Thiruchchikkaaran's Blog

“ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன், இந்த ஆபாசத்தைப் பாரீர்” என்று சொல்வது ச‌ரியா?

Posted on: April 2, 2011


File:SabarimalaRush2010.JPG

நான் திருச்சியில் இருந்து  சென்னைக்கு  வந்த போது, நான் குடி இருந்த வீட்டீற்கு அருகில் உள்ள சுவரில் ஒருவர் கருப்பு நிற வண்ணத்தில் எழுதிக் கொண்டு இருந்தார்.

“ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன்,  இந்த ஆபாசத்தைப் பாரீர்”

“என்ன தம்பி பாக்குறீங்க, உங்களைப் போன்ற இளைஞர்கள்   எல்லாம் சிந்திக்க வேண்டும்”, என்றார்.

“சிந்திக்க வேண்டியது அவசியம். ஆனால் சிந்திக்கும் போது ஒரு ஆணும் இன்னொரு ஆணும் கூடினால் எப்படி குழந்தை பிறக்கும் என்ற கேள்வி வருகிறது”, என்றேன்.

“தம்பி நாங்களா இத  சொல்லுறோம், இந்து மதத்தை சேர்ந்தவங்க தானே விஷ்ணு என்ற ஆண் கடவுளும் , சிவன் என்கிற ஆண் கடவுளும் கூடினதால ஐயப்பன் பொறந்தாருங்கிறாங்க,  அதைத் தானே ஆபாசம் என்கிறோம்”, என்றார்.

“விஷ்ணு என்பவர் அழகிய பெண்ணாக, மோஹினியாக அவதாரம் எடுத்ததாகவும் அந்தப் பெண்ணுடன்தான் சிவன் என்னும் ஆண் கூடியதாகவும் சொல்கிறார்களே அன்றி

ஆணுடன் ஆண் கூடியதாக இல்லையே”, என்றேன்.

“தம்பி நீங்க ரொம்ப கடவுள் நம்பிக்கை , பக்தி உள்ளவர் போல இருக்கு”

“நான் எதையும் “நம்புவது” இல்லைங்க. ஆனால் சொல்லப் பட்ட கோட்பாட்டை அப்படியே எழுதி  விமரிசப்பதுதான் அறிவு நியாயம், நம்ம வெறுப்புணர்ச்சியைக் காட்ட மாற்றி எழுதி விமரிசிப்பது அறிவு நாணயமல்ல”, என்றேன். அத்துடன் நாங்கள் பிரிந்து விட்டோம்.

இப்போது இந்த “ஆணும் ஆணும் கூடியதாக” மாற்றி சொல்லும் பிரச்சாரத்தை மத வெறிக் கோட்பாட்டு பிரச்சாரகர்களும் கையில் எடுத்துள்ளனர். நாம் மக்களைக் கேட்டுக் கொள்ளுவது என்னவென்றால், தயவு செய்து மத வெறிப் பிரச்சாரகர்களின் வலையில் விழுந்து விடாதீர்கள் என்பதுதான். ஏனெனில் இந்துக்களின் கடவுள்களை வேண்டுமென்றே கொச்சைப் படுத்திஎழுதினால் பதிலுக்கு இந்துக்களும் மேரி மாதா எப்படி பிள்ளை பெற்றார் என்று ரியாக்சன் குடுப்பார்கள், இவ்வாறாக மத நல்லிணக்கப் பாதையில் செல்வோரையும் பிற மத தெய்வங்களை இகழ்பவர்களாக ஆக்கி மத வெறிப் பாதைக்கு கொண்டு வந்தால் அவர்கள் வெற்றி அடைந்து விடுவார்கள்.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களின் அமைதியான ஆன்மீகத்தை முறித்து, அவர்களின் மத சகிப்புத் தன்மையை அழித்து அவர்களையும் மத வெறியர்கள் ஆக்குவதுதான் இவர்களின் நோக்கம்.

ஆனால்  அதற்க்கு இடம் கொடுக்கக் கூடாது. ஹரி ஹர சுதன் எனப் படும் ஐயப்பன், கடவுளின் சிவன் என்னும் ஆண் நிலைக்கும், மோகினிக்கும் பிறந்தவர், அந்த மோகினியாக அவதாரம் எடுத்தது ஹரி என்று விளக்கம் கொடுப்பதோடு கட்டுப்பாடு காக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையின்  இன்னொரு முக்கியக் கருத்தாக நாம் முன் வைப்பது, ஐயப்பன் வழிபாடு பல நல்ல விளைவுகளை தரக் கூடியதாக உள்ளது என்பதையே. ஐயப்பனை வழிபாட்டில் பிற மத தெய்வங்களை இகழ வோ, வெறுக்கவோ சொல்லப் படவில்லை. சாதி வேறுபாடுகளை உடைத்து சமத்துவத்தை நிலை நாட்டுகிறார் ஐயப்பன். எந்த சமூகத்தை  சேர்ந்தவராக  இருந்தாலும், ஒருவர மாலை போட்டுக் கொண்டால் அவரை சாமி என்று மரியாதையுடன் அழைக்கப் படுகிறார்,  மரியாதையுடன் நடத்தப் படுகிறார்.

அய்ய‌ப்ப‌ன் வ‌ழிபாட்டின் முக்கிய‌ அம்ச‌ம் அன்ன‌தான‌ம் ஆகும். அன்ன‌தான‌ம் என்று சொன்னாலும் பாயாச‌ம், வ‌டை என்று அச‌த்தி விடுவார்கள். இருமுடி க‌ட்டும் நாள் ஏழை ப‌ண‌க்கார‌ர் என்று விதாய்ச‌ம் இல்லாம‌ல் எல்லொருக்கும் அன்ன‌தான‌ சாப்பாடு உண்டு!


ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொள்வது மனிதருக்கு சுய கட்டுப் பாடுகளை தருவதாக உள்ளது. குடிப் பழக்கம் உள்ள என்னுடைய மேலதிகாரி ஒருவர், மாலை போட்டுக் கொண்டு வந்து எங்களிடம் இந்த மாசம் பத்தாயிரம் ரூபாய் மிச்சம் என்று கொஞ்சம் வருத்ததுடன் சொல்லுவார். ஆனால் இப்போது மாலை போட்டுக் கொள்ளும் பலர் விரதத்தை சரியாகக்  கடைப் பிடிப்பதில்லை என நினைக்கிறேன். இதிலே சக நண்பர்கள்  அவருக்கு உதவி செய்து அவரை தனிமையில் விடாத படிக்கு அவருடனே வீடு வரை சென்று விட்டால் அவர் விரதம் காகப் படும், ஒரு நாற்பது நாலாவது அவரது கல்லீரலுக்கும் நன்மை உண்டாகும்.

அதே போல மகர ஜோதி என்று சொல்லப் படுவது உண்மையான ஜோதியா அல்லது மலையிலே யாராவது நெருப்பைக் கொளுத்தி ஜோதி உண்டாக்குகிரார்களா என்பது பற்றி பல கருத்துக்களும் செய்திகளும் வருகின்றன. இதிலே கேரளா டூரிசம் போர்டு வருமானத்திற்காக சரியான நேரத்தில் பறவையைப் பறக்கவிட்டு நெருப்பையும் கொளுத்துவதாக கூட சில செய்திகளைப் படிக்கிறோம். அவை உண்மையா என்று நமக்கு தெரியாது. ஆனால் பறவை பறப்பதோ, ஜோதி தெரிவதோ அதாக தெரிந்தால் தெரியட்டும், இல்லாவிட்டால் செயறகையாக செய்து காட்ட வேண்டாம், இந்து மதம் உண்மைக்கு முக்கியத்துவம் குடுக்கும் மதம்.

ஐயப்பன் கடவுளா, மேலே வானுலகில் இருக்கிறாரா  அவரை வேண்டினால் கேட்டது கிடைக்குமா, நினைத்தது நடக்குமா என்பதற்கு எல்லாம் நாம் சாட்சி கொடுக்க இயலாது. நம்மைப் பொறுத்தவரையில் எந்த‌க் க‌டவுளையும் பார்க்க‌வில்லை, ச‌ரி பார்த்துக் கொள்ள‌க் கூடிய‌ நிரூப‌ண‌த்தை யாரும் த‌ர‌வில்லை.

அதே நேர‌த்திலே ஐய‌ப்ப‌ன் வ‌ழிபாடு, பிற‌  ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்புண்ர்ச்சியை தூண்டாத‌தாக‌, அமைதியான‌ ஆன்மீக‌த்தை உருவாக்குவ‌தாக‌, சுய‌க் க‌ட்டுப்பாட்டை உருவ‌க்கி ஒருவ‌ரை உய‌ர்த்தும் வ‌கையில், தான சிந்த‌னையை வ‌ள‌ர்க்கும் வ‌கையில் அமைந்துள்ள‌து என்கிற‌தை சொல்ல‌ நாம் த‌ய‌ங்க‌ வேண்டிய‌தில்லை.

ஐய்ய‌ப்ப‌னின் கோட்பாடும் கொடுங்கொல், ச‌ர்வாதிகார‌ கொடூர‌னை த‌ட்டிக் கெட்டு அப்பாவி  ம‌க்களைக் காக்கும் கோட்பாடாக‌  உள்ள‌து!

இந்தக் கட்டுரைக்கு வந்த ஒரு பின்னூட்டத்திற்கு நாம் அளித்த பதிலின் ஒரு பகுதியை கட்டுரையின் இணைப்பு – 1 ஆக சேர்க்கிறோம்.

இணைப்பு – 1:

இங்கே மேரி மாதாவைப் ப‌ற்றி ப‌திலுக்கு ப‌தில் லாவணி பாட‌ நான் விரும்ப‌வில்லை. எந்த‌ ஒரு பெண்ணையும் ப‌ற்றி புர‌ளி பேசுவ‌து த‌வ‌று என்ப‌து ந‌ம் கோட்பாடு. பிற‌ பெண்களை தாயாக‌ க‌ருதுவ‌தே த‌மிழ‌ர் ப‌ண்பாடு. அவ்வகையில் மேரி மாதாவுக்கு வ‌ண‌க்க‌ம் செய்வ‌தையும், வ‌ழிபாடு செய்ய‌வும் நாம் த‌ய‌ங்க‌வில்லை. இயேசு என்ன‌ சொன்னார் , அவ‌ருடைய‌ க‌ருத்துக்க‌ள் எந்த‌ அளவுக்கு ச‌முதாய‌த்துக்கு உத‌வியாக‌ இருக்கும் என்ப‌தையே நாங்க‌ள் முக்கிய‌மாக‌க் க‌ருதுகிரோம்.

இணைப்பு – 2:

பல மாதங்களுக்கு முன்னாள் வேறொரு தளத்திலே மேரி மாதாவின் கோவிலை , மேரி மாதாவின் பெயரைக் குறிப்பிடாமலே திட்டி எழுதி, திருச்சியில் அது போல பல வழிபாட்டுத் தளங்கள் உள்ளன என்று மறை முகமாக மேரி மாதாவை திட்டியவர்கள், இன்றைக்காவது அவருக்கு மதிப்புக் கொடுக்க முன் வந்தது அந்தளவில் மகிழ்ச்சியே.
ஆணும் ஆணும் கூடியதால் உருவானவன் ஐயப்ப்னாம் என்று நாதீகவாதிகள் எழுதினாலும், இன்றைக்கு தங்களை கிறிஸ்தவர்களாக சொல்லிக் கொள்ளும் சிலர் தனக்குள் மத சகிப்புத் தன்மை இன்மையைக் காட்ட இந்த ஆணும் ஆணும் என்று மாற்றிச் சொல்லும் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிறிஸ்தவ மத தெய்வங்களை இகழ வேண்டாம் என்பதை முன்பே கட்டுரையில் சொன்னோம், ஏனெனில் அப்படி பின்னோட்டம் இட வேண்டாம் என்பதற்கே.
இதற்க்கு முன்பே நம் தளத்திலே சிலர் இந்து தெய்வங்களி இகழ்ந்து , அதற்க்கு பதிலாக அவர்கள் இவர்களின்  தெய்வங்களி இகல்வதுமாக இருந்தது. இடையிலே நாம் பல பின்னூட்டங்களி மட்டுறுத்திய போது, சிலர் நான் கிரிப்டோ கிறித்தவன் என்ற வகையில் கூட கருத்து  தெரிவித்தனர்.
எனவே மத வெறியை மட்டுப் படுத்த இயலாத சிலர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக தங்களை சொல்லிக் கொண்டு, பிற மத தெய்வங்களை பற்றி தவறான தகவல்களை  எழுதி வருவதாலே, பதிலுக்கு அது போல செய்ய வேண்டாம் என்று முன் கூட்டியே எச்சரித்து இருக்கிறோம்.

Title : ”ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன், இந்த ஆபாசத்தைப்  பாரீர்”  என்று சொல்வது என்று  சொல்வ‌து ச‌ரியா?


99 Responses to "“ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன், இந்த ஆபாசத்தைப் பாரீர்” என்று சொல்வது ச‌ரியா?"

அன்புள்ள சகோ திருச்சி,
அருமையான கட்டுரை. அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு சொன்னாலும் புரியாது அந்த அந்த கோட்பாட்டின் அடிப்படையில் விவாதம் செய்யமாட்டார்கள் இவர்கள்,ஏனென்றால் இவர்கள் விலைபோன நாத்தீகர்கள்,
மற்ற மதக்காரர்களுக்கு இந்துகடவுளை கிண்டலடிப்பது அல்ப சந்தோசம்.இவர்கள் எதிர்பார்ப்பது இந்துக்களும் சமய நல்லிணக்க எண்ணத்தை விட்டு வெளிவந்து இவர்களுடட்ன் சேர்ந்துகொண்டு இவர்களை போல எங்கள் கடவுள் மட்டுமே உண்மை மற்றதெல்லாம் ஏமாற்று வேலை என்று சொல்ல வேண்டும்

சில செய்திகளைப் படிக்கிறோம். அவை உண்மையா என்று நமக்கு தெரியாது

It has been decisely proved that the Jyoti s a fraud. The devosam accepted that they do it every year.

விலைபோன நாத்தீகர்கள்l

It s on every normal person’s mind. Not only on the minds of விலைபோன நாத்தீகர்கள்

Even Vishnu took mohini avtar and Sivan his own male form, yet the way the story goes, s dirty. Semen fell down…etc. Imagination of Hindus cd hv been decent.
.com
Abt Mary’s pregnancy. It s also on every normal person’s mind. But if u qn it, christians dont take it as an offence . Christian imagination had not made Gabriel come down, enter her hut w/o anybody knowing and doing the act on her. Everything s decent

அன்புக்குரிய‌ திரு. ஜோ அமல‌ன் அவ‌ர்க‌ளே,

மேலும் நாம் ம‌க‌ர‌ ஜோதி என்ப‌தை உருவாக்க‌க் கூடாது என்று சொல்லி இருக்கிரோம். அவ‌ர்க‌ள் அப்ப‌டி உருவாக்குகிறார்க‌ளா என்ப‌தை நான் அருகில் இருந்து பார்க்க‌வில்லை.

நீங்க‌ள் சொல்வ‌து போல‌ விந்து கீழே விழுவ‌து எதுவும் ஐய்ய‌ப்ப‌ன் ப‌ற்றிய‌ குறிப்பில் இல்லை.

