பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் முழுமையானதா?
Posted September 20, 2010
on:
பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது? இது என்ன, இந்தக் கேள்வி சின்னப் புள்ளத் தனமா இல்லை இருக்கு என்கிறீர்களா?
தமிழ் நாட்டை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்கிற வார்த்தையை பிரபலம் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது பெரியார் தான்! ஆனால் அதற்க்கு மேலே பெரியார் என்ன செய்தார், பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது?
இந்து மதத்தின் மேலே சில பல மூட நம்பிக்கைகளை தூசியாகப் படிந்து இருந்தன. பெரியார் அவற்றை சுட்டிக் காட்டி பகுத்தறிவுவாதி என்று எளிதாக பெயர் எடுத்து விட்டார்.
கடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். நானும் சொல்ல முடியும்.
புத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட்டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயற்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார். புத்தர் அதற்காக கடுமையாக உழைத்தார். தன்னுடைய சுகங்களையும் துறந்தார். ஆதி சங்கரர் , சாக்ரடீஸ்… போன்றவர்களும் அப்படியே.
ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.
ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்? அதற்கு காரணம் என்ன? ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்?
உண்மையான பகுத்தறிவுவாதி மனித வாழ்க்கையின் போக்கு , அதன் காரணிகள் ஆகியவற்றை ஆராய்வான். மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.
சிறந்த பகுத்தறிவு வாதிகளான புத்தர், சாக்ரடீஸ், இயேசு, ஆதி சங்கரர், பட்டினத்தார், விவேகானந்தர்…. போன்றவர்கள அதைத்தான் செய்தனர்.
பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.
இதை நாம் சொல்லுவது ஏன் என்றால், தமிழர்கள் பகுத்தறிவு என்றாலே அது பெரியார் சொன்னதுதான் என்கிற ரீதியிலே அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, ஒரு குட்டையிலே மூழ்கிக் கிடைக்காமல், சுதந்திர சிந்தனையாளர்களாக , இப்போதைய கால கட்டத்திலே மக்களுக்கு தேவையான பகுத்தறிவு சிந்தனைகளை வழங்குபவர்களாக பரிணமிக்க வேண்டும் என்பதற்காகவே!
தொடர்புடைய பதிவுகள்:
https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/
இணைப்பு – 1:
அன்பு நண்பர்களே, பல நண்பர்கள் நான் ஏதோ பெரியாரை வெறுப்பவன் என்றும், அதனால் பெரியாரைக் குறை சொல்லி எழுதுவதாகவும் கருதுகின்றனர். பெரியாரை குறைத்து மதிப்பிடுவது நமது நோக்கம் அல்ல. நான் பெரியாரின் கேள்வி கேட்கும் துணிவு, குறுக்கு வெட்டு பார்வை ஆகியவற்றை கண்டு ஆச்சரியப் பட்டவன். பெரியாரின் கருத்துக்களை ஒட்டியும், வெட்டியும் பல கட்டுரைகள் நம்முடைய தளத்தில் வெளியாகும். பெரியார் சம்பந்தமாக நாம் முன்பு இதே தளத்தில் வெளியிட்ட கட்டுரையைப் படித்தால் தெளிவாகும்.
அவர்தான் பெரியார்….. , பார் அவர்தான் பெரியார்….
https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/04/periyaar-1/
(தொடரும்)
110 Responses to "பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் முழுமையானதா?"
நிறை, குறை எல்லா கொள்கைகளும் உண்டு. ஆத்திகத்தின் குறைகளை மாத்திரம் நாத்திகம் சொல்லும். பகுத்தறிவின் பலவீனங்களை மட்டும்ஆத்திகம் பேசும் . காலங்காலமாக இது தான் நடக்கிறது.
நீங்கள் இருபதாம் நூற்றாண்டில் இருந்து கொண்டு 19ஆம் நூற்றாண்டு சூழ்நிலையின் எதார்தத்தை உணராமல் ஒரு கருத்து சொல்கிறீர்கள்.
உங்கள் கருத்தின் படி பெரியார்
1.இந்து மதத்தின் சில (?) குறைபாடுகளை சுட்டிக் காட்டி பகுத்தறிவுவாதி எனப் பெயர் வாங்கியவர்.
2.பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.
அவரை விமர்சனம் செய்யலாம்.தவறில்லை. ஆனால் அவருக்கு ஆன்மீக போர்வை போர்த்த வேண்டாம்.
பெண் விடுதலை,சாதி மதம்,மொழி,இன வெறி எதிர்ப்பு,எளிய வாழ்வு,அரசியல் பதவிகளில் விருப்பமின்மை, போன்ற பன்முகத்தை உடைவர் பெரியார்.
அவர் கால சில பிரச்சினைகளை வெளிப்படுத்தி தன்னால் இயன்ற வரை போராடி தீர்வு கண்டவர்.
அவர் கால் நனைத்தற்கே தமிழ் சமூகம் சுய மரியாதையோடு எழுந்தது.நீங்கள் வேண்டுமானால் நீச்சல் அடித்து கரை சேருங்கள் வாழ்த்துகள்.
//மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.//
நித்யானந்தர் உட்பட பல சாமியார்கள் (மற்றும் கிறித்தவ மத வாதிகள்) கூட இப்படி சொன்னதாக ஞாபகம்.
//புத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட்டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயற்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார். //
புத்தர் கொடுத்த தீர்வு, உண்மையிலேயே தீர்வா? நடைமுறைக்கு சாத்தியமா? அவரது தீர்வு, அவருடைய நோய், மூப்பு, மரணத்திலிருந்து அவரை காத்ததா? யாரையாவது காத்ததா?
தன் செல்வங்களை துறந்து சந்நியாசி என்ற பெயரில் யார் எதை சொன்னாலும் நம்புவதா?
குடும்ப வாழ்க்கை பிடிக்காமல் வெளியேறினால், உடனே அவர் பெரிய மகானாகி விடுகிறார் உங்கள் மனங்களில்.
உன்னோடலாம் தர்க்கம் செஞ்சு என்னோட பொன்னான நேரத்த செலவு செய்ய நான் விரும்பல…………
பகுத்தறிவுப் பகலவனைப் பார்த்து நாய் குரைச்சதா நினைசுகிறேன் போ……………..
திரு திருச்சிக்காரர் அவர்களே,
///பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.///
சரியாகக் கூறினீர்கள்.என்னைப் பொறுத்தவரை பெரியார் ஒரு பகுத்தறிவு வாதி என்று கூறுவதை நான் ஒப்புக்க கொள்ள மாட்டேன்.அவர் கையாண்டது நாத்திகம்.அதற்க்கு ஆராய்ச்சியோ,தேடுதலோ தேவை இல்லை.அவர் தேடியதெல்லாம் நாத்திகத்திற்கு சாதகமான கருத்துக்களையே.
மேலும் அவர் இந்த ஆரியர்கள் எங்கிருந்தோ இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றக் கருத்தை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்த்தாமல்-பகுத்தறிவைப் பயன்படுத்தாமல்- வெள்ளைக் காரன் சொன்னதெல்லாம் உண்மை என்று முழுமையாக நம்பினார்.அந்தக் காலத்தில் அடிமைகளாகிய நாம் அறிவற்றவர்கள், திறமையற்றவர்கள் நமக்கு ஒன்றும் தெரியாது, நம்மை ஆளும் வெள்ளைக் காரன் அறிவாளி, திறமைசாலி என்ற மாயை இருந்தது.அதனால் வெள்ளைக் காரன் சொன்னதை பெரியார் அப்படியே ஏற்றுக் கொண்டார் .
இந்த ஆரியர்கள் விசயத்தில் டாக்டர் அம்பேத்கர் பகுத்தறிவுடன் ஆராய்ந்து “ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதற்கு துளிகூட ஆதாரம் இல்லை” என்று கூறி இந்தக் கருத்தை ஆணித்தரமாக மறுத்திருக்கிறார்.டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் பேசியிருக்கிறார்.இந்துமதத்தின் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு இந்த ஆரியக் கொள்கை பெரும் வரப் பிரசாதமாக இருந்தபோதிலும்,அதில் உண்மையில்லாததால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
டாக்டர் அம்பேத்கர் இந்த ஆரியக் கொள்கையை பகுத்தறிவுடன் ஆராய்ந்து உண்மையில்லை என்று கூறியதை,பெரியார் துளி கூட ஆராயாமல் பகுத்தறியாமல் ஆரியக் கொள்கை உண்மையே என்று அப்படியே ஏற்றுக்கொண்டார்.இதில் யார் பகுத்தறிவுவாதி.
மதங்கள் போதிக்கும் நன்னெறிகளே உலகில் பெரும்பான்மையோரை நல்லவர்களாக வைத்திருக்கிறது.யோகா,பிராணாயாமம், தியானம்,மற்றும் மத சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பதால் வரும் உடல், மன நலன்கள் மற்றும் நல்லக் குடும்ப அமைப்பு ,,நல்ல சந்ததி போன்ற நல்ல விசயங்களை அவர் எடுத்துக் கூறவில்லை.மதங்களால் பல நல்ல விசயங்கள் இருந்தும் அவருடைய நாத்திகக் கொள்கைக்காக அதைமுழுமையாக நிராகரித்தார்.
கற்பு ,திருமணம், கர்ப்பம் தரிப்பது,குழந்தை பெறுவது போன்றவை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு,பெண்ணடிமைத்தனம் என்று தவறாகப் புரிந்து கொண்டார்.உலகில் கற்ப்பொழுக்கம் இல்லாத ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துவருவதை அறிகிறோம்.அதலால் அங்கே அதிகக் குழந்தைப் பிறப்பை அரசே ஊக்குவிக்கின்றது.கற்ப்பொழுக்கத்தைக் கடைபிடிக்கும் கிழக்காசிய நாடுகளிலேயே மக்கள் சக்தி அதிகம் இருக்கின்றன,அப்படி இல்லாமல் உலகில் அனைவரும் கற்ப் பொழுக்கம் இல்லாமல் வரம்பின்றி ஐநூறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் கூட இப்பொழுது உலகில் அழியும் உயிரினங்கள் பட்டியலில் மனித இனமே முதலிடம் பெற்றிருக்கும். கற்ப்பொழுக்கமே ஒரு நிலையான குடும்ப அமைப்பைத் தருகிறது.கற்ப்பொழுக்கமில்லாதவர்கள் கணவர்களை மாற்றுவது /கணவன்மார்கள் மனைவிகளை மாற்றுவது போன்ற செயலால் ஒரு நிலையான குடும்ப அமைப்பு இல்லாமல் போகிறது.அதனால் அவர்கள் குழந்தைப் பேரை தவிர்க்கின்றனர்.அல்லது குறைத்துக்கொல்கின்றனர். இதன் காரணமாகவே ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
பெரியார் கூறுவதுபோல் கர்ப்பில்லாமலும்,திருமணம் செய்யாமலும் குழந்தைப் பெற்றுக்கொல்லாமலும் பெண்கள் இருந்தால் இரண்டு தலைமுறையிலேயே மனித இனம் உலகில் அழிந்துவிடாதா??? இதுவா பகுத்தறிவு??? என்னைக் கேட்டால் அவர் ஒரு நாத்திகவாதி மட்டுமே.பகுத்தறிவுக்கும் அவருக்கும் அதிக தூரம்.
//ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும்//
இதைபோல, ஒரு குருடனை குறித்து யேசுவிடம் ஒருக்கேள்வி கேட்கப்பட்டது. அதற்கவர் அளித்த பதிலை பாருங்கள்.
எனக்கு பெரியாரிடம் நிறைய கருத்து வேறுபாடு உண்டு. அதற்காக அவர் மீது வீண் பழி சொல்ல விரும்பவில்லை.
இந்த கட்டுரை, பெரியாரை இழிவு படுத்த எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.
