Thiruchchikkaaran's Blog

பாவத்துக்கு பரிகாரம் என்ன? ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டால் மன்னிப்புக் கேட்டு பரிகாரம் செய்ய வேண்டியது அந்தப் பெண்ணிடமா அல்லது கடவுளிடமா?

Posted on: May 4, 2010


சகோதரர் திரு.. Hard Truth  அவர்களின் சில கருத்துகளை ஒட்டிய நம்முடைய கட்டுரையாக  இதை வெளியிடுகிறோம்.

//பாவ காரியங்களை செய்யாமல் இருப்பது இரண்டாம்படி, முதலில் இருக்கும் பாவங்களுக்கு என்ன செய்யலாம்? //

 
இன்னும் கொஞ்சம் சிந்தியுங்கள்.

ஒருவன் பாவம் செய்யாமல் இருந்தால் சமூகத்துக்கு நன்மை. ஒருவன் பாவம் செய்தால் அதனால் இன்னொருவருக்கு பாதிப்பு ஏற்ப்படுகிறது. எனவே எது முதன்மையும், முக்கியய்த்துவமும் வாய்ந்தது?

நம்மால் பிறருக்கு துன்பம் வராமல் பார்த்துக் கொள்வதுதான் முதலில் செய்ய வேண்டியது.

எனவே பாவம் செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதுதான் முதலில் செய்ய வேண்டியது. நம்முடைய பாவத்தை கழுவுவதை பார்ப்போம் என்று நினைப்பது சுயநலமாகத் தானே கருதப் பட முடியும்.

ஏற்கெனவே செய்த பாவங்களுக்கு என்ன செய்யலாம்? யாருக்கு எதிராக பாவம் செய்தோமோ அவரிடம் போய், மனப் பூர்வமான வருத்தம் தெரிவித்து ,நாம் செய்த பாவத்தினால் அவருக்கு உண்டான பாதிப்பை ஈடு செய்வதே சரியான செயல்.

உதாரணமாக,  ஒரு பெண்ணை மணம் செய்வதாக ஆசை காட்டி அந்த பெண்ணோடு உறவு வைத்து விட்டு அந்தப் பெண்ணை ஏமாற்றி வேறு வூருக்கு சென்று விட்ட ஒருவன், அந்தப் பாவத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரம் அந்தப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்து விட்டு, அவளை மணந்து கொண்டு இருவரின் வாழ்க்கையையும் வளமாக்குவதுதான்.

ஒருவருக்கு எதிராக பாவம் இழைத்து விட்டு, அதனால் அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டு இன்னொருவரிடம் போய் மன்னிப்பு கேட்பது எப்படி சரியாகும்?

இயேசு கிறிஸ்துவும்

ஆகையால் நீ பலி பீடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து , உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் (Mathews 5-23)

அங்கே தானே நீ பலி பீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து வீட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி , பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து (Mathews 5-24)

என்றதாக  சொல்லப் பட்டுள்ளது.

 சகோதரனோ , சகோதரியோ, பக்கத்து வீட்டுக் காரனோ யாருக்கு எதிராக குற்றம் செய்து  (பாவம் செய்து)  இருந்தாலும், அவர்களிடம் சென்று அந்தக் குற்றத்தினால் அவர்களுக்கு உண்டான பாதிப்பை சரி செய்து விட்டு, அப்புறம் கடவுளைக் கும்பிடப் போ என்பதே இயேசு கிறிஸ்துவின் கருத்து என்பது தெளிவு.

80 Responses to "பாவத்துக்கு பரிகாரம் என்ன? ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டால் மன்னிப்புக் கேட்டு பரிகாரம் செய்ய வேண்டியது அந்தப் பெண்ணிடமா அல்லது கடவுளிடமா?"

//யாருக்கு எதிராக பாவம் செய்தோமோ அவரிடம் போய்//
Yes, We have to ask the forgiveness to the person, against whom we have sinned. Any sin is against the GOD. So, asking the forgiveness from the GOD is the right thing to do. Suppose a person had committed adultery with a prostitute in his past and later realizes that he carrying that sin of adultery. To whom he can ask the forgiveness? He had spoilt the body (that is given by GOD), by commiting adultery with a prostitute. So, he can get the forgiveness from the Lord.
Everything and Everyone in this world is created by GOD. He is a owner for everything. So, when we do anything wrong against anyone for anything, you have to ask for the permission to its/his/her owner. Ofcourse, it is always good to pay or compensate the damage we did.
If you hit a dog with ur two wheeler and broke its leg. Probably, as a good person, you will take that dog for medication. But, won’t apologize to the owner of that dog? Isn’t it necessary to ask the forgiveness from the owner of that dog?
We are not owner of ourselves. That is why we (who ever believes in Christ) call Jesus as our “Lord”. So, if we sin against anyone, we ask for the forgiveness from our Lord. Because we have sinned agains HIS property. Also, if possible, we will try to compensate the damaged property of our Lord.
Hard Truth

//Yes, We have to ask the forgiveness to the person, against whom we have sinned.//
Thanks. This is good as per logic , reasoning as well as correct by Jesus Christ also.

//Any sin is against the GOD. So, asking the forgiveness from the GOD is the right thing to do. Suppose a person had committed adultery with a prostitute in his past and later realizes that he carrying that sin of adultery. To whom he can ask the forgiveness? He had spoilt the body (that is given by GOD), by commiting adultery with a prostitute. So, he can get the forgiveness from the Lord.//

If a person has comitted adulatry with a prostitute, he has sinned

1) sinned against the prostitute. Insted of having sexual relationship with the prostitute – He could have given the money to the prostitute as a goodwill, , he could have spent some time with her by giving her some tips to ged rid of the prostitution business, then both can had a good sleep (not sleeping together).

2) If the man is married, he sinned against the wife

3) Whether the man is married or not , The man has sinned against his conscience. He let his conscience down

So he has to make amendments for the above three.

//Everything and Everyone in this world is created by GOD. He is a owner for everything. So, when we do anything wrong against anyone for anything, you have to ask for the permission to its/his/her owner. Ofcourse, it is always good to pay or compensate the damage we did.//

இது உங்களின் சொந்தக் கருத்து என்றே நினைக்கிறேன். இந்தக் கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று சொல்வதைப் பற்றி தனியே கட்டுரை எழுதுவோம். நாகரீக சமுதாயத்தைப் பொறுத்த அளவில் பாதிக்கப் பட்டவனிடம் அவருத்தம் தெரிவித்து, பரிகாரம் செய்தால் போதுமானது. இயேசு கிறிஸ்துவின் கருத்தும் அதுவே. நீ யாருக்கோ எதிராக பாவத்தை செய்து விட்டு என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள் என்பதாக இயேசு கிறிஸ்து எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை என்றே கருதலாம்.

//ஆகையால் நீ பலி பீடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து , உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் (Mathews 5-23)

அங்கே தானே நீ பலி பீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து வீட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி , பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து (Mathews 5-24)

என்றதாக சொல்லப் பட்டுள்ளது.
//

Dear Mr.Trichy,
As usual you are twisting the verses. Here Jesus Christ is not talking about forgiveness. Here he is talking about offerings that we give to Church. He wanted people to be in peace with each other and the peace between the brethren was considered to be more important than the offerings that is given to the Church.

Hard Truth

அன்பு சகோதரர் திரு. Hard Truth,

//Dear Mr.Trichy,
As usual you are twisting the verses. Here Jesus Christ is not talking about forgiveness. Here he is talking about offerings that we give to Church. He wanted people to be in peace with each other and the peace between the brethren was considered to be more important than the offerings that is given to the Church.

Hard Truth//

நான் சொன்னது மிகச் சரியான உதாரணமே.

காணிக்கை முக்கியமல்ல. அதை இட முக்கியமான காரியம் வேறு ஒன்று உண்டு, அது சகோதரனுக்கு இழைக்கப்ப பட்ட குறையை , குற்றத்தை, பாவத்தை சரி செய்வதுதான் என்பதை என்றுதான் இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார்.

ஆனால் நீங்களோ முதல் வாக்கியத்தில் இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கு எதிர்மறையான பொருளை நீங்கள் சொல்கிறீர்கள்.
//Here Jesus Christ is not talking about forgiveness. Here he is talking about offerings that we give to Church.//

மத்தேயு 5.23, 5.24 இரண்டு பாராவிலும் வருவதன் முக்கியப் பொருள் காணிக்கை செலுத்துவதா? இல்லையே . ஆனாலும் எடுத்த எடுப்பிலேயே //Here he is talking about offerings that we give to Church.// என்று எழுதி கிறிஸ்துவின் நோக்கத்தை மாற்றிக் காட்டுவதை உங்கள் மனம் ஒப்பியதா?
இவ்வாறாக கிறிஸ்து எதை முக்கியம் என்று சொன்னாரோ அதை விட்டு விட்டு, இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கு எதிரான கருத்தை பிரச்சாரம் செய்து இருக்கிறீர்கள்.

பிறகு இன்னும் சில வாக்கியங்களை எழுதி அந்தப் பாவத்திற்கு பரிகாரம் செய்ய முயன்று, ஆனால் அதிலும் பாதி உண்மையை மட்டும் வெளியிட்டு இருக்கிறீர்கள். // He wanted people to be in peace with each other and the peace between the brethren was considered to be more important than the offerings that is given to the Church.//

இயேசு கிறிஸ்து சமரசவாதி என்பதை நாமே சொல்லி இருக்கிறோம். ஆனால் இந்த இரண்டு பாராவிலும் அவர் முக்கியமாக சொல்லியது என்ன?

//உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்//

நீ உன் சகோதரனுக்கு ஏதாவது குறை வைத்து இருந்தால், அதாவது அவனுக்கு குடுக்க வேண்டிய பங்கை குடுக்காமல் அவனை ஏய்த்து, அவனுக்கு எதிராக பாவம் செய்து இருந்தால்

//முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி , பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து //
அந்தப் பாவத்துக்கு பரிகாரமாக அவனுடைய குறையை நீக்கி, அவனுக்கு நியாயமாக குடுக்க வேண்டியதைக் கொடுத்து, அவனுக்கு நேர்ந்த குறை பாட்டுக்கு பரிகாரம் செய்து முடித்து விட்டு, பிறகு கடவுளின் இடத்திலே வா.

அவனுக்கு பரிகாரம் செய்யாமல் கடவுளிடம் போய் என்ன காணிக்கை குடுத்தாலும், வேண்டினாலும் பலன் இல்லை – இதுதான் இயேசு கிறிஸ்துவின் ஆணித் தரமான கருத்து.

யாருக்கு எதிராக பாவம் செய்தாயோ , அவரிடத்திலே பரிகாரம் செய்து, அவர் மனம் சமாதனம் ஆகும்படி, அவரிடம் இதமான வார்த்தைகளைப் பேசி அவரிடம் தருக்கு வருத்தம் தெரிவித்து அவருடன் ஒப்புரவாகு – இதுதான் இயேசு கிறிஸ்துவின் உறுதியான கோட்பாடு.

இந்த முறை நீங்கள் இயேசு கிறிஸ்துவன் கொள்கைகளை தவறாக பிரச்சாரம் செய்ததால் மக்களுக்கு உண்டான பாதிப்பிற்கான பரிகாரமாக நான் இயேசு கிறிஸ்துவின் சரியான நோக்கத்தை, கருத்தை , புரிதலை மக்களுக்கு தெரியப் படுத்தி விட்டேன். என்னைப் பார்த்து கருத்துக்களை திரிப்பதாக நீங்கள் நியாயமில்லாமல் கோபித்துக் கொள்வதால் உருவான குறைக்கும் என் விளக்கமே பரிகாரமாக இருக்கும். எனவே இதற்க்கு பரிகாரம் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். உங்களின் நம்பிக்கைப் படி காணிக்கைகளை கொண்டு போய் நேரடியாக வைக்கலாம்.

//ஆகையால் நீ பலி பீடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து , உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் (Mathews 5-23)
அங்கே தானே நீ பலி பீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து வீட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி , பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து (Mathews 5-24)//

திருச்சிக்காரன் இவ்வளவு பெரிய வேதபுரட்டு ஆசாமியாக இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டது. மேற்கூறிய வேதவசனங்களில், காணிக்கை என்று தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர பாவமன்னிப்பு என்று சொல்லப்படவில்லை.

//இயேசு கிறிஸ்துவின் கருத்தும் அதுவே. நீ யாருக்கோ எதிராக பாவத்தை செய்து விட்டு என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள் என்பதாக இயேசு கிறிஸ்து எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை என்றே கருதலாம்.//
இயேசு, “மன்னிக்கும் அதிகாரம் மனுஷகுமாரனுக்கு (ஏசுவுக்கு) உண்டு” என்று கூறியுள்ளார்.

தேவன் மீது நம்பிக்கை இல்லாத உங்களை போன்றவர்க்கு, பாவமன்னிப்பு என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். தேவனிடம் மன்னிப்பு கேட்பது என்பது, மனிதனிடம் மன்னிப்பு கேட்பதைவிட இலகுவான விஷயமாக தெரியலாம். தேவனின் வல்லமையை, பரிசுத்தத்தை அறிந்தவர்களுக்கு அது எவ்வளவு கடினமான காரியம் என்று தெரியும்.

//இந்த முறை நீங்கள் இயேசு கிறிஸ்துவன் கொள்கைகளை தவறாக பிரச்சாரம் செய்ததால் மக்களுக்கு உண்டான பாதிப்பிற்கான பரிகாரமாக நான் இயேசு கிறிஸ்துவின் சரியான நோக்கத்தை, கருத்தை , புரிதலை மக்களுக்கு தெரியப் படுத்தி விட்டேன். என்னைப் பார்த்து கருத்துக்களை திரிப்பதாக நீங்கள் நியாயமில்லாமல் கோபித்துக் கொள்வதால் உருவான குறைக்கும் என் விளக்கமே பரிகாரமாக இருக்கும். எனவே இதற்க்கு பரிகாரம் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். உங்களின் நம்பிக்கைப் படி காணிக்கைகளை கொண்டு போய் நேரடியாக வைக்கலாம்.//

உங்கள் மீது கோவப்பட நீங்க என்ன பிசாசா? உங்கள் மீது எனக்கிருப்பது பரிதாபமே.

Hard Truth

அன்பு சகோதரர் Hard Truth அவர்களே,

//ஆகையால் நீ பலி பீடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து , உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் (Mathews 5-23)
அங்கே தானே நீ பலி பீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து வீட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி , பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து (Mathews 5-24)//

திருச்சிக்காரன் இவ்வளவு பெரிய வேதபுரட்டு ஆசாமியாக இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டது. மேற்கூறிய வேதவசனங்களில், காணிக்கை என்று தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர பாவமன்னிப்பு என்று சொல்லப்படவில்லை. //

கருத்துக்களின் அர்த்தத்தைப் புரட்டுவது நானல்ல.

பாவத்திற்கு பரிகாரம் யாரிடம் செய்யப் பட வேண்டும் என்பதுதான் கட்டுரையின் பொருள். கடவுளிடம் போய்க் காணிக்கை வைப்பது அப்புறம் இருக்கட்டும், யாருக்கு எதிராக குறை, பாவம் இழைக்கப் பட்டோ அவனிடம் போய் பரிகாரம் செய்து, அவனிடம் வருத்தமும் பட்டு அவன் மனம் நிம்மதி அடையும் படி செய்து, அவனுடன் ஒப்புரவாகு என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

காணிக்கை அவ்வளவு முக்கியமல்ல என்று சொல்லியும் காணிக்கையை முக்கியப் படுத்தி இயேசு கிறிஸ்துவின் கருத்தைத் திரித்துக் கூறுகிறீர்கள்.

இந்தக் வரிகளின் விளக்கத்தை வார்த்தைக்கு வார்த்தை பதவுரையாக அளித்தும் , உண்மையை மறைக்கப் பார்க்கிறீர்கள்.

எனவே மீண்டும் உங்களுக்கு தெளிவு படுத்துகிறோம். தேவைப் பட்டால் இன்னும் தெளிவு படுத்துவோம்.

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களை அவர் பெயராலே பிரச்சாரம் செய்யப் படுகிறது என்பதை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.

கேட்கச் செவி உள்ளோர் கேட்கட்டும்.

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///பாவத்துக்கு பரிகாரம் என்ன? ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டால் மன்னிப்புக் கேட்டு பரிகாரம் செய்ய வேண்டியது அந்தப் பெண்ணிடமா அல்லது கடவுளிடமா???///
தலைப்பே கட்டுரையின் கருத்தை தெளிவாகக் காட்டுகிறது.மிக நல்ல கட்டுரை.

//பாவத்திற்கு பரிகாரம் யாரிடம் செய்யப் பட வேண்டும் என்பதுதான் கட்டுரையின் பொருள். //
That is fine. But why do you have to bring the verse about the Offerings. There are many verses of Jesus regarding the forgiveness of sins. But, you brought this verse to twist the meaning of it and make it appear that Christ is also supporting your views.
How much ever you try, truth always wins. 🙂

Thanks,
Hard Truth

அன்பு சகோதரர் Hard Truth அவர்களே,

//ஆகையால் நீ பலி பீடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து , உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் (Mathews 5-23)
அங்கே தானே நீ பலி பீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து வீட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி , பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து (Mathews 5-24)//

//பாவத்திற்கு பரிகாரம் யாரிடம் செய்யப் பட வேண்டும் என்பதுதான் கட்டுரையின் பொருள்.//

கடவுளிடம் போய்க் காணிக்கை வைப்பது அப்புறம் இருக்கட்டும், யாருக்கு எதிராக குறை, பாவம் இழைக்கப் பட்டோ அவனிடம் போய் பரிகாரம் செய்து, அவனிடம் வருத்தமும் பட்டு அவன் மனம் நிம்மதி அடையும் படி செய்து, அவனுடன் ஒப்புரவாகு என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

That message is clear. This message that the amendment has to be done to the person and the responsibility to make his mind and heart peace by proper amendments, and soothing words is a must.

If one does not do that , but instead go to temple, he will not be entertained as per Jesus Christ.

Again and again, its you who is twisting. The article deals about ” பரிகாரம் ” – that means amendment.

THE SIN PART
//உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்//

THE AMENDMENT PART
// முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி //

So this is a perfect quote for amendment.

One can try to hide and pervert the message of Jesus Christ. But we are here to shed the light and show the correct things.

You can write as many number of times as possible against the the truth,

But you remember, every time you pervert the truth, there is some one to bring it out.

“truth always wins”- I thank you for two things. For encouraging me that I will succeed it bringinig out the truth. again I thank you for showing relious harmony by quoting the verses from Hindu Script ” Sathyam Eva Jayathe” !

//again I thank you for showing relious harmony by quoting the verses from Hindu Script ” Sathyam Eva Jayathe” !//
Ohhh… Cool… now these things also started getting the religious colours…
If truth wins, I will be really happy. And TRUTH ONLY wins.

Hard Truth

Dear Mr. Hard Truth,

Thanks Mr. Hard truth. The sentence “Sathyam Eva Jayathe” was adopted from Mundaka Upanishad, which is part of Atharvana Vedha.

திருசிகாரன் ஒரு பித்துக்குளி , இந்த லூசுக்கு என்ன வேணும்னா எல்லா மதமும் பொய். இந்து மதம் தான் உண்மை அப்படின்னு சொல்லணும் , தன்ன முற்போக்குவாதியாகவும் காட்டிக்கணும். அதுக்குதான் இந்த நாகரீக சமுதாயம் பொடலங்கா எல்லாம். இது , தனபால், ராம் இதுங்க எல்லாம் RSS கோஷ்டிங்க. இதுகளுக்கு வேற வேல இல்ல ….

அன்புக்குரிய சகோதரர் திரு. பிரதீப் அவர்களே,

கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தற்கு நன்றி.

உண்மையைத் தேடுவதும், உண்மையை அடைவதுமே நம்முடைய நோக்கம்.

எல்லா மதங்களிலும் உள்ள கருத்துக்களை நாங்கள் ஆக்கபூர்வமாக அணுகு கிறோம். எல்லா மதங்களிலும் மக்களின் நன்மைக்கு உதவும் கருத்துக்களும் உள்ளன, தூரதிரிஷ்டவசமாக மக்களுக்கு இடையிலே மோதலை உருவாக்கும் கருத்துக்களும் அவற்றிலே அமைந்து விடுகின்றன.

நாம் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை நினைவு படுத்தி, மக்களுக்கு இடையிலே சமரசத்தை, சுமூகத்தை , சமத்துவத்தை உருவாக்கவே முயல்கிறோம். நம்முடைய நோக்கத்திலே நாம் நேர்மையாக இருக்கிறோம். எந்த ஒரு மத்தியும் அழிக்கவோ, சிறுமைப் படுத்தவோ நான் முயலவில்லை, அதில் உள்ள கருத்துக்களை ஆராய்ச்சி செய்து அளிக்கிறோம்.

