார்த்து அளவா சாப்பிடுங்க.
சுத்தமான ஞானப்பாலாகிய பரிசுத்த வேதம், நோய் கொண்ட ஆத்துமாவுக்கு மருந்தும் கூட////////
என்ன கூறினால் என்ன சொல்கிறீர்கள்.
உங்கள் ஆத்மா நோய் பிடித்திருந்ததா? என்ன நோய்? ஆத்மாவுக்கு நோய் பிடிக்குமா?

ஞானப்பாலின் சில துளிகள்

10. அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனாள்.

11. அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப்பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.

12. அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

13. நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.

14. அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

15. பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

16. அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்

17. தன்னிடத்தில் சேவிக்கிற தன்வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை, என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப்பூட்டு என்றான்

பால் கொஞ்சம் புளித்திருக்கிறது.

நண்பர்களே இப்போது பாருங்கள் சில்சாம் தளத்தில் கேள்வி பதில் அறிக்கை ஸ்டைலில் அவர்களே இந்த பின்னுட்டத்திற்கு ஒரு கதை எழுதி கொள்வார்கள்

இந்திய சமூகத்தில் ஆங்கிரஸர், யாக்வல்ங்கர், நசிகேதஸ், மார்க்கண்டேயன்,
பிரஹலாதன், சித்தர்கள், ….. கிரிஷ்ணர், புத்தர், ஆதி சங்கரர், அப்பர்,
இராமனுஜர், மத்வர், பட்டினத்தார், குருனானக், கபீர், சைதன்யர், தியாகராசர்,
இராமகிரிஷ்ணர், சுவாமி விவேகானந்தர்…. உள்ளிட்ட பலரும் மக்கள் தங்களை
தாங்களே உயர்த்தி உயர்ந்த ஆன்மீக மன நிலயை அடையும் பகுத்தறிவு பாதையில்
மக்களுக்கு ஆன்மீகத்தை போதித்தனர்.//

Tiruchikkaaran

Hoe do u accurately say that these personalities taught anmikam ?

They are now venerated by their respective followers. Millennia have gone when they lived and died. All that is written and believed about them, are hearsay. How they actually lived, no body knows. Even in the case of Vivekananda, there were many instances in his life, even after he became a sanyaasi, when he got angry and tried to attack his critics. P;l read his bio released by Madras Ramakirshna mission.

On Ramakrishna, if the stories on him are true, we can safely conclude he helped turn the minds of people towards sp;spirituality; and yet, people today continue to lead quite spirituality lives. No use.

About others, all stories of past only. Legends and propaganda.

திரு. ஜோ அமலன் ,

நீங்கள் இந்தியாவில் பிறந்த சக இந்திய சகோதரர். ஆனாலும் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகும் போக்கு காணப்படவில்லை.அதற்க்கு காரணம், உங்கள் மதம் மட்டுமே உண்மையான மதம் , பிற மதங்கள் இல்லாமல் இல்லாமல் போக வேண்டும் என்று உங்களுக்கு போதிக்கப்பட்டு இருக்க கூடும்.

நான் ஒரு ஜெர்மானியாரிடம் கருத்து பரிமாற்றம் செய்த போது, உலகில் எங்காவது நல்லது நடந்திருந்தால் அது இயேசுவினால் மாத்திரமே என்றார். நான் அவரிடம் நான் இயேசு கிறிஸ்துவின் மீது மிகுந்த மதிப்பு வத்தருக்கிறேன், ஆனால் உலகில் அவரைத் தவிர வேறு ஆன்மீக வாதியே இல்லை என்பது சரியல்ல உங்களுக்கு அசோகரைப் பற்றி தெரியுமா, அவர் வாழ்ந்த காலம் கிறிஸ்துவுக்கு முந்தியது என்றேன். நான் அசோகர் என்றவுடன் அவர் அதற்க்கு பிறகு எதுவுமே பேசவில்லை. ஜெர்மானியரால புரிந்து கொள்ள முடிந்ததை நீங்கள் புரியாதது போலக் காட்டுகிறீர்கள். ஏனெனில் உங்கள் மார்க்கம் மாத்திரமே, உலகில் இருக்க வேண்டும் என்கிற ஆவேசமானது நடு நிலை சிந்தனை இல்லாமல் செய்கிறது.

சுவாமி விவேகானந்தர் மட்டுமல்ல, தியாகராஜர், ஆதி சங்கரர், புத்தர், சித்தர்கள் உள்ளிட்ட பலரும் கத்தியின்றி, இரத்தமின்றி அன்பையும், அறிவையும் உபயோகித்தே ஆன்மீக பிரச்சாரம் செய்தனர்.

சுவாமி விவேகானந்தர் எந்த அளவுக்கு கண்ணியமும் பொறுமையும் அன்பும் வாய்ந்தவர் என்று உலகுக்கே தெரியும். 1893ல் நடை பெற்ற Religiousof Parlimentலே அதை ஏற்பாடு செய்தவர்கள் , கிறிஸ்தவ மதம் மட்டுமே உலகில் ஒரே உண்மையாண மதம் என்று சொல்லி விட வேண்டும் என்றும் அதை ரகசிய அஜெண்டாவாக வைத்திருக்குமாறு ம் கமுக்க செய்தி கிறிஸ்தவ மத பிரசாகர்களுக்கு சொல்லப் பட்டு இருந்தது.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், அந்த நிகழ்வின் கதாநாயகனாக விவேகானந்தர் உருவாக்கி விட்டார். அவருடைய பேச்சில் இருந்த அன்பும், உண்மையும், கண்ணியமும், பிற மதங்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்று ஆவேசத்துடன் காத்திருந்தவர்கள் வாயடைத்து அமரும்படி செய்து விட்டது. சுவாமி விவேகானந்தர் புகழ் பெற ஆரம்பித்தவுடன் அமெரிக்காவுக்கு வந்திருந்த அவரது வங்க பிரதேச கிறிஸ்த மத போதகர்கள் சிலரே, அவருக்கு தங்க இடம் குடுத்தவரிடம், அவருக்கு இடம் கொடுக்காதீகள், அவர் கெட்டவர் என்று சொல்லி அவரை வீட்டை விட்டு அனுப்பும்படி தொடர்ந்து செய்தனர்.

சுவாமி விவேகானதர் சந்யாசியாக இருந்த போது, ஒரு ரயில் பயணத்தின் போது ஒரு முறை ஒரு ஆங்கிலேயர் வேண்டுமென்றே இந்தியாவையும், இந்தியர்களையும், இந்து மதத்தையும் பற்றியும் இழிவு படுத்தி சுவாமி விவேகானந்தரை புரோவோக் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முயன்றார். விவேகானந்தர் அவரிடம் என்னோடு கை கலப்பு செய்வதுதான் உங்கள் நோக்கம் என்றால் அதற்க்கு நான் தயார் என்று சொன்னதாக ஒரு குறிப்பு இருக்கிறது. இதை அப்படியே there were many instances in his life, even after he became a sanyaasi, when he got angry and tried to attack his critics. என எழுதுகிறார்கள்.

எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன. எல்லா மதங்களும் நல்லிணக்கத்தில் இருக்க முடியும் அறிவு பூர்வமாக , அன்பு வழியில் அறிக்கை செய்த சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களில் இருந்த உண்மைகள் மேலை நாடு மக்களிடமும் அவருக்கு பெரிய புகழை அன்பை தந்த தால், ஒரு மதம் மட்டுமே இருக்க வேண்டும் எனும் மத சகிப்புத் தன்மை இழந்த கோட்பாட்டுக் காரர்களால், மத நல்லிணக்க கோட்பாட்டு சுவாமி விவேகானந்தரிடம் நவீன சிந்தனை காலத்தில் தோல்வி அடைந்ததால், அதை பொறுக்க முடியாமல் அவர் தங்கியிருந்த ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அவர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவார்…எகிற வகையிலே சொல்லி அவருக்கு பல இன்னல்களை தந்தனர்.

…lead quite spirituality lives”

lead quite materialistic lives.

//நண்பர்களே இப்போது பாருங்கள் சில்சாம் தளத்தில் கேள்வி பதில் அறிக்கை ஸ்டைலில் அவர்களே இந்த பின்னுட்டத்திற்கு ஒரு கதை எழுதி கொள்வார்கள்//

எப்படியும், தேடி வந்து படிப்பீர்கள் என்று தெரியுமே.

//உங்கள் ஆத்மா நோய் பிடித்திருந்ததா? என்ன நோய்? ஆத்மாவுக்கு நோய் பிடிக்குமா?//

உங்களுக்கு இருக்கும் அதே நோய்தான் எனக்கு இருந்தது. நான் குணமாகிவிட்டேன், நீங்கள் எப்படியோ?

அம்னோன் தாமாரை கற்பழித்த வசனங்களை காட்டி, பைபிள் புளிக்கிறது என்கிறீர்கள். குற்றம் சொல்லும் வேகத்தில் எதை பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறீர்.

புகைப்பிடித்தல் தவறு என்று சொல்ல அரசாங்கம் சில குறும்படங்களை வெளியிட்டால், சாதரணமாக ஒரு மனிதன் அந்த படத்தை பார்த்து, அந்த படத்தில் புகை பிடித்து கான்செர் வந்து செத்த மனிதனை பார்த்து திருந்துவான். உங்களை போன்ற சிலர்தான், அந்த குறும்படத்தை பார்த்து புகைபிடிக்க ஆரம்பிப்பர்.

தாமாரை கற்பழித்த பிறகு அம்னோன் என்ன பாடு பட்டான் என்று தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

(edited)

சகோதரர் அசோக் ,

வெறுப்புணர்ச்சியால் பிற மதக் கடவுள்களை இகழ்ந்து, மத சகிப்புத் தன்மை யை அழித்து, மத வெறியை கொட்டுவதற்கு நம் தளம் உபயோகப் படுத்தப் பட மாட்டது.

நம்முடைய தளம் மத சகிப்புத் தன்மை வளர்ப்பு, மத நல்லிணக்க வூக்குவிப்பு தளமே.

//என் உதாரணம் இயேசுவுக்கோ, பரிசுத்த ஆவி என்றும் பரமபிதா என்றும் சொல்லப்படும் வச்துவுக்கோ பொருந்தாது.//

திருச்சிகாரன், உங்க மத நல்லிணக்கம் நல்லா தெரியுதைய்யா. எதுக்காக காந்தரவனின் இந்த வார்த்தைகள் தணிக்கை செய்யப்படவில்லை. நான் உங்க நூலில் உங்க தெய்வம்(?) செய்ததை தானே சொன்னேன், அதை தணிக்கை செய்தீர். இப்போது “பரம பிதாவை” வஸ்து என்று சொல்லும் கந்தர்வன் வார்த்தைகளை எப்படி பிரசுரிக்கீர்.

விளக்கம் தேவை.

சகோ. அசோக் அவர்களே, சில சமயங்களில் பின்னூட்டங்களை விலாவாரியாக படிக்காமல் அப்ப்ரூவ் செய்து விடுகிறோம். பரிசுத்த ஆவி , பரம பிதா ஆகியோரை வஸ்து என்பதாக எழுதி இருந்தால் அதை சரியாக கவனிக்காமல் அனுமதித்து விட்டோம். அது கவனிக்காததால் நேர்ந்து விட்டது. எந்த தேதியில் அந்த பின்னூட்டம் உள்ளது என்று தெரிவித்தால் திருத்தி விட ஏதுவாக இருக்கும்.