//இந்து மதத்தின் மேலே சில பல மூட நம்பிக்கைகளை தூசியாகப் படிந்து இருந்தன. பெரியார் அவற்றை சுட்டிக் காட்டி பகுத்தறிவுவாதி என்று எளிதாக பெயர் எடுத்து விட்டார்.//
எளிதாக எடுத்துவிட்டாரா? நீங்க அப்படி ஏதாவது ஒரு பேர் எடுத்துகாட்டுங்க பார்க்கலாம்.
//கடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். நானும் சொல்ல முடியும்.//
உம்மை போல, பெயர் சொல்ல கூட பயந்து, ஏதோ ஒரு மூலையில ஒளிஞ்சுகிட்டு, இணையதளத்தில என்ன வேணும்னாலும் சொல்லலாம். ஆனால், மூடநம்பிக்கைகள் நிறைந்த கடந்த நூற்றாண்டில், நம் நாட்டில், தைரியமாக நடுத்தெருவில் நின்று ஊரே கேட்கும்படி சொல்ல தனி தைரியம் வேண்டும்.
//ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.
//
ஹ்ம்ம்… சம்சாரி எல்லாம் சுகவாசி, சந்நியாசி எல்லாம் கடுமையான உழைப்பாளிகள்… நல்ல இருக்கையா உம் லாஜிக். தமிழகத்தில் சாதி அடிப்படையில் இருந்த அடிமைகள் குறைந்து உள்ளனரே, அதுவே பெரிய சாதனை. சராசரியாக ஒரு மனிதன் தமிழகத்தில் என்ன செய்கிறானோ அதைவிட பெரியார் நிறைய சாதித்ததாகவே தோன்றுகிறது. கண்டிப்பாக, உம்மை விட நிறையவே சாதித்துள்ளார். பெரியார் தன், காலத்தை சொகுசாக கழித்தார் என்றால், உம் வாழ்க்கையை என்ன சொல்வது?
//உண்மையான பகுத்தறிவுவாதி மனித வாழ்க்கையின் போக்கு , அதன் காரணிகள் ஆகியவற்றை ஆராய்வான். மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.//
பகுத்தறிவுக்கு நீங்கலாக இப்படி ஒரு அர்த்தம் கொடுத்துக்கொண்டால் யார் என்ன செய்ய முடியும்…
//ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்?//
Is the above statement is out of self pity?
//ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்?//
How do you know that someone is HAPPY? They might be rich, but that doesn’t mean they are happy? On what basis you claim them to be Happy?
மார்க்ஸ் என்ற புத்தகத்தில் பெரியார் ஒரு அத்தியாயம். அவர் கலத்தில் அவர் செய்த போராட்டங்களும் சாதனைகளும் ஒரு சில பதிவுகளுக்குள் அடங்கிவிடாது. இந்தக்கட்டுரை வருத்தமளிக்கிறது. பெரியாரை under estimate செய்வதாகவே உள்ளது. மேலும் பெரியார் சொகுசாக வாழ்ந்தார் என்ற வரிகளில் வெறும் காழ்ப்புணர்வு மட்டும்தான் தெரிகிறது. பெரியார் சிந்தனைகளை முழுதாகப் படிக்காமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எழுத வேண்டாமே!
கரையோரமாக கால் நனைத்தது போல் எழுதிவிட்டீர்கள் .பெரியாருடைய கருத்துகள் ஆராய்ச்சிக்கும் வாதத்திற்கும் உட்பட்டவையே .ஆனால் இன்னமும் ஆராய்ந்து நீங்கள் எழுதியிருக்கலாம் .மேலோட்டமாக இருக்கிறது உங்கள் எழுத்து .
பெரியார் என்ன செய்தார்…திருச்சியார் தன் பூணூலை வெளியே தைரியமாக காட்டி கொள்ள முடியவில்லையே. எந்த சாதிக்காரனும் சாதி நம்பிக்கை ஏன் வெறியே இருந்தாலும் சாதி பெயரை போட்டு கொள்வதில்லையே தமிழ்நாட்டில் . மற்ற இந்திய மாநிலங்களின் கதை உங்களுக்கே தெரியும். மற்ற மாநில மக்கள் போல் தமிழகத்தில் சாதி பெயரை தன் பெயரோடு சேர்த்து போட எத்தனை பேர் தயார்..? சொல்லபோனால் சாதியை உருவாக்கிய பார்புகளே தமிழ் நாட்டுக்குள் போட்டு கொள்வதில்லை.
அறிவியல் வளர்ந்த காலத்தில் வெள்ளைக்காரன் போய் விட்டால் நமக்கு குண்டூசி கூட செய்ய தெரியாது என்று கண்டுபிடித்தது பகுத்தறிவு.
அறிவியலை பற்றி என்னவென்றே உலகம் யோசித்திருக்க முடியாத காலத்திலேயே,அல்ட்ரா சொனிக்,ராடர் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே ஆழ் மன அறிவின் மூலம் அடுத்த கிரகத்தின் சூரியனை சுற்றி வரும் வேகம் முதல், சூரிய குடும்பத்தின் கடைசி கிரகத்தின் விட்டம் வரை கண்டு பிடித்து எழுதி வைத்தது காட்டுமிராண்டி அறிவு.
வெள்ளைகாரனே நாட்டை ஆளட்டும் என்று சொன்னது பகுத்தறிவு.
நாங்களே நாட்டை ஆள்வோம் வெள்ளையனே வெளியேறு என்றது பகுக்காத அறிவு.
இந்தியாவிலிருந்து தனி திராவிட நாடு பிரிக்க சொன்னது பகுத்தறிவு.
எல்லோரும் ஒன்றாய் இந்தியராய் வாழ்வோம் என்றது,வாழ்ந்து கொண்டிருப்பது சோடை போன அறிவு.
வாழ்க பகுத்தறிவு
//அறிவியலை பற்றி என்னவென்றே உலகம் யோசித்திருக்க முடியாத காலத்திலேயே,அல்ட்ரா சொனிக்,ராடர் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே ஆழ் மன அறிவின் மூலம் அடுத்த கிரகத்தின் சூரியனை சுற்றி வரும் வேகம் முதல், சூரிய குடும்பத்தின் கடைசி கிரகத்தின் விட்டம் வரை கண்டு பிடித்து எழுதி வைத்தது காட்டுமிராண்டி அறிவு//
1.ஆழ்மன அறிவு என்றால் என்ன?
2.இந்த அறிவுப் பாடம் எந்த பல்கலை கழகத்தில் (கல்லூரியில்) பயிற்றுவிக்கிறார்கள்?.
3. உங்களுக்கு ஆழ்மன அறிவு உண்டா?.
4. இப்போது ஏதாவது அந்த ஆழ்மன அறிவின் மூலம் ஏதாவது கண்டு பிடித்து சொல்லுங்களேன்?
//அடுத்த கிரகத்தின் சூரியனை சுற்றி வரும் வேகம் முதல், சூரிய குடும்பத்தின் கடைசி கிரகத்தின் விட்டம் வரை கண்டு பிடித்து எழுதி வைத்தது //
1.யார் கண்டு பிடித்து எழுதி வைத்தது? எப்போது? எந்த புத்தகத்தில் எந்த பக்கத்தில் இடம் பெற்று உள்ளது?.
2.ஆழ்மன அறிவின் மூலம் என்னென்ன காரியங்கள் செய்ய முடியும்?
3.ஆழ்மன அறிவின் எல்லைகள் என்ன?.
//ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்? அதற்கு காரணம் என்ன? ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்//
இதற்கு மத வாதிகள் சொல்லும் காரணம் அவன் முற் பிறவியில் செய்த பாவம்.எல்லாம் தலைவிதி.எல்லாம் ஏற்கெனவே தீற்மானிக்கப் பட்டது.
ஆனால் 1000 பெருக்கு 20 பேர் உடல் குறைபாடுள்ளவர்களக(மன்னிக்கவும் மாற்று திறனாளிகள்) பிறப்பது பல்வேறு காரணிகளை சார்ந்து அமைவது.பெற்றோரின் ஜீன்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் ,பரம்பரை வியாதி போன்றவற்றினால் ஏற்படுவது.
மாற்று திறனாளிகள் என்று சொல்வதே தன்னம்பிக்கை ஏற்படும் விதமாக உள்ளது.அவர்களுக்கு கல்வி,உதவி ம்ற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கினால் எந்த விதியும் ஒன்றும் செய்ய முடியாது.எனக்கு தெரிந்த பல மாற்று திறனாளிகள் நம்மை விட திறமையாக வேலை செய்வார்கள்.
இட ஒதுக்கீட்டின் பலனால் எல்லா சாதியிலிலும் பணக்காரர்கள் உள்ளனர். உயர் சாதியில் கூட ஏழைகள் உள்ளனர். அப்புறம் என்ன தலைவிதியாவது மண்ணாவது?.
எல்லா மக்களுக்கும் உணவு,கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை வழங்க ஒரு சிறப்பான அரசியலமைப்பு ஏற்பட்டால் இந்த கேள்விகளுக்கே இடமில்லை.
//ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.
ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்? அதற்கு காரணம் என்ன? ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்?//
என்ன கொடுமைங்க சாரே,
காலுகை நல்லா இருக்கிறவங்களை ஒதுக்கி வைத்து நீ பறையன், பள்ளன் தீண்டத்தகாதவன் என ஊனமாக்கிப் பார்த்தவர்களை மிரள வைத்ததைவிட குருடு, செவிடு ஆராய்ச்சி மனித இனத்துக்கு எந்த விதத்தில் பயன்பட்டு இருக்கு ?
ஒரு மனிதன் ஏழையாகப் பிறக்க, பணக்காரணாகப் பிறக்க எந்தகாரணமாக இருந்தாலும், அவன் அப்படியே அதைத் தொடர அவனே காரணமாக அமைந்துவிடுகிறான் என்பது பெரியார் அறிந்தது தான். பிறப்புக்கு முன்னும் பின்னும் என்ன எழவாக இருந்தாலும் பிறந்த பிறகு செயல்படுத்தும் சமூக வாழ்க்கை என்பது முக்கியமானது. விதிக் கோட்பாடுகளும், கடவுள் கோட்பாடுகளும் வாழ்க்கைக்கு எந்த விததிலும் பயன்படுவதைவிட ஒரு மனிதன் விழிப்புணர்வு பெருவதன் மூலம் பெரும் நன்மைகள் மிக அதிகம். அப்படி விழிப்புணர்வு பெற்றதனால் தான் என்னவோ பார்பனர் அல்லாத பிறரும் கூட பெரியார் என்ன செய்து கிழித்தார் என்பதாக கேள்வி கேட்கும் ‘துணிச்சலுக்கு’ வந்துள்ளனர். அந்த துணிச்சலை முன் மொழிந்தவர் பெரியார் என்பதை மறந்துவிட்டு.
பெரியார் பற்றிய எதிர்ப்பும், ஏச்சுமே, பெரியார் மீது பார்ப்புகளும், இந்துத்துவாக்களும் ஏன் பலமுனை தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பெரியாரைப் பற்றிப் படிக்கப் போய் தான் பெரியார் பற்றி நான் உட்பட பலர் அறிந்து கொள்ள காரணமாக அமைந்தது.
உங்களின் பெரியார் விழிப்புணர்வு சேவை பாராட்டத்தக்கது.
//4. இப்போது ஏதாவது அந்த ஆழ்மன அறிவின் மூலம் ஏதாவது கண்டு பிடித்து சொல்லுங்களேன்?
Reply .//
குதர்க்க வாதிகளிடம் பேசி நேரத்தை வீணாடிக்க கூடாது. உண்மையை சொன்னால் ஹிந்துத்துவவாதி என்ற முத்திரை விழும்.
ஆழ்மன அறிவு எல்லாம் எனக்கு இல்லை, உங்களுக்கு அது என்ன என்றே தெரியவில்லை பாவம். அதனால் நிச்சயம் உங்களிடம் அது இருக்கமுடியாது. நான் குறிப்பிட்ட ஆழமான அறிவு என்பது ஒரு விஞ்ஞானியின் அளவுக்கு ஆழமான சிந்தனை செய்யும் அறிவு திறன்.
