Thiruchchikkaaran's Blog


சமண புத்த மதங்களை வேரோடு ம் வேரடி மண்ணோடும் அழித்த சனாதனமே” என்பது நாம் சமூக மற்றும் அரசியல் மேடைகளில் கேட்கும் பன்ச் டயலாக் ஆகும்.

இந்தியாவில் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை புத்த சமண மதங்கள் இந்தியாவில் பலராலும் பின்பற்றப் பட்டு வந்தன…

இவை சாதி பாகுபாட்டை மீறி சமத்துவ பாதையில் எல்லா மக்களுக்கும் ஆன்மீகத்தை வழங்கின

இந்த புத்த சமண மதங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தது எப்படி …

முதலில் இந்த கேசில் அடிப்படையிலே ஒரு பிழை உள்ளது…

சமண மதம் வேரடி மண்ணோடு பிடுங்கப் பட்டது என்று உரத்து சொல்பவர் யார் என்று பார்த்தால் அவர் தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளே மட்டும் இருப்பவரோ என்று ஐயம் வரும்

ஏனெனில் இந்தியாவில் சமண மதம் அழியவில்லை, சிறப்பாக பின்பற்றப் பட்டு வருகிறது

இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் – ராஜஸ்தான், குஜராத் , மத்திய பிரதேசம் , மஹாராஷ்ட்ரா – இவற்றில், குறிப்பாக நகரங்களில் சமண மதம் சிரத்தையுடன் பின்பற்றப் பட்டு வருகிறது .

அஹமதாபாத், இந்தோர் , புனே , மும்பை ஆகிய நகரங்களில் பல ஜெயின் கோவில்களை இன்றும் நாம் காண்கிறோம் .

இன்னும் சொல்லப் போனால் சமண மத திகம்ப ர சாமியார் பக்தர்கள் புடை சூழ நிர்வாணமாக வூர்வலம் செல்வதை நானே பார்த்திருக்கிறேன் – நிர்வாணமாக இருப்பதையோ , நிர்வாணமாக சாமியார்கள் வூர்வலம் செல்வதையோ நான் குறை சொல்லவோ, கொச்சை படுத்தவோ, கண்டிக்கவோ இல்லை நண்பர்களோ …

நிர்வாணமாக இருப்பது அவர்களுடைய மதம் சார்ந்த விடயம், அதை அவர்கள் பின்பற்றும் போது அதிலே நாம் தலையிட எதுவும் இல்லை. நிர்வாணமாக ஆண் சாமியார் முக்கிய வீதிகளில் நடந்து செல்வதை, அது அவர்கள் மத உரிமை என்ற புரிதல் நமக்கு உண்டு, அதை சகிக்கும் தன்மை நமக்கு உண்டு..

இதுதான் இந்து மதம் நமக்கு அளித்த சகிப்பு தன்மை …இந்து மதம் பெருவாரியாக உள்ள இடத்திலே , உள்ள வரைக்கும் இந்த சகிப்பு தன்மை இருக்கும்…

இதிலே இந்த பரிவார சங்க செயல் வீரர்கள் இந்து மதத்தின் சகிப்பு தன்மையை அழித்து, இந்து மதத்தையும் முரட்டு பிடிவாத மதமாக மாற்றுவதில் வெற்றி பெற்று விடுவார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்…

ஆனால் இந்த ” சமண புத்த மதங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் சூழ்ச்சி செய்து அழித்த சநாதநமே, பார்ப்பனர்களே ” என்று முழங்குவதும், எழுதுவதும் ஜமுக்காலத்தில் வடி கட்டிய பொய்

அல்லது தமிழ் நாட்டை தாண்டாமல் கிணற்றிலே வாழ்வதால் உண்டானா தவறான புரிதல்

அதோடு இப்படி பேசுவது தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்க பேசும் ஒப்பனை அலங்கார ஜோடனை

என்பதை இங்கே தெளிவாக பதிவு செய்கிறோம்.


http://dharumi.blogspot.com/2022/12/1211-i-salute-brahmins.html

//அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கு எப்போதுமே தங்கள் கடவுள்களை யார் இழித்தாலும் தாங்க முடியாத வேதனையும் அதனால் விளையும் பெருஞ்சினமும் வருவதுண்டு. அடிப்படைவாதிகளாக இருந்தால் அது வன்கொலையிலும் சென்று முடியும். ஏறத்தாழ அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதே இது.//

இந்து மதம் உண்மையான அமைதியை, மத நல்லிணக்கத்தை, சகிப்புத் தன்மையை தொன்று தொட்டு பின்பற்றி வரும் மதம் என்கிற உண்மையை மறைத்து,

இந்து மதம் ஒரு சமரச மறுப்பு மதம் , பிற மதங்களை இல்லாமல் செய்ய துடி துடிக் கும் மதம் என்பதாக பிரச்சாரம் செய்வது தமிழகத்தில் பலருக்கு இனிப்பு உண்பது போல உள்ளது.