அசோக் குமார்,

//அதில் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு நாங்கள் முடிந்தவரை பதில் சொல்கிறோம். அனைத்து கேள்விகளுக்கும் எங்களிடம் பதில்கள் இல்லை என்பதே உண்மை. ஆனால், போதுமான அளவுக்கு பதில்கள் உண்டு.//

அடிப்படைக் கேள்விகளுக்கே உங்களுக்கு பதில் இல்லை. முதல் பாவம் பற்றிய விளக்கம் தருகிறேன் என்று நீங்கள் ஒரு வருடமாக அலைக்கழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஞான ஸ்னானம் இல்லாமல் (’முதல் பாவம் கழுவப்படாமல்’) இறக்கும் பச்சைக்குழந்தை இறந்தால் எங்கே போகும் என்ற கேள்வியை வைத்தேன். அதற்கும் நீங்கள் பதில் கூறத் தயங்குகிறீர்கள்.

தேடிக் கொண்டே இருங்கள். இந்த தாமதமே உங்கள் பிலாஸபி பொய் என்பதை நிரூபிக்கிறது. கிறிஸ்தவ மதத்தின் founding fathers, குறிப்பாக Martin Luther முதலான ’மறுமலர்ச்சியாளர்’ எல்லாரும் வெறிப்பிடித்த துராத்மாக்கள் என்று மேலேயே காட்டிவிட்டேன். இது படித்துமா கிறிஸ்தவம் ஒரு மாஃபியா கும்பலால் யூதர்களைப் பழிவாங்க ஏற்பட்டது என்று உங்களுக்குப் புரியவில்லை?

யூதப் பழங்குடியினர்களால் பரிதாபமாகக் கொல்லப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளும் பெண்களும் அப்பாவிகள் இல்லை என்று சொல்கிறீர்கள். எவருமே innocent இல்லை, incapable தான் என்றும் சொல்கிறீர்கள் (ஆனால் இயேசு பிறந்த பொழுது உரோம மன்னன் செய்த சிசுவதையை மாத்திரம் “slaughter of the innocents” என்று கூறுவீர்கள்). அமலேக்கிய பிஞ்சுக் குழந்தைகளைக் கட்டுவிரியன் குட்டிகள் என்று சொன்னீர்கள். இதையெல்லாம் படிப்பவருக்கு எப்படி கிறித்தவம் மீது ஆசை வரும்?

இதையெல்லாம் சிந்தியாமல் உங்கள் தோழர் தளத்தில் மறுபிறப்பு பற்றித் தப்பும் தவறுமாகப் புரிந்துக் கொண்டு சிறுபிள்ளைத்தனமாகக் கேள்விகளை வைத்துள்ளீர்.

எனக்குக் இது கடைசி ஜன்மா என்று இருந்தால் என்ன செய்வேன் என்று கேட்கிறீர்கள். எந்த ஜன்மமாக இருந்தாலும் முழுக்க முழுக்க கண்ணனின் திருவடிகளுக்குத் தொண்டு புரிவதே என் குறிக்கோள். முக்தி கிடைப்பது அவனுடைய அளவில்லாத பேரருளால் தான், அது எப்போது கிடைக்கும் என்பதை நிர்ணயம் செய்ய எனக்கு உரிமை இல்லை. இருப்பினும் பலருக்குத் தன் பேரருளாலே க்ஷணப்பொழுதில் பாவங்களிலிருந்து விடுவித்து முக்தி அளித்துள்ளான் (கஜேந்திரன் என்னும் யானைக்குக் கூட).

கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறீர். நல்லது. ஒரு Ph .d பண்ணக்கூடிய அளவு பெரிய கேள்வியை, பல skeptics மத்தியில் பதில் அளிக்ககூடிய அளவு பெரிய ஞானம் எனக்கில்லை. நம்ம தளத்தில் (சில்சாம் தளம்), இதற்கென தனி திரி உள்ளது, அதில் நிதானமாக பேசலாம், நட்புடன் பேசலாம், மரியாதையுடன் பேசலாம். ஆக்கபூர்வமாக விவாதில்லாம். இங்கே பலர் இடையில் புகுந்து குழப்புவதில் குறியாக உள்ளனர். அவர்களையும் தாண்டி உங்களுக்கு விளக்குவதில் சோர்வு ஏற்ப்படுகிறது. அதற்காக திருச்சிக்காரனையோ, சிவன்டியானையோ நான் குறை சொல்லவில்லை. திருச்சிக்காரனை பொறுத்தவரை, உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். ஆனால், பிரச்னை என்னவென்றால், உண்மையை விலையாக கொடுத்தாவது (தற்காலிக) அமைதியை எதிர்ப்பார்க்கிறார்.

சிவனடியானுக்கும், (ஏன் உங்களுக்கும் கூட) என் மீது கொவமிருக்கும் (இருக்காதா பின்ன, உங்கள் தெய்வங்களை அசிங்கமா விமர்சனம் பண்ணி இருக்கேனே). ஆனால், நான் என் கற்பனையில் தோன்றியதை சொல்லவில்லை, நான் புராணங்கள் என்று பல இந்துக்கள் கொண்ட நம்பிக்கையையே சொல்கிறேன்.

நீங்க வாங்க, நிதானமா பேசலாம். இல்லை, எனக்கு இஷ்ட்டமில்லை என்று சொல்வீர்களானால். அது உங்க இஷ்ட்டம்.

நீங்க ஒரு விஷயத்தை போய் என்று சொல்வதால், அது பொய்யாகி போவதில்லை and vice versa .

// என் பக்கமிருந்து பாருங்கள், நீங்கள் அந்த மகன் நிலையிலும், கிறிஸ்த்து அந்த தாயின் நிலையிலும் இருப்பது புரியும். //

ஏட்டிக்குப் போட்டியாக ஏதோ சொல்லவேண்டுமே என்று சொல்கிறீர்கள்.

என் உதாரணம் இயேசுவுக்கோ, பரிசுத்த ஆவி என்றும் பரமபிதா என்றும் சொல்லப்படும் வச்துவுக்கோ பொருந்தாது. எந்தத் தாயும் இரக்கமில்லாமல் தன் மகனை நிரந்தரமாக நரகத்தில் எரிக்க மாட்டாள். கொஞ்ச காலம் தண்டித்து விட்டுத் திருந்தியவுடன் அரவணைத்துக் கொள்வாள். அத்துடன் பரிசுத்த ஆவியைப் பழிப்பாருக்கு நிரந்தர நரகம் என்பது தான் உங்கள் மதம். ஆகையால் நான் கூறிய உதாரணம் கண்ணனுக்குத் தான் பொருந்தும்.

Jo,

// All that is written and believed about them, are hearsay. How they actually lived, no body knows. //

Are you totally ignorant of the fact, for example, that Ramanuja’s life is recorded very well by writings within a hundred years after he left this world.

About Shankara, Angirasa, Vyasa etc. their ideas and a general picture of their lives and characters exist in their works.

When so many authenticated works and manuscripts exist, how dare you say “they are known only through hearsay”?? Being in the Catholic faith and having seen the amount of evil and sin that the Catholic Church has been standing for for so many ages, you probably envy our traditions. Fire in your stomach, that is the reason.

ஐயா உங்கள் நூல் ஒரு குறும்படமா? அது ஏன் நீலப்படமாக இருக்கிறது? செக்ஸ் படத்தில் காட்சிகள் தவறுகள் எல்லாவற்றையும் விவரமாக காட்டிவிட்டு பின்னர் இது தவறு என்று முடிப்பது போல உள்ளது. இதற்கும் 11 மணி மலையாள தமிழாக்க படத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
கோபம் வேறு படுகிறீர்கள் போலிருக்கிறது? உங்கள் நூல்ல உள்ளதுதானே இது பரிமளத்தின் ஒரு பகுதியாக நீங்கள் வேண்டுமானால் போற்றலாம். எம்மை பொறுத்தவரை இவை கழிவுகள்,
,எழும் நீங்கள் எழுதுவதை நான் ஒரு நாளும் தேடி வந்து படிப்பதில்லை. இங்கு வந்து அதனுடைய லிங்கை நீங்கள் கொடுக்கும் பொது படிக்க வேண்டிய அவசியமாகிறது.
நான் தீயவற்றை விரும்பிவந்து பார்ப்பதில்லை, கேட்பதில்லை, பேசுவதில்லை.
அப்புறம் இந்த மனநிலை சரியில்லதவர்கள் தாம் பிறருக்கும் மனநிலை சரியில்லை என்று கூறிக்கொண்டு திரிவர். உமக்கு வந்த வியாதி எனக்கா?

ஐயா ஆத்மாவுக்கு நோயா? மனநல மருத்துவரை அணுகவும்

சிவனடியான், உங்க மேல எனக்கென்ன கோவம், வெறும் பரிதாபம்தான்.

பரிசுத்த வேதம், உள்ளதை உள்ளபடி, மனிதனின் கீழான நிலையை விளக்கியுள்ளது. நீங்கள் இந்த குறும்படத்தை பார்க்கவேண்டாம், உங்கள் நீலகண்டனின் படத்தையே பாருங்கள். சந்தோஷமாய் இருங்கள்.

Gandharvan,
கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறீர். நல்லது. ஒரு Ph .d பண்ணக்கூடிய அளவு பெரிய கேள்வியை, பல skeptics மத்தியில் பதில் அளிக்ககூடிய அளவு பெரிய ஞானம் எனக்கில்லை. நம்ம தளத்தில் (சில்சாம் தளம்), இதற்கென தனி திரி உள்ளது, அதில் நிதானமாக பேசலாம், நட்புடன் பேசலாம், மரியாதையுடன் பேசலாம். ஆக்கபூர்வமாக விவாதில்லாம். இங்கே பலர் இடையில் புகுந்து குழப்புவதில் குறியாக உள்ளனர். அவர்களையும் தாண்டி உங்களுக்கு விளக்குவதில் சோர்வு ஏற்ப்படுகிறது. அதற்காக திருச்சிக்காரனையோ, சிவன்டியானையோ நான் குறை சொல்லவில்லை. திருச்சிக்காரனை பொறுத்தவரை, உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். ஆனால், பிரச்னை என்னவென்றால், உண்மையை விலையாக கொடுத்தாவது (தற்காலிக) அமைதியை எதிர்ப்பார்க்கிறார் (atleast that is what I perceive).

சிவனடியானுக்கும், (ஏன் உங்களுக்கும் கூட) என் மீது கொவமிருக்கும் (இருக்காதா பின்ன, உங்கள் தெய்வங்களை அசிங்கமா விமர்சனம் பண்ணி இருக்கேனே). ஆனால், நான் என் கற்பனையில் தோன்றியதை சொல்லவில்லை, நான் புராணங்கள் என்று பல இந்துக்கள் கொண்ட நம்பிக்கையையே சொல்கிறேன்.

நீங்க வாங்க, நிதானமா பேசலாம். இல்லை, எனக்கு இஷ்ட்டமில்லை என்று சொல்வீர்களானால். அது உங்க இஷ்ட்டம்.

நீங்க ஒரு விஷயத்தை போய் என்று சொல்வதால், அது பொய்யாகி போவதில்லை and vice versa .

அசோக் குமார்,

உரையாடலை திசைதிருப்பிக் கொண்டே இருப்பது தான் உங்கள் நோக்கம் போல!

ஏற்கனவே விவாதித்துவிட்டு ஒரு பதிலும் உங்களிடம் இதுவரையில் இல்லை. புதிதாக என்ன உரையாடி என்ன பயன்? மறுபிறவி பற்றி துளியளவும் ஆராய்ச்சி இல்லாமல் நீங்களும் உங்கள் நண்பர்களும் அங்கு பிதற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு ஆராய்ச்சி என்பதும் நடுநிலை என்பதும் எட்டாக் கனி என்றே தெரிகிறது. உண்மையை அறிய உங்களுக்கு ஆர்வமில்லை, உங்களுடைய மார்க்கம் தான் சரி என்பதை எப்படியேனும் நிரூபணம் செய்தாகவேண்டும் — இது தான் உங்கள் அஜண்டா. இப்படி இருப்பவரிடம் உரையாடி என்ன பயன்?