நீங்க‌ள் வேறு எதையோ ப‌டித்து விட்டு இங்கே வ‌ந்து அவ‌ச‌ர‌த்தில் த‌வ‌றாக‌ எழுதுகிறீர்க‌ள்.

இங்கே மேரி மாதாவைப் ப‌ற்றி ப‌திலுக்கு ப‌தில் லாவணி பாட‌ நான் விரும்ப‌வில்லை. எந்த‌ ஒரு பெண்ணையும் ப‌ற்றி புர‌ளி பேசுவ‌து த‌வ‌று என்ப‌து ந‌ம் கோட்பாடு. பிற‌ பெண்களை தாயாக‌ க‌ருதுவ‌தே த‌மிழ‌ர் ப‌ண்பாடு. அவ்வகையில் மேரி மாதாவுக்கு வ‌ண‌க்க‌ம் செய்வ‌தையும், வ‌ழிபாடு செய்ய‌வும் நாம் த‌ய‌ங்க‌வில்லை. இயேசு என்ன‌ சொன்னார் , அவ‌ருடைய‌ க‌ருத்துக்க‌ள் எந்த‌ அளவுக்கு ச‌முதாய‌த்துக்கு உத‌வியாக‌ இருக்கும் என்ப‌தையே நாங்க‌ள் முக்கிய‌மாக‌க் க‌ருதுகிரோம்.

ஐய்யப்ப‌ன் ஒரு பிர‌ம்ம‌ச்சாரி என்றே உள்ள‌து. விந்து விழுந்த‌ நிகழ்வு எதுவும் அவ‌ர் பிற‌ப்பு ப‌ற்றிய‌ குறிப்பில் இல்லை.

மேலும் இப்படி ஒருவ‌ர் விந்து கீழே விழுந்தால் அதில் பெரிய‌ அசிங்க‌மில்லை! எச்சிலோ, இர‌த்த‌மோ, விந்துவோ, சீழோ கீழே விழுந்தால் அது ஒரு வ‌கையான‌ குப்பையே, அதை துடைத்து சுத்த‌ம் செய்ய‌ வேண்டும் என்ப‌தே ச‌ரி.

ஒருவ‌ர் இன்னொருவ‌ன் ம‌னைவியுட‌ன் உற‌வு கொண்டு விந்து விழாம‌ல் சுத்த‌மாக‌ புணர்ச்சி செய்வ‌தால் வ‌ரும் அசிங்க‌த்தை விட‌, முறையான‌ உற‌வு கொண்டு விந்து கீழே விழுந்தால் அசிங்க‌ம் குறைவுதான்.

// இப்படி ஒருவ‌ர் விந்து கீழே விழுந்தால் அதில் பெரிய‌ அசிங்க‌மில்லை! எச்சிலோ, இர‌த்த‌மோ, விந்துவோ, சீழோ கீழே விழுந்தால் அது ஒரு வ‌கையான‌ குப்பையே, அதை துடைத்து சுத்த‌ம் செய்ய‌ வேண்டும் என்ப‌தே ச‌ரி. //

நண்பரே, தங்களது இந்த கருத்து மேலோட்டமாக இருக்கிறது;ஆனால் கிளாடி அவர்கள் கொடுத்துள்ள தகவல் வேறு மாதிரியிருக்கிறது;அதனை உங்கள் தளத்தில் நீங்கள் நாகரீகம் கருதி பதிக்கவில்லை போலும்; ஆனாலும் இறை மறுப்பாளர்களால் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் இதுபோன்ற கருத்துக்களுக்கு உங்கள் விளக்கம் என்ன, அவர்களும் வேதங்களில் படித்து தானே சொல்லுகிறார்கள்; இந்து கோவில்களின் சிற்பங்களும் அதனை ஆம் என்று ஆமோதிப்பது போலவே இருக்கிறதே..?

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

அன்புக்குரிய‌ திரு. சில்சாம் அவ‌ர்க‌ளே,

வ‌ருக்கைக்கும் க‌ருத்துப் ப‌திவிற்க்கும் ந‌ன்றி. ப‌ல விட‌ய‌ங்க‌ளை எங்க‌ளால் முடிந்த‌ அளவு ஆராய்ந்து பின்ன‌ரே எழுதுகிறோம். ஐய்யப்ப‌ன் பிற‌ப்பில் விந்து விழுவ‌து போன்ற‌ விட‌ய‌ங்க‌ள் இல்லை.

மேலும் இந்து ம‌த‌த்தில் க‌ட‌வுள்க‌ள் குடும்ப‌ம், குழ‌ந்தை குட்டி என்று இருப்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே. ஒரு இந்து த‌ன் ம‌னைவியொடு, ம‌ன‌ஸ்தாப‌ப் ப‌ட்டு பிரிந்து வாழ்ந்தால் கூட‌ கோவிலுக்குப் போனால், அங்கே க‌ட‌வுளே குடும்ப‌த்தோடு இருக்கிறார், நாம இப்ப‌டி ம‌னைவியை பிரிந்து இருப்ப‌து ச‌ரியா என்று தோன்றும். இந்திய ச‌முதாய‌ம் குடும்ப‌ ச‌முதாய‌மாக‌ இருப்ப‌த‌ற்க்கு இதுவும் ஒரு முக்கிய‌க் கார‌ண‌ம். க‌ட‌வுள் த‌ன் ம‌னைவியை புணர்ச்சி செய்வ‌தாக‌ கோட்பாடு வைத்தால் அது அவ‌ர்க‌ள் விருப்ப‌ம், இத‌னால் பெரிய‌ பிர‌ச்சினை இல்லை என‌ நினைக்கிறேன். எத்த‌னையோ ஆப‌த்தான‌ க‌ட‌வுள் கோட்பாடுக‌ளும் உல‌கில் உள்ள‌ன‌வெ!.

மேலும் இந்த‌ ஐயப்ப‌ன் ஒரு மிக‌ப் பெரும் ச‌க்தி வாய்ந்த‌ கொடூர‌ அர‌க்கனிட‌ம் இருந்து ம‌க்களைக் காக்க‌ உருவாக்க‌ப் ப‌ட்ட‌தாக‌வும், எனவே இதை ஒரு க‌ட‌மையாக‌வே சிவ‌ன் செய்தார், ஆசைப் ப‌ட்டு செய்ய‌வில்ல‌ என‌வும் சொல்ல‌ப் ப‌டுகிற‌து. மோகினியை விர‌ட்டிக் கொண்டு ஓடிய‌தாக‌ எல்லாம் இல்லை. பொதுவாக‌வே சிவ‌ன் புல‌ன் அட‌க்க‌த்தில் அதிக‌ விருப்ப‌ம் கொண்ட‌வ‌ராக‌ சொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌து. இ ந்து ம‌த‌க் கோட்ப்ப‌ட்டுப்ப‌டி மாற‌ன் என்றும், ம‌ன்ம‌த‌ன் என்றும் சொல்ல‌ப் ப‌டும் ஒரு தேவ‌ன் அனைவ‌ரின் ம‌ன‌திலும் காத‌ல் எண்ண‌த்தை உருவாக்குப‌வ‌ன் என்று சொல்ல‌ப் ப‌டுகிற‌து. அவ‌ன் த‌வ‌த்திலே இரு ந்த‌ சிவ‌னின் ம‌ன‌திலே காத‌ல் எண்ண‌த்தை உருவாக்கா முய‌ன்ற‌தாக‌வும், அத‌னால் இடையூறு செய்ய‌ முய‌ற்சி செய்த‌ மாற‌னை சிவ‌ன் எரித்த‌தாக‌வும், மாற‌னின் ம‌னைவி ர‌தி சிவ‌ன் ம‌க‌ள் என்றும், அவ‌ல் வ‌ன்து சிவ‌னிட‌ம் அழுத‌தாக‌வும், அத‌னால் சிவம் ம‌ன‌ம‌த‌னை உயிர்ப்பித்து ஆனால் அவ‌ன் உருவ‌ம் தெரியாம‌ல் இருப்பான் என்று, அன‌ங்க‌னாக‌ இருப்பான் என்றும் சொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌து. அந்த‌ அளவுக்கு சிவ‌ன் புல‌ன‌ட‌க்க‌த்தில், த‌வ‌த்தில், மோன‌த்தில் ஈடுபாடு காட்டுப‌வ‌ராக‌ சொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌து.

இதுவே இந்துக்க‌ள் ப‌டிப்ப‌து, சொல்வ‌து. ம‌ன்ம‌த‌ன் எரிந்த‌ க‌தை கிராம‌ங்க‌ளில் பெரிய‌ நாட‌க‌மாக‌ விடிய‌ விடிய‌ ந‌ட‌க்கும். இத‌ற்க்கு எல்லாம் நான் சாட்சி குடுப்பதாக‌ எண்ண‌ வேண்டாம்.

அன்புக்குரிய‌ திரு. சில்சாம் அவ‌ர்க‌ளே,

//இந்து கோவில்களின் சிற்பங்களும் அதனை ஆம் என்று ஆமோதிப்பது போலவே இருக்கிறதே..?//

இதை எல்லாம் நாம் முன்பே விவாதித்து விள‌க்க‌மும் அளித்து இருக்கிறோம். பெரும‌பால‌ன‌ இந்துக் கோவில்க‌ளில் புண‌ர்ச்சி சிற்ப‌ங்க‌ள் இல்லை.

இது விட‌ய‌மாக‌ நீங்க‌ள் கிட்ட‌த் த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌த்துக்கும் முன்பாக‌ இதே க‌ருத்தை சொன்ன‌த‌ற்க்காகவே ம‌யிலை கபாலீஸ்வர‌ர் கோவிலுக்கு சென்று பார்த்தேன். அங்கே திரும‌ண வூர்வ‌ல‌ம், மேள தாள‌ வாத்திய‌க்கார‌ர், நாய‌ன‌க் கார‌ர், முனிவ‌ர் எருது, ப‌சு, மான் போன்ற‌ சிற்ப‌ங‌க‌ளே காண‌ப்ப‌ட்ட‌ன‌.

க‌ஜூராஹோ போன்ற‌வை புத்த‌ ம‌த‌ம் தேய்ந்த‌ கால‌த்திள் இருந்த‌ குழ‌ப்ப‌மான‌ கால‌ க‌ட்ட‌த்தில் கட்ட‌ப் ப‌ட்ட‌ ப‌வுத்த‌க் கோவில்க‌ள். அவ‌ர்க‌ள் இந்து ம‌த‌த்திற்க்கு திரும்பி வ‌ந்த போது, அந்த‌ கோவில்க‌ள் சிற்ப‌ங்க‌ள் இவ‌ற்றை அழிக்காம‌ல், உடைக்காம‌ல் அப்ப‌டியே வைத்து உள்ளே இந்துக் கோவிலாக‌ உப‌யோக‌ப் ப‌டுத்தின‌ர் என்று ஆராய்ச்சியாள‌ர் க‌ருதுகின்ற‌ன‌ர்.இப்போது அந்த‌க் கோவில்க‌ள் வ‌ழி பாட்டுத் தல‌ங்க‌ளாக‌ இல்லை. சுற்றுலாத் த‌ல‌மாக‌வே உள்ள‌து.

இவ‌ற்றை மீண்டும் மீண்டும் எழுதுவ‌து ஆயாச‌மாக‌ உள்ள‌து. நீங்க‌ள் ஒருமுறை கோவிலுக்கு சென்று பாருங்க‌ளேன்.

நீங்கள் கூறிய ஐயப்பன் என்கிற கடவுள் கருத்து சனாதன தர்ம மக்களின்(இந்துக்களின்) வேதங்களில் அல்லது புராணங்களில் இல்லை. சிவன் உடன் மோகினி (பெண்) ரூபதிலுள்ள க்ரிஷ்ணன காமம் கொண்டான் என்று எதிலும் இல்லை. கிருஷ்ணன் மோகினி ரூபம் எடுத்தது வரை தான் புராணங்களில் சொல்லபடிருகிறது. ஐயப்பன், ஐய்யனார், ஐயா, சுடலைமாடன், etc முதலிய சிறு தெய்வ வழிபாடுகள் எல்லாம் கற்பனை

திருச்சிக்காரன்,
//வ‌ருக்கைக்கும் க‌ருத்துப் ப‌திவிற்க்கும் ந‌ன்றி. ப‌ல விட‌ய‌ங்க‌ளை எங்க‌ளால் முடிந்த‌ அளவு ஆராய்ந்து பின்ன‌ரே எழுதுகிறோம். ஐய்யப்ப‌ன் பிற‌ப்பில் விந்து விழுவ‌து போன்ற‌ விட‌ய‌ங்க‌ள் இல்லை. //

சரியாக ஆராயாமல் பதில் சொல்வது சரியா?
ஐயப்பனை பற்றி கேள்வி கேட்டால், பைபிளை பற்றி பேசுவது சரியா? (I told this, because I wanted you to answer this question straight, rather than trying to just blame Bible)
சிவனின் அத்தகைய செயல்களை, பாகவத புராணம், பிரமந்த புராணம், அக்னி புராணம் போன்றவை உறுதி செய்கின்றனவே. இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள்?
Also, this wiki page shows you more details: http://en.wikipedia.org/wiki/Mohini

//இதை எல்லாம் நாம் முன்பே விவாதித்து விள‌க்க‌மும் அளித்து இருக்கிறோம். பெரும‌பால‌ன‌ இந்துக் கோவில்க‌ளில் புண‌ர்ச்சி சிற்ப‌ங்க‌ள் இல்லை.//
//இவ‌ற்றை மீண்டும் மீண்டும் எழுதுவ‌து ஆயாச‌மாக‌ உள்ள‌து. நீங்க‌ள் ஒருமுறை கோவிலுக்கு சென்று பாருங்க‌ளேன்.//
இந்து கோவில்களில் ஆபாச சிற்பங்கள் உள்ளது பற்றி (படத்துடன்) மேலே உள்ள விக்கி தொடுப்பில் கொடுத்துள்ளனர்.
Can give you more, if you want to. But that will be more like beating a dead snake.

அன்புக்குரிய அசோக் குமார் அவர்களே,

//பாகவத புராணம், பிரமந்த புராணம், அக்னி புராணம் போன்றவை உறுதி செய்கின்றனவே. இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள்?//

இந்த புராணங்களில் எல்லாம் ஐயப்பன் பிறப்பைப் பற்றி சொல்லப் பட்டு இருக்கிறதா?

இந்த நம்முடைய கட்டுரை ஐயப்பன் பற்றியது. அதிலே ஆணும் பெண்ணுமே கூடி ஐயப்பன் பிறந்து இருக்கிறார் . அதிலே விந்து கீழே விழுந்ததாக சொல்லப் படவில்லை.

//இந்து கோவில்களில் ஆபாச சிற்பங்கள் உள்ளது பற்றி (படத்துடன்) மேலே உள்ள விக்கி தொடுப்பில் கொடுத்துள்ளனர்.//

இதற்குத் தான் தெளிவாக சொல்லி இருக்கிறோம், பெரும்பாலான கோவிலகளில் புணர்ச்சி சிற்பங்கள் இல்லை என்று. நிர்வாண சிறபங்கள் சில சிற்பங்கள் சில கோவிலகளில் இருக்கலாம். பல சிலைகளில் புடவை வேட்டி கட்டிய நிலையிலே பல சிலைகள் வடிக்கப் பட்டு உள்ளன. சில சிலைகளில் சிற்பி இப்படி வடித்த்திருக்கிறான் என்றால், அவற்றுக்கு ஆடை உடுத்தி பூசனை செய்ய வேண்டும். தேடித் பார்த்தால் சில நிர்வாண சிலைகள் கிடைக்கும், அதை எடுத்து ஒரு போட்டவை போட்டு இந்துக் கோவில்கள் இப்படி உள்ளன என்று எழுதினால் என்ன செய்வது?