இங்கே நான் சொல்லியிருப்பது வெறும் அனுபவ அறிவினால் மட்டுமே.
//பெரியார் பற்றிய எதிர்ப்பும், ஏச்சுமே, பெரியார் மீது பார்ப்புகளும், இந்துத்துவாக்களும் ஏன் பலமுனை தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பெரியாரைப் பற்றிப் படிக்கப் போய் தான் பெரியார் பற்றி நான் உட்பட பலர் அறிந்து கொள்ள காரணமாக அமைந்தது.
உங்களின் பெரியார் விழிப்புணர்வு சேவை பாராட்டத்தக்கது.
Reply //
அவரை பற்றிய உண்மை உலகுக்கு புரிய வேண்டியது அவசியமே. அவரை அவருடைய மறுபக்கத்தை மற்றவர் அறியாமல் இருட்டடிப்பு செய்து வருவது யார் என்றால் அவரின் தொண்டர்களே. இன்னும் கிளறி முழு உண்மையையும் தெரிந்து கொள்ள முயலுங்கள்.
அவரைபற்றிய பல விரிவான உண்மையான கட்டுரைகள் இணையதளத்திலேயே கிடைக்கின்றன தேடி படித்து அவர் பற்றிய உண்மையான அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.
பிரபலமாக வந்து விட்ட நல்லவராயினும் கெட்டவராயினும் அவரை பற்றிய நாலுவித கருத்துக்களும் இருக்கவே செய்யும். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக யாரும் இருக்கமுடியாது.அப்படி எதிர்பார்ப்பது அவரை ஆராயாமல் ஏற்றுக்கொள்ள சொல்லி மற்றவர் இடத்தும் திணிப்பது பகுத்தறிவு நிறைந்த அவருடைய அடியார்களே.
வெள்ளைகாரனுக்கு ஆதரவு கொடுத்த ஒருவர் நாட்டை துண்டாக பிரிக்க சொன்ன ஒருவர் இந்த மாபெரும் தலைவர்.
வாழ்க அவர் நாமம் வளர்க அவர் தொண்டர்களின் சேவை.
இவ்வளவு பேசும் அவர் அடியார்களுக்கு எங்களிடமே நெஞ்சிலே நடுநிலை இருந்தால் உண்மையான கடவுள் எதிர்ப்பு இருந்தால் உண்மையான வீரம் இருந்தால்.எல்லா மக்களிடமும் உங்களின் உயர்ந்த பகுத்தறிவை பரப்பும் சமத்துவ நோக்கம் இருந்தால் எல்லா மதத்தாரிடம் உங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை சமமாக பரப்ப தாயரா?
அப்படி உண்மையாக செய்ய ஆரம்பியுங்கள் உங்கள் கொள்கை உண்மையானது என்று உங்கள் பின்னல் வர பெரிய கூட்டமே இருக்கும் அல்லது நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு விடும் சூழ் நிலை உருவாகும்.
இதற்கு தயவு செய்து நேரடியாக பதில் சொல்லவும்.
//எங்களிடமே நெஞ்சிலே நடுநிலை//
எழுத்தப்பிழை மன்னிக்கவும், உங்களிடம் நெஞ்சிலே நடுநிலை இருந்தால் என்று படிக்கவும்.
பெரியாரை சோ ராமசாமி, பார்பன ஜல்லிகலான தமில்ஹிண்டு.காம் இங்கெல்லாம் படிச்சிட்டு வந்து பெரியாரை நான் படித்துவிட்டேன் , அந்த ஆளு விடுதலையை எதிர்த்தார், நாட்டை பிரிக்க சொன்னார் என்று பொதுவாக உளறத்தான் முடியும். இன்னமும் பெரியாரின் தேவை தமிழகத்திற்கு இருபதையே அர்ச்சகர் மாணவர்கள் பிரச்னை காட்டுகிறது.
//இவ்வளவு பேசும் அவர் அடியார்களுக்கு எங்களிடமே நெஞ்சிலே நடுநிலை இருந்தால் உண்மையான கடவுள் எதிர்ப்பு இருந்தால் உண்மையான வீரம் இருந்தால்.எல்லா மக்களிடமும் உங்களின் உயர்ந்த பகுத்தறிவை பரப்பும் சமத்துவ நோக்கம் இருந்தால் எல்லா மதத்தாரிடம் உங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை சமமாக பரப்ப தாயரா?//
இவ்வளவு உண்மை பேசும் நீங்கள் கொஞ்சமாவது நேர்மை இருந்தால் ஆலய தீண்டாமை செய்யும் பார்பன அர்ச்சகர்களுக்கு என்ன சொல்வீர்கள்.
அன்புள்ள திரு பிரதீப்,
//இவ்வளவு உண்மை பேசும் நீங்கள் கொஞ்சமாவது நேர்மை இருந்தால் ஆலய தீண்டாமை செய்யும் பார்பன அர்ச்சகர்களுக்கு என்ன சொல்வீர்கள்.
Reply //
நான் கேட்டது நேரடி பதில் நாம் ஏன் கடவுள் மறுப்பு விசயத்தில் பாரபட்சம் காட்ட வேண்டும். ஒன்று எல்லா கடவுளையும் எதிருங்கள் இல்லாவிட்டால் பேசாமல் இருங்கள்.
தீண்டாமை எதிர்ப்பையும் கடவுள் எதிர்ப்பையும் போட்டு குழப்பி மீன் பிடிக்க பார்க்காதீர்கள் . உங்கள் கொள்கை தீண்டாமை எதிர்ப்பு எனும் பட்சத்தில் நான் நிச்சயம் உங்கள் பக்கமே.இங்கே உள்ள மற்ற தவறுகளை குறிப்பிடுங்கள் அதனையும் ஏற்புடையதாக உள்ள பட்சட்த்தில் உங்களுடன் சேர்ந்து எதிர்க்க தயார்.
நான் கேட்பது தெளிவாக உங்களின் கடவுள் எதிர்ப்பு கொள்கையின் நிலைப்பாடு பற்றி.
எந்த ஆலயத்தினுள் தீண்டாமை பின்பற்றப்படுகிறது,கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.எனக்கு தெரிந்து என் வயதில் எந்த கோவிலிலும் நீ தாழ்ந்த ஜாதி அதனால் கோவிலுக்குள் வர அனுமதி இல்லை என்று கேட்டதில்லை. வேண்டுமானால் உங்கள் கழகத்தின் தலைமை பொறுப்புக்கு குறிப்பிட்ட ஜாதிகாரகள் வரவே கூடாது என்று எழுதாத சட்டம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏன் முதலில் மாற்றத்தை உங்களிடம் இருந்து ஆரம்பியுங்களேன். அந்த தலைவர் பதவியை ஒரு பிற்படுத்தபட்டவற்கு கொடுத்து பாருங்களேன். கோவிலுக்குள் ஏற்கனவே அரசு கருவறை வரை எல்லா தரப்பினரும் சென்று அர்ச்சிக்க சட்டப்படி வழி செய்து விட்டது. தீண்டாமை கோவில்களில் மட்டும் அல்ல எந்த இடத்தில் இருந்தாலும் கண்டிக்க வேண்டிய விஷயம்.
தீண்டாமையை உண்மையாக எதிர்த்து செயல்பட்டவர் ராமானுஜர், காந்தி, பாரதியார், இன்னும் பலர்.
நீங்கள் இப்போது புதிதாக பார்ப்பனரை தீண்ட தகாத மனிதராக்க முயற்சி செய்கிறீர்கள். அவரும் மனிதரே அவர் அந்த குடியில் பிறந்தது என்ன பாவம். கமலஹாசன் எவ்வளவுதான் தன்னை நாத்திகராக காட்டினாலும் நீங்கள் உங்கள் பார்ப்பான தீண்டாமையால் தான் அவரை உங்கள் இயக்கத்தில் சேர்க்கவில்லை.
நண்பரே எனக்கு தெரிந்த தகவல்களை தான் தருகிறேன் இதில் ஏதேனும் தவறு இருந்து சரியாக விளக்கினால் எனக்கு உள்ள வெறும்அறிவால் சிந்தித்து பார்த்து உங்களின் பதில் ஏற்புடையதானால் என் தவறுகளை நிச்சயம் திருத்திகொள்வேன்.
மேலும் ஏதோ அர்ச்சகர் மாணவர் பிரச்னை என்றீர்கள்,அதனை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. விளக்கமாக எழுதினால் தெரிந்து கொள்வேன்.
நட்புடன்
சதீஷ்
இனக்காவலர்களே,நாம் தமிழினம்,திராவிட இனம் என்பது உங்களுக்கு உண்மையான கொள்கையாக இருந்தால், நண்பரே தமிழ் நாட்டிலேயே ஒரு ஊரில் பேசுவது, படிக்கும் நாளிதழ் எல்லாமே பிற மொழியிலே
அரசுடமை வங்கியின் பெயர்பலகை பிற அதே தமிழுக்கு தமிழனுக்கு திராவிட இனத்துக்கு சம்மந்தம் இல்லாத பிற மொழியிலே.
இது உங்களுக்கு தெரியாது என்றால் அது நிச்சயம் பச்சை பொய்.
ஏன் அங்கே உங்கள் இன உணர்வு செயல் படவில்லை. அங்கு நடக்கும் மத ரீதியான அடக்கு முறையும் கூட தீண்டாமையை போன்றதொரு கொடிய செயல் இதற்க்கு முற்போக்கு சிந்தனைகளை மட்டுமே கொண்ட பகுத்தறிவாலர்கலான உங்களின் பதில் என்ன என்பதை சொல்லுங்கள். அங்கே சிறு பான்மையாக உள்ளவர்கள் மிக கேவலமாக எந்த உரிமையும் இன்றி நடத்தப்படுவது உங்களுக்கு எல்லாம் தெரியாது என்று சொன்னால் இனியாவது தெரிந்து கொண்டு எதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். நீங்கள் ஏதும் செய்யத பட்சத்தில் அந்த தவறுகளை கண்டும் கானதிருக்கும் செயல் ஆகும்.
//அந்த ஆளு விடுதலையை எதிர்த்தார், நாட்டை பிரிக்க சொன்னார் என்று பொதுவாக உளறத்தான் முடியும்.//
அவரின் வெள்ளைக்கார ஆதரவு, காங்கிரசின் விடுதலை போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு பெரியார் படத்திலேயே ஓரளவு காட்டப்பட்டுள்ளது.