முதல் பாவம் என்பது அசம்பாவிதமானது என்பது நிரூபணம் ஆகிவிட்ட ஒன்று. காரணம்: unbaptized infants going to permanent hell implies that God is extremely cruel, and if they go to heaven it means abortion and infanticide are good things and must be supported by Christians. THERE IS SIMPLY NO OTHER WAY OUT OF THIS DILEMMA. Your founding father, St. Augustine of Hippo declared that unbaptized infants will definitely go to hell. What do you say for this???

சில கிறித்தவர்களே இப்படிக் கூறிவிட்டனர்: http://www.gospeltruth.net/menbornsinners/mbs01.htm . படித்துத் தான் பாருங்கள் இச் சுட்டியை. (ஆனால் அவர்களுக்கு முதல் பாவம் இல்லாவிட்டால் கிறித்தவம் மணலில் தோண்டிய கிணறு போல collapse ஆகி விடும் என்பது புரியவில்லை.)

புராணங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். புராணங்கள் என்ன கூறுகின்றன என்று ஆராய வேண்டுமானால் ஒரு ஆசானிடம் போய் அவரிடம் படியுங்கள். விக்கிபீடியாவில் அவரவர் (இந்துக்கள் உட்பட) ஆதாரமில்லாமல் தான்தோன்றித்தனமாக எழுதுவதையெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு இங்கு வந்து உளறாதீர்கள்.

அதோடு, உங்கள் நண்பர் சில்சாமுடைய தளத்தில் freedom of expression என்பது கிடையாது. எனக்குப் பிடித்த அவதார் (நரசிம்ம மூர்த்தி) ஒன்றை நான் தேர்வு செய்து அதில் பதிவிட்ட பொழுது உங்கள் நண்பர் அதை நீக்கிவிட்டு, “மதம் சார்ந்த சின்னங்களை இங்கு அனுமதிப்பதில்லை” என்றார். ஆனால் அவர் மாத்திரம் இப்போது தனது அவதாரில் சிலுவையை வைத்துக் கொண்டுள்ளார்… இதிலிருந்தே தெரிகிறது உங்கள் நேர்மை எத்தகையதென்று. எம்பெருமானுக்கு அங்கு இடமில்லை என்றால் எனக்கும் அங்கு இடமில்லை.

எங்களுடைய சதாச்சாரியார்கள் எல்லாரும் கருணை வெள்ளத்தின் வடிவங்கள். சத் சம்பிரதாயம் என்ற கான்சப்டே உங்களிடம் இல்லை; இனவெறியர்களைப் பரமாச்சாரியார்களாகக் கொண்டு வளர்ந்த கிறித்தவம் பொய் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. உரையாடி என்ன பயன்? நேரம் தான் வீண்!

நான் இங்கு பதிலளிப்பது எதற்கென்றால், துஷ்பிரச்சாரத்தை முறியடிக்க என் இந்து நண்பர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என்பதற்குத் தான்.

//உரையாடலை திசைதிருப்பிக் கொண்டே இருப்பது தான் உங்கள் நோக்கம் போல!//
As long as some one is in a argueing mode, no one can teach them.

//மறுபிறவி பற்றி துளியளவும் ஆராய்ச்சி இல்லாமல் நீங்களும் உங்கள் நண்பர்களும் அங்கு பிதற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு ஆராய்ச்சி என்பதும் நடுநிலை என்பதும் எட்டாக் கனி என்றே தெரிகிறது.//

//சில கிறித்தவர்களே இப்படிக் கூறிவிட்டனர்: http://www.gospeltruth.net/menbornsinners/mbs01.htm . படித்துத் தான் பாருங்கள் இச் சுட்டியை. (ஆனால் அவர்களுக்கு முதல் பாவம் இல்லாவிட்டால் கிறித்தவம் மணலில் தோண்டிய கிணறு போல collapse ஆகி விடும் என்பது புரியவில்லை.)//
Christians doesn’t make Christianity. It is Chirst who makes it.
I can quote several things, that are quoted by HINDUS, are you gonna agree to that?

//அதோடு, உங்கள் நண்பர் சில்சாமுடைய தளத்தில் freedom of expression என்பது கிடையாது. எனக்குப் பிடித்த அவதார் (நரசிம்ம மூர்த்தி) ஒன்றை நான் தேர்வு செய்து அதில் பதிவிட்ட பொழுது உங்கள் நண்பர் அதை நீக்கிவிட்டு, “மதம் சார்ந்த சின்னங்களை இங்கு அனுமதிப்பதில்லை” என்றார். ஆனால் அவர் மாத்திரம் இப்போது தனது அவதாரில் சிலுவையை வைத்துக் கொண்டுள்ளார்… இதிலிருந்தே தெரிகிறது உங்கள் நேர்மை எத்தகையதென்று. எம்பெருமானுக்கு அங்கு இடமில்லை என்றால் எனக்கும் அங்கு இடமில்லை.//
ஒரு சைவ பிராமணர், தனது மாற்று சமைய நண்பரை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தாராம் (வேதம் கற்றுத்தர). ஒரு நாள் மீன் மார்கெட் சென்றிருந்த அந்த நண்பர் தனக்கு பிடித்த கருவாட்டை வாங்கிக்கொண்டு வரும்வழியில் தன் பிராமண நண்பரின் அழைப்பு ஞாபகம் வர, அப்படியே கருவாட்டை கையில் பிடித்துகொண்டு அந்த பிராமணர் வீட்டுக்கு போனாராம். இதைக்கண்ட பிராமணர் (கருவாட்டு வாடை தாளாமல்) அந்த கருவாட்டு பையை வெளியே வைத்துவிட்டு அவரை உள்ளே வர சொன்னாராம். இதனால் கோவம் கொண்ட அந்த நண்பர், இனி உன் வீட்டுக்கே வரபோவதில்லை என கோவித்து கொண்டு போய்விட்டாராம். இந்த மனிதனால் வேதம் கற்றுக்கொள்ள முடுயாமல் போயிடறே என அந்த பிராமணர் வரத்தப்பட்டாராம்.

//எங்களுடைய சதாச்சாரியார்கள் எல்லாரும் கருணை வெள்ளத்தின் வடிவங்கள். சத் சம்பிரதாயம் என்ற கான்சப்டே உங்களிடம் இல்லை; இனவெறியர்களைப் பரமாச்சாரியார்களாகக் கொண்டு வளர்ந்த கிறித்தவம் பொய் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. உரையாடி என்ன பயன்? நேரம் தான் வீண்!//
Hindus like you might rely are you Sadhachaaris and paramaachaaris. Christians rely only on Christ.

கந்தர்வன், அனைவரிடமும் கிறிஸ்துவ செய்தியை பகிர்வது மாத்திரமே தேவன் எனக்கிட்ட பனி. யாரையும் convince செய்வதோ கம்பெல் செய்வதோ அல்ல.

நீங்கள் பொறுமையுடன் என்னுடன் செலவிட்ட நேரத்திற்காய் நன்றி.

சகோ. அசோக்,

நீங்கள் பகிரும் கருத்துக்கள் எதிலும் கிறிஸ்துவ செய்தி இருப்பதாக தெரியவில்லை.

பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி, குறிப்பாக இந்து மாதத்திற்கான சகிப்புத் தன்மை இன்மையுமே இருக்கிறது. இயேசு கிறிஸ்து சொன்ன முக்கிய கருத்துக்களை கிறிஸ்துவ செய்திகளை நமது தளம் அவ்வப் போது வெளியிட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்து மாற்ற விரும்பிய பிடிவாதக் கருத்துக்களை, “கிறிஸ்துவ செய்தி” என்று நீங்கள் வெளியிட்டால் சிந்தனையாளர்கள் ஒப்ப மாட்டார்கள்.

மேலும் அவ்வப் போது இயேசு கிறிஸ்துவின் முக்கிய கோட்பாடுகளுக்கு விரோதமாக, விவாகரத்து செய்யாமல் இருக்க முடியாது, கோட்பாட்டை பின்பற்றுவதை விட வழிபாடு தான் முக்கியம் என இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமான கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள் , எனவே நீங்கள் சொல்லுவது கிறிஸ்துவ செய்தி என்பதை விட கிறிஸ்து விரோத செய்தி என்பதே பொருத்தமாக உள்ளது என்பதையும் படிப்பவர்கள் உணர்கின்றனர்.

// Hindus like you might rely are you Sadhachaaris and paramaachaaris. Christians rely only on Christ. //

What a joke… Christians rely on the accounts of Mark, Luke, Paul, Matthew, and several other human beings for the veracity of their scripture.

The term “original sin” is not there anywhere in the bible. It was totally concocted by St. Augustine of Hippo. Nowhere in the New Testament you have Jesus saying that he, along with Father and Holy Spirit form the trinity.

Even the New Testament never uses the word “trinity”. This was concocted by the Church a couple of centuries after the death of Jesus.

Any religious system that does not have a clean history is to be rejected outright. This is because the so-called “scriptures” that you praise have passed on through the hands of these unclean men, hate-mongers, racists, and anti-semites right from Bishop Ambrose, Chrysostom, St Augustine all the way through Martin Luther. You do not have a source for truth independent of these men.

///சிவனடியான், உங்க மேல எனக்கென்ன கோவம், வெறும் பரிதாபம்தான்.

பரிசுத்த வேதம், உள்ளதை உள்ளபடி, மனிதனின் கீழான நிலையை விளக்கியுள்ளது. நீங்கள் இந்த குறும்படத்தை பார்க்கவேண்டாம், உங்கள் நீலகண்டனின் படத்தையே பாருங்கள். சந்தோஷமாய் இருங்கள்///

Being a hindu I m very happy always ,so no need ur sympathies.
and dont say ur bibile is the pure vedha. are you not ashamed to say as vedha. you are depending sanskrit words to propagate ur religion. this word itself begged from our hinduism.

for neelakandan u write ur own story and crying with that. u never quote the related purana’s wordings as it is with texts like neelagandan doing ……
dont claim wiki as an evidence for hindu epics.go and fiind some good tutor and get the real puranas as it is

but i quoted the useless rotten smelled texts as in ur book

/////நான் இங்கு பதிலளிப்பது எதற்கென்றால், துஷ்பிரச்சாரத்தை முறியடிக்க என் இந்து நண்பர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என்பதற்குத் தான்.//////

thanks mr kantharvan.

// ஒரு சைவ பிராமணர், தனது மாற்று சமைய நண்பரை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தாராம் (வேதம் கற்றுத்தர). ஒரு நாள் மீன் மார்கெட் சென்றிருந்த அந்த நண்பர் தனக்கு பிடித்த கருவாட்டை வாங்கிக்கொண்டு வரும்வழியில் தன் பிராமண நண்பரின் அழைப்பு ஞாபகம் வர, அப்படியே கருவாட்டை கையில் பிடித்துகொண்டு அந்த பிராமணர் வீட்டுக்கு போனாராம். இதைக்கண்ட பிராமணர் (கருவாட்டு வாடை தாளாமல்) அந்த கருவாட்டு பையை வெளியே வைத்துவிட்டு அவரை உள்ளே வர சொன்னாராம். இதனால் கோவம் கொண்ட அந்த நண்பர், இனி உன் வீட்டுக்கே வரபோவதில்லை என கோவித்து கொண்டு போய்விட்டாராம். இந்த மனிதனால் வேதம் கற்றுக்கொள்ள முடுயாமல் போயிடறே என அந்த பிராமணர் வரத்தப்பட்டாராம். //

ஓ ஓகே! அதாவது இந்தியாவில் கிறித்தவம் பெரும்பான்மை மதமாகிவிட்டால்…

(1) மத சுதந்திரத்தை எதிர்க்கும் சட்டங்களை அமல்படுத்துவீர்கள்.