ஆனால் இந்து என்று பொதுவாக திட்டினா ல் , எவனாவது இந்து கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டு தின்று விட்டால் அவன் கொஞ்சம் ரோஷப் பட்டு பதில் பிரச்சாரம் செய்வானோ என்பதையும் பகுத்தறிவு தெரிவிக்காமல் .விடுமா?

எனவே இந்து மதம் என்று திட்டாமல் ” பார்ப்பனீய இந்து மதம்” என்று போட்டு எழுதுவது, பேசுவது வாடிக்கை…

யாராவது கேட்டால், ” அட , நாந்தான் ‘ பார்ப்பனீய’ என்று போட்டு இருக்கிறேனே…உங்களுக்கு என்ன பாஸ் …”என்று தெளிவாக எடுத்து இயம்ப வசதியாக இருக்கும்

அதனால் இந்தியாவில் எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு காரணம் பர்ப்பான் மட்டும் தான்… என்று எழுதாமல், திட்டாமல் விட்டால் தமிழ் நாட்டில் பகுத்தறிவு வாதி இல்லை என்று ஆகி விடும் ..

எனவே நாமும் பார்ப்பனர் செய்த கொடுமைகளை தொகுத்து வழங்கும் பணியில் செவ்வனே ஈடு பட தயாராகி விட்டோம்..

ஆனால் திரு தருமி ஐயாவும் இது போல எழுதுவது ஆச்சரியமாக உள்ளது…

இந்து மதத்தவரும் தங்களுடைய கடவுளை மற்றவர் இகழ்ந்தால் கோபம் கொண்டு எதிர் வினை ஆற்றுவார் என்பதாக எழுதி இருக்கிறார் …

இந்தியாவில் மத பிரச்சாரம் என்ற பெயரில் இந்துக் கடவுள்களை இகழ்வது, கொச்சை படுத்துவது , தொடர்ந்து நடைபெற்று வருகிறது….

ஆனாலும் மான மிகு இந்து அமைதியாக இருக்கிறான் … அப்படியே தொடர்ந்து இருப்பான் …
அதுதான் இந்து மதம், மத வெறிக்கு மாறாக சகிப்புத் தன்மையை தருவது தான் இந்து மதம் …

தருமி சார் .., நீங்க இந்து பற்றி என்ன வேணாலும் எழுதுங்க சார்…ஆனாலும் இந்து மத வெறி உடையவனா என்று ஒரு நிமிடம் எண்ணி பார்த்து விட்டு எழுதுங்கள்


நம் நாட்டில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இருக்கிறதா, அறிவியல் ,பகுத்தறிவு ஆராய்ச்சி செய்ய சுதந்திரம் இருக்கிறதா . இந்த யூனிவெர்ஸ் எப்படி உருவானது , அணுக்கள் ஒன்று சேர்ந்து உருவானதா, ஆண்டவன் படைத்தாரா , மனித உடல் இறந்த பின் உயிர் என்கிற ஒன்று தொடர்ந்து நீடிக்கிறதா …இவற்றை பற்றிய ஆராய்ச்சி செய்ய நம் நாட்டில் சுதந்திரம் இருக்கிறதா …?

ஆனால் கும்பலாக சேர்ந்து வெறி உணர்ச்சியை காட்டுவதற்கும், பொது மக்களிடம் அச்சத்தை உண்டு பண்ணவும், இன்ன பிற அடாவடி செயல்களில் ஈடு படவும் முழு சுதந்திரம் இருப்பது போல மக்கள் உணர கூடும்.

வெறி உணர்ச்சி செயல்களின் முன் மண்டியிட்டு மவுன சம்மதம் காட்டும் அதிகார சக்திகளே சாட்சி.

https://www.google.com/amp/s/www.hindustantimes.com/videos/news/viral-photo-of-nupur-sharma-s-effigy-hanging-in-belagavi-stokes-twitter-war-101654965822028-amp.html


“ஐயோ பிராமணாளா இருக்கறதுனால பழி போடறாளே” என்னும்படியான வருத்தங்களை கேள்விப்படுகிறோம் அல்லவா ?

வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

அதிகாரம் : ஒழுக்கம் உடைமை

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

( குறள் எண் : 134 )

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னவர் பொய்யாமொழியார் திருவள்ளுவர்! அப்ப பார்ப்பனர்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் அட்வைஸ் என்று நினைக்க வேண்டாம்!

அதிகாரம் : நீத்தார் பெருமை

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”

( குறள் எண் : 30 )

உலகில் எல்லோரிடமும் பிராமணத்துவம் இருக்கிறது.