நான் தான் சொல்கிறேனே, நீங்கள் சென்னையில் உள்ள கோவில்களுக்கு சென்று பாருங்களேன். அல்லது வேறு வூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று பாருங்களேன். வெளியிலே இருந்து பார்த்தால் கூட கோபுரத்தில் உள்ள சிலைகளைப் பார்க்கக் முடியுமே!

அக்காலத்தில் கலை என்பதும், சமயம் என்பது ஒன்றாகவே இருந்தது. கலையில் செய்ய வேண்டிய திறமையை இங்கே காட்டி இருக்கிறேர்கள். அப்படியும் தேடித் பார்த்து போடா வேண்டிய அளவுக்கு சில சிலைகளே அப்படி உள்ளன.

எனக்கு புரியல. எதை ஆபாசம் என்கிறீர்கள்? குறிகளை செதுக்கியிருந்தால் ஆபாசம் என்கிறீர்கள்.

பாரீஸ் பேஷன் ஷோக்களை, ஆடையின்றி நடந்து வருவதை நாம் ஆபாசம் என்கிறோம். அவர்கள் கலை என்கிறார்கள். அது பார்ப்பவர் கண்களையும் மனதினையும் பொருத்தது.

இல்லை, ஆபாசம் என்பதற்காக செய்யாமல் தான் இருக்க போகிறீர்களா? செக்ஸ்ஸில் ஒரு பிரச்சினையென்றால் அதற்கான மருத்துவருக்கு செல்லாமல் தான் இருக்கபோகிறீர்களா?

பண்டைய ரோம் நகரில் இருக்கும் ஆண்களின் சிலைகள் முற்றிலும் நிர்வாணமாக தான் இருந்தது. காலப்போக்கில் அவை ‘ஆபாடமாக'(!) தோன்றி, பின் ஆண் உறுப்புக்கள் மேல் ஒரு இலையை வைத்து சிலைகளை ஆல்ட்ரேஷன் செய்தார்கள். இது தெரியுமா? கொஞ்சம் Angels and Demons படம் பாருங்கள். இவையெல்லாம் ஆபாசமாக தெரியுமா உங்களுக்கு? எனக்கு தெரியவில்லை…

“ஆணே இல்லாமல் பெண் கருவடையமுடியும் என்றால் அப்படி ஒரு அமானுஷ்யம் ஒரு தெய்வத்தால் சாத்தியம் என்றால், தன்னை ஒரு பெண்ணாக பிறப்பித்து கொண்டு ஒரு ஆணுடன் இணைந்து பிள்ளை பெரும் அமானுஷ்யத்தை ஒரு கடவுளால் நிகழ்த்த சாத்தியம் இல்லாமல் பொய் விடுமா?” சொல்லுங்கள்.

நீங்கள் கூறிய ஐயப்பன் என்கிற கடவுள் கருத்து சனாதன தர்ம மக்களின்(இந்துக்களின்) வேதங்களில் அல்லது புராணங்களில் இல்லை. சிவன் உடன் மோகினி (பெண்) ரூபதிலுள்ள க்ரிஷ்ணன காமம் கொண்டான் என்று எதிலும் இல்லை. கிருஷ்ணன் மோகினி ரூபம் எடுத்தது வரை தான் புராணங்களில் சொல்லபடிருகிறது.
நீங்கள் கூறியபடி பாகவத் புராணத்தில் சிவன், மோகினி வடிவம் கொண்ட விஸ்ணு வின் பின்னால் போனார், ஆனால் அது விஸ்ணு என்து தெரிந்த பின்பு அவரிடம் மனிப்பு கேட்டு சிவன் போய் விடுகிறார். அது மாதிரி தான் பிரம்மாண்ட புராணத்திலும் சொல்லியிருக்குது. நீங்கள் கூறிய கருத்துகள் (விகிபீடியா ) லிருந்து எடுத்தது, ஒரிஜினல் சுலோகம் அப்படி சொல்லவில்லை.

பைபிளை திரித்து நாங்களும் எங்கள் இஷ்டத்திற்கு ஆபாசமாக எழுதி வெளியிடலாமா?
சகோதரி கிலாடி அவர்கள் எந்த விளக்கமோ ஆதாரமோ இன்றி சிவனை பற்றி பழிகளை கொட்டி தீர்த்திருக்கிறார். எந்த புராணத்தில் எந்த இடத்தில் அவர்கள் குறிப்பிடும் விஷயம் உள்ளது என்பதை சுட்டிகாட்டமுடியுமா?

மேலும் ஐய்யப்பன் பிறப்பை நாட்டார் மரபுப்படி ஊருக்கு ஒரு கதை அவர்கள் இஷ்டத்திற்கு புனையப்பட்டுள்ளது,அதுபோல உங்களின் இஷ்டத்திற்கு ஐயப்பனின் பிறப்பை நீங்கள் ஆவணபடுத்த முயற்சிகிரீர்கள்.

நாம் பைபிளின் அபத்தங்களை வரி அதிகாரம் போன்ற குறிப்புகளோடு கொடுக்கிறோம்,அல்லாமல் கொடுத்தாலும் தவறு இருப்பின் நீங்கள் மறுத்தது பதில் அளிக்க வேண்டியதுதானே.
ஒரு காலத்தில் பலதாரமணம் சர்வசாதாரணமான விஷயம் கடந்த நூற்றாண்டுவரை அந்த வழக்கம் இங்கு உண்டு. மேலும் அப்படிப்பட்ட காலங்களிலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்போடு வாழ்ந்த ராமனை போற்றுவது என்ன தவறு?
மேலும் சிவன் விஷ்ணுவுடன் பிள்ளைபெற்றது என்பது அவர் பெண்ணாக தன்னை மாற்றிகொண்ட பிறகு,இதுவே இங்கு நம்பிக்கை இதனை திரித்து உங்கள் இஷ்டத்திற்கு கயிறு விடுவது உச்சகட்ட துவேஷ புத்தி.

ஆணே இல்லாமல் பெண் கருவடையமுடியும் என்றால் அப்படி ஒரு அமானுஷ்யம் ஒரு தெய்வத்தால் சாத்தியம் என்றால், தன்னை ஒரு பெண்ணாக பிறப்பித்து கொண்டு ஒரு ஆணுடன் இணைந்து பிள்ளை பெரும் அமானுஷ்யத்தை ஒரு கடவுளால் நிகழ்த்த சாத்தியம் இல்லாமல் பொய் விடுமா?

தவறான சில கருத்துக்களை கொண்டுள்ள சகோதரி கிளாடி உங்களின் கருத்து தவறானது, ஐயப்பன் பிரம்மச்சாரி அவன், அதனாலேயே பெண்கள் அங்கு செல்வதில்லை அனால் அவன் பெண்களை வெறுப்பவன் இல்லை. அவனுக்கு நிறைய பெண் பக்தர்களும் உண்டு. பொதுவாகவே எந்த கோவிலும் குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் செல்வதில்லை அதனால் அவர்களுக்காக அந்த காரணத்துக்காக புறாவை பலிகொடுத்து சேரவேண்டிய
கட்டாயமும் இல்லை,அப்படி செய்ய சொல்லி உங்களின் வேதத்தில் தான் உள்ளது மேலும் அதிலுள்ள மற்ற இதுபோன்ற அருவருப்பான விசயங்களை நாம் குறிப்பிட்டு இருக்கிறோம் அவற்றிக்கு பதில் உங்கள் யாரிடமும் இல்லை, லாஜிக் இல்லாமல் உங்கள் இஷ்டப்படி குறுகிய எண்ணத்தில் திரித்து கூறவேண்டாம்.
மேலும் ஐயப்பன் கோவில் மலையில் உள்ளது அந்த காலங்களில் காடு மிருகங்களின் நடமாட்டமும் அதிகம் இந்த அளவு சாலை வசதியும் கிடையாது இப்படி சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதையும் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

siva bakthars are restricted from irregular sex ,and wikipedia is not the final authority to hindusim peoples like miisionaries are playing with hindu epics and posting in wikipedia. for religious matters we cannot depend on this.
wiki says tamil day is starts from evening time ( during sun set) for example now tuesday 11 pm but as per wiki present equalent tamil day is wedness day
and i found a upanisdh in english version with english meanings written by max muller says,that upanisdh is fully praising jesus, i dont have its orginal meaning.do any one agree upanishadhs are praising jesus?

Dear Brother Sivanadiyan,

Can you tell that where did you read that maxmullar told that Upanisdha praise Jesus?

//இந்த புராணங்களில் எல்லாம் ஐயப்பன் பிறப்பைப் பற்றி சொல்லப் பட்டு இருக்கிறதா?

இந்த நம்முடைய கட்டுரை ஐயப்பன் பற்றியது. அதிலே ஆணும் பெண்ணுமே கூடி ஐயப்பன் பிறந்து இருக்கிறார் . அதிலே விந்து கீழே விழுந்ததாக சொல்லப் படவில்லை.
//
கண்ணிருந்தும் குருடர் என்பது இதுதானோ? நான் தொடுப்பை கொடுத்தும் இல்லை என்று சொல்கிறீரே. உங்களுக்காக கோப்பி பேஸ்ட் செய்து இருக்கேன் படிக்கவும்.

In the Brahmanda Purana when the wandering sage Narada tells Shiva about Vishnu’s Mohini form that deluded the demons, Shiva dismisses him. Shiva and his wife Parvati go to Vishnu’s home. Shiva asks him to take on the Mohini form again so he can see the actual transformation for himself. Vishnu smiles, again mediates on the Goddess, and in place of Vishnu stands the gorgeous Mohini. Overcome by lust, Shiva chases Mohini as Parvati hangs her head in shame and envy. Shiva grabs Mohini’s hand and embraces her, but Mohini frees herself and runs further. Finally, Shiva grabs her and their “violent coupling” leads to discharge of Shiva’s seed which falls “short of its goal,” suggesting the act was consummated. The seed falls on the ground and the god Maha-Shasta (“The Great Chastiser”) is born. Mohini disappears, while Shiva returns home with Parvati.[28][29] Shasta is identified primarily with two regional deities: Ayyappa from Kerala and the Tamil Aiyanar. He is also identified with the classical Hindu gods Skanda and Hanuman.[30] In the later story of the origin of Ayyappa, Shiva impregnates Mohini, who gives birth to Ayyappa. They abandon Ayyappa in shame. The legend highlights Vishnu’s protests to be Mohini again and also notes that Ayyappa is born of Vishnu’s thigh as Mohini does not have a real womb.[31] Another variant says that instead of a biological origin, Ayyappa sprang from Shiva’s semen, which he ejaculated upon embracing Mohini.[32] Ayyappa is referred to as Hariharaputra, “the son of Vishnu (Hari) and Shiva (Hara)”, and grows up to be a great hero.[33]

அன்புக்குரிய அசோக் குமார் அவர்களே,

நீங்கள் சொல்லும் குறிப்பே பல versions உள்ளதாக உள்ளது.

தரையில் சிந்தியதாக சொல்லுகிறார்கள், விந்து தொடையில் சிந்தியது என்று சொல்லுகிறார்கள். தொடையிலே சிந்தவில்லை என்கிறார் ஒவ்வொருவர், இதைப் போல பல வெர்சன்கள் உள்ளன என்று நீங்களே சொல்லுகிறீர்கள்.

அப்ப இதில் எந்த வெர்சனை எடுத்துக் கொள்வது? மத வெறி பிரச்சாரத்துக்கு வசதியான ஒரு வெர்சனை எடுத்துக் கொள்ளலாமா? அல்லது உருவாக்கிக் கொள்ளலாமா?

ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதை அட்டக் காப்பி எடுத்து பல படங்களை வெளி இடுவது போல, நீங்கள் கோப்பி எடுத்து கொடுத்ததைப் போல அவர்களும் கோப்பி செய்து இருக்கிறார்கள். சிவன் பார்வதி யோடு புணர்கையில் விந்து விழுந்தது என்று சில புராணங்கள் சொல்லுகின்றன. அதை அப்படியே எடுத்து மாடிபை செய்து போட்டு உள்ளனர். இது பற்றி தனிக் கட்டுரையாக வெளியிடுவோம்.

அதே நேரத்தில் அசோக் குமார் அவர்களே, சிவன் பெண்ணுடன் கூடி தான் ஐயப்பன் பிறந்து இருக்கிறார், ஆணுடன் ஆண் கூடி அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா?ஆணுடன் பெண்ணுடன் அப்போது ஆணுடன் ஆண் கூடுவதாக எழுதப் பட்ட வாசகங்கள், மத வெறுப்புணர்ச்சியால் எழுதப்பட்டதா? இதிலே கண்ணிருந்தும் குருடர் யார்?

இப்படி பல வெர்சன் கள் உள்ளதாக நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் கோப்பி, எங்கே இருந்து கோப்பி எடுக்கப் ப் பட்டது?

கோயில் கோபுரங்களில் புணர்ச்சி சிற்பங்கள் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? கோயிலினுள் நடக்க கூடாதே தவிர கோவிலில் சிற்பங்களாக இருப்பது தவறு என்ன?

கோயிலில் அவ்வாறு இருப்பது காமத்தை கடந்த பின் தான் கடவுள் என்பதின் குறியீடே. அதனை மனித மனம் பிடித்து தொங்காமல் அதனை தாண்டி வரவேண்டும். காம உணர்வு இல்லாத ஒரு உயிர் உலகில் உண்டா? அது இயல்பு ஆனால் அதனை கடந்து துறந்த அடுத்த நிலையிலேயே ஒருவருக்கு இறை நிலை கிட்டும் என்பதற்காகவே முன் கோபுரங்களில் அந்த சிற்பங்கள் உள்ளன? அது என்ன பாவமா? அது ஒரு தேவை அதனை தாண்டிய கடந்த மனபக்குவ நிலையே (மனதால் முற்றிலும் கடந்த நிலையே )வேண்டுதல் வேண்டாமை அற்ற இறை நிலை.
ஒரு முனிவரும் சீடனும் போகும் வழியிலே ஆற்றை கடக்கும் பொழுது ஒரு இளம்பெண் ஆற்று நீருக்கு பயந்து நின்று கொண்டிருக்கையில் அவளுக்கு உதவ நினைத்த முனிவர் அவளை தன தோளில் சுமந்து ஆற்றை கடந்து இறக்கி விட்டார், பின் தொடர்ந்த சீடனோ முற்றும் துறந்த நம் குரு ஒரு இளம்பெண்ணை தொட்டு தன் தோளில் சுமந்து வந்தாரே என்று யோசித்து கொண்டே இருந்தானாம் பின் சில நாள் கழித்து தாங்க முடியாமல் குருவிடம் இது பற்றி கேட்க அவர் சொன்ன பதில் நான் அன்றே அவளை இறக்கி விட்டி விட்டேன் நீ இன்றளவும் மனதில் அவளை சுமந்து கொண்டிருக்கிறாயே என்று கூறினாராம்.
அது போல அதனை தவிர்க்க முடியாது ஆனால் கடக்க வேண்டும் என்பதே சிற்பங்களின் தத்துவம்.அதனை பற்றி எந்த இந்துவும் கவலை படுவதில்லை ஆனால் இந்து வெறுப்பாளர்கள் மட்டும் மிகவும் கவலை படுகிறார்கள்.ஏன் என்று தெரியவில்லை?

Dear Sivanadaiyan,

I dont find any punrachchi Sirpams in any of the temples, I visited

Can you make a Trip to Kapaleeswarar Temple and have a look?

Well said. என்ன சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. காரணம், செக்ஸ் என்பதையே தவறானது என்னும் கண்ணோட்டத்தில் வளர்க்கப்பட்டவர்கள் அவர்கள்.

உலகின் எல்லா மதங்களும் செக்ஸையும் பெண்ணையும் விலகி வைத்திருக்கின்றன. ஏன், சிலுவைப்போர் காலகட்டத்தி பாதிக்கப்பட்டது/கொல்லப்பட்டது பெருமளவு பெண்களும் குழந்தைகளும் தான். பெண்ணை கடவுளின் உருவமாக ஏற்பது என்பது இந்து மதத்தில் மட்டும் தான். ரோமன் கத்தோலிக்கர்கள் என்னதான் மேரியை வணங்கினாலும் அங்கும் ஒரு restriction உண்டு. அது, Virgin Mary.

ஆனால், இந்து மதத்தில் கடவுள்(கள்) பெரும்பாலும் குடும்பத்துடன் காட்சி தருகிறார்கள். இது ‘குடும்பம் ஒரு கோவில்’ என்னும் தத்துவத்தை போதிப்பதுடன், மனிதனுக்கு திருமணம் அத்தியாவசியம் என்பதையும் வலியுருத்துகிறது. அதே சமயம் சன்யாசமும் ஏற்கப்படலாம். எப்போது? இல்லற வாழ்வை ஏற்று பின் கொஞ்ச காலம் கழித்து (அந்திம காலத்தில்) துறவரம் மேற்கொள்ளலாம்.

ஆனால், செல்ஸ் என்பதையே கொலை குற்றம் போல பாவிக்கும் இவர்கள் இருக்கும் வரை இப்படித்தான் பதில் சொல்லவேண்டியிருக்கும்.

புதிய ஏற்பாடு உரோமையர் அதிகாரம் 1
25 அவர்கள் கடவுளை பற்றிய உண்மைக்கு பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டார்கள், படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்கு பணி செய்தனர், படைத்தவரை மறந்தார்கள்,அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்,ஆமென்.

26 ஆகையால் கட்டுகடங்காத இழிவான பாலுணர்வு கொள்ள அவர்களை விட்டு விட்டார், அதன் விளைவாக இயல்பான இன்பமுறைக்கு பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டனர்,

27 அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெரும் இயல்பான முறையை விட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள்,ஆண்களுடன் ஆண்கள் வெட்கத்திற்குரிய செயல்களை செய்து தாங்கள் நெறி தவறியதற்கான கூலியை தங்கள் உடலில் பெற்றுகொண்டனர்

28 கடவுளை அறிந்து கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாக தகாத செயல்களை செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார்.

ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் ஐ உங்கள் கர்தார்தான் படைத்து விட்டு பைபிளிலும் ஆவணப்படுத்தி இருக்கிறார், நீங்கள் இங்கே வந்து இல்லாத செய்தியை உங்கள் இஷ்டத்திற்கு ஐயப்பன் சரிதத்தில் திரித்து விட்டு கொண்டிருக்கிறீர்கள்.
உங்களால் இந்த பைபிள் வரிகளை மறுக்கமுடியுமா?
நாங்களும் இதற்கு மேல் செத்தபாம்பை அடிக்க விரும்பவில்லை.

//25 அவர்கள் கடவுளை பற்றிய உண்மைக்கு பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டார்கள், படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்கு பணி செய்தனர், படைத்தவரை மறந்தார்கள்,அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்,ஆமென்.//

இங்கே ‘அவர்கள்’ என்று குறித்திருப்பது யாரை? பெரும்பாலும் இயேசு போதனைகள் சொல்லும் போது இப்படி குறிப்பிடுவது பெரும்பாலும் யூதர்களையும், இயேசுவின் போதனைகளை கேட்காதவர்களையும். பைபிள் அருளப்பட்டது இஸ்ரேலின் இருக்கும் யூதர்களுக்கு.

ஆனால், இவர்களோ இயேசு தங்களை பற்றியும் சொல்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்து கொள்கின்றனர் 🙂

dear bro trichy,
you can find it in few temples, i m not sure about kapali but you can find it in few siva and vishnu temple also.but my question is what is the wrong?

Dear Sivanadiyan,

In Hinduism, no body can put hard or Sharp rules and order to Obey.

In my opinion there is no requiresment of such Sirpams in Templs, Is it going to help in Spiritula Upliftment?

this sirpas are not for spiritual upliftment, its a symbol thats all

// கோயிலினுள் நடக்க கூடாதே தவிர கோவிலில் சிற்பங்களாக இருப்பது தவறு என்ன? //

உள்ளே… வெளியே…நடந்துடுத்தே..?!

எப்படியோ திருச்சிக்காரனுடைய வேண்டுதல் நிறைவேறியதில் சந்தோஷம்…அதான் தளம் சூடுபிடிக்குதே…அவருக்கு தேவை மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் தான் பேசுகிறவனாகவும் தீர்வு சொல்பவனாகவும் இருக்கவேண்டும் என்பதே…வீட்டிலே இருக்கிறவங்க (இவர்..?!) பேச்சை கேட்டிருந்தா இப்படி வெளியே வந்து கஷ்டப்படவேண்டியதில்லே..!

அன்புக்குறிய‌ திரு. சில்சாம் அவ‌ர்க‌ளே,

//அவருக்கு தேவை மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் தான் பேசுகிறவனாகவும் தீர்வு சொல்பவனாகவும் இருக்கவேண்டும் என்பதே…//

நான் எந்த‌ தீர்வையும் புதிய‌தாக‌ த‌ர‌வில்லை. எட்டாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலான‌ இந்திய‌ ச‌முதாய‌த்தில் வாழ்ந்த‌ ம‌க்க‌ள் அனைவ‌ரின் அமைதியான‌ ச‌ம‌ர‌ச‌ சிந்த‌னைக‌ளையே நான் சொல்கிறேன். காந்தி, பார‌தி, தாகூர், விவேகான‌ந்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அக்ப‌ர், அசோக‌ர், புத்த‌ர், கிரிஷ்ண‌ர், வியாச‌ர், க‌பில‌ர்……சொல்லாத‌ எதையும் நான் புதியதாக‌ சொல்ல‌வில்லை.

//…வீட்டிலே இருக்கிறவங்க (இவர்..?!) பேச்சை கேட்டிருந்தா இப்படி வெளியே வந்து கஷ்டப்படவேண்டியதில்லே..!//இத‌ன் பொருள் என்ன‌?

சில்சாம்,
நான் நினைச்சேன், நீங்க சொல்லிடீங்க.

நடக்க கூடாது என்றுதான் சொன்னோம் அப்படி செய்பவர்களை நாம் ஆதரிக்கவில்லை,அது தவறு அப்படி செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் எம் போன்றோரின் கருத்து. ஆனால் சர்ச்சுகளில் கூடத்தான் நடக்கின்றன பாலியல் வன் கொடுமைகள் அவற்றை வெளியே தெரியாமல் இருட்டடிப்பு செய்கின்றனர் உங்கள் ஆட்கள்.சமீபத்தில் ஒரு கன்னியச்திரியே அங்கு நடக்கும் அவலங்களை சொந்த அனுபவங்களில் இருந்து எடுத்து கூறியுள்ளார்.
இதனை மதத்தின் தவறாக நீங்கள் ஏற்பீர்களா?

//…வீட்டிலே இருக்கிறவங்க (இவர்..?!) பேச்சை கேட்டிருந்தா இப்படி வெளியே வந்து கஷ்டப்படவேண்டியதில்லே..!//
ஏன் இப்படி? தனி நபரின் சொந்த விசயங்களில் தலையிடுகிறீர்கள்? தனி நபர் தாக்குதலில் இறங்கும் அளவு தரம் தாழ்ந்து போக காரணம் உங்களின் மதவெறியே.
உங்கள் வீட்டை, வீட்டினரை பற்றி யாரவது ஏதாவது எழுதுகிறார்களா? தேவையற்ற சண்டைக்கு வித்திட பார்கிறீர்கள்

//அவருக்கு தேவை மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் தான் பேசுகிறவனாகவும் தீர்வு சொல்பவனாகவும் இருக்கவேண்டும் என்பதே…//

நீங்கள் தான் பைபிளே உண்மை, அதிலுள்ள அபத்தங்களே வேதம், இன அழிப்பையும் இன்னும் பல அசிங்கங்களையும் அங்கீகரிக்கும் ஒருவரே மெய் தேவன் என்று சாதிக்க முடிவான தீர்வு சொல்பவராக இருக்க விரும்பி செயல்படுகிறீர்கள்.
யார் என்ன நினைத்தாலும் எப்படி செய்தாலும் உண்மையே வெல்லும், திருச்சி தன் பெயரை கூட வெளியிடாது தனக்கு தெரிந்த கருத்துகளை பதிவிடுகிறார்.
விருப்பமிருந்தால் நாகரிக முறையில் கருத்து தெரிவிக்கவேண்டியதுதானே.
ஏன் உங்களின் சுயரூபம் இவரின் எழுத்துக்களால் வெளிவருகிறதோ? உங்கள் தளத்தில் இங்குள்ளவர்களை திட்டி தீர்ப்பதும் இந்துக்களை கேவலப்படுத்துவதும் அம்பலமாகிற வைத்தெரிச்ச்சலில் இப்படி எழுதுகிறீர்களா? ஏன் தனி நபர் தாக்குதல்?
நீங்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து நாகரிகமாக செயல்படுங்கள்

///எப்படியோ திருச்சிக்காரனுடைய வேண்டுதல் நிறைவேறியதில் சந்தோஷம்…அதான் தளம் சூடுபிடிக்குதே////
ஏன் இதனால் உங்களுக்கு ஏதேனும் வருத்தமோ? தளம் சூடு பிடித்தால் அவருக்கு ஏதேனும் விருதா கொடுக்க போகிறார்கள்? உங்களுக்கு என்ன சார் உங்கள் கருத்தை நாகரிகமாக பதிவிடுங்களேன். உங்கள் தளத்தை இன்னும் சூடு பிடிக்கும் விதமாக நடத்துங்களேன் யார் தடுத்தார்கள்?
தளம் கருத்து பரிமாற்றத்திற்குதான் என்று நினைத்தேன், ஆனல் உங்களை போன்றோர் சுய விளம்பரத்திற்கும் சூடுபிடிக்கவுமே தளம் நடத்துகிறீர் போலும்

தமிழ் படிக்க தெரியாமல், மனதில் எப்படியாவது இவர்களை குற்றபடுத்தவேண்டும் என்று எழுதினால் இப்படிதான் தோன்றும் சிவனடியான்.
நன்றாக படியுங்கள் “விட்டுவிட்டார்” என்றே இருக்கிறது. அவர் அப்படி செய்பவர்களை தடுக்கவில்லை, அவ்வளவே.
சில வீடுகளில் பிள்ளைகள் கீழ்படியாமல் இருந்தால், ஒரு நிலையில் தண்ணி தெளித்து விட்டுவிடுவார்களே, அதைப்போல.
உமக்கு கண் சரியாக தெரியவில்லை போலும். நான்றாக பாரும், பாம்பு என்று நீர் அடித்துகொண்டிருப்பது வேறெதையோ.
கண் தெரியாமல்தான் யாரோ எழுதிய வரிகளை, நான் எழுதியதாக இன்று, திருச்சிக்காரனின் “அட கடவுளே” கட்டுரைக்கு, பின்னூட்டம் எழுதியுள்ளீர்.

சீனு,
வேத அறிவில்லாமல்(பொது அறிவுடன்) அரைகுறையாய் படித்து விட்டு, அவசரமாய் கருத்து கூறினால் இப்படிதான் இருக்கும். முதலாவதாக, அது இயேசு கூறிய வசனம் இல்லை. இரண்டாவதாக அது யூதருக்கு கூறியதில்லை. மேலும், அது விக்ரக ஆராதனை காரர்களை பற்றி கூறப்பட்டது. போதுமா?

திருச்சிக்காரன்,
நல்லவனை போல் இருப்பானாம் பரம சண்டாளன். இந்த வார்த்தைக்கு நீர் தானையா பொருத்தம். நான் வெளிப்படையாகவே சொல்கிறேன், நான் உம்முடன் நட்பு பாராட்டவில்லை. அது என் எழுத்துகளில் வெளிப்படையாகவே தெரியும். உம்மை போல் உள்ளொன்று வைத்து புறமொன்று பேச எனக்கு தேவையில்லை. இப்போதெல்லாம், உங்களை சகோதரன் என்றோ, நண்பர் என்றோ நான் அழைப்பதில்லை என்பதை கவனித்து இருப்பீர்.
உங்கள் தெய்வங்களின் செயல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம் என்ற காரணத்தால், மரியாளை அசிங்கமாக யாராவது பேசட்டும் என்று சாடைமாடையாக எடுத்து கொடுப்பதை எல்லோரும் அறிவர்.
மேலும், சமாதானதிற்க்காக பேசுபவன் யாரையும் புண்படுத்தவோ, நக்கலடிக்கவோ செய்யமாட்டான். “கோப்பி” என்ற வார்த்தையை நீர் எப்படி நக்கலாக உபயோக படுத்துகிறீர் என்று எல்லார்க்கும் தெரியும். முதலில் உம் கட்டுரைகளில் உள்ள எழுத்து பிழையை பாறையா, எட்டாங்கிளாஸ் மாணவனை விட மோசமாகவேதான் எழுதிறீர் என்று அனைவர்க்கும் தெரியும்.
உண்மையில் ஐயப்பன் என்றும், சிவன் என்றும், விஷ்ணு என்றும் எந்த ஒரு தெய்வமும் இருந்ததாக நாங்கள் யாரும் நம்பவே இல்லை. ஆனால், உங்கள் புராணங்கள் (அது எத்தனை version ஆக இருந்தாலும்) அத்தனையும் அசிங்கமாகவே இருக்கிறது. அசிங்கத்தை நாங்கள் அசிங்கம் என்றுதான் சொல்லமுடியும். நீங்கள் வேண்டுமானால் அசிங்கத்தை சந்தனம் என்று பூசிக்கொள்ளுங்கள். எங்கள் பரிமள தைலத்தை நீங்கள் பூசிக்கொள்ள நீங்கள் தயாராய் இருப்பதால், உங்கள் அசிங்கத்தை நாங்கள் பூசிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது அபத்தம்.