(2) இந்து மதச் சின்னங்களைத் தரிப்பவர்கள் பொதுவிடங்களில் வெறும் நெற்றியுடன் வரவேண்டும் என்பீர்கள்.

(3) கிறிஸ்துவ வீதிகளில் இந்துக்களாக வருபவர்கள் இந்து சின்னங்களைத் தரிக்கக் கூடாது என்பீர்கள்.

(4) இந்து மதத்தை பின்பற்றுபவர்களை திருவிழாக்கள், ஊர்வலன்கள் கொண்டாட விடமாட்டீர்கள்.

ஆக்கிரமிப்பு மதம் என்பதற்கான இலக்கணத்தை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

// thanks mr kantharvan. //

சிவனடியான், நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. தர்மத்தைக் கடைபிடிப்பதும் அசுர சக்திகளை வீழ்த்துவதும் கடமைகள்.

// உங்கள் நண்பர் சில்சாமுடைய தளத்தில் freedom of expression என்பது கிடையாது. எனக்குப் பிடித்த அவதார் (நரசிம்ம மூர்த்தி) ஒன்றை நான் தேர்வு செய்து அதில் பதிவிட்ட பொழுது உங்கள் நண்பர் அதை நீக்கிவிட்டு, “மதம் சார்ந்த சின்னங்களை இங்கு அனுமதிப்பதில்லை” என்றார். ஆனால் அவர் மாத்திரம் இப்போது தனது அவதாரில் சிலுவையை வைத்துக் கொண்டுள்ளார்… இதிலிருந்தே தெரிகிறது உங்கள் நேர்மை எத்தகையதென்று. எம்பெருமானுக்கு அங்கு இடமில்லை என்றால் எனக்கும் அங்கு இடமில்லை.//

நண்பர் கந்தர்வன் அவர்களே,
தங்கள் மத உணர்வுகளை நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்;ஆனாலும் நீங்களும் நடுநிலையுடன் ஒன்றை சொல்லுங்கள், “தமிழ் ஹிந்து” தளத்தில் அண்மையில் சாய்ந்துபோன சாயிபாபா வரை அனைவருடைய படத்தையும் போட்டு அஞ்சலி செலுத்துகிறார்களே, ஒரு நாளாவது அவர்கள் கிறித்தவர்களுடைய மத அடையாளங்களையோ அல்லது முகமதியருடைய அடையாளங்களையோ போட்டு அவர்களுடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துதல்களோ சொல்லியிருக்கிறார்களா?

மேலும் சகிப்புத்தன்மையைக் குறித்தும் நல்லிணக்கத்தையும் குறித்தும் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கும் திருச்சிக்காரனுடைய தளத்தில் தனக்கு சமமில்லாத ஒரு சாதாரண மனிதனைக் கொன்று இரத்தம் குடித்த அவதாரத்தை உங்கள் பெருமான் என்று சொல்லிக்கொள்ளுகிறீர்களே..? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை; தியாகத்தையும் கீழ்ப்படிதலையும் நினைவுப்படுத்தும் சிலுவையின் அடையாளத்துடன் ஒப்பிட்டால் உங்கள் பெருமானின் துஷ்டத்தனமான தோற்றம் பார்ப்பவர்க்கு பயத்தையே தோற்றுவிக்கும் அல்லவா? தன்னை எதிர்ப்பவர்களையும் வணங்காதவர்களையும் அழிக்கும் உங்கள் பெருமானின் பெருமையை திருச்சிக்காரனுக்கு விளக்கமாட்டீர்களா? ஆகபோக இதுவும் சைவ – வைணவ மோதலுக்கு ஒரு உதாரணம் தானே? இராவணன் கூட சிவபக்தர் என்று கேள்விபட்டேன்; உங்களுக்குள் இவ்வளவு குழப்பங்களை வைத்துக்கொண்டு எங்களுக்கு புத்திசொல்ல முயற்சிக்கலாமா?

கந்தர்வன் என்னும் தனிப்பட்ட நபரை நான் நேசிக்கிறேன்; ஆனால் அவருடைய கொள்கைகளுடன் என்னால் ஒத்துப்போகமுடியாது; ஏனெனில் அதன் பயங்கரங்களையும் ஆழங்களையும் அறிந்தவன் நான். நீங்கள் தாராளமாக எமது தளத்தில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்; அவற்றை நாங்கள் ஒருபோதும் தணிக்கை செய்கிறதில்லை; ஆனால் கற்பனை சித்திரங்களான விக்கிரகங்களை அனுமதிக்கமுடியாது என்பதில் எந்த மாற்றமும் இல்லை; காரணம் அதைக் குறித்து அருவருப்பானது என்றும் நரகலானது என்றும் வேதம் சொல்லுகிறது; இந்து மார்க்கமும் கூட அதாவது ஆரியருக்கு கூட விக்கிரக வழிபாட்டில் நம்பிக்கையிருந்ததில்லை என்பதே உண்மையாகும்.

இறுதியாக நான் சொல்லவருவது யாதெனில் முழுக்க முழுக்க கிறித்தவ மார்க்கத்தின் நம்பிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் செயல்படும் எமது தளத்தில் நீங்கள் உங்கள் பெருமானின் உருவத்தைப் பதிப்பது என்பது எமது ஆலயத்திலேயே உங்கள் விக்கிரகத்தைக் கொண்டு வந்து வைத்துவிட்டு அக்கிரமம் செய்யும் சங்பரிவாரின் செயல்பாட்டைப் போன்றதே.ஆனாலும் உங்கள் கருத்துக்களை ஆவலோடு வரவேற்கிறோம். அதற்குரிய பதிலைக் கூறவும் ஆயத்தமாக இருக்கிறோம்.அதேபோல நீங்களும் எங்கள் கேள்விகளுக்கு நேர்மையுடன் சுற்றிவளைக்காமல் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.நன்றி..!

அன்புக்குரிய சகோதரர் சில்சாம் அவர்களே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

//மேலும் சகிப்புத்தன்மையைக் குறித்தும் நல்லிணக்கத்தையும் குறித்தும் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கும் திருச்சிக்காரனுடைய தளத்தில் தனக்கு சமமில்லாத ஒரு சாதாரண மனிதனைக் கொன்று இரத்தம் குடித்த அவதாரத்தை உங்கள் பெருமான் என்று சொல்லிக்கொள்ளுகிறீர்களே..? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை; தியாகத்தையும் கீழ்ப்படிதலையும் நினைவுப்படுத்தும் சிலுவையின் அடையாளத்துடன் ஒப்பிட்டால் உங்கள் பெருமானின் துஷ்டத்தனமான தோற்றம் பார்ப்பவர்க்கு பயத்தையே தோற்றுவிக்கும் அல்லவா? தன்னை எதிர்ப்பவர்களையும் வணங்காதவர்களையும் அழிக்கும் உங்கள் பெருமானின் பெருமையை திருச்சிக்காரனுக்கு விளக்கமாட்டீர்களா? //

அனேகமாக நீங்கள் குறிப்பிடுவது நரசிம்மரைப் பற்றி என்றே நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல ஹிரண்யகசிபு தன்னை வணக்காமல் இருக்கிறாரே என்ற கோவத்தினால் நரசிம்மர் அவரைக் கொன்றதாக தெரியவில்லை.

ஹிரண்ய கசிபு என்கிற மகா வல்லமை உடையவர். எல்லா மக்களையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, அடாவடி காட்டாசி நடத்தி , தன்னையே எல்லோரும் வணக்க வேண்டும், என்று உருட்டி மிரட்டி கட்டளை போட்டுக் கொண்டிருந்தார். அவரது சொந்த மகனான பிரஹலாதன் விஷ்ணு என்பவரை வணங்குவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

பிரஹலாதனின் மத சுதந்திரத்தை ஹிரண்ய கசிபு அங்கீகரிக்கவில்லை. பல முறை சொந்த மகனையே கொலை செய்ய முயற்சி செய்து இருக்கிறார் ஹிரண்ய கசிபு.

சர்வாதிகார அடக்குமுறை கொடுங்கோலனாக இருந்த ஹிரண்ய கசிபுவிடம் இருந்து பிரஹலாதனயும் மக்களையும் காக்க அவனுடன் சண்டை இட்டு, சண்டையில் ஹிரனைய கசிபு கொல்லப் பட்டு இருக்கிறான். எனவே நரசிம்மர் தரப்பில் நியாயம் இருக்கிறது.

//ஆகபோக இதுவும் சைவ – வைணவ மோதலுக்கு ஒரு உதாரணம் தானே? இராவணன் கூட சிவபக்தர் என்று கேள்விபட்டேன்; உங்களுக்குள் இவ்வளவு குழப்பங்களை வைத்துக்கொண்டு எங்களுக்கு புத்திசொல்ல முயற்சிக்கலாமா? //

இராவணன் சிவ பக்தனாக இருந்தாலும் சரி, எந்த பக்தனாக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணை, அவள் விருப்பத்துக்கு மாறாக தூக்கி செல்வது மாபெரும் குற்றமாகும். நாகரிக சமுதாயத்தில் வாழும் ஒரு நாகரிக குடி மகனுக்கு இது நன்றாக தெரியும். இராவணன் சிவ பக்தனாக இருந்தாலும் சரி, எந்த பக்தனாக இருந்தாலும் சரி, அவன் தன் மனைவியை தூக்கிப் போயிராத பட்சத்தில் இராமன், இராவணன் மீது போர் தொடுக்கவோ, இலங்கைக்கு சென்று இருக்கவோ போவது இல்லை. தமிழ் நாட்டில் உள்ள தாய்மார்களிடம் சென்று, இராவணன் ஒரு விசுவாசமான நம்பிக்கையாளன் என்பதால், அவன் இன்னொருத்தன் பொண்டாட்டியை தூக்கிப் போனால் அவனை ஒன்றும் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்வதானால் செய்து கொள்ளலாம், அது சரியா என்று மக்களே சொல்வார்கள்.

//சங்பரிவாரின் செயல்பாட்டைப் போன்றதே//

சங்க பரிவாரின் செல்வாக்கு அதிகமாக காரணம், உங்களைப் போன்றவர்களின் மத சகிப்புத் தன்மை அழிப்பு பிரச்சாரம் , பிற மத தெய்வங்களை இகழ்வது போன்றவையே. சாதரணமான இந்து உங்களை எழுத்துக்களை படித்தால் , சங்க பரிவார அனுதாபியாக ஆகி விடுவான்.

இவர்களுக்கு இரணியக்சிப்பு, ராவணன் மீது தான் அனேக பரிவு. பிரகலாதனையோ விபீஷணனையோ பற்றி கவலையில்லை.

’என்னை அடிபணியவில்லை என்றால் கொல்லுவேன் தீயிலிடுவேன் மலையிலிருந்து உருட்டுவேன்’ என்று இரணியகசிபு சொல்வது யாரை நினைவுபடுத்துகிறது? (க்ளூ: இட்லியை எதில் வேக வைப்பார்கள்?) ஒருவேளை இந்த இரணியகசிபுவைத் தான் பாலைவனக் காட்டான்கள் வழிபட்டார்களோ என்னவோ.

இப்படி இருந்த இராவணனுக்கும் இரணியகசிபுவுக்கும் கூட கருணைவள்ளலானவர் விபீஷணனையும் பிரகல்லாதனையும் ஏவி இறுதிச் சடங்குகள் செய்வித்தார்.