ஒருவர் மனதில் எந்த அளவுக்கு நல்ல சிந்தனைகளை வளர்த்து, தகாத சிந்தனைகளை தள்ளி விடுகிறாரோ அந்த அளவுக்கு அவர் மனதில் அமைதி உருவாகி . மற்ற எல்லா உயிர்களையும் கருணையுடனும் அன்புடனும் நோக்கும் மனநிலை , செயல்பாடு உருவாகிறது. இதுதான் சரியான பிராமணத்துவம்!

எவர் ஒருவர் மனதை அங்கும் இங்கும் அலைய விட்டு, அதனால் பிறருக்கும் தனக்கும் துன்பங்களை உருவாக்கிக் கொள்ளும் போது ஒழுக்கம் கெட்டு, மனம் அமைதி இழந்து விடுகிறது , மற்ற உயிர்க்கு நன்மை நினைப்பதை விடுத்து அவரை துன்புறுத்தி தவறான சுகத்தை அனுபவிக்க முனையும் போது பிராமணத்துவம் கெடுகிறது!

இது மனதை நல்வழிப் படுத்தும் செயலால் உருவாவது , பிறப்பினால் அல்ல.

ஆனால் இன்று பலரும் பிரமணத்துவம் என்பது பிறப்பினால் உருவாவது எனக் கருதிக் கொண்டு “ஐயோ , நாங்க பிராமின்ஸ், அதனால எங்களை திட்டறா” என ” வருந்து” வதை கேள்விப் படுகிறோம்

நிறைய பணம், சொத்து, செல்வாக்கு இருப்பதாலோ, வெறுமனே பூணுலை அணிந்து மந்திரங்களை உச்சரித்து ஹோமத்தை வளர்த்து புகைய விடுவதாலேயோ, நல்லா படித்து நிறைய மதிப்பெண் பெற்று சாமர்த்திய சாலியாக இருப்பதாலோ, ஸ்டைலாக உடை அணிவதாலேயோ, சிகப்பு நிறத்துடன் இருப்பதாலோயே, நன்றாக விதம் விதமான ருசியான உணவுகளை உண்ணுவதாலேயோ, நன்றாக பாடுவது, ஆடுவதினாலோ..இவைகளால் எல்லாம் ஒருவர் பிராமணத்துவம் பெற்று விட்டதாக கருதிக் கொள்ள இயலாது.

ஒழுக்கம் , கருணை அன்பு , கட்டுப்பாடு, அடக்கம், நல்லெண்ணம் இவைதான் ஒருவரை பிராமணத்துவ நிலைக்கு கொண்டு செல்ல இயலும் என்பதே சான்றோர் கருத்து.

எனவேதான் திருவள்ளுவர் வேத மந்திரங்களை மனப்பாடம் செய்தது மறந்து விட்டால் கூட பரவாயில்லை, ஓக்கே னு ஒத்துக்கலாம், ஆனால் ஒழுக்கம் கெட்டு,மனதை அலைய விட்டு, தானும் கெட்டு, தன் தவறான ஆசைக்கு மற்றவரையும் துன்புறுத்தி கெடுத்தால் – இவன் என்ன பிறவியோ, என்ன ஜென்மமோ என்று பிறர் சொல்லும் அளவுக்கு பிறப்பு கெடும் என்பதை சொல்லி இருக்கிறார்!

நிற்க, நாம் இங்கே இதை எழுதப் போக எல்லா “பிராமணா”ளும் திருவள்ளுவர் மீதோ, என் மீதோ, பாய வேண்டாம். வள்ளுவரின் எச்சரிக்கை அமைதியையும் அன்பையும் தன்னுடைய சொத்தாக பாவிக்கும் உண்மையான பிராமணர்கள் , மனதை அலைய விட்டு கெட்டு விடக் கூடாது என்பற்காக த் தான்.

பணம், செல்வாக்கு, பதவி , ஸ்டேடஸ் இவற்றில் நம்பிக்கை வைத்து இவற்றை அதிகரிக்க முயல்வதில் ஈடுபட்டு, பிறருக்கு கொடூர துயர் நேர்ந்தாலும், “ஐயோ, எங்களை திட்டறாளே” என்பதில் அக்கறை காட்டும் அப்பாவி ” பிராமணாளுக்கு ” இந்த எச்சரிக்கை – அவர்களால் புரிந்து கொள்ளப் படுமா என்பதே சந்தேகம், எனவே அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தாது என்றே நினைக்கிறோம். எனவே அவர்கள் கோவம் கொள்ள வேண்டியிருக்காது என்றே கருதுகிறோம்.

Tags:

“தியாகராஜ ஸ்வாமிகள் இராமரின் மேல் பாடல் பாடி உஞ்சிவிருத்தி  பிக்ஷை எடுத்து வாழ்ந்தார்” என்றால் அது, சத்குரு  தியாகராஜ ஸ்வாமிகளுக்கு செய்யப் பட்ட அவமானமா?