//வேத அறிவில்லாமல்(பொது அறிவுடன்) அரைகுறையாய் படித்து விட்டு, அவசரமாய் கருத்து கூறினால் இப்படிதான் இருக்கும். முதலாவதாக, அது இயேசு கூறிய வசனம் இல்லை. இரண்டாவதாக அது யூதருக்கு கூறியதில்லை. மேலும், அது விக்ரக ஆராதனை காரர்களை பற்றி கூறப்பட்டது. போதுமா?//

எனக்கு பைபிள் அறிவு சுத்தமாக இல்லை. போதுமா? இங்கு பிரச்சினை கருத்தை பற்றியது. சரி! அதை இயேசு சொல்லவில்லை. விடுங்கள். இயேசுவுக்கு இஸ்ரேலை தாண்டி (ஆசியா என்ற) கண்டம் இருக்கு, அங்குள்ள மக்கள் விகிரக ஆராதனையில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியுமா?

அப்புறம் பைபிளில் அடிக்கடி ‘இஸ்ரவேலர்களே கேளுங்கள்…” அப்படீன்னு சொல்றது யாரு?

//எனக்கு பைபிள் அறிவு சுத்தமாக இல்லை. போதுமா? இங்கு பிரச்சினை கருத்தை பற்றியது. சரி! அதை இயேசு சொல்லவில்லை. விடுங்கள். இயேசுவுக்கு இஸ்ரேலை தாண்டி (ஆசியா என்ற) கண்டம் இருக்கு, அங்குள்ள மக்கள் விகிரக ஆராதனையில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியுமா?

அப்புறம் பைபிளில் அடிக்கடி ‘இஸ்ரவேலர்களே கேளுங்கள்…” அப்படீன்னு சொல்றது யாரு?//

Yes, He knows. Bible talks about India too.

//Yes, He knows. Bible talks about India too.//

:)))))))))))))))))))))))

//உண்மையில் ஐயப்பன் என்றும், சிவன் என்றும், விஷ்ணு என்றும் எந்த ஒரு தெய்வமும் இருந்ததாக நாங்கள் யாரும் நம்பவே இல்லை. ஆனால், உங்கள் புராணங்கள் (அது எத்தனை version ஆக இருந்தாலும்) அத்தனையும் அசிங்கமாகவே இருக்கிறது. அசிங்கத்தை நாங்கள் அசிங்கம் என்றுதான் சொல்லமுடியும். நீங்கள் வேண்டுமானால் அசிங்கத்தை சந்தனம் என்று பூசிக்கொள்ளுங்கள். எங்கள் பரிமள தைலத்தை நீங்கள் பூசிக்கொள்ள நீங்கள் தயாராய் இருப்பதால், உங்கள் அசிங்கத்தை நாங்கள் பூசிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது அபத்தம்.//

அப்ப உங்க, so called, பிதா மட்டும் இருப்பதாக எங்களை ‘ஒப்புக்’கொள்ளுமாறு கூறுவதை என்னவென்று கூறுவது? அசிங்கம் என்று சொன்னதில் இருந்து பிறந்தவர் தான் நீங்களும்/நாங்களும் மற்றும் எல்லோரும். உங்களுக்கு அது அசிங்கமாக தெரிந்தால் கோளாறு உங்களிடம் தான். ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு மாறடிக்கும் கும்பல் இப்படித்தான் பேசும், பேச வேண்டும். பயந்தா ‘தொழில்’ பன்ன முடியுமா? 🙂

பழைய நண்பர்களெல்லாம் ஓடிப்போய்விட்டார்கள் போலும், இப்போதைக்கு சிவனடியான் மட்டுமே கைகொடுக்கிறார்; தன் நிழலே தன்னை பகைக்குமா என்ன‌..? நாங்கள் நவராத்திரியும் பார்த்தோம்,தசாவதாரமும் பார்த்தோம்…இதையும் பாக்குறோம்..OK…Super..!

//ஒருவருக்கு இறை நிலை கிட்டும் என்பதற்காகவே முன் கோபுரங்களில் அந்த சிற்பங்கள் உள்ளன?//
சிவனடியான்,
இதனால்தான், கோபுர தரிசனம் கோடி புண்ணியம்ன்னு சொன்னாங்களா?

//புதிய ஏற்பாடு உரோமையர் அதிகாரம் 1
25 அவர்கள் கடவுளை பற்றிய உண்மைக்கு பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டார்கள், படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்கு பணி செய்தனர், படைத்தவரை மறந்தார்கள்,அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்,ஆமென்.

26 ஆகையால் கட்டுகடங்காத இழிவான பாலுணர்வு கொள்ள அவர்களை விட்டு விட்டார், அதன் விளைவாக இயல்பான இன்பமுறைக்கு பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டனர்,

27 அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெரும் இயல்பான முறையை விட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள்,ஆண்களுடன் ஆண்கள் வெட்கத்திற்குரிய செயல்களை செய்து தாங்கள் நெறி தவறியதற்கான கூலியை தங்கள் உடலில் பெற்றுகொண்டனர்

28 கடவுளை அறிந்து கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாக தகாத செயல்களை செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார்.

ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் ஐ உங்கள் கர்தார்தான் படைத்து விட்டு பைபிளிலும் ஆவணப்படுத்தி இருக்கிறார், நீங்கள் இங்கே வந்து இல்லாத செய்தியை உங்கள் இஷ்டத்திற்கு ஐயப்பன் சரிதத்தில் திரித்து விட்டு கொண்டிருக்கிறீர்கள்.
உங்களால் இந்த பைபிள் வரிகளை மறுக்கமுடியுமா?
நாங்களும் இதற்கு மேல் செத்தபாம்பை அடிக்க விரும்பவில்லை.
//

தமிழ் படிக்க தெரியாமல், மனதில் எப்படியாவது இவர்களை குற்றபடுத்தவேண்டும் என்று எழுதினால் இப்படிதான் தோன்றும் சிவனடியான்.
நன்றாக படியுங்கள் “விட்டுவிட்டார்” என்றே இருக்கிறது. அவர் அப்படி செய்பவர்களை தடுக்கவில்லை, அவ்வளவே.
சில வீடுகளில் பிள்ளைகள் கீழ்படியாமல் இருந்தால், ஒரு நிலையில் தண்ணி தெளித்து விட்டுவிடுவார்களே, அதைப்போல.
உமக்கு கண் சரியாக தெரியவில்லை போலும். நான்றாக பாரும், பாம்பு என்று நீர் அடித்துகொண்டிருப்பது வேறெதையோ.
கண் தெரியாமல்தான் யாரோ எழுதிய வரிகளை, நான் எழுதியதாக இன்று, திருச்சிக்காரனின் “அட கடவுளே” கட்டுரைக்கு, பின்னூட்டம் எழுதியுள்ளீர்.

////25 அவர்கள் கடவுளை பற்றிய உண்மைக்கு பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டார்கள், படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்கு பணி செய்தனர், படைத்தவரை மறந்தார்கள்,அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்,ஆமென்.//

இங்கே ‘அவர்கள்’ என்று குறித்திருப்பது யாரை? பெரும்பாலும் இயேசு போதனைகள் சொல்லும் போது இப்படி குறிப்பிடுவது பெரும்பாலும் யூதர்களையும், இயேசுவின் போதனைகளை கேட்காதவர்களையும். பைபிள் அருளப்பட்டது இஸ்ரேலின் இருக்கும் யூதர்களுக்கு.

ஆனால், இவர்களோ இயேசு தங்களை பற்றியும் சொல்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்து கொள்கின்றனர்
//

சீனு,
வேத அறிவில்லாமல்(பொது அறிவுடன்) அரைகுறையாய் படித்து விட்டு, அவசரமாய் கருத்து கூறினால் இப்படிதான் இருக்கும். முதலாவதாக, அது இயேசு கூறிய வசனம் இல்லை. இரண்டாவதாக அது யூதருக்கு கூறியதில்லை. மேலும், அது விக்ரக ஆராதனை காரர்களை பற்றி கூறப்பட்டது. போதுமா?

////தமிழ் படிக்க தெரியாமல், மனதில் எப்படியாவது இவர்களை குற்றபடுத்தவேண்டும் என்று எழுதினால் இப்படிதான் தோன்றும் சிவனடியான்.
நன்றாக படியுங்கள் “விட்டுவிட்டார்” என்றே இருக்கிறது. அவர் அப்படி செய்பவர்களை தடுக்கவில்லை, அவ்வளவே.
சில வீடுகளில் பிள்ளைகள் கீழ்படியாமல் இருந்தால், ஒரு நிலையில் தண்ணி தெளித்து விட்டுவிடுவார்களே, அதைப்போல.
உமக்கு கண் சரியாக தெரியவில்லை போலும். நான்றாக பாரும், பாம்பு என்று நீர் அடித்துகொண்டிருப்பது வேறெதையோ.
கண் தெரியாமல்தான் யாரோ எழுதிய வரிகளை, நான் எழுதியதாக இன்று, திருச்சிக்காரனின் “அட கடவுளே” கட்டுரைக்கு, பின்னூட்டம் எழுதியுள்ளீர்./////

தமிழ் யாருக்கு படிக்க தெரியவில்லை கிணற்றில் விழுபவனை தடுக்காமல் விட்டு விட்டால் என்ன? அல்லது கிணற்றில் விழ தூண்டினால்தான் என்ன? ஆக மொத்தம் குற்றத்தை வாழ வைத்த குற்றத்திற்கு சப்போர்ட் பண்ணிய தெய்வம் தானே ஐயா அவர்.
வார்த்தை ஜாலத்தால் தப்பிக்க பார்க்காதீர்.அதற்கு ஒரு காரணம் கண்டு பிடித்து அதனை ஆதரித்து வளர்த்து விட பெருமை திரு கர்த்தரையே சாரும்

நம் வீட்டு பிள்ளைகள் கீழ்படியாவிட்டால் அவர்கள் கேவலமான செயல் செய்யும் போது அப்படியே விட்டு விடுவோமா? அப்ப்டிவிடுபவன் தந்தியாகவே இருக்கமுடியாத போது அப்படி போகும் படிக்கு விடும் ஒருவர் எப்படி சார் கடவுள் ஆவார்? இது உங்கள் வேதத்தில் உள்ளது தானே? அந்த கர்த்தர் தன்னை பணியாதவருக்கு தரும் தண்டனை தான் இது என்பது போல உள்ளது உங்கள் வாதம்.ஐயோ நல்ல கடவுளுங்க அவரு.
எனக்கு கண் தெரிந்தே எழுதுகிறேன் நான் யாரோ எங்கோ எழுதியதற்காக எழுதவில்லை இவ்வளவு மோசமான வீக்கான நிலையில் உள்ள உங்கள் கிரித்தவத்தைதான் இதற்கு மேலும் செத்த பாம்பை அடிக்க முடியாது என்றேன்

/////அது இயல்பு ஆனால் அதனை கடந்து துறந்த அடுத்த நிலையிலேயே ஒருவருக்கு இறை நிலை கிட்டும் என்பதற்காகவே முன் கோபுரங்களில் அந்த சிற்பங்கள் உள்ளன/////

//ஒருவருக்கு இறை நிலை கிட்டும் என்பதற்காகவே முன் கோபுரங்களில் அந்த சிற்பங்கள் உள்ளன?//
சிவனடியான்,
இதனால்தான், கோபுர தரிசனம் கோடி புண்ணியம்ன்னு சொன்னாங்களா?///////

ஏன் இப்படி தில்லாலங்கடி வேலை ? மேலே நன் எழுதியதைமுழுவதுமாக படித்து பொருள் கொள்ளவும்.

மேலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது கோயிலுக்கு வர முடியாதவர்கள் உயர்ந்த கோபுரத்தை தொலைவிலிருந்து பார்த்து வணங்கி கொள்வதற்காக,அப்படி பக்தியுடன் வணங்குபவர்க்கு கோபுரத்தின் எந்த சிற்பமும் தெரியாது

அன்புக்குரிய‌ சிவ‌ன‌டியான் அவ‌ர்க‌ளே,

பெரும்பாலன‌ இந்துக் கோவில்க‌ளில் புண‌ர்ச்சி சிற்ப‌ங்கள் இல்லை. அந்த‌க் கால‌த்தில் சில சிற்பிக‌ள் த‌ங்க‌ள் கலை திற‌மையை வெளிப் ப‌டுத்தும் வ‌ண்ண‌ம் சில‌ ஆடைய‌ற்ற‌ சிற்ப‌ங்க‌ளை வ‌டித்திருக்கிரார்க‌ள். நீங்க‌ள் கோவில‌களுக்கு சென்று பார்க்க‌லாம். திருவ‌ர‌ங்க‌ம் கோவில் கோபுர‌த்தைப் பாருங்க‌ள். ஆசியாவில் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌ கோவில் கோபுர‌ங்க‌ளில் மிக‌ உய‌ர‌மான‌து என சொல்ல‌ப் ப‌ட்ட‌து. மேலும் இப்போது நீங்க‌ள் ஒரு கோவில் க‌ட்டினால் அதில் புண‌ர்ச்சி சிற‌ப்ங்க‌ளை வைக்க‌ப் போகிறீர்க‌ளா? இல்லையே!இப்போது புதிய‌ கோவில்க‌ள் பல‌ எழும்பி வ‌ருகின்ற‌ன‌வே! சென்னை அண்ணா ந‌க‌ருக்கு வாருங்க‌ள் , க‌ட‌ந்த‌ முப்ப‌து வ‌ருட‌த்திலே எத்த‌னை புதிய‌ கோவில்க‌ள், அவ‌ற்றில் ம‌க்க‌ள் கூட்ட‌த்திற்க்கும் குறைவில்லை.

இந்த புண‌ர்ச்சி சிற்ப‌ங்க‌ள் காண‌ப் ப‌டுவ‌து மிக‌ச் சில‌ கோவில்க‌ளில் தான். என‌வே இவை எல்லாம் பிற‌ ம‌த‌ங்க‌ளை எப்ப‌டியாவ‌து இல்லாம‌ல் செய்து த‌ன் ம‌தத‌தை ம‌ட்டுமே இந்த‌ உல‌கில் எல்லோரும் பின்ப‌ற்றும் ப‌டி செய்ய வேண்டும் என்கிற‌ உண‌ர்வால் பிற‌ன் க‌ண்ணில் உள்ள‌ துரும்பைப் பெரிதாக‌க் காட்டும் முய‌ற்சியே!

அனால் உம்மை போன்றோருக்கு அந்த சிற்பம் மட்டும்தான் தெரியும்.
உண்மையான பக்தனுக்கோ அந்த கோபுரத்தை கடந்து நிற்கும் இறைவனே தெரிவான்
யார் யாருக்கு என்ன இலக்கோ அதுதானே தெரியும் பார்வையில் ?
பலாவில் மேலே உள்ள முள் மட்டுமே உங்களுக்கு தெரிகிறது,ஆனால் உள்ளே உள்ள சுவையான சுளைகளே எமக்கு தெரிகிறது

//உங்களுக்கு அது அசிங்கமாக தெரிந்தால் கோளாறு உங்களிடம் தான். ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு மாறடிக்கும் கும்பல் இப்படித்தான் பேசும், பேச வேண்டும். பயந்தா ‘தொழில்’ பன்ன முடியுமா?
//

ஐயோ சீனு,
உங்க வாதத்தை பார்த்தால் பாவமாய் இருக்கு. பைபிள் எதை அசிங்கம்ன்னு சொல்லுதுன்னு நினைக்கறீங்க? உடலுரவையா? கிடையவே கிடையாது. தப்பான உடலுறவையே அசிங்கம்ன்னு கூறுது.
முறையான உடலுறவை எங்கேயும் தப்புன்னு சொல்லலை. போதுமா?
ஐயப்பன் பிறப்பில் நடந்தது முறையானது என்று நம்பினால் கோளாறு உங்ககிட்டதான்னு சொல்லனுமா என்ன…
விஷயம் தெரியாம பேசினா இப்படிதான் நண்பா.