// ஒரு பெண்ணை, அவள் விருப்பத்துக்கு மாறாக தூக்கி செல்வது மாபெரும் குற்றமாகும். //

ஒரு பெண் மட்டுமா?? அவன் மனைவியாகிய மண்டோதரியே சொல்கிறாள்:

“He used to bring the virgin-daughters of gods, demons and human beings from here and there. He brought mourning to his enemy’s wives. He was the leader of his own people.” – Valmiki, 6.11.55

“You have fallen under the sway of your enemies in that you were cursed by the numerous women of noble lineage, who, though devoted to their husband, fond of piety and intent on the service of their elders, had been widowed by you, O king, and were accordingly tormented with grief. That curse which was pronounced at that time by those aggrieved women on their having been wronged by you, has fallen on you.” – Valmiki, 6.111.66-67

“The popular saying that ‘the tears of virtuous wives d not generally fall on the ground in vain’ has come out probably true in your case O king!” – Valmiki 6.111.68

In Bala Kanda, Celestials approach Brahma and tell Him about Ravana’s exploits:

“Oh! God, the demon named Ravana is torturing all of us with his intrepidity, as you have blessed him, and we are unable to control him. [1-15-6]

“You have given boon to him appreciating his ascesis and oh, god, with high regard to that boon of yours we are tolerating all the cruel acts of Ravana from then onwards [1-15-7]

“That malevolent Ravana is tormenting all the three worlds, hating the functionary deities of cosmos, and always desires to assail Indra, the king of all the functionary deities of universe. [1-15-8]

இராவணனைச் சிவபக்தனாக எந்த உண்மையான சைவரும் சொல்லமாட்டார். வைணவனாக இருக்கும் நான் உறுதியாகச் சொல்லுவேன்.

//////தங்கள் மத உணர்வுகளை நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்;///////
நல்லவேளை செத்துவிட்டார் சிவாஜிகணேசன்

//////சாய்ந்துபோன சாயிபாபா ////
நல்ல மனிதநேயம்.ஒரு மனிதர் இறந்துவிட்டால் சாய்ந்து போனார் என்று சொல்வீர்களா?

///////ஒரு நாளாவது அவர்கள் கிறித்தவர்களுடைய மத அடையாளங்களையோ அல்லது முகமதியருடைய அடையாளங்களையோ போட்டு அவர்களுடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துதல்களோ சொல்லியிருக்கிறார்களா?///////
அடடா என்னே ஒரு சிந்தனை? நீங்கள் எதிர்பார்ப்பது போல நீங்கள் என்றாவது செய்ததுண்டா?

///////மேலும் சகிப்புத்தன்மையைக் குறித்தும் நல்லிணக்கத்தையும் குறித்தும் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கும் திருச்சிக்காரனுடைய தளத்தில்/////
அவர் செயல்படுத்தியும் கொண்டிருப்பதால் தான் உங்களுடைய இந்த கருத்து வெளியிடபட்டிருக்கிறது.நீங்கள் உங்களுக்கு சாதகமில்லாத கருத்தகளை வெளியிடுவதில்லை என்பதை நீங்களே கூறியுள்ளீர்கள்.

//////தனக்கு சமமில்லாத ஒரு சாதாரண மனிதனைக் கொன்று இரத்தம் குடித்த அவதாரத்தை உங்கள் பெருமான் என்று சொல்லிக்கொள்ளுகிறீர்களே..? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை//////

சாதாரண மனிதர்களின் தண்டனைக்கு ஆளாகி உயிரை சிலுவையில் விட்டு அதன் பிறகு செத்தும் கெடுத்தான் சீதக்காதி கதையாக பல லட்சம் பேரை குருசெடு மற்றும் எப்படியோ கொன்று கொண்டிருப்பவர் தியாகி.உலகமே காப்பாற்ற படுவதற்காக உலகையே ஆட்டி வைத்து கொண்டு நான் கடவுள் என்னை வணங்காதவர்க்கு தண்டனை என்று வாழ்ந்த அளவிட முடியாத பலம் கொண்ட ஒரு காட்டு மிருகம் போன்றவனை மனிதன் அல்லாத உருவெடுத்து கொன்று உலகை காத்தது உங்களுக்கு துஷ்ட்டதனம்,

அரச தண்டனை பெறுவது தியாகம் அரசனாக இருந்தாலும் துஷ்ட்டனாக இருப்பவனை அழித்து மக்களை காப்பது துஷ்ட்டத்தனம், என்ன உங்கள் லாஜிக் ?

////தன்னை எதிர்ப்பவர்களையும் வணங்காதவர்களையும் அழிக்கும் உங்கள் பெருமானின் பெருமையை திருச்சிக்காரனுக்கு விளக்கமாட்டீர்களா? ////////
உங்கள் கர்த்தரை போல ஏறி நரகில் தள்ளிவிடவில்லை பெருமாள் ஹிரண்யனுக்கும் மோட்சம் தான் கொடுத்தார்.

///////ஆகபோக இதுவும் சைவ – வைணவ மோதலுக்கு ஒரு உதாரணம் தானே? இராவணன் கூட சிவபக்தர் என்று கேள்விபட்டேன்; உங்களுக்குள் இவ்வளவு குழப்பங்களை வைத்துக்கொண்டு எங்களுக்கு புத்திசொல்ல முயற்சிக்கலாமா? ////////
எங்கு வந்தது இங்கு சைவ வைணவ சண்டை? உங்களுக்கு ஆசை (அல்ப ஆசை) அதனால் தான் இந்த வார்த்தைகள். சைவ வணவத்திற்குள் சண்டை வராவிட்டாலும் வளர்த்து கொண்டாட நினைக்கும் கூத்தாடிகள் நீங்கள் என்பது இப்போது உங்கள் வார்த்தைகளிலேயே வெளிப்பட்டுவிட்டது.

ராவணன் சிவபக்தர் தான் அதனால் என்ன? பாவமன்னிப்பு எல்லாம் கொடுத்து காப்பாற்றிவிட முடியாது, உங்களுக்கு இருக்கும் ஸ்பெசல் ப்ரோவிசன் எல்லாம் இங்கே கிடைக்காதே. கர்த்தரின் பக்தராக இருந்து ஊரான் மனைவியை தூக்கி கொண்டு வந்தால் வேண்டுமானால் கர்த்தர் காப்பாற்றி விடுவார் இங்கே அதெல்லாம் நடக்காது.

////ஆனால் கற்பனை சித்திரங்களான விக்கிரகங்களை அனுமதிக்கமுடியாது என்பதில் எந்த மாற்றமும் இல்லை;//////
ஒருவேளை கர்த்தர் தூக்கில் தொங்கவிடப்பட்டு இருந்தால் தூக்கு கயிறை உங்களின் தளத்தில் போட்டு கொள்வீர்களா? அல்லது சிரச்சேதம் செய்யபட்டிருப்பின் அந்த கருவியை போட்டிருப்பீர்களா?

/////ஆனால் கற்பனை சித்திரங்களான விக்கிரகங்களை அனுமதிக்கமுடியாது என்பதில் எந்த மாற்றமும் இல்லை; காரணம் அதைக் குறித்து அருவருப்பானது என்றும் நரகலானது என்றும் வேதம் சொல்லுகிறது////
உங்களுக்கு வேதம் என்று சொல்லிக்கொள்ள கூசவில்லை? அதுமட்டும் இனிக்குதோ? இந்து மத விக்ரககங்கள் நரகல், இந்து மதத்திலுள்ள வார்த்தைகள் மட்டும் VENDUM உங்களுக்கு. அடுத்தவரை அருவருப்பாக சித்தரிக்கும் ஒரு படைப்பு வேதமாம்

இது நாம் திருச்சிக்காரனுக்குக் கொடுத்துள்ள பதிலாகும்…

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

அன்பான நண்பரே, நீங்கள் செய்யும் விதண்டாவாதத்திலும் உங்களை பொறுமையினால் கவர்ந்துவிடுகிறீர்கள்; ஒரு கதையில் ஹீரோ ஜீரோ ஆவதும் ஜீரோ ஹீரோ ஆவதும் கதாசிரியரின் கைவண்ணமல்லவா?

நீங்கள் எழுதிய கதையின் நாயகன் உங்கள் கொள்கைக்கு விரோதமானவராக இருந்தும் எப்படித்தான் அவரை பெருமானாக உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ எனக்கு தெரியவில்லை;நீங்கள் என்ன சொல்லுவீர்கள், இந்துக்கள் மதநல்லிணக்கத்தைப் பேணுகிறார்கள், அவரவர் தெய்வத்தை அமைதியாக வழிபடுகிறார்கள், யாருக்கும் எந்த தீங்கும் செய்கிறதில்லை,என்பதாக;

அதனை உண்மை என்றே வைத்துக்கொள்ளுவோம், ஆனால் அவர்களால் வணங்கப்படும் தெய்வங்கள் அதுபோல இல்லையே, ஆனானப்பட்ட விஷ்ணுவுக்கு ஒரு சாதாரண குறுநில மன்னன் தன்னை வணங்கவில்லை என்று பொறாமை வருகிறதே, தன்னை வணங்க மறுத்தவனை அழிக்க அவதாரமே எடுத்து வருகிறாரே, விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மன் (பெயரில் எத்தனையோ அப்பாவிகள் உண்டு..) ஒரு மனிதனை அழிப்பதற்காகவே இறங்கி வந்தானல்லவா,அந்த அவதாரம் மனிதல்லவே, அப்படியானால் தெய்வமாக விஷ்ணு பொறுப்பேற்கமாட்டார், அதே நேரம் பாதி மனுஷனான நரசிம்மனும் பொறுப்பேற்க மாட்டார், மிருகம் அந்த கொலைக்கு காரணம் அல்லவா?

இந்த காட்சியை தற்காலத்தில் கிராஃபிக்ஸ் உதவியுடன் பரபரப்பான இசையுடன் படமாக்கி கண்களுக்கு விருந்தாக்குகிறீர்கள்;இதனால் என்ன நன்மை விளையும் என்று நினைக்கிறீர்கள்? இதனால் மனதில் அமைதி வந்துவிடுமா? செல்வம் கொட்டுமா? உங்களை எதிர்ப்பாரை அசுரர்களாகவும் உங்களை தேவர்களாகவும் பாவித்துக்கொள்ளுவதே மதநல்லிணக்கத்துக்கு எதிரானது அல்லவா? அப்புறம் என்ன நல்லிணக்கம்,அமைதி வழிபாடு என்று வஞ்சிக்கிறீர்கள்?

ப்ரகலாதன் வழிவந்த பக்தர்கள் இன்றும் நம்மோடு இருக்கிறார்கள், ஹிரண்யகசிபு வழிவந்த அசுரர்களும் இருக்கிறார்கள், நரசிம்மரும் இருப்பதாகவே நம்புகிறீர்கள், உணர்வில் அந்த கதையும் பதிந்தே இருக்கிறது, அப்படியானால் (என்னைப் போல‌) விஷ்ணுவைப் பகைப்பவர்களும் எதிர்ப்பவர்களும் அசுரர்களா? என்று அறிய விரும்புகிறேன்.

சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கேட்கிறேன், உங்கள் தெய்வங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களெல்லாம் காஸ்மிக் உலகில் பயன்படாது என்பதும் அவை மாமிச தேகமுடைய ஜீவன்களை அழிப்பதற்காகவே பயன்படுபவை என்பதை அறிவீர்களா? சூலமும் கொடுவாளும் ஆவி உலகவாசிகளுக்கு எதற்கு ஐயா? இவையெல்லாமே மனிதனை மனிதன் மிரட்ட எதிர்க்க அழிக்க மட்டுமே பயன்பட்டன அல்லவா?