தியாகராஜ ஸ்வாமிகள் என்றாலே அவரை ஒரு மிகப் பெரிய இசை கலைஞராக சித்தரிப்பதை நாம் காணலாம், அந்த இசையில் இராம பக்தியும் இருப்பதால் அவர் இராமர் மீது அளவற்ற பக்தி உடையவர் என்பதையும் போகிற போக்கில் சொல்லி விட்டு போவார்கள்.

மற்றபடி அவருடைய கொள்கை , கோட்பாடு என்ன என்பதையோ, அவருடைய வாழ்க்கையில் கொள்கையை அவர் செயல் படுத்தினாரா என்பதையும் பற்றி பலரும் அதிகம் பேசுவதில்லை. (சில ஞானிகள்  இப்போதும் அவ்வப்போது நினைவு படுத்துகின்றனர்).
இந்திய சமுதாயத்தின் உருவாக்கிய மிகச் சிறந்த கோட்பாடுகளால் ஒன்று, தன்னுடைய வசதி வாய்ப்புகளை வள படுத்திக்க கொள்வதாய் விட மற்றவர் நன்மைக்கு உதவுவது, உதாரணமாக வாழ்வது என்பதாகும். அரிச்சந்திரன், இராமர், கரிகால் சோழன், அசோகர் , அக்பர், சிவாஜி, காந்தி, வ.வு.சி, நேதாஜி ..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதிலே ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றில் அதிக ஆராய்ச்சி செய்தவர்கள் உலக வாழ்க்கை சிரித்து காலமே, இதில் கிடைக்கும் லாபம் கானல் நீர் போன்றது என்பதால், மிக எளிதான வாழ்க்கையை வாழ்ந்தனர். பட்டினத்தார்,, பாம்பாட்டி சித்தர், புத்தர், சித்தர்கள், முனிவர், ரிஷிகள் .. இப்படிப்பட்ட மிகள் எய்ய வாழ்க்கையை வாழ்ந்தனர்.
தியாகராஜ ஸ்வாமிகள் தன் கவிதையையும், இசையையும் வைத்து வளமான வாழ்க்கை வாழ நினைத்திருந்தால் அவர் வசதியாக வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால் பணம் காசு சுகமா (சுகம் இல்லை), இராமரின் சந்நிதி சேவை சுகமா என்று கேட்டு பாடினர். அவர் பாடியது போல பணம் காசு ஆசை இல்லாமல் உஞ்சி விருத்தி பிக்ஷை எடுத்து வாழ்ந்தார்.

அதுதான் சத் குரு தியாகராஜ ஸ்வாமிகள்!

தஞ்சை மன்னரான சரபோஜி மஹாராஜா, தியாகராஜ சுவாமிகளை தன்னுடைய ஆஸ்தான வித்துவான் ஆக இருக்க அழைத்தார், பொன்னும் மணியும் ஏந்தியவண்ணம், யானையில் அமர்ந்து வருமாறு யானையை தியாகராஜர் வீட்டுக்கு அனுப்பினார் மன்னர்.

ஆனால் காசை வாங்கிக் கொன்டு, மன்னனை துதி பாடி வாழ்வது தியாகராஜரின் வாழ்க்கை முறையில் இல்லை.

ஆனால் காசை வாங்கிக் கொன்டு, மன்னனை துதி பாடி வாழ்வது தியாகராஜரின் வாழ்க்கை முறை யில் இல்லை.  அது அவருடைய கொள்கையில் , வாழ்க்கை முறையில் இல்லை. யானையை பார்த்தவுடன் ஜம்மென்று அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு மன்னரின் அவைக்கு சென்று ஆலாபனை செய்யவில்லை தியாகராஜர்.

அதுதான் சத் குரு தியாகராஜ ஸ்வாமிகள்!
கடைசி வரையில் எளிமையாக, உஞ்சி விருத்தி பிக்ஷை எடுத்தே வாழ்ந்தார்.

அதை சொல்வது அதை எடுத்துக் காட்டாக காட்டுவதுதான் மிக முக்கியம்.

அதை சொல்லாமல் விட்டால்தான் தவறு.

அதுதான் தியாகராஜர் கொள்கையை என்றும் விடாத சுத்தனமான 24 காரட் தங்கம் போன்றவர் என்பதை நம் மனதில் நினைவு படுத்திக்க கொண்டே இருக்கும்.

நாமும் என்றாவது, கொஞ்சமாவது அவர் வழியில் செல்லும் வாய்ப்பையும் நமக்கு கொடுக்கும்.