அதுசரி! நீங்கள்ளாம் கல்யாணம் கட்டிகிட்டா ஒன்னும் குத்தமில்ல. ஆனா, இயேசு கல்யாணம் கட்டிகிட்டாருன்னு சொன்னா உடனே தடை பன்னுவீங்களே… 🙂

//ஐயப்பன் பிறப்பில் நடந்தது முறையானது என்று நம்பினால் கோளாறு உங்ககிட்டதான்னு சொல்லனுமா என்ன…//

பூனை கண்ண மூடிக்கிட்டு உலகம் இருட்டுனு சொல்லுமாம். அது மாதிரி பேசாதீங்க. இந்த பதிவே அத பத்தி தான். ஆனா, இவ்வளவு வாக்குவாதங்களுக்கு பிறகும் மறுபடியும் மொதல்ல இருந்து வர்றீங்க பத்தீங்களா…அங்க தான் உங்க கடம உணர்வு புல்லரிக்குது. ங்கொய்யால…கொடுத்த காசுக்கு மேலயே கூவுறான்னு வடிவேலு சொல்றது நியாபகத்துக்கு வந்து தொலைக்குது.

//ங்கொய்யால…//

Thank you Seenu.
And Thank you Thiruchchikkaaran for Publishing this.

He quoted that from the film dialog, probably s the film dialog are more catchy.

I dont think that he intend to direct that word against any one.

அருமை நண்பர் திருச்சிக்காரனுக்கு,
தாங்கள் ஒரு கிறித்தவராகவோ அல்லது யூதராகவோ அல்லது வேதவிற்பன்னராகவோ இல்லாத நிலையிலேயே தமிழர்களால் “பரிசுத்த வேதாகமம்” என்றழைக்கப்படும் பைபிள் எனும் புத்தகத்தைக் குறித்து விமர்சனம் செய்யும் போது அத்தனை கிறித்தவர்களும் எழும்பி வந்து திருச்சிக்காரன் என்ற தனி நபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை;ஆனால் குரானைக் குறித்து இதுபோன்று விமர்சிக்க உங்களுக்கு தைரியமிருப்பது போலத் தெரியவில்லை;கிறித்தவத்தைவிட முகமதியர்களே உலக‌த்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில் நீங்களாகவே விவாதிக்க எடுத்துக்கொண்ட ஐயப்பனைக் குறித்த பிரச்சினையில் முன்னாள் இந்துக்கள் மற்றும் சிந்திப்பவர்கள் என்ற முறையில் நாங்கள் கேள்விபட்ட தகவல்களின் அடிப்படையில் எங்களுடைய கருத்தை முன்வைத்தால் அதில் சற்றும் சம்பந்தமில்லாமல் கிறித்தவம் சம்பந்தமான விவாதத்தை ஊக்குவிப்பது என்ன நியாயம்? நீங்கள் கிறித்தவம் சம்பந்தமான வரம்புமீறிய விமர்சனங்களை செய்யும்போது நாங்கள் பொறுமை காக்கவில்லையா? அதில் மாற்று மார்க்க நம்பிக்கைகளைக் குறித்து எழுதி உங்களைப் புண்படுத்தினோமா? அப்படியானால் இந்து மார்க்கத்தைக் குறித்த விவாதத்தில் எங்கள் கருத்துக்களை வெளியிடாத வண்ணம் எங்களை அச்சுறுத்தும் வண்ணமாக கிறித்தவத்தை இழிவுபடுத்தும் விதமாக எழுதும் சீனு போன்றவர்களை ஏன் ஊக்குவிக்கிறீர்கள்? நீங்கள் நல்ல மனிதராக இருந்தால் என்ன செய்யவேண்டும்,
“நண்பர் சீனு அவர்களே, இது ஐயப்பனின் பிறப்பைக் குறித்த விவாதம், இதில் ஐயப்பனைக் குறித்து கூறப்படும் கதைகளை மட்டுமே விவாதிக்கவும் ” என்று அவருக்கு புத்தி சொல்ல வேண்டுமல்லவா?

உங்கள் மார்க்கத்தை குறித்து பேசினால் எழுதினால் உண்டாகும் அதே உணர்வுதான் எங்களுக்கும் உண்டாகும் என்பதை அறியாத நீங்கள் எப்படி மத நல்லிணக்கத்தை உருவாக்க இயலும்?

அசோக்குமார் கணேசன் போன்று புரட்சிகரமாக சிந்திக்கும் இளைஞர்களை அச்சுறுத்தி தனிமைப்படுத்துவதால் நீங்கள் சாதிக்கப்போவதென்ன?

பகுத்தறிவைக் குறித்து பெரிதாகப் பேசும் நீங்கள் இந்து மக்களின் மூடநம்பிக்கைகளையும் அறியாமையையும் குறித்து கவலை கொள்ளாமல் அதில் இன்னும் பெட்ரோலை ஊற்றுவது போல எழுதுவது தான் நீங்கள் செய்யும் சமுதாய தொண்டா?

பெரியார் “பகுத்தறிவு பகலவன்” என்று அழைக்கப்படக் காரணமென்ன, அவர் அனைத்து மதநம்பிக்கைகளையும் எதிர்த்து சமுதாய மாற்றத்துக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டார்; பாரதியும் அவ்வாறே; விவேகானந்தரும் அவ்வாறே; இன்னபிற முன்னோர்களும் இந்தியாவைக் கட்டியெழுப்பினார்கள்.

ஆனால் தற்கால பெரியவர்களோ மக்களைக் கூறுபோட்டே பெரிய ஆளாகிறார்கள் என்பது வெளிப்படையானது; அதில் பிரதானமானது மததுவேஷமாகும்; இதனை இந்தியாவில் முன்னின்று நடத்திக்கொண்டிருப்பது இந்துத்வா இயக்கங்களே ஆகும்.

கிறித்தவர்களோ முகமதியர்களோ நினைத்திருந்தால் இந்தியாவிலுள்ள அனைத்து வேதங்களையும் கொளுத்தி அத்தனை ஆலயங்களையும் இடித்திருப்பார்கள்; அதற்கு உதாரணமாக எருசலேமின் அல் அக்ஸா மசூதி விளங்குகிறது; அது ஒரு காலத்தில் யூதர்களின் புனித கோவிலாக இந்தியாவிலுள்ள பொற்கோவில் போல விளங்கியது; அது எத்தனைமுறை படையெடுப்புகளால் கொளுத்தப்பட்டும் கொள்ளையடிக்கப்படும் நாசமாக்கப்பட்டது தெரியுமா? அதுபோலவே இங்கும் பாப்ரி மஸ்ஜித் இந்து வெறியர்களால் இடிக்கப்பட்டதும் அதன் பிறகே இந்தியாவில் மதத் தீவிரவாதம் பெருகியதும் அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு விவரங்களையும் அறிந்தும் அறியாதவரைப் போல காற்றில் சிலம்பமடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லுகிறேன். ஐயப்பனைக் குறித்த அனைத்து காரியங்களையும் நடுநிலையுடன் விவாதிக்க மனோதைரியமில்லாவிட்டால் இந்த கட்டுரையை மூடிவிடுங்கள் என்கிறேன். சம்பந்தமில்லாமல் கிறித்தவ நம்பிக்கைகளை அவதூறு செய்யும் வரிகளை உங்கள் கட்டுரையிலிருந்தும் பின்னூட்டப் பகுதியிலிருந்து நீக்கிவிட்டு ஆரோக்கியமான விவாதத்துக்கு உதவிசெய்யுங்கள்.

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

அன்புக்குரிய திரு. சில்சாம் அவர்களே,

கோட்பாடுகளைப் பற்றித்தான் விமிரிசிக்கப் படுகிறதே தவிர, கிறிஸ்துவர்களால் தெய்வமாக் வணங்கப் படும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி யாரும் இகழவில்லை என நினைக்கிறேன். மேரிமாதவைப் பற்றி யும் யாரும் ஒன்றும் இகழவில்லை. அப்படி ஏதாவது உங்களுக்கு தோன்றினால் அந்த வாசகங்களைக் குறிப்பிட்டு எழுதுங்கள். அவற்றை ஆராய்ந்து எடுத்து விடுவோம்.

உங்களுடைய தளத்திலே இந்துக்களின் முக்கியக் கடவுலான் சிவ னை வெறி நாய் என எழுதி உள்ளதை பதிவு இட்டு இருக்கிறீர்கள். சிவன் பெண்ணான மோகினியோடு உறவு கொண்டாதாக உள்ளதை ஆணுக்கு ஆண் உறவு என்று பொய்ப் பிரச்சாரம் செய்வதையும் பதிவு இட்டு உள்ளீர்கள்.

பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ, அதையே நீ பிறனுக்கு செய் என்று இயேசு கிறிஸ்து சொன்னது உங்களுக்கு தெரியுமே. அப்பா நீங்கள் பிறரின் தெய்வங்களை இகழ அனுமதிப்பதால், அப்படியே உங்களுக்கு செய்யட்டும் என விரும்புகிறீர்களா?

//அப்படியானால் இந்து மார்க்கத்தைக் குறித்த விவாதத்தில் எங்கள் கருத்துக்களை வெளியிடாத வண்ணம் எங்களை அச்சுறுத்தும் வண்ணமாக கிறித்தவத்தை இழிவுபடுத்தும் விதமாக எழுதும் சீனு போன்றவர்களை ஏன் ஊக்குவிக்கிறீர்கள்?//

அப்டியே ஷாக்காயிட்டேன். உங்களை அச்சுருத்தினேனா? காமெடி பான்னாதீங்க பாஸு. :)))

// சம்பந்தமில்லாமல் கிறித்தவ நம்பிக்கைகளை அவதூறு செய்யும் வரிகளை உங்கள் கட்டுரையிலிருந்தும் பின்னூட்டப் பகுதியிலிருந்து நீக்கிவிட்டு ஆரோக்கியமான விவாதத்துக்கு உதவிசெய்யுங்கள்.//

சம்பந்தம் இல்லாமலா? எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…

அன்புக்குரிய திரு. சில்சாம் அவர்களே,

கிறிஸ்துவத்தைப் பற்றி நான் வரம்பு மீறிய பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை. இயேசு கிறிஸ்துவின் சிறப்பான கருத்துக்களை நான் சுட்டிக் காட்டி வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளுக்கு மாறாக வரம்பு மீறி எழுதியது
யார். உங்கள் நண்பர்களை கேளுங்கள், கணவன் மேலே கவிச்ச வாடை அடிக்குது, அதனால் டைவோர்சே செய்யாம இருக்க முடியாது என்பது போல எழுதியது யார்?

இயேசு தொழ தக்கவர் என எழுதி இருக்கிறோமே அதனால் வரம்பு மீறியதாக எண்ணுகிறீர்களா? இயேசு தொழ தக்கவர் என்று எழுதியதற்காக நீங்கள் எனக்கு தண்டனை கொடுக்க விரும்பினால் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயார்.

நான் யூதன் அல்ல, ஆனால் நான் கிறிஸ்துவன் அல்ல என சொல் முடியுமா என்பது ஐயமே. இரு நல்ல இந்து ஒரு நல்ல கிரிச்துவனுமாவான் என்று ஒரு மிகப் பெரிய அறி ஞர் சொல்லி இருக்கிறார். நான் கிறிஸ்துவனா இல்லையாஎன தீர்மானிக்க உங்களால் கூடுமா எனத் தெரியவில்லை.

பைபிளில் உள்ள நல்ல கருத்துக்களை சுட்டிக் காட்டி பதிவிடுகிறோம். பாராட்டுகிறோம். ஆனால் அதே நூலில் பிற மதங்களை சகிப்புத் தன்மையோடு நோக்கும் மனப் பாங்கை அழிக்கும் கருத்துக்கள் உள்ளன. இஸ்ரேலியர்களின் இன அழிப்பை நியாயப் படுத்தி ஒரு அமெரிக்க கனவான் அழகிய உடை அணிந்து, யார் ஜெயிக்கிtறார்களோ அவர்களுக்கு தான் நிலம் சொந்தம் என்பதுதான் சரி என்று சொல்வதை தமிழாக்கம் செய்து விஜய் டி.வி யில் போடுகின்றனர்!

சர்ச்சுக்கு செல்லும் கிரிச்துவனிடம் எந்த ஒரு இந்துவாவது, இயேசு பொய் தேவன் என சொல்கிறார்களா?

ஒரு முஸ்லீமோ, சீக்கியனோ, இந்துவோ பார்சீயோ .. தெருவில் செல்பவர்களை அணுகி நீ பாவி என இகழ்வதில்லை.

எனவே வரம்பு மீறுவது யார்? நீங்களா நானா?

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப் பட்டது தவறு என்பதை விளக்கி பல கட்டுரைகள் வெளி இட்டு இருக்கிறோம்.

அசோக்கு,

சிவபெருமானைத் ’தெரு நாய்’ என்றெல்லாம் உன் அன்பு சகோதரர் சில்சாம் தளத்தில் திட்டியிருக்கிறாய். அதே சிவபெருமான் தான் தவம் செய்யும் போது மனதில் காமத்தை உண்டாக்க முனைந்த மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.

மன்மதன் அல்லது காமதேவன் அம்பு விட்டால் ….. தெருவெல்லாம் ஒழுகிக் கொண்டு போகும் சென்னை மெட்ரோ வாட்டர் லாரி கணக்கில் சேர்ந்து விடுர்கள் (இப்படி இருக்க மோகினி மூர்த்தி உன் கண்முன் வந்தால் என்ன ஆகும் என்று சொல்லவும் வேண்டுமா?). அப்படிப்பட்ட மன்மதனின் அம்பால் மனக் கிலேசம் அடையாமல் அவனையும் எரித்தார் என்றால் பார்த்துக் கொள்.

அசிங்கத்தைப் பற்றி பேசுகிறாய். ஒன்றுமறியாத சிசுக்களைக் கொலை செய்யச் சொல்லும், போரிலே ஜெயிக்கப்பட்ட கன்னிப் பெண்களை விபச்சாரத்திற்கும் அடிமைக்கும் எடுத்துச் சொல்லச் செய்யும், உன் கடவுளை விட அசிங்கம் செப்டிக் டாங்கிலும் விபச்சார விடுதியிலும் கூட கிடைக்காது.

// நல்லவனை போல் இருப்பானாம் பரம சண்டாளன். //

நீர் மூடி மறைக்க நினைத்தாலும் மதம் மாறியவர்கள் வெறி பிடித்தவர்களே என்பது வெளியே வருகிறது பாரும்!

செக்ஸ் கணவன் மனைவி உறவிற்குள் தப்பில்லை, அசிங்கமில்லை. ஆனால் கடவுள் என்று சொல்லப்படும் ஒருவர் தான் கட்டின மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணின் அழகில் மயங்கி அவளை விடாமல் துரத்தி உறவு கொண்ட விசயம் தான் நெருடுகிறது. சாதாரண மனிதனும் அந்த நிலையில் தானே உள்ளான். சாதாரண மனிதனின் இந்த செய்கையே (பெண்ணின் சம்மதத்துடன் என்றால்) கள்ள உறவு என்றும்,(பெண்ணின் சம்மதம் இல்லையென்றால் ) பாலியல் பலாத்காரம் எனவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் கடவுள் என்று சொல்லப்படுபவர் செய்தால் அது சரியா? அதற்கு என்ன பெயர்? கடவுள் என்பவர் பரிசுத்தக் குலைச்சலோடு இருக்கலாமா?பின்னர் கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

அன்புக்குரிய திரு. எபி,

சிவன் யாரையும் விரட்டியதாகவும் இல்லை, பலாத்காரம் செய்ததாகவும் இல்லை.