நம்முடைய தளத்திற்கு நீங்கள் இப்போதுதான் வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து படித்து வாருங்கள் . புரிந்து கொள்வீர்கள்.

எனக்கு ஆர். எஸ். எஸ். இயக்கத்துடனோ, வேறு எந்த இயக்கத்துடனோ தொடர்பு இல்லை. பாப்ரி மஸ்ஜீத் இடிக்கப் பட்டதை கண்டித்து இதே தளத்திலே கட்டுரை வெளியிட்டு இருக்கிறேன்.

திரு PRADEEP அவர்களே,

“கடவுள் ஒருவரே,.அவரையே ஒவ்வொரு மதத்தவரும் ஒவ்வொரு பெயரில் அழைக்கிறார்கள்.அந்த ஒரே இறைவனையே வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு (மத )வழியில் அடைகின்றனர்.அனைத்து வழிகளும் உண்மையில் இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகளே.”-இது இந்து மதம் கூறும் உண்மை.இதையே நான் கூறிக்கொண்டு இருக்கிறேன்.

ஆனால் இதை திரு HARD TRUTH அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ???

//அந்த ஒரே இறைவனையே வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு (மத )வழியில் அடைகின்றனர்.அனைத்து வழிகளும் உண்மையில் இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகளே.”-இது இந்து மதம் கூறும் உண்மை.//
How do u say, it is true?

Hard Truth

// திருசிகாரன் ஒரு பித்துக்குளி , இந்த லூசுக்கு என்ன வேணும்னா எல்லா மதமும் பொய். இந்து மதம் தான் உண்மை அப்படின்னு சொல்லணும் , தன்ன முற்போக்குவாதியாகவும் காட்டிக்கணும். அதுக்குதான் இந்த நாகரீக சமுதாயம் பொடலங்கா எல்லாம். இது , தனபால், ராம் இதுங்க எல்லாம் RSS கோஷ்டிங்க. இதுகளுக்கு வேற வேல இல்ல ….//

வழிமொழிகிறேன்..!

அன்புக்குரிய சகோதரர் சில் சாம் அவர்களே,

// திருசிகாரன் ஒரு பித்துக்குளி , இந்த லூசுக்கு என்ன வேணும்னா எல்லா மதமும் பொய். இந்து மதம் தான் உண்மை அப்படின்னு சொல்லணும் , தன்ன முற்போக்குவாதியாகவும் காட்டிக்கணும். அதுக்குதான் இந்த நாகரீக சமுதாயம் பொடலங்கா எல்லாம். இது , தனபால், ராம் இதுங்க எல்லாம் RSS கோஷ்டிங்க. இதுகளுக்கு வேற வேல இல்ல ….//

வழிமொழிகிறேன்..!
chillsam

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

எல்லா மதங்களின் உள்ள நல்ல கருத்துக்களை வெளிப் படுத்தி காட்டுவதே என் முயற்ச்சி என்று உங்களுக்குத் தெரியும். எனினும் என்னை என்று முத்திரை குத்துவதும், என்று அழைப்பதும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமானால் , ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படக் காரணமாக இருந்த அளவில் அது எனக்கு மகிழ்ச்சியே. தளத்தைப் பார்வை இட்டு கருத்துப் பதிவு செய்ததற்கு நன்றி.

//வழிமொழிகிறேன்..!//

உங்களுக்கு என் மறு கன்னத்தையும் காட்டுகிறேன்!

திரு HARD TRUTH அவர்களே,

//அந்த ஒரே இறைவனையே வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு (மத )வழியில் அடைகின்றனர்.அனைத்து வழிகளும் உண்மையில் இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகளே.”-இது இந்து மதம் கூறும் உண்மை.//
How do u say, it is true?///

இது உண்மை என்றே நம்புகிறேன்.

கடவுள் என்பவர் இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தைப் படைத்தவர்.
கோடான கோடி GALAXY யில், ஒரு குறிப்பிட்ட, நம் GALAXY யில் மட்டும்,
உள்ள கோடான கோடி நட்சத்திரங்களில், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை (நம் சூரியனை) மட்டும்,
சுற்றும் கோள்களில், ஒரு குறிப்பிட்ட கோளான நம் பூமியில் மட்டுமே உயிர்களைப் படைத்தார் என்று கூறி
அவரின் அளப்பரிய சக்தியையும், கருணையையும் நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோடான கோடி கோள்களில் பலவற்றில் உயிர்கள் இருக்கும் என்றே நம்புகிறேன்.
அப்படி வேற்று கிரகங்களில் உள்ளவர்களும் அந்த எல்லையில்லாத கடவுளையே இறுதியில் அடைகின்றனர்.
அங்கே ஏசுவோ, நபிகள் நாயகமோ, இந்து தெய்வங்களோ இருக்கப்போவதில்லை.
அவர்களுக்கென்று ஒரு வழி (மதம்???) இருக்கும்.அதன் மூலமே இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுளை அடைவார்கள்.
நம்மைப் படைத்த கடவுளே அவர்களையும் படைத்திருக்கிறார்.நாம் அடையும் கடவுளையே அவர்கள் வேறு ஒரு வழியில் அடைவார்கள்.

எல்லையில்லாதது என்றால் அது ஒன்றே ஒன்று தானே இருக்கமுடியும்??? எல்லையில்லாத கடவுளும் ஒன்றே ஒன்று தானே.???இந்த எல்லையில்லாத கடவுளையே கர்த்தர் என்றும், அல்லா என்றும், பிரம்மம் என்றும் அழைக்கின்றோம்.இந்த கர்த்தர், அல்லா, பிரம்மம் எல்லாமே அந்த ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களே.

திரு ABDULLAH அவர்களே,
// திருசிகாரன் ஒரு பித்துக்குளி , இந்த லூசுக்கு என்ன வேணும்னா எல்லா மதமும் பொய். இந்து மதம் தான் உண்மை அப்படின்னு சொல்லணும் , தன்ன முற்போக்குவாதியாகவும் காட்டிக்கணும். அதுக்குதான் இந்த நாகரீக சமுதாயம் பொடலங்கா எல்லாம். இது , தனபால், ராம் இதுங்க எல்லாம் RSS கோஷ்டிங்க. இதுகளுக்கு வேற வேல இல்ல ….//
வழிமொழிகிறேன்..///
நான் எல்லா மதமும் உண்மை என்றும், அனைத்து மதங்களும் அந்த ஒரே இறைவனை அடையும் பாதைகளே என்று தான் கூறிக்கொண்டு இருக்கிறேன்.
நான் ஒன்றும் RSS அல்ல.

தனபால்:
// எல்லையில்லாத கடவுளையே கர்த்தர் என்றும், அல்லா என்றும், பிரம்மம் என்றும் அழைக்கின்றோம்.இந்த கர்த்தர், அல்லா, பிரம்மம் எல்லாமே அந்த ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களே…//

நண்பரே, இப்படி சம்பந்த சம்பந்தமில்லாமல் வாதத்தை வளர்த்துக் கொண்டே போவதில் யாருக்கும் எந்த பயனும் இராது;

இந்த கட்டுரையானது யூத‍ – கிறித்தவ நம்பிக்கைகளின் அடிப்படை போதனைகளை விமர்சித்து எழுதப்பட்டுள்ளதை அறிவீர்கள்;

கர்த்தரும் அல்லாவும் பிரம்மாவும் ஒருவர் எனில் இந்த கட்டுரைக்கு அவசியமே இருந்திருக்காது; ஏனெனில் யூத மார்க்க நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே அல்லது அதன் தொடர்ச்சியாக கிறித்தவம் விளங்குகிறது;

அது, தான் முழுவதுமாக நம்பி ஏற்றுக்கொண்ட கருத்துக்களை மனுக்குலத்தின் முன்வைக்கிறது;

புத்தர் முதல் ஆதிசங்கரர் வரை விவேகானந்தர் உட்பட அனைத்து மார்க்க அறிஞர்களும் தத்தமது ஞானத்தை போதித்தனர்;அதுபோலவே கிறித்தவரும் போதிக்கின்றனர்;அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பமல்லவா?

அதற்கான மத சுதந்தரத்தைக் கொடுக்காமல் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாகத் தொடர்ந்து கிறித்தவர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது;

வெட்டவெளியில் மலங்கழித்து சுற்றுபுறத்தைக் கெடுத்த குஜராத்தின் குடிசைப் பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வெளிநாட்டில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்திஜி சென்று துப்புரவு பணியை மேற்கொண்டாராம்;

அதுபோலவே பாவத்தைக் குறித்த அறிவே இல்லாமல் சமுதாயத்தைக் கெடுக்கும் துன்மார்க்கருக்கு வெளிச்சம் தரும் அரும்பணியில் கிறித்தவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்;

பாவம் என்பது இல்லாவிட்டால் தோஷமும் பரிகாரமும் எங்கிருந்து வந்தது?

முகமதுவுக்கு சிறப்பு அனுமதியில் பலதார மணமும் ஏன் சொந்த மருமகளையும் கூட தாரமாக்கிக் கொள்ள அனுமதிக்கும் அல்லாவும் கர்த்தரும் எப்படி ஒன்றாக முடியும்?

ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட கோவில்களின் நாயகனான பிரம்மாவுக்கும் கர்த்தருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?

சிந்தியுங்கள்..!

ஞானம் என்பது “தனித்திரு”க்கும், “பசித்திரு”க்கும், “விழித்திரு”க்கும்..!

பெரும்பான்மையினரில் சமரசம் செய்துகொள்வோர் வயிற்றுக்காக எதையும் விற்கத் துணிவர்;
எம்மதமும் சம்மதம் என்பர்;அடுத்தவர் ஏமாந்தால் அவர் தோளில் சவாரியும் செய்வர்;நான் ஆரியரைச் சொல்லவில்லை..!

மத சுதந்திரம் என்ற பெயரில் பிற மதத்துக்கு எதிராக எந்த வித அடிப்படையும் இல்லாமல் வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை. சல்மான் ருஷ்டியின் சாடனிக் வெர்சஸ் தடை செய்யப் பட்டு உள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மத சுதந்திரம் என்ற பெயரில் எல்லோரையும் பாவிகள் என்று திட்ட உரிமை இல்லை. இது விடயமாக முன்பே எழுதி உள்ளோம். ஒரு குற்ற வாளியை கூட குற்றம் நிரூபணம் ஆகும் வரையில் குற்றம் சாட்டப் பட்டவர் என்று மட்டமே சொல்லப் பட வேண்டும் என்றே உள்ளது.

//புத்தர் முதல் ஆதிசங்கரர் வரை விவேகானந்தர் உட்பட அனைத்து மார்க்க அறிஞர்களும் தத்தமது ஞானத்தை போதித்தனர்;// புத்தர் முதல் ஆதிசங்கரர் வரை விவேகானந்தர் மக்களை திட்டவில்லை. பிற மதங்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை கைக் கொள்ளவில்லை.

//அதுபோலவே பாவத்தைக் குறித்த அறிவே இல்லாமல் சமுதாயத்தைக் கெடுக்கும் துன்மார்க்கருக்கு வெளிச்சம் தரும் அரும்பணியில் கிறித்தவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்;// அந்த அரும் பணியின் விளைவாலே அமெரிக்காவும், ஐரோப்பாவும் முழு விபச்சார, விவாகரத்து சமூகமாக ஆகி இருப்பதுதான் நடந்துள்ளது. இப்போது சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றிக் கொண்டு இங்கே நம்மையும் பாவியாக்க வேண்டுமா என்றுதான் கேட்கிறோம்.

//பெரும்பான்மையினரில் சமரசம் செய்துகொள்வோர் வயிற்றுக்காக எதையும் விற்கத் துணிவர்;
எம்மதமும் சம்மதம் என்பர்;அடுத்தவர் ஏமாந்தால் அவர் தோளில் சவாரியும் செய்வர்;நான் ஆரியரைச் சொல்லவில்லை..! //

இங்கே நாம் எல்லோரும் இந்தியர்கள் தான்.

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர், சாம்பல் நிறம் ஒரு குட்டி , கருஞ் சாந்து நிறம் ஒரு குட்டி, பாலின் நிறம் ஒரு குட்டி

என்றும்

செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்.

என்றும் தெளிவாக சொல்லி உள்ளனர்.

முன்பு இந்தியர்களை பிரித்து வெளி நாட்டினர் சுரண்டி வந்தது போல இனியும் செய்ய மக்கள் எளிதில் விட மாட்டார்கள். ஆனாலும் இந்தியரிலேயும் சில எட்டப்பன்கள் அவ்வப் போது வெளி நாட்டினருக்கு வால் பிடித்து ஏஜென்ட் வேலை பார்த்ததையும் மக்கள் மறக்கவில்லை. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

//இந்த கட்டுரையானது யூத‍ – கிறித்தவ நம்பிக்கைகளின் அடிப்படை போதனைகளை விமர்சித்து எழுதப்பட்டுள்ளதை அறிவீர்கள்;//

அன்புக்குரிய நண்பர் சில்சாம் அவசர கதியில் தவறாக எழுதி இருக்கிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகில் உள்ள எல்லோரும் பாவிகள் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை, நீதி மான்களும் உள்ளனர் என்றே சொல்லி இருக்கிறார். . பாவம் செய்யக் கூடாது, பாவம் செய்யாமல் இருக்க முடியாதென்றால் பாவத்துக்கு காரணமான அங்கத்தை வெட்டிப் போடு என்றே சொல்லி இருக்கிறார். யூத மதத்தின் மிக முக்கிய நிபுணரான மோசஸ் இந்த உலகில் உள்ள எல்லோரையும் பாவிகள் என்று சொன்னதாக நமக்குத் தெரிந்த அளவில் இல்லை.

எனவே இயேசு கிறிஸ்து சொல்லாததை எல்லாம், அவர் பெயராலே சொல்லி, இயேசு கிறிஸ்துவின் கொள்கைக்கு எதிரான கருத்துக்களை அவர் பெயராலே நம்முடைய நண்பர்களால் அசோக், சில் சாம் ஆகியோருக்கு போத்தித்து இருக்கிறார்கள் என்றே நாம் கருத இயலும். எனவே நாம் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை சரியாக விளக்கவே செய்துள்ளோம்.

ஜான், ஜேக்கப், ஜார்ஜ் புஷ் ஆகியோரின் கருத்துக்களை எல்லாம் இயேசு கிறிஸ்துவின் பெயராலே பிரச்சாரம் செய்வதை, சரி செய்யவே நாம் எழுதுகிறோம்.

நண்பர் “திருச்சிக்காரன்” தனது அவசரத்தினால் பல்வேறு தரப்பிலிருந்து வரக்கூடிய கருத்துக்களைத் தடுப்பதுடன் எனது கருத்துகளையும் பின்னுக்குத் தள்ள முயற்சிக்கிறார்; நாமே பேசிக் கொண்டிருந்தால் மற்ற நண்பர்களுடைய கருத்து தடைபடுமோ என்று யோசிக்கிறேன்;கட்டுரை எழுதியதுடன் தங்கள் பணியை முடித்துக் கொண்டு சற்று ஓய்வெடுக்கலாமே..!

// மத சுதந்திரம் என்ற பெயரில் எல்லோரையும் பாவிகள் என்று திட்ட உரிமை இல்லை //

நண்பரே, நான் யாரையும் பாவி என்றழைப்பதில்லை;
“இனியும் நீ பாவி இல்லை”யென்றே புரியவைக்க முயற்சிக்கிறேன்;

ஏனெனில் இந்த சமுதாயமே ஒருவனை “குடிகாரன்” என்றும் “விபச்சாரி” என்றும் “திருடன்” என்றும் “கொலைக்காரன்” என்றும் “ஈட்டிக்காரன்” என்றும் முத்திரை குத்தி ஒதுக்கிவைக்கிறது;

அவர்கள் தங்கள் குற்ற உணர்ச்சியுடன் வரும்போது அவர்களை உற்சாகப்படுத்தி (அவர்கள் திருந்தி வாழும் பட்சத்தில்) அவர்களுடைய பெலவீனங்களுக்காக ஏற்கனவே ஒரு பலி செலுத்தப்பட்டு பாவம் நிவர்த்தியும் பரிகாரமும் செய்யப்பட்டுவிட்டது என்று உறுதிகூறி தொடர்ந்து பாவமில்லாத வாழ்வு வாழ வழி சொல்லுகிறேன்;

இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை; மற்றும் பாவமே (இரத்தமே) அனைத்து நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது; மனசாட்சியிலுள்ள குற்ற உணர்ச்சி விலகினாலே முழுமையான தேக ஆரோக்கியம் விளங்கும்;

ஆனால் உங்கள் சமதர்ம மார்க்கமோ அவனது மனசாட்சியை கல்லாக்கி பரிகாரம் செய்தால் போதும் என்ற சுயதிருப்தியிலும் தொடர்ந்து பாவ தன்மையிலுமே வைத்திருக்கிறது;

இதனால் இந்த புண்ணியபூமியில் கோடானுகோடி ஆண்டுகளாக முப்பத்துமுக்கோடி தேவர்கள் முயற்சித்தும் குற்றசெயல்கள் மட்டும் குறையவே இல்லை..!

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

சகோதரர் சில்சாம் அவர்களே,

//நண்பரே, நான் யாரையும் பாவி என்றழைப்பதில்லை;//

பாராட்டுகிறேன்.

//“இனியும் நீ பாவி இல்லை” யென்றே புரியவைக்க முயற்சிக்கிறேன்; //

நான் ஒரு போதும் பாவியாக இருக்கவில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

//ஏனெனில் இந்த சமுதாயமே ஒருவனை “குடிகாரன்” என்றும் “விபச்சாரி” என்றும் “திருடன்” என்றும் “கொலைக்காரன்” என்றும் “ஈட்டிக்காரன்” என்றும் முத்திரை குத்தி ஒதுக்கிவைக்கிறது;//

தினமும் குடிப்பவனைப் பார்த்து குடிகாரன் என்றோ, திருட்டு செயல்களில் ஈடுபடுபவனைப் பார்த்து திருடன் என்றோ சொல்கிறார்கள்.

ஆனால் கிறிஸ்துவை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் அப்பாவிகளை பாவி என்று அழைக்கிறார்கள்.

//அவர்கள் தங்கள் குற்ற உணர்ச்சியுடன் வரும்போது அவர்களை உற்சாகப்படுத்தி (அவர்கள் திருந்தி வாழும் பட்சத்தில்) அவர்களுடைய பெலவீனங்களுக்காக ஏற்கனவே ஒரு பலி செலுத்தப்பட்டு பாவம் நிவர்த்தியும் பரிகாரமும் செய்யப்பட்டுவிட்டது என்று உறுதிகூறி தொடர்ந்து பாவமில்லாத வாழ்வு வாழ வழி சொல்லுகிறேன்;//

குற்ற உணர்ச்சி எதற்கு வர வேண்டும்? தவறு செய்தவனுக்கு தான் குற்ற உணர்ச்சி வர வேண்டும். அப்படி தவறு செய்தவன் அந்த தவறு யாருக்கு எதிராக இழைக்கப் பட்டதோ அவரிடம் தான் போய் பரிகாரம் செய்ய வேண்டும். ஒரு பெண்ணை நம்பிக்கை கொடுத்து ஏமாற்றி விட்டவன் அந்தப் பெண்ணிடமே மன்னிப்பு கேட்டு , அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். ஒரு பெண்ணுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு, கடவுளிடம் சென்று மன்னிப்பு கேட்டால், கடவுள் வந்து அந்தப் பெண்ணுக்கு வாழ்வு தர முடியுமா? இதை இயேசு கிறிஸ்து மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். சகோதரனுக்கு அநீதி செய்தால் அவனிடம் போய் அவனுக்கு ஒப்பாகி விட்டு, பிறகு கோவிலுக்கு வா என்று சொல்லி இருக்கிறார். எனவே ஒருவருடையபாவத்தால் யாருக்கு அநீதியோ, அவர்களிடமே மன்னிப்பும் பரிகாரமும். போப் இப்போது பாதிக்கப் பட்டவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அவர் வேறு வழியில்லாமல் கேட்கிறார். நீங்களாவது இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிதல் செய்ய வேண்டும்.

//ஆனால் உங்கள் சமதர்ம மார்க்கமோ அவனது மனசாட்சியை கல்லாக்கி பரிகாரம் செய்தால் போதும் என்ற சுயதிருப்தியிலும் தொடர்ந்து பாவ தன்மையிலுமே வைத்திருக்கிறது; //

பலரும் பாவம் செய்வதும் இல்லை, பரிகாரம் தேடவும் இல்லை. சமதர்ம சமூகம் நேர்மையான குடும்ப வாழ்க்கையை உருவாக்கி உள்ளது.