 


அரபு நாடுகள் அமீரகம், (குறிப்பாக துபை மற்றும் அபூதபி), பஹ்ரைன், உமான் ஆகியவை எல்லா மதத்தினருக்கும் தங்கள் மார்க்கத்தை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுத்து உள்ளன.

இந்தியாவில் பரிவார இயக்கங்களின் சிந்தனை உடையவர்கள், அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடி செல்கிறார்கள். அங்கே போன பிறகாவது, கொஞ்சம் மத நல்லிணக்க சிந்தனை வந்ததா என்றால் இல்லை. அங்கேயும் போய் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை சமூக வூடகங்களில் பதிவு போடுகின்றனர். அதற்கான எதிர்ப்பு வந்ததும் உடனே பதிவை நீக்கி விட்டாலும், அந்தப் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்க வாய்ப்பு உள்ளது.

இதன் பேரில் கடுமையான கண்டனங்கள் அமீரகத்தில் இந்தியாவின் மீது எழுப்பப் படுகின்றது.
இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிரான மதவெறியுணர்ச்சி உள்ளதாக, அவர்கள் தாக்கப் படுவதாக பிரச்சாரம் நடைபெறுகிறது.

இதெல்லாம் தேவையா? போனோமா வேலையை பார்த்தோமா என்று இருக்கலாம் அல்லவா?

அது போல இந்தியாவிலும் , பரிவார சிந்தனையாளர்கள் இஸ்லாமியருக்கு எதிராக சமூக வூடகங்களில் கருத்து தெரிவிப்பது தவறானது.

9000 வருடஙகளுக்கும் மேலான இந்திய நாகரீகம் , தன்னுடைய நல்ல எண்ணங்களினாலே உலகெங்கும் மதிப்பு பெற்று விளங்கியதோடு, நல்ல கருத்துக்களை உலகம் முழுவதற்கும் பரப்பி வந்துள்ளது.

இப்போது இந்தியாவின் இப்போது இந்தியாவுக்கு அரபு நாடுகளுடன் உள்ள நட்புறவு குறைந்து விடுமோ என அஞ்சும் அளவுக்கு கொண்டு வந்து விட்டனர் இந்த மத வெறுப்புணர்ச்சி சித்தாந்த வாதிகள்.

“இந்துக்கள் சர்ச்சுக்கும், மசூதிக்கு செல்கின்றனர், இது நல்லது” என்றார் சுவாமி விவேகானந்தர். மத நல்லிணக்க சாம்பியனான அவர்,எதற்கும் அஞ்சாத வீரத் துறவி.

அவர் வழியில் செல்வதே நல்லது, பந்தாவாக ட்வீட் போட்டு விட்டு , பின்னர் அதை நீக்கி விட்டு மன்னிப்பு கோருவதை விட, சுவாமி விவேகானந்தர் வழியில் செல்வதே சரி.

யாகாவாராயினும் நா காக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு.

 

 


தஞ்சை பெரிய கோவில் உண்டியலில் பணத்தைக் கொட்டுறீங்களே என்று மனம் குமுறி , ஜோதிகா அம்மையார் பேசியிருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த பணத்தை மருத்துவமனைக்கும் , கல்விக்கும் செலவு செய்யுங்கள் என்று தத்துவ அறிஞர் அவதாரம் எடுத்து அறிவுரை வழங்கியிருந்தார்.

பிள்ளைங்க படிப்புக்கும், மருத்துவ செலவுக்கும் வச்சிருக்கிற காசை எடுத்து யாரும் உண்டியலில் போடுவதில்லை. ஏதோ மிச்சம் மீதி இருப்பதை தான் கோவில் உண்டியலில் போடுகிறோம். இந்தக் கோவில், இந்த வழி, இந்த மொழி நமக்கு மற்றவரின் கலாச்சாரத்தை மதிக்கும் நல்ல மனநிலையை தந்தது. அந்த நன்றிக்கும், இது அடுத்த தலைமுறைக்கு தொடரவும் உண்டியலில் ஐம்பதோ, நூறோ போடுகிறோம்.

இதிலே “தமிழரின் நாடித் துடிப்பாக” விளங்கும் விகடன் தன் பங்கிற்கு ஒரு கருத்து கணிப்பு வைத்து இருக்கிறது.

அதில் கோவில் தரப்பு நியாயம் எள் அளவுக்கும் இல்லாமல் முழுக்க முழுக்க ஜோதிகா சப்போர்ட்டாகவே சாய்ஸ் களைக் கொடுத்து இருக்கிறது.

https://www.vikatan.com/news/controversy/vikatan-poll-regarding-jyothikas-speech-in-an-awards-show

கோயிலுக்கு அதிக பணம் கொடுத்து பராமரிக்கிறீர்கள். அதை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்” என்று ஜோதிகா பேசியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

25 APR 2020

X சரியாக சொல்லி இருக்கிறார்

X கோயில்தான் முக்கியம்

X இந்த நேரத்தில் தேவையில்லாதது

X மருத்துவமனைகளே கோயில்

—————————

நன்றாக கவனியுங்கள்

X”கோவிலும் முக்கியம்” என்றோ,

X”கோவில், மருத்துவமனை , கல்வி எல்லாமே முக்கியம்” என்றோ விகடன் சாய்ஸ் கொடுக்கவில்லை என்பதை நன்றாக கவனியுங்கள்.