மிக வலிமை வாய்ந்த ஒரு கொடிய அரக்கனை வீழ்த்த சிவன் , விஸ்ணு இருவரின் சக்தியும் இணைந்து உள்ள ஒருவரால் தான் முடியும் என்று ஆனதால் அதை ஒரு கடமையாக செய்தனர். ஆசைப் பட்டு செய்யவில்லை.

இதைப் பலரும் பல வகையில் எழுதி வைத்தனர். மகாத்மா காந்தி வயதான காலத்திலேயே இரண்டு சிறுமிகளோடு கைத்தாங்கலாக சென்றார். அதை பலரும் புரிந்து கொண்டனர். சிலர் கொச்சைப் படுத்துகின்றனர்.

அன்புக்குரிய திரு. எபி,

கடவுளின் பரி சுத்தத்தில் உங்களுக்கு உள்ள அக்கறையை பாராட்டுகிறேன். பைபிளில் கடவுள் ஒரு இனத்தை வாழ வைக்க பல இனங்களை அளித்து, அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க சொன்னதாக, உடன்படிக்கை செய்யாதே, இறக்கம் காட்டாமல் வெட்டிப் போடு என சொன்னதாக உள்ளதே, அதை அடிப்படையாக வைத்து, இனரைக்கும் மத்தியக் கிழக்கில் பாலஸ்தீனியர் விரட்டப் படுகின்றன. அவர்கள் நிலம் பிடுங்கப் பட்டு விட்டது. இந்தப் பரிசுத்ததினால் உலகுக்கு நல்லதா? தன மதம் மட்டுமே இவ்வுலகில் எல்லோராலும் பினபர்ரச் செய்யப் பட வேண்டும் என்கிற தை, பிற மதங்கள் இல்லாமல் போக வேண்டும் என்கிற வெறி உணர்ச்சி யை தூண்டுகிற பரிசுத்தம் உலக மக்களுக்கு நல்லதா? சிவன் மக்களைக் கொள்ளும் அரக்கனை வெல்லும் வலிமை உள்ள பிள்ளையை பெற மோகினியோடு இணைந்ததால் உலகுக்கு நல்லதா கெட்டதா

இந்து மதத்தின் சார்பாக எழுதும் அன்புக்குரிய நண்பர்கள் அனைவருக்கும் நம் வேண்டுகோள் என்னவென்றால், தயவு செய்து பிற மத தெய்வங்களை விமர்சிக்க வேண்டாம். விவேகானந்தர், சங்கரர், கிருஷ்ணர் , ரிக் வேத கர்த்தாக்கள் பாதையில் இருந்து விலக வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சில விஷயங்கள் அவர்களுக்கு புரியவைக்கவேண்டுமென்றால் அவர்களின் மதத்தை தொட்டு பேசவேண்டியுள்ளது. அவர்கள் மதம் மட்டுமே ஒழுக்கமுடையது என்றும் அடுத்தவர் மதம் ஒழுக்ககேடானது என்ற வாதம் மட்டும் சரியா?

ஆனால் அவர்களின் தெய்வங்களை இகழ வேண்டியதில்லை, அது இந்தியப் பண்பாடு இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அவரகளில் சிலர் விரும்பவுதும் அதே. எல்லோரும் மத வெறியர் என்று ஆக்குவதுதான் அவர்களின் நோக்கம். கோட்பாட்டின் அடிப்படையில் விவாதிப்பதே நமது பண்பாடு. கோட்ப்பாட்டில் உள்ள ஆபத்தை சுட்டிக் காட்டலாம்.

நான் எங்கேயும் அடுத்தவர் தெய்வங்களை இகழ்ந்ததாக எனக்கு நினைவில்லை.

சீனு அவர்களே, நான் உங்களைக் குறிப்பிட்டு சொல்லவில்லை. அது ஒரு பொது வேண்டுகோள்.

சபரிமலை சாஸ்த்தாவின் வரலாறு தெரியாதவர்கள் சில தவறான வழியில் மதச்சுதந்திரத்தை சீரலிக்கினம் நாம்தான் விழிப்பாக இருக்கனும்.

அன்பு நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கு வருகிறேன்.

அய்யப்ப தத்துவம் பற்றி காஞ்சி மகா ஸ்வாமிகள் அற்புதமாக விளக்கம் அளித்துள்ளார்.

அந்த தெய்வத்தின் குரலைக் கேட்டால் “அபத்தமான கருத்தாளர்களுக்கு” தெளிவு பிறக்கலாம்.

காக்கும் கடவுள் விஷ்ணு. அவரிடம் கருணை நிரம்பி இருக்கிறது. அதே அழிக்கும் கடவுள்
சிவன். அவரிடம் வல்லமை நிரம்பி இருக்கிறது. சிறுமை கண்டு பொங்க வல்லமை தேவைப் படுகிறது.
அதே போல அடுத்தவர் துயர் துடைத்து அரவணைக்க கருணை தேவைப் படுகிறது.

மகிஷி என்ற அரக்கியை அழித்து அவளால் பாதிக்கப் பட்ட உலகை மீட்கவே ஐயப்பன் அவதரித்தார்.

விஷ்ணுவின் கருணையும், சிவனின் வலிமையையும் ஒருங்கே சேர்ந்த அவதாரமே ஐயப்பன்.
அவரிடம் கருணையும், வலிமையையும் நிரம்பி இருக்கிறது என்பதை உணர்த்தவே கருணை மிகுந்த விஷ்ணுவின் சக்தியும், வலிமை மிகுந்த சிவனின் சக்தியும் ஒன்று சேர்ந்ததால் அவர் அவதரித்ததாக சொல்லப் படுகிறது.

இதனை அவர் செய்த மகிஷி வதத்திலேயே காணலாம். மகிஷியை அவர் அழிக்கவில்லை. அவளது அரக்க குணத்தை தன் வல்லமையால் அழித்தொழித்தார். (இங்கு சிவனின் வல்லமை பிரயோகமாகிறது) அதன் பிறகு அரக்க குணம் நீங்கிய அவளே மாளிகைப் புறத்து மஞ்ச மாதாவாக அனைவரின் வழிபாட்டுக்கும் உரிய தெய்வமாக தனது கருணையினால் உயர்த்தினார். (இது விஷ்ணுவின் கருணைத் தன்மையால் நிகழ்ந்தது).

மனிதனிடம் இருந்த அரக்க குணத்தை நீக்கி அருள் புரிவதோடு நிற்காமல் அதே மனிதனை வானுறையும் தெய்வத்துக்கு ஈடாக உயர்த்தும் தெய்வமே ஐயப்பன்.

அவரிடம் சிவனின் வலிமையையும், விஷ்ணுவின் கருணையும் இணைந்திருந்தது என்பதை தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவர் என்பது அநாகரீகத்தின் உச்சக் கட்டம்.
என்பதை சொல்லவும் வேண்டுமா?

அன்புடன் – மணியன்.

நீங்கள் கூறிய ஐயப்பன் என்கிற கடவுள் கருத்து சனாதன தர்ம மக்களின்(இந்துக்களின்) வேதங்களில் அல்லது புராணங்களில் இல்லை. சிவன் உடன் மோகினி (பெண்) ரூபதிலுள்ள க்ரிஷ்ணன காமம் கொண்டான் என்று எதிலும் இல்லை. கிருஷ்ணன் மோகினி ரூபம் எடுத்தது வரை தான் புராணங்களில் சொல்லபடிருகிறது. ஐயப்பன், ஐய்யனார், ஐயா, சுடலைமாடன், etc முதலிய சிறு தெய்வ வழிபாடுகள் எல்லாம் கற்பனை கதைகள்
நீங்கள் கூறியபடி பாகவத் புராணத்தில் சிவன், மோகினி வடிவம் கொண்ட விஸ்ணு வின் பின்னால் போனார், ஆனால் அது விஸ்ணு என்து தெரிந்த பின்பு அவரிடம் மனிப்பு கேட்டு சிவன் போய் விடுகிறார். அது மாதிரி தான் பிரம்மாண்ட புராணத்திலும் சொல்லியிருக்குது. நீங்கள் கூறிய கருத்துகள் (விகிபீடியா ) லிருந்து எடுத்தது, ஒரிஜினல் சுலோகம் அப்படி சொல்லவில்லை.

////தமிழர்களால் “பரிசுத்த வேதாகமம்” என்றழைக்கப்படும் பைபிள் எனும் புத்தகத்தைக் /////
மன்னிக்கவும் கிறித்தவர்கள்தான், கிருத்துவர்கள் மட்டும்தான் அதை பரிசுத்த வேதாகமம் என்று நம்பிகொண்டுள்ளனர். மற்ற எல்லோருமே அது ஒரு இன அழிப்பு நூல் என்று பயந்து தான் போய் இருக்கிறார்கள்.தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் அதனை ஏற்பதில்லை.
அதனை நீங்கள் வேதம் என்று சொல்லி கொள்ள உங்களுக்கு மனம் எப்படி வருகிறது?
வேதம் என்பது சம்ஸ்கிருத சொல், அதனை உச்சரித்தால் உங்களுக்கு தீட்டு வருமே.

//////அருமை நண்பர் திருச்சிக்காரனுக்கு,
தாங்கள் ஒரு கிறித்தவராகவோ அல்லது யூதராகவோ அல்லது வேதவிற்பன்னராகவோ இல்லாத நிலையிலேயே தமிழர்களால் “பரிசுத்த வேதாகமம்” என்றழைக்கப்படும் பைபிள் எனும் புத்தகத்தைக் குறித்து விமர்சனம் செய்யும் போது அத்தனை கிறித்தவர்களும் எழும்பி வந்து திருச்சிக்காரன் என்ற தனி நபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை;ஆனால் குரானைக் குறித்து இதுபோன்று விமர்சிக்க உங்களுக்கு தைரியமிருப்பது போலத் தெரியவில்லை;கிறித்தவத்தைவிட முகமதியர்களே உலக‌த்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே/////
தாங்களும் இந்துமத வேதங்களையும் இந்துமதத்தையும் இல்லாததும் பொல்லாததுமாக கேவலமாக எழுதியுள்ளீர்களே தவிர இஸ்லாத்தை பற்றி ஒரு வார்த்தை எழுதி உள்ளீர்களா? ஏன் அவர்களை நேரடியாக மொத வேண்டியது தானே? ஏன் இந்த முடிச்சு விடும் வேலை ? .

////இந்நிலையில் நீங்களாகவே விவாதிக்க எடுத்துக்கொண்ட ஐயப்பனைக் குறித்த பிரச்சினையில் முன்னாள் இந்துக்கள் மற்றும் சிந்திப்பவர்கள் என்ற முறையில் நாங்கள் கேள்விபட்ட தகவல்களின் அடிப்படையில் எங்களுடைய கருத்தை முன்வைத்தால் அதில் சற்றும் சம்பந்தமில்லாமல் கிறித்தவம் சம்பந்தமான விவாதத்தை ஊக்குவிப்பது என்ன நியாயம்?/////
நீங்கள் தானே ஐயா திக ரேஞ்சுக்கு இல்லாத கற்பனைகளை ஐயப்பனின் பிறப்பில் கூறி இழிபடுத்த ஆரம்பித்தீர்கள்.ஐயப்பன் சரிதம் பற்றி அறிய வேண்டும் என்றால் நல்ல ஐயப்ப பக்தர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அதனை விட்டு சிவனை பற்றி அசிங்கமாக உங்கள் விருப்பத்திற்கு கூறாதீர்கள். இந்த விக்கிபீடியா ஒன்றும் இந்துமதத்தின் தளம் அல்ல, அது இந்துக்களுக்கு எதிரான செயல்பாடுடைய கருத்தை ஒருவர் கூறினாலும் அதன் உண்மையை பற்றி கவலையின்றி வெளியிடும்

////கிறித்தவர்களோ முகமதியர்களோ நினைத்திருந்தால் இந்தியாவிலுள்ள அனைத்து வேதங்களையும் கொளுத்தி அத்தனை ஆலயங்களையும் இடித்திருப்பார்கள்///
பின்னர் என்ன இடிக்காமல் இந்து சமயத்தை வளர்த்தனர் என்கிறேரா?இடித்தது போக மிச்சம் தான் இன்றிருப்பது.
கொள்ளை அடித்தது போக எஞ்சியதுதான் இன்றிருப்பது. அந்த கால அராஜக மதமாற்றத்தின் அடையாளம்தான் தாங்கள் இன்று இப்படி எல்லாம் பேசுவது.
எவ்வளவு அழித்தும் அழியாத செல்வமும்,அறமும் நிறைந்த தர்மம் ஆகையாலே இந்து தர்மம் இன்றும் பாரதம் நிறைந்த தர்மமாக இருக்கிறது.

திருச்சிகாரரே, எம்மதமும் சம்மதம் என்பது , தர்மத்தை அடிப்படையாக கொண்ட மதங்களுக்கு தான் பொருந்தும். இந்த கேடுகெட்ட பாலைவன , முட்டாள் தனமான உளரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது இல்லை. நான் நரகத்துக்கு போவேன் என்று சொல்பவர்களுக்கு எதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். என்னுடைய பதில்கள் , சற்று கடுமையாக இருக்கும் , அதை பொருத்துக்கொள்ள வேண்டும்.

//திருச்சிகாரரே, எம்மதமும் சம்மதம் என்பது , தர்மத்தை அடிப்படையாக கொண்ட மதங்களுக்கு தான் பொருந்தும். இந்த கேடுகெட்ட பாலைவன , முட்டாள் தனமான உளரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது இல்லை. நான் நரகத்துக்கு போவேன் என்று சொல்பவர்களுக்கு எதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். என்னுடைய பதில்கள் , சற்று கடுமையாக இருக்கும் , அதை பொருத்துக்கொள்ள வேண்டும்.//

சரி சாமி, “ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன், இந்த ஆபாசத்தைப் பாரீர்” என்று சொல்வது ச‌ரியா? என்று திருச்சிக்காரன் கேட்கிறாரே,அதுக்கு முதல்லே பதில் சொல்லுங்கோ,சம்பந்தா சம்பந்தமில்லாம உளறவேண்டாம்;எங்களுக்கே தெரியாததும் நாங்கள் யோசிக்காததுமான விஷயங்களையெல்லாம் உங்க ஆளுங்க தான படமா எடுத்துப்போட்டு காசுபண்றாங்க,அதுக்கும் நாங்களா காரணம்…சே,நீங்க நொம்ப மோசம்’ணா..!