பெரியாரின் சிலைகள் இன்றளவும் உடைக்கப்படுகின்றன.அவரின் கருத்துக்கள் கொள்கைகள் தூற்றப்படுகின்றன,போற்றவும்படுகின்றன.விமர்சிக்கவும்படுகின்றன.கடவுள் என்ற கருத்துருவாக்கத்தின் மேலுள்ள,மக்களின் நம்பிக்கை ஒழியும் வரை இந்த தூற்றல் தொடரும்.இதன் அர்த்தம் இந்த உலகம் உள்ள வரை இது தொடரும் என்பதாகும்.ஏனெனில் அவருடைய கருத்துக்கள் அவ்வளவு முற்போக்கானவை.மனிதன் பயத்தையும் அவநம்பிக்கையும் இழக்காதவரை பெரியாரைப் போன்ற புரட்சிக்காரர்கள் பழிக்கப்பட்டே வருவார்கள். தற்போதைய அரசியல் தலைவர்கள் தன்னை ஒரு தலைவனாக கொள்கை வீரானாக காட்டிக் கொள்ள தன் கட்சி கொடியுடன் தேச தலைவர்களின் புகைப்படங்களை போட்டு கொள்வார்கள் ஆனால் அவர்களின் கொள்கையை துளியும் பின் பற்ற மாட்டார்கள் இதன் நோக்கம் மக்களை ஏமாற்றுவது.உங்கள் நோக்கம் எனக்கு புரிகிறது. உங்கள் எழுத்து நீங்கள் பெரிய விளம்பர பிரியர் என்பதை காட்டுகிறது.சமுதாயத்தில் மாற்றம்,சமத்துவம்,முன்னேற்றம்,வளர்ச்சி ஏதாவது காண விரும்பினால் அதை உங்கள் அறிவிலிருந்து உங்கள் வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்க நான் உங்களை வலியுறுத்துகிறேன்.அப்படி செய்தால் மற்றொரு பெரியாராக நீங்கள் வருவீர்கள்.இதற்கு அர்த்தம் பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல.”உண்மை என்பது மாற்றத்திற்கு உட்பட்டது”என்று சொன்னவர்.இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாதாது அவரைப் பற்றி நீங்கள் முழுமையாக படிக்கவிலலை அல்லது படிக்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு மனிதன் பணக்காரனாகவோ குருடனாகவோ வாழ அந்த மனிதனோ அவன் பெற்றோரோ அவன் முன்னோரோ காரணம் என கருதுகிறேன்.மனிதனின் இனப,துன்பகளுக்கான பிறப்பிற்கு கடவுள் தான் காரணம் என்றால் அப்படிப்பட்ட ” (edited)கடவுள்” இந்த உலகத்திற்கு தேவையா என்பதை நீங்கள் துயரப்படும் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டால் சிந்திப்பீர்கள்.அதை விட்டு விட்டு 33 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியை பகுத்தறிவாதியை,புரட்சிக்காரை விமர்சிக்க, பெற்ற தைரியத்தை,உங்களால் முடிந்தால் உங்கள் வாழ்க்கையில், பொது வாழ்க்கையில் பெற்று,மற்றொரு பெரியாராக,பகுத்தறிவாதியாக,புரட்சியாளராக நீங்கள் வாழ வாழ்த்துகிறேன்.
கொள்கையிலே நேர்மை இருந்தால் பொதுவான கடவுள் எதிர்ப்பை கையில் எடுங்கள். நீங்கள் அதில் உறுதியாக இருந்தால் நியாமான சமநிலையுடன் இருந்தால் நானும் கடவுள் மறுப்புக்கொள்கைக்கு வருகிறேன்.உங்கள் கருத்துகளில் சமநிலை இல்லாத போது அதிலேயே ஏதோ தவறு இருக்கிறது.
இந்து கடவுள்களை மட்டும் எதிர்த்து கொண்டு பொதுவாக கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு. மற்றவர் பக்கம் தலையிடாமல் இருப்பதினால் தான் இந்த பொய் நாட்தீகத்தை ஏற்க முடியவில்லை.
உங்களிடம் விளம்பரம் தேடி ஒரு பிரயோஜனமும் எனக்கு இல்லை.விளம்பரத்திற்காக கடவுள் மறுப்பு பேசிய நண்பர்களை வேண்டுமானால் பார்த்திருக்கிறேன். ஒருவேளை நீங்களும் அந்த ரகமோ.
நான்கூட ஒரு இரண்டு வருடங்கள் கடவுள் இல்லை என்று நம்பியவன் தான். அது ஒவ்வொரு ஆத்திகரும் தனக்கு எதிர்பார்த்த விஷயம் வாழ்வில் கிடைக்காவிடில் செய்வதுதான்,என்ன நான் கொஞ்சம் ஓவராக போய்விட்டேன் அதிலே. வீட்டிலுள்ளவர்களிடம் எரிச்சலுட்டும் அளவு பேசியவன் தான்.கடவுள் மறுப்பு கொள்கைக்காகவே பெரியாரை போற்றியவன் தான். பெரும்பகுதி இந்து மத இளைஞநும் தன டீன் ஏஜ் காலத்தில் நிச்சயம் நாத்திகனாக இருப்பான் நிச்சயம்,பின்னர் தானாக ஆத்திகனாக மாறுவான். அவனால் மட்டும் தான் அப்படி இருக்கவே உரிமை பெற்றிருக்கிறான். பெற்றோர்கள் வருத்தபடுவதொடு நிறுத்தி கொள்வார்கள்.
மற்றவர்கள் நிறுத்தி கொல்வார்கள்.
வேறு மதத்தை சேர்ந்த நாத்திகர்களை காட்டுங்கள்.எனக்கு தெரிந்து நான் பார்த்தோ கேட்டோ இல்லை.பிற சமுகத்தில் அப்படி இருந்தவர்கள் அவர்களின் சமுகத்தால் தண்டிக்கபட்டு பின்னர் திருந்தி இறைவழிக்கு சென்ற ஒரு செய்தியை கேட்டிருக்கிறேன்.
ஆனால் அந்த இறை எதிர்ப்பு கருத்து ஒரே ஒரு இழிச்சவாயன் சமூகத்தினர் வழிபடும் கடவுள்களுக்கு மட்டுமே என்பது உணர்ந்த பிறகு நான் அவர் மேலுள்ள பற்றினை கைவிட்டேன்.
உங்களின் நிலைப்பாடு எதிலும் தமிழ் என்று இருந்தால் தனி மனிதனின் சுயமரியாதையை பெற்று தருவது என்று இருந்தால், ஏன் நான் மேலே குறிப்பிட்ட ஊரின் பிரச்னையில் தமிழ் அழிக்கபடுவதை எதிர்த்து ஒரு குரல் கூட விடவில்லை? அந்த அபலைகள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அவர்களை அடக்கி வைத்திருப்பவரை எதிர்த்து ஒரு சிறிய அறிக்கை கூட விட வில்லை.
//எல்லா மக்களிடமும் உங்களின் உயர்ந்த பகுத்தறிவை பரப்பும் சமத்துவ நோக்கம் இருந்தால் எல்லா மதத்தாரிடம் உங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை சமமாக பரப்ப தாயரா?//
நண்பர் சதீஸ் இத்தளத்திற்கு வந்து பாருங்கள். எந்த அளவிற்கு ஆக்க பூர்வபாக மற்ற மதங்களையும் விவாதிக்கிறோம்.
நண்பர் திருச்சிக்காரன் கூட கிறித்தவர்களை விமர்சிப்ப்பார் ஆனால் இயேசு(ஈசா அல்லது ஜீசஸ்) மீது மட்டும் எதோ பாசம் விமர்சிக்க மாட்டார். ஆகவே இக்கருத்து அவருக்கு கூறப் பட்டது என்றே எடுத்துக் கொள்வோம்.
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. என் சிறு அறிவுக்கு எட்டக் கூடிய விஷ்யங்களை பற்றி மட்டுமே விவாதிப்பேன்.
நான் சொல்வது எல்லாம் நானும் பெரியார் செய்த எல்லா விஷயங்களும் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று கூற மாட்டேன். அவர் காலத்திற்கு அவர் செய்தது சரியாக இருந்திருக்கும். அவர் ஒரு இயக்கத்தின் தலைவர்.சுய விருப்பு,வெறுப்பு,காலத்தின் கட்டாயங்கள் போன்றவற்றிற்கு அவர் விதி விலக்கு அல்ல.
திராவிட இயக்கம் சாதி ரீதியான ஒடுக்கல்களை இந்து மத்தின் மீது போட்ட பொழுது,இந்து மத வாதிகள் சில மத சீர் திருத்தங்களை செய்ய வேண்டியது கட்டாய மாகியது.
உ.ம் 1.தேவதாசி முறை ஒழிப்பு( இதை ஆதரித்து பேசிய தலைவர் யார் சொல்லுங்கோ)
2.பால்ய திருமணம்.
3.தீண்டாமை(வர்ணாசிரம பாதுகாப்பு மாநாடு நடத்தியவர்கள் யார்?)
4.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அனைவரும் நுழைந்தவுடன் தீட்டுப் பட்டதாக கூறி இன்னொரு கோயில் ஆரம்பித்தது யார்?
இக்காலத்தில் மனிதர் அனைவரும் தங்களுக்கு நன்மை தரக்கூடிய செயல்களை மட்டுமே தேடுகிறார்கள். எல்லாருக்கும் நன்மை தீமை தெரிகிறது. மற்ற மாநிலங்களை ( கல்வி,வேலை வாய்ப்பு,போக்கு வரத்து,இலவச திட்டங்கள்)விட தமிழ்நாடு முன்னேறியிருப்பதற்கு காரணம் இந்த அறிவு முன்னேற்றமே.
//ஒரு மனிதன் பணக்காரனாகவோ குருடனாகவோ வாழ அந்த மனிதனோ அவன் பெற்றோரோ அவன் முன்னோரோ காரணம் என கருதுகிறேன்.மனிதனின் இனப,துன்பகளுக்கான பிறப்பிற்கு கடவுள் தான் காரணம் என்றால் அப்படிப்பட்ட ” (edited)கடவுள்” இந்த உலகத்திற்கு தேவையா //
i too agree with you and be against to god ,if you are providing valid reason why some one has to born with a poor parent and another to born at kalainjar or ambaani family?
why a blind baby born to a medically well being parents.
any parent prefers to have a deaf or blind baby?
handicapped persons to be taken care specially and treated like as normal persons (that is different)
question is why they happens to born as handicapped?
nowhere we claims that the god is the reason for some ones illness or sick or poverty,and we never think he is the one creating persons with physically challenged and well beings as he likes.
if you assumes so, then that will be your own theory. by saying this way yourself you are agreeing the existence of god. in your views he is cruel but he exist.
if there is a god like you assume, i will be definitely the first against person to him really.i never ever image such a cruel god.
இந்த உலகம் நிரந்தரம், மனிதனின் வாழ்க்கை இந்த உலகத்தில் மட்டும் தான் என்ற எண்ணத்தோடு பார்ப்பதால்தான் எந்த பிரச்சனை. எல்லோரும், ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். கடவுள் ஒருவனுக்கு ஒரு குறையை அனுமதித்து இருக்கிறார் என்றால், அதன்பின் பல காரணங்கள் இருக்கும். தனக்கு கொடுக்கப்பட்டு இருப்பதில் இம்மையில் உண்மையாய் இருப்பவனை, தேவன் மறுமையில் (இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகு), கனப்படுத்துவார்.
உடனே, நீ கண்ணில்லாமல் இருந்து பார் உனக்கு அந்த கஷ்ட்டம் தெரியும் என்று சண்டைக்கு வரவேண்டாம். எனக்கு கண் இருக்கிறது, ஆனாலும் ஊனத்தின் வலியை நன்கு அறிந்தவன். தனக்கு இல்லாததை நினைத்து வருந்துவதை விட, இருப்பதை வைத்து, அதனால் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதே சாலச்சிறந்தது.
திரு சேகர் அவர்களே,-
//”உண்மை என்பது மாற்றத்திற்கு உட்பட்டது”///
என்றும் மாறாதது தானே உண்மை என்பது,அப்படி மாற்றத்திற்கு உட்பட்ட உண்மை என்ன என்று ஏதாவது ஒரு உதாரணம் சொல்ல முடியுமா.?
///அவரைப் பற்றி நீங்கள் முழுமையாக படிக்கவிலலை அல்லது படிக்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.///
இந்துமதத்தில் உள்ள ,அனைத்து வேதங்கள்,உபநிசத்துக்கள்,அதில் உள்ள ஆயிரக்கணக்கான சாகைகள்,சாத்திரங்கள் ,புராணங்கள்,இதிகாசங்கள்,நாலாயிரம் திவ்விய பிரபந்தம்,ஆழ்வார் பாசுரங்கள்,,சித்தர் பாடல்கள்,பெரியபுராணம்,சைவத் திருமுறைகள்,திருவிளையாடல் புராணம்,,மற்றும் பல இந்து சமய நூல்கள் இது போன்ற இந்து மதத்தில் சொல்லப்பட்ட அனைத்தையும் படிப்பதற்கு இந்த ஒரு பிறவி போதாது.நான்கு வேதங்களைப் முழுதாகப் படிப்பதற்கே இந்த ஒரு பிறவி போதாது என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார்.அப்படி இருக்க இவை அனைத்தையும் படித்து புரிந்து விட்டா இந்து மதத்தைப் பெரியார் விமர்சனம் செய்தார்.???
