Thiruchchikkaaran's Blog

கண் போன போக்கிலே கால் போகலாமா?

Posted on: June 17, 2010


ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து , மனிதனைக் கடித்த கதையாக என்று சொல்வார்கள்.
சில அருமை நண்பர்கள், நான்  இன்னொரு தளத்திலே  எழுதியதை கத்திரி  போட்டு சிதைத்து வெளியிட்டு, நாம் கேட்ட கேள்விக்கு பதில்சொல்ல முடியாமல் விடயத்தைக் குழப்பி,  கடைசியில் என்னை பதில் சொல்ல முடியுமா என்று  கேட்டு இருக்கிறார்கள். என்னை இந்துத்துவா கோர முகம் உடையவன் என்றும் முகமூடியை தாண்டி என் கோர முகம் தெரிவதாகவும் அவர்களுக்கு திருப்தியான வகையிலே என்னைத் திட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதலில் இந்துத்துவா கோர முகம் என்றால் நமக்கு என்ன அர்த்தம்  என்று  புரியவில்லை. உண்மையை நோக்கி செல்வதுதான் – அசத்தொமா சத்கமய- அதற்கு உதவுவதுதான் இந்து மதம், அப்படி உண்மையைத் தேடி  செல்வது   தவறு என்று சிலர் நினைத்தால் அதற்கு நாம் என்ன செய்ய இயலும்? உண்மையை உணர்த்திய பல  அறிவியல் அறிங்கர்களை சித்திரவதை செய்த கோட்பாட்டை வைத்து இருந்தால் உண்மையைக்  கண்டால் எரிச்சல் தானே வரும்!  உலகில் இருக்கும் 100 கோடிக்கும் அதிகமான இந்துக்கள் எல்லோரும் இந்துத்துவத்தைப் பின்பற்றுபவர்கள்  தான், அவர்கள் அனைவரும் கோர முகம் உடையவர்கள் என்றால், நானும் கோர முகத்தவன் தான்.
அப்படி என்ன கோர முகம் என்று பார்க்க விரும்பும் நண்பர்களுக்கு நான் எழுதியவற்றை அப்படியே முழுமையாக வெளியிடுகிறேன்.  வாசகர்கள் படித்து சொல்லலாம்.
முதலில் நான் எழுதிய கருத்துக்கள் எந்த வகையான கட்டுரைக்கு பின்னூட்டமாக அமைந்தது என்பதை முதலில் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
மத பிரச்சாரகர்கள் சிலர்  மக்களிடம் சென்று  மதம் மாறினால் இலவச வீடு… முதலிய சலுகைகள் கிடைக்கும் எனக் கூறியதாக வந்த செய்தியை ஒட்டி ஒரு கட்டுரை வெளியிடப் பட்டது.
தங்களுடைய கொள்கைகளை  மக்களிடம் விளக்கி பிரச்சாரம் செய்யாமல், பணம் கொடுத்து மத மாற்றம் செய்ய முயல்வது    சரியா என்பதை பற்றியும், ஏற்கனவே  ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்    சமூகங்கள் சீர் கேட்டுக் கிடப்பதை சுட்டிக் காட்டியும் நான்  இட்ட பின்னூட்டங்கள் கீழ்  வருமாறு:

//அசிங்கமான அருவருப்பான செயலைக் கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.

இவர்கள் நாட்டுக்கு, சமுதாயத்துக்கு கேடு விளைவிப்பவர்கள்.

தங்களுடைய மதத்தை தவிர பிற மதங்களை வெறுக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்கிற வெறியில் வெறுப்புக் கருத்துக்களை, காட்டு மிராண்டிக் கருத்துக்களை மக்களிடத்தில் திணிக்கிறார்கள். கையூட்டு கொடுப்பதாக கூறி ஆசை காட்டிவது அசிங்கமான அவமானம்.

நாகரீகமும் இல்லை, மனிதப் பண்பும் இல்லை, நேர்மையும் இல்லை.
அருவருப்பு, அசிங்கம், காட்டுமிராண்டித்தனம், வெறுப்புக் கருத்துக்கள் இவையே இவர்களிடம் உள்ளன.

கிறிஸ்தவத்தை தழுவிய மேலை நாடுகள், அப்பட்டமான விபச்சாரக் கலாச்சாரத்தில் திளைக்கின்றன.

ஐரோப்பையும் , அமெரிக்காவையும், ஆப்பிரிக்காவையும் கெடுத்து விட்டு இப்போது இந்திய சமுதாயத்தைக் கெடுக்க முழு மூச்சில் ஈடுபடுகின்றனர்.

நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், உங்களால் முடியுமானால் நீங்கள் எங்கிருந்து இந்த மதத்தை இறக்குமதி செய்தீர்களோ, அந்த ஐரோப்பாவிற்கு சென்று அங்கே இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சாகும் வரை அந்தப் பெண்ணை விட்டு பிரியாமல் வாழச் செய்ய முடியுமா, என்று நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.

அப்படி முடியாவிட்டால் இங்கே இந்து மதத்தால் உருவாக்கப் பட்ட நேர்மையான குடும்ப வாழ்க்கை காலச்சாரத்தை சீரழிக்க முயலும் விஷச் செயலை செய்வது ஏன்?

பதில் சொல்!//

இந்தக் கட்டுரைக்கு இன்னொரு நண்பர் பின்னூட்டமாக , இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளின் படி நடப்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்ற வகையிலே எழுதினார். இந்தியர்கள் பெரும்பாலோர் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக எந்த வழியிலே வாழ்ந்து வருகின்றனரோ, அந்த வாழ்க்கை முறையே இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளாக இருக்கிறது, இந்தியர்களுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் பெரிய அளவில்   கருத்து வேறுபாடு இல்லை ,   என்பதை விளக்கி

//கிறிஸ்து எந்த‌க் க‌ருத்துக்களை போத‌னை செய்தாரோ, அதே க‌ருத்துக்க‌ளின் ப‌டி தானே இந்திய‌ர்க‌ள் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ வாழ்ந்து வ‌ருகிறோம்?

“ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்யாதெ, விபச்சார‌ம் செய்யாதே, அடுத்த‌வ‌ருக்கு உத‌வி செய்வ‌து க‌ட‌வுளுக்கு உத‌வி செய்வ‌து போல‌‍” – இதே க‌ருத்துக்க‌ள் இந்தியாவில் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ம‌க்க‌ள் பின்ப‌ற்றி வ‌ருகிர‌, வாழ்ந்து வ‌ருகிற‌ க‌ருத்துக்க‌ள் தானே?

இப்போது புதிய‌தாக‌ சொல்ல‌ என்ன‌ இருக்கிர‌து என்று சொல்லுங்க‌ள்!

இயேசு கிறிஸ்துவை இந்திய‌ர்க‌ள் இக‌ழ்வ‌தில்லையே. இப்போது இங்கெ வ‌ந்து ம‌க்களைக் கெடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன?

”நீங்க‌ள் புற‌ ஜாதியின‌ரிட‌த்தே போகாம‌ல் இஸ்ர‌வேல் புத்திர‌ரிட‌ம் போங்க‌ள்” என்று இயேசு கிறிஸ்துவே சொல்லி இருக்கிறாரே. இஸ்ரேலுக்கு போய் பிர‌ச்சார‌ம் ப‌ண்ணாம‌ல் இங்கே வ‌ந்து ஏற்கென‌வே ஒழுங்காக‌ இருப்ப‌வ‌ர்களைக் கெடுப்ப‌து ஏன்?//

என்று எழுதினோம்.

இதோடு ஒரு நண்பர் கிறிஸ்தவர்களுக்கே இன்னும் வீடுகள் கட்டி தந்து முடிக்கவில்லையே என்ற வகையிலே எழுதினார். அதற்கு நாம் இயேசு கிறிஸ்துவின் உண்மையான  கொள்கை  என்ன என்பதை விளக்கி இப்படி எழுதினோம்!

sacred heart of Jesus in white background photo free download Christian pictures

//still lot of christians live without their own house so we prior to provide good for them….//

கிறிஸ்துவ‌ர்க‌ளுக்கு இன்னும் வீடு இல்லை. அவ‌ர்க‌ளுக்கு வீடு வ‌ழ‌ங்க‌வே முனைப்பு காட்டுகிறோம்.

இதுதான் நீங‌கள் கிறிஸ்துவை பின்ப‌ற்றும் முறையா?

த‌ன்னைப் போல‌ பிற‌னையும் நேசிக்க‌ வேண்டும் என்றார் இயெசு கிறிச்து. பிற‌ன் யார் என்ற‌த‌ற்க்கு ஒரு யூத‌ன் அடி ப‌ட்டுக் கிட‌ந்த‌ போது அவ்வ‌ழியே போன‌ யூத‌ குருமார் உத‌வ‌வில்லை. ஒரு ச‌மாரிய‌ன் உத‌வி செய்தான். அந்த‌ ச‌மாரிய‌னுக்கு யூத‌ன் யார் என‌க் கேட்டார். அதாவ‌து த‌ன‌க்கு ச‌ம‌ப‌ந்த‌மே இல்லாத‌, த‌ன் உற‌வின‌ர், ந‌ட்பு, மொழி, ம‌த‌, வ‌ர்க்க பேத‌ங்க‌ளைத் தாண்டி உத‌வி செய்வ‌துதான் பிற‌ருக்கு உத‌வுவ‌து.

என‌வே நீங்க‌ள் உண்மையான‌ கிறிஸ்துவ‌ராக‌ இருந்தால் , கிறிஸ்து சொன்ன‌ ப‌டி, பிற‌னுக்கு, ஒரு இந்துவுக்கோ, முஸ்லீமுக்கோ வீடு வ‌ழ‌ங்க‌வே, உத‌வ‌ முனைப்பு காட்ட‌ வேண்டும்.

இத‌னால் தான் நீங்க‌ள் த‌வறான‌ வழியை கிறிஸ்த‌வ‌ம் என்ற‌ பெய‌ரிலே ப‌ர‌ப்பி, உல‌கிலே இர‌த்த‌ ஆறு ஓட‌ விட்டு விட்டீர்க‌ள் என்று அறிங்க‌ர்க‌ள் சொல்கின்ர‌ன‌ர்.

உண்மையான‌ கிறிஸ்த‌வ‌ம் என்ன‌ என்று நீங்க‌ள் தெரிந்து கொள்ள‌ விரும்பினால் என்னைத் தொட‌ர்பு கொள்ள‌வும். என் த‌ளத்திற்க்கு வ‌ந்து பார்வை இடுங்க‌ள்.//

இதில் என்ன கோர முகம் தெரிகிறது?   விட்டுக் கொடுக்கும் சமரசக் கருத்துக்களை கூறிய இயேசு  கிறிஸ்துவின் பெயரால் வெறுப்புக் கருத்துக்களை  ,  முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களித் திணிக்க முயல்பவர்களின் கோர முகம் தானே உங்களுக்குத்  தெரிகிறது!

இதில்கவனிக்க வேண்டியது என்னவென்றால், இயேசு  கிறிஸ்துவின் கருத்துக்களை  குறிப்பிட்டு நாம் எழுதியவற்றை கவனமாக  கத்திரி போட்டு இருக்கின்றனர்.  எந்த  முரட்டுப் பிடிவாத கருத்துக்களுக்கு  எதிராக இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்தாரோ, அந்த சமரச மறுப்புக் கருத்துக்களை இயேசு கிறிஸ்துவின் பெயராலே  உலகம் முழுதும் பரப்புபவர்களுக்கு நாம் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளின்  கருத்தை  விளக்குவது பிடிக்காது தானே !

நம்முடைய கருத்துகளை out of context  ல்  சிதைத்து வெளியிட்டதால், அவற்றை கோர்வையாக இங்கே வெளியிட்டு இருக்கிறோம்,   எந்த context ல் எழுதப் பட்டது என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறோம்.   ஏதாவது கேட்க விரும்பினால் கேளுங்கள்,  நான் எழுதியதில் வினா எழுப்ப விரும்பினால் சுட்டிக் காட்டி கேளுங்கள்.  கேளுங்கள் தரப்படும்.

இணைப்பு- 1:

நண்பர் பிரதீப், நான் சொல்ல வந்தது தெளிவாக இருக்கிறது. மீண்டும் தெளிவாக விளக்குகிறேன். இந்தியாவில பல்லாயிரக் கணக்கான வருடங்களாக குடும்ப வாழ்க்கை முறை உள்ளது. திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி சாகும் வரை கணவன் மனைவியாகவே வாழ்கிறார்கள்.