நீங்கள் கூறிய ஐயப்பன் என்கிற கடவுள் கருத்து சனாதன தர்ம மக்களின்(இந்துக்களின்) வேதங்களில் அல்லது புராணங்களில் இல்லை. சிவன் உடன் மோகினி (பெண்) ரூபதிலுள்ள க்ரிஷ்ணன காமம் கொண்டான் என்று எதிலும் இல்லை. கிருஷ்ணன் மோகினி ரூபம் எடுத்தது வரை தான் புராணங்களில் சொல்லபடிருகிறது. ஐயப்பன், ஐய்யனார், ஐயா, சுடலைமாடன், etc முதலிய சிறு தெய்வ வழிபாடுகள் எல்லாம் கற்பனை கதைகள்

நீங்கள் கூறியபடி பாகவத் புராணத்தில் சிவன், மோகினி வடிவம் கொண்ட விஸ்ணு வின் பின்னால் போனார், ஆனால் அது விஸ்ணு என்து தெரிந்த பின்பு அவரிடம் மனிப்பு கேட்டு சிவன் போய் விடுகிறார். அது மாதிரி தான் பிரம்மாண்ட புராணத்திலும் சொல்லியிருக்குது. நீங்கள் கூறிய கருத்துகள் (விகிபீடியா ) லிருந்து எடுத்தது, ஒரிஜினல் சுலோகம் அப்படி சொல்லவில்லை.

ஒரு கிலோ அரிசி கிடைக்கும் என்பதற்காக மதம் மாறியவன்களுக்கு பதில் கொடுத்தால், என்னை நானே தாழ்த்திக்கொள்வதாகும். My friend chillsam, You please continue to believe in THE DEAD JEW who could not save himself(even in imagination). But the reality is , THE WHOLE WORLD IS turning towards Sanātana Dharma,

http://www.newsweek.com/2009/08/14/we-are-all-hindus-now.html

Rejoinder to Lisa Miller’s “we are all Hindus now”

Westerners Following Hinduism

Now people are opening coming out of CHRISTIAN CULT’s Grip and turning towards Sanātana Dharma.

அன்புக்குரிய நண்பரே,

பல்வேறு மார்க்கங்களை பிரச்சாரம் செய்வதாக எண்ணிக் கொண்டு, இன்று இந்தியாவில் உள்ள மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியை பரப்பிக் கொண்டு உள்ளனர்.

அவர்களுக்கு உதவி செய்வது போல நீங்களும் பதிலுக்கு பதில் லாவணி பாட வேண்டுமா எந்த மத மாக இருந்தாலும் அதை எப்படியாவது அழித்து ஒழிக்க வேண்டும் என துடிப்பது அவர்கள் மன நிலை. எந்த மதமாக இருந்தாலும் அதில் எவ்வளவு நல்ல கருத் துக்கள் உள்ளன என்று பார்த்து எல்லாரையும் நல்லினக்கப் பாதைக்கு கொண்டு வருவதே இந்தியாவின் வெற்றி!

அண்மையில் மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் (தண்ணீர் இல்லாவிட்டால் லாரி லாரியாக தண்ணீர் ஊற்றி செயற்கை ஆற்றில் ) இறங்கும் வைபவத்தில் வர்ணனையாளர் இப்படியாகச் சொல்லுகிறார்; சமணத்தை வெற்றிக்கொண்டு சைவத்தை ஸ்தாபித்த நாயன்மார்களின் பெருமைமிக்க பட்டணமாம் மதுரை; இப்படி எத்தனையெத்தனை ஆக்கிரமிப்புகள், கொலைகள் இந்த மண்ணில் நடந்தது..! இல்லாவிட்டால் அந்நியன் இங்கே வந்து கொடி நாட்டியிருக்கமுடியுமா? முழுப்பூசணிக்காயை கைப்பிடி சொற்றில் மறைப்பது போல கருத்து சொல்லாதிருங்கள்,நன்றி.

அன்புக்குரிய சகோதரர் சில் சாம் அவர்களேம்,

வெற்றி பெறுவது என்றா ல் வாளை உயர்த்தி அடுத்த்வன் கழுத் தில் இறக்குவதாலோ, மிக சக்தி வாய்ந்த குண்டுகளை போடுவதாலோ மட்டும் வருவது அல்ல.

அசோகர் வாளைக் கீழே போட்டு அன்பினால வென்றார்.

புத்தர், சங்க்கரர், இவர்கள் அன்பையும் , அறிவையுமேபயன்படுத்தினர்.

சுவாமி விவேகான ந்தார் அன்பையும் உண்மையையுமே மாத்திரமே வைத்து இருந்தார்.

சமண மதம் பின்னடைவு அடையக் காரணம் நாயன்மார்க்ள், ஆழ்வார்களின் பக்தி பிரச்சாரமே!

//வெற்றி பெறுவது என்றா ல் வாளை உயர்த்தி அடுத்த்வன் கழுத் தில் இறக்குவதாலோ, மிக சக்தி வாய்ந்த குண்டுகளை போடுவதாலோ மட்டும் வருவது அல்ல.//

அவர்களுக்கு தெரிந்தது அந்த வழிதான் போலும். அதனால் தான் சொல்லியிருக்கிறார்…

யோவ், எத்தனை கொலைகளை கிறித்தவ சர்ச்சு செய்திருக்கிறது? எத்தனைப் பெண்களை சூனியக்காரிகள் என்று நெருப்பில் இட்டிருக்கிறது? “தேவக் கொலை” என்ற பழியைச் சுமத்தி எத்தனை யூதர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள் கிறித்தவர்கள்?

// யோவ், எத்தனை கொலைகளை கிறித்தவ சர்ச்சு செய்திருக்கிறது? எத்தனைப் பெண்களை சூனியக்காரிகள் என்று நெருப்பில் இட்டிருக்கிறது? “தேவக் கொலை” என்ற பழியைச் சுமத்தி எத்தனை யூதர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள் கிறித்தவர்கள்? //

ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;தற்போது அன்பினால் அமர்ந்திருக்கிறோம்; பாருங்கள்,சுனாமியாக பிரம்மா சீறுகிறார்..! இந்தியாவே மூன்றாகப் பிளந்து எங்கோ செல்லப்போகிறது தெரியுமா..? எல்லாமே தெய்வ சங்கல்பம் என்போமே..!

// ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;தற்போது அன்பினால் அமர்ந்திருக்கிறோம்; பாருங்கள்,சுனாமியாக பிரம்மா சீறுகிறார்..! இந்தியாவே மூன்றாகப் பிளந்து எங்கோ செல்லப்போகிறது தெரியுமா..? எல்லாமே தெய்வ சங்கல்பம் என்போமே..! //

ஆஹா, “இடைக்கால ஐரோப்பியாவில் கிறித்தவத்தின் பெயரில் நிகழ்ந்த அநியாயங்கள் எல்லாம் தேவ சங்கல்பம் தான். இதற்குக் கிறித்தவர்கள் வருந்தத் தேவையே இல்லை.” என்று கூறிவிட்டீர்கள். உங்கள் வசனத்தைத் தங்கத்தில் பொறித்து வைத்து ஏமாற்றப்பட்டு கிறித்தவத்துக்கு மதம் மாறுபவர்களிடம் காட்ட வேண்டும்.

//ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;//

பூனைகுட்டி வெளியே கம்மிங்…

////ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;தற்போது அன்பினால் அமர்ந்திருக்கிறோம்;/////
கிறித்துவை ஏற்காதவர்களை கொள்வது உங்களுக்கு புண்ய காரியம் சபாஷ், இப்போது கிறித்தவர்களின் கூட்டத்துடன் அன்புடன் இருக்கிறீர் என்பதும் தெரிகிறது, வாய்ப்பு வரும் போது இங்கும் புனிதாமான கொலைகளை (கிறித்துவை ஏற்காதவர்களை எல்லாம் கொல்வது) புண்ய காரியமாக செய்துவிடுவீர்கள். அதற்கு பிற்காலத்தில் அன்புடன் அமர்ந்திருப்பதாக பறைசாற்றிகொல்வீரோ? என்ன மறைத்தாலும் உங்களின் உள்ள எண்ணங்கள் வெளிவருகிறதே தானாக

/////பாருங்கள்,சுனாமியாக பிரம்மா சீறுகிறார்..! இந்தியாவே மூன்றாகப் பிளந்து எங்கோ செல்லப்போகிறது தெரியுமா..? எல்லாமே தெய்வ சங்கல்பம் என்போமே..!//////////

இல்லை இல்லை கர்த்தரை பணியாதவர்கள் நிறைந்திருப்பதால் தான் இந்திய அழியபோகிறது என்று கூறுகிறார் ஒரு எவாஞ்சலிஸ்ட். நீங்கள் என்னன்னா பிரம்மா மேல் பலியை போடுகிறீர்கள்

// நீங்கள் என்னன்னா பிரம்மா மேல் பலியை போடுகிறீர்கள் //

ஆமா,பிரம்மா தானே பிரம்மபுத்திரனாக வந்து பலியானார்,அதனால் பலியை அவர் மீதே போடுகிறேன்,நண்பரே..!

//ஆஹா, “இடைக்கால ஐரோப்பியாவில் கிறித்தவத்தின் பெயரில் நிகழ்ந்த அநியாயங்கள் எல்லாம் தேவ சங்கல்பம் தான். இதற்குக் கிறித்தவர்கள் வருந்தத் தேவையே இல்லை.” என்று கூறிவிட்டீர்கள். உங்கள் வசனத்தைத் தங்கத்தில் பொறித்து வைத்து ஏமாற்றப்பட்டு கிறித்தவத்துக்கு மதம் மாறுபவர்களிடம் காட்ட வேண்டும்.//

தீக்ஷிதர்கள் இந்த நவீன காலத்திலும் யுத்தம் செய்துகொண்டிருக்கிறார்களே,எதற்காக? அவர்களுடைய முன்னோர்கள் உள்ளூர் மன்னர்களையெல்லாம் கைக்குள் போட்டுக்கொண்டு அரங்கேற்றிய கொடூரங்களை இந்த மண் அத்தனை சீக்கிரம் மறந்துவிடுமா?

//தீக்ஷிதர்கள் இந்த நவீன காலத்திலும் யுத்தம் செய்துகொண்டிருக்கிறார்களே,எதற்காக? அவர்களுடைய முன்னோர்கள் உள்ளூர் மன்னர்களையெல்லாம் கைக்குள் போட்டுக்கொண்டு அரங்கேற்றிய கொடூரங்களை இந்த மண் அத்தனை சீக்கிரம் மறந்துவிடுமா?//

என்ன கொடூரங்கள் என்று சொல்லமுடியுமா? தீக்ஷிதர்கள் என்ன உயிருடன் மற்றவர்களை எரித்தார்களா? கொஞ்சம் சிலுவை போர்களை பற்றி படித்து பாருங்கள் (உங்களுக்கு தெரியும், ஆனாலும் சொல்ல மாட்டீர்க்கள்).

http://en.wikipedia.org/wiki/Crusades

//ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;//

// பூனைகுட்டி வெளியே கம்மிங்…//

ஆமா, சீனு அவர்களே…இந்த பூனைக்குட்டிகள் சுதந்தரமாக ஊர்சுற்றக் காரணமானவர்களே சிலுவைப் போர்களை நடத்தியவர்கள் தான்; அவர்கள் அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்; அவர்களுக்கு ஓயாத வேலைகொடுத்து அவர்களைத் தடுத்து வைத்திருந்ததாலேயே அவர்களைக் காட்டிலும் மென்மையான நாகரீகம் மிகுந்த யுத்த தர்மத்துக்குக் கட்டுப்பட்ட ஆங்கிலேயர்களிடம் சிக்கினோம்;

இந்த தேசத்தைக் காப்பாற்றி வைத்திருந்து உங்களிடம் கொடுத்த கிறித்தவர்களுக்கு நீங்கள் செலுத்திவரும் நன்றிக்கடன்கள் எந்த தலைமுறையிலும் மறக்கமுடியாதது..!

வரலாற்றை திறனாய்வு செய்யும்போது திறந்த மனதுடன் உள்நோக்கமில்லாமல் ஆராய்ந்தாலே உண்மைகள் வெளிவரும் என்கிறேன்.

//ஆமா, சீனு அவர்களே…இந்த பூனைக்குட்டிகள் சுதந்தரமாக ஊர்சுற்றக் காரணமானவர்களே சிலுவைப் போர்களை நடத்தியவர்கள் தான்; அவர்கள் அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்;//

ஹா…ஹா…சிரித்து சிரித்து…முடியல…

முதலில் சிலுவைப்போர் நடத்தியவர்களுக்கு ஆசிய கண்டம் பற்றி தெரிந்திருக்குமா தெரியல…

நெசம்மா தான் பேசுகிறீர்களா? ஹா…ஹா…

//ஆமா, சீனு அவர்களே…இந்த பூனைக்குட்டிகள் சுதந்தரமாக ஊர்சுற்றக் காரணமானவர்களே சிலுவைப் போர்களை நடத்தியவர்கள் தான்; அவர்கள் அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்; //

என்ன, திரு. சில்சாம் அவர்களே, எதை சொன்னாலும் நம்புவார்கள் என நினைக்கிரீர்களா?

The specific crusades to restore Christian control of the Holy Land were fought over a period of nearly 200 years, between 1095 and 1291.

கோரி வம்சம், குதிபுதீநின் அடிமை வம்சம், பத்மினியை அனுபவிக்க துடித்த்த கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், லோடி வம்சம், பாபர், ஷேர் ஷா ஹுமாயுங், , ஜஹாங்கீர், ஷாஜஹான், கட்டாய ஜஸியா வரி புகழ் ஒவ் ரங்க ஜேப்…. , நாதிர் ஷாஅத் தானை பேர் ஆண்டும் இந்தியா தாக்குப் பிடித்த்து விட்டது.

இந்தியா இஸ்லாமிய நாடாக இருந்திருந்தா நீங்க் இப்போது பிற மத தெய்வங்களை திட்டி தீர்ப்பது போல சுதந்திரம் இருக்குமா? இந்த நாடு இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால் இயேசு தொழத் தக்க தெய்வம் என உங்களால் சொல்லி இருக்க முடியுமா?

எனவே சகிப்புத் தன்மை யை காதது வரும் இந்திய சமுதாயத்தூக்கு நன்றி செலுத்துவதும், தான் மதம் மாத்திரமெ எல்லாராலும் பின்பற்றப் பட வேண்டும் என்ற துடிப்பினால் பிற மத தெய்வங்களை தூஷிக்கும் மத வெறியை கை விடுவதுமே செய்ய வேண்டியது !

// தீக்ஷிதர்கள் என்ன உயிருடன் மற்றவர்களை எரித்தார்களா? //

உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தானா..?

// நீங்கள் என்னன்னா பிரம்மா மேல் பலியை போடுகிறீர்கள் //

ஆமா,பிரம்மா தானே பிரம்மபுத்திரனாக வந்து பலியானார்,அதனால் பலியை அவர் மீதே போடுகிறேன்,நண்பரே..!
////////
so you too accepting jesus is the reason for all dissasters.
if the jesus is the son of brahma then he is also belongs to hinduism so if you belive jesus is son of bramah then you too a hindu.
and bramah is not a god, its just a posting,so your jesus.

திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று

Kadavulukkullaum aan kadavul ,pen kadavul vivaga vizha lam nadakkuma???…sex yellam nadakkuma…???…APA IPA population kadavul ulagathulaum vanthurukkumey

இந்த கதையை அப்படியே ஏற்கிறோம் அந்நாள் ஒரு ஒரு கேள்வி கடவுள் இம்மனிதனாக பிறக்க வேண்டிய அவசியம் என்ன?

Leave a reply to Ajin Cancel reply

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09