கற்பு என்பதும்,திருமணம்செய்வதும்,கர்ப்பம் தரிப்பதும்,குழந்தைப் பெற்றுக்கொள்வதும் பெண்ணடிமைத்தனம் என்று கூறியிருக்கிறாரே பெரியார்.உலகில் உள்ள பெண்கள் அனைவரும் இப்படி இருந்தால் ஒரு நூற்றாண்டிலேயே மனித இனம் அழிவது உறுதி அல்லவா?இதைப் போன்ற மனித இனமே அழியும் கொள்கைக் கூறியவரா பகுத்தறிவுவாதி.???
//நண்பர் சதீஸ் இத்தளத்திற்கு வந்து பாருங்கள். எந்த அளவிற்கு ஆக்க பூர்வபாக மற்ற மதங்களையும் விவாதிக்கிறோம். //
நிச்சயம் வருகிறேன் தோழரே.படித்து விட்டு பின்னர் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் அது இன்றைய பெரியாரின் வாரிசுகளின் , திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு அல்லவே தோழரே,செம்படையினராகிய உங்களுடைய செயல்கள் தானே.
//திராவிட இயக்கம் சாதி ரீதியான ஒடுக்கல்களை இந்து மத்தின் மீது போட்ட பொழுது,இந்து மத வாதிகள் சில மத சீர் திருத்தங்களை செய்ய வேண்டியது கட்டாய மாகியது.
உ.ம் 1.தேவதாசி முறை ஒழிப்பு( இதை ஆதரித்து பேசிய தலைவர் யார் சொல்லுங்கோ)
2.பால்ய திருமணம்.
3.தீண்டாமை(வர்ணாசிரம பாதுகாப்பு மாநாடு நடத்தியவர்கள் யார்?)
4.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அனைவரும் நுழைந்தவுடன் தீட்டுப் பட்டதாக கூறி இன்னொரு கோயில் ஆரம்பித்தது யார்?//
இன்றைய இந்து சமுதாயம் கொண்டுள்ள தவறான களையெடுக்க பட வேண்டிய எதாவது விஷயங்கள் இருந்தால் கூறுங்கள். போன நுற்றாண்டு வரை சில தவறான பழக்கங்கள் இருந்து அவை திருந்திய நிலையில் அதனை வைத்தே இன்னும் எதற்கு சாடுகிறீர்கள். மேற்கூறிய யாவுமே குறிப்பிட்ட சிலரால் தங்கள் சுயநல நோக்கத்திற்காக ஒரு சமுகத்தை அடக்கி அதிகாரம் செய்த செயல். இவை நீங்கி விட்டன.
தவறு இருப்பின் திருத்தவேண்டியது தானே முறை,பழைய தேவையில்லாத நீங்கள் மேற்கூறிய தீய விஷயங்கள் கழிந்த ஒன்றுதானே. இன்னும் இவை எங்கே நடைமுறையில் உள்ளன கூறுங்கள்.
இன்றைய தேதியில் யாரவது வர்ணாஸ்ரம முறையும், தேவ தாசி முறையும் பின் பற்றுகிரார்களா? பால்ய மணம் செயவிக்கிரார்களா?
அப்படி ஒரு சிலர் அக்காலத்தில் செய்திருந்தாலும் அவர்களின் குடும்ப வாரிசுகளையா நாம் சாடுவது? அவரின் கொள்கை வாரிசுகளை அல்லவா நாம் சாட வேண்டும். அப்படியும் யாரும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை.
இவை நடந்தது எல்லாம் மனிதனின் தவறே அன்றி மதத்தின் கடவுளின் தவறு என்று எப்படி கூறுகிறீர்கள். இந்து வேதத்தில் எங்காவது பால்ய மணம் செய்யவும், தேவதாசி முறையும், சாதி பார்த்து மனிதனை மதிக்கவும் கூறப்பட்டுள்ளதா?
ஒரே குற்றத்திற்கு ஒரு அந்தணனுக்கு அதிக தண்டனையும், சத்ரியனுக்கு குறைந்த தண்டனையும் இப்படியே குறைந்து கொண்டே போவதாக தானே கூறுகிறார்கள். பின்னர் வந்தவர்கள் செய்த குறுக்கு வேலை திருத்தப்பட்டு விட வில்லையா?
பெரியார் பிறக்கும் முன்பே சமய சீர்திருத்தம் செய்த ராமானுஜர் இல்லையா? அவர் தீண்டாமைக்கு எதிராக செயல் பட்டது பெரியாரை விட பல நூற்றாண்டு முன்பு அல்லவா?
இப்பவும் சொல்கிறேன் கடவுள் வழிபாடு வேறு (தனி நபர் சுதந்திரம்), மனிதநேயத்துடன் நடப்பது வேறு (எல்லோருக்கும் பொதுவான தேவை).இதிலே வழிபாட்டை வைத்து மனித நேயத்தை அழிப்பவனை யாராக இருந்தாலும் வேருடன் களைவது தான் நாம் செய்ய வேண்டியது,கடவுளையோ வழிபாட்டையோ அல்ல,அந்த ஈன செயல்புரியும் அக்கிரமக்காரனை. ஏனென்றால் வழிபாடு என்பது அந்த கயவர்களுக்கு மட்டுமானது அல்ல. அங்கே தோன்றிய ஒரு புல்லுருவியே அவன்.
மனிதனை மனிதனாக பார்ப்போம் கடவுளை அவன் அவன் விருப்பபடி வணங்கட்டும்,அது அவரவர் உரிமை. . அப்படி வணங்கும் சமுகத்தில்
உண்டாகும் ஏற்ற தாழ்வுகள் எந்த ஒரு மனிதனையும் பாதித்தால் அதனை எதிர்ப்போம். வெறுமனே ஒரு சமுகத்தின் உணர்வுகளை அல்ல .
// இந்து வேதத்தில் எங்காவது பால்ய மணம் செய்யவும், தேவதாசி முறையும், சாதி பார்த்து மனிதனை மதிக்கவும் கூறப்பட்டுள்ளதா?//
மனு ஸ்மிருதியை பாரும். பெண்ணின் திருமண வயதை அவர் குறிப்பிட்டு உள்ளார். 14 வயதுக்குள்ளானவர்கள் என்னை பொறுத்தவரை திருமண வயதை அடைந்தவர்கள் அல்ல.
பார்பன நலனுக்கு எது தேவையோ அதை எல்லாம் ஏற்று கொள்வர். எது தேவை இல்லையோ அதை இது வேதத்தில் இல்லை என்று ஒரே போடு போடுவார்கள்.
சதீஷ், எத்தனையோ தலைவர்கள் சமுதாய இழிவு நீங்க போராடினர். யாரும் மறுக்கவில்லை. அதில் பெரியாரின் பங்கு முதன்மையானது. எந்த வித சமரசமும் இல்லாதது. இன்றைய வீரமணி அன் கோ வை வைத்து பெரியாரை அளவிடாதீர்கள். பெரியார் சிந்தனையும் மார்க்சியத்தையும் பிரிக்க முடியாது. பெரியாரை சரியாக தெரிந்து கொள்ளுங்கள். அந்த சிந்தனையின் தேவை விளங்கும். இந்து மதத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் கிருத்துவ தளத்தில் இந்து மதம் பற்றிய இடுகைகளையா பார்ப்பீர்கள்? அது போல் தான் பெரியாரை தெரிந்து கொள்ள திரிச்சிகாரன், தமில்ஹிண்டு.காம் பார்க்காதீர்கள்.
நான் கூட ஆரம்பத்தில் பெரியாரை வெறுத்தவன் தான். பிறகு தான் புரிந்தது பெரியாரின் தேவை.
திரு பிரதீப் அவர்களே,
///இந்து மதத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் கிருத்துவ தளத்தில் இந்து மதம் பற்றிய இடுகைகளையா பார்ப்பீர்கள்? அது போல் தான் பெரியாரை தெரிந்து கொள்ள திரிச்சிகாரன், தமில்ஹிண்டு.காம் பார்க்காதீர்கள்.///
மிகச் சரியாகக் கூறினீர்கள் பிரதீப் அவர்களே.அதே போல் நீங்கள் இந்து மதத்தைத் தெரிந்து கொள்ள உபநிசத்துக்கள் ,பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, திருமந்திரம் மற்றும் விவேகானந்தர் ,அரவிந்தர்,ஸ்ரீ ராமகிருஷ்ணர் போன்றோரது நூல்களைப் படியுங்கள். பெரியார் புத்தகங்களைக் கொண்டு இந்து மதத்தை தெரிந்து கொள்ளாதீர்கள்.
அப்படி செய்தால் நீங்கள் கூறியது போல் திருச்சிக்காரன்,தமிழ் ஹிந்து .காம் போன்ற தளங்களைப் படித்து பெரியாரைப் புரிந்து கொள்வது போலத்தான், நீங்களும் பெரியார் புத்தகங்களைப் படித்து இந்து மதத்தைப் புரிந்து கொள்வது..
பெரியார் ஒரு சாக்கடை….கோவிலில் மணியாட்டும் பாப்பான்களே உயர்ந்தவர்கள்.இதைச் சொல்ல எதற்கு சுற்றி வளைக்கவேண்டும்.
திரு அசோக் குமார் கணேசன் அவர்களே,
///மனு ஸ்மிருதியை பாரும்.///
மனுஸ்மிருதி வேதமல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கும் அது தெரியும்.
ஆனால் உங்கள் பச்சோந்திதனம்தான் புரியவில்லை. நாங்க வேதத்தை பற்றி கேட்டால், புராணங்களுக்கு ஓடுவது. புராணத்தை பற்றி கேட்டால் வேதமே முக்கியம் என்று பல்டி அடிப்பது.
இது நான் உங்களை மட்டும் கூறவில்லை. திருச்சிக்காரன், தமில்ஹிண்டு, etc ., எல்லாம் இப்படிதான்.
//ராவணன், on September 22, 2010 at 22:31 Said:
பெரியார் ஒரு சாக்கடை….கோவிலில் மணியாட்டும் பாப்பான்களே உயர்ந்தவர்கள்.இதைச் சொல்ல எதற்கு சுற்றி வளைக்கவேண்டும்.
Reply //
i agree with your first quote. and not saying the second one absolute.
//Ashok kumar Ganesan, on September 22, 2010 at 22:31 Said:
// இந்து வேதத்தில் எங்காவது பால்ய மணம் செய்யவும், தேவதாசி முறையும், சாதி பார்த்து மனிதனை மதிக்கவும் கூறப்பட்டுள்ளதா?//
மனு ஸ்மிருதியை பாரும். பெண்ணின் திருமண வயதை அவர் குறிப்பிட்டு உள்ளார். 14 வயதுக்குள்ளானவர்கள் என்னை பொறுத்தவரை திருமண வயதை அடைந்தவர்கள் அல்ல.
Reply //
திருமணமே இல்லாமல் 13 வயதிலே பெற்றுகொள்வது எல்லாம் கிறித்தவ நட்டு குழந்தைகளிடம் இப்போது சாதரணமாக நடக்கிறது.இது ஏதோ எங்கோ ஒன்று நடப்பதாக தெரியவில்லை. இந்த தொல்லை தாங்காம லண்டனில் சிறுவர்களுக்கான மினி சைஸ் ஆணுறை தயாரிக்க முடிவு செய்து விட்டார்களாம். தினமலரில் சில தினங்கள் முன்பு வெளியான செய்தி இது.
இன்னும் நிறைய இருக்கிறது சொல்வதற்கு, பல வலைதளங்களே சொல்கின்றன உங்களின் ஏக வேதத்தை பற்றி. ஆனால் நான் இதற்கு மேல் இறங்கி வர விரும்பவில்லை. அந்த தளங்களில் போய் படித்து பதில் எழுதுங்கள்.