அதுபோன்ற கொலைகளுக்கு உங்கள் தெய்வங்களே மூல காரணமாக இருக்கிறதல்லவா? விஷ்ணுவை வணங்க மறுத்தவனை காழ்ப்புணர்ச்சியுடன் கொல்ல நரசிம்மனாக (பாதி மிருகமும் பாதி மனிதனும்) விஷ்ணுவே அவதாரமெடுத்து வருகிறாரல்லவா? ஏன் அவர் அமைதியாக வந்து தன்னுடைய அன்பினால் தன்னுடைய எதிரியை திருத்தியிருக்கக்கூடாதா? அல்லது பெற்ற பிள்ளை தன் வழி நிற்கவேண்டும் என்று ஒரு தகப்பன் எதிர்பார்ப்பது தவறா? நீங்கள் மதமாற்றத்தையே எதிர்க்கிறீர்களே, அப்படியானால் ப்ரகலாதனை மதம் மாற்ற முயற்சிக்கும் விஷ்ணு குற்றவாளிதானே?

இதுபோலவே இராவணன் கதையும்…

இராவணன் சீதையை பெண்டாள கடத்திச்செல்லவில்லை என்பது கதையில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது;அதனை மறைத்து இராவணனை வில்லனைப் போல சித்தரித்தது ஆரிய மாயை..!

இராவணனைவிட கொடூரமானவன் இராமனே, ஏனெனில் உத்தமியாக திரும்ப வந்தவளை அக்னி ப்ரவேசம் செய்ய வைத்தவன் இராமன்..!

காரணம் ஆயிரம் இருக்கட்டும், சீதை ஒரு குற்றமும் செய்யாத நிலையில் இராமனே அவளை சந்தேகப்பட்டபோது அவளுடைய மனம் என்ன பாடுபட்டிருக்கும்? எந்தவொரு பத்தினியும் தன்னை சந்தேகப்படுபவனை ஆண்மகனாகவே மதிக்கமாட்டாள் தானே? இந்த கதையினால் இந்துக்கள் அடைந்த நன்மை என்ன?

இ9வையெல்லாம் நீதிக் கதைகள் மற்றும் பொழுதுபோக்கு கதைகள் என்று சொல்லுங்கள்,ஒப்புக்கொள்ளுகிறோம்;அதைவிடுத்து அந்த‌ கதாநாயகர்களையெல்லாம் தொழுது சேவிக்க ஆரம்பித்தால் ஆளுங்கட்சியின் வெற்றிக்காக கடுமையாக தேர்தல் பிரச்சாரம் செய்த வடிவேலுவைக் கூட கள்ளழகர் அவதாரமாக்கி வழிபடலாம்..!

இதுக்குதான் சொல்லுவாங்க, பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணுமுன்னு… இனியும் உங்களைக் குறித்து மதநல்லிணக்கவாதி என்றோ அமைதியாக அவரவர் தெய்வத்தை வணங்குவதையே ஆதரிப்பதாகவும் சொல்லாதிருங்கள்; உங்களோடு அமைதியாக – நல்லிணக்கத்தோடு இருக்கவேண்டி இனவெறியும் மதவெறியும் நிரம்பிய ஒரு ரெண்டுங்கெட்டான் ஜீவனை தெய்வமாக நான் வணங்கமுடியுமா? ஹிரண்ய கசிபு கொடூரமானவன் என்று உங்களுக்கு யார் சொன்னது? அதற்கு என்ன ஆதாரம்? செவிவழி செய்தி தானே? இந்த நவநாகரீக‌ உலகில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு தூக்கு தண்டனை கைதியின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது;ஆனால் ஒரு நாட்டின் மன்னனை எந்த விசாரணையும் இன்றி ஒரு தெய்வம் திடீரென ஒரு மிருக ரூபத்தில் தோன்றி கொலை செய்யுமாம், அது தெய்வமாம், அதை வணங்கினால் அமைதி கிடைக்குமாம், அது இரத்தம் குடித்து தாகசாந்தியடையும் வரைக்கும் தேவர்கள் பூமாலை சொறிய அழகிய தேவதைகள் நடனம் ஆடவேண்டுமாம், என்னய்யா கதை விடறீங்க..? இப்படியே ஜலந்திரன் எனும் சாதாரண மனிதனைக் கொலைசெய்ய அவன் மனைவியை விஷ்ணு கற்பழித்த கதையையும் சொதப்பினீர்கள்;

ஒரு இந்துவாக சிந்தித்து இந்துவாகவே இவையனைத்தையும் எழுதியிருக்கிறேன், என்னுடைய உடம்பில் ஓடுவது இந்திய இரத்தம்; இந்த தேசத்தில் இதற்கு மேலும் காட்டுமிராண்டி மார்க்கங்களின் கொடுமைகளை சகித்துக்கொள்ளமுடியாத வேதனையிலேயே எழுதுகிறோம்;ஆனால் என்னை இந்துவிரோதியாக சித்தரிக்கப்பார்க்கிறீர்கள்; மதவெறியும் இனவெறியும் யாரிடம் இருக்கிறது என்று நீங்களே சிந்தித்துப்பாருங்கள்;வேற்று மார்க்கத்தைக் குறித்த சர்ச்சைகளைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

நம்முடைய இந்து மார்க்கத்தைக் குறித்து நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலைக் கொடுத்தால் அதனால் தெளிவும் அமைதியும் உண்டாகுமல்லவா? உங்கள் விஷ்ணுவிடம் இனவெறியும் மதவெறியும் இருந்த காரணத்தாலேயே அநியாயமாக ஒரு கொலை நடந்தது;அதை படமாக சித்தரித்து வழிபட்டால் என்ன உணர்வு கிடைக்கும் என்று சொல்லுங்கள்;தியாகமும் பொறுமையும் தாண்டவமாடுமா?

உலகில் இந்து மார்க்கத்தைத் தவிர வேறெந்த மார்க்கத்திலாவது தெய்வங்கள் யுத்த கருவிகள் ஏந்தியிருக்கிறதா? வேல், கம்பு, ஈட்டி, சூலம், கொடுவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை ஏந்தியிருக்கும் உருவங்களை வணங்கச் செய்து பிஞ்சு மனங்களை கொலை வெறியினால் நிரப்புகிறீர்கள் என்கிறேன்; மற்றபடி யாகம், யோகம் எல்லாம் உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணங் கொள்ளவேண்டாம்; அவையெல்லாம் உலகம் தோன்றிய காலத்திலிருந்து பல்வேறு தவஞானிகளால் அமைக்கப்பட்டதாகும்; அதற்கும் உங்கள் தெய்வங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

உதாரணமாக முக்காலமுமறிந்த‌ சித்தர்கள் யாரும் தற்போது வணங்கப்படும் தெய்வஙகளைக் குறித்து எதுவும் அறிந்தவர்களல்ல.எதிரியை வசப்படுத்திக் கொள்ள கூடிக்கெடுக்கும் பாணியையே காலங்காலமாக இந்துமார்க்கம் பின்பற்றி வருகிறது; இதற்கு வேளாங்கண்ணி மாதா கோவிலே ஒரு சாட்சி; அது மிகவிரைவில் இந்து மடாலயமாக மாறிவிடும்; இந்தியாவைத் தவிர வேறெங்கும் இந்த அளவுக்கு மாதா வணங்கப்படவில்லை என்பதே இதற்கு ஆதாரம்; இதுபோலவே பௌத்தம் மற்றும் ஜைன மார்க்கத்தையும் சீக்கிய மார்க்கத்தையும் கூட அழித்தீர்கள்;அழிப்பது இருவகை, இல்லாமல் செய்வது ஒருவகை எனில் இருந்தும் இல்லாமல் செய்வது மற்றொரு வகை.

நான் எப்படி உங்களுடைய மொத்தக் கருத்தையும் உள்வாங்கி அனைத்துக்கும் பதிலளித்துள்ளேனோ அதேபோல முழுமையான ஒரு பதிலைத் தரமுடியாவிட்டால் அமைதியாக இருக்கவும்;ஆனால் உங்கள் பதில் இந்து மார்க்கம் சம்பந்தமானதாக மாத்திரமே இருக்கவேண்டும்.ஏனெனில் நானும் ஒரு இந்தியன், முன்னாள் இந்து என்ற வகையில் இவ்வளவையும் எழுதியிருக்கிறேன் என்பதை அறிவீர்களாக.

I already expalied very clearly that Hiranyu Kashibu was NOT KILLED FOR THE REASON THAT HE DID NOT WORSHIP VISHNU.

Still you are unnecessaily harping the concoted lies. Its mentioned very clearly that Hiransyu Kashibu tied to kill his own son many times , as his son Prahaladha waschosing his own method of worship. Hiranaya Kashibu was a cruel tyrant. that is why he wsa killed.

The time when Ram was there , bow and arrow were used primarily, he used the same.

Siddhas and all worshipped Muruga, Shiva … etc.

Hinduism, Jainsim, and Buddhism share common fundementals … such as

A man can raise himself spirutullay on his own

Aman can improve himself by austeristy, control of desires

Birth and death Cycle

Liberation from Birth and Death cucle is possible by ones own effort .

Jains visit Hindu Temples, Hindus vist Jain temples.

A hindu has god gard and revernce for Buddha, and will always use any available opportunity to visit Buddhist shrine.

Hindu Gods carry weapons, but even the child knows that they are obe used against cruel tyrants only, Hindu children or adultare calm and restarint, dont indulge in religious wars.

None of th Hindu Gods or scripyures ever gave out racist chunaism or Religious Chuanism.

அன்புக்குரிய சகோதரர் சில்சாம் அவர்களே,

நீங்கள் சொல்வது போல எந்த ஒரு சந்தேகமும் எந்த ஒரு இந்துவின் மனதிலும் எழுவதில்லை.

இந்துக் கடவுள்கள் ஆயுதங்களை ஏந்தியது அப்பாவிகளை கொடுமை செய்யும் கொரூர சர்வாதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்திற்காக என்பது எல்லா இந்துவுக்கும் தெரியும்

.இந்துக்களால் கடவுளென்று வழிபடப் படுபவர்கள் அவரகள் எந்தக் காலத்தில் இந்த உலகத்தில் இருந்தார்களோ அந்தக் காலத்திய ஆயுதங்களை உபயோகப் படுத்தி இருக்கின்றனர். இராமர் வில்லை உபயோகப் படுத்தி இருக்கிறார். விநாயகர் தன் தந்தங்களில் ஒன்றையே முறைத்து ஆயுதமாக உபயோகப்படுத்தினார் என்கிறார்கள். இயேசு ஏன் ஸ்போர்ட்ஸ் காரில் போகாமல் கழுதைக் குட்டியின் மேல் போனார் என்று கேட்பது போலத்தான் இருக்கிறது உங்கள் கேள்வியு. இயேசு காலத்தில் மக்கள் உபயோகப் படுத்தியது கழுதையும், குதிரையுமே. அதையே அவரும் உபயோகப் படுத்தினார்.

இதில் நீங்கள் என்ன தெய்வக் குற்றத்தைக் காண்கிறீர்கள் என புரியவில்லை.

நீங்கள் பிற மதங்களை சகித்துத் கொள்ள இயலாத நிலையல் இருப்பதால், புதுப் புது புனைவுகளை இட்டுக் கட்டி இன அழிப்பு செய்தார், ஹிரண்ய கசிபு தன்னைக் கும்பிட மறுத்ததால் அவனை கொன்றார் என்பது போன்ற பொய் பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் செய்வதானால் அதை எல்லாம் தயவு செய்து நம் தளத்தில் பதிவிட வேண்டாம்.

உங்களுடைய பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி கருத்துக்களை படித்து போதும் போதும் என்றாகி விட்டது.

அதனால் அனேகமாக உங்கள் தளத்துக்கு இனிமேல் நான் வருவதும் படிப்பதும் அரிதான ஒன்றாகவே இருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளை விளக்கி நாம் பல கட்டுரைகளை வெளியிடுவோம். இயேசு கிறிஸ்துவின் பேரை சொல்லிக் கொண்டு, பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை உமிழும் பிரச்சாரத்தை விட்டு, நல்ல பாதைக்கு மனம் திரும்புவதானால் திரும்புங்கள். இல்லையேல் உங்கள் விருப்பம்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் நண்பர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

திருச்சிக்காரன் ஓட்டம் என்று போட்டு சந்தோசப் பட்டுக் கொள்வதானாலும் எனக்கு அட்டியில்லை.

// இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளை விளக்கி நாம் பல கட்டுரைகளை வெளியிடுவோம். இயேசு கிறிஸ்துவின் பேரை சொல்லிக் கொண்டு, பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை உமிழும் பிரச்சாரத்தை விட்டு, நல்ல பாதைக்கு மனம் திரும்புவதானால் திரும்புங்கள். இல்லையேல் உங்கள் விருப்பம். //

அன்பு நண்பர் திருச்சிக்காரன் அவர்களே,ஏதோ ஒரு வகையில் தங்களை நான் வருத்தப்படுத்தியதற்காக வருந்துகிறேன்;ஆனாலும் எனது எழுத்துக்களால் ஒரு சிலராவது பயனடைந்திருப்பர் என்றே நம்புகிறேன்;இன்னும் அதன்மூலம் உங்களுக்கு சில கட்டுரைகளை எழுத விஷயம் கிடைத்திருக்கும்;நானும் இங்கு வருவதையோ உங்களோடு வாதிடுவதையோ விரும்பவில்லை;எனது ஆண்டவரும் அதையே சொல்லியிருக்கிறார்;வாதினாலாவது வீண்பெருமையினாலாவது ஒன்றையும் நிறுவ இயலாது என்பதையே நானும் நம்புகிறேன்;ஆனாலும்…

பிறகு எதில் யூதர்களின் கடவுளை விட இந்துக்களின் முப்பத்து முக்கோடி தேவர்களும் தேவியரும் ஒசத்தியாகிவிட்டனர்..? ஒரே ஒரு தெய்வத்தினால் யூதர்கள் உலக முழுவதும் பகைக்கப்படுகிறார்கள்

போனதெல்லாம் போகட்டும்,இனியும் இயேசுவைக் குறித்தும் அவரது தியாகத்தைக் குறித்தும் இன்னும் பைபிளைக் குறித்தும் அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது எழுதி தொலைக்காதிருங்கள்,அது ஒன்றே மதநல்லிணக்கத்துக்கான ஆரம்பப்புள்ளியாக இருக்கட்டும்;மத நல்லிணக்கத்தை உருவாக்குகிறேன் பேர்வழி என்று நீங்கள் எழுதும் எழுத்துக்களால் எங்களை ஓயாமல் சீண்டிக்கொண்டிருப்பதே நாங்கள் இங்கே வருவதற்குக் காரணமாக இருக்கிறது;கிறித்தவத்தைக் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேள்விகளாக கேளுங்கள்,எங்களுக்குத் தெரிந்ததை எடுத்துக்கூற ஆயத்தமாக இருக்கிறோம்.

உதாரணமாக உங்களுக்கு தமிழைத் தவிர ஆங்கிலமும் தெரிந்திருப்பதால் நீங்கள் தமிழில் எழுதும் அதே விஷயத்தை ஆங்கிலத்திலும் எழுதுகிறீர்கள் அல்லவா? அதுபோலவே நான் முதலில் ஒரு இந்தியன் என்ற வகையில் ஒரு இந்துவின் பிரச்சினைகளை சமுதாயக் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.நானும் என்ன செய்தால் இந்த சமுதாயத்தில் அமைதி வரும் என்றே யோசிக்கிறேன்;நிச்சயமாக இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆயுதமேந்திய நிலையில் வழிபடப்படும் இந்து புராணங்களின் நாயகன் நாயகியரே..!

இது நிச்சயமாக வெறுப்புணர்ச்சியின் காரணமாக வெளிப்படும் கருத்து அல்ல;எனது இனம் எனது மக்கள் போலியானதொன்றுக்கு ஆராதனை செய்து படைப்பு கடவுளைக் கோபப்படுத்துகிறார்களே என்ற ஆதங்கம் தான்…
இப்படியெல்லாம் கேள்வி கேட்பதால் நான் இந்து விரோதி என்பீர்களாகில் என்னை எதிர்க்கும் நீங்கள் யார்..இந்துத்வா வெறியரா..?

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

நன்றி சகோ. சில்சாம் அவர்களே,
இயேசு கிறிஸ்தவத்தை பற்றி எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளை ஏலம் போடுகிறவர்கள்டம் விளக்கம் கேட்டு உபயோகமும் இல்லை.

நீங்கள் பிற மதக் கடவுள்களை இகழ்வதில் முனைப்பு காட்டுவதைப் போல அல்லாது, நாங்கள் இயேசு கிறிஸ்து உட்பட எல்லா மதக் கடவுள்களையும் வணங்கலாம் என்கிற நேர்மையான நல்லிணக்கத்தில் இருக்கிறோம். தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் செய்தியை உலகுக்கு வழங்குவோம். மனமிருந்தால் மனம் திரும்புங்கள்.

//பிறகு எதில் (……………?) யூதர்களின் கடவுளை விட இந்துக்களின் முப்பத்து முக்கோடி தேவர்களும் தேவியரும் ஒசத்தியாகிவிட்டனர்..? ஒரே ஒரு தெய்வத்தினால் யூதர்கள் உலக முழுவதும் பகைக்கப்படுகிறார்கள்//

தணிக்கை செய்வது உங்கள் உரிமையானாலும் செய்தியினிடையேயுள்ள இடைவெளியானது வித்தியாசமாக இருக்கிறது அல்லவா..?

///அட்டியில்லை. ///

இது என்ன புதுவார்த்தை நன்றாக இருக்கிறதே…கொஞ்சம் விளக்குவீர்களா?

ஆட்சேபனை இல்லை, வருத்தம் இல்லை…..

// மனமிருந்தால் மனம் திரும்புங்கள். //

ரொம்ப சந்தோஷம், நீங்கள் இயேசுவானவர் சொன்னதில் பாதி செய்தியை மாத்திரமே சொல்லியிருக்கிறீர்கள்; மீதியை நான் சொல்லுகிறேன், “பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” அதை நோக்கி மனந்திரும்புதல் என்பது இராஜ்யத்துக்கு விரோதமாக செய்து கொண்டிருப்பதைவிட்டு விட்டு மனந்திரும்புவதே.

யூதர்கள் கெட்டுப்போகக் காரணமே கட்டளையை நிறைவேற்றாமல் பிராயசித்தத்தை மட்டுமே நிறைவேற்றும் தொழுகை மார்க்கமே;அப்படியாக யூத இனத்தை மாசுபடுத்தியது கானானிய பழங்குடிகளின் ஆவி வணக்க வழிவந்த கூத்துகளும் அருவருப்புகளுமே.

கடவுள் நாகரீகத்தை நோக்கி அழைக்க இவர்களோ கூத்துகளிலும் திருவிழா கொண்டாட்டங்களிலும் என்ஜாய் பண்ணுவதிலுமே ஆர்வமாக இருந்தனர்;இதன் காரணமாகவே அவர்கள் தேசத்தை இழந்து அந்நியர் வசம் ஒப்புவிக்கப்பட்டனர்.

இதுவே இந்திய இந்துவுக்கும் நடந்தது;இந்து படைப்பாளியை வணங்காமல் படைப்பை வணங்கி குடித்து கூத்தடித்து ஆர்ப்பாட்டம் பண்ணுவதையே தொழுகை என்று நினைத்துக் கொண்டிருப்பதாலேயே இங்கும் அதே பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

இன்று கூட ஒரு வாக்கியம் என் மனதை உடைத்தது; பலரும் தாங்கள் கட்டிய வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைப்பர்; ஆனால் அவர்களது பெற்றோர் இருப்பதோ முதியோர் இல்லத்தில்…இது எப்படி இருக்கு..?

இப்படியே மார்க்கமும் அதன் நம்பிக்கைகளும் இருக்கிறது; தெய்வத்தைக் குறித்து பேசுமளவுக்கு அவருடன் பேசுகிறோமா, அவர் நம்முடன் பேசுகிறாரா? பேசாத ஜீவனில்லாத தெய்வங்களிடம் நமக்கு என்ன வேலை..?

இது குறித்து உங்களுக்கு நான் எழுதிய பின்னூட்டம் தமிழ் ஹிந்துவில் தள்ளப்பட்டுவிட்டது; அது பதிக்கப்பட்டுள்ள‌ தொடுப்பை இங்கே தருகிறேன்,சிந்தித்துப்பாருங்கள்..!

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

சகோ. சில்சாம் ,

நானும் இதே தளத்தில் இயேசு கிறிஸ்துவம் பற்றி பல முறை எழுதி விட்டோம். நீங்கள் அவற்றை கொஞ்சம் கூட உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

என்னை பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுவதால் பலன் இல்லை, கற்பிதங்களை கை கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார் – இது உங்களுக்கு தெரியாதா? எத்தனை முறை எழுத வேண்டும், ஏழாயிரம் முறையும் அதற்க்கு மேலும் எழுத தயார.

நான் பசியாய் இருந்தேன் உண்ணக் கொடுத்தீர்கள் , இராஜ்ஜியத்தை சுதந்திரித்துக் கொள்ளுங்கள் என்றார். ஐயா உங்கள் பெயரால் அற்புதங்களை செய்தோமே, பிசாசுகளை விரட்டிணோமே என்றவர்களை உங்களை ஒரு போது ம் கண்டதில்லை என்றார். நீங்கள் ஐயா உங்கள் பெயரால் பிற மதத்தின் மீது வெறுப்புணர்ச்சியை கொட்டிணோமே என்று சொன்னால் என சொல்வர் என்று சிந்தித்துக் கொள்ளுங்கள்.

உங்களை சரியான கிறித்தவர் ஆக்க வேண்டும் என்று நான் முயற்சி செய்கிறேன். நீங்கள் என்னை உங்களை ப்போல ஆக்க முயல்கிறீர்கள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

உங்கள் தொடுப்பை பதிவு இட்டு இ ருக்கிறோம். ஆனால் அதை நான் படிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், மத சகிப்புத் தன்மை இன்மையால உருவான வெறுப்புணர்ச்சி கருத்துக்களை படிப்பதில் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. நேரமே விரயம். நீங்கள் இந்து, முஸ்லீம், பவத்த , சீக்கிய … மதங்கள் உள்ளிட்ட எல்லா மதங்களையும் வெறுப்பின்றி, மனப் பூர்வமாக ஆக்க பூர்வமாக அணுகும் மன நிலைக்கு வந்தாலன்றி உங்கள் எழுத்துக்களில் நடு நிலை இருக்கப் போவதில்லை, அதைப் அடிப்பதால் எனக்கு உ பயோகமும் இல்லை.

எகிப்திலும் அமலேக்கிய நாட்டிலும் அப்பாவி சிசுக்கள் கொல்லப்பட்டதைக் கண்டு குதூகலிக்கின்றனர். ஆனால் இராவணன், இரணியாட்சன், இரண்யகசிபு, கம்சன், சாணுரன், கமாலாக்ஷன், வித்யுன்மாலி, தரகாக்ஷன், கஜாசுரன், மகிஷாசுரன், முதலான கொடியவர்கள் மீது தான் கருணை காட்டுவார்கள். இதென்ன விந்தையோ தெரியவில்லை.