ஏனெனில் கருத்து கணிப்பு அமைத்த விகடன் குழுவினருக்கு நன்றாக தெரிந்தது என்னவென்றால், பெரும்பாலான தமிழர்கள், அமைதியான சகஜமானவர்கள். பிராந்திய , மொழி , மத வெறி இல்லாதவர்கள்.எனவே “கோவில்தான் முக்கியம்” என்பதில் வாக்களிக்க தயங்கவார்கள். இது விகடனுக்கு நன்றாக தெரியும்.அதாவது “கோவில் தான் முக்கியம்” என்றால் “கோவில் மட்டுமே முக்கியம்”என்று பொருளாகி விடும்

தமிழ் மொழியை வைத்து இதழ் நடத்தும் விகடனுக்கு

X”பண்டைய தமிழ் கலை கலாச்சார சின்னமும் முக்கியம்” என்பதாக சாய்ஸாக கொடுக்க வலிக்கிறது.

எப்படியாவது ஜோதிகா சொன்ன கருத்து பிழையற்ற நயம் 100% சுத்த கருத்து எனக் காட்டி , ஜோதிகாவின் கருத்துக்கு வெற்றி வாகை சூடித் தரும் போர் வாளாக, படை தளபதியாக செயலை பட்டு வருகிறதோ எனப் பலரும் கருதும் வகையில் இந்தக் கணிப்பு உள்ளது.

இதிலே ஹாஷ்டாக் என்ன என்று பாருங்கள் … #விகடன் ஒப்பீனியன் போல் , # தஞ்சாவூர் , # ஜோதிகா என்று டாக் வைத்துள்ளனர்.

அதாவது “#தஞ்சை பெரிய கோவில்” என்றோ, “#தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்” என்றோ டாக் வைக்க கூட கசக்கிறது இந்த ஒப்பீனியன் போலை அமைத்த குழுவுக்கு.

#VikatanPoll | #Thanjavur | #Jyothika

ஜோதிகா அம்மையாருக்கு கருத்துக் கணிப்பில் “வெற்றி வாகை” சூடி தர வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமா அல்லது

சோழர் கட்டிய கோவில் இன்னும் இருக்கிறதே …அதை சகிக்க முடியவில்லையே… என்கிற டாலரான்ஸ் இல்லாத, நல்லிணக்கம் இல்லாத எண்ணப் போக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இது விடயமாக இந்த ஒரு தலை பட்ச “ஒப்பீனியன் போல்” கமெண்ட் செக்சனுக்கு நாம் கமெண்ட் அனுப்பி இருந்தோம், ஒரு நாள் ஆகியும்,இது வரை பதிவேற்றாமல் மட்டுறுத்தி நிறுத்தி வைத்து விட்டனர். அந்தக் கமெண்ட்டை இங்கே போட்டு இருக்கிறேன்!

விகடன் அவர்களுடைய கமெண்ட் செக்சனில் நம்மை தடுத்தி, நிறுத்தினால் இங்கே தனிக் கட்டுரையாகவே போட்டு விட்டோம்.

Our comment sent as follows:

.“கோவிலும் முக்கியம்” என்று சாய்ஸ் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்.

“கோவில்தான் முக்கியம்” என்று மட்டும் சாய்ஸ் கொடுத்து இருப்பது, சார்பு நிலை எடுத்து, கொடுக்கப் பட்ட வாக்கியமாக இருக்கிறது.

1) தஞ்சை பெரிய கோவில் கலை கலாச்சார சின்னம், பராமரிக்கப் பட வேண்டும்.- இதை ஏன் சாய்ஸாக கொடுக்கவில்லை?

விகடனை நடு நிலை இதழ் என எண்ணி இருக்கிறோம்.

மாமல்லபுரம் போல, தஞ்சை பெரிய கோவிலும் நாட்டுக்கே பெருமை சேர்க்கக் கூடியது. சுற்றுலாவுக்கும் , அதை நம்பி உள்ள பல சார்பு துறைகளும் வாழ்வாதாரமாக உள்ளது.

மருத்துவமனைகளை பராமரியுங்கள், அதற்கு உதவி செய்யுங்கள் என்று சொன்னால் அனைவரும் அதை வரவேற்பார்கள், இதிலே பண்டைய கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் கோவிலை இழுக்க வேண்டியதில்லை.