திரு தனபால் அவர்கள் கூறியது போல மனு ஸ்ம்ருதி வேதம் அல்ல. நன்றி திரு தனபால் ஐயா அவர்களே.
//திருமணமே இல்லாமல் 13 வயதிலே பெற்றுகொள்வது எல்லாம் கிறித்தவ நட்டு குழந்தைகளிடம் இப்போது சாதரணமாக நடக்கிறது.இது ஏதோ எங்கோ ஒன்று நடப்பதாக தெரியவில்லை. இந்த தொல்லை தாங்காம லண்டனில் சிறுவர்களுக்கான மினி சைஸ் ஆணுறை தயாரிக்க முடிவு செய்து விட்டார்களாம். தினமலரில் சில தினங்கள் முன்பு வெளியான செய்தி இது.//
முதலில், நீங்கள் சொல்லும் நாடுகள் கிறிஸ்துவ நாடுகளே அல்ல. வெள்ளைக்காரன் எல்லாம் கிறிஸ்துவன், அரபி எல்லாம் முஸ்லிம் என்று உலக ஞானம் இல்லாத ஞானசூனியம்தான் சொல்லும்.
பைபிள் எந்த இடத்திலும் விபச்சாரம் செய் என்று சொன்னதில்லை. அடுத்த பெண்ணை இச்சையோடு பார்க்ககூட கூடாது என்றே சொல்கிறது. மனிதர்கள் திமிரெடுத்து செய்யும் காரியதிர்க்கு வேதமோ தேவனோ பொறுப்பாளி ஆக முடியாது.
தவிர, கொல்கொத்தாவிலும், மும்பையிலும் விபசாரத்திற்கு உட்படுத்தப்படும் சிறுமிகளின் எண்ணிக்கையை விட, இந்த மேல்நாட்டு தவறுகள் செய்யும் குழந்தைகள் குறைவே.
பரபரப்புக்காகவும், உம்மை போன்ற வக்கிர புத்தி உள்ளோரின் மகிழ்ச்சிக்காகவும் வெளிவரும் பத்திரிக்கைகள் இந்த மாதிரி விஷயங்களை தான் போடுவார்கள். நீங்களும் அதைதான் தேடி தேடி படிப்பீர்கள்.
நீங்கள் கூறும் அந்த ஸ்ம்ருதியை கொளுத்த தயார். இன்னும் எங்கெங்கு இது போன்ற குப்பைகள் இருந்தாலும் அவற்றை அழித்துவிட்டு உருப்படியான பிற விசயங்களையும் பின்பற்ற தயார்.
இந்து மதம் ஸ்மிருதியை நம்பி இல்லை.
உங்களின் ஒரே வேதத்தில் எண்ணற்ற கன்றாவிகளை காட்டுகிறார்கள் அவற்றை எல்லாம் எரிக்க தயாரா?
உங்கள் தேவனை வணங்கதவர்களை பாவிகளே என்றும், பிறரின் கடவுளை சாத்தானே என்றும் கூற சொல்கிறார்களே. அந்த வழக்கத்தை கொளுத்த தயாரா?
உங்களிடம் உள்ள குறைகளை சீர்திருத்த தயாரா? அடுத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் துன்பங்கள் அனைத்தும் எங்கிருந்தாலும் அவை அழிக்க வேண்டியவை. நீங்கள் தயாரா?
//நீங்கள் கூறும் அந்த ஸ்ம்ருதியை கொளுத்த தயார். இன்னும் எங்கெங்கு இது போன்ற குப்பைகள் இருந்தாலும் அவற்றை அழித்துவிட்டு உருப்படியான பிற விசயங்களையும் பின்பற்ற தயார்.//
Very Good.
//இந்து மதம் ஸ்மிருதியை நம்பி இல்லை.//
First of all, இந்து மதம் என்றே ஒன்று இல்லை.
//உங்களின் ஒரே வேதத்தில் எண்ணற்ற கன்றாவிகளை காட்டுகிறார்கள் அவற்றை எல்லாம் எரிக்க தயாரா?//
அப்படியா?? எனக்கு ஒரே ஒரு கண்றாவி கூட கண்ணில் படவில்லையே.
நான் ஏன் அதை எரிக்க வேண்டும்?
உம்மை போல, ஒன்றை வழிபாட்டு, பிறகு அதையே கடலில் கரைத்துவிட்டு ஜிங்கு ஜிங்கு ன்னு ஆட்டம் போடும் ஆள் அல்ல நான்.
//உங்கள் தேவனை வணங்கதவர்களை பாவிகளே என்றும், பிறரின் கடவுளை சாத்தானே என்றும் கூற சொல்கிறார்களே. அந்த வழக்கத்தை கொளுத்த தயாரா?//
உண்மையை கூறும் ஒரு பொக்கிஷத்தை யாராவது கொளுத்துவான்களா?
//உங்களிடம் உள்ள குறைகளை சீர்திருத்த தயாரா? அடுத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் துன்பங்கள் அனைத்தும் எங்கிருந்தாலும் அவை அழிக்க வேண்டியவை. நீங்கள் தயாரா?//
தயார்.
////First of all, இந்து மதம் என்றே ஒன்று இல்லை///
மிகச் சரியாகக் கூறினீர்கள்.இந்து மதம் என்பது முதலில் இதே பெயரில் அழைக்கப்படவில்லை. இந்து மதம் முதலில் சனாதன தர்மம் என்றே அழைக்கப்பட்டது.சனாதன தர்மம் என்றால் .எல்லோருக்குமான, என்றுமுள்ள தர்மம் என்பதாகும்.
ஐரோப்பியர்கள் இந்த தர்மம் என்ற வார்த்தைக்கு சரியான ஆங்கில வார்த்தை இல்லாததால் religion என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.இதனால் தர்மம் என்ற வார்த்தை மதம் என்று ஆனது.
இந்த சனாதன தர்மத்தை பின்பற்றியவர்கள் சிந்து நதிக்கு கிழக்கே வாழ்ந்ததால் அவர்கள் வாழ்ந்த பகுதியைக் குறிக்க சிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். (ஐரோப்பா,அமேரிக்கா போன்ற நாடுகள் மேற்கு திசையில் உள்ளதால் மேற்கு /மேலை (நாடுகள்) என்று திசையின் பெயரை பயன்படுத்துவது போல )
சிந்து மருவி ஹிந்து வாயிற்று.இப்படி தான் சனாதன தர்மம் ஹிந்து மதம் ஆனது.
இது அனைவருக்குமான மதம்,உருவ வழிபாடு செய்பவர்கள்,அருவ வழிபாடு செய்பவர்கள்,போன்ற அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் தர்மம் எங்கள் சனாதன தர்மம்.
சரியாக சொன்னீர்கள் தனபால். இந்து மதம் மதமே இல்லை. அது ஒரு மார்க்கமே இல்லை. மார்க்கம் என்பது “பாதை” என்பதாகும். இந்துமதம் ஒரு வெட்டவெளி, விளையாட்டு திடல் போன்றது. இந்த வெட்ட வெளியில் எவ்வளவு வேண்டுமானாலும், விளையாடலாம், ஆட்டம் போடலாம், ஆனால், அது உங்களை எங்கும் அழைத்து செல்லாது.
கிறிஸ்துவம் அப்படியல்ல, அது மிக குறுகியது. ஆனால், மிகச்சரியாக தேவனிடம் அழைத்துசெல்லக்கூடியது.
திரு அசோக் குமார் கணேசன் அவர்களே,
///சரியாக சொன்னீர்கள் தனபால். இந்து மதம் மதமே இல்லை. அது ஒரு மார்க்கமே இல்லை. மார்க்கம் என்பது “பாதை” என்பதாகும்.///
அனைத்து மதமும்,அனைத்து மார்க்கமும் இந்த சனாதன தர்மத்திர்க்குள் .
///இந்துமதம் ஒரு வெட்டவெளி, விளையாட்டு திடல் போன்றது. இந்த வெட்ட வெளியில் எவ்வளவு வேண்டுமானாலும், விளையாடலாம், ஆட்டம் போடலாம்,///
இந்து மதம் ஒரு மகா சமுத்திரம்.மற்ற மதங்கள் இந்த சமுத்திரத்தில் கலக்கும் ஆறுகள்.
///ஆனால், அது உங்களை எங்கும் அழைத்து செல்லாது.///
எல்லாம் (கடவுள்) எங்களிடமே இருக்கிறது.நாங்கள் ஏன் எங்கோ செல்ல வேண்டும்???
///கிறிஸ்துவம் அப்படியல்ல, அது மிக குறுகியது.///
இது தெரிந்தது தான்.
///கிறிஸ்துவம் அப்படியல்ல, அது மிக குறுகியது. ஆனால், மிகச்சரியாக தேவனிடம் அழைத்துசெல்லக்கூடியது///
ஆம்.கிறிஸ்தவர்களை மட்டும்.ஆனால் அனைத்து கிறிஸ்தவப் பிரிவுகளையுமா???
//போன நுற்றாண்டு வரை சில தவறான பழக்கங்கள் இருந்து அவை திருந்திய நிலையில் அதனை வைத்தே இன்னும் எதற்கு சாடுகிறீர்கள்.//
//மேற்கூறிய யாவுமே குறிப்பிட்ட சிலரால் தங்கள் சுயநல நோக்கத்திற்காக ஒரு சமுகத்தை அடக்கி அதிகாரம் செய்த செயல்.//
//இவை நீங்கி விட்டன.//
இவை நீங்கவில்லை ஒழிக்கப் பட்டன.
யார் அந்த குறிப்பிட்ட சில பேர்?
அந்த சுய நல நோக்கம் என்ன?
நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,
இதை அடையாளம் காட்டியதே பகுத்தறிவு.
அவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுவத்ற்கேஎ அஞ்சும் சூழ்நிலையை ஏற்படுத்தியது பகுத்தறிவு.
//இன்றைய இந்து சமுதாயம் கொண்டுள்ள தவறான களையெடுக்க பட வேண்டிய எதாவது விஷயங்கள் இருந்தால் கூறுங்கள்.//
இந்து மதமும் அதன் ஒன்று விட்ட சகோதரன் கிறித்தவ மதமும் செய்ய வேண்டியவை.
1.திருமணத்தில் சாதி பார்க்கப் படுகிறது. கலப்புத்திருமணம் செய்ய எந்த மத அமைப்பும் தயாராக இல்லை. சாதியை ஒழிக்க சாதித்திருமணம் ஒழிக்கப் பட வேண்டும்.நான் சாதி மறுப்பு திருமணம் செய்தவன்.இதனை ஒவ்வொருவரும் கடை பிடித்தால் மட்டுமே சாதி ஒழியும்.நீங்கள் தயாரா?
2.மத அமைப்புகளின் தலைவராக உயர் சாதியினர் மட்டுமே வர முடிகிறது.அரசு ஆணை குப்பையில் போட படுகிறது.
இந்து மத்த்தில் பிராமணர்களே எல்லா பெரிய கோயிலிலும் அர்ச்சகராக இருக்கிறார்கள்.
கிறித்தவ மத்த்தில் பெரும்பாலோன பாதிரிகள், பிஷப்கள் தாழ்த்தப் பட்டவர்கள் அல்லாதவரே.இதனை ஒழிக்க என்ன செய்யலாம்.
எல்லா மடங்களும் சாதி ரீதியான அமைப்புகளாகவே செயல் படுகின்றது. எல்லா மடத் தலைவர்களும் சுழற்சி முறையில் பதவி வகிக்க வேண்டும்.
3.கோயில்களில் வழிபாட்டுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
4. மத அமைப்புகள் ஒழ்ங்கு படித்தப்பட்டு கர்ப்பரேட் சாமியார்களை ஒதுக்க வேண்டும்.
//திரு தனபால் அவர்கள் கூறியது போல மனு ஸ்ம்ருதி வேதம் அல்ல//
வேதங்கள் என்பது எது என்பதை ஒரு பட்டியல் இடவும்.இதன் தமிழ் மொழி பெயர்ப்பு கிடைக்கும் இடத்தையும் கூறவும்.