///அதனை உண்மை என்றே வைத்துக்கொள்ளுவோம், ஆனால் அவர்களால் வணங்கப்படும் தெய்வங்கள் அதுபோல இல்லையே, ஆனானப்பட்ட விஷ்ணுவுக்கு ஒரு சாதாரண குறுநில மன்னன் தன்னை வணங்கவில்லை என்று பொறாமை வருகிறதே, தன்னை வணங்க மறுத்தவனை அழிக்க அவதாரமே எடுத்து வருகிறாரே, ////

சும்மா சும்மா பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகிறீர்களே புனை கதை வித்தகரே, அதையும் உங்கள் கிருத்துவ நம்பிக்கைய்லேயே புனைகிரீர்களே?

அப்படி நீங்கள் கூறுவது உண்மையானால் மற்ற கடவுளின் பக்தர்களையும் அவர் கொன்று இருக்கலாமே? வேறு யாரையும் கொள்வதற்காக வந்திருக்கிறாரா? வணங்க மறுத்தவர்கள் அன்றிலிருந்து இன்று வரை பலர் உண்டு அவர்கள் பொருட்டு எல்லாம் அவர் வந்து கொண்டு இருக்கவில்லை.

பொறமை பிடித்த கடவுள் எல்லாம் எல்லாம் உங்கள் ஆள்தான். ஹிரண்ய கசிபு,நரசிம்ம அவதாரம் பற்றி தெரியாமல் உங்கள் கற்பனைகளை அள்ளிவிடாதீர்கள்.எப்படியாவது குறை சொல்லவேண்டும் என்று அலையாதீர்கள். அநியாயம் செய்தவனை அழிக்க வந்தவர் நரசிம்மர்.அதனை இப்படி சாதாரணமாக திரித்து கூறிகொண்டிருக்கிரீர்கள். அவன் கொல்லப்பட்டது விச்னுவை வணங்காதற்க்காக அல்ல. நீங்கள் பைபிள் படித்த மயக்கத்தில் எழுதி தொலைக்கிறீர்கள் . உங்கள் கதை போலவே .போங்க போயி திருந்த பாருங்க.

முடிந்தால் நல்ல ஆசானிடம் சென்று நரசிம்ம அவதாரத்தை பற்றி உண்மையாக விளங்கி கொள்ள முற்படுங்கள். இல்லாவிட்டால் வையை மூடிக்கொண்டு போங்கள். சும்மா எதாவது உள்நோக்கத்துடன் பொய் பிரச்சாரம் செய்யாதீர்கள். வெள்ளைகாரனிடம் மூளையை அடகு வைத்தால் இப்படிதான்.
அழிக்கப்பட்டவன் ஒன்றும் குறுநில மன்னன் அல்

////ப்ரகலாதன் வழிவந்த பக்தர்கள் இன்றும் நம்மோடு இருக்கிறார்கள், ஹிரண்யகசிபு வழிவந்த அசுரர்களும் இருக்கிறார்கள், நரசிம்மரும் இருப்பதாகவே நம்புகிறீர்கள், உணர்வில் அந்த கதையும் பதிந்தே இருக்கிறது, அப்படியானால் (என்னைப் போல‌) விஷ்ணுவைப் பகைப்பவர்களும் எதிர்ப்பவர்களும் அசுரர்களா? என்று அறிய விரும்புகிறேன்/////

அவனை எதிர்ப்பவர் எல்லாம் அசுரர் என்று எங்கும் சொல்லவில்லை.

இரக்கமின்றி அரக்ககுனத்துடன் சுயநலத்துக்காக எதுவும் செய்யும் யாரையும் தேவையின்றி தம் எண்ணம் நிறைவேறும் பொருட்டு இம்சிக்க துணியும் குணம் கொண்டவரே அசுர குணம் படைத்தோர்.

இந்த லட்சணங்கள் இருந்தால் அசுரர் தான், அவனை எதிர்ப்பதால் அல்ல.

////அல்லது பெற்ற பிள்ளை தன் வழி நிற்கவேண்டும் என்று ஒரு தகப்பன் எதிர்பார்ப்பது தவறா? நீங்கள் மதமாற்றத்தையே எதிர்க்கிறீர்களே, அப்படியானால் ப்ரகலாதனை மதம் மாற்ற முயற்சிக்கும் விஷ்ணு குற்றவாளிதானே?////
ஹிரண்ய கசிபு ஒரு கடவுளிடம் பல ஆண்டு பணிந்து தவம் புரிந்து வரம்பெற்ற பின் தனக்கு கிடைத்த சக்திகளால் உலகயே ஆட்டிப்படைத்த கொடூரன். தானே கடவுள் தண்ணி மட்டுமே எல்லோரும் வணங்க வேண்டும் என்று பிரகடனபடுத்தியவன். அப்படி வணங்க மறுத்த அப்பாவிகளை கொன்றவன். சொந்த மகனையே துடிக்க வைக்கும் அளவு தொந்தரவு கொடுத்த அரக்கன். மதம் மாறி மகனையும் தன் தீய வழிக்கு வர அழைத்து கொடுமைபடுத்தியது ஹிரன்யனே.. (கிட்டத்தட்ட உங்களைபோல தான் கெட்டதோடு ஊரையும் கெடுக்க நினைக்கும் உங்களைபோல, என்ன அவனுக்கு ஆட்சி அதிகாரம் உடல் பலம் எல்லாம் இருந்ததால் கொடுமை படுத்தினான் நீங்கள் கையால் ஆகாததால் வாய்க்கு வந்தபடி தூற்றி கொண்டு இருக்கிறீர்கள் ) உங்களுக்கு சிந்திக்கும் தன்மை இருந்தால் சிந்தித்து பாருங்கள்.
அப்பன் அயோக்யன் மகனையும் தன் வழிக்கு கட்டயபடுத்துகிறான் இங்கு மத மாற்றத்திற்கு முற்படுவது யார்? அப்பனை இருந்தாலும் அயோகயனின் வழியை பின்பற்ற மறுப்பது அறிவுடையோர் செயலே.

////இப்படியே ஜலந்திரன் எனும் சாதாரண மனிதனைக் கொலைசெய்ய அவன் மனைவியை விஷ்ணு கற்பழித்த கதையையும் சொதப்பினீர்கள்/////
திருந்தவே மாட்டீர்களா?நங்கள் அது பொய்யான தகவல், அதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரமான விக்கி தகவல் உங்களை போன்ற மதமாற்றி பாதிரிகளால் எழுதப்பட்டது. நீங்கள் சொல்வது உண்மையாய் இருந்தால் உண்மையான வைணவ ஆசானிடம் பயின்று அந்த புராணத்தின் வரிகளுடன் குறிப்பிடுங்கள். மீண்டும் கற்பழித்தார் விஷ்ணு என்ற வரிகளை குறிப்பிட்டு காட்டுங்கள், இனி இது போல வந்து உளறாதீர்கள். திருந்துங்கள்

/////பிறகு எதில் யூதர்களின் கடவுளை விட இந்துக்களின் முப்பத்து முக்கோடி தேவர்களும் தேவியரும் ஒசத்தியாகிவிட்டனர்..?///////
யாரயும் அநியாயமாக கொலை செய்யவில்லை. எந்த வெறுப்பு கருத்தும் போதிக்கவில்லை. யார் மேலும் பிறக்கும் போதே சும்மா ஒரு பாவத்தை போட்டு அனுப்புவதில்லை

////ஒரே ஒரு தெய்வத்தினால் யூதர்கள் உலக முழுவதும் பகைக்கப்படுகிறார்கள்////

என்ன செய்வது யூத தெய்வம் செய்த காரியங்கள் அப்படி. எண்ணற்ற படுகொலைகள் இன அழிப்பு கருத்துகள், சும்மா பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் பாவம். எண்ணற்ற விஷயங்கள் இப்படி இருக்கு

///கிறித்தவத்தைக் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேள்விகளாக கேளுங்கள்,எங்களுக்குத் தெரிந்ததை எடுத்துக்கூற ஆயத்தமாக இருக்கிறோம்///
கேட்ட உருப்படியான் கேள்விகளுக்கு எல்லாம் இன்னும் ஒரு ஒழுங்கான பதில் கூட வந்தபாடில்லை.
////போனதெல்லாம் போகட்டும்,இனியும் இயேசுவைக் குறித்தும் அவரது தியாகத்தைக் குறித்தும் இன்னும் பைபிளைக் குறித்தும் அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது எழுதி தொலைக்காதிருங்கள்,/////

எது தியாகம், யார்போருட்டு செய்யப்பட்டது? யாருக்கு அந்த தியாகத்தால் பலன்.

//////உலகில் இந்து மார்க்கத்தைத் தவிர வேறெந்த மார்க்கத்திலாவது தெய்வங்கள் யுத்த கருவிகள் ஏந்தியிருக்கிறதா? வேல், கம்பு, ஈட்டி, சூலம், கொடுவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை ஏந்தியிருக்கும் உருவங்களை வணங்கச் செய்து பிஞ்சு மனங்களை கொலை வெறியினால் நிரப்புகிறீர்கள் என்கிறேன்; மற்றபடி யாகம், யோகம் எல்லாம் உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணங் கொள்ளவேண்டாம்; அவையெல்லாம் உலகம் தோன்றிய காலத்திலிருந்து பல்வேறு தவஞானிகளால் அமைக்கப்பட்டதாகும்; அதற்கும் உங்கள் தெய்வங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை////////
யாகம் யோகம் எல்லாம் எந்த வேறு எந்த மத ஞானிகள் பின்பற்றுகிறார்கள். இந்து தர்மதினரை அன்றி வேறு யார் செய்கிறார்கள். ஐயா பொய் கூறினாலும் பொருந்த கூறுங்கள் ஒரு வரைமுறையின்றி உளறி கொட்டாதீர்கள். ஏன் இதனை எல்லாம் ஏசுதான் கண்டுபிடித்தார் என்று ஒரு கட்டுரை எழுதுங்களேன். எப்படி இந்த அளவு அநியாயமாக எழுதுகிறீர்கள்?
எம் கடவுளர் ஏந்திய ஆயுதங்கள் எல்லாம் தீமையை அழிப்பதற்காக ஏந்தியவை, உங்களை பெற்ற தந்தை நீங்கள் பிஞ்சு குழந்தையாக இருக்கும் பொது மிருக நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் உம்மை காக்கும் பொருட்டு கையில் katthi thuppaakki pondra kodiya aayuthangalai yenthi vanthaal payam kolveeraa?

/////எதிரியை வசப்படுத்திக் கொள்ள கூடிக்கெடுக்கும் பாணியையே காலங்காலமாக இந்துமார்க்கம் பின்பற்றி வருகிறது; இதற்கு வேளாங்கண்ணி மாதா கோவிலே ஒரு சாட்சி; அது மிகவிரைவில் இந்து மடாலயமாக மாறிவிடும்; இந்தியாவைத் தவிர வேறெங்கும் இந்த அளவுக்கு மாதா வணங்கப்படவில்லை என்பதே இதற்கு ஆதாரம்;//////

you guys are practising ” koodikedukkum paani “for convert people, we no need any one to be converted from ur christianity. and u people are preaching both are same come and pray to her.

if it is doing by hindus then what the priests are doing in velankanni? they are happy and thinking these are the harvested souls.

piitiable hindu people those who coming there all are innocent and not having any different between mary and maari. they are not thinking like you. remember they are going to nagore darga also.they never hurts others feeling but joining with others prayers too with dedication.

see how u r trying to twist the things as u like?
u may hav jelous on stomach ,coz the convertion credits are going to RC fathers, and not for u evanjs

Leave a comment

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09