கல்லான மனசாட்சி எல்லோரையும் பாவிகள் என்று திட்டுபவர்க்குத்தான்

//இதனால் இந்த புண்ணியபூமியில் கோடானுகோடி ஆண்டுகளாக முப்பத்துமுக்கோடி தேவர்கள் முயற்சித்தும் குற்றசெயல்கள் மட்டும் குறையவே இல்லை..!//

என்னவோ இந்தியாவிலே உள்ளவர்கள் எல்லோரும், அமெரிக்காவில் நடை பெறுவது போல துப்பாக்கி வாங்கி வைத்துக் கொண்டு ஒருத்தரை ஒருவர் சுட்டிக் கொண்டிருப்பது போல எழுதுகிறீர்கள், அவரவர்கள் வேலையைப் பார்க்கிறார்கள், அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர். ஆங்காங்கே நடை பெரும் குற்றச் செயல்களும் குறையும் வண்ணம், மக்களிடம் அன்பு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துவோம்.

இதனால் இந்த புண்ணியபூமியில் கோடானுகோடி ஆண்டுகளாக முப்பத்துமுக்கோடி தேவர்கள் முயற்சித்தும் குற்றசெயல்கள் மட்டும் குறையவே இல்லை..!

திரு CHILLSAM அவர்களே,

// எல்லையில்லாத கடவுளையே கர்த்தர் என்றும், அல்லா என்றும், பிரம்மம் என்றும் அழைக்கின்றோம்.இந்த கர்த்தர், அல்லா, பிரம்மம் எல்லாமே அந்த ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களே…//

///நண்பரே, இப்படி சம்பந்த சம்பந்தமில்லாமல் வாதத்தை வளர்த்துக் கொண்டே போவதில் யாருக்கும் எந்த பயனும் இராது;
இந்த கட்டுரையானது யூத‍ – கிறித்தவ நம்பிக்கைகளின் அடிப்படை போதனைகளை விமர்சித்து எழுதப்பட்டுள்ளதை அறிவீர்கள்///

இந்தக் கட்டுரை திரு hard truth அவர்கள் வேறு கட்டுரையில் இட்ட பின்னூட்டங்களின் விழைவால் எழுதப்பட்டது.அந்த பின்னூட்டங்களில் நானும் பங்கெடுத்திருக்கிறேன்.அதன் தொடர்ச்சியாக தான், இவ்வாறு குறிப்பிட்டேன்.

///கர்த்தரும் அல்லாவும் பிரம்மாவும் ஒருவர் எனில் இந்த கட்டுரைக்கு அவசியமே இருந்திருக்காது;///

நான் குறிப்பிட்டது “பிரம்மம்”….. “பிரம்மா” அல்ல .

“பிரம்மம்” என்றால் காலம், இடம் போன்ற வரையறைக்குட்படாத , உருவமில்லாத எல்லையில்லாத, எல்லையற்ற அன்பும், கருணையும், ஞானமும் சக்தியும் கொண்ட இந்த பிரபஞ்சம் முழுதும் உள்ளும் புறமும் அனைத்துமாகவும்,அனைத்திலும் நிறைந்திருக்கும், கடவுள் என்பதாகும்.

///அதற்கான மத சுதந்தரத்தைக் கொடுக்காமல் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாகத் தொடர்ந்து கிறித்தவர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது///

இந்து மதக்கடவுளை சாத்தான் என்றும் , பூதம் என்றும், பொய்யான கடவுள் என்றும்,

ஏசுவே மெய்யான தேவன் என்றும்,

எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அவன் பாவியே, யேசுவிடம் பாவ மன்னிப்பு பெறாவிட்டால் அவனை கர்த்தர் நிரந்தர நரகத்தில் தள்ளுவார் என்றும்,

இந்து மதத்தில் பிறந்து, இந்துக் கடவுளைக் கும்பிட்ட ஒரே ஒரு காரணத்திற்க்காக ஒரு பாவமும் அறியாத குழந்தைகளைக் கூட,யேசுவிடம் பாவ மன்னிப்பு கேட்க்காத ஒரே ஒரு காரணத்திற்க்காக கர்த்தர் அந்த குழந்தையை நிரந்தர ஏறி நரகத்தில் தள்ளுவார் என்றும்,

எவ்வளவு கொடூர கொலை,கற்பழிப்பு செய்பவனாக இருந்தாலும் யேசுவிடம் மனம் திருந்தி பாவமன்னிப்பு பெற்றுக் கொண்டால் அவன் கர்த்தரிடம் செல்வான் என்றும்,

தான் கும்பிட்டுவந்த இந்துக் கடவுள்களை வணங்குவதை விட்டு விட்டு,இயேசுவை மட்டுமே கடவுளாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் /பாவ மன்னிப்பு பெறாதவர்கள் அனைவருக்கும் நிரந்தர நரகமே என்றும்

கூறி //மத சுதந்தரத்தைக் கொடுக்காமல் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாகத் தொடர்ந்து// கிருஸ்தவர்கள்( திரு HARD TRUTH ) இந்துக்களுக்கு எதிரார பொய்ப் பிரச்சாரம் செய்ததாலேயே தான் இந்தக் கட்டுரை.

///ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட கோவில்களின் நாயகனான பிரம்மாவுக்கும் கர்த்தருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?///

நான் ஏற்கெனவே கூறிய படி “பிரம்மம்” வேறு …. “பிரம்மா” வேறு.

“பிரம்மம்” என்றால் எல்லையற்ற அன்பும், கருணையும், கொண்ட கடவுள் என்பதாகும்.'”

இந்த பிரம்மத்திற்கும் , கர்த்தருக்கும் சம்பந்தம் சிறிது கூட இல்லையா???

பிறவிக் குருடர்கள் யானையை கண்ட கதை உங்களுக்குத் தெரியும்.அதில் ஒருவன் யானையின் வாலை தடவிப் பார்த்து யானை கயிறு போல் இருக்கிறது என்றான், இன்னொருவன் யானையின் காலைத் தடவிப் பார்த்து யானை தூண் போல் இருக்கிறது என்றான், இன்னொருவன் யானையின் காதைத் தடவிப் பார்த்து யானை முறம் போல் உள்ளது என்றான், இன்னொருவன் யானையின் வயிற்றைத் தடவிப் பார்த்து யானை பானை போல் உள்ளது என்றான்.யானையைப் பற்றி தாங்கள் கண்டது தான் உண்மை என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள்.இந்த நான்கு பெரும் சொல்வது வேறு வேறாக தோன்றினாலும் அவர்கள் கூறுவது ஒரு வகையில் யானையைப் பற்றிய உண்மையையே.

இதே போல் ஒவ்வொரு மதமும் இறைவனைப் பற்றி கூறும் உண்மைகள் வேருவேராகத் தோன்றினாலும் அனைத்து மதமும் அந்த ஒரே இறைவனைப் பற்றியே கூறுகின்றன.

மற்ற மதங்கள் தன் மதம் மட்டுமே உண்மை என்று கூறும் பொது இந்து மதம் மட்டுமே அனைத்து மதமும் உண்மை, அனைத்து கடவுளும் ஒன்றே என்று கூறுகிறது.மேலும் நாம் அனைவரும் கடவுளைக் காண வில்லை.கடவுளைக் கண்டவன்,அனுபவத்தில் உணர்ந்தவன், உண்மையை உணர்ந்தவன் தன் கடவுள் மட்டுமே உண்மை என்று சண்டையிடமாட்டான்.நாம் கடவுளைக் காணவில்லை. அதனால் தான் தன் கடவுள் மட்டுமே உண்மை என்று சண்டையிடுகிறோம்.

உலகம் முழுதும் ஒரே மதமாக தன் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நடக்காத காரியமாகும்.உலகம் முழுதும் இந்து மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு இந்து நினைத்தால் அவனைப் போல் முட்டாள் யாரும் இல்லை.இதைப் போலவே மற்ற மதத்தினரும் தன் மதம் மட்டுமே இருக்க வேண்டும் மற்ற மதம் அழிய வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் பைத்தியக்காரர்களே.அப்படிப்பட்ட பைத்தியக் காரர்களே மத மாற்றத்தில் ஈடுபட்டு மற்ற மதத்தை அழித்து வருகிறார்கள். மேலை நாடுகளில் கிறிஸ்த்துவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இஸ்லாமிய மதம் வேகமாகப் பரவி வருவதாகவும் 2050 ஆம் வருடத்தில் உலகில் இஸ்லாமியரே பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.கிருத்தவ மதம். மத மாற்றத்தால் வளர்ந்தது,அதே கருத்துடைய இஸ்லாமிய மத மாற்றத்தால் கிருஸ்தவ மதம் தற்போது மேலை நாடுகளில் வேகமாக அழிந்து வருகிறது.இதனால் இரு மதத்தவருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டு வன்முறை நிகழும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

http://edition.cnn.com/WORLD/9704/14/egypt.islam/

///ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட கோவில்களின் நாயகனான பிரம்மாவுக்கும் கர்த்தருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?///

திரு. தனபால் அவர்களே, பிரம்மாவுக்கும் பிரம்மம் என்று சொல்லப் படுவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியிருக்கிறீர்கள். அதே நேரம் சகோதரர் சில்சாம் //ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட கோவில்களின்// என்று எழுதியதற்கு விளக்கம் எதுவும் தரவில்லையே. இந்துக் கோவில்களில் பல கடவுள்களின் உருவங்கள் உள்ளன. அதோடு குழல் வூதுவோர், மேள ம் வாசிப்பாவர், காவல் புரிவோர், பணிப் பெண்டிர் உள்ளிட்ட பலரின் சிற்பங்கள் இருக்கின்றன. ஆனால் புணர்ச்சி சிறபங்கள் இந்து மதக் கோவிலகளில் இல்லை. ஆண் பெண் புணர்ச்சி யைக் காட்டும் சிற்பங்கள் புத்தமதம் வீழ்ச்சி அடைந்தகாலத்தில் , அதை நிலை நிறுத்த உருவாக்கப் பட்ட ஒரிசாவில் உள்ள கொனாராக், மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ போன்றவையே. அவை இப்போது சுற்றுலாத் தளங்களாக உள்ளன. இந்துக்கள் அந்தக் கோவில்களுக்கு எப்போதும் சென்று வழிபட்டது இல்லை.

இந்துவை பொறுத்தவரையில் அவன் கடவுளைத் தாயாகவே எண்ணுகிறான். கோவிலில் உள்ள அம்மன்களும் தாய்மையின் கருணையை சிந்தும் வகையிலேயே அமைக்கப் பட்டு உள்ளது. ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் பரந்த மனப்பனமையும், விசால சிந்தனையும் வேண்டும்.

//அவர் பெயராலே நம்முடைய நண்பர்களால் அசோக், சில் சாம் ஆகியோருக்கு போத்தித்து இருக்கிறார்கள் என்றே நாம் கருத இயலும். எனவே நாம் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை சரியாக விளக்கவே செய்துள்ளோம். //
என்னங்க நண்பா, உங்கள் தளத்தில் நான் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது, இன்னும் என்னை நீங்கள் மறக்கவில்லையா?
அன்புடன்,
அசோக்

அன்பு சகோதரர் அசோக் அவர்களே,

நீண்ட நாளுக்குப் பிறகு உங்களின் பின்னூட்டம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் நலமென நம்புகிறேன். ஒரு ஆடு காணாமல் போனாலும் அதையே தேடுவதைப் போல, நான் உங்களை எப்போதும் மறக்கவில்லை.
நன்றி,

அன்புடன் திருச்சிக்காரன்.

தங்கள் அன்புக்கு நன்றி திருச்சிக்காரரே,
ஆனால் நான் உங்கள் மந்தையை சேர்ந்த ஆடு அல்ல.
அன்புடன்,
அசோக்

அன்புக்குரிய சகோதரர் அசோக் அவர்களே,

நீங்கள் எந்த மந்தையில் சேர விரும்புகிறீர்களோ, அதே மந்தையிலே உங்களை சேர்க்கதான் நான் முயலுகிறேன்.

இயேசு கிறிஸ்து எங்களுடன் இருக்கிறார், நாங்கள் இயேசு கிறிஸ்துவுடன் உள்ளோம். இயேசு கிறிஸ்துவின் பெயராலே அவருடைய கொள்கைக்கு மாறான கருத்துக்கள் உபதேசம் செய்யப் பட்டு விட்டன. இயேசு கிறிஸ்து சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை என்பதையே நான் சொல்லி வருகிறேன். அது விடயமாக இன்னும் பல கட்டுரைகள் வெளியாகும். நீங்கள் தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

அன்புடன்,

திருச்சிக்காரன்.

அன்புக்குரிய சகோதரர் Hard Truth அவர்களே,

என்னை ஆட்டு தோலைப் போர்த்தி வரும் ஓநாய் என்று எழுதி இருக்கிறீர்கள், இயேசு கிறிஸ்துவையே இந்த உலகம் சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையில், நீங்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

நான் சாதாரணமானவன் தான். நான் என்னை better என்று கருதவில்லை. எல்லோரும் better ஆக வேண்டும் என்பதற்காகவே நான் எழுதுகிறேன்.

உண்மையிலே ஓநாய்க் கூட்டத்திலே புகுந்த ஆட்டின் நிலையிலிலேயே நான் இருந்திருக்கிறேன். பலர் என்னை சூழ்ந்து கொண்டு நான் மிசினரிகளிடம் பைசா வாங்கிக் கொண்டு எழுதுபவன் என்றும், சத்தியம் செய்ய முடியுமா என்றும் கேட்கிற அளவுக்கு இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை டிபண்ட் செய்து நான் எழுதி இருக்கிறேன். அப்படி பலரும் ஒரே நேரத்திலே என்னைத் தனியனாய் கட்டம் கட்டிய நிலையிலும் , நான் இயேசு கிறிஸ்துவை பற்றி இகழவோ, அவரது கொள்கைகளை விளக்கியதை நிறுத்தவோ இல்லை. இதை சகோதரர் அசோக் மறந்திருக்க மாட்டார் என நம்புகிறேன். என்னைப் பெரிய அறிவாளி என்று காட்டிக் கொள்வதோ என்னுடைய நோக்கம் அல்ல.

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை எல்லோரும் சரியாகப் புரிதல் செய்ய வேண்டும் என்பதுவே என் நோக்கம். நீங்கள் எழுதாததை எழுதியதாக சிலர் கூறிய போது கூட நான் தெளிவு படுத்தி இருக்கிறேன். உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லாதது என்றுமே நான் கூறுகிறேன்.

Mr.Trichy,
I don’t think that Bro.Ashok is of ur flock. He has the greatest Sheperd of his own.

//ஆனால் புணர்ச்சி சிறபங்கள் இந்து மதக் கோவிலகளில் இல்லை. //
Why are you lying so bluntly Mr.Trichy? Probably Bro.Chillsam can list out the temples with such சிறபங்கள்.

//பலரும் பாவம் செய்வதும் இல்லை, பரிகாரம் தேடவும் இல்லை. சமதர்ம சமூகம் நேர்மையான குடும்ப வாழ்க்கையை உருவாக்கி உள்ளது.//
Probably you stopped visiting temples these days. People are doiing lots of parigaarams in the temples and (so called) holy rivers sides.

//கடவுள் வந்து அந்தப் பெண்ணுக்கு வாழ்வு தர முடியுமா? //
Only GOD can give life. Nobody else can give. If a person spoils a woman and goes back to her saying “sorry”. What benefit she can get? If that woman or the man is already married, what is the solution that any human can provide it? If GOD wants, GOD can remove the pain (every kind of pain) from the woman, and if GOD wants, GOD can remove every kind of guilt too.

Hard Truth

//ஆனால் நான் உங்கள் மந்தையை சேர்ந்த ஆடு அல்ல.//
Coool Brother. Nice one. Also, you need not thank for his “LOVE” brother. Because there is no real LOVE in him. Everything is just show off. He is just trying to show himself better than Christians. Bible tells about “Wolfs in sheep clothing”. Beware…

Hard Truth.

Mr.Murugan,
//YOU ARE FANATIC, SO YOU CAN NOT ACCEPT THE TRUTH THAT THE TEMPLES WORSHIPPED BY HINDUS DOES NOT HAVE THOSE TYPE OF IDOLS . YOU HAVE TO FIRST GO AND SEE THE TEMPLES WHERE HINDUS WORSHIP BEFORE YOU BLABBER. //

I might be so good in knowing about ur Hinduism. I don’t want to know the path hell that much. Before you blabber, you can see this blog, which is written by Hindus:
http://www.hindu-blog.com/2007/02/why-did-ancient-hindu-temples-have-sex.html
.
// YOU DONT KNOW ANY THING ABOUT OTHER RELIGIONS, (FIRST, IT SEEMS THAT YOU DONT KNOW ABOUT YOUR OWN RELIGION, BECAUSE MR. THIRUCHCHIKKAARAN IS CLARIFYING YOUR RELIGION MORE CORRECTLY)//
First of all, Mr.Trichy himself is blind and trying to show the path to others. And another blind man Mr.Murugan is confirming that the path shown by Mr.Trichy is correct. Very funny.

//THEY ARE DOING PARIGAARAMS FOR THE MOVEMENT OF PLANETS.//
By doing all ur funny parigaarams in temple, these planets are going to change their path??

//ALL YOUR LUNATIC IDEAS ARE CLERALY SELFISH. IF A PERSON SPOILS A WOMEN , HE CAN GO BACK AND SAY SORRY AND GET HER MARRIED AND LEAD A PEACEFUL FAMILY LIFE.//
So, you mean to say that if some girl is raped, then the rapist can marry the victim girl and have “PEACEFUL” life. Wow, amazing. What if the girl is already married? What if the girl doesn’t like that rapist (and no girl will like a rapist) ?

//DOES YOUR GOD GOING TO MARRY THAT GIRL AND LIVE WITH HER ? HAVE YOUR GOD SO FAR DID SO ANYWHERE? //
So, you think that marriage is the only thing in life? If GOD wants she can live a much more meaningful life than any married women. If GOD wants some broadminded man (whom the girl also likes) will come forward to marry the girl. GOD can heal the girl’s past life and hurts.
I know, it is too much for me to expect u guys think in a broad sense.
//BUT PEOPLE ARE NOT READY TO BE FOOLED BY YOU//
No one needs to come and fool u. U r good enough to do that for ur own self.

Hard Truth

Jesus is a great sheperd and his follwers are sheeps. Usually no sheep will try to show itself as a sheep to other sheeps deliberately. Because, since they know that they are the sheeps of the Great sheperd, they will remain as they are. Only the wolf in the sheep’s outfit will try to show off like that. Everyone in this blog knows who is showing off themself to be a sheep deliberately. Everyone knows who is blowing their own trumphet. So guys, beware of wolfs.

Hard Truth

//எவ்வளவு கள்ளத் தனம் பாரு. யாரோ பிலாகுல எல்தினதை வச்சிகினு அதை உண்மை மாறி பீலா உடரதுல இருந்தே நீ ஒரு மத வெறி பிடிச்ச ஆளுன்னு தெரியுதே.//
பல கோவில்களில் சிவலிங்கம் இருக்கிறது. சிவலிங்கம் எதை குறிக்கிறது? என் இந்து நண்பர்கள் கூறியது என்னவென்றால், அது சிவபார்வதியின் புணர்ச்சியே. இது ஒரு சிறு உதாரணம்தான்.
Hard Truth

Murugan,
go thru this site too:
http://www.exoticindiaart.com/article/shivalinga/

Can u plz answer this:
What is Lingam? and what is yoni?
Why both of these has to be representation of Shiva and Shakthi?
I just don’t want to say something for the sake of saying. Yeah, I know that lingam is also a mark of “Yupa Stamba” and “Shapelessness of the Universe”. But, majority of the people (mostly hindus) describes that as Male organ.
Who ever writing in the name of Murugan is welcome to discuss and argue. But with some decency.
Hard Truth.

//பிருகு என்னும் முனிவர் சிவனை யாரும் அவருடைய உருவத்திலே வழிபாடு செய்ய கூடாது என்று சொல்லி விட்டார்.//

என்னங்க திருச்சி, பிருகு முனிவர் சொன்னால் OK , ஆனால் மோசஸ் சொன்னால் தப்பா? அதுவும், மோசஸ் சொந்தமா அவர் கருத்தை சொல்லவில்லை.

Hard Truth

மோசஸ் சொந்தமாக தன்னுடைய கருத்தை சொல்லவில்லை என்கிறீர்கள். மோசஸ் சொன்னது சொந்தக் கருத்தா இல்லையா என்பது பற்றிய கட்டுரைகள் வெளியாகும். மேலும் மோசஸ் சொன்ன கருத்தை ஒத்துக் கொள்வதும், ஒத்துக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். மோசஸ் சொன்னதற்கு (கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதற்கோ, அவர் தன்னை உருவம் மூலமாக வணக்கக் கூடாது என்று சொன்னார் என்பதற்கோ) புரூப் ஒன்றும் இல்லை. மோசஸ் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது. துரதிர்ஷ்டவசமாக அவர் (மோசஸ்) இனப் படுகொலைக் கருத்துக்களுக்கு, செயல்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆகி விட்டார். நாம் மோசசின் ஒவ்வொரு கருத்தையும் எடுத்துக் காட்டி கருத்துக்களின் அடிப்படையிலே தான் அவரை அணுகுகிறோம்.