மிக்க மகிழ்ச்சி வரவேற்கிறேன் உங்களின் கருத்துகளை.
வேதமும் வேண்டாம் விட்டொழிப்போம். வேதம் என்பது எனக்கு தெரிந்து ரிக்,யசுர்,சாம,அதர்வண.அவற்றின் தமிழ் பதிப்பு எங்கே கிடைக்கும் என்றே எனக்கும் தெரியாது. கிடைத்தால் படிக்க வேண்டும் என்று தேடிக்கொண்டுதான் உள்ளேன். அவற்றில் ஏதானும் தேவை இல்லாத பிறருக்கு தொல்லை தரும் விஷயம் இருந்தால் அதுவும் வேண்டாம். தமிழ் வேதங்கள் ஆன திருமுறைகளும், பாசுரங்கலுமே கூட போதும்.அவற்றை கூட நான் படித்ததில்லை, ஒன்றிரண்டு கேட்டதுடன் சரி.
//1.திருமணத்தில் சாதி பார்க்கப் படுகிறது. கலப்புத்திருமணம் செய்ய எந்த மத அமைப்பும் தயாராக இல்லை. சாதியை ஒழிக்க சாதித்திருமணம் ஒழிக்கப் பட வேண்டும்.நான் சாதி மறுப்பு திருமணம் செய்தவன்.இதனை ஒவ்வொருவரும் கடை பிடித்தால் மட்டுமே சாதி ஒழியும்.நீங்கள் தயாரா?//
நான் தயார் எனக்கு திருமணம் ஆகிவிட்டபடியால்,என் வாரிசுகள் விரும்பும் நபரை திருமணம் செய்ய அவர் நல்லவரா என்ற ஒரே தகுதியை மட்டும் பார்த்து திருமணம் செய்விக்க தயார்.
//2.மத அமைப்புகளின் தலைவராக உயர் சாதியினர் மட்டுமே வர முடிகிறது.அரசு ஆணை குப்பையில் போட படுகிறது.
இந்து மத்த்தில் பிராமணர்களே எல்லா பெரிய கோயிலிலும் அர்ச்சகராக இருக்கிறார்கள்.
கிறித்தவ மத்த்தில் பெரும்பாலோன பாதிரிகள், பிஷப்கள் தாழ்த்தப் பட்டவர்கள் அல்லாதவரே.இதனை ஒழிக்க என்ன செய்யலாம்.
எல்லா மடங்களும் சாதி ரீதியான அமைப்புகளாகவே செயல் படுகின்றது. எல்லா மடத் தலைவர்களும் சுழற்சி முறையில் பதவி வகிக்க வேண்டும்.//
இதிலும் நான் முற்றிலும் உடன்படுகிறேன். எங்கேயாவது நீங்கள் இது சம்மந்தமான போராட்டம் நடத்தினால் நான் கலந்து கொண்டு என்பங்கை ஆற்ற தயார். தகுதி எப்போதும் அந்த பதவிக்கான திறமையும்,அதிலுள்ள ஈடுபாட்டையும், அனுபவ அறிவையும் கொண்டே தீர்மானிக்க பட வேண்டும் பிறப்பினால் அல்ல என்பதில் எனக்கு சிறிதும் மாற்று கருத்து இல்லை. உங்களின் இது போன்ற விசயங்களுக்கான போராட்டத்தை நான் பலரிடம் பரப்ப தயார். பெரியார் மடத்தையும் சேர்த்து போராட்டம் இருந்தால் அது மிக சிறந்த நடுநிலை. வாருங்கள் ஒன்று கூடி களை எடுப்போம். உங்களின் தளத்திலே இதற்கான அறிவிப்பிகளை நான் எதிர்பார்க்கிறேன்.
//3.கோயில்களில் வழிபாட்டுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.//
இதனை செய்து கோவிலின் மானத்தை வாங்குவது அரசாங்கம் தான். அதனையும் எதிர்ப்போம் வாருங்கள்
//4. மத அமைப்புகள் ஒழ்ங்கு படித்தப்பட்டு கர்ப்பரேட் சாமியார்களை ஒதுக்க வேண்டும்.//
நான் ஒரு போதும் இன்றுள்ள சாமியர்கலையே நம்பியதில்லை பின் என்ன கார்ப்பரடே சாமியார்கள்.
//இந்து மதமும் அதன் ஒன்று விட்ட சகோதரன் கிறித்தவ மதமும் செய்ய வேண்டியவை.//
இன்னொரு பங்காளி எங்கே காணவில்லை ?
ஏன் அந்த மற்றொரு மதத்தில் எந்த குறையும் இல்லை என்பது உங்கள் தீர்மானமா? ஏன் இங்கு பாரபட்சம்.
//அவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுவத்ற்கேஎ அஞ்சும் சூழ்நிலையை ஏற்படுத்தியது பகுத்தறிவு.//
ஒருவனை ஒரு இனத்தை திருத்துவது வேண்டுமானால் போற்றத்தக்கது. தான் இன்னார் குடும்பத்தில் பிறந்தவன் என்று கூற கூட பயம் கொள்ள வைத்திருக்கிறது என்றால் அது அராஜகமாகத்தான் தெரிகிறது.
கொலை காரனின் மகன் முன்னேறி போலீஸ் காரனகி என் தந்தை இன்னார் (கொலை காரன்) நான் போலீஸ் என்று சொல்லும் அளவு முன்னேற்றுவது பெருமையான விஷயம். ஆனால் நான் போலீஸ் என் தந்தை என்று யாருமே இல்லை என்று சொல்லும் அளவு ஒருவனை மிரட்டி அடக்கி பயமுறுத்தி வைப்பது அராஜகம். தந்தையை தந்தை என்று சொல்ல முடியாமல் செய்வது பெருமை அல்ல. அவன் கொடிய மிருகமாக இருந்தாலும் அவன் குற்றவாளி என்பது மறுக்க முடியாது ஆனாலும் தந்தை தந்தையே.
//இதை அடையாளம் காட்டியதே பகுத்தறிவு.//
நிச்சயம் பெரியார் போதித்தது வெறுப்பு அறிவு, அழிப்பு அறிவு. அவருக்கு முன்னரே நிறைய உண்மையான பகுத்தறிவாளர்கள் பிறந்து தம் பணியை தொடங்கி விட்டனர்.
இவர் அதிக விளம்பரத்தாலும் அடக்கு முறையாலும் முன்னோரிடமே இருந்த ஒரு சில நல்ல விசயங்களை மட்டும் கையில் எடுத்து கொண்டதாலும் தான் பிரபலமானார்.
சாதி எதிர்ப்பை மூட நம்பிக்கை எதிர்த்த எத்தனையோ ஆத்தீகர்கள் சாதித்து விட்டு எந்த விளம்பரமோ ஒன சைடு வேலையோ செய்யாமல் இன்றும் சமுதாயத்துக்கு நன்மை செய்யும் வழிகளை செய்து விட்டு போய் விட்டனர். என்ன அவர்கள் விளம்பரம் செய்து ஆதாயம் அடைய நினைக்கவில்லை. இவர் வாழ்க்கையே விளம்பரமாக்கி ஆதாயம் அடைந்து விட்டார். இப்போது அவரின் அடியார்கள் அடைகின்றனர்.
யாரவது அந்தணராக வேண்டும் என்று ஆசைப்பட்டால் (தேவை இல்லை மனிதராக இருப்பதே போதும் என்பது தான் என் எண்ணம். இந்த ஜாதியை வைத்தே எப்போதும் இந்து மதத்தை குறை சொல்வதால் இதனை குறிப்பிடுகிறேன்) இஸ்கான் தொடர்பு கொள்ளுங்கள், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வேதம பயிற்று வித்து அந்தனராக்கி விடுகிறார்களாம். இனி யாரும் எந்த நிலையம் அடையலாம். சைதன்ய மகாபிரபு பெரியாருக்கு ஒரு 300 முன்னாவது பிறந்தவர். அவரின் இயக்கம் செய்யததா? இவர் செய்து விட்டார்? கீழே உள்ளவர்கள் அப்படியே இருக்க வைத்து அதனை பெரிதாக்கி அதன் மூலம் அரசியல் செய்வதுதான் இவரும் இவரின் வாரிசுகளும் செய்யும் வேலை. கிழே யாரும் இல்லாவிட்டால் இவர்களுக்கு இங்கு பருப்பு வேகாது அதனாலே இன்னும் ஜாதியை விடாமல் பிடித்து வைத்திருப்பது இவர்களின் கூட்டம் தான்.
வாருங்கள் எல்லோரையும் உயர்சாதியாக மாற்றுவோம். ஜாதி என்ற பெயரையே ஒழிப்போம்.
எதாவது வரலாறு தெரிந்து பேசினால் பதில் சொல்லலாம். சும்மா வெறுமனே பெரியாரை வைவதால் பெரியாருக்கு ஒன்றும் இழுக்கு அல்ல. முதலில் இந்து மத வேதங்களை படியுங்கள் பிறகு பெரியாரை படிக்கலாம்.
பெரியார் ஒன்றுமே செய்யவில்லையா?
http://pagalavan.in/archives/100
திரு சங்கர் அவர்களே,
///வேதங்கள் என்பது எது என்பதை ஒரு பட்டியல் இடவும்.இதன் தமிழ் மொழி பெயர்ப்பு கிடைக்கும் இடத்தையும் கூறவும்.///
ரிக்,யஜூர், சாம, அதர்வண என்று வேதம் நான்கு உள்ளன.ஒவ்வொரு வேதத்திலும் கர்ம காண்டம்,ஞான காண்டம் என்று இரு பிரிவுகள் உள்ளன.இந்த ஞான காண்டத்தில் தான் உபநிஷத்துக்கள் உள்ளன.இவைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.அவற்றில் மிக்கியமானவை 108 உபநிஷத்துக்கள் .இவை ராமகிருஸ்ன மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கர்ம காண்டத்தை சேர்ந்த பகுதிகளில் மிகச் சிறிய அளவே இது வரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழை விட அதிகமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 108 உபநிஷத்துக்கள் மட்டுமே இந்து மதத்தை முழுமையாக அறிந்து கொள்ளப் போதுமானது.வேதங்களை முழுமையாக அறிந்து கொள்ள சமஸ்கிருதம் கற்றால் தான் முடியும்.
வடமொழி வேதங்கள் பெரிது படுத்தி புனித படுத்தி பார்பனர்களால் காட்டப்பட்டது. பழிவாங்கலும் , சபித்தலும் , அந்த காலத்து முட்டாள்களின் உளறலே. உபநிடதங்கள் மட்டும் தான் ஆன்மாவை பற்றி பேசும். மற்ற எல்லா வடமொழி சம்பந்த பட்டவைகள் ஆபாசங்காகவே உள்ளன. தமிழர்கள் நாகரிக பண்பாட்டுக்கு எதிராகவே உள்ளது இந்த குப்பைகள். இது தான் காரணம் பார்பன தீட்சிதர், அர்ச்சகர் , பார்பன சங்கம், போன்றவர்களின் தமிழ் விரோத போக்கிற்கு.
திரு.பிரதீப் அவர்களே,
///மற்ற எல்லா வடமொழி சம்பந்த பட்டவைகள் ஆபாசங்காகவே உள்ளன..///
திராவிட இயக்கத்தினர் தமிழர்கள் எழுதிய பக்தி இலக்கியத்திலேயும் ஆபாசங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.அந்த ஆபாசங்களை உங்கள் மனங்களிலிருந்து நீக்கிவிட்டாலே முக்கால்வாசி ஆபாசம் நீங்கிவிடும். மீதமிருப்பவை அகதிகளாக இங்கு வந்த பார்சிகள் போன்றோராலும்,சில இடைச் செருகல்களாலும் ஏர்ப்பட்டவையே.