இயேசு கிறிஸ்துவும் அதே குடும்ப வாழ்க்கை முறையை வலியுறுத்தி இருக்கிறார். //தேவனால் இணைக்கப் பட்டதை மனிதன் பிரிக்கக் கூடாதே// என்று சொல்லி இருக்கிறார். //விபச்சாரம் செய்யாதே, ஒரு பெண்ணை தவறான எண்ணத்துடன் நோக்கினாலே விபச்சாரம் செய்தது போல// என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் பெயரால் அமைக்கப் பட்ட அமைப்புகள் இயேசு கிறிஸ்து சொல்ல வந்த முக்கியக் கருத்துக்களைப் புறக்கணித்து , இயேசு கிறிஸ்துவை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை முக்கியக் கோட்பாடாக வைத்தனர், அதை விட முக்கியமாக பிற மதத்தவரின் கடவுள்களைத் திட்ட வேண்டும் என்பதும். இயேசு கிறிஸ்துவின் சமரசக் கொள்கைகளுக்கு மாறாக முரட்டுப் பிடிவாதக் கொள்கைகளை அறிமுகப் படுத்தினர். எனவே மேலை நாடுகளில் குடும்ப அமைப்பு உருவாக்குதற்கு பதிலாக ஏற்கெனவே இருந்த குடும்ப அமைப்பும் தகர்க்கப் பட்டு விட்டது.

எனவே நாம் சொல்வது என்ன வென்றால், இயேசு கிறிஸ்துவின் பெயரால் அமைக்கப் பட்ட அமைப்புகள் அவருடைய கொள்கைகளைப் புறக்கணித்து, அவருடைய கொள்கைகளுக்கு மாறாக செயல் பட்டு விட்டனர். அந்த பிடிவாதக் கொள்கைகளை இங்கே இந்தியாவிலும் வந்து திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தான் கேட்கிறோம்.

இந்தியாவிலே, இஸ்லாமிய நாடுகளிலே விபச்சாரம் இல்லையா என்றால் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.

இந்தியாவிலே ஒரு வூரில் எத்தனை குடும்பங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை பேர் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பாருங்கள். சென்னைக்கு வாருங்கள். எத்தனை பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். மாலை நேரத்திலே, குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு வந்து சேர்ந்து இருப்பார்கலா என்ற கவலையோடு வேகமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகின்றனர். விபச்சாரத்தைப் பற்றி அவர்கள் நினைப்பது கூட இல்லை. ஆங்காங்கே சிலர் விபச்சாரத்தில் ஈடுபடலாம். பெரும்பாலன மக்கள எப்படி வாழ்கிறார்கள் என்று பாருங்கள். இந்தியாவில் இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். இப்படிப் பட்ட ஒரு கலாச்சாரம் உருவான நாட்டிலே பல்லாயிரம் வருடங்களாக இந்து மதம் தான் முக்கிய மதமாக இருந்து வருகிறது.

அந்த வகையிலே இஸ்லாமிய மார்க்கம் பின்பற்றப் படும் நாடுகளில் கூட அவர்கள் பல தார முறை அங்கீகரிக்கப் பட்ட நாடுகளில் கூட குடும்ப வாழ்க்கை முறை உள்ளது. இந்தோனேசியாவிலும், சவுதி அரேபியாவிலும் அமெரிக்காவையும் , ஐரோப்பாவையும் விட குடும்ப வாழ்க்கை முறை சிறப்பாக உள்ளது, விபச்சாரம் குறைவாக உள்ளது. இது உங்களுக்குத் தெரியாதது அல்லவே.

மற்றபடி காவியைக் கட்டிக் கொண்டு கள்ளத் தனம் செய்யும் சில போலி சாமியார்களை பெரும்பாலான இந்துக்கள் புறக்கணிக்கின்றனர். நான் அவர்களைக் கணடித்து பல கட்டுரைகளை இதே தளத்திலே எழுதி இருக்கிறேன். இப்படி பட்ட போலிகள் இருந்தும் கூட இந்திய சமுதாயம் குடும்ப வாழக்கை சமுதாயமாக உள்ளது.

ஏனெனில் இந்து மதம் அவர்களால் வழி நடத்தி செல்லப் படவில்லை.  ஒழுக்கம்  இல்லாத ஒருவன் இந்து மதத்தை தலைமை ஏற்று வழி நடத்தி செல்பவராக ஒரு போதும் ஆக முடியாது.  போலிகள்   சில காலம் வேடமிட்டு,  இந்து மதத்தை உபயோகப் படுத்தி  சில பல பில்லியன்களை குவிக்கலாம், பிறகு மாட்டலாம் அல்லது  , மாட்டாமல்  தப்பிக்கலாம் , ஆனால் இந்து மதத்தின் முக்கிய வழி காட்டியாக முடியாது.  இந்து மதம் இவர்களை நம்பி இல்லை.  அங்காள அம்மனுக்கு ஆடியிலே பொங்கல் வைக்கும் தாய்மார்களும், முக்குப் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் ராமசாமியும் தான் இந்து மதத்தின் ஆணிவேர். எந்த போலி சாமியாராலும் இவர்களின் ஆன்மீகமோ, குடும்ப வாழ்க்கை முறையோ பாதிப்படையாது.

நான் முன்பே சொன்னது போல கொள்கை அளவிலும், சிந்தனை அளவிலும், உணர்வு அடிப்படையிலும் இயேசு கிறிஸ்து எங்களுடன் இருக்கிறார். நாங்கள் அவருடன் இருக்கிறோம்.

அவர் பெயரால் உருவாக்கப் பட்ட சில அமைப்புகள் மேலை நாடுகளை சரியாக வழி நடத்தி செல்லாததால், அவைகள் சீர்கேட்டுக்கு ஆளாகி விட்டன. குடும்ப அமைப்பே இல்லை. குழந்தைகளும் குறைவு. இன்னும் முப்பது வருடத்திலே ஐரோப்பாவில் முதியவர்கள் எழுபது சதவீதமும், உழைக்கும் வயதில் இருப்போர் முப்பது சதவீதமும் ஆகும் நிலை உள்ளது என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கே (gay) திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலைக்கு காரணமான தவறான பிடிவாதக் கோட்பாடுகளை எங்கே திணிக்க வேண்டாம், இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களின் உண்மையான பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய உணர்வுகளில் பங்கெடுக்க விரும்பினால், நாங்கள் எடுத்துக் கூறி அதற்க்கு உதவத் தயாராக இருக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவே குறிப்பிட்டது போல //நீங்கள் பிறரை உங்கள் மார்க்கத்தவராக்கும் பொருட்டு பூமியையும், சமுத்திரத்தையும் சுற்றித் திரிகிறீர்கள்,அவர்கள் உங்கள் மார்க்கத்தவரான பின் உங்களைக் காட்டிலும் பாவிகள் ஆக்குகிறீர்கள்// என்று சொன்னதி செய்ய வேண்டாம் என்றே இயேசு கிறிஸ்துவி கொள்கையில் அடிப்படையிலே அவருடைய சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

சிலர் விவாக ரத்து அவசியம் தான் என்றும், இந்தியாவிலே விவாக ரத்து செய்ய வாய்ப்பு இல்லையே என்று வருத்தப் பட்டும் தெரிவித்த கருத்துக்கள் சான்றாக நமது தளத்திலே பதிவு செய்யப் பட்டு உள்ளன, இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றால் போதும் என்கிறதுதான் அவர்களுக்கு முக்கியக் குறிக்கோள், அதை விட முக்கியமாக பிற மதத்தவரின் கடவுள்களைத் திட்ட வேண்டும் என்பதும்.

52 Responses to "கண் போன போக்கிலே கால் போகலாமா?"

நல்ல பதிவு. குற்றம் புரிகின்றவன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் பல நொண்டிச் சாக்குகள் சொல்வதை காலம் காலம்காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

திரு.திருச்சிக்காரர் அவர்களே,

///கிறிஸ்தவத்தை தழுவிய மேலை நாடுகள், அப்பட்டமான விபச்சாரக் கலாச்சாரத்தில் திளைக்கின்றன.

ஐரோப்பையும் , அமெரிக்காவையும், ஆப்பிரிக்காவையும் கெடுத்து விட்டு இப்போது இந்திய சமுதாயத்தைக் கெடுக்க முழு மூச்சில் ஈடுபடுகின்றனர்.

நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், உங்களால் முடியுமானால் நீங்கள் எங்கிருந்து இந்த மதத்தை இறக்குமதி செய்தீர்களோ, அந்த ஐரோப்பாவிற்கு சென்று அங்கே இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சாகும் வரை அந்தப் பெண்ணை விட்டு பிரியாமல் வாழச் செய்ய முடியுமா, என்று நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்///

//கிறிஸ்து எந்த‌க் க‌ருத்துக்களை போத‌னை செய்தாரோ, அதே க‌ருத்துக்க‌ளின் ப‌டி தானே இந்திய‌ர்க‌ள் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ வாழ்ந்து வ‌ருகிறோம்?

“ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்யாதெ, விபச்சார‌ம் செய்யாதே, அடுத்த‌வ‌ருக்கு உத‌வி செய்வ‌து க‌ட‌வுளுக்கு உத‌வி செய்வ‌து போல‌‍” – இதே க‌ருத்துக்க‌ள் இந்தியாவில் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ம‌க்க‌ள் பின்ப‌ற்றி வ‌ருகிர‌, வாழ்ந்து வ‌ருகிற‌ க‌ருத்துக்க‌ள் தானே?

இப்போது புதிய‌தாக‌ சொல்ல‌ என்ன‌ இருக்கிர‌து என்று சொல்லுங்க‌ள்!///

எல்லாவரிகளும் மிகச் சிறப்பான,அருமையான அர்த்தமுள்ள வரிகள்.

Dear Brother Dhanabal,

I thank you for having read the article and posted your valuable comments.

எல்லா மதங்களிலும் இருகிறார்கள் என்பது தான் உண்மை. மக்காவில் கூட விபச்சாரம் உண்டு. நம் நாட்டில் கேட்கவே வேண்டாம். காஞ்சி மடத்தில் ,காஞ்சி கோவிலில், தர்மபுர ஆதினத்தில் நடக்காத விபச்சாரமா.குறிப்பாக அத்துவைதம் பேசும் நவீன சாமியார்கள் செய்யாத விபச்சாரமா , அடுத்து ஜக்கியா, சிறி சிறி ரவிசங்கரா என்னும் அளவிற்கு உள்ளது. இந்தியாவில் உள்ளது விபசார கலாச்சாரம் என்று சொல்ல முடியுமா.
மற்றபடி கிருத்துவ அமைப்புகளின் ஆள்பிடிக்கும் வேலை மிக கீழ்த்தரமான செய்கை.பள்ளிகளில் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் போக்கு கண்டிக்க தக்கது.

நண்பர் பிரதீப், நான் சொல்ல வந்தது தெளிவாக இருக்கிறது. மீண்டும் தெளிவாக விளக்குகிறேன். இந்தியாவில பல்லாயிரக் கணக்கான வருடங்களாக குடும்ப வாழ்க்கை முறை உள்ளது. திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி சாகும் வரை கணவன் மனைவியாகவே வாழ்கிறார்கள்.

இயேசு கிறிஸ்துவும் அதே குடும்ப வாழ்க்கை முறையை வலியுறுத்தி இருக்கிறார். //தேவனால் இணைக்கப் பட்டதை மனிதன் பிரிக்கக் கூடாதே// என்று சொல்லி இருக்கிறார். //விபச்சாரம் செய்யாதே, ஒரு பெண்ணை தவறான எண்ணத்துடன் நோக்கினாலே விபச்சாரம் செய்தது போல// என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் பெயரால் அமைக்கப் பட்ட மதம் இயேசு கிறிஸ்து சொல்ல வந்த முக்கியக் கருத்துக்களைப் புறக்கணித்து , இயேசு கிறிஸ்துவை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை முக்கியக் கோட்பாடாக வைத்தனர். இயேசு கிறிஸ்துவின் சமரசக் கொள்கைகளுக்கு மாறாக முரட்டுப் பிடிவாதக் கொள்கைகளை அறிமுகப் படுத்தினர். எனவே மேலை நாடுகளில் குடும்ப அமைப்பு உருவாக்குதற்கு பதிலாக ஏற்கெனவே இருந்த குடும்ப அமைப்பும், தகர்க்கப் பட்டு விட்டது.