இந்தியாவின், தமிழரின் பழம்பெரும் வரலாறு, கலை , கலாச்சாரத்தை பொலிவிழக்க செய்து மண்ணாக்கும் கருத்துக்கு துணை போக இயலாது.

நான் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொள்ளவில்லை, சாய்ஸ் மாற்றி கொடுக்கப் பட்டால் மட்டுமே வாக்களிப்பேன்.

இங்கே கொடுக்கப் பட்ட 4 சாய்ஸ் களும் ஒரு தலை பட்சமாக தோன்றுகிறது. விகடன் நடு நிலையைக் கடைப் பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

விகடன் தமிழ் மொழி இதழ் தானே? தமிழரின் வரலாறு, கலைச் சிறப்புக்கு சாய்ஸ் இல்லையா?

 


வேர்ல்டு பேமஸ் நட்சத்திரம் மதிப்பிற்குறிய திருமதி ஜோதிகா பெஹன் அவர்கள், “தஞ்சை பெரிய கோவிலுக்கு இத்தனை பணம் செலவழித்து பெயிண்ட் அடிக்கிறீங்களே, உண்டியலில் இவ்வளவு பணம் போடுறீங்களே – அந்த பணத்தை மருத்துவ மனைக்கு , கல்வி பயிலும் பள்ளிக்கு செலவழிக்க கூடாதா” என்று ஆதங்கத்துடன் பொரிந்து தள்ளி இருக்கிறார்.

சினிமா பார்க்க இவ்வளவு பணம் குடுத்து செலவு பண்றீங்களே, அதை நிறுத்தி விட்டு மருத்துவ மனைக்கு, பள்ளிகளுக்கு செலவு செய்யுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை சொல்வாரா?

தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் போதே மனம் பெருமிதம் அடைகிறது,அந்தக் கோபுரத்தைப் பார்க்கும் போதே மனம் பிரமிப்பு அடைகிறது. கட்டிடக் கலையின் சிறப்பு, கட்டுமானத்தின் உயர்வு, ஆன்மீகத்தின் அமைதி …வெளிநாட்டினரும் வியக்கும் வண்ணம் அமைக்கப் பட்ட இந்த பிரகதீஸ்வரர் கோவிலை தூய்மையாகவும் பொலிவுடனும் வைக்க உண்டியலில் காசு போட்டால் நட்சத்திரம் ஜோதிகா அவர்களுக்கு எரிச்சல் வருகிறது.

தமிழருக்கே பெருமை, சோழ பேரரசன் ராஜா ராஜன் சிறப்பாக கட்டிய கோவில் இது.

ஒரு இந்தியன் என்ற முறையில் நடிகை ஜோதிகா இதில் பெருமிதம் கொண்டு இன்னும் நன்றாக பராமரியுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா , “வட இந்தியாவில் உதய்பூர் பேலஸ் இதே மாதிரி இருக்கிறது” என்று பேசினால் அது எதைக் குறிக்கிறது, இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை என்றுதானே அர்த்தம்.

வட இந்திய பகுதி யில் பிறந்து வளர்ந்த மதிப்பிற்குரிய ஜோதிகா அவர்கள், தமிழர்களின் காலை, கலாச்சாரத்தை தமிழர்களின் கோவிலை ” ஏன் இத்தனை செலவு செஞ்சு பராமரிக்கிறீர்கள் , என் உண்டியல்ல இத்தனை காசு போடுறீங்க ” என்று சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம்.

எல்லாரும் “கோவிலைப் போய் பாருங்க அம்மா” என்றார்களாம், இவர் போகவில்லையாம்! பிற நாகரீங்களின் கலையை , கோவிலை பாதுகாக்க வேண்டும் என்கிற நல்ல மனப்பான்மை இல்லாத, டாலரன்ஸ் இல்லாத, சகிப்புத் தன்மை இல்லாத மன நிலையோடு, இந்த அம்மையார் தஞ்சை பெரிய கோவிலுக்கு போகாவிட்டால் கோவிலுக்கோ, தமிழருக்கோ, இந்தியாவுக்கோ ஒரு குறைவும் ஆகி விடாது.

நான் அடுத்த முறை கோவிலுக்கு போகும் போது, உண்டியலில் பெருமிதத்தோடு பணம் போடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.


The significance of ” Homo sapiens” is that they use their intelligence for their safety, security,survival, expansion and sustenance.

Of course ” intelligence” is not exclusive character for humans, even animals, birds,reptiles..all living things in the universe including the “virus”, the COVID-19 virus is smart enough to tell “our” cells to produce more and more replica of COVID-19. So COVID- 19 succeeds in reproducing itself- we humans succeeded in killing ourselves – by diverting our intelligence to make weapons to kill ourselves rather concentrating on understanding our own weakness in our body systems and arranging to save ourselves.

Let us ask ourselves as what was our advancement is Science and technology for the past 100 years.

There was an amazing advancement in Science- mainly in the application of electrical science.

The transistors were invented in 1948, computer, super computers were put in back seat by Smart phones, honestly there was a tremendous research and advancement in communication, computing, data, entertainment …The human beings are happy and enjoying the entertainment , new types of dances jaaz..break…Discothe, night clubs, olympics with more resolution on Judgment, Cricket, Tennis…what not- But the question arises – did we really focus in research of understanding and protecting our own anatomy.

What research is being conducted in ” Top world ranking Institutions now?

We look back at the likes of Great Mr Louis Pasteur (1822-1895) and Mr Edward Jenner ( 1749- 1823) who invented vaccines against Rabies virus and more deadly Small pox virus.

What research is being conducted in ” Top world ranking Institutions” now in the field of saving humans life and empowering his own body against any attack now?

At present against the COVID-19, our defenses are similar to one which man kind used 2000 years ago- 1) Social Distancing 2) Cleaning of hands and body parts 3)Covering of face and other parts of Body..etc.

Why shall our body cells tricked by COVID-19? What is the software for our mind?

Forget about CORONA, for a moment, consider other diseases such as Cancer, Arthrtis..etc..

Rhumatoid arthritis, RA, is an autoimmune disorder. It occurs when your body’s immune system attacks the tissues of the body. These attacks affect the synovium, a soft tissue in your joints that produces a fluid that nourishes the cartilage and lubricates the joints.

RA is a disease of the that our white cells will invade and destroy a joint. It can eventually lead to the destruction of both bone and cartilage inside the joint.

The exact cause of the immune system’s attacks is “unknown”.

We do not know why our own white cells attack and damage our own finger Joints?

Cancer is results when cellular changes cause the uncontrolled growth and division of cells.

Why our own cell grows uncontrollably, why the brain does not give the proper command?

Regrettably, not only our great governments,our great leaders, our reputed Institutions – each and every one of us let down ourselves by forgetting the importance of sufficient research in Human Anatomy, Biology, medicine..all you name it!


இங்கே குடிக்கத் தண்ணியில்லை, குண்டி களுவத் தண்ணியில் லை.ஆயிரம் பிரச்சினை இங்கே இருக்கு..

இந்த நேரத்தில் காஷ்மீர் விடயமாக டில்லியில் நாடே கிடுகிடுக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள், தமிழக உடன் பிறப்புகள்!

நான் நம்முடைய அன்புக்குரிய உடன் பிறப்புகள் இடம் கேட்பது என்னவென்றால் நீங்கள் இந்தியாவில் பிரதமராக இருந்தால் காஷ்மீர் விடயத் தில் என்ன செய்வீர்கள்?

காஷ்மீர் பகுதியில் படிப்பதை விட்டு இளைஞர்கள் இந்திய பாதுகாப்பு படைகள் மீது கல் எறிவதிலும் பாகிஸ்தான் ஆதரவோடு இயங்கும் கொலைவெறி கும்பலில் இணைவதிலும் ஈடுபடும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

இந்திய ராணுவத்தில் தமிழர் உள்ளிட்ட பலர் காஷ்மீரில் கொல்ல பட்டு வரும் நிலையில் நீங்கள் உறுதியான நிலை எடுப்பார்களா அல்லது புன்னகவராளி பாடிக் கொண்டு இருப்பீர்களா?

காஷ்மீரை விழுங்கத் துடிக்கிறான் பாகிஸ்தானி!

காஷ்மீர் போனால் பஞ்சாப் போகும்,

வங்கம் போகும், கலிங்கமும் போகும்…

இந்தியா துண்டு துண்டாக சிதறி பாகிஸ்தானியனும், சீனனும், சிங்கள வரும், வேட்டையாடும் காடாக மாறும் நிலை வர வேண்டுமா?

அப்போது இப்படி தோளின் மீது துண்டைப் போட்டுக் கொண்டு ஜந்தர் மந்தரில் அசால்டாக போராட்டம் நடத்த முடியுமா?

பட்டானியும், சீனணும் கொக்கரித்து விரட்டும் போது, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடவே முடியும்.

நிற்க, அதிகாரம் சர்வாதிகார இரும்புக் கரமாக மாறக்கூடாது என்ற அக்கறை நமக்கும் உண்டு.

நீங்க போய் குலாம் பாய் கூட குந்திகினு போராட்டம் நடத்தி கிநீங்க, அப்பால இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழர் போராட்டம் நடத்தும் போது, குலாம் பாயும், ராகுல் காந்தி பாயும் நம்ம கூட சேர்ந்து போராட்டம் நடத்துவாங்களா? சிந்திப்பீர்…

நாங்க சிந்திக்கிறோம்…!

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09