///தமிழர்கள் நாகரிக பண்பாட்டுக்கு எதிராகவே உள்ளது இந்த குப்பைகள்///
உபநிசத்துக்களைப் படியுங்கள் .தமிழ் பக்தி இலக்கியங்களையோ,சித்தர்கள் பாடல்களையோ படியுங்கள். உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டதும் இதுவும் ஒன்றே என்று உங்களுக்கே விளங்கும். தென்னிந்திய சித்தர்களுக்கும்,வட இந்திய சித்தர்களும், கூறியவை மொழியில் மட்டுமே வேற்றுமை .தத்துவங்கள், மற்றும் அவர்கள் தவத்தால் கண்ட உண்மைகள் அனைத்தும் 100 % ஒன்றாகவே இருக்கின்றன.தமிழ் சைவத்திருமுரைகளும்,சித்தர்கள் பாடலும் கூறுபவை அனைத்தும் உபநிசத்திலும் உள்ளதே?.கடவுள்,ஆன்மா,ஆன்மாவின் அழிவற்ற தன்மைகள், மறுபிறவி, பிரம்மம், .இந்த உண்மைகள் தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் அனைவருக்கும் ஒன்றே தான். இருவரும் வேறு வேறு என்றால் அவர்கள் கருத்து ஒன்றாக இருப்பது எப்படி.?இந்தியாவில் உள்ள வட இந்தியர்களும் ,தென்னிந்தியர்களும் (கலாச்சார), பண்பாட்டு ரீதியில் ஒன்றுபட்டவர்களே.
தென்னிந்திய வட இந்திய ஆன்மீகக் கருத்துக்கள் மொழி அளவில் மட்டுமே வேறு ஆனால் தத்துவங்கள் ஒன்றே.
தமிழர்கள் உருவ வழிபாட்டுக் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள்.அவர்கள் சாமியாடுவது ,ஆடு கோழி வெட்டி சிறு கிராம தெய்வங்களை வணங்குவார்கள்.மேலும் முருகன்,சிவன் போன்ற கடவுளைவும் வணங்குபவர்கள். எங்கள் கலாச்சாரத்தைத் தவறு என்றும், காட்டுமிராண்டித்தனமானது என்றும், சாத்தானின் மார்க்கம் என்றும், நாங்கள் வணங்கும் கடவுளை சாத்தான் என்றும் கூறி எங்கள் கலாச்சாரத்திற்கு சம்பந்தமில்லாத /எதிரான கலாச்சாரத்தையும் எங்கள் தத்துவங்களுக்கு எதிரான தத்துவங்களையும் எங்களிடம் புகுத்தி எங்கள் கலாச்சாரத்தை இழிவுபடுத்தி, அழிக்கும் உங்களைப் போன்றவர்களின் பண்பாடுதான் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானது.
சில் (edited),
பெரியாரை நாங்கள் வணங்குவது இருக்கட்டும். அவர் சொன்ன கருத்தான கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள் என்பதை நீ முதல் ஏற்றுக்கொள்ளவும். அவர் (edited)வை முட்டாள் என்றே சொல்லிவிட்டார். (…Edited)இதெல்லாம் செய்த பின்னர் இந்துக்களுக்கு பெரியாரை வணங்குங்கள் என்று புத்திமது சொல்லவும். அதுவரை பொத்திக்கொள்ளவும்.
//Ashok kumar Ganesan, on September 22, 2010 at 22:31 Said:
நான் அப்படி ஒரு கொடுமைகாரருக்கு ஜால்ரா போடவேண்டிய அவசியம் என்ன ஐயா? ஆறு வருடங்கள், பெங்களூரில் ராக்கும் கண் பார்வையற்றோர் பள்ளியில் தினமும் இரண்டு மணி நேரமாவது இருந்திருக்கிறேன். பத்திற்கும் மேற்ப்பட்ட பார்வையற்ற நண்பர்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறார்கள்.
உங்களை விட படைத்தவனிடம் நன்றியுணர்வோடு உள்ளனர். தங்களுக்கு கண்பார்வை இல்லாவிட்டாலும், தேவன் அவர்களுக்கு கொடுத்த மற்ற கிருபைகளுக்காக நன்றி சொல்கிறார்கள், சாதிக்கிறார்கள்.
திராணிக்கு மேலாக யாரும் சோதிக்கப்படுவதில்லை.
Reply //
என்ன நீங்க இப்படி ரெண்டு மணிநேரம் அவங்க கூட இருந்துபுட்டு வந்துடுரிங்க,பேசாம ஒரு நாள் சபிச்சு விடுங்க நண்பரே அவங்களுக்கு கண்ணு வந்து அவங்களும் இந்த உலகத்தை பார்த்துட்டு போகட்டுமே.
உங்களுக்கு ஜபிக்க தெரியலேனா யாரவது தெரிஞ்சவங்கள கூப்பிட்டு ஜபிக்க சொல்லுங்க. ஏன் ஜெபிச்சு கண்ணு பாக்க வைக்க முடியுமுன்னு குருடர்கள் பார்க்கிறார்கள்,செவிடர்கள் கேட்கிறார்கள் அப்புடின்னு நெறைய விளம்பரம் பாக்குறேன், அது எல்லாம் பொய்யா?
என்னங்க உங்க கையிலே மருந்த வச்சுக்கிட்டு அவங்களையும் பாவம் கண்ணு தெரியாம வச்சு இருக்கீங்க? பாத்து எதாவது செய்ங்க,இல்லேனா அந்த பொத்தகம் அதிலுள்ள வசனம் எல்லாம் டுபாகூருன்னு யாரவது சொல்ல போறாங்க நண்பரே.
அப்புறம் அந்த கண்ணு இல்லாத கஷ்டத்தையும் தாங்கும் திறனை (திராணியை ), கொடுமை இல்லாத அந்த கடவுள் எப்படி தீர்மானிக்கிறார்?
அதனை எப்படி அவங்களுக்கு மட்டும் தீர்மானிச்சு சோதிக்கணும். ஏன் மத்தவங்களுக்கு கூடாது?
1 | Pradeep
September 20, 2010 at 7:25 am
//பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.//
வாங்க அப்படி வெளியில .. ! பெரியாரை அரைகுறையாக தெரிந்து வைத்துகொண்டு பேசினால் , அல்லது ஒரு பார்பனனால் மட்டுமே இப்படி பேச இயலும். இதில் ஆச்சரியம் கொள்ள எதுவும் இல்லை. பூணூல் வெளியே வந்து பல்லிளிக்கிறது திருசியாரே.
thiruchchikkaaran
September 20, 2010 at 9:55 am
அப்படி போடு. பெரியாரை பற்றி நாம் எழுதி உள்ள கருத்தைப் பற்றி பதில் கருத்து எழுதுவதற்குப் பதிலாக சாதி வெறியையும், சாதிக் காழ்ப்புணர்ச்சியையும் காட்டுவார்கள் என எதிர் பார்த்தோம்.
சாதியை விட்டு விடக் கூடாது என்று பாடு படுவீர்கள போல இருக்கிறதே. யோவ் நீ சாதியை விடாத ஐயா, நீ முதலியார், நீ பார்ப்பனர், நீ வெள்ளாளர் , நீ பிள்ளை மார் …. அப்படியே இருங்க ஐயா… அப்பத்தான் நாங்க அதை வைத்து எங்கள் காலத்தை ஓட்ட முடியும் என்று என்று சொல்லுவது போல நிலைமை உள்ளது.
பகுத்தறிவுப் பகலவன்சாதிகளை ஒழிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே சாதி துவேசத்தை பரப்பிய தமிழ் நாட்டில் தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் வாயில் பீ திணிக்கும் அவலம் இன்றும் நடை பெறுகிறது. கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ, … இந்தியாவில் எங்கும் இப்படி பட்ட அவலம் இல்லை.
பெரியாரை நாம் முற்றாக குறை சொல்லவோ, புறக்கணிக்கவோ இல்லை. தமிழ் நாட்டு சமூக வரலாற்றில் அவருக்கு ஒரு இடம் உண்டு. அதே நேரம் அவரது கருத்துக்களின் வரம்பை எடுத்துக் காட்டுகிறோம்.
அவரது கருத்துக்களில் உள்ள சிறப்பையும் அவ்வப் போது வெளி இட்டு பாராட்டவும் தயங்க மாட்டோம். அப்போது என்ன எழுதுவார்கள்? பூணூல் தூங்குகிறது என்று எழுதுவார்களா? உங்களிடம் உள்ள பூணூல் பள்ளிலக்கவும் தூங்கவும் செய்யக் கூடிய பூணூலா?
raamarasu
June 18, 2012 at 3:36 pm
சாதியை மட்டும் முன்னிறுத்துகிறார்கள் இவர்கள். அது பிரமினார்கள் மட்டுமே சாதி வித்தியாசம் பார்ப்பது போலவும் பிற சாதியினார்கள் ஏதோ அவர்களுக்கும் மிகவும் ஒற்றுமையாக இருப்பது போலவும் பேசுகிறார்கள். “ஒரு மனிதன் இன்னொரு மனிதன் வாயில் பீ திணிக்கும் அவலம்” பிராமின் இனத்தவரால் செய்யப்பட்டதல்ல. வன்னியர், ரெட்டியார், கவுண்டர்கள், தேவர்கள், பிள்ளைமார், முதலியார் போன்ற உயர் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும், இவர்கள்தான் தலித்துகளை அடக்கி, ஒடுக்கி காலம் காலமாக அடிமைகளாக வைத்துக்கொண்டுளார்கள் என்பதை பெரியாரை அரைகுறை இல்லாமல் முழுமையாகப் படித்தவர்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா..? பிராமினர்களிடம் இருப்பது சாதி “துவேஷம்”. ஆனால் மேற்சொன்ன சாதிகளிடம் இருப்பது சாதி “வெறி”. அதை எப்போது சரி செய்யப்போகிறார்கள் இந்த பெரியாரை “முழுமையாகப்” படித்தவர்கள். பெரியாரை சொன்னதை பிறருக்கு / பிரமினர்களுக்குச் சொல்லும் இவர்கள் எப்போது மேற்சொன்ன சாதியினரை உணரவைக்கப் போகிறார்கள்..? மாட்டார்கள்… ஏனென்றால் அவர்களால் அது முடியாது.
raamarasu
June 18, 2012 at 3:37 pm
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர். சாதி ஒழிப்பு என்றால் அது பிராமின் சாதியை மட்டும் முன்னிறுத்துகிறார்கள் இவர்கள். அது பிரமினார்கள் மட்டுமே சாதி வித்தியாசம் பார்ப்பது போலவும் பிற சாதியினார்கள் ஏதோ அவர்களுக்கும் மிகவும் ஒற்றுமையாக இருப்பது போலவும் பேசுகிறார்கள். “ஒரு மனிதன் இன்னொரு மனிதன் வாயில் பீ திணிக்கும் அவலம்” பிராமின் இனத்தவரால் செய்யப்பட்டதல்ல. வன்னியர், ரெட்டியார், கவுண்டர்கள், தேவர்கள், பிள்ளைமார், முதலியார் போன்ற உயர் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும், இவர்கள்தான் தலித்துகளை அடக்கி, ஒடுக்கி காலம் காலமாக அடிமைகளாக வைத்துக்கொண்டுளார்கள் என்பதை பெரியாரை அரைகுறை இல்லாமல் முழுமையாகப் படித்தவர்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா..? பிராமினர்களிடம் இருப்பது சாதி “துவேஷம்”. ஆனால் மேற்சொன்ன சாதிகளிடம் இருப்பது சாதி “வெறி”. அதை எப்போது சரி செய்யப்போகிறார்கள் இந்த பெரியாரை “முழுமையாகப்” படித்தவர்கள். பெரியாரை சொன்னதை பிறருக்கு / பிரமினர்களுக்குச் சொல்லும் இவர்கள் எப்போது மேற்சொன்ன சாதியினரை உணரவைக்கப் போகிறார்கள்..? மாட்டார்கள்… ஏனென்றால் அவர்களால் அது முடியாது.