மாயக்காரருக்கும், காசுக்காரருக்கும் இயேசு கிறிஸ்து சாட்டை! “கர்த்தாவே! உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” – “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்”!
Posted July 29, 2010
on:மேலை நாடுகளில் இருப்பவர்கள் இயேசு கிறிஸ்து சொன்னது போல, கணவன் மனைவி பிரியாமல் கடைசி வரை ஒன்றாக வாழும் குடும்ப வாழ்க்கை வாழ விரும்பவில்லை, விபச்சார ற்ற அமைதி வாழ்க்கையும் வாழ முடியவில்லை. பசி யாயிருப்பவனுக்கு உணவைக் கொடு என்றால் அதற்குப் பதிலாக அவன் தலயிலே குண்டு போடுகிறார்கள். இந்த காரியங்களை எல்லாம் மறக்கவும், மறைக்கவும் அவர்கள மனசாட்சிக்கு சமாதனம் சொல்லவும், வானத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறார்கள், எல்லோரயும் அவர்களையும் விட இரட்டிப்பு பாவியாக்கவும் செய்கின்றனர்.
தங்களுடைய கொள்கை விரோத செயல்களை கார்ப்பெட்டுக்கு அடியில் மறைத்து விட்டு, இயேசு கிறிஸ்துவை கும்பிடு என்று சொல்பவருக்காக இயேசு கிறிஸ்துவே சொன்னது,
Chapter 7,
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. //
ஆனால் அவர்களால எத்தனை நாள்ஏமாற்ற முடியுமா ?
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். //
எனவே நாம் உண்மையிலேயே அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் ” மனந் திரும்புங்கள் ” என்பதுதான்!
80 Responses to "மாயக்காரருக்கும், காசுக்காரருக்கும் இயேசு கிறிஸ்து சாட்டை! “கர்த்தாவே! உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” – “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்”!"
திரு ஜெயகர் அவர்களே,
///22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ///
மேற்கண்ட பைபிள் வசனம் தெளிவாக புரியும் படி உள்ளது.இதைப் போல தானே //எங்கயோ இருந்து ஒரு வசனத்தை புடிங்கி// சர்ச் சுவரில் எழுதி வைத்திருக்கிறார்கள்.அந்த சர்ச் வசனத்தை எப்படி புரிந்து கொண்டோமோ அதைப் போல தான் மேற்கண்ட பைபிள் வசனத்தையும் புரிந்து கொள்கிறோம். மேற்கண்ட வசனத்திற்கு நீங்கள் கூறும் விளக்கம் என்ன?
உண்மை தான் நண்பர் தனபால் அவர்களே. சுற்று சுவர்களில் இருப்பவை எங்கேயோ இருந்து புடிங்கி எழுதியவை தான். ஆனால் அதில், நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் தந்திருக்கும்அவதூறு விளக்கமெல்லாம் இருக்காதே!!
குறள் என்பது, ஒரு குறளுக்கும் இன்னொரு குறளுக்கும் தொடர்பு இல்லாத வண்ணம் வேறு வேறு பொருள் தருவதாக இருக்கும். ஆகவே ஒரு குறளை எடுத்து விளக்கம் சொல்லுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் விவிலிய வார்த்தைகள் அப்படி அல்ல. மத்தேயு 7 :22 -23 – யை படித்த நீங்கள் ஏன் 21 – யை படிக்கவில்லை?! அதையும் சேர்த்து படிக்க வேண்டும் என்பது என் கருத்து.
நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும் சாடுகிறார். அது தான் ஏன் என்று புரியவில்லை. நண்பர் அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த குறிப்பிட்ட வார்த்தைகள் “போலி இறைவாக்கினர்களை” குறித்தானது. அது கிறிஸ்துவை நம்பி அவர் வழி (அல்லது பின் தொடர்பவர்கள்) செல்பவர்களுக்கு இல்லை. இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் அது ஒட்டுமொத்த மக்களுக்காக இயேசு சொன்னதல்ல. மாறாக அது போலியாக இறைவாக்குரைப்பவர்களுக்கு சொன்னது.
திரு ஜெயகர் அவர்களே,
///22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ///
“///இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் அது ஒட்டுமொத்த மக்களுக்காக இயேசு சொன்னதல்ல. மாறாக அது போலியாக இறைவாக்குரைப்பவர்களுக்கு சொன்னது.///”
மேற்கண்ட வசனம் இப்படிப்பட்ட ///போலியாக இறைவாக்குரைப்பவர்களுக்கு/// இயேசு கிறிஸ்து சொன்னது தான் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
நன்றி திரு.Chillsam
அப்புறம் நீங்க சொன்ன கருத்துக்கு இந்த வசனம் சரியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மத்தேயு 7 :5 வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
திரு ஜெயகர் அவர்களே,
///மத்தேயு 7 :5 வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.///
தங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியாமால் மற்றவர் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கும் பணியை பல நூற்றாண்டுகளாக உலகம் முழுதும் சென்று செய்துகொண்டிருப்பவர்கள் யார்???
திரு ஜெயகர் அவர்களே,
///ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என சொல்லியவரை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா? இல்லை, குறுக்கே வந்து விழுந்த மாட்டை தெரியாமல் தேர் ஏற்றி கொன்ற அரசன் மகனை அதே போல் கொல்லவேண்டும் என கற்பிக்கும் அயோக்கிய மனுநீதியை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா?///
அனைத்து மதமும் இறைவனை அடையும் பாதைகளே,என்றும் அனைத்து கடவுளும் ஒரே கடவுளின் வெவேறு பெயர்களே,என்றும் கூறும் மதத்தால் சகிப்புத் தன்மை வருமா?
என் மதம் மட்டுமே உண்மை,மற்ற மதமெல்லாம் சாத்தானின் வழிகளே என்றும், தன் கடவுள் மட்டுமே உண்மை, மற்ற கடவுளெல்லாம் சாத்தான்கள் என்று கூறும் மதத்தால் சகிப்புத்தன்மை வருமா???
திரு chillsam அவர்களே,
///மெய்ப்பொருள் காண்பதறிவு..!///
எண்ணற்ற ரிஷிகள் இந்த மெய்ப்பொருளை தவத்தால் கண்டிருக்கிறார்கள்.கண்டது மட்டுமல்ல எல்லாரும் மெய்ப்பொருளை தியானத்தால் உணரமுடியும் என்றும் அதை உங்கள் அனுபவத்தால் உணர்ந்து அறிந்துகொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் இறந்து பல லட்சம்/ஆயிரம்/நூறு ஆண்டுகள் கழிந்து என்றோ நியாயத்தீர்ப்பு நாளில் கடவுளை நேரில் காணலாம் என்று நாங்கள் கூறுவதை நீங்கள் நம்புங்கள் என்று கூறுகிறீர்கள்.
எதனால் மெய்ப்பொருள் காண்பதறிவு சாத்தியம்.இந்து மதத்தில் கூறப்பட்ட வழியில் இந்த பிறவியிலேயே இந்த “மெய்ப்பொருள் காண்பதறிவு” சாத்தியப்படும்.ஆனால் உங்கள் வழியிலோ அது எப்பொழுது என்று உங்களாலேயே உறுதியாகக் கூறமுடியாது.ஏனெனில் அந்த நியாயத்தீர்ப்பைப் கண்டவர்கள் யாருமில்லை.ஆனால் தவத்தின் மூலம் இறைவனை பல ரிஷிகள் , சித்தர்கள், யோகிகள், போன்றோர் தன் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்,
நாங்கள் கூறுவது உண்மையா?? பொய்யா/என்று உங்கள் அனுபவத்தில் உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று இந்து மதம் கூறுகிறது.அதாவது எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று இந்துமதம் கூறுகிறது.
ஆனால் ” நாங்கள் சொல்வதை அப்படியே நம்புங்கள்” என்று “மெய்ப்பொருள் காண்பதறிவு..”அல்ல ” நம்புவது தான் அறிவு” என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
எனக்கு கடந்த ஒரு வாரமாக உங்கள் பக்கம் திறக்கவில்லை… எதனால்?. சரி போகட்டும்.
கிறிஸ்தவர்கள் மீது உங்களுக்கு உள்ள கோபம் புரிகிறது. மற்ற மதங்கள் தவறானவை என போதிக்க கூடாது (குறிப்பாக ஹிந்து). மேலும் மத பிரசாரம் செய்ய கூடாது. இது தானே நீங்கள் சொல்ல நினைப்பது!
நான் புரிந்து கொண்டுவிட்டேன். ஆனால் நான் உங்களிடம் கேட்க விரும்புவது,
இதை நேரடியாக குறிப்பிட்டு பதிவிடலாமே. எதற்காக இந்த வேஷம்? வண்டி வண்டியாக நீங்கள் அளித்துள்ள பதிலையும் படித்துவிட்டேன். நீங்கள் சொல்லியுள்ள //உலகில் உள்ள பல்வேறு மதங்களையும் ஆக்க பூர்வமான கோணத்திலே அணுகி, அவைகளில் உள்ள “””சிறந்த கருத்துக்களை””” மக்களுக்கு உணர்த்தி மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கி சமூகங்களுக்கு இடையே இணக்கத்தை உருவாக்கும் அமைதி முயற்சியிலே நாம் அனவைரும் ஈடு படுகிறோம்.// இந்த கருத்துக்கு சற்றும் தொடர்பில்லாமல் பித்தற்றுகின்றீர்களே நண்பரே. இது தான் நீங்கள் சிறந்த கருத்துகளை மக்களுக்கு உணர்த்தும் முறையா? இது தான் நீங்கள் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் முறையா?? இது தான் நீங்கள் சமூகங்களுக்கு இடையே உருவாக்கும் அமைதி முயற்சியா???
உண்மையை சொல்லவேண்டுமென்றால் நான் இங்கே விவாதிப்பதற்காக மறுமொழியவில்லை. உங்கள் கருத்துக்கும் அந்த குறிப்பிட்ட விவிலிய வசனத்திற்கும் முடிச்சி போடுவது உள்நோக்கம் கொண்டது என்பதைச் சொன்னேன். அவ்வளவே. அதன் பிறகு நீங்களும் பல கருத்துகளை சொன்னீர்கள். சொன்ன ஏதாவது ஒரு கருத்தாவது கட்டுரைக்கு சம்பந்தமாக இருந்ததா என்றால் முற்றிலும் இல்லை. பிற மதங்களை தவறு என்று சொல்ல எந்த மதவாதிக்கும் உரிமை இல்லை!! நீங்கள் மேலே விவாதித்த அனைத்து கருத்துகளும் ஒரு குறிப்பிட்ட மதத்தை விமரிசனம் செய்து தான் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். ஏற்க முடியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை சென்று படியுங்கள். நான் சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது என்பதை சுட்டிகாட்டுங்கள். என்னுடைய கருத்துகளில் ஏற்க முடியாதவற்றை மறுப்பு சொல்லுங்கள். நான் தேவை இல்லாமல் உளற விரும்பவில்லை. கிறிஸ்தவம் பற்றி நான் அறிந்தவற்றை நேரடியாக சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், தெளிவும் எனக்கு இருக்கிறது. நன்றி
திரு சில்ல்சம் அவர்களே,
///அது இயேசுகிறிஸ்துவின் சிலையல்ல,
கற்பனை உருவம்;
அதனை யாரும் தொழுவதுமில்லை;///
அப்படி என்றால் எல்லா சர்ச்சில் உள்ள இயேசு கிறிஸ்துவின் சிலைகள் எல்லாமே கற்பனை உருவமா????
//எனவே நாம் உண்மையிலேயே அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் ” மனந் திரும்புங்கள் “ என்பதுதான்//
கிறிஸ்துவும் கிருஷ்னரும் ஒன்றே என்று ஒரு கருத்து உணடு.
http://hinduism.about.com/od/lordkrishna/a/christ_krishna.htm
ஆகவே ஏசுவின் கொள்கைகள் இந்திய வாழ்க்கை முறைகளை பிரதி பலிப்பதில் ஆச்சரியம் இல்லை
இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்லுஙக
//எனவே நாம் உண்மையிலேயே அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் ”(இந்தியர்களோடு கொள்கை உறவு கொண்ட இயேசுவிடம்) மனந் திரும்புங்கள் “ என்பதுதான்//
Kingdom of god is within. Don’t get struck in body or mind.
தேவன் ஒளியாக இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கிலம்
ஜெக்கப் தாரகன்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
416B முண்டகல்லேன் kerala
contact 9446101645
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Please follow
(First 2 mins audio may not be clear… sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
There is no reply from Sri chillsam regarding Mass killing, convertion and capturing other countries by hook or crook. He should answer the misuse of money and other power on other poor nation by one country. One could not see his face on his own eyes. He should see his misdeeds through the mirror (other person views).
1 | ஜெயகர்
July 29, 2010 at 12:15 pm
“காதல் ” திரைப்படத்திலே, கதாநாயகி படிக்கும் பள்ளியின் சுற்றுச் சுவரில் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, நான் உன்னை கைவிடுவதுமில்லை” என்ற ஒரு விவிலிய வாசகம் இருக்கும். அதை கதாநாயகி கதாநாயகனை கடந்து செல்லும் போது காண்பிப்பது போல ஒரு காட்சி உண்டு. அந்த இடத்திற்கு அந்த வாசகம் பொருத்தமானது தான். ஆனால் அதனுடைய அர்த்தம், ஒரு காதலனுக்கு காதலி தரும் நம்பிக்கை என சுருக்கி பொருள் கொண்டால் உண்மையில் அது தாவறானதாகும். அது வெறும் காதலன் காதலிக்காக சொன்னதல்ல. அது ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும், பாவிகள், நோயாளிகள், அடிமைகள் போன்ற வறியவர்களுக்காகவும் இயேசு சொன்ன வார்த்தை.
உங்கள் கட்டுரைக்கும் நான் மேலே சொன்ன விளக்கத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களுடைய ஆதங்கம் புரிந்துகொள்ள கூடியதே. ஆனால் நீங்கள் பயன்படுத்திய வசனம் மற்றும் விளக்கம் “குறுகிய பொருளை” மட்டுமே தருகிறது. திருக்குறள் புரியவில்லை என்றால் அதனுடைய உரையை படித்து சரியான பொருளை புரிந்து கொள்ளலாம். அது போல, விவிலியம் புரியவில்லை என்றால் தொடர்புடைய துணை நூல்களை படித்து தெளிவு பெறலாம். எங்கயோ இருந்து ஒரு வசனத்தை புடிங்கி அதற்கு விளக்கம் சொல்லலாம். ஆனால் அது சரியான விளக்கமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
பாவம். நீர் கிறிஸ்தவர் இல்லை. ஒருவேளை நீர் கிறிஸ்தவராக இருந்திருந்தால் நான் உமக்கு வேறு சில விளக்கங்கள் தந்திருப்பேன்!!!
thiruchchikkaaran
July 29, 2010 at 2:42 pm
Dear Mr. Jeyakar,
Thanks for your visit and opinions.
I have not quoted any thing out of context. I quoted them correctly, its not out of context. Western civilization is indulging in promiscous adultration, divorce and aggression culture, which are against Jesus Christ. To cover up that they are switching to other subjects. If one wants to shay away from truth , what can we do?
Our aim is not to sullify any reliion, but to bring out the good points and truths in them.
There is nothing that much obscure in விவிலியம். Its obvious. What I have written are staright to the point , if one is anxious to accept the truth, its a different matter.
You have mentioned that I am not a Christian. IIf you mean that a ” Christian” means having a Christian name like, Jhon, Jacob, Henry … then I am not a christian.
We will have many articles about the mission of Jesus christ and his principles, to heigh light the truths.
thiruchchikkaaran
July 29, 2010 at 5:36 pm
திரு. ஜெயகர் அவர்களே,
ஒவ்வொரு குறளையும் எடுத்து விளக்கம் தருவது போலவே , இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை எடுத்துக் காட்டி விளக்கமும் தருகிறோம்.
அனேகமாக இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களில் உள்ள உண்மைகள் உங்களை சுடுவதால் நீங்கள் அதிலிருந்து கவனத்தை திருப்பும் வண்ணம், காதல் சினிமா, கல்லூரி சினிமா என்று எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது.
இந்த தளமானது மக்கள சமூக முன்னேற்ற கருத்துக்களை விவாதிக்கும் தளமாக , சமரச சமத்துவ நல்லிணக்க நாகரீக சமூகத்திக்கு அமைக்க முயலும் தளமாக உள்ளது. இந்த தளம் சினிமா பற்றி விவாதிக்கும் தளம் அல்ல.
நாங்கள பைபிளைப் பற்றியோ, இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ அறியாதவர்களும் அல்ல. கிறிஸ்துவின் பெயாரால் தவறான் கருத்துக்களைப் பரப்பியதால் மேலை நாட்டு சமுதாயம் சீர் கேட்டு விட்டடது. நீங்கள் அவர்களிடம் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.
ஜெயகர்
July 31, 2010 at 5:36 am
//ஒவ்வொரு குறளையும் எடுத்து விளக்கம் தருவது போலவே , இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை எடுத்துக் காட்டி விளக்கமும் தருகிறோம். //
ஒரு குறளை எடுத்து விளக்கம் தருவதற்கும், ஒரு விவிலிய வசனத்தை எடுத்து விளக்கம் தருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது நண்பரே.
//அனேகமாக இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களில் உள்ள உண்மைகள் உங்களை சுடுவதால் நீங்கள் அதிலிருந்து கவனத்தை திருப்பும் வண்ணம், காதல் சினிமா, கல்லூரி சினிமா என்று எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது.//
கவனத்தை திருப்ப அல்ல. சரியான பொருளை புரிந்துகொள்ளவே அந்த உதாரணம். அதுவும் புரியவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது.
//இந்த தளமானது மக்கள சமூக முன்னேற்ற கருத்துக்களை விவாதிக்கும் தளமாக , சமரச சமத்துவ நல்லிணக்க நாகரீக சமூகத்திக்கு அமைக்க முயலும் தளமாக உள்ளது. இந்த தளம் சினிமா பற்றி விவாதிக்கும் தளம் அல்ல.//
ஆமாம். உங்கள் பதிவுகளை படித்து நான் புரிந்துகொண்டேன்!!!
//நாங்கள பைபிளைப் பற்றியோ, இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ அறியாதவர்களும் அல்ல. கிறிஸ்துவின் பெயாரால் தவறான் கருத்துக்களைப் பரப்பியதால் மேலை நாட்டு சமுதாயம் சீர் கேட்டு விட்டடது. நீங்கள் அவர்களிடம் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.//
ஆக பிரசாரம் செய்வது தான் உங்கள் கடுங்கோபத்திற்கு காரணம் இல்லையா :). ஆகவே தான் உங்களிடம் சொல்லுகிறேன் நீங்கள் சொன்ன உதாரணம் தவறானது என்று!!
thiruchchikkaaran
July 31, 2010 at 7:11 am
நண்பர் ஜெயகர்,
எனக்கு கடும் கோபமும் இல்லை, சாதா கோபமும் இல்லை. நானே இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை பிரச்சாரம் செய்து கொண்டு தானே இருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவின் சரியான கருத்துக்களை பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்திய சமுதாயம் பல்லாயிரம் வருடங்களாக நேர்மையான குடும்ப வாழ்க்கையை , கணவன் மனைவி சாகும் வரை சேர்ந்து வாழும் வாழ்க்கையை பின்பற்றி வருகிறது. ஒரு கன்னத்தில் அடித்தால் திரும்பி அடிக்கும் வலிமை இருந்தும் மறு கன்னத்தையும் காட்டுபவன் இந்தியனே. தன்னால் முடிந்தளவுக்கு அடுத்தவனுக்கு உதவுகிறான் இந்தியன். இவாறாக இந்தியர்களும், இயேசு கிறிஸ்துவும் கொள்கை அடிப்படையிலே உணர்வு அடிப்படையிலே, இயேசு இந்தியர்களுடன் இருக்கிறார், நாங்கள் அவருடன் இருக்கிறோம்.
இதிலே புதியதாக என்ன பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள்?
வரைமுறையற்ற விபச்சாரக் கலாச்சாரத்தில் வாழும் மேற்க்கத்திய மக்களை நல வழிப் படுத்த முயலுங்கள், அதுவே முக்கியம் , பெயருக்கு ஜான், ஸ்டெல்லா எனப் பெயரை வைத்துக் கொண்டு இருந்தால் மேலை நாட்டவர் உண்மையான கிறிஸ்தவரா?
ஆனால் அவர்கள தங்களின் விபச்சார பழக்கத்தை, விவாகரத்து , வன்முறைப் போர்க் கலாச்சாரத்தை மூடி மறைக்கும் வகையிலே “கர்த்தரைக் கும்பிடாவிடால எரி நரகம் போவாய்” என்று இயேசு கிறிஸ்து சொல்லாத ஒரு கருத்தை இயேசுவின் பெயரால் திணித்து அவர்களின் தவறுகளை மறைத்து அவர்களுக்கு வசதியான ஒரு கோட்பாட்டை உருவாக்கி, அதை அதை கிறிஸ்துவின் கருத்தாக நமக்கு சொல்லிக் கொடுத்து இந்தியரையும் இரட்டிப்பு பாவிகளாக முயல்கின்றனர். எனவேதான் கற்பனைகளைக் கைக் கொள்ளுவதுதான் முக்கியம் என்று இயேசு கிறிஸ்து சொன்னதை தெளிவாக எழுதி இருக்கிறோம்.
இதை எல்லாம் அறிந்தே இயேசு கிறிஸ்து “புற சாதியிடம் போகாமல் இஸ்ரவேலரிடம் போங்கள் என்றார்.
இயேசு கிறிஸ்துவின் பெயரால் , அவருடைய கருத்துக்கு எதிர்மறையான கருத்துக்களை வைத்து, எந்த முரட்டுப் பிடிவாதக் காட்டு மிராண்டிக் கருத்துக்களை இயேசு கிரிஸ்ர்து சீர் திருத்த முயன்றாரோ, அதே கருத்துக்களை அவர் பெயராலேயே பரப்பி, பில்லியன் கணக்கான மக்களை இரட்டிப்பு பாவிகள் ஆக்கி விட்டார்கள்.
எனவே இதை எல்லாம் சரி செய்யவே, நாம் இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை உலகில் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கிறோம், அதாவது சரியான கருத்துக்களை!
ஜெயகர்
July 31, 2010 at 8:37 am
திரு. KRA!
இப்போதும் அதே பிதற்றல்கள் தானா? நீங்கள் இப்படி தான் என்பது தெரியும் தான். ஆனாலும் ஏதோ ஒரு நப்பாசையில் கட்டுரைக்கு வெளியே போக மாட்டீர்கள், அது தொடர்பாகவே பேசுவீர்கள் என நினைத்தேன்!
சரி பாஸ். உங்க நல்லிணக்க போராட்டம் தொடரட்டும்!!!
மதவாதிகள் எல்லாம் முற்போக்குவாதிகள் என வேடம்போடும் போது முற்போக்குவாதிகள் மதவாதியாக பேசவேண்டும் போல!!!. ஆமாம் சார், நீங்க RSS என்ற பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்றிருக்கின்றீர்களா? உங்கள் கதை, வசனங்கள் முழுவதிலும் RSS மணக்குதே!. ஈ அடிச்சான் காபி என்று சொல்லுவார்களே அதுபோல!!!
thiruchchikkaaran
July 31, 2010 at 10:10 am
“திரு. KRA! “என்று குறிப்பிடுவது யாரை நண்பரே?
எப்படி இருப்பினும் தன்னிலை விளக்கமாக நான் அறியத் தருவது என்னவென்றால் எனக்கும் எந்த ஒரு இயக்கத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
உங்கள் கதை, வசனங்கள் முழுவதிலும் RSS மணக்குதே!. ஈ அடிச்சான் காபி என்று சொல்லுவார்களே அதுபோல!!!
திரு. KRA!
இப்போதும் அதே பிதற்றல்கள் தானா? நீங்கள் இப்படி தான் என்பது தெரியும் தான். ஆனாலும் ஏதோ ஒரு நப்பாசையில் கட்டுரைக்கு வெளியே போக மாட்டீர்கள், அது தொடர்பாகவே பேசுவீர்கள் என நினைத்தேன்!
சரி பாஸ். உங்க நல்லிணக்க போராட்டம் தொடரட்டும்!!!
//மதவாதிகள் எல்லாம் முற்போக்குவாதிகள் என வேடம்போடும் போது முற்போக்குவாதிகள் மதவாதியாக பேசவேண்டும் போல!!!. ஆமாம் சார், நீங்க RSS என்ற பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்றிருக்கின்றீர்களா? உங்கள் கதை, வசனங்கள் முழுவதிலும் RSS மணக்குதே!. ஈ அடிச்சான் காபி என்று சொல்லுவார்களே அதுபோல!!! //
சர்ச்சில் நடக்கும் பிரேயரில் கலந்து கொண்டு, இயேசு கிறிஸ்துவுக்கு மனப் பூரவமாக மரியாதை செய்யவும், மசூதியில் நடக்கும் தொழுகையில் மனப் பூர்வமாக பங்கெடுக்கவும் நான் தயார் எனப் பல முறை எழுதி இருக்கிறேன். இதுதான் R.S.S கொள்கையா? அப்படி என்றால் அது நல்ல கொள்கைதானே
ஜெயகர்
July 31, 2010 at 12:58 pm
நிச்சயமாக நல்ல்ல கொள்கை தான். அவ்வ்வ்வவ்!!!
oruvan
October 21, 2013 at 8:47 am
விபச்சார பழக்கத்தை, விவாகரத்து , வன்முறைப் போர்க் கலாச்சாரத்தை பற்றி பேசும் நீங்கள் தேவரடியார் உருவாக்கி உல்லாசத்தில் திளைத்தது யார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . இன்றளவும் கர்நாடக எல்லம்மா கோவிலில் இந்த கொடூரம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் சாதி மதபேதம் இல்லாமல் தத்தெதுத்து பணம் அனுப்புபவன் கூட தான் நீங்கள் சொன்ன ஜான், ஸ்டெல்லா எனப் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் மேலை நாட்டவர்.
ஏன் இங்கு உள்ளவர்கள் கள்ள தொடர்பு கொள்வது இல்லையா மும்பையில் விபசாரம் செய்வது இல்லையா. அதர்க்காக அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று முத்திரை குத்தி விட முடியுமா . நீங்கள் கண்ட ஒரு பகுதியை ஒட்டு மொத்த சமூகமாக உருவப்படுத்தாதீர்கள்.
ஓட்டைகள் எல்லா சமூகங்களிலும் உள்ளது. அதற்கு மத சாயம் பூசி விடாதீர்கள் .