எனவே நாம் சொல்வது என்ன வென்றால் , இயேசு கிறிஸ்துவின் பெயரால் அமைக்கப் பட்ட அமைப்புகள் அவருடைய கொள்கைகளைப் புறக்கணித்து, அவருடைய கொள்கைகளுக்கு மாறாக செயல் பட்டு விட்டனர். அந்த பிடிவாதக் கொள்கைகளை இங்கே இந்தியாவிலும் வந்து திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தான் கேட்கிறோம்.

இந்தியாவிலே, இஸ்லாமிய நாடுகளிலே விபச்சாரம் இல்லையா என்றால் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.

ஒரு வூரில் எத்தனை குடும்பங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை பேர் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பாருங்கள். சென்னைக்கு வாருங்கள். எத்தை பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். மாலை நேரத்திலே, குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு வந்து சேர்ந்து இருப்பாரக்லா என்ற கவலையோடு வேகமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகின்றனர். விபச்சாரத்தைப் பற்றி அவர்கள் நினைப்பது கூட இல்லை. ஆங்காங்கே சிலர் விபச்சாரத்தில் ஈடுபடலாம். பெரும்பாலனா மக்கள எப்படி வாழ்கிறார்கள் என்று பாருங்கள். இந்தியாவில் இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். இப்படிப் பட்ட ஒரு கலாச்சாரம் உருவான நாட்டிலே பல்லாயிரம் வருடங்களாக இந்து மதம் தான் முக்கிய மதமாக இருந்து வருகிறது. அந்த வகையிலே இஸ்லாமிய மார்க்கம் பின்பற்றப் படும் நாடுகளில் கூட அவர்கள் பல தார முறை அங்கீகரிக்கப் பட்ட நாடுகளில் கூட குடும்ப வாழ்க்கை முறை உள்ளது. இந்தோனேசியாவிலும், சவுதி அரேபியாவிலும் அமெரிக்காவையும் , ஐரோப்பாவையும் விட குடும்ப வாழ்க்கை முறை சிறப்பாக உள்ளது, விபச்சாரம் குறைவாக உள்ளது. இது உங்களுக்குத் தெரியாதது அல்லவே.

மற்றபடி காவியைக் கட்டிக் கொண்டு கள்ளத் தனம் செய்யும் சில போலி சாமியார்களை பெரும்பாலான இந்துக்கள் புறக்கணிக்கின்றனர். நான் அவர்களைக் கணடித்து பல கட்டுரைகளை இதே தளத்திலே எழுதி இருக்கிறேன். இப்படி பட்ட போலிகள் இருந்தும் கூட இந்திய சமுதாயம் குடும்ப வாழக்கை சமுதாயமாக உள்ளது.

நான் முன்பே சொன்னது போல கொள்கை அளவிலும், சிந்தனை அளவிலும், உணர்வு அடிப்படையிலும் இயேசு கிறிஸ்து எங்களுடன் இருக்கிறார். நாங்கள் அவருடன் இருக்கிறோம்.

அவர் பெயரால் உருவாக்கப் பட்ட சில அமைப்புகள் மேலை நாடுகளை சரியாக வழி நடத்தி செல்லாததால், அவைகள் சீர்கேட்டுக்கு ஆளாகி விட்டன. குடும்ப அமைப்பே இல்லை. குழந்தைகளும் குறைவு. இன்னும் முப்பது வருடத்திலே ஐரோப்பாவில் முதியவர்கள் எழுபது சதவீதமும், உழைக்கும் வயதில் இருப்போர் முப்பது சதவீதமும் ஆகும் நிலை உள்ளது என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கே திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலைக்கு காரணமான தவறான பிடிவாதக் கோட்பாடுகளை எங்கே திணிக்க வேண்டாம், இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களின் உண்மையான பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய உணர்வுகளில் பங்கெடுக்க விரும்பினால், நாங்கள் எடுத்துக் கூறி அதற்க்கு உதவத் தயாராக இருக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவே குறிப்பிட்டது போல //நீங்கள் பிறரை உங்கள் மார்க்கத்தவராக்கும் பொருட்டு பூமியையும், சமுத்திரத்தையும் சுற்றித் திரிகிறீர்கள்,அவர்கள் உங்கள் மார்க்கத்தவரான பின் உங்களைக் காட்டிலும் பாவிகள் ஆக்குகிறீர்கள்// என்று சொன்னதி செய்ய வேண்டாம் என்றே இயேசு கிறிஸ்துவி கொள்கையில் அடிப்படையிலே அவருடைய சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

சிலர் விவாக ரத்து அவசியம் தான் என்றும், இந்தியாவிலே விவாக ரத்து செய்ய வாய்ப்பு இல்லையே என்று வருத்தப் பட்டும் தெரிவித்த கருத்துக்கள் சான்றாக நமது தளத்திலே பதிவு செய்யப் பட்டு உள்ளன, இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றால் போதும் என்கிறதுதான் அவர்களுக்கு முக்கியக் குறிக்கோள், அதோடு பிற மதத்தவரின் கடவுள்களைத் திட்ட வேண்டும் என்பதும்.

நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு,

இந்த தளத்தை ஒரு நண்பர் கொடுத்து படிக்கச்சொன்னார். அதனால் இங்கே கருத்து எழுதுகிறேன்.
என்னுடைய குடும்பம் மூன்று தலைமுறையாக கிறிஸ்துவ குடும்பம். எங்கள் குடும்பத்தில் நடக்காத துயர சம்பவம் இல்லை என்று சொல்லலாம். நாங்கள் சர்ச்சுக்கு போய் புலம்பாத புலம்பல் இல்லை. இருந்தாலும் மாறி மாறி துன்பங்கள் வந்துகொண்டே இருந்தன. மிகச்சிறிய வயதில் இழக்கக்கூடாத பலரை இழந்தோம்.
இறுதியில் ஒரு ஜோஸ்யரை கேட்டோம். அந்த அளவுக்கு நொந்து போயிருந்தோம். அவர் எங்களை மாரியம்மன் கோவிலுக்கு போய் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார். செய்தோம்.
அன்றிலிருந்து எங்கள் வாழ்க்கையில் இழந்ததையும் அடைந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறோம்.
அந்த ஜோஸியரின் கூற்றுப்படி இறந்த பிணத்தை வீட்டில் வைத்து கும்பிடக்கூடாது. இயேசு எவ்வளவு நல்லவராக இருந்தாலும், பிணத்தை வைத்து கும்பிட்டதால்தான் இத்தனை துன்பங்களும். அதனால் மேலை நாட்டில் செல்வம் இருந்தாலும் விவாகரத்துகளும், நிம்மதியின்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கே செல்வமில்லை என்றாலும் நிம்மதியான வாழ்க்கை, சந்தோஷமான குடும்ப சூழல் என்று இருகிறது. இதில் கிறிஸ்துவர்களான நாங்கள் வந்து குட்டையை குழப்பிவிட்டோம் என்று புரிகிறது.

என் கிறிஸ்துவ நண்பர்களுக்கும் இதையே சொல்லிக்கொள்கிறேன். நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு இந்து மதத்துக்கு திரும்பி வாருங்கள். நான் முன்னரே கிறிஸ்துவனாக இருந்தேன் என்பதால் அதில் எப்படி மூளைச்சலவையாகியிருக்கும் என்று புரிந்தே எழுதுகிறேன்.
-திருநாவுக்கரசு

ஒத்துவந்தால் தான் கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியும். கொடுமை படுத்தும் கணவனிடம் ஒரு பெண் எப்படி சாகும் வரை வாழ முடியும். அது அவரவர் தனிப்பட்ட விருப்பங்களை பொருத்தது . இப்படி தான் சாகும்வரை சேர்ந்து வாழ வேண்டும் என்பது காட்டுமிராண்டி காலத்து சிந்தனை. இதுதான் இந்திய பண்பாடு என்றால் அது உங்கள் புரிதல் மட்டுமே. கலாச்சாரம் என்பது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வரும்.

இப்படி தான் சாகும்வரை சேர்ந்து வாழ வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை.

மனம் ஒப்பித்தான் சாகும் வரை சேர்ந்து வாழ்கிறார்கள்.

அன்புதான் பிணைப்பை , இணைப்பை உருவாக்குகிறது. அன்புதான் விட்டுக் கொடுக்கும் தன்மையை உருவாக்குகிறது.

முரட்டுப் பிடிவாதம் இதயங்களை உடைக்கிறது.

கலாச்சாரம் காலத்துக்கு ஏற்ப உடைகள் மாறும், உள்ளங்கள் மாறாது. உருவங்கள் மாறி விடும், உள்ளங்கள் மாறாது.

பெரிய வங்கி அதிகாரியாக உள்ள பெண்கள், கணவனை விட பெரிய அதிகாரியாக உள்ள பெண்கள், வீட்டுலே வேலை செய்ய வேலைக்காரர் இருந்த போதும், மாலையில் கணவனுக்கு தானே காபி கலந்து கொடுப்பதை, நானே நண்பர்கள் வீட்டில் பார்த்து இருக்கிறேன். அது அன்பின் அடிப்படியில் ஆனது

“என‌வே ம‌ண‌ம‌க்க‌ள் இருவ‌ரும் இணைபிரியாமால் இன்று போல் என்றும் வாழ‌ வாழ்த்துகிரோம்….. ”

திரு.ராபர்ட் ஸ்டான்லி (திருநாவுக்கரசு)அவர்களே, தங்கள் பெயரைக் குறிப்பிட்டதிலேயே தெரிகிறது; தாங்கள் பெயரை மாற்றிய பிறகும் ஏன் பழைய உதவாத கிறித்தவ பெயர் உங்களுக்கு..?

நானும் இயேசுவை வணங்குகிறேன்,பிணமாக அல்ல, உயிர்த்தெழுந்த இரட்சகராக;

அதன் ஆதாரத் தத்துவம் எந்த உயிர்க்குமே மரணம் என்பதில்லை,அது ஒரு மறுஜனனம்(ஜன்மம் அல்ல…)அவனவனுக்குரிய பலனையடைய நித்திரையிலிருந்து எழும்புவதுபோல எழும்பவேண்டும் என்பதே;

இந்த மேலான நம்பிக்கை எனக்குள் இருப்பதால் என்னைச் சுற்றி நடக்கும் எதுவும் என்னை பாதிப்பதுமில்லை;அதற்கு நான் இறைவனைக் குற்றவாளியாக்குவதுமில்லை;

அவனவன் தத்தமது சுய இச்சையினால் இழுப்புண்டு சோதனையில் சிக்கிக் கொள்ளுவதாலேயே துன்பம் ஏற்படுகிறது என்று வேதம் சொல்லுகிறது;ஒருவருடைய தவறு மற்றும் துன்பம் அவரைச் சார்ந்தவரையும் பாதிப்பது மனித இயல்பு;இதற்கும் தெய்வ நம்பிக்கை மற்றும் தொழுதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

தங்கள் புத்தி ஆரோக்கியப்படாமல் மாரியம்மாளும் சரி மேரியம்மாளும் சரி எதுவும் செய்திட‌ என்பதையறிய வேண்டுகிறேன்;

தாங்கள் மெய்யாகவே பாதிக்கப்பட்டிருந்தால் எனது கருத்து தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்;

மற்றபடி உங்களைப் போல ஓராயிரம் பேர் எழும்பினாலும் கிறித்துவின் நற்செய்தியின் பாக்கியங்களைத் தடுத்துவிடமுடியாது;

சாம்ராஜ்யங்களும் சக்ரவர்த்திகளும் சர்வாதிகாரிகளும் நாத்திகமும் செய்திட முடியாததையா நீங்கள் செய்துவிடமுடியும்..?

//அந்த ஜோஸியரின் கூற்றுப்படி இறந்த பிணத்தை வீட்டில் வைத்து கும்பிடக்கூடாது. இயேசு எவ்வளவு நல்லவராக இருந்தாலும், பிணத்தை வைத்து கும்பிட்டதால்தான் இத்தனை துன்பங்களும். அதனால் மேலை நாட்டில் செல்வம் இருந்தாலும் விவாகரத்துகளும், நிம்மதியின்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கே செல்வமில்லை என்றாலும் நிம்மதியான வாழ்க்கை, சந்தோஷமான குடும்ப சூழல் என்று இருகிறது. இதில் கிறிஸ்துவர்களான நாங்கள் வந்து குட்டையை குழப்பிவிட்டோம் என்று புரிகிறது// திரு ராபர்ட் ஸ்டான்லி , நீங்கள் உண்மையைத் தான் சொல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் நேர்மைக்கு கோடி நமஸ்காரங்கள். இந்து கடவுளை கும்பிட்டீர்கள் என்பதற்காக உங்களை பாராட்டவில்லை. கோடான கோடி மக்களை ரத்தத்தைக் காட்டி பயமுறுத்தி மூளைச்சலவை செய்யும் கூட்டத்தில் உண்மையை உடைத்துப் பேச ஒருவரேனும் உளரே என்று நினைத்து மகிழ்கிறேன். ஐயா! நீவீரும் உங்கள் குடும்பமும் வாழ்வில் மேன்மேலும் வளங்கள் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

anbudan
ram

http://www.hayyram.blogspot.com

// கோடானுகோடி மக்களை ரத்தத்தைக் காட்டி பயமுறுத்தி மூளைச்சலவை செய்யும் கூட்டத்தில் …//

யாரோ ஒருவர் இங்கே வந்து எதையோ சொன்னார் என்பதற்காக யாரும் மகிழ்ந்துவிடவேண்டாம்;இந்த வரிகளை வாசிக்கும்போதே அவரவர் மனசாட்சியிலிருந்து தொனிக்கும் சத்தம் சத்தியத்தை உரைக்கும்;

யார் மூளைச் சலவை செய்பவர்,யார்
இரத்தத்தைக் காட்டி பயமுறுத்திப் பணிய வைப்பவர்,
யார் இரத்தஞ்சிந்தவும் காவு வாங்கவும் உயிர்களை எடுக்கவும் அலைபவர் என்பது தற்கால நாகரீக சமுதாயத்துக்கு நன்றாகவே தெரியும்;

ஊர் எல்லைகளில் சாமியாடி குறிசொல்லும் ஐயனாரின் பக்தனைக் கேளும்,
கருப்பனுக்கு பலியிட்டு ஆட்டின் கழுத்தை வெட்டி இரத்தத்தை உறிஞ்சி குடித்து கூடியிருக்கும் ஜனத்தை மிரட்டும் பூஜாரியைப் பாரும்;

முனியாண்டி என்றும் மாயாண்டி என்றும் அங்கே தூணில் என்றும் இங்கே துரும்பிலும் என்றும் படிப்பறிவில்லாத ஏழை எளியோரைக் தூதுவர்களைக் கேளும்;

உயிரை எடுப்பவரா,
உயிரைக் கொடுப்பவரா?

இரத்தம் கேட்பவரா,
இரத்தம் சிந்தி மீட்டவரா?
யார் உனக்கு சொந்தம் என்று சிந்தித்துப் பாரும்;

//ஊர் எல்லைகளில் சாமியாடி குறிசொல்லும் ஐயனாரின் பக்தனைக் கேளும்,
கருப்பனுக்கு பலியிட்டு ஆட்டின் கழுத்தை வெட்டி இரத்தத்தை உறிஞ்சி குடித்து கூடியிருக்கும் ஜனத்தை மிரட்டும் பூஜாரியைப் பாரும்;//

அஹிம்சை என்பது இந்திய தத்துவத்திலே முக்கிய அம்சமாகும். இந்து, புத்த , சமண மதங்கள் அஹிம்சையை போதிக்கின்றன. கொல்லாமை என்பது பற்றி வள்ளுவர் , திருக் குறளில் தனி அதிகாரம் அமைத்து அறிவுரை வழங்கி இருக்கிறார். . வயதான பலர் புலால் உணவை உடல் நலம் கருதி விட்டு விடுகின்றனர். அதே நேரத்திலே புலால் உணவு உண்ணவே கூடாது என்று இந்து மதம் தடை போடவில்லை. உலகின் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் புலால் உணவு உண்பது போல இந்தியாவிலும் புலால் உண்கின்றனர். அப்படி புலால் உணவுக்காக ஆட்டை வெட்டும் போது, அதை கடவுளுக்கு படைத்து விட்டு உன்ன விரும்புகின்றனர். அவரவர் தனக்குப் பிடித்த உணவை தனக்குப் பிரியமானவருடன் பகிர்ந்து கொள்வது போன்றதே இது. இந்தியாவின் பல கோவிலகளில் பல வழிபாட்டு முறைகள் உள்ளன. பழனி, திருத்தணி உள்ளிட்ட எந்த முருகர் கோவிலிலும் ஆடு ,மாடுகளைப் பலியிடுவது இல்லை. கிராமக் கோவிலகளில் ஆடு மாடுகளைப் பலியிடுகின்றனர். இதில் பெரிய தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் ஆட்டைப் பலியிடும் பூசாரி, மக்களை மிரட்டுவதற்காக அப்படி செய்யவில்லை. எந்த ஒரு உயிரும் கொல்லப் படுவது, பரிதாபமான , உள்ளத்தை உருக்கும் செயலே. ஆனால் ஆடோ, கோழியோ அதைக் கொன்றுதான் சாப்பிடுகிறார்கள். அதை இறைவனுக்கு பலி கொடுப்பதாக கோவிலிலே வெட்டுகிறார்கள். பலி கொடுக்கும் பூசாரியும் சரி, அந்த நிகழ்ச்சயில் பங்க்கேடுப்பவரும் சரி, பிற மார்க்கத்தின் மீது , வெறுப்புக் கருத்துக்களைத் தூண்டவோ, பரப்பவோ இல்லை. எந்த ஒரு மனிதன் மீதும் வெறுப்புனரச்சியை தூண்டவும் இல்லை.

சகோதரர் சில்சாம் கொல்லாமை தத்துவத்தை, அஹிம்சை தத்துவத்தை ஆதரிப்பதை நான் வரவேற்கிறேன். சகோதரர சில்சாம், அவருடைய சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடம் கொல்லாமை தத்துவத்தை, அஹிம்சை வாழ்க்கை முறையை பரப்புவார் என்று நம்புவோம்.

அதோடு அத்வேஷ்டா சிந்தனைகளுக்கு , வெறுப்பை நீக்கிய சமரச அமைதி சிந்தனைகளுக்கு வருவார் எனவும் நம்புவோம், அது இயேசு கிறிஸ்து எந்த ஒரு விட்டுக் கொடுக்கும் பாதையை சொன்னாரோ அந்தப் பாதைக்கு அவர் வருவதாக அமையும்.

நண்பருடைய இந்த கட்டுரைக்கு வரிக்கு வரியாக பதிலை எனது தளத்தில் பதித்துள்ளேன்;வாசக நண்பர்கள் பார்வையிட்டு தங்கள் மேலான கருத்துக்களைப் பதிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

//மறுஜனனம்(ஜன்மம் அல்ல…)// அடக்கருமமே! ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். ரொம்ப புத்திசாலியாட்டும் பிரிச்சு வேற சொல்றாரு பாருங்க. பாவம் ஏமாளி மக்கள்!

//கருப்பனுக்கு பலியிட்டு ஆட்டின் கழுத்தை வெட்டி இரத்தத்தை உறிஞ்சி // அய்யய்யே! நான் சொன்னது இந்த ரத்தம் பத்தி இல்லய்யா! ஏசுவின் ரத்தம் பத்தி சொல்றேன். ஆட்டுமந்தை மாதிரி கூட்டமா மக்களை கூட்டி வெச்சு, வானத்தில் இருந்து ரத்தம் வழிகிறது, இதோ ஏசுவின் ரத்தம் வழிகிறது, இதோ வந்து விட்டது, உங்கள் மூஞ்சியில் விழுந்து விட்டது, துடைத்துக்கொள்ளுங்கள், இந்த ரத்தம் தான் உங்கள் பாவங்களைக் கழுவப்போகிறது என்று சொல்லி மக்களை ஒரு பீதியில் ஆழ்த்தி ரத்தம் பற்றி பயத்தை உண்டாக்கி மூலைச்சலவை செய்து வைத்திருக்கிறீர்களே அதை பற்றி சொல்கிறேன். புரிஞ்சிக்காத மாதிரியே எவ்வளவு தான் நடிப்பீங்களோ!

ஹலோ மிஸ்டர் புத்திசாலி,
உங்க கோடாங்கி, துள்ள துடிக்க ஆட்டை வெட்டி, அதன் இரத்தத்தைக் குடிச்சா எதிரே இருப்போர் பாவ தோஷமனைத்தும் போகும் என நீர் நம்பினால் இயேசுவின் இரத்தத்தால் பாவம் நிவர்த்தியாகும் என்பதை நான் நம்பக்கூடாதோ..?

எங்க மூளைய சலவைய செஞ்சி சுத்தமா வெச்சுருக்கோம்,தேவைப்பட்டா நீரும் டிரை பண்ணிப்பாரும்…களிம்பு இருந்தா சுத்தம் பண்ணித்தானே ஆகணும்..?

அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் விவாகரத்து மற்றும் விபசார கலாசாரம் இருப்பதாகவும், இந்தியாவில் அனைவரும் நல்லபடி வாழ்வதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதை என்னால், மறுக்க முடியாவிட்டாலும் முழுமையாக ஏற்கமுடியவில்லை. நீங்கள் எதைவைத்து இப்படி கூறினீர்கள் என்று தெரியவில்லை. அந்த நாடுகளில் நல்லபடி குடும்ப வாழ்க்கைவாழ்பவர்களும் உள்ளனர். நம் நாட்டிலும் சொல்லவே அருவெறுப்பு வருகிரதைபோல் வாழ்பவர்களும் உள்ளனர். வெள்ளைக்காரர்களின் பிரச்சனைக்கு கிறிஸ்துவம் எப்படி காரணமாக இருக்கமுடியும்.
இந்தியாவில், ஒரு பெண் கணவனை பிரிந்து வாழ்ந்தால், அவளை இந்தியர்கள் எப்படி பார்ப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும், அப்படி தெரியாதது போல் நீங்கள் நடிப்பீர்களானால், நான் எனது அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.
கணவனை பிரிந்த பெண்ணின் குடும்பமும் அவளை ஏற்றுக்கொள்ளாது. பல பெண்கள், இத்தகைய காரணங்களால்தான் விவாகரத்துக்கு செல்வதில்லை (நிறைய பேர் உண்மையான அன்போடுதான் தன் கணவனுடன் வாழ்கின்றனர்). வேசித்தனங்களை பற்றி கேட்கவே வேண்டாம். நீங்கள் நம் ஊரைப்பற்றி அதிகம் தெரியாதவராக இருகிறீர்கள் என்றே நினைக்கிறேன். கள்ளக்காதலால் உண்டான கொலைகள் பற்றி நீங்கள் தினசரிகளில் வாசிப்பதில்லையா? அவை அத்தனையும் கொலை அளவுக்கு சென்றபிறகே செய்திதாள்களில் வருகிறது. மற்றபடி நடப்பதெல்லாம் நடந்துகொண்டுதான் உள்ளது.
இப்போது இருக்கும் Call Center கலாசாரம் உங்களுக்கு தெரியுமா? வேசித்தனம் அங்கே தலை விரித்து ஆடுகிறது. அங்கே என்ன கிறிஸ்துவ போதனையா நடக்கிறது? சுதந்திரம் அளவுக்கு மீறி போனால் என்ன நடக்குமோ, அதுதான் மேல்நாடுகளிலும், இப்போதைய call center மக்களிடமும் நடக்கிறது.
உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இதற்க்கெல்லாம் கிறிஸ்த்துவத்தை இழுக்கவேண்டாம்.
Hard Truth

இந்தியாவிலே, இஸ்லாமிய நாடுகளிலே விபச்சாரம் இல்லையா என்றால் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.

ஒரு வூரில் எத்தனை குடும்பங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை பேர் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பாருங்கள். சென்னைக்கு வாருங்கள். எத்தை பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். மாலை நேரத்திலே, குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு வந்து சேர்ந்து இருப்பாரக்லா என்ற கவலையோடு வேகமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகின்றனர். விபச்சாரத்தைப் பற்றி அவர்கள் நினைப்பது கூட இல்லை. ஆங்காங்கே சிலர் விபச்சாரத்தில் ஈடுபடலாம். பெரும்பாலனா மக்கள எப்படி வாழ்கிறார்கள் என்று பாருங்கள். இந்தியாவில் இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். இப்படிப் பட்ட ஒரு கலாச்சாரம் உருவான நாட்டிலே பல்லாயிரம் வருடங்களாக இந்து மதம் தான் முக்கிய மதமாக இருந்து வருகிறது. அந்த வகையிலே இஸ்லாமிய மார்க்கம் பின்பற்றப் படும் நாடுகளில் கூட அவர்கள் பல தார முறை அங்கீகரிக்கப் பட்ட நாடுகளில் கூட குடும்ப வாழ்க்கை முறை உள்ளது. இந்தோனேசியாவிலும், சவுதி அரேபியாவிலும் அமெரிக்காவையும் , ஐரோப்பாவையும் விட குடும்ப வாழ்க்கை முறை சிறப்பாக உள்ளது, விபச்சாரம் குறைவாக உள்ளது. இது உங்களுக்குத் தெரியாதது அல்லவே.

நான் முன்பே சொன்னது போல கொள்கை அளவிலும், சிந்தனை அளவிலும், உணர்வு அடிப்படையிலும் இயேசு கிறிஸ்து எங்களுடன் இருக்கிறார். நாங்கள் அவருடன் இருக்கிறோம்.

அவர் பெயரால் உருவாக்கப் பட்ட சில அமைப்புகள் மேலை நாடுகளை சரியாக வழி நடத்தி செல்லாததால், அவைகள் சீர்கேட்டுக்கு ஆளாகி விட்டன. குடும்ப அமைப்பே இல்லை. குழந்தைகளும் குறைவு. இன்னும் முப்பது வருடத்திலே ஐரோப்பாவில் முதியவர்கள் எழுபது சதவீதமும், உழைக்கும் வயதில் இருப்போர் முப்பது சதவீதமும் ஆகும் நிலை உள்ளது என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கே திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலைக்கு காரணமான தவறான பிடிவாதக் கோட்பாடுகளை இங்கே திணிக்க வேண்டாம், இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களின் உண்மையான பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய உணர்வுகளில் பங்கெடுக்க விரும்பினால், நாங்கள் எடுத்துக் கூறி அதற்க்கு உதவத் தயாராக இருக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவே குறிப்பிட்டது போல //நீங்கள் பிறரை உங்கள் மார்க்கத்தவராக்கும் பொருட்டு பூமியையும், சமுத்திரத்தையும் சுற்றித் திரிகிறீர்கள்,அவர்கள் உங்கள் மார்க்கத்தவரான பின் உங்களைக் காட்டிலும் பாவிகள் ஆக்குகிறீர்கள்// என்று சொன்னதி செய்ய வேண்டாம் என்றே இயேசு கிறிஸ்துவி கொள்கையில் அடிப்படையிலே அவருடைய சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

சிலர் விவாக ரத்து அவசியம் தான் என்றும், இந்தியாவிலே விவாக ரத்து செய்ய வாய்ப்பு இல்லையே என்று வருத்தப் பட்டும் தெரிவித்த கருத்துக்கள் சான்றாக நமது தளத்திலே பதிவு செய்யப் பட்டு உள்ளன, இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றால் போதும் என்கிறதுதான் அவர்களுக்கு முக்கியக் குறிக்கோள், அதோடு பிற மதத்தவரின் கடவுள்களைத் திட்ட வேண்டும் என்பதும்

இந்தியாவில்தான் அதிக ஒழுக்கசீலர்கள் என்றால், இந்தியாவில் ஏன் இத்தனை அனாதைகள் மற்றும் AIDS நோயாளிகள்?
விபசார கலாச்சாரமில்லாத நாட்டில் எப்படி இது சாத்தியம்?

Hard Truth

//துள்ள துடிக்க ஆட்டை வெட்டி, அதன் இரத்தத்தைக் குடிச்சா எதிரே இருப்போர் பாவ தோஷமனைத்தும் போகும் என நீர் நம்பினால் //

ஆட்டு ரத்தத்தால் பாவ தோஷம் போகும் என்று எந்த இந்துவும் நம்பமாட்டான். மாறாக ஆட்டு ரத்தத்தை குடிப்பது ஒரு பரவச நிலையே! அதுவும் பூசாரி மட்டும் தான் செய்கிறார். மற்றவர்கள் ஆட்டு ரத்தத்தை லாவகமாக பிடித்து பொறியல் செய்து சப்பிடுவார்கள். அது இறைவனுக்கு படைக்கப்பட்டு பின்னர் உண்ணும் உணவு அவ்வளவே. ஆனால் நீங்கள் வானத்தில் இருந்து ஏசுவின் ரத்தம் வருவதாக வெற்று வானத்தைப் பார்த்து கூறி மக்களை முட்டாளாக்குகிறீர்கள். திருந்துங்கப்பா!

பரிசுத்த வேதாகமம் அமைத்துக் கொடுத்த ஆச்சாரமான பலிமுறைகளை விரும்பினால் வேதத்தை எடுத்து படித்துப் பாருங்கள்; ஆச்சரியப்படுவீர்கள்;

ஆதியிலேயே மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் பிரதானமானது இரத்தத்தை புசித்தல் கூடாது என்பதே;

அதுவே உயிரின் ஆதாரம் என்று பரிசுத்த வேதாகமம் தெளிவாகப் போதிக்கிறது;

எனவே பலியிடுவோர் அதனைத் தனியாக ஒரு கிண்ணியில் சேகரித்து பிறகு தண்ணீரைப் போல ஊற்றிவிடுவர்;

அதுபோலவே அநேகருக்காக ஒருவர் பலியாவது நல்லது எனும் பொதுவுடைமைக் கொள்கையின் அடிப்படையில் இயேசுவானவரின் இரத்தம் வானத்திலிருந்து சொட்டவில்லை;அது நினைவுகூறப்படுகிறது;

‘ தேசப்பிதா’ என்று காந்திஜியை ஏன் புகழுகிறோம், நினைவுகூறுகிறோம்;

அவர் சுதந்தரத்துக்காகப் பாடுபட்டது மாத்திரமல்ல, இரத்தம் சிந்தி ஜீவனை விட்டார்; இதுவும் நினைவுகூறுவதுதான்;

சரி, நினைவுகூர்ந்து என்ன இலாபம்?
ஆம்,அவர் மரிக்கக் காரணமான பாவத்தை நான் செய்யமாட்டேன் என்ற தீர்மானத்துடன் அவருடைய நீதிபோதனைகளை என் வாழ்வில் கைக்கொள்ளுவேன் அதினால் சுகமடைவேன்; அவ்வளவுதான் சுவிசேஷம்;

மற்றபடி பூஜாரி இரத்தம் குடிக்கும்போதும் கும்பாபிஷேகத்தின் போது அங்கிருந்து தெளிக்கப்படும் புனித ஜலம் ஒரு துளி மேலே பட்டதும் சிலிர்த்து பரவச நிலையினை யடைவதும் போலவே என்றைக்கோ எங்கேயோ எனக்காக ஒருவர் இரத்தம் சிந்தினார் என்பதை நினைவுகூறும்போது நானும் இன்றைக்கு எனக்காக அது நடந்ததுபோலவும் என்மீது அந்த இரத்தத்துளி விழுந்ததுபோலவும் உணர்ந்து பரவசநிலை அடைகிறேன்;

நாங்க திருந்தமாட்டோம்பா,உங்களைத் திருப்புவோம்..!

//சிலர் விவாக ரத்து அவசியம் தான் என்றும், இந்தியாவிலே விவாக ரத்து செய்ய வாய்ப்பு இல்லையே என்று வருத்தப் பட்டும் தெரிவித்த கருத்துக்கள் சான்றாக நமது தளத்திலே பதிவு செய்யப் பட்டு உள்ளன,//
What will you expect me to do, if my own sister is married to a psycho, who can kill her any time? Just because she is married to him (by mistake), you want her to be murdered? Is that what your “Logical” brain says?
Hard Truth

முரட்டுப் பிடிவாதக் கருத்துக்கள் சைக்கோவைத் தானே உருவாக்கும். இணக்கக் கருத்துக்கள், அன்புக் கருத்துக்கள் விட்டுக் கொடுத்துப் போகச் சொல்லும் கருத்துக்கள ஒரு மனிதனை நாகரீகம் உள்ளவனாக்கி மனைவியிடம் அன்பு செய்யுமாறு , மனைவியை நன்றாக நடத்துமாறு செய்யும்.

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கு முன் அவன் பழக்க வழக்கம் எப்படி, அவன் அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்கிறான், வீட்டில் எப்படி நடந்துகொள்கிறான், தண்ணி அடிப்பானா , ஓவராத் தண்ணி அடிப்பானா, அவன் தாய் தந்தையார் எப்படி எல்லாம் விசாரித்து பொறுமையாகவே திருமணம் செய்து தருகிறார்கள்.

You didn’t answer my question. I was not asking for the precaution. I am asking, what can be done, when the damage is already happened?
Why dont you be little honest and answer this question?
Hard Truth

நான் செய்ய வேண்டியதை சொல்லி இருக்கிறேன் . அன்பு உள்ளங்களை உருவாக்குவதே வழி. விட்டுக் கொடுத்து அடுத்தவர் மகிழ்ச்சி அடைவதில், தான் மகிழ்ச்சி அடையும் மனப் பாங்கை உருவாக்குவதுதான் ஒரே வழி.

மார்க்கமே முரட்டுப் பிடிவாதக் சிந்தனைகளை உருவாக்கும் வகையிலே கருத்துக்களைப் போதித்தால் திருமண விடயத்தில் மட்டும் இணக்கம் எப்படி வரும்.

Mr. Trichy,
My question is about divorce. You are just escaping from the question. Please answer this. On the above given situation, will you ask that sister to go for divorce? Please say “Yes” or “No”.
Hard Truth

My friend,

No need for divorce myfriend, the man, his mind set can be changed.

தூய்மையும், ஒழுக்கமும் உடைய மனைவியால் திருத்தப் பட முடியாத கொடுமைக்காரன் இந்த உலகத்திலே யாருமே இல்லை என சுவாமி விவேகனந்தர் சொல்லி இருக்கிறார். மிகவும் கடுமையான வாழ்க்கைதான். ஆனால் அந்த மனிதனை நல வழிக்கு கொண்டு வர அந்தப் பெண் தன் வாழக்கையை தியாகம் செய்து கொள்கிறாள். அவன் எவ்வளவு சீக்கிரம் நல்ல வழிக்கு வருகிறானோ, அந்த அளவுக்கு நல்லது. திவாலாகப் போகும் நிலையில் உள்ள கம்பெனியை சரியாக்குவது தான் சிறப்பான செயல். ஆனால் எந்தப் பெண்ணும் ஒரு கொடுமைக் காரனிடம் சிக்காத படிக்கு, நாகரீகக் கருத்துக்களை ஒவ்வொரு ஆணிடமும் அவன் சிறுவனாக இருக்கும் போதே கொண்டு போய் சேர்ப்போம்.

Dear Mr.Trichy,
I just don’t know what to tell you. The girl I am telling about had already undergone severe trauma. Her both the jaws were broken, 8 fingers were broken (one by one in a sadistic way), few of the ribs were broken (because he was jumbing on her, when she was fainted), luckily somehow neighbours noticed this and they resqued her. I know this sister personally right from her Childhood. This had come to in a tamil newspaper also in 2005. It took 5yrs for that girl to come back to her (somewhat) normal state. She had applied for divorce. I personally feel that it is better for the girl to stay away from that guy atleast for the safety of her life. The guy is back from the prison (claiming his mental illness and now he is not in mental hospital too). And you are saying that she has to continue living with her.
தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
FYI, that guy is a Hindu.

Hard Truth

தமிழ் நாட்டிலே திருமணத்துக்கு முன்பு ஒரு முக்கிய சடங்கு உண்டு. இப்போது அதை யாரும் பின் பற்றுவதில்லை.

திருமணத்திற்கு ஓரிரு நாட்கள் முன்பு மணமகளின் வீட்டாரின் மருத்துவர் cum முடி திருத்துபவர், மணமகனுக்கு சர்வாங்க சவரம் எனபடும் சவரத்தை செய்வார்.

அதாவது அவனுடைய உடலில் உள்ள முடி அனைத்தையும் மழித்து நீக்கி விடுவார். அப்படி செய்யும் போதே அந்த மண மகனின் கை கால் உட்பட உடலில் இருக்கும் பல நரம்பு மண்டலங்களை செக் செய்து விடுவார். மண மகனுக்கு ஏதாவது வியாதி இருக்கிறதா, அவன் நடை உடை பாவனைகள் என்ன, எல்லாவற்றையும் பற்றி விலா வரியாக செக் செய்து அவர் அனுமதி கொடுத்த பின் தான் திருமணம் நடக்கும்.

காசு பணம், சொத்து பத்துக்கு ஆசை பட்டு, சிலர் பெண்களை பைத்தியக் காரருக்கு கூட திருமணம் செய்து கொடுக்கின்றனர். பெண்ணைக் கொடுத்தோமா, கண்ணைக் கொடுத்தோமா என்று என் தந்தை சொல்லுவார், அதைப் போல கவனமாக செயல் பட வேண்டும்.

Are you mentally alright Mr.Trichy? Really you are making me to doubt your mental stability.
Why couldn’t you understand a simple question? Just look at question and answer to it. I have already told that I was asking for the precaution because the damage is already done.
By now, people know that you are escaping the question.
Hard Truth

டேமேஜுக்கு காரணம், முரட்டுப் பிடிவாதக் கோட்பாடுகள் தான். அதற்க்கு தீர்வு விட்டுக் கொடுக்கும் அன்புக் கோட்பாடுகள் தான். அன்புக் கோட்பாட்டால் ஒரு மனிதரைத் திருத்த முடியும் என்று நான் நம்புகிறேன் (Iam confident)!

திருச்சி சார், பிடிவாதத்திற்காக பேசினால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாத்துக்கும் மதத்தை காரணம் சொல்லனுமா? மேற்கு மாம்பலத்தில் ஒரு பார்பன பெண் விபச்சாரம் செய்ததற்காக கைது செய்ய பட்டாள். அவள் நல்ல வசதியான கணவனுடன் தான் இருந்தாள். அதற்க்கு காரணம் இந்து மதத்தை அவள் பின்பற்றியதாலா .
உங்க கருத்து என்பதற்கும் உண்மை என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. உங்கள் கருத்துதான் சரி என்னும் தோணியே இருக்கிறது உங்கள் பதில்களில். ஒருவர் சேர்ந்து வாழ்வதும் வாழததும் அவரவர் புரிதலிலும் நடத்தையிலும் இருக்கிறது.

(குறிப்பு : வானர படைகளை கொஞ்சம் அடக்கி வையுங்க. வெறுப்பு கருத்து வளராம இருக்க )

திரு HARD TRUTH அவர்களே ,

///இந்தியாவில்தான் அதிக ஒழுக்கசீலர்கள் என்றால், இந்தியாவில் ஏன் இத்தனை அனாதைகள் மற்றும் AIDS நோயாளிகள்?
விபசார கலாச்சாரமில்லாத நாட்டில் எப்படி இது சாத்தியம்?///

மேற்க்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக ஒழுக்க சீலர்கள் இருப்பது தெள்ளத் தெளிவானதே.

சகோ.திருச்சிக்காரர் மேற்க்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக ஒழுக்க சீலர்கள் இருக்கிறார்கள் என்று தானே கூறுகிறார்.

இந்தியாவில் உள்ள அனைவரும் 100 % ஒழுக்க சீலர்களாக இருக்கிறார்கள் என்று கூறவில்லையே?

தனபால்,
ஏதோ ஒரு சில AIDS நோயாளிகள் இருந்தால் பரவாயில்லை. உலகத்தில் இரண்டாம் இடம், இந்தியாவிற்கு. மருத்துவ வசதிகளில் இந்தியாவிற்கு குறைவில்லை. விழிப்புர்ணற்சியிலும் பல கீழைநாடுகளை விட நல்ல நிலையில்தான் உள்ளோம், பிறகு எப்படி இந்த நிலை? திருச்சிக்காரன் கூறியதை போல், பெரும்பான்மையான மக்கள் ஒழுக்கமாக வாழும் தேசம் எப்படி உலகத்தில் இரண்டாம் நிலைக்கு சென்றது? வெளி உலகுக்கு வேண்டுமானால் “ஒருவனுக்கு ஒருத்தி”, “குடும்ப வாழ்க்கை”, “கலாசாரம்” என்று பாசாங்கு காட்டலாம். ஆனால், இந்தியாவின் உண்மையான நிலை இந்த நோய் கிருமியின் மூலம் வெளிப்பட்டு விட்டது.
Hard Truth

உலகிலே வெளிப்படையான பத்திரிக்கை சுதந்திரம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, உலகிலே இந்தியா தான் மக்கள் தொகையிலே இரண்டாவது மிகப் பெரிய நாடு. இங்கே மருத்துவக் கட்டமைப்பு சரியல்ல. எனக்கே கல்லூரி நாட்களில் ஒரே நீடிலை (needle) வைத்து ஐந்து மாணவர்களுக்கு வூசி போடுவார்கள். நாங்கள் ஏன் எனக் கேட்டால், உனக்கு எய்ட்ஸ் இருக்கா, ஒன் பிரண்டுக்கு இருக்கா, இல்லை தானே, போ போ என்பார்கள். மறுப்புக் காட்ட முடியாத சூழ் நிலை.

இந்தியாவைப் பற்றி தெரியாதா? அவனவன் பிள்ளை குட்டி பெத்து, பேரன் பேத்தி எடுத்து நேர்மையான குடும்ப வாழ்க்கை நடத்துவது தெரியாதா? எல்லாம் தெரியும். ஆனாலும் ஆவேசத்தினாலே தன் தாய் நாட்டு ஜனங்களைப் பற்றி சிலர் புழுதி வாரித் தூற்றுகிறார்கள்.

அவரவர்கள் பெற்றோர் எப்படி குடும்பம் நடத்தினார்கள், தாத்தா பாட்டி எப்படிக் குடும்பம் நடத்தினார்கள், அக்காள் தங்கை, அண்ணன், தம்பி எப்படிக் குடும்பம் நடத்துகிறார்கள் என்று தெரியாதா? தெரிந்தும் உண்மையை மறைத்து இந்திய சமுதாயத்தின் மீது கரி பூசப் பார்க்கின்றனர்.

இந்தியாவிலே பிறந்ததனால் தான் குடும்ப வாழ்க்கை என்ன என்றாவது நமக்கு தெரிகிறது. நாம் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ பிறந்திருந்தால், அப்பா ஒரு பக்கம் போயிருப்பார். அன்னை ஒரு பக்கம் போயிருப்பார் , அவர்களை (மேலை நாட்டவரை) குடும்ப வாழ்க்கை முறைக்கு திரும்பச் செய்ய உதவி செய்ய இவர்களால் முடியாது, அதற்க்கான இணக்கக் கோட்பாடுகள் இவர்களிடம் இல்லை.

பூமியையும், சமுத்திரத்தையும் சுற்றிக் கொண்டு இங்கே நம்மிடம் வந்து பாவி பாவி என்று பாவியாக்கப் பார்க்கிறார்கள்.

HIV பெரும்பாலும் உடலுறவின் போதே பரவுகிறது, அடுத்தபடியாக தாயிடமிருந்து பிள்ளைக்கு பரவுகிறது, மட்ட்றபடி ஊசி மூலம் பரவுவது மிகவும் சொற்பமே. திருச்சிக்காரன் சொல்வதை பார்த்தால், இந்தியாவின் AIDS பிரச்சனைக்கு மருத்துவர்கள்தான் காரணம் என்பார் போலும். மருத்துவ வசதியில் இந்தியா பின் தங்கி இருப்பதாக சொல்லப்படுவது பச்சை பொய். அமெரிக்காவில் வசிக்கும் பல இந்தியர் தங்கள் சிகிச்சைக்காக இப்போது இந்தியா வருகின்றனர்.
Hard Truth

அமெரிக்காவிலே பணி செய்யும் இந்தியர்கள் இந்தியாவிலே அப்போல்லோ, மலர் போன்ற நட்சத்திர ஆசுபத்திரியில் நல்ல சிகிச்சை பெறுகின்றனர் என்பது பச்சை உண்மையே.

அதே நேரம் சென்னையில் ஜாபர் கான் பேட்டையில் ரிக்ஷா இழுப்பவனுக்கு அந்த சிகிச்ச்சை இது வரை கிடைக்கவில்லை என்பதும் நாடறிந்த உண்மையே! இப்போதுதான் கலைங்கர் ஏதொ திட்டம் கொண்டு வந்து இருக்கிறார். உண்மையிலே உதவுமா என்று பார்ப்போம்.

இந்தியாவிலே பெரும்பாலான மக்கள் நேர்மையான குடும்ப வாழ்க்கை, குழந்தை குட்டி, பேரன். பேத்தி என்று இருப்பதை ஒப்புக் கொள்ள சில நண்பர்களுக்கு மனம் வரவில்லை.

நான் சொல்கிறேன். நீங்கள் சென்னைக்கு வாருங்கள். ஒரு ஏரியாவைத் தேர்ந்து எடுங்கள், எத்தனை பேர் நேர்மையான குடும்ப வாழ்க்கை வாழ்கிறார்கள், எத்தனை பேர் கட்டிய மனைவியுடன் வயதான காலத்திலும் வாழ்கிறார்கள் என்று பாருங்கள்.

தொண்ணூறு சதவீத்ததுக்கும் மேலான நேர்மையான குடும்ப வாழ்க்கையை நடத்துபவர்கள் இவர்கள கண்ணுக்குத் தென்பட மாட்டார்கள். யாரவது விபச்சார வாழ்க்கையை வாழ்பவர்கள் இருக்கிறார்களா என்று தேடுவார்கள்.

காரணம் இவர்களால் உண்மையை ஒத்துக்க கொள்ள முடியவில்லை. அய்யோ, அவன் நேர்மையான குடும்ப வாழ்க்கை வாழ்கிறானே என்று வயிறு எரிகிறது சிலருக்கு, அவனையும் டேட்டிங் கலாச்சாரத்துக்கு கொண்டு வர வேண்டும், அப்போதுதான் திருச்சிக்காரன் மூஞ்சியிலே கரி பூசலாம்.

இப்போது நண்பர்களுக்கு நன்கு புலனாகும் ,

இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை – கணவன் மனைவி பிரியக் கூடாது, விபச்சாரம் வேண்டாம் – யார் வூக்குவிக்கிரார்கள்,

யார் இயேசு கிறிஸ்துவின் கற்பிதங்களுக்கு எதிரான வகையில் சமூகத்தை இட்டு செல்கிறார்கள் என்று.

எனவே நான் மீண்டும் உறுதி இட்டு சொல்கிறேன், இயேசு கிறிஸ்து எங்களுடன் இருக்கிறார், நாங்கள் இயேசு கிறிஸ்துவுடன் இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் கொள்கைகள் இந்திய சமுதாயம் பல்லாண்டுகளாக பின் பற்றி வந்த கொள்கைகளே. எனவே நம்முடையவர் இயேசு கிறிஸ்து, நாம் அவருக்கு எப்போதும் மரியாதை செய்து வணக்கம் செலுத்துவோம்.

அவரை தங்களுடைய தேவனாக சொல்லிக் கொண்டு, அவருடைய கற்பிதங்களுக்கு எதிராக டேட்டிங்
விபச்சார, குடும்ப வாழ்க்கை மறுப்பு, விவாகரத்து கலாச்சாரத்தில் திளைப்பவர்க்ளையும் (மேலை நாட்டவர்) – நாம் வெறுக்கவில்லை. அவர்களையும் நம் மந்தையிலே சேர்க்க வேண்டியுள்ளது. தொடர்ந்து நல வாழ்க்கையை நடத்தி நம் கலாச்சாரத்தை பரப்புவோம்.

அதாவது, சென்னைக்கு வந்து ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே உள்ளவர்கள் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்க சொல்கிறீர்கள். உங்களுக்கு என் மேல் கோவம் இருக்கலாம், அதற்காக என்னை பொதுமக்களிடம் அடி வாங்க வைக்க வேண்டுமா?
மேலும், வேசித்தனம் செய்பவர், போர்டு போட்டுக்கொண்டா செய்வார்கள். மற்றவர் கண்ணுக்கு நல்லவராக தெரிபவர் தன் அந்தரங்கத்தில் தகாத காரியங்கள் செய்யலாம். ஏதாவது நோய் வந்தாலோ அல்லது “நித்யாவை” போல மாட்டிக்கொண்டாலோ மட்டுமே பலரது முகத்திரை கிழிகிறது. அதுவரை எல்லாம் நல்லவர் போல அடுத்தவரை குற்றம் கூறிக்கொண்டு திரிகிறார்கள்.
என் இந்திய சகோதரர்கள் நன்றாக வாழ்ந்தால் எனக்கு எப்படி வயிறு எரியும்? திருச்சிக்காரன் முகத்தில் நான் எதற்க்காக கரி பூச வேண்டும்? அப்படி கரி பூசுவதற்கு, என் சகோதரர்கள் தவறான வழி நடக்க ஆசை படுவேனா?
மேலும், குடும்பமாக வாழ்பவர்கள் விபச்சாரம் செய்வதில்லை என்று யார் சொன்னது. காஞ்சி அர்ச்சகர் வீடியோவில் உள்ள பெண்கள் குடும்ப பெண்களே. அந்த வீடியோ வெளிவராவிட்டால், இன்று வரை அவர்களை பத்தினி தெய்வங்கள் என்றுதான் நம் திருச்சியார் போற்றி இருப்பார்?
Yahoo Chat room (தமிழ்நாடு), சென்று பாருங்கள், எத்தனை ஆண் புனர்சிக்காரர்கள் தமிழகத்தில் உண்டு என்று தெரியும். அவர்கள், தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தாலும், இத்தகைய செயல்களில் ஈடுபடும் இரட்டை வாழ்க்கை வாழும் மக்களே.
இந்தியாவில் பல பிரச்சனைகள் தீராமல் இருப்பதற்கு காரணம், பிரச்னை இருந்தும், அவைகளை கண்டும் காணாதது போல் நடிப்பதுதான். உங்கள் நடிப்பை நிறுத்து பழம்பெருமை பேசி திரியாமல், உபயோகமாய் ஏதாவது சிந்தியுங்கள்.
Hard Truth

இது என்ன ஐயா,

கணவன் மனைவி குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். கணவன் இல்லாத போது வேறு ஆடவன் வீட்டிற்கு வருவதில்லை, பால் பேப்பர் போட வருபவர் போட்டு விட்டு செல்கின்றார். குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்ல ரிக்ஷா காரர் வீட்டு வாசலில் நிற்கிறார்.

யாரவது ஒரு ஆடவன் அடிக்கடி வீட்டுக்கு வந்தாலும் பக்கத்திலே இருப்பவர்கள் கண்ணில் படாமல் இருப்பதில்லை. இதிலே எப்படி விபச்சாரம் நடக்கும். வானத்தில் இருந்து குதித்து விபச்சாரம் செய்வார்களா?

சென்னைக்கு வந்து தங்கிப் பாருங்கள். மக்களுடன் வசியுங்கள் உங்களுக்கே தெரியும்.

நித்யா உட்பட பல ஹாய்- பை சாமியார்கள் பற்றி நான் எச்சரிக்கை செய்துதான் வருகிறோம். காஞ்சி தேவநாதன் போல சில நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தியாவில் வாழும் பெண்கள் ஒவ்வொருவரும் கண்ணகியை சீதையைப் போன்றவர்கள், ஆண்கள் ஒவ்வொருவரும் இராமனைப் போனறவர்கள் என்று சொல்லவில்லையே. பெரும்பாலான மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பாருங்கள். ஆனால் சிலருக்கோ உலகம் முழுவதையும் இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களுக்கு எதிரான விவாக ரத்து, விபச்சாரக் கலாச்சாரத்தில் மூழ்க அடிக்க விருப்பமாக இருக்கிறது.

இயேசுவின் அடியவரே,
மாய்மாலக் காமாலைக் கண்ணழகரே…
உங்கள் குருநாதர் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்,தெரியுமா?

ஒரு ஸ்திரீயை இச்சையுடன் பார்க்கிற எவனும் அவளுடன் “மேட்டரை” முடித்தது போலவாம்..!

இச்சையைத் தூண்டும் சினிமாவையும் அருவருப்பான பாடல் காட்சிகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரிலும் கலை என்ற பெயரிலும் பரவவிட்டு இன்றைக்கு அதனை ஐந்து வயதுகூட நிரம்பாத பிஞ்சுகளை விட்டு ஆடவிட்டு வெட்கமில்லாமல் பெரியவர்கள் இரசிப்பது எதில் சேர்த்தி?

திரு HARD TRUTH அவர்களே,

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.இந்தியாவில் உள்ள எல்லா ஆண்களும்,எல்லா பெண்களும் ஒழுக்க மற்றவர்கள் என்று தானே ?

சபாஸ்.இப்படி நீங்கள் பேச வில்லை.உங்கள் மத வெறி இவ்வாறு பேச வைக்கிறது.வாழ்க பைபிள்.!!!,வாழ்க இயேசு கிறிஸ்து !!!வாழ்க கர்த்தர்!!!

நாங்கள் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?? அல்லது புரிந்து கொள்ள முடியாதபடி தடுப்பது எது? உங்கள் மத வெறியா ?

இந்தியாவிலும் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் குறைவானவர்கள்.அதாவது ஒழுக்கமானவர்களைக் காட்டிலும் பலமடங்கு குறைவு.ஆனால் மேலை நாட்டில் இது அப்படியே தலை கீழ்.

நாங்கள் குறிப்பிடுவது மேலை நாட்டினரின் பெரும்பான்மை தவறு செய்யும் கலாச்சாரம் பற்றி.

நீங்கள் குறிப்பிடுவதோ இந்தியாவின் சிறுபான்மை தவறு செய்பவர்கள் பற்றி.

இப்பொழுதாவது உங்களுக்கு புரிகிறதா?இல்லையா?

தனபால்,
உங்களுக்கும் நான் சொல்வது புறியவில்லையா? நீங்கள் மேல்நாடுகளில் வசித்ததுண்டா? மேல்நாட்டு மக்களிடம் நேரிடியான பழக்கம் உண்டா? அப்படி இருந்தால், எத்தனை காலம் வசித்தீர்கள், எத்தனை மக்களிடம் பழகி உள்ளீர்கள்? சும்மா, டிவி பார்த்து, சினிமா பார்த்து கதை அடிக்க கூடாது, மக்களை அறிய அவர்களிடம் நேரடியாக பழக வேண்டும்.
இப்போது சொல்கிறேன், தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். மேல்நாடுகளில் இந்தியாவில் உள்ளதை விட மக்கள் அதிகமாக விவாகரத்து, மற்றும் விபசார காலாசாரங்களில் உள்ளனர். ஆனால் அதற்க்கு காரணம், கிறிஸ்த்துவம் அல்ல, அளவுக்கு மீறிய சுதந்திரம். பிள்ளைகளை, பெற்றோர் கண்டிக்க மற்றும் தண்டிக்க உரிமை இல்லை. அப்படி செய்தால், போலீஸ் வரும், பெற்றோரை கைது செய்யும். இதனால் பிள்ளைகள் வழி விலகி போகிறார்கள். பரிசுத்த வேதம் சொல்கிறது, “பிரம்பை கையாடாத தகப்பன் தன் மகனை பகைக்கிறான்” என்று. நம் ஊரிலும், “அடியாத பிள்ளை படியாது” என்பார்கள். இப்படி தான்தோன்றியாய் திரிவதால்தான், தன் வாலிப காலத்தில் அறியாமையில் எடுக்கும் சில முடிவுகளால், மேல்நாடுகளில் விவாகரத்து மற்றும் நீங்கள் சொல்லும் விபச்சார கலாசாரம் அதிகமாக உள்ளது.
மேலும், இங்கே நீதிமன்றங்களில் இருந்த பத்து கட்டளைகளை எடுத்து விட்டனர், பள்ளிகளில் எந்த ஒரு மதம் சம்பதம்மான வழிபாட்டு முறையோ, பாடங்களோ இல்லை. அமெரிக்க நீங்கள் நினைப்பது போல் ஒரு கிறிஸ்த்துவ நாடு அல்ல. இங்கே உள்ள மக்கள் வாழ்க்கைக்கும் கிரிஸ்துவதிர்க்கும் சம்பந்தம் இல்லை.
மேலும் இந்தியாவில் திருச்சிக்காரன் புகழ்வது போல் பெரும்பான்மை ஒழுக்க சீலர்கள் அல்ல. அதற்காக இந்தியாவில் உள்ள அனைவரும் கேட்டவர் என்று நான் கூறவில்லை. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையோர் நல்லவர் எனில், இந்தியா எப்படி AIDS இல் உலகில் இரண்டாம் இடம் பிடித்தது? இது யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா?
கோவப்படும் முன் யோசிக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் நான் மத வெறியனாகவே இருந்துவிட்டு போகிறேன், ஆனால் AIDS ஐ பற்றி நான் கூறிய கூற்று உண்மை இல்லை என்று ஆகி விடுமா? நீங்கள் பிரச்சனைகளை பற்றி அறியாமல் அவற்றுக்கு தீர்வு காண முடியாது. பெரும்பான்மையாக நல்லவர்கள் உள்ள நாட்டில் எப்படி லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது? நீங்கள் அரசாங்கத்தை குறை கூறுவீர்கள். ஆனால், அரசாங்க அலுவகத்தில் லஞ்சம் வாங்குபவன் சாதாரண குடிமகன்தானே. போலிசுக்கு லஞ்சம் கொடுக்காமல் நான் பாஸ்போர்ட் வாங்க பட்டபாடு எனக்கு தெரியும். சும்மா அடுத்தவனை, கிறிஸ்த்துவத்தை குறைகூறும் முயற்ச்சியில் கொஞ்சம் நாட்டு நலனுக்கு செய்து இருந்தால் கொஞ்சமாவது நாடு மாறி இருக்கும்.
Hard Truth

//இப்போது சொல்கிறேன், தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். மேல்நாடுகளில் இந்தியாவில் உள்ளதை விட மக்கள் அதிகமாக விவாகரத்து, மற்றும் விபசார காலாசாரங்களில் உள்ளனர். ஆனால் அதற்க்கு காரணம், கிறிஸ்த்துவம் அல்ல, அளவுக்கு மீறிய சுதந்திரம். பிள்ளைகளை, பெற்றோர் கண்டிக்க மற்றும் தண்டிக்க உரிமை இல்லை. அப்படி செய்தால், போலீஸ் வரும், பெற்றோரை கைது செய்யும். இதனால் பிள்ளைகள் வழி விலகி போகிறார்கள். பரிசுத்த வேதம் சொல்கிறது, “பிரம்பை கையாடாத தகப்பன் தன் மகனை பகைக்கிறான்” என்று. //

குழந்தைகளை அன்பால் திருத்த வேண்டும்.

இந்த நண்பரோ குச்சியால் வெளுக்க வேண்டும் , அதற்க்கு அனுமதி இல்லையே என்கிறார். இப்படி சிறு வயதிலே குச்சியால் வெளுத்துதான் பின்னால் அவன் சாடிஸ்ட் ஆகிறான்.

இப்படிப் பிள்ளைகளை அடிக்கும் பலர் நம் நாட்டிலும் உண்டு. அவர்களைத் திருத்தி நாகரீகம் ஆக்கலாம் என்று பார்த்தால், இப்படி சிறுவர்களை அடிகக்கும் காட்டு மிராண்டித் தனத்தை கடவுளின் கட்டளையாகப் போட்டு நம்மிடமும் வந்து பிரச்சாரம் செய்கிறார்!

//மேலும் இந்தியாவில் திருச்சிக்காரன் புகழ்வது போல் பெரும்பான்மை ஒழுக்க சீலர்கள் அல்ல.//

இது ஒரு அப்பட்டமான பச்சைப் பொய். இந்திய நாட்டிலே பெரும்பானமையான மக்கள் நேர்மையான குடும்ப வாழ்க்கை நடத்துகிறார்களே, நம்முடைய முரட்டுப் பிடிவாத கருத்தைப் பரப்பிட இடங்களில் எல்லாம் குடும்ப வாழ்க்கை சீரழிந்து விட்டதே என வயிறு எரிச்சல் பட்டு இப்படி பொய்யை எடுத்து விடுகிறார்.

//இந்தியாவில் உள்ள பெரும்பான்மையோர் நல்லவர் எனில், இந்தியா எப்படி AIDS இல் உலகில் இரண்டாம் இடம் பிடித்தது? இது யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா?//

இந்தியா இதற்க்கு எத்தனை முறை பதில் எழுத வேண்டும், உலகிலே இந்தியாதான் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை உள்ள நாடு. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி சரியாகப் பரவவில்லை. இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரமாக் உள்ளதால் அவர்கள் சரியான எண்ணிக்கையை தருகின்றனர்.

115 கோடி மக்கள தொகை உள்ள நாட்டில். கிட்டத் தட்ட இருபத்து மூன்று லட்சம் பேர் எய்ட்ஸ் நோயாளிகள்.

// இந்தியா இதற்க்கு எத்தனை முறை பதில் எழுத வேண்டும், உலகிலே இந்தியாதான் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை உள்ள நாடு. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி சரியாகப் பரவவில்லை. இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரமாக் உள்ளதால் அவர்கள் சரியான எண்ணிக்கையை தருகின்றனர். //

இந்தியா ‘எயிட்ஸ்’ஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; நண்பர் திருச்சி கூறுவது போல விழிப்புணர்ச்சி சரியாகப் பரவவில்லை; இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையானது குறைத்துக் காட்டப்படுகிறது; உலகத்திலேயே இந்தியா தான் புராண காலமுதலே எயிட்ஸ் நோயில் முதலிடத்தில் இருக்கிறது;

உதாரணத்துக்கு ஏற்கனவே இலக்கியத்திலேயே குறிப்பிடப்பட்ட “வெட்ட மேகம்” என்ற நோயினால் அநேகர் நோய்வாய்ப்பட்டு செத்தனர்;

அதுவே இன்றைய எயிட்ஸ் நோய் என்று பெயரிடப்பட்டது;
இது கூட மதமாற்றக் குழுக்களின் மோசடிதான்;நமக்கு சொந்தமான நோயைக் கூட அவர்களுடைய கண்டுபிடிப்பு போல மாற்றி சூழ்ச்சி செய்துவிட்டனர்;

சாதாரண எயிட்ஸ் நோயைக் கூட உருவாக்க முடியாத பரிதாப‌ நிலையிலா பாரத மாதாவின் அருந்தவப் புதல்வர்கள் இருக்கிறார்கள்..?

எந்த வகையிலும் எந்த பெருமையையும் அந்நியர் எடுத்துக் கொள்ளுவதை இந்தியர்களாகிய நாம் அனுமதிக்கக்கூடாது;

2020- ல் இந்தியா ஒரு வல்லரசாக விளங்கப்போவது நிச்சயம்;
அதில் இந்தியா எயிட்ஸில் முதலிடம் பெற்றதும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படும்;எப்படியெனில் அப்போது இந்தியாவே உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக ஆகப்போகிறதே..!

// இந்தியா இதற்க்கு எத்தனை முறை பதில் எழுத வேண்டும், உலகிலே இந்தியாதான் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை உள்ள நாடு. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி சரியாகப் பரவவில்லை. இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரமாக் உள்ளதால் அவர்கள் சரியான எண்ணிக்கையை தருகின்றனர். //
இப்போது உங்கள் கூற்று, இந்தியா சீனாவைவிட ஒழுக்கம் குறைந்தது என்று சொல்வது போல் உள்ளதே.
Hard Truth

விவாகரத்து மற்றும் அமெரிக்க கலாச்சாரம் தொடர்பாக கவனத்துக்குரிய மற்றுமொரு குறிப்பு அமெரிக்காவின் சுதந்தரத்துக்கும் இந்தியாவின் சுதந்தரத்துக்குமுள்ள மிகப் பெரிய வித்தியாசமாவது …;

உதாரணத்துக்கு கோயம்பேடு போன்ற ஒரு வெளி இடத்தைத் தேர்ந்தெடுத்து…

ஆனால் கொத்தவால்சாவடி போன்ற இடத்தைப் பார்த்தால்…

இதில் எதை பாராட்டுவோம்?

அமெரிக்கா …

ஒரு வேலைக்காக அல்லது கல்விக்காக அங்கே நான் சென்றால்…

இந்த மனப்பான்மையே விவாகரத்துக்கும் காரணமாகிறது; இன்னும் அங்கே விவாகரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட ஆண்களே மற்றும் அதிகம்;

இந்த தாறுமாறுகளுக்கும் வாழ்வியல் சூழ்நிலைகளும் வாழ்க்கை முறையுமே காரணமே தவிர எந்த வகையிலும் கிறித்தவமல்ல;

கிறித்தவமானது இஸ்லாத்தைப் போல ஒரு கட்டுப்பாடான அமைப்பல்ல; அதன் கட்டுக்கடங்காத சுதந்தரமே அதன் பெலவீனமும் பெலமும்;

எனவே வேதம் சொல்லுகிறது:
“அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.” (எபிரெயர்.2:4)

அப்படியானால் “வருங்கோபம்” எனும் நியாயத்தீர்ப்புக்காகவே நீதி செய்தோரும் அநீதிக்காரர் நடுவில் காத்திருக்கிறோம்;

எப்படியெனில் இன்னொரு இடத்தில் ஆண்டவர் குறிப்பிட்டது போல, அதிகம் மன்னிக்கப்பட்டவன் அதிக அன்பாயிருக்கிறான்;குறைவாக மன்னிக்கப்பட்டவன் குறைவாக அன்பு கூறுகிறான்; ‘நீ யார் என்னை மன்னிக்க ‘ என்று கேட்பவன் தாந்தோன்றியாக இருப்பான்;பாழ்க்கடிப்பும் அந்தகாரமும் அவியாத அக்கினியுமே அவன் பங்காகும்;

இறுதியாக, இந்தியாவுடன் ஒப்பிடவேண்டுமானால் இந்தியாவைப் போன்ற பாரம்பரியம் மிக்க நாட்டுடனே அதனை ஒப்பிடவேண்டும்;

உதாரணத்துக்கு இந்தியாவைவிட கட்டுப்பாடான கலாச்சார அமைப்பும் ஒழுக்கமும் நிறைந்த…

அதாவது நம்மைவிட தாழ்ந்த நிலையிலிருப்போருடன் திருப்திப்பட்டுக் கொள்ளுவதைவிட நம்மைவிட உயர்நிலையிலிருப்போருடன் ஒப்பிட்டு நம்மை சரிசெய்துக் கொள்வதே உய்ர்வுக்கு வழிவகுக்கும்;

எம்மைவிட உயர்ந்தவன் என்ற‌ யாருமில்லை இறுமாப்பு
(கலாச்சார சீர‌)அழிவையே தரும்;

‌எனது தனிப்பட்ட வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் மறுமையின் நம்பிக்கையாகவும் நான் ஜகத்குருவான இயேசுவானவரை ஏற்றிருக்கிறேன்;

ஆனால் குடிமகன் என்ற முறையில் கலாச்சாரத்துக்கும் ஒழுங்குக்கும் பாரம்பரியத்துக்கும் செழிப்புக்கும் குறியீடாக…

தொடர்ந்து வாசிக்க…

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

எதிர்பார்த்ததுதான். இதற்க்கு முன்பேயும் சில நண்பர்கள் மத வெறியினால் பீடிக்கப் பட்டு, இந்தியாவை, இந்திய சமூகத்தை, இந்திய மக்களை இகழ்ச்சியாகப் பேசி இருக்கின்றனர். கவலைப் படாதீர்கள். இந்தியா ஒரு பொது ஐரோப்பா, ஆப்பிரிக்க, அமெரிக்கா கன்னடம் போல ஆகி விடாது. பொய்ப் பிரச்சராத்தை தொடர்ந்து செய்யுங்கள், கன்சி குடித்தாலும், குடும்பம் குட்டி என்று வாழ்பவன் இந்தியன். அவனைத் தங்களை விட அதிக பாவியாக்கும் வரை சிலர் மனம் ஓயாது. அந்த வெகுளிகளை, அவர்கள் அப்பாவிகளாக இருந்தாலும் அவ்வளவு எளிதில் கெடுத்து விட முடியாது. பூமியையும் சமுத்திரத்தையும் சுற்றி முயற்சி செய்யுங்கள், ஆனாலும் நடக்காது.

ரொம்ப பொலம்பாதீய சாமீ…..அப்புறம் “வீக்” ஆயிறபோவுது..!

திருச்சிக்காரனைப் பார்த்தால் எனக்கென்னவோ நடிகர் பார்த்திபன் அவர்கள் ஞாபகம் வருகிறது;அவர் நம்மையெல்லாம் வடிவேல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்;

இப்படி போனா அப்படி வர்றார்,
அப்படி போனா இப்படி வர்றார்..!

கிருஷ்ணரையும் பாண்டவர்களையும் குறை கூறியதும் தலைவருக்கு ரோஷம் வந்துடுத்து…

முக்கியமான மேட்டரையெல்லாம் ‘கட்’ பண்ணிய பிறகும் திட்றாரே..!

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

Brother Chillsam , You need to note one thing. If I permit your abuse on Hindu Gods, then some one will abuse Christian Gods as retalitation. This will keep on going with more intensifyied abuses and akward situation will be reached.

Tha s why I dont allow abuses.

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

திருச்சிக்காரனுடைய நாகரீகமான அணுகுமுறைக்கு முன்பாக நான் தலை வணங்குகிறேன்;ஆனால் அவர் தனக்கு சற்றும் பொருத்தமில்லாத களத்துக்கு வந்து வாள் சுழற்றுவதை நிறுத்தட்டும்;

இந்தியப் பாரம்பரியத்திலும் புராணக்கதைகளிலும் ஊறித் திளைத்த நான் அதனை விமர்சிப்பதற்கும் எனக்கு சம்பந்தமில்லாத மற்றொரு மார்க்கத்தை நான் எல்லாம் தெரிந்தது போல விமர்சிப்பதற்கும் வித்தியாசமுண்டல்லவா..?

எனவே திருச்சிக்காரன் தன்னிலை விளக்கம் கொடுப்பதோடு நிறுத்தட்டும்;
பைபிளையும் மோசேயையும் யெகோவா தேவனையும் கண்டபடி விமர்சித்து இவர்களையெல்லாம் திருத்தவந்த யாரோ ஒரு புனிதர் போல இயேசுவை போலியாகத் துதிப்பதை நிறுத்தட்டும்;

நீர் எங்க வழிபாட்டில் பங்கேற்பதால் மட்டுமே நானோ அந்த யெகோவா தேவனும் மகிழ்ந்து விடமாட்டோம்; உங்க நல்லிணக்கமும் வேண்டாம்; நரித்தன நர்த்தனமும் வேண்டாம்;

யெகோவா தேவனே மாம்சத்தில் இயேசுவாக வந்தார் எனும் பேருண்மையின் அடிப்படையில் எங்கள் தொழுகை அமைந்திருக்கிறது;

எனவே எமது தொழுகையில் நீர் இணைந்துக்கொண்டாலும் நீர் கீழ்த்தரமாக எண்ணிக்கொண்டிருக்கும் யெகோவா எனும் கடவுளையே ஆராதிக்கும் ஆபத்து காத்திருக்கிறது;

அவரோ சுண்டலுக்கு செட்டிலாகி கடலில் கரைந்துப்போகும் வண்டல் அல்ல;நீர் உமது வாயிலிருந்து ஒரு சொல்லை மொழியினால் சொல்ல எண்ணும் முன்பதாகவே அதனை பிரிண்ட் (Print) போட்டுத் தருகிறவர்;

அவரே இயேசு, அவரே யெகோவா..!
இதென்ன புதுக்கரடி என்றெண்ணுகிறீரா..?

ஆம்,மகா ஷக்தியாகவும் ஜோதியாகவும் விளங்கும்
ஆதிஷக்தியிலிருந்து தோன்றிய வேத மந்த்ரமாம்
வார்த்தையே மனுஷ்ய ரூபத்தில் ப்ரஜாபலியாக வெளிப்பட்டார்;

இதனைக் கண்டவன் கண்ணவனால் கண்டவனாகிறான்;
கண்டவனும் கண்டவனாகான்..!

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

// Christian Gods //

-என்று யாரையும் எங்களுக்குத் தெரியாது;
அப்படி பன்மையில் குறிப்பிடுமளவுக்கு தெய்வக் கூட்டங்கள் இங்கே இல்லை;

எங்கள் தேவன் எந்த மொழிக்கும் இனத்துக்கும் தேசத்துக்கும் சொந்தமானவரல்ல; யாருடனும் அவரை ஒப்பிடவும் முடியாது;

‘ஒப்பாரும் மிக்காரும் இல்லார் ‘என்பார்களே ,
அந்த சொற்றொடருக்குப் பொருத்தமானவர் இவர் மட்டுமே;

இவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களும் கூட காரணப்பெயர்களே; ஒன்று கூட சொந்தபெயர் கிடையாது;

அதாவது அனைத்துமே வினை சார்ந்த சொல்லாகும்; வினைதீர்க்கும்.; பெயர்ச்சொல் அல்ல,பெயர்த்துப்போட..!

Leave a reply to Hard Truth Cancel reply

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09