பிருகு என்னும் முனிவர் சிவனைக் காணச் சென்றதாகவும், சிவன் அவரைக் காண அனுமதிக்காமல் தாமதம் செய்ததாகவும் , அதனால் வருத்தப் பட்ட பிருகு தன் மன வருத்தத்தை வெளிப் படுத்தும் விதமாக இனி யாரும் சிவனின் உருவத்தை வழி பட மாட்டார்கள் என்று மனம் நொந்து சபித்து விட்டு சென்றதாகவும் சொல்லப படுகிறது. இது பிருகுவுக்கும், சிவனுக்கும் இடையேயான பிணக்கு. இதிலே தான் பிருகுவை தாமதிக்க வைத்ததால் பிருகுவுக்க் ஏற்ப்பட்ட மன வருத்தத்தை புரிந்து கொண்ட சிவனும், தன் பகதர்கள் தன்னை ஜோதி ரூபத்திலே வழி பட்டாலும் அது தன்னையே சாரும் என்று சொன்னதாகவும் சொல்லப் படுகிறது. பிருகு என்பார் சிவனை சந்தித்ததற்கும், அவருடைய வடிவத்தில் வணங்க கூடாது என்று சொல்லும் படியான நிகழ்வுகளும், நடந்ததாக சொல்லப் படுகிறதே அல்லாமல் அதற்கும் நான் சாட்சி தர இயலாது, அதற்கும் புரூப் இல்லை. சிவன் என்று ஒருவர் இருப்பதற்கோ, அவரை பிருகு சந்தித்தற்க்கோ புரூப் இல்லை. பிருகுவின் சொந்தக் கதை, சோகக் கதையாக இருந்தாலும், சிவனைப் பலரும் நடராஜர் உருவத்திலும் வணங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

எனவே சிவனை நடராஜர் உருவத்தில் வைத்து வழி பட்டாலும், சிவலிங்க ரூபத்தில் வழிபட்டாலும் நம்மைப் பொறுத்தவரையிலே அவர்கள் அமைதியான வழியிலே, அடுத்தவரின் தெய்வங்களை இகழாமல் வழிபடும் வரை நாம் அதைக் குறை சொல்ல ஒன்றுமில்லை.

முருகன்,
நீங்கள் லிங்க உருவத்திற்கு கொடுத்த விளக்கம் உண்மையிலேயே நன்றாக உள்ளது. இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் ஏன் முன்பு அப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை.
ஆனால், பின்பு எதற்க்காக லிங்கம், யோனி என்றெல்லாம் மற்றவர்கள் விளக்கம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை யாரையும், எதையும் கேவலப்படுத்த அவர்கள் இதை சொல்லவில்லை.
Anyways, thank you,
Hard Truth

திரு CHILLSAM அவர்களே,

எல்லா கடவுளும் ஒன்று தான் என்று நான் கூறியதற்காக ///ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட கோவில்களின் நாயகனான பிரம்மாவுக்கும் கர்த்தருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?///

என்று திரு CHILLSAM கேட்கிறீர்கள்..நான் உருவமுள்ள எந்த கடவுளையும் கர்த்தரோடு ஒப்பிடவில்லையே!!! எல்லையற்ற கருணையும், எல்லையற்ற அன்பும், எல்லையற்ற சக்திகளையும் கொண்ட உருவமில்லாத கடவுளைத் தானே கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும்,பிரம்மம் என்றும் கூறினேன்.!!!

இப்பொழுதுள்ள உலகில் உள்ள பழைய மதங்கள் அனைத்திலுமே ஆபாச கருத்துக்கள் நிறைந்துள்ளது.அதில் கிருஸ்தவ மதமும் அடங்கும் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

திரு முருகன் அவர்களே,

///இது உருவமுள்ள கடவுள்களை குறைத்து சொல்லுவது போல இருக்கிறது. உருவமுள்ள கடவுள்கள் கருணையிலோ அன்பிலோ, சக்தியிலோ எதிலுமே குறைந்தவர்கள் இல்லை///

உண்மையிலேயே நான் உருவமுள்ள கடவுளை குறைத்து சொல்லவில்லை.அனைத்துக் கடவுளும் ஒன்றே என்பதை ஏற்றுக்கொள்ளும் முதல் படி உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொண்டாலே மதமாற்றம், மற்றும் என் கடவுள் மட்டுமே உண்மை என்பது போன்ற வெறுப்பை தூண்டும் தன்மை குறையும்..அவர்கள் நம் உருவக் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதியே அவ்வாறு குறிப்பிட்டேன்.

///மற்ற மதங்களைப் பற்றி நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம், அதிலே ஆபாசக் கருத்துக்கள் எதுவும் இல்லை///

நீங்கள் கூறுவது உண்மை தான்.பௌத்தர்கள் காலத்தில் மிக மோசமான அருவருப்பான ஆபாசக் கருத்துக்கள்,மற்றும் காட்டுமிராண்டித் தனமான சடங்குகள் நம் இந்து மதத்தில் புகுத்தப் பட்டன.அதைப் பற்றி விவேகானந்தர் பல இடங்களில் கூறியுள்ளார்.

அன்புக்குரிய திரு. தனபால் அவர்களே,

உருவ வழிபாடு, உருவமற்ற வழிபாடு பற்றிய என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

மத நல்லிணக்கத்தில் நீங்கள் காட்டும் முனைப்பை மனமாரப் பாராட்டுகிறேன். மற்ற அனைவருக்கும் நீங்கள் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறீர்கள்.

ஆனால் நீங்கள்

// முதல் படி உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொண்டாலே மதமாற்றம், மற்றும் என் கடவுள் மட்டுமே உண்மை என்பது போன்ற வெறுப்பை தூண்டும் தன்மை குறையும்.. //

என்று சொல்கிறீர்கள் , நீங்கள் சொல்வதன் முழு பரிமாணத்தையும் நீங்கள் அறிந்து இருக்கிறீர்களா?

யூத மதத்தினர், இஸ்லாமியர்கள் இவர்கள் இருவருமே உருவமற்ற நிலையிலே மட்டுமே கடவுள் இருக்க முடியும் என்கிற ஒரு கருத்திலே மிக உறுதியானவர்கள். அதுவும் ஒரே கடவுள் – உருவமற்றவர் என்கிற கொள்கையை யூதர்களும், இஸ்லாமியரும் வைத்து உள்ளனர். அவர்களின் கடவுளின் பெயர் கூட கிட்டத்தட்ட ஒன்றுதான். யூதர்கள் யெஹோவா என்ற பெயரிலும், ஏலோ என்ற பெயரிலும் கடவுளை அழைத்தனர். இஸ்லாமியர் அல்லா என்று அழைக்கின்றனர். அப்படியிருந்தும் உலகிலே மிக கடுமையாக யூதர்களும், இஸ்லாமியர்களும், ஒருவருக்கொருவர் பகைமையும் வெறுப்பும் உடையவராக இருக்கின்றனர். நீங்கள் சொன்னது போல உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொண்டாலே, உருவமில்லாத கடவுள் கொள்கை வெறுப்பை குறைக்கவில்லையே!

//அவர்கள் நம் உருவக் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதியே அவ்வாறு குறிப்பிட்டேன்.//

முதலில் உருவமில்லாத கடவுளை வணங்குவதை இந்துக்கள் யாரும் ஆட்செபித்ததாகவோ, தடை செய்ததாகவோ, எதிர்த்ததாகவோ தெரியவில்லை. இந்துக்கள் மசூதிக்கும் , சர்ச்சுக்கும் சென்று வழிபடுகிறார்கள், அது நல்லதே என்று சுவாமி விவேகானந்தரே சொல்லி இருக்கிறார்.

//அவர்கள் நம் உருவக் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதியே அவ்வாறு குறிப்பிட்டேன்.//

நான் மத நல்லிணக்கம் பற்றிய கட்டுரையில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். யாரையும் எந்தக் கடவுளையும் ஏற்றுக் கொள்ளச் சொல்லி, நாம் கட்டாயப் படுத்தவில்லை.

மத நல்லிணக்கத்தின் முதல் படி, பிறரின் வழிபாட்டு முறைகளை, பிற மதத்தினரின் தெய்வங்களை வெறுக்காமல் இருப்பது என்பதுதான்.

இரண்டாம் படி பிற மதத்தினரின் விழாக்களில் கலந்து கொள்வது.

மூன்றாம் படிதான் பிற மதத்தினரின் தெய்வங்களையும் கருத்தியல் அடிப்படையிலே புரிதல் செய்து மதிப்பது , மரியாதை செய்வது.

//அவர்கள் நம் உருவக் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதியே அவ்வாறு குறிப்பிட்டேன்.//

(சுவாமி விவேகானந்தர் சொல்லியவற்றை சாய்வெழுத்துக்களில் குறிப்பிட்டு இருக்கிறேன். )
முதலில் எந்த ஒன்றையும் மனம் ஒரு பொருளுடன் சம்பந்தப் படுத்தியே பார்க்கிறது. எல்லையற்ற , உருவமற்ற என்றால் கூட மனம் எல்லையற்றது என்பதாக வான் வெளியை நினைக்கிறது.

உருவமற்ற நிலையில் வழிபட முடியாது என்று நான் சொல்லவில்லை. உருவத்திலே மனக் குவிப்பு செய்வது எளிதானது. பெரியாரையோ, காமராசையோ, காந்தியையோ மனதில் நினைத்தவாறே மனக் குவிப்பு செய்து பாருங்கள். முதல் ஒரு வாரம் தினமும் 5 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்ய இயலும். அடுத்த வாரம் 10 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்யக் கூடும். ஆறு மாதம் கழித்தால் ஒரு மணி நேரம் கூட அதே உருவத்திலே மனக் குவிப்பு செய்யும் திறனை ஒருவர் பெறக் கூடும். நீங்கள் எல்லையற்ற , உருவமற்ற என்ற ஒரு நிலையிலே மனக் குவிப்பு செய்யச் சொல்லுங்கள். எல்லோராலும் அது இயலாது. அதிக நேரம் மனக் குவிப்பு செய்வது கடினம் .

மத நல்லிணக்கம் என்பது சகஜமாக பழகுவது, சகிப்புத் தன்மை, புரிதல் செய்ய முயற்ச்சி செய்தல், இணக்கமான அணுகுமுறை ஆகியவையே. நீங்கள் சொல்வது வேறு வகையாக இருக்கிறது. அது அவர்கள் நல்லிணக்கத்திற்கு வர மாட்டார்கள், அதனால் நான் அவர்கள் சொல்வதைக் கேட்கிறேன் என்பது போல இருக்கிறது, இது முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களுக்கு அடிபணிவது போன்றதே.

நான் உருவ வழிபாடு செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை, உருவ வழி பாட்டை வெறுக்க வேண்டாம், வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நான் சொல்வது.

உருவமற்ற முறையில் கடவுள் இருப்பதாகக் கருதி வழிபடுகிறானோ, உருவத்தைக் கடவுளாகக் கருதி வழி படுகிறானோ, தன்னையே கடவுளாக நினைத்து வழிபடுகிறானோ, எப்படியோ அமைதியாக வழிபட்டால் சரி.

உருவமற்ற பொருளாக கடவுள் இருப்பதாக கருதி வழிபடுபவன், உருவத்தை வழிபடுபவனை இழிவாக நினைக்கவோ, அவனை வெறுக்கவோ அவசியம் இல்லை.

உருவமற்ற கடவுளுக்கும் நிரூபணம் இல்லை, உருவம் உள்ள கடவுளுக்கும் நிரூபணம் இல்லை.

அப்படி இருக்கும் போது அடுத்தவரின் வழிபாட்டை வெறுத்தால், அந்த வெறுப்பு தானாகவே மோதலை, சண்டையை, போர்களை உருவாக்கி பல கோடி மக்களின் உயிரைக் குடித்து இரத்த ஆறு ஓட விடுகிறது. எனவே நம்பிக்கையாளர்கள் அமைதியாக கடவுளை வணங்குங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம்.

உருவ வழிபாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று சொல்வது எப்படி சரியாகும். உருவமல்லாத கடவுளுக்கு மட்டும் நிரூபணம் இருக்கிறதா? இல்லையே அப்படி இருக்கும் போது உருவ வழி பாட்டை மட்டும் கட்டம் கட்டித் தாக்க வேண்டிய அவசியம் என்ன?

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் எல்லாம் வல்லவர் என்றால் , தனக்கு தேவைப் படும் போது , தனக்கு தேவைப் படும் வடிவத்தை அவர் எடுத்துக் கொள்ளும் வலிமை அவருக்கு இல்லையா? அதற்க்கு நம் அனுமதியை அவர் பெற வேண்டுமா?

உருவ வழிபாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவர்

முதலில் கடவுள் என்று ஒன்று இருப்பதை காட்ட வேண்டும்,

பிறகு கடவுள் உருவம் இல்லாத நிலையில் மட்டுமே இருக்கிறார் என்பதையும் காட்ட வேண்டும்,

பலருக்கும் உருவத்தை அளிக்கும் அவர் தனக்கு ஒரு உருவத்தை எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத நிலையில் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

இத்தனையும் நிரூபித்து விட்டு அவர்கள் உருவ வழிப்பாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று சொன்னால் அதை நாம் ஒத்துக் கொள்ளலாம்.

மேலும் உருவ வழிபாடு ஒருவனுக்கு ஒரு உருவத்திலே மனத்தைக் குவித்து, தன் புலன்களை அடக்கி, சிந்தனையை ஒரே இடத்திலே செலுத்தும் பயிற்ச்சிக்கு உதவக் கூடும் என்று கூறப் படுவதை நாம் மறுக்க இயலாது.

உருவ வழிபாட்டை கண்டித்து , எள்ளி நகையாடி முழு நாத்தீகராக திகழ்ந்த பகுத்தறிவாளரான விவேகானந்தர், தான் உருவ வழி பாட்டின் மூலம் மிக உயரிய ஆன்மீக நிலையை அடைந்த ஒருவரின் ( இராம கிருஷ்ணர்) மூலமே தான் மிகப் பெரிய உண்மைகளை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். ஒரு உருவத்தை நினைத்து தியானம் செய்வது மிகச் சிறந்த மனக் குவிப்பு பயிற்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதையே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

//உருவத்திலே மனக் குவிப்பு செய்வது எளிதானது. பெரியாரையோ, காமராசையோ, காந்தியையோ மனதில் நினைத்தவாறே மனக் குவிப்பு செய்து பாருங்கள். முதல் ஒரு வாரம் தினமும் 5 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்ய இயலும். அடுத்த வாரம் 10 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்யக் கூடும். ஆறு மாதம் கழித்தால் ஒரு மணி நேரம் கூட அதே உருவத்திலே மனக் குவிப்பு செய்யும் திறனை ஒருவர் பெறக் கூடும். நீங்கள் எல்லையற்ற , உருவமற்ற என்ற ஒரு நிலையிலே மனக் குவிப்பு செய்யச் சொல்லுங்கள். எல்லோராலும் அது இயலாது. அதிக நேரம் மனக் குவிப்பு செய்வது கடினம்.//

தெய்வத்தை வணங்குவதற்கும் மனக்குவிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒருவருடன் பேச நாம் அவர்மேல் நம் மனதை குவிக்கவேண்டுமா? நான் பல பேருடன் தொலைபேசியில் பேசுகிறேன். அவர்கள் உருவம் எனக்கு ஒரு பொருட்டல்ல. என்னை விடுங்கள், இந்தியாவில் பலர் callcenter வேலை செய்கிறார்கள். பலபேருடன் பலநாட்டினருடன் தொடர்பு கொள்கிறார்கள், அவர்கள் அந்த மக்கள் படங்களை வைத்து மனக்குவிப்பு செய்கிறார்களா?
நீங்கள் மனக்குவிப்பு பயிற்சி செய்வதையும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையும் குழப்பிகொள்கிரீர்கள் என்றே நினைக்கிறேன்.
Hard Truth

ஒருவர் தெய்வத்தை வணங்குவது என்றால் என்ன, அந்த தெய்வத்தை நினைத்து வேண்டுவது, அந்த தெய்வத்திடம் மனக் குவிப்பு செய்வது என்பதே. வழிபாடாக இருந்தால் அதற்க்கு மனக் குவிப்பு வேண்டாமா? மனக் குவிப்பு இல்லாமல் எப்படி வழிபாடு செய்ய முடியும்? வேறு ஏதோ ஒரு சிந்தனையை வைத்துக் கொண்டு தெய்வத்தின் முன் நிற்ப்பதோ, முழங்கால் போடுவதோ வழிபாடு ஆகுமா?

இந்த விடயத்தில் என் பள்ளி ஆசிரியர் அருள்தாஸ் சொன்ன ஒரு சிறு சுவையான சமபவத்திக் குறிப்பிட விரும்புகிறேன். மறைந்த அமெரிக்க அதிபர் கென்னடி (அதிபர் ஆகும் முன்) சர்ச்சுக்கு சென்று பிரேயரில் கலந்து கொண்டாராம்.

பிரேயர் நீளமாக இருக்கவே அவர் தூங்கி விட்டாராம்.

சர்ர்சிலே பாதிரியார் பிரசங்கத்தை நிகழ்த்திக் கொண்டு வந்து, ஒரு கட்டத்திலே “உங்களில் யாரவாது எரி நரகத்துக்கு செல்ல விரும்புகிறீர்களா? எரி நரகத்துக்கு செல்ல விரும்புபவர்கள் எழுந்து நில்லுங்கள்” என சொன்னாரான் . அந்த நேரத்திலே முழித்துக் கொண்ட கென்னடி “எழுந்து நில்லுங்கள்” என்று சொன்னதை கேட்டு உடனே விறுவிறுப்பாக எழுந்து நின்று விட்டாராம்.

அப்போது பாதிரியார் ஆச்சரியப்பட்டு , என்ன மிஸ்டர் கென்னடி, நீங்கள் ஏன் நிற்கிறீர்கள்? நீங்கள் நரகத்துக்கு செல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டாராம்.

கென்னடி, ”ஆமாம் பாதர், நீங்கள் மட்டும் தனியாக நரகத்துக்கு செல்வதை நான் விரும்பவில்லை” என்றாராம்.

//உருவ வழிபாட்டை கண்டித்து , எள்ளி நகையாடி முழு நாத்தீகராக திகழ்ந்த பகுத்தறிவாளரான விவேகானந்தர், தான் உருவ வழி பாட்டின் மூலம் மிக உயரிய ஆன்மீக நிலையை அடைந்த ஒருவரின் ( இராம கிருஷ்ணர்) மூலமே தான் மிகப் பெரிய உண்மைகளை உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.//
விவேகானந்தர் கூறியது உண்மை என்று எப்படி நம்புவது? என்ன ஆதாரம் உள்ளது? அது பொய்யாக இருக்க சாத்தியம் இல்லையா?

//உருவத்தை வழிபடுபவனை இழிவாக நினைக்கவோ, அவனை வெறுக்கவோ அவசியம் இல்லை.//
உருவ வழிபாடு செய்பவனை யாரும் இழிவாக நினைக்கவில்லை, அவனை யாரும் வெறுக்கவும் இல்லை. உருவ வழிபாடு செய்வது ஒருவனை நரகத்தில் தள்ளும் என்று நான் நினைத்தால், அவனை நான் வெறுக்கும் பட்சத்தில், அவனை நான் அப்படியே விட்டுவிடுவேன். அவன் மீது அன்பு கொண்ட காரணத்தினால்தான் உங்களை போன்றோர் எங்களை குறை சொன்னாலும் பரவாஇல்லை என்று எங்கள் நேரத்தை செலவிட்டு, நாங்கள் நம்பும் உண்மையை கூறுகிறோம்.

//உருவமற்ற முறையில் கடவுள் இருப்பதாகக் கருதி வழிபடுகிறானோ, உருவத்தைக் கடவுளாகக் கருதி வழி படுகிறானோ, தன்னையே கடவுளாக நினைத்து வழிபடுகிறானோ, எப்படியோ அமைதியாக வழிபட்டால் சரி. //
அதாவது இந்துக்கள் செய்வது சரி மற்றவர்கள் செய்வது/சொல்வது தவறு என்று “நாகரீகமாக” சொல்கிறீர்கள்.

//முதலில் கடவுள் என்று ஒன்று இருப்பதை காட்ட வேண்டும்,

பிறகு கடவுள் உருவம் இல்லாத நிலையில் மட்டுமே இருக்கிறார் என்பதையும் காட்ட வேண்டும்,

பலருக்கும் உருவத்தை அளிக்கும் அவர் தனக்கு ஒரு உருவத்தை எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத நிலையில் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

இத்தனையும் நிரூபித்து விட்டு அவர்கள் உருவ வழிப்பாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று சொன்னால் அதை நாம் ஒத்துக் கொள்ளலாம்.//

எங்களுக்கு எங்கள் வேதத்தில் கொடுத்த கட்டளை, சத்தியத்தை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளுதல். உண்மையை மற்றவர்க்கு சொல்லுதல். நாங்கள் சொல்கிறோம், சொல்லுவோம். நம்புவதும், நம்பாமல் இருப்பதும், ஒத்துகொள்வதும், ஒத்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். உங்களுக்கு சொல்வதே எங்கள் கடமை, உங்களை ஒத்துகொள்ளவைப்பது எங்கள் கடமை அல்ல.
கிருஸ்துவரில் சிலர் ஆர்வகோளாறால், பிறரை ஒத்துக்கொள்ளவைக்க நினைத்து அவப்பெயரை, அவர்களுக்கும் கிருஸ்துவதிர்க்கும் தேடிகொடுத்தனர்.
ஆனால் உண்மையை சொல்லுதல் மாத்திரம் கண்டிப்பாக நடந்துகொண்டே இருக்கும். நீங்கள் எங்களை காட்டுமிராண்டிகள், முரட்டு பிடிவாதக்காரர்கள், காழ்ப்புனற்சிக்காரர்கள் என்று கூறினாலும், காரி உமிழ்ந்தாலும், துன்புறுத்தினாலும், கொன்றாலும், இது நடக்கும்.
Hard Truth

நாங்கள் யாரை என்ன துன்புறுத்துகிறோம், நாங்கள் தான் எல்லோரின் வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம் என்று சொல்கிறோமே.

கொன்றது யார், குருசெடு போர்களை நடத்தி பல கொடிக்கனக்கானவரைக் கோடிக் கணக்கானவரைக் கொன்று குவித்தனர். இப்போதும் பாலஸ்தீனிலும், ஈராக்கிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நம்முடைய தளத்திலேயே , பலரும் செத்தாலும் சரி, நாங்கள் அடாவடிப் பிரச்சாரத்தை செய்வோம் என்ற வகையிலே பதிவுகள் இருக்கிறதே.

மேலும் உண்மை என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும், உண்மை என்றால் நிரூபிக்கப் பட வேண்டும், எத்தனை முறை பரிசீலனை செய்தாலும் அது நிரூபணம் காட்ட முடியும். வெறும் நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு , உண்மை என்று நிரூபிக்க முயற்ச்சி செய்வதால் தான் பிரச்சினை வருகிறது. இஸ்லாமியரும் அதையே சொல்கின்றனர். அவர்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று.

யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை, நான் சாட்சி குடுக்கிறேன், அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.

யூதர்கள் தான் இதை ஆரம்பித்தது. அதே கருத்தை கிருச்துவரும் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.
அதே வியாதி இசுலாமியருக்கும் பரவியது, ஆனால் அவர்கள் கை குலுக்கிய கடவுளின் பெயர் அரேபிய மொழியிலே இருக்கிறது. அந்தக் கடவுள் தான் ஒரே கடவுள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

இதிலே உண்மை என்னவென்றால், ஒரு தரப்பாரும் கடவுளை பார்க்கவில்லை.

யாரோ மூவாயிரம் வருடம் முன்பு கற்பலகையில் கட்டளை எழுதி வாங்கினார் என்று கதையை வைத்து, பார்க்காத கடவுளுக்கு, நான் சாட்சி குடுக்கிறேன் என்று அவ்வளவு அலப்பறை.

சரி, யார் கடவுள் உண்மையான கடவுள்? ஒருவரும் ஒரு கடவுளையும் பார்க்கவில்லை!அப்படியானால் எப்படி தீர்மானிப்பது? வெறும் நம்பிக்கை மாத்திரமே உள்ளது.

தங்கள் கற்பனையில் உருவான கடவுள் தான் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க,யார் கடவுள் வலிமையான கடவுள் என்று நாமே தீர்மானிப்போம் என்று “உருவு வாளை” எனக் காட்டு மிராண்டிக் காலத்திலிருந்தே போடப் பட்டுக் கொண்டு வந்த சண்டைகளை, காலத்துக் கேற்ப நவீன ஆயுதங்களுடன் செய்கின்றனர். இப்போது இந்தியாவிலும் இந்த‌ அடாவ‌டிப் போக்கு ப‌ர‌வ‌ ஆர‌ம்பித்து விட்ட‌து.

நீங்கள் உங்கள் நம்பிக்கைகளை உண்மை போலக் காட்ட வேண்டும் என்கிற ஆதங்கத்திலே, அவரத்திலே உங்களின் வெறுப்பு பிரச்சாரத்தை நடத்துகிறீர்கள். நாங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலே நல்லிணக்க, சமத்துவ, சமரச , அன்பு பிரச்சாரத்தை நடத்துவோம்.

//ஒருவர் தெய்வத்தை வணங்குவது என்றால் என்ன, அந்த தெய்வத்தை நினைத்து வேண்டுவது, அந்த தெய்வத்திடம் மனக் குவிப்பு செய்வது என்பதே. வழிபாடாக இருந்தால் அதற்க்கு மனக் குவிப்பு வேண்டாமா? மனக் குவிப்பு இல்லாமல் எப்படி வழிபாடு செய்ய முடியும்? வேறு ஏதோ ஒரு சிந்தனையை வைத்துக் கொண்டு தெய்வத்தின் முன் நிற்ப்பதோ, முழங்கால் போடுவதோ வழிபாடு ஆகுமா? //
இதுதான் உருவவழிபாட்டின் முதல் பிரச்னை.
நீங்கள் தெய்வத்தை சுருக்கி ஒரு பொருளாக வைத்தபின் அந்த பொருளின்மேல் மனதை குவிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி குவிக்காவிட்டால் உங்கள் பிரார்த்தனை கடவுளை அடையாது என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள், உங்கள் மனதை குவித்து உங்கள் எண்ணங்களை ப்ரார்தனைகளாய் கடவுளிடம், செலுத்த பார்கிறீர்கள்.
நாங்கள், தேவனால் அனைவரது உள்ளங்களையும் அறிய முடியும் என்று நம்புகிறோம். அவர் சர்வ வல்லவர் என்று நம்புகிறோம். அதனால் எங்களுக்கு எங்கள் பிரார்த்தனையில் மனகுவிப்பும் தேவை இல்லை, அந்த மனக்குவிப்புகாக ஒரு விக்கிரகமும் தேவை இல்லை. என்னை பொறுத்தவரை, தொலைபேசியில் பேச எந்த அளவுக்கு மனக்குவிப்பு தேவையோ அந்த அளவு மனக்குவிப்பு ஒரு நல்ல பிரார்த்தனைக்கு போதுமானது.
வேதம் கூறுகிறது “ஆவியோடும், உண்மையோடும் அவரை தொழுதுகொள்ளுங்கள்” என்று. இதில் மனக்குவிப்பு இடம் பெறவே இல்லை.

Hard Truth

உங்களின் வழிபாட்டை இகழவோ, தவறு என்று சொல்லவோ, வெறுக்கவோ இல்லையே.

நாங்கள் உருவ வாழிபாடுதான் ஒரே வழி என்று சொல்லவில்லையே.

நீங்கள் மனக் குவிப்பு செயுங்கள், அல்லது மனக் குவிப்பு இல்லாமல் வழி படுங்கள், நாங்கள் உங்களை ஒன்றும் சொல்லவில்லையே.

உங்களுக்கு தொலைபேசியில் பேசும் அளவுக்கு மனக் குவிப்பு போதுமானால், அதை நாங்கள் குறை கூறவில்லை.

இன்னும் அதிக மனக் குவிப்பு செய்ய விரும்புபவன் செய்து கொள்ளட்டும்.

நீங்கள் ஆவியில் வழி படுங்கள் , நாங்க்கள் அதிலும் கலந்து கொண்டு நல்லிணக்கத்தைக் காட்டுகிறோம். நாங்கள் இந்த அளவுக்கு சொல்லும் போது, நீங்கள் ஏன் தேவை இல்லமால் பிரச்சினை செய்கிறீர்கள், உருவத்தை வழி படச் சொல்லி உங்களைக் கட்டாயப் படுத்தவில்லை. பிரச்சினை உங்களுக்குத்தான், உங்களால உருவ வழிபாட்டை சகித்துக் கொள்ள இயலவில்லை.

ஒருவன் உருவத்திலே மனத்தைக் குவித்து வணங்கினால் உங்களுக்கு என்ன கோராமை?

//நாங்கள் யாரை என்ன துன்புறுத்துகிறோம், நாங்கள் தான் எல்லோரின் வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம் என்று சொல்கிறோமே. //
நீங்கள்தான் RSS போன்ற கும்பல்களை வைத்துகொண்டு அடாவடி செய்கிறீர்களே? ஆலய உடைப்பு செய்கிறீர்களே. கொலைகளை செய்கிறீர்களே.

//கொன்றது யார், குருசெடு போர்களை நடத்தி பல கொடிக்கனக்கானவரைக் கோடிக் கணக்கானவரைக் கொன்று குவித்தனர்.//
குருசெடு போர்களின் ஆதரவாளன் நான் அல்ல. இப்போதைய பெரும்பான்மையான கிறிஸ்துவர்களும் அதற்க்கு ஆதரவானவர்கள் அல்ல. ஏசுவும் ஆயுதம் எடுத்து போர் புரிய சொல்லவில்லை.
ஆனால், நீங்கள் குறிப்பிடும்படி குருசெடு போர்கள், கிறிஸ்துவத்தை பரப்ப நடந்த போர்கள் கிடையாது. முன்பு கிருஸ்துவநாடாக இருந்த இடங்களை இஸ்லாமியர் கைப்பற்றினர். அங்கே இஸ்லாத்தை வாளால் பரப்ப முயற்சி நடந்தது. அவற்ற்றை தடுக்கவே, இஸ்லாமிய ஆக்கிரமிப்பை வெளியேற்றவே குருசெடு போர்கள் நடைபெற்றது.

//யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை, நான் சாட்சி குடுக்கிறேன், அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.//
//இதிலே உண்மை என்னவென்றால், ஒரு தரப்பாரும் கடவுளை பார்க்கவில்லை.//
யாரும் பார்க்கவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?
நீங்கள் ஒரு நடுநிளையாலனை போல காட்டிக்கொள்ள நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நடுநிலையாளன் அல்ல என்று உங்கள் வார்த்தைகள் காட்டுகிறது.
ஒரு நடுநிலையாளன், “அவர்கள் பார்த்தும் இருக்கலாம், பார்க்காமலும் இருக்கலாம்” என்றே கூறுவானே தவிர உங்களை போல பேசமாட்டான்.
யாரும் பார்க்கவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? உங்கள் வார்த்தைகள் நீங்கள் நடுநிலையில் இருந்து பேசுவதாக காட்டவில்லை. நீங்கள் உண்மையாய் நடுநிலையில் இருந்து பேசினால், அவர்கள் பார்த்து இருக்கலாம் அல்லது பார்க்காமலும் இருக்கலாம் என்றே கூறுவீர்கள். மற்றபடி, கற்பனை தேவன் என்றெல்லாம் கூறமாட்டீர்கள்.
Hard Truth

//உங்களின் வழிபாட்டை இகழவோ, தவறு என்று சொல்லவோ, வெறுக்கவோ இல்லையே. //
ஏன் எனில் உங்களின் ஒரு சாரார் அரூவ வழிபாடு செய்கிறார்களே. மேலும், மற்றவர் மேல் எங்களை போல் உங்களுக்கு அக்கறை இல்லை.

//நாங்கள் உருவ வாழிபாடுதான் ஒரே வழி என்று சொல்லவில்லையே//
நல்லது.

//பிரச்சினை உங்களுக்குத்தான், உங்களால உருவ வழிபாட்டை சகித்துக் கொள்ள இயலவில்லை.//
அடுத்தவன் கேட்டுக்கு செல்வதை சகித்துக் கொள்ள இயலவில்லை.
Hard Truth

திரு. Hard Truth அவர்களே,

கிறிஸ்துவர்கள் பிரேயர் செய்யும் போது அவர்கள் மனதில் இயேசுவை நினைத்துக் கொள்கிறார்களா இல்லையா?

நீங்கள் பிரேயர் செய்யும போது உங்களின் மனதில் இயேசு கிறிஸ்துவை நினைக்கிறீர்களா இல்லையா?

அவர்களுக்கு எந்த கேட்டின் பாதையிலும் போகவில்லை. அவர்கள் பிறரின் வழிபட்டு முறைகளை நிந்திக்கவோ, வெறுக்கவோ இல்லை.

பிற மதத்தவரின் வழிபாட்டு முறைகளை இகழந்து கண்டிக்கும் உங்களின் செயலை நியாப் படுத்த , எல்லா மக்களும் உங்கள் ஒருவரின் மதத்தை மட்டுமேபின் பற்ற வேண்டும் என்கிற உங்களின் மத வெறியை மறைக்க வசனங்களால் அளப்பிப் பார்க்கிறீர்கள்.

அவர்களின் பாதை நிச்சயமாக கேட்டுக்கு போகும் பாதை அல்ல, அவர்கள யாரையும் வெறுக்கவோ, தீங்கு நினைக்கவோ இல்லை.

நீங்கள் ஆதாரமே இல்லாத கோட்பாடுகளை வைத்துக் கொண்டு எல்லோரையும் அதட்டி மிரட்டிப் பார்க்கிறீர்கள்.

இன அழிப்புக் கொள்கைகளை நியாயப் படுத்துவது, வெறுப்பு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுவது, இவைதான் கேட்டுக்கு செல்லும் பாதைகள்.

//நீங்கள் பிரேயர் செய்யும போது உங்களின் மனதில் இயேசு கிறிஸ்துவை நினைக்கிறீர்களா இல்லையா?//
Thinking of Christ. Not of any image. No visualizations.

Hard Truth

சகோ. திருச்சிக்காரர் அவர்களே,
.
எல்லா மதத்தினரும் தனது கடவுள் இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததால்,அவர் (இந்த பிரபஞ்சத்தை விட ???)மிகப் பெரியவர், எல்லையில்லாதவர், என்றே கூறுகின்றனர்.அந்த எல்லையில்லாத கடவுள் இரண்டாகவோ, மூன்றாகவோ,பலவோ இருக்கமுடியாது என்பதை நாம் ஓரளவுக்கு அனுமானிக்க முடியும்.இந்த வகையில் எல்லையில்லாத கடவுள் ஒரே ஒருவர்தான் இருக்க முடியும் என்று திரு hard truth போன்ற படித்தவர்களும் புரிந்து கொள்ள முடியும்.ஒரே கடவுளையே வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர் என்பதைப் புரிய வைக்கமே முயன்று கொண்டிருக்கிறேன்.நான் இந்து மதத்தில் சொல்லப்பட்ட உருவமற்ற கடவுளை ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை.அனைத்தும் ஒன்றே என்று புரிய வைக்கவே முயன்றுகொண்டிருக்கிறேன்.

இந்த வகையில் நான் வுருவக் கடவுளை எள்ளளவும் குறைவாகக் கூறவில்லை.அத்வைதத்தை கூறிய சங்கரரே உருவமுள்ள கடவுளை வணங்கியிருக்கிறார்.சக்தியின் மேல் பல ஸ்லோகங்களை இயற்றியுள்ளார்.எண்ணற்ற சித்தர்கள், மகான்கள்,ரிஷிகள் போன்றோரும் உருவக்கடவுள் மூலமே கடவுளை உணர்ந்துள்ளனர்.அருவக் கடவுளை தியானிப்பது மிகக் கடினமே.மிஞ்சிப் போனார் விவேகானந்தர் கூறியது போல் பரந்த வெளியையும்,பரந்த ஆகயத்தையுமே நினைக்க முடியும்.கடவுள் உருவாகவும்,அருவாகவும் இருக்கிறார் என்பதை ராமகிருஷ்ணர் போன்ற பல மாகான்கள் உணர்ந்து கூறியிருக்கிறார்கள் .நானும் உருவக் கடவுளையே வணங்குகிறேன்.

///யூத மதத்தினர், இஸ்லாமியர்கள் இவர்கள் இருவருமே உருவமற்ற நிலையிலே மட்டுமே கடவுள் இருக்க முடியும் என்கிற ஒரு கருத்திலே மிக உறுதியானவர்கள்.///

ஆனால் அந்த உருவமற்ற இரண்டு மத கடவுளும் ஒருவரே என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. உருவமற்ற தங்கள் கடவுள் வேறு,மற்ற உருவமற்ற கடவுள் வேறு என்றே கருதினார்கள்.

நான் எல்லையிலாத கடவுள் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்பதை புரிய வைப்பதே எனது வழியாக இருக்கிறது.அதனால் நான் எழுதியது உருவக்கடவுளை குறைத்துக் கூறுவது போல் கருதினால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பிற்கும் , மதிப்பிகுமுரிய சகோதரர் திரு. தனபால் அவர்களே,

உங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

உருவமற்ற கடவுளாகவோ, அதே கடவுள் உருவமுள்ள எடுத்த நிலையிலே இருப்பதாகவோ கருதிக் கொள்ளலாம், அந்தக் கருத்தாக்கத்தை முன் வைக்கலாம்.

ஆனால் முதலில் கடவுள் என்னும் கோட்பாடே அனுமானம் தான் என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். வெறும் அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை சொல்பவர்கள், அமைதியாக தங்கள் கருத்தை சொல்லலாமே தவிர, நீ இப்படித் தான் வணங்க வேண்டும், இன்னொரு முறையில் நீ வணங்குவதை நான் ஆட்சேபிக்கிறேன் என்று எல்லாம் சொல்ல கூடாது.

நான் சொல்லும் முறையில் வணங்குவதுதான் உண்மையான வழி என்று அடாவடி செய்பவர்கள், அது உண்மை என்பதற்கான நிரூபணத்தை ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். ஆதாரமுமில்லை, நிரூபணமும் இல்லை என்னும் போது அமைதியாக அடுத்தவரை இகழாமல் தங்கள் முறையில் வழி பட வேண்டும்.

லாஜிக் அடிப்படையில் எல்லையில்லாத கடவுள் ஒருத்தராகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. எல்லையில்லாதது என்றால், எங்கும் ஆக்கிரமித்து இருக்கிறது, இரண்டாவது என்று ஒன்று எப்படி இருக்க முடியும் என்று கேட்டால், காற்று மண்டலம் எல்லையில்லாமல் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால்( Its known that atmosphere is limited, but we consider a limitless atmosphere) அதில் ஆக்சிஜனும் எல்லை இல்லாமல் இருக்கிறது, நைட்ரஜனும் எல்லை இல்லாமல் இருக்கிறது.

இந்து மதம் ஏகம் சத்விப்ரா , பஹுதா வதந்தி என்று சொல்லி இருக்கிறது. நீங்களும் நல்லிணகத்தை உருவாக்க நேர்மையாகவும், சின்சியராகவும் முயல்கிறீர்கள். அதைப் பாரட்டுகிறேன்.

அதே நேரம் நல்லிணக்கம் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். மனிதத்தை வாழ வைக்க நல்லிணக்கத்தை ஓரளவாவது அனுசரிக்க வேண்டியது எல்லோருக்கும் அவசியமாகிறது.

உருவ வழிபாடு செய்யச் சொல்லி யாரையும் நாம் கட்டாயப் படுத்தவில்லை. உருவ வழிபாடு செய்யும் முறையை வெறுக்க வேண்டிய அவசியமில்லை என்பதையே சொல்கிறோம்.

உருவ வழிபாட்டை எதிர்க்கிறேன் என்று வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதை விட்டு, மக்களிடையே மோதலை உருவாக்குவதை அனுமதிக்க முடியாது.

பவுத்தர்கள் தியானம் செய்யும் போது, ஒரு பெரிய வட்டமான உலோகத் தகட்டில் ஒருவரை ஒலி எழுப்ப வைப்பார்கள். சில நொடிகள் கழித்து மீண்டும் ஒலி எழுப்பப் படும். அந்த ஒளியிலே மனத்தைக் குவித்து தியானம் செய்வது அவர்களின் மத வழிபாட்டு முறைகளில் ஒன்று. அவரவருக்கு கன்வீனியனட் ஆன முறையிலே அவரவர்கள வழி பட சுதந்திரம் உண்டு. காரணமில்லாமல் இகழ வேண்டியதில்லை.

அமைதியாக வழிபாடு நடத்துபவர்களின் வழிபட்டு சுதந்திரத்தை அழிக்க அடாவடி காட்டு மிராண்டி தனம் செய்பவர் செய்யும் செயல்பாட்டுக்கு பல்லக்கு தூக்க முடியாது. உருவமற்ற நிலையை வழிபாடு செய்வதை நான் ஆட்சேபிக்கவில்லை, அவர்களின் வழிபாட்டில் கலந்து கொள்ள, நல்லிணக்க அடிப்படையில் மனப் பூர்வமாக பங்கெடுக்கத் தயார். நீங்கள் மன்னிப்புக் கேட்கிறேன் என்று எல்லாம் எழுத வேண்டியதில்லை. உங்களின் நல்லிணக்க முயற்ச்சியைப் பாராட்டுகிறேன்.

நண்பர் திருச்சிக்காரர்,
நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்கு ஒத்து வராதவர்களை விரோதியாக பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. நாங்கள் ஏன் உருவ வழிபாட்டை ஆமோதித்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மற்றவர் சுதந்திரத்தை பற்றி பேசும்போது இருக்கும் வேகம், கிருஸ்துவர்கள் சுதந்திரம் மீது இல்லையே. எனக்கு உருவவழிபாடு ஒரு தீமையான விஷயமாக தெரிகிறது. உருவவழிபாட்டில் நான் கலந்துகொள்ளமாட்டேன். அது என் சுதந்திரம் இல்லையா? நாங்கள் ஏதாவது கோவிலுக்கு போய் வழிபாட்டை தடுத்தோமா? அல்லது வீட்டுக்குள் உருவவழிபாடு செய்பவருடன் பிரச்சனை செய்தோமா? அரசியல் செய்வதற்காக, சிலர் அப்படி செய்து இருக்கிறார்கள். அதற்க்கு கிறிஸ்த்துவர்கள் பொறுபேற்க முடியாது. அரசியல்வாதிகள் இந்துத்துவம் பெயரைகொண்டும் பல செயல்கள் செய்கிறார்கள். பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இந்துக்கள் அனைவரும் பொறுபேற்க முடியுமா?
புகைப்பிடிப்பது ஒரு தவறான விஷயம், அறிவியல் ரீதியாக இதை நிரூபிக்க முடியும். புகைபிடித்தல் ஒருவருக்கு மட்டும் அல்ல பலருக்கும் அது பிரச்சனைதான். ஆனால், புகைபிடிக்கும் ஒருவரை பார்த்து “நீங்கள் இதை நிறுத்தவேண்டும்” என்று நாம் சொல்ல முடிகிறதா? ஆனால் அந்த நபர் நமக்கு தெரிந்தவராக இருந்தால் பேச்சுவாக்கில் அது தவறு என்று நான் சொல்கிறேன், ஆனாலும் அதை அழுத்தமாய் சொல்லமுடிவதில்லை. ஏனென்றால் அது அவர் தனிப்பட்ட விஷயமாக உள்ளது.
இப்போதைய உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவியல் ரீதியாக என்னால் நிரூபிக்க முடியாத ஒருவவழிபாட்டு பிரச்னையும் ஏறக்குறைய அப்படிதான். (உங்கள் வழிப்பாட்டை புகைப்பிடித்தலுக்கு ஒப்பிட்டதற்கு என்னை மன்னிக்கவும், உங்களை புண்படுத்துவது என் நோக்கம் அல்ல, என் நிலையை புரியவைக்கவே நான் பாடுபடுகிறேன்). எனக்கு பழக்கபட்டவருக்கு, நான் நல்லது என்று எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன். அதை எடுத்துகொள்வதும், மறுப்பதும் அவர் இஷ்ட்டம். என் கருத்தை அவர் ஏற்க்கவில்லை என்று நான் அவரை பகைக்கமாட்டேன், இகழமாட்டேன். என் குறைகளை நிவர்த்தி செய்வதே எனக்கு பெரிய வேலையாக உள்ளது.
உங்கள் கருத்துக்கள் கிருச்த்துவர்களை, முரடர்களை போலும், கொலை பாதகர் போலும் காட்டுகிறது.
உங்களுடன் சமாதானமாகவும், அன்போடும் பழக உண்மையில் என் மனம் ஏங்குகிறது. நாம் சகோதரர்களே.
நண்பர் தனபாலுக்கு, அவர் அன்புக்கு என் வணக்கம்.
அசோக்

Dear Mr. Ashok,

//நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்கு ஒத்து வராதவர்களை விரோதியாக பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. நாங்கள் ஏன் உருவ வழிபாட்டை ஆமோதித்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? //

இது என் மீது சுமத்தப் படும் அபாண்டமான குற்றச் சாட்டே. நான் யாரையும் விரோதியாகக் கருதவும் இல்லை. எந்த ஒரு வழிப்பாட்டையும் எதிர்க்கவும் இல்லை. என்னுடியி இஸ்லாமிய நண்பர்களுடம் நான் மசூதிக்கு சென்று நல்லிணக்க அடிப்படையில் வழி பட்டு இருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்க்ளால் ரமதான் நோன்பு தொடங்க இருக்கிறது. அதிலும் முழுமையாகப் பங்கெடுப்பேன். கிறிஸ்துமஸ் விழாவிலும் பங்கெடுப்பேன்.

//மற்றவர் சுதந்திரத்தை பற்றி பேசும்போது இருக்கும் வேகம், கிருஸ்துவர்கள் சுதந்திரம் மீது இல்லையே.//\

கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறேன்.நீங்கள் சர்ச்சில் பிரேயர் நடத்துங்கள், யாரும் தொல்லை செய்யாதவாறு நான் வெளியில் இருந்து பாதுகாப்பு செய்கிறேன்.

ஆனால் நீங்கள் கேட்கும் சுதந்திரம் என்பது பிற மதத்தினரின் வழிபாட்டு முறையை எந்த வித காரணமும் இன்றி கண்டிக்கும், நிராகரிக்கும், இகழும் உரிமை- அதாவது மத நல்லினக்கத்திக் கெடுத்து, மதப் பூசலை உருவாக்கும் செயலை நீங்கள் உங்களின் சுத்தந்திரம் எனக் கருத்கிரீர்கள். நாகரிக சமுதாயம் அதை அனுமதிக்காது.

//எனக்கு உருவவழிபாடு ஒரு தீமையான விஷயமாக தெரிகிறது.//

என்ன தீமை, ஒரு தீமையும் இல்லை என்பதைக் கட்டுரையில் காட்டி இருக்கிறோம்.

அப்படி ஏதாவது தீமை இருக்கிறது என்று நீங்கள் கருதினால் அதை அறிக்கை செய்ய வேண்டும். அதை பகுத்தறிவு அடிப்படையில் ஆராய்ந்து உண்மையிலே தீமை இருக்கிறதா என்று ஆராய்வோம். தீமை எதுவும் காணப்படாத நிலையிலே வெறுமனே தீமையாக தெரிகிறது என்று சொல்வது, பிற மார்க்கங்களின் வழி பட்டை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் நீங்கள் இருப்பதையே காட்டுகிறது. எனவே நீங்கள் நாகரீகப் பாதைக்கு வந்து உனக்களித் திருத்திக் கொள்ள வேண்டும்.

பிற மதங்களின் வழி பாட்டை பொறுக்க முடியாமல் தவித்து, அவற்றில் தீங்கு இல்லாத நிலையிலும் தீங்கு இருப்பதாக ஆதாரம் இல்லாமல் வெறுப்பு பிரச்சாரம் செய்வதுதான் தீமையான செயல். தீமையை விட்டு நன்மைக்கு வாருங்கள்.

Its more appropriate to compare the cigerett smoking habit to your method of abusing the other religions worshipping methods due to your intolerance. In fact even that comparison is not accurate, we have better comparsion for religious fanaticism.

//நாங்கள் ஏன் உருவ வழிபாட்டை ஆமோதித்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மற்றவர் சுதந்திரத்தை பற்றி பேசும்போது இருக்கும் வேகம், கிருஸ்துவர்கள் சுதந்திரம் மீது இல்லையே. எனக்கு உருவவழிபாடு ஒரு தீமையான விஷயமாக தெரிகிறது. உருவவழிபாட்டில் நான் கலந்துகொள்ளமாட்டேன்.//

We dont insist you to join in idol worship, I have been writting that innumaerable number of times. We only tell you to not to hate the idol worship.

//நாங்கள் ஏதாவது கோவிலுக்கு போய் வழிபாட்டை தடுத்தோமா? அல்லது வீட்டுக்குள் உருவவழிபாடு செய்பவருடன் பிரச்சனை செய்தோமா? //

Many people are abusing the Gods of other religions. They are doing it in the street, approach the people and tell abuses of their Gods. They do it in our blog also.

//உங்களுடன் சமாதானமாகவும், அன்போடும் பழக உண்மையில் என் மனம் ஏங்குகிறது. நாம் சகோதரர்களே.//

Thank you I am alreday friendly with you, please dont abuse other religious practices without any reason, Please save the mankind.

//புகைப்பிடிப்பது ஒரு தவறான விஷயம், அறிவியல் ரீதியாக இதை நிரூபிக்க முடியும். புகைபிடித்தல் ஒருவருக்கு மட்டும் அல்ல பலருக்கும் அது பிரச்சனைதான். ஆனால், புகைபிடிக்கும் ஒருவரை பார்த்து “நீங்கள் இதை நிறுத்தவேண்டும்” என்று நாம் சொல்ல முடிகிறதா? ஆனால் அந்த நபர் நமக்கு தெரிந்தவராக இருந்தால் பேச்சுவாக்கில் அது தவறு என்று நான் சொல்கிறேன், ஆனாலும் அதை அழுத்தமாய் சொல்லமுடிவதில்லை. ஏனென்றால் அது அவர் தனிப்பட்ட விஷயமாக உள்ளது.
இப்போதைய உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவியல் ரீதியாக என்னால் நிரூபிக்க முடியாத ஒருவவழிபாட்டு பிரச்னையும் ஏறக்குறைய அப்படிதான். (உங்கள் வழிப்பாட்டை புகைப்பிடித்தலுக்கு ஒப்பிட்டதற்கு என்னை மன்னிக்கவும், உங்களை புண்படுத்துவது என் நோக்கம் அல்ல, என் நிலையை புரியவைக்கவே நான் பாடுபடுகிறேன்). //

உருவ வழிபாட்டால் அறிவியல் ரீதியில் எந்த ஒரு தீங்கும் இல்லை. உருவ வழி பாட்டால் மனக் குவிப்பு முதலிய நன்மைகளே கிடைக்கிறதே அல்லாமல் எந்த ஒரு தீங்கும் இல்லை என்பதை லாஜிக் அடிப்படையில், பகுத்தறிவு ரீதியாக விவாததித்து கட்டுரை எழுதி இருக்கிறோம். உங்களின் மதப் பற்று, அதை ஒத்துக் கொள்ள விடாமல் அதைத் தடுக்கிறது. தொடர்ந்து இகழ்ச்சிப் பிரச்சாரத்தில் உங்களை ஈடுபட வைக்கிறது. படிக்கும் யாருக்கும் இது நன்றாகப் புரியும்.

திரு HARD TRUTH ,மற்றும் CHILLSAM அவர்களே,

///பல கோவில்களில் சிவலிங்கம் இருக்கிறது. சிவலிங்கம் எதை குறிக்கிறது? என் இந்து நண்பர்கள் கூறியது என்னவென்றால், அது சிவபார்வதியின் புணர்ச்சியே. இது ஒரு சிறு உதாரணம்தான்.
Hard Truth///

///ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட ///என்று CHILLSAM கூறுகிறார்.

திரு HARD TRUTH ,மற்றும் CHILLSAM

எல்லாமதத்தினரும் தன் கடவுளை எப்படி பக்தியுடன் வணங்குகிறார்களோ, அப்படியே இந்துக்களும் சிவனை லிங்க ரூபமாக வணங்குகிறார்கள்.

எண்ணற்ற சித்தர்கள், மகான்கள், நாயன்மார்கள், துறவிகள், சிவ பக்தர்கள் மற்றும் இந்துக்கள் இந்த சிவலிங்கத்தை ஜோதி சொருபமாக, இந்த பிரபஞ்சத்தை படைப்பவனாக, தந்தையாக வணங்குகிறார்கள்.

எத்தனையோ பேர் இந்த சிவலிங்கத்தை ,பக்தியுடன், ஆனந்தக் கண்ணீருடன், மயிர் சிலிர்க்க வைக்கும் அனுபவத்துடன்,உள்ளத்தை உருக வைக்கும் அனுபவத்துடன், வணங்கியிருக்கிறார்கள், வணங்குகிறார்கள்.

எத்தனை எத்தனை சித்தர்கள், மகான்கள், நாயன்மார்கள், துறவிகள், சிவ பக்தர்கள் இந்த சிவலிங்கத்தை பக்தியுடன் வணங்கி இறைவனுடன் இரண்டறக் கலந்திருக்கிறார்கள்.எத்தனையோ பேர் இந்த சிவலிங்கத்தை பக்தியுடன் வணங்கி நிர்விகல்ப்ப சமாதி அடைந்திருக்கிறார்கள்.

எத்தனையோ பேர் இந்த சிவ லிங்கத்தை வணங்கி காமம், கோபம், வெறுப்பு போன்ற தீய குணங்களை விட்டிருக்கிறார்கள்.

எத்தனையோ பேர் இந்த சிவலிங்கத்தை வணங்கி காமம் சிறிதும் இல்லாத தூய பிரம்மச்சர்ய வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

காம எண்ணம் உள்ளவனும் கூட, பக்தியுடன் சிவலிங்கத்தை வணங்கும் போது அந்த எண்ணம் அவனை விட்டு நீங்கிவிடுகிறது..

அப்படிப் பட்ட சிவலிங்கத்தைப் பார்க்கும் எந்த இந்துவிற்கும் காம இச்சை தூண்டப் படுவதில்லை என்பதை உங்களுக்குத் தெரியப் படுத்த விரும்புகிறேன்.

மேலும், இந்த பிரபஞ்சம், மற்றும் உயிர்களின் படைப்புத் தத்துவமே லிங்க தத்துவம்.

சாங்கியத் தத்துவத்தின்படி கடவுள் (புருஷன்) பிரகிருதியிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார்.பிரகிருதி என்பது தோன்றா நிலையிலுள்ள ஆதி பிரபஞ்சம்.அதாவது இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அணுத் தொகுதிகளால் உருவானதே .அந்த அணுக்களுக்கு முந்தைய நிலையே, எந்தவித இயக்கமும் இல்லாத நிலையே, இந்த பிரபஞ்ச ஒடுக்கத்திற்கும், விரிவிற்கும் இடைப்பட்ட நிலையே “பிரகிருதி” ஆகும்.கடவுள் இந்த பிரகிருதியில் கலந்து, இந்தப் பிரகிருதியை வெளிப்பட,அல்லது விரியச் செய்ததன் மூலமே இந்த பிரபஞ்சமும், உயிர்களும் உருவானது.அதனால் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரிலும்,ஒவ்வொரு அணுக்களிலும் கடவுள் இரண்டறக் கலந்து இருக்கிறார்.அதாவது கடவுளும் , பிரகிருதியும் இரண்டறக் கலந்த நிலையே இந்த பிரபஞ்சமும், உயிர்களும்.

இந்த படைப்பு பற்றிய சாங்கிய தத்துவத்தையே, புராணங்கள் மூலம் விவரிக்கப் படுகிறது.கடவுள் (புருஷன்) சிவன் என்றும் , இந்த பிரகிருதியையே சக்தி எனவும், கடவுள் – பிரகிருதி சேர்ந்த நிலையிலேயே இந்த பிரபஞ்சமும், உயிர்களும் தோன்றியது என்ற படைப்பு பற்றி சாங்கிய தத்துவத்தை, புராணங்கள் கூறுகின்றன.இது தான் லிங்க தத்துவம்.

நமது உடல் என்பது பிரகிருதியால் உருவானது. அதில் ஆன்மா என்பதே புருஷன் (கடவுள்) .இதுவே படைப்புப் பற்றிய சாங்கிய தத்துவம்.

கடவுள் ஆண், பெண் பால் வேறுபாடற்றவர். தோன்றாத நிலையில் உள்ள பிரபஞ்சமான பிரகிருதியும் பால் வேறுபாடற்றதே.கடவுள், பிரகிருதி ஆகிய இரண்டும் கலந்ததே இந்தப் பிரபஞ்சமும் உயிர்களும்.

இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட தத்துவத்தை குறிக்கும் சிவலிங்கம் தத்துவத்தை தவறாக புரிந்துகொண்டதாலேயே இந்த ஆபாச கருத்து உருவாக்க்கப் பட்டுள்ளது.

இந்த லிங்க தத்துவம் ஆபாசமான கருத்தாக மாறியதற்குக் முக்கிய காரணம் ,பௌத்தர்கள் காலத்தில் வாழ்ந்த ஆபாச கலாச்சாரம் கொண்ட,பண்பாடற்ற இனத்தவர்களே ஆகும்.

பௌத்தர்கள் காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த அனாகரீகமானவர்களைப் பற்றி விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்.

”பிற நாட்டு இனத்தினர் தங்கள் விசித்திரமான மூட நம்பிக்கைகளோடும், பழக்க வழக்கங்கலோடும், கூட்டம், கூட்டமாக உள்ளே நுழைந்தனர்.இதை எண்ணிப் பாருங்கள் துணி உடுத்தக் கூட போதிய பண்பாடு இல்லாதவர்கள், அழுகிய இறைச்சியை தின்பவர்கள் இத்தகையோர், உள்ளே நுழைந்தனர்.அவர்களுடன் நரபலி, மூட நம்பிக்கை, கொடூர வழிபாடுகள் முதலானவையும் தொடர்ந்து வந்தன.” -சுவாமி விவேகானந்தர் ,ஞான தீபம்,7 .பௌத்தர்கால இந்தியா ,பக்கம்-241

“பௌத்த மதத்தின் எழுச்சியால் நேர்ந்த விபரீதங்களை விவரிப்பதற்கு எனக்கு நேரமோ, விருப்பமோ இல்லை.மிகக் கொடூரமான சடங்குகளும், எந்த மனிதனும் கைகளும் இதுவரை எழுதாத, எந்த மூளையும் இதுவரை சிந்திக்காத, மிகப் பயங்கரமான, மிக ஆபாசமான நூல்களும், மதத்தின் பெயரால் இதுவரை செய்யப்பட்டவற்றுள் சகிக்க முடியாத அளவுக்கு மோசமான சடங்குகளும் எல்லாமே, வீழ்ச்சியுற்ற புத்த மதத்திலிருந்து தோற்றுவிக்கப் பட்டவைதான்.”-சுவாமி விவேகானந்தர்.ஞானதீபம்-5 ,இந்திய ரிஷிகள் , பக்கம்.185

மேலும் இந்த சிவலிங்கம் பற்றிய ஆபாசக் கருத்தை விவேகானந்தர் மறுத்துக் கூறியுள்ளார்.

“சிவலிங்கம் இனவிருத்தி உறுப்பின் சின்னம் என்பது, புத்த மதம் அழியத் தொடங்கிய போது, இந்தியாவின் பெருமை குறையத் தொடங்கிய போது யோசனையற்ற முறையில் கூறப்பட்ட கொள்கை ” -சுவாமி விவேகானந்தர்.ஞானதீபம் 11 ,பக்கம்- 467 .

(சகோ.திருச்சிக் காரரும் இதையே தான் கூறியிருந்தார்.

/// ஆண் பெண் புணர்ச்சி யைக் காட்டும் சிற்பங்கள் புத்தமதம் வீழ்ச்சி அடைந்தகாலத்தில் , அதை நிலை நிறுத்த உருவாக்கப் பட்ட ///)

எனவே,புருஷன்- பிரகிருதி மூலம் நிகழும் பிரபஞ்ச படைப்பைக் குறிக்கும் லிங்க தத்தவத்தை பௌத்தர்காலத்தில் இருந்த பண்பாடற்ற, நாகரீகமற்ற மனிதர்களால் புரிந்து கொள்ளமுடியாமல் வெறும் ஆண், பெண் சேர்க்கையாக புரிந்து கொண்டு ஆபாசக் கருத்துக்களை உருவாக்கினர் என்பது விவேகானந்தரின் கருத்துக்கள் மூலம் தெளிவாக அறியமுடிகிறது.

இந்து மதத்திற்கு வேதங்களே அடிப்படை.வேதத்தில் உள்ள உண்மைகளையே, புராணங்கள் மூலம் காலத்திற்க்கேற்றவாறு விவரித்துக் கூறுகின்றனர்.அப்படி கூறும்போது புராணங்களின் ஏதாவது பகுதிகள், வேதங்களிலிருந்து வேறுபடும் போது, வேதங்கள் கூறுவதையே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது விதி.அதையே விவேகானந்தரும் கூறுகிறார்.

அதன்படி வேதத்தில் அதர்வண வேத சம்ஹிதையில் சிவலிங்கம் யூபஸ்தம்பமாக அதாவது யாகத் தூணிலிருந்து தோன்றியதாகவும், முதலும், முடிவும் அற்றதாகவும், நிலையான பிரம்மத்தின் வடிவமாகவும் கூறப்படுகிறது.லிங்க புராணமும் இதையே கூறுகிறது.

எனவே வேதத்தில் லிங்கம் பற்றி எந்த ஒரு ஆபாச புணர்ச்சிக் கருத்துக்கள் இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
இந்து மதத்திற்கு வேதங்களே அடிப்படை.எனவே வேதத்தில் இல்லாத லிங்கம் பற்றிய ஆபாசக் கருத்துக்கள்,ஆதாரமற்ற, அருவருப்பானவர்களின் கருத்துக்களே.

லிங்கம் என்றால் ஒரு அடையாளம், குறியீடு என்பதாகும்.குறிப்பாக நீள்வட்ட வடிவமே லிங்கமாகும்.தொடக்கம் முடிவில்லாத, அருவமாகவும் உருவமாகவும் உள்ள இறைவனை குறிக்க மிகச்சிறந்த வடிவம் லிங்க வடிவமே.அளப்பரிய சக்தியை பல காலம் தேக்கிவைக்க மிகச் சிறந்த வடிவம் லிங்க வடிவமே.சக்திவாய்ந்த அணு சக்தியையும்,பலகாலம் தேக்கி வைக்க, மிகச் சிறந்த வடிவம் லிங்க வடிவமே என்று அறிவியலார் அறிந்த காரணத்தாலேயே, அந்த லிங்க வடிவ அணு கொள்கலன்களையே அணு மின் நிலையங்களில் பயன் படுத்துகின்றனர்.இப்பிரம்பஞ்ச சக்தியின் ஆதிவடிவம் லிங்க வடிவமே.

சிவனை மட்டுமல்ல பல மகான்கள்,யோகிகள், சித்தர்கள், ரிஷிகள் போன்றோர்களையும் லிங்க வடிவிலேயே வணங்குகிறோம்.அதனால் குறிப்பாக சிவனை குறிக்கும் லிங்கத்தை குறிப்பிட சிவலிங்கம் என்று கூறுகிறோம்.

எங்கும் நிறைந்திருக்கும்,ஆகாச தத்துவத்தையும், ஜோதிசொருபத்தையும் குறிக்கும் சின்னமாகவே லிங்கம் உள்ளது.பெரும் நெருப்போ, சிறிய தீ சுடறோ காற்றால் பாதிக்கப்படாமல்,ஆடாமல் அசையாமல் எரியும் போது லிங்க வடிவிலேயே காணப்படும்.

லிங்கம் என்பது தொடக்கமும் ,முடிவும் இல்லாத ,உருவாகவும்,அருவமாகவும் உள்ளதைக் குறிக்கும் ஒரு வடிவம்.

இந்த பிரகிருதியே சக்தி பீடமாக கூறப்படுகிறது. இந்த சக்தி பீடமானது வட்டம்,சதுரம் போன்ற வடிவில் இருக்கும்.மேலும் சில இடங்களில் விநாயகர், முருகர், மற்றும் சக்தி சிலை கூட இந்த ஆவுடையார் என்னும் சக்தி பீடத்தின் மேல் பிரதிஸ்டை செய்யப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

மேலும் லிங்கம், சக்தி பீடம் இல்லாமலேயே பல கோவில்களில் காணப்படுகிறது.

இஸ்லாத்தில் பாவங்கள் இருவகையாக உள்ளன. ஒன்று மனிதன் கடவுளுக்கு செய்யும் பாவம். இரண்டு மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவம்.
இதில் முதல்வகை என்னவென்றால்…

இறைவன் நமக்கு கட்டளையிட்டதை செய்யாமல் இருப்பது.

அதாவது.

இறைவனை வணங்காமல் இருப்பது.

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்யதிருப்பது.

இறைவன் கொடுத்த செல்வம் இருந்தும் பிறருக்கு தானம் செய்யாமல் இருப்பது.

நாம் நம் உடலுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறுவது( அதாவது தூங்காமல் எந்நேரமும் வழிபடுவதால் கண்ணிற்கு ஓய்வு கொடுக்க தவறுவது.)

இது போன்று பல…

இப்பாவங்கள் மனிதனுக்கும் இறைவனும் இடையில் உள்ளது, இதை இறைவன் நாடினால் மன்னிக்கலாம் அல்லது அதற்கான தண்டனையை வழங்கலாம்.

இரண்டாவது வகை பாவம் என்னவென்றால்

அடுத்தவரின் சொத்தை அபகரிப்பது.

அடுத்தவரின் வீண்பழி சுமத்துவது.

அடுத்தவருக்கு துன்பம் விளைவிப்பது.

தன் வியாபாரம் பெருக அடுத்தவரின் வியாபாரத்து சீர்குலைப்பது.

இது போன்று பல…

இப்பாவங்களை பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்ப்படாத வரையில் இறைவன் மன்னிக்கமாட்டார்.

முதலில் மனிதனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் பிறகு இறைவனிம் மன்னிப்பு கேட்டவேண்டும்

மன்னிக்கப்படாத பாவங்கள்

இறைவனுக்கு இணை கற்பிப்பது.

பெற்றோருக்கு கொடுமை இழைப்பது.

அப்பாவியை கொலை செய்வது ( இதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனை மட்டுமே தீர்ப்பு)

பொய்சாட்சியம் சொல்வது. போன்றதாகும்

கற்பழிப்பது ( இதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனை மட்டுமே தீர்ப்பு)

அன்புக்குரிய சகோதரர் அப்துர் ரஹ்மான் இந்தியன் அவர்களே,

//இப்பாவங்களை பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்ப்படாத வரையில் இறைவன் மன்னிக்கமாட்டார்.//

உங்கள் கருத்திலே ஒரு லாஜிக் இருக்கிறது. யாருக்கு எதிராக பாவம் இழைக்கப் பட்டதோ அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறீர்கள். அதுவே இயற்கையான நியதி. I appreciate your stand.

அதோடு நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர் என்றே நினைக்கிறேன். அப்படி நம்பிக்கை உடையவராக இருக்கும் பட்சத்திலே, கடவுளுக்காக சில செயல்களை செய்யாமல் விட்டதாக கருதி அதற்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்பது உங்கள் சொந்த விடயம். அதை நான் ஆட்சேபிக்கவில்லை.

தொடர்ந்து நம்முடைய தளத்தில் வரும் கட்டுரைகளைப் படித்து கருத்து தெரிவித்து வாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

திரு அசோக் அவர்களே

உங்கள் நண்பர் புகைப்பிடிப்பதை தவறு என்று நீங்கள் சொல்வதாக கூறுகிறீர்கள்.ஆனால் உண்மையில் உங்கள் நண்பர் நெடுநாட்களாகப் உபயோகித்து வந்த BRAND ஐ தான் நீங்கள் தவறு என்று கூறி நீங்கள் உபயோகிக்கும் BRAND சிகரெட்டை கொடுத்து, இது அதைவிட சிறந்தது என்றல்லவா கூறுகிறீர்கள்???

மேலும் உங்கள் நண்பர் இந்திய தயாரிப்பில் உருவான பல்வேறு வகையான பீடி,சிகரெட்,சுருட்டு (குலதெய்வ,சித்தர்,உருவ,மற்றும் அருவ கடவுளை வணங்குவது) போன்றவற்றைப் பயன்படுத்துவராக இருந்தால், உங்கள் வெளிநாட்டுத் தயாரிப்பான ஒரே ஒரு BRAND சிகரெட்டை மட்டும் நீங்கள் தரும்போது அது அவருக்கு நன்மை தரும் என்று கருதுகிறீர்களா ???

///நண்பர் தனபாலுக்கு, அவர் அன்புக்கு என் வணக்கம்.
அசோக்///

உங்கள் அன்பு வணக்கத்திற்கு மிக்க நன்றி.

சகோ.தனபால்,
விக்ரகவழிபாடு யாருடைய விக்ரகத்தை வைத்து செய்தாலும் அது தவறுதான். அதனால், உங்கள் “புகைபிடித்தல்” உவமை என் கருத்துக்கு பொருந்தாது.
அன்புடன்,
அசோக்

திரு அசோக் அவர்களே,

///கிருஸ்துவ சபைகளே செய்தாலும் குற்றம் குற்றமே. சிலை வழிபாடு, வேதத்திற்கு புறம்பானது///
///விக்ரகவழிபாடு யாருடைய விக்ரகத்தை வைத்து செய்தாலும் அது தவறுதான்.///

இயேசு கிறிஸ்துவின் சிலையை சர்ச்சில் கிருஸ்தவர்கள் வணங்குகிறார்களே இது தவறு என்று கூற வருகிறீர்களா ? தெளிவு படுத்தவும்.

//இயேசு கிறிஸ்துவின் சிலையை சர்ச்சில் கிருஸ்தவர்கள் வணங்குகிறார்களே இது தவறு என்று கூற வருகிறீர்களா ? தெளிவு படுத்தவும்.//

That is also against bible.

Thanks,
Ashok

நண்பர் திருச்சிக்காரரே, நண்பர் தனபால் அவர்களின் எழுத்துக்கள் மட்டும் தடித்து காணப்படுவது எப்படி?

தனி கவனிப்பு அனைவருக்கும் கிட்டுமா?

//சிவலிங்கத்தைப் பார்க்கும் எந்த இந்துவிற்கும் காம இச்சை தூண்டப் படுவதில்லை //

நண்பரே, காம உணர்ச்சியைத் தூண்டுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை; இறைவனின் படைப்புத் திறனை ஆணுறுப்புடன் சம்பந்தப்படுத்தி வழிபடுகிறீர்களா இல்லையா..?

இங்கேயே இருவித கருத்து முன்வைக்கப்படுகிறது; ஒன்று, உயிர்கள் தோன்ற காரணமாக இருந்த இறைவனின் சின்னத்தை (ஆணுறுப்பை) விரசமாக பார்க்காமல் பக்தியுடன் பார்க்கவேண்டும் என்றும் மற்றது இது ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் (சிவசக்தி) இணைந்த நிலை தன்மை தத்துவமே- அதாவது பெண் குறியினுள் பார்க்கும் பார்வையில் உன்னத படைப்பின் தத்துவம் என்றும் கூறப்படுகிறது;

இதில் எது உண்மை?

பரிசுத்த பரம் பொருளான மெய்ப் பொருளை தேடியடைந்து முக்தி பெறுவீர்..!

(காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம்…)

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

// இயேசு கிறிஸ்துவின் சிலையை சர்ச்சில் கிருஸ்தவர்கள் வணங்குகிறார்களே இது தவறு என்று கூற வருகிறீர்களா ? தெளிவு படுத்தவும்…//

நிச்சயமாக இது தவறு..!

இயேசுவானவர் தம்மை சிலையாகச் செய்து வணங்கச் சொல்லி யாருக்கும் கட்டளையிடவில்லை;தமது சீடர்களுக்கும் தமது தாயை வணங்கச் சொல்லி கட்டளையிடவில்லை;

அப்படியானால் இது எங்கிருந்து பரவி வந்தது?
இது பாபிலோனிய கிரேக்க ரோம சாம்ராஜ்யங்களின் பாரம்பரிய கதை மற்றும் திருவிழா கூத்துகளின் தொடர்பான காரியமாகும்; நாடு பிடிக்கும் சாம்ராஜ்யமான ரோமர்கள் அந்த காலத்தில் மிக வேகமாக பரவி வளர்ந்து வந்த கிறித்தவ மார்க்கத்தை அழிக்கச் செய்த பிரித்தாளும் சூழ்ச்சியே இது..!

அதன்மூலம் பக்தி வேடமிட்டு உலகை ஆக்கிரமித்தனர்;அவர்கள் நிகழ்த்திய சிலுவைப் போர்களுக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது வரலாறு.

சகோ.அசோக் அவர்களே,

///சகோ.தனபால்,
விக்ரகவழிபாடு யாருடைய விக்ரகத்தை வைத்து செய்தாலும் அது தவறுதான். அதனால், உங்கள் “புகைபிடித்தல்” உவமை என் கருத்துக்கு பொருந்தாது///

நீங்கள் உருவ வழிபாட்டை புகைப் பிடித்தளுடன் ஒப்பிடீர்கள்.இப்போதுள்ள இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய, புத்த போன்ற பிரபலமான மதங்களில் இந்து மதத்தில் மட்டுமே உருவ வழிபாடு வெளிப்படையாக உள்ளது.அதனால் நீங்கள் கூறும் உருவ வழிபாடு தவறு என்பது இந்து மதம் தவறு என்று தான் வெளிப்படையான பொருள்.அதனால் நீங்கள் கூறிய புகைப் பிடித்தல் உவமை இந்து மதத்தை குறிப்பிடுவதாகவே கருதுகிறேன்.நீங்கள் உங்கள் நண்பரிடம் உருவ வழிபாட்டை தவறு என்று கூறுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை.ஏசுவைப் பற்றியும், கிருஸ்தவ மதத்தைப் பற்றியும் கூறி இயேசுவை ஏற்றுக் கொள்ள, அதாவது கிருஸ்தவ மதத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறீர்கள்.அதனால் நான் கூறிய BRAND சிகரெட் உவமை உங்கள் புகைப்பிடித்தல் உவமையுடன் பொருந்துவதாகவே கருதுகிறேன்.

நண்பர்கள் திரு HARD TRUTH மற்றும் திரு CHILLSAM அவர்களே,
//இயேசு கிறிஸ்துவின் சிலையை சர்ச்சில் கிருஸ்தவர்கள் வணங்குகிறார்களே இது தவறு என்று கூற வருகிறீர்களா ? தெளிவு படுத்தவும்.//
That is also against bible.///_HARD TRUTH
///நிச்சயமாக இது தவறு..!
இயேசுவானவர் தம்மை சிலையாகச் செய்து வணங்கச் சொல்லி யாருக்கும் கட்டளையிடவில்லை;தமது சீடர்களுக்கும் தமது தாயை வணங்கச் சொல்லி கட்டளையிடவில்லை///_CHILLSAM

கிருஸ்தவர்கள் மேரி மாதாவின் உருவ சிலையையோ, இயேசு கிறிஸ்துவின் உருவ சிலையையோ, வணங்குவது நிச்சயமாக தவறு என்றும், பைபிளில் அவ்வாறு கூறப்படவில்லை என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி.
அப்படி என்றால் பெரும்பான்மையான கிருஸ்தவர்கள் வணங்கும் மேற்கூறிய உருவ வழிபாட்டை அல்லவா முதலில் நீங்கள் சரி செய்ய வேண்டும்.??? கிருஸ்தவர்களிடம் அல்லவா முதலில் மாதாவின் உருவ சிலையையோ, இயேசு கிறிஸ்துவின் உருவ சிலையையோ, வணங்குவது பைபிளின் படி தவறு என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.அப்படி செய்ய நீங்கள் எதுவும் முயற்சி செய்துவருகிரீர்களா???

நண்பர்.CHILLSAM அவர்களே,
///நண்பரே, காம உணர்ச்சியைத் தூண்டுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை;///
/// – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் ///-என்று நீங்கள் தான் கேள்வி எழுப்பியிருந்தீர்கள்..அதற்க்கு சிவலிங்கம் எந்த ஒரு அருவருப்பான இச்சியையும் தூண்டுவதில்லை என்று கூறியிருக்கிறேன்.ஆனால் இப்பொழுது அதுவல்ல பிரச்சனை என்கிறீர்கள்,
///

இறைவனின் படைப்புத் திறனை ஆணுறுப்புடன் சம்பந்தப்படுத்தி வழிபடுகிறீர்களா இல்லையா..?///
இதற்க்கான பதிலை ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.மீண்டும் கூறுகிறேன்.இந்துக்களில் 99 % பேர் அவ்வாறு வணங்குவதில்லை என்பதை தெளிவு படுத்திக்கொள்கிறேன்.எனினும் வட இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட முறையான தாந்திரிய வழியைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே இவ்வாறு வழிபடுகிறார்கள்.
ஆனால் இந்த கருத்தோ, வழிபாடோ வேதத்தில் கூறப்படவில்லை என்பதை மீண்டும் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.உங்களுக்கு எப்படி பைபிள் நிருபனமோ அவ்வாறே எங்களுக்கு வேதமே நிருபனமாகும்.சிலுவை வழிபாடும்,இயேசு கிறிஸ்துவின் சிலை வழிபாடும் எப்படி பைபிளில் சொல்லப்படாமல் ஆனால் பெரும்பாலான கிருஸ்தவர்கள் கடைப் பிடிக்கிறார்களோ, அவ்வாறே இந்த வழிபாடும் வேதத்தில் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட 1 % க்கும் குறைவாக தாந்திரிய வழியைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே அவ்வாறு வணங்குகிறார்கள்.
இந்த 1 % க்கும் குறைவான தாந்திரிய வழியைப் பின்பற்றுபவர்களைத் தவிர மற்ற 99 % இந்துக்கள் சிவனையே லிங்க உருவத்தில் வணங்குகிறார்கள்.எந்த வேதத்திலும்,,சைவ சித்தாந்தங்கள் மற்றும் சித்தர் பாடல்களிலும் எதிலும் இவ்வாறு கூறப்படவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்..
பைபிளில் கூறப்படாத மேரி மாதா உருவ வழிபாடு, இயேசு கிறிஸ்து உருவ வழிபாடு, சிலுவை உருவ வழிபாடு போன்றவை எப்படி பாபிலோனிய, கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்களின் பாரம்பர்ய தொடர்பால் நிகழ்ந்தது என்று கூறுகிறீர்களோ ,அதே போல் தான் வேதத்தில் இல்லாத தாந்திரிய முறை லிங்க வழிபாடு, பௌத்தர்கள் காலத்தில் இந்தியாவிற்குள் வந்த வரம்பற்ற முறையில் உறவு கொள்ளும்,நாகரீகமற்ற நிர்வாணக் கூட்டமே தங்கள் பாரம்பர்ய சிந்தனையைப் புகுத்தி லிங்க தத்துவத்தை தவறாகப் பொருள் கொண்டனர்.

//… இந்த படைப்பு பற்றிய சாங்கிய தத்துவத்தையே, புராணங்கள் மூலம் விவரிக்கப் படுகிறது;கடவுள் (புருஷன்) சிவன் என்றும்,இந்த பிரகிருதியையே சக்தி எனவும்,கடவுள் – பிரகிருதி சேர்ந்த நிலையிலேயே இந்த பிரபஞ்சமும்,உயிர்களும் தோன்றியது என்ற படைப்பு பற்றி சாங்கிய தத்துவத்தை, புராணங்கள் கூறுகின்றன;இது தான் லிங்க தத்துவம். //

//இந்த 1 % க்கும் குறைவான தாந்திரிய வழியைப் பின்பற்றுபவர்களைத் தவிர மற்ற 99 % இந்துக்கள் சிவனையே லிங்க உருவத்தில் வணங்குகிறார்கள்.//

//லிங்கம் என்றால் ஒரு அடையாளம், குறியீடு என்பதாகும்.குறிப்பாக நீள்வட்ட வடிவமே லிங்கமாகும்.தொடக்கம் முடிவில்லாத, அருவமாகவும் உருவமாகவும் உள்ள இறைவனை குறிக்க மிகச்சிறந்த வடிவம் லிங்க வடிவமே.அளப்பரிய சக்தியை பல காலம் தேக்கிவைக்க மிகச் சிறந்த வடிவம் லிங்க வடிவமே.சக்திவாய்ந்த அணு சக்தியையும்,பலகாலம் தேக்கி வைக்க, மிகச் சிறந்த வடிவம் லிங்க வடிவமே என்று அறிவியலார் அறிந்த காரணத்தாலேயே, அந்த லிங்க வடிவ அணு கொள்கலன்களையே அணு மின் நிலையங்களில் பயன் படுத்துகின்றனர்.இப்பிரம்பஞ்ச சக்தியின் ஆதிவடிவம் லிங்க வடிவமே.//

உங்களது இந்த கருத்துக்களிலேயே எத்தனை முரண்பாடுகள் என்று நீங்களே கவனியுங்கள்;இவை ஒவ்வொன்றும் அங்குமிங்கும் கேள்விப்பட்டவைகளின் தொகுப்புதானே?

லிங்கம் என்பது நீள்வட்டமென்றால் நாம் வணங்குவது அப்படியல்ல;அது அரைவட்டமுமல்ல;நீள்வட்டமென்பது புதைந்த நிலையில் இருந்தால் அது மசூதியின் உச்சியைப் போலல்லவா இருக்கும்?

சிவன் என்று சொல்லப்படுபவரின் எந்த பகுதியை லிங்கம் குறிப்பிடுகிறது என்று சொல்லமுடியுமா?

அது சிவனின் ஒரு குறிப்பிட்ட உறுப்பைக் குறிக்குமானால் அந்த உறுப்பு எது?

படைப்புக் கடவுள் பிரம்மாவா,சிவனா?

சிவன் படைத்தவரென்றால் ஏன் துறவிகள்(..?) மசானக் கொள்ளை நடத்தி எரித்த பிணத்தின் சாம்பலைப் பூசிக் கொண்டு கஞ்சா அடித்துவிட்டு வெறித்தனமாக ஆடுகிறார்கள்?

// உங்களுக்கு எப்படி பைபிள் நிரூபண‌மோ அவ்வாறே எங்களுக்கு வேதமே நிருபனமாகும் //

இந்த கருத்துக்கு எதிராக மற்றுமொரு இந்து தளத்தில் வேதம் எங்களுக்கு முக்கியமல்ல,என்றும் இறைவன் என்பதே ஒரு கான்செப்ட் மட்டுமே இறைவன் இருப்பதை யாராலும் நிரூபிக்கமுடியாது என்று சிலர் சவால் விட்டனர்;மனசாட்சியுடன் யோசித்தால் நான் சொல்வது ஞாபகம் வரும்,அல்லது நான் சிரமப்பட்டு தேடித் தரவேண்டும்..!

எல்லாம் தெரியும்,ஆனா ஒண்ணும் தெரியாது;ஒண்ணும் தெரியாது ஆனா எல்லாம் தெரியும்..?

நன்றி தனபால் சார்..!

திரு CHILLSAM அவர்களுக்கு.

///உங்களது இந்த கருத்துக்களிலேயே எத்தனை முரண்பாடுகள் என்று நீங்களே கவனியுங்கள்;இவை ஒவ்வொன்றும் அங்குமிங்கும் கேள்விப்பட்டவைகளின் தொகுப்புதானே?///

இந்துக்கள் சிவனையே லிங்க உருவத்தில் வழிபடுகிறார்கள்.

படைப்பு பற்றிய சாங்கிய தத்துவம் நூல்களில் உள்ளது.அதைப் பலர் படிப்பதில்லை.சிலர் மட்டுமே படைப்புத்தத்துவத்தை தெரிந்திருக்கிறார்கள்.என்னினும் லிங்கத்தில் சிவனையே வணங்குகிறார்கள்.

இந்துக்களில் வட இந்தியாவில் உள்ள 1 % க்கும் குறைவான ஒரு குறிப்பிட்ட பிரிவைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே நீங்கள் கூறும் அர்த்தத்தில் லிங்கத்தை வணங்குகிறார்கள்.

இந்துக்களில் பெருபான்மையினர் (99 %) சிவனையே லிங்க உருவத்தில் வணங்குகிறார்கள் என்று தெளிவாக நான் மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தி இருக்கிறேன்.மீண்டும் தெளிவு படுத்துகிறேன்.

இந்துக்கள் அனைவருக்கும் வேதமே பிரமாணம்,ஆனால் நீங்கள் கூறும் அர்த்தத்திற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை.நம் தமிழ் சைவ திருமுறைகளிலோ, சித்தர்கள் பாடல்களிலோ எதிலுமே நீங்கள் கூறும் அர்த்தத்திற்கு ஆதாரம் இல்லை.என்பதை இங்கே மீண்டும்,மீண்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
99 % கிருஸ்தவர்கள் சிலுவை, இயேசுவின் உருவ சிலை, மேரி மாதா சிலை போன்ற உருவங்களையே வழிபடுகிறார்கள்.

ஆனால் பைபிளில் இவ்வாறு கூறப்படவில்லை என்றும்,///இது பாபிலோனிய கிரேக்க ரோம சாம்ராஜ்யங்களின் பாரம்பரிய கதை மற்றும் திருவிழா கூத்துகளின் தொடர்பான காரியமாகும்;/// என்றும் கூறி

99 % கிறிஸ்தவர்களின் உருவ வழிபாட்டை நீங்கள் கிறிஸ்தவர்களின் வழிபாடாக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் வேதத்தில் இல்லாத 1 % க்கும் குறைவான இந்துக்களில் ஒரு பகுதியினரின் வழிபாட்டை அனைத்து இந்துக்களின் வழிபாடாக காட்ட மீண்டும்,மீண்டும் முயற்சி செய்கிறீர்கள்.

நீங்கள் இந்துக்கள் அனைவரும் லிங்கத்தை இனப்பெருக்க உறுப்பாக வணங்குகிறார்கள் என்று கூறுவதாக இருந்தால் திருச்சிக்காரர் பைபிளில் இருந்து மேற்கோள் கட்டுவதைப் போல் நீங்கள் எங்கள் நான்கு வகை வேதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டுங்கள்.

மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள அனைத்து இந்து சமய நூல்களிலிருந்தும் ஆதாரம் காட்டுங்கள்.அப்பொழுது தான் இந்தியா முழுதும் நீங்கள் கூறிய கருத்தில் லிங்கம் வணங்கப் படுகிறது என்று ஒப்புக் கொள்வோம்.

தமிழ் நாட்டில் உள்ள சித்தர் பாடல்கள், மற்றும் சைவத் திருமுறைகளிருந்தும் ஆதாரம் மேற்கோள் காட்டுங்கள் .

அப்போது தமிழ் நாட்டில் நீங்கள் கூறிய படி லிங்கம் வழிபடுவதை ஒப்புக்கொள்கிறோம்.

உங்களுக்கு பைபிள் போல எங்களுக்கு வேதம்.காட்டுங்கள் வேதத்திலிருந்து ஆதாரத்தை, மேற்கோளை. அப்பொழுது தான் ஒப்புக் கொள்வோம்.
99 % கிறிஸ்தவர்களின் உருவ வழிபாட்டை கிறிஸ்தவர்களின் வழிபாடாக நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும், நீங்கள் 1 % கூட இல்லாத இந்துக்களின் ஒரு பிரிவினரின் வழிபாட்டை ஒட்டு மொத்த இந்துக்களின் வழிபாடாக காட்ட ஆசை படுகிறீர்களே..இது ஏன்???

///லிங்கம் என்பது நீள்வட்டமென்றால் நாம் வணங்குவது அப்படியல்ல;அது அரைவட்டமுமல்ல;நீள்வட்டமென்பது புதைந்த நிலையில் இருந்தால் அது மசூதியின் உச்சியைப் போலல்லவா இருக்கும்?///

லிங்கம் என்பது நீள்வட்ட வடிவமே.வட்டத்தின் வேறொரு வடிவமே நீள்வட்ட வடிவம்.இதுவே தொடக்கமும் முடிவும் காண முடியாத கடவுள் தன்மையைக் குறிக்கும் மிகச் சிறந்த உருவம்.

இந்த நீள்வட்ட வடிவிலேயே பல இடங்களில் வணங்குகிறார்கள்.

மேலும் இந்துக்கள் கடவுளை தூணிலும், துரும்பிலும் வணங்கும் குணம் உடையவர்கள்.

பல வகையான சிறிய சிறிய மாறுபாடுகளுடன் கூடிய லிங்கங்கள் உள்ளன.சுயம்பு லிங்கங்கள் சிறிது மாறுபட்ட வடிவிலேயே இருக்கும்.

ஆதலால் லிங்க வடிவத்தின் சிறிய மாறுபாடுகளைப் பொருட்படுத்துவதில்லை.

சில நீள்வட்ட லிங்கங்களை கீழே உள்ள சுட்டியின் மூலம் காணுங்கள்.

http://t1.gstatic.com/images?q=tbn:Vg75XEIqvsZSvM:

http://t1.gstatic.com/images?q=tbn:e4ZlOMgAuTRuiM:

http://t1.gstatic.com/images?q=tbn:Z2mJm7Y1w4OaRM:

எனவே நான் ஒன்றும் முரணாகக் கூறவில்லை.இவை ஒவ்வொன்றும் அங்குமிங்கும் கேள்விப்பட்டவைகளின் தொகுப்பு அல்ல.அனைத்தும் நூல்களிருந்து எடுக்கப்பட்டவை.நீங்கள் எங்கள் மதத்தைப் பற்றிய அடிப்படை அறிவு உங்களிடம் இல்லையென்பதையே உங்களின் மேற்கண்ட கேள்வி காட்டுகிறது.

///சிவன் என்று சொல்லப்படுபவரின் எந்த பகுதியை லிங்கம் குறிப்பிடுகிறது என்று சொல்லமுடியுமா?///

அந்த ஆதி அந்தம் இல்லாத, உருவமாகவும், அருவமாகவும் உள்ள கடவுளையே சிவனாக லிங்க உருவத்தில் குறிப்பிடுகிறது.

எந்தப் பகுதியையும் தனியாகக் குறிக்கவில்லை.என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

நீங்கள் கூறும் அர்த்தத்தில் லிங்கத்தை இந்துக்களில் 1 % க்கும் குறைவானவர்கள் மட்டுமே வணங்குகிறார்கள்.

இந்துக்களில் பெருபான்மையினர் (99 %) சிவனையே லிங்க உருவத்தில் வணங்குகிறார்கள் என்று தெளிவாக நான் மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தி இருக்கிறேன்.மீண்டும் தெளிவு படுத்துகிறேன்.

/// உங்களுக்கு எப்படி பைபிள் நிரூபண‌மோ அவ்வாறே எங்களுக்கு வேதமே நிருபனமாகும் //- தனபால்

///இந்த கருத்துக்கு எதிராக மற்றுமொரு இந்து தளத்தில் வேதம் எங்களுக்கு முக்கியமல்ல,என்றும் இறைவன் என்பதே ஒரு கான்செப்ட் மட்டுமே இறைவன் இருப்பதை யாராலும் நிரூபிக்கமுடியாது என்று சிலர் சவால் விட்டனர்;///- CHILLSAM

இந்து மதத்தின் பிரமாணம்,நிரூபணம் வேதமே.ஒரு தத்துவம் இந்து மதத்தில் உள்ளதுதானா இல்லை பிற இனங்களிலிருந்து வந்ததா என்பதை அறிய வேதத்தையே நிருபனமாகக் கொண்டே தெளிவு பெற வேண்டும் என்று விவேகானந்தர் கூறிகிறார்.
ஏனென்றால் பல இனங்கள் தங்கள் நடைமுறை வழக்கங்களையும், கலாச்சாரத்தையும் இந்து மதத்துடன் கலந்து விட்டனர்.

மேலும் கடவுள்,ஆன்மா கடவுளை( உண்மையை) உணரும் வழிகள் போன்றவை வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன.கடவுளை – உண்மையை – அறியும் வேளையில் இந்த வேதத்தையும் கடந்து தன் சொந்த அனுபவத்திலேயே உணரவேண்டும்.வேதம் ஒரு திசைகாட்டி போன்றதே.நாம் தான் போக வேண்டும்.வேதம் கூட வராது.

இதையே கடவுளை உணரும் தருணத்தில் வேதத்தையும் கடந்து செல்லவேண்டும் இந்த உண்மையையே விவேகானந்தரும் கூறுகிறார்.

எனவே ஒரு கருத்து இந்து மதத்தை சேர்ந்ததா இல்லையா என்பதை அறிய வேதமே பிரமாணம்.

ஆனால் கடவுளை -உண்மையை- உணரும் விசயத்தில் வேதம் கூட முக்கியமல்ல..தன் சுய அனுபவமே மிக முக்கியமானது

கிருஸ்தவ மதத்தில் உள்ள உருவ வழிபாடு பாபிலோனிய கிரேக்க ரோம சாம்ராஜ்யங்களின் பாரம்பரிய கதை மற்றும் திருவிழா கூத்துகளின் தொடர்பான காரியம் மட்டுமல்ல

இந்துக்களின் பாரம்பரிய கதை மற்றும் திருவிழா கூத்துகளின் தொடர்பான காரியமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.எப்படிஎன்றால்,

எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி என்னும் சிற்றூரில் மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த இருக்கன்குடிக்கு விருதுநகர் மாவட்டம் மற்றும் தூத்துக்குடி,திருநெல்வேலி போன்ற மாவட்டத்திலிருந்தும் மக்கள் வந்து மாரியம்மனை வணங்கி பின் கோவிலுக்கு வெளியே ஆடு, கோழி வெட்டி,அல்லது கறியைத் தனியாக கடையிலிருந்து வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டு செல்வார்கள்.அவர்களுக்கு மாரியம்மனை வேண்டுவதும்,கறி சமைத்து உண்பதுமே பெரும்பாலானோரின் பழக்கமாகும்.

அந்த இருக்கன்குடிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் நென்மேனி என்ற சிறிய கிராமம் உள்ளது.அங்குள்ள மக்கள் பெரும்பாலும் கிருஸ்தவர்கள்.அங்கே இஞ்ஞாசியப்பர் ஆலயம் ஒன்று உள்ளது.

அதாவது இஞ்ஞாசி என்பவர் இந்த கிராமத்தில் தங்கி,கிருஸ்தவமதத்தைப் பரப்பிருக்கிறார்.அதனால் அவருக்கு கோவில் கட்டி அவரையே நடுநாயகமாக உருவ பிரதிஷ்டை செய்து.ஏசு, அன்னை மேரி, ஜோசப் அவர்களின் சிலை கூட அங்கே ஓரமாகக் காணப்படுகிறது.

அங்கே திரு விழா நடக்கிறது,அந்த திருவிழா முடிந்ததும் ஆங்காங்கே ஆடு, கோழி, பன்னி, மாட்டு கூட வெட்டப்படுகிறது கோவில் சுற்றுச் சுவருக்குள்ளேயே கறி சமைக்கிறார்கள்.இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் செய்ததைப் போலவே தங்கள் வழக்கத்தை மாற்ற முடியாமல் சர்ச்சிலும் செய்கிறார்கள்.இந்து மத பழ்க்கவழக்கக்களை கிறிஸ்தவத்தில் கலக்கிறார்கள்.

பொங்கல் வைக்கிறார்கள்.மொட்டை அடிக்கிறார்கள்,காது குத்துகிறார்கள், கோவிலைச் சுற்றி விழுந்து விழுந்து வணங்குகிறார்கள்.திருவிழாவிற்கு முன் கொடி ஏற்றுகிறார்கள்.இயேசு கிறிஸ்து, மேரி மாதா, இஞ்ஞாசியப்பர் போன்றோகள் தேரில் அலங்காரமாக,மின் விளக்கொளியுடன் வளம் வருகிறார்கள்.அந்த தேர் அனைத்து வீடுகளிலும் நிற்கிறது.அனைத்து வீடுகளிருந்தும் தேங்காய் உடைத்து வணங்குகிறார்கள்.தேரின் மேல் திருப்பதியில் உப்பும், மிளகும் எறிவது போல் இங்கும் எறிகிறார்கள். இந்த கிறிஸ்தவக் கடவுளுக்கு இந்து முறைப்படி திருவிழா நடக்கிறது.

ஆமாம் இந்த கிருஸ்தவ மத பிரச்சாரர் திரு இஞ்ஞாசி முதன்மைக் கடவுளாக இந்த நெஞ்மேனியில் வழிபடப்படுவதர்க்கு கிருஸ்தவ மதம் பொறுப்பேற்க முடியுமா???

இந்தியா முழுதும் உள்ள கிருஸ்தவர்கள் உருவ வழிபாடு, கொடியேற்றம், தேர் திருவிழா போன்ற இந்து மத சடங்குகளையே செய்து வருகிறார்கள்.

சர்ச்சில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவ சிலையையே பெரும்பாலோனோர் வணங்குகிறார்களே???

உங்கள் மதத்திலும் பெரும்பாலானோர் உருவ வழிபாடு செய்கிறார்களே???

பின் ஏன் எங்கள் உருவ வழிபாட்டை மட்டும் வெறுக்கிறீர்கள்.???

எங்கள் உருவ வழிபாட்டை குறை சொல்வதற்கு முன்னாள் உங்களிடம் உள்ள உருவ வழிபாட்டை சரிசெய்ய மீண்டும் ஒரு தீவிர பிரச்சார இயக்கத்தை கிறிஸ்தவர்களை நோக்கியே செய்யுங்கள்.

வாழ்த்துக்கள்.நன்றி.

.

லிங்கத்தின் தத்துவங்கள்…ஒரு பார்வை..!

http://thamizhoviya.blogspot.com/2009/01/12.html

சகோ.தனபால்,
சகோ.சில்சாமோ, நானோ, சகோ.Hard Truthஒ இந்துக்கள் மட்டும்தான் உருவவழிபாடு செய்கிறார்கள் என்று சொல்லவில்லை. நாங்கள் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் சக மனிதர் அனைவருக்கும் சொல்கிறோம். இங்கு எந்த ஒரு கத்தோலிக்கரும் வந்து உருவவழிபாடு சரி என்று வாதிடவில்லை, உருவவழிபாட்டை வெறுக்ககூடாது என்று கட்டளை போடவில்லை. இங்கேவந்து பேசாத மனிதருக்கு நாங்கள் இங்கு என்ன சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
ஒரு விஷயம் சரியா தவறா என்று சிந்திப்பதை விட்டு, யாரோ அடுத்தவன் செய்கிறான் அவனை நிறுத்த சொல்லுங்கள் பிறகு நாங்கள் நிறுத்துகிறோம் என்று நீங்கள் சொல்வது சிறுபிள்ளைதனமாய் தெரிகிறது.
மேரிமாதா விக்ரகத்தை வழிபடுகிறவர்களுக்கு நாங்கள் ஏன் முதலில் சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்கள். எங்களை பொறுத்தவரை நீங்களோ, திருச்சியாரோ, ஒரு கத்தோலிக்கரோ, எல்லாம் ஒன்றே. இப்போது இங்கே இந்துக்களான நீங்கள் உரையாடிகொண்டிருப்பதனால், நாங்கள் இந்துக்களை பற்றி பேசுகிறோம். சிவலிங்கத்தை வழிபடுபவரிடம், மேரிமாதா சிலையை வழிபடாதே என்றா சொல்லமுடியும்??
அன்புடன்,
அசோக்

// படைப்பு பற்றிய சாங்கிய தத்துவம் நூல்களில் உள்ளது.அதைப் பலர் படிப்பதில்லை.சிலர் மட்டுமே படைப்புத்தத்துவத்தை தெரிந்திருக்கிறார்கள்.என்னினும் லிங்கத்தில் சிவனையே வணங்குகிறார்கள். //

படைத்தவன் சிவனா,பிரம்மாவா எனும் எனது கேள்விக்கு பதிலில்லை;படைத்தவனைக் கல்லாக்கியது யார்,மனிதனா அல்லது இறைவன் தன்னை கல்லில் வெளிப்படுத்தினானா?

கல் என்பது உயிரற்ற ஒரு பொருளாகும்;அதன் மூலம் உயிர்கள் எப்படி தோன்றியது?கல் பேசியதால் தெய்வமானதா,அசைந்ததால் தெய்வமானதா,அதிலிருந்து ஜீவ வாசனை வீசியதால் தெய்வமானதா?கல் தன்னை உடைத்து இன்னொரு க்ல்லை உருவாக்கியதா?

ஆதியும் அந்தமுமில்லா இறைவனின் குறியீட்டு தத்துவம் மட்டுமே இது எனில் அதனைக் கல்லுடன் ஒப்பிடும் உரிமையைத் தந்தது யார்?

ஏனெனில் சூரியனும் சந்திரனும் பூமியும் உட்பட்ட அனைத்து கோள்களும் வட்டவடிவில் நீள்வட்ட பாதையில் பயணித்துவருகிறது என்பது விஞ்ஞானம்.

இந்த இயக்குசக்தியின் ஆதாரமானது கல்லா,வாயுவா?

ஐம்பெரும்பூதங்களின் தன்மையிலும் இறைவன் இருப்பது உண்மையானால் அந்த ஏகத் தன்மையினை அறிந்து அதனை வணங்குவதுதானே இறைவனின் எதிர்பார்ப்பாக இருக்கும்?

மனிதர்களின் உருவில் அதாவது கழிவு உறுப்புகள் உட்பட்ட சாகப்போகும் மனித உருவில் தான் இறைவனும் வாழ்கிறானா?

// இந்துக்கள் அனைவருக்கும் வேதமே பிரமாணம்,ஆனால் நீங்கள் கூறும் அர்த்தத்திற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை. //

அப்படியானால் நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்படாத ஒன்றை தெய்வமாக்குதல் தெய்வக்குற்றமல்லவா?

நான்கு வேதங்களிலும் இன்றைக்கு வணங்கப்படும் பிரபலமான தெய்வங்களைக் குறித்து ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

முக்கியமாக‌ சிவனைக் குறித்து இந்துக்களின் ஆதாரமான நான்கு வேதங்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறது?

சிவனின் ரூபம் கல்லானால் அதாவது அம்மிக் குழவியைப் போன்ற நீள்வட்டமானால் சிவனாக வரைந்து காட்டப்படுவது கற்பனை உருவமா?கற்பனை உருவத்தை அல்லது தெய்வமல்லாததை வணங்குவதும் இணைவைப்பதும் எப்படி சரியாகும்?ஆரம்ப கற்பிதமே சரியில்லாவிட்டால் முடிவு என்னவாக இருக்கும்?

// நீங்கள் இந்துக்கள் அனைவரும் லிங்கத்தை இனப்பெருக்க உறுப்பாக வணங்குகிறார்கள் என்று கூறுவதாக இருந்தால் திருச்சிக்காரர் பைபிளில் இருந்து மேற்கோள் கட்டுவதைப் போல் நீங்கள் எங்கள் நான்கு வகை வேதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டுங்கள். //

‘சரவணபெலகுலா’வில் எதை வணங்குகிறார்கள்?
பிரம்மாண்டமானதொரு நிர்வாண சிலையை நிறுவி அதனை வணங்கச்சொல்லி உங்கள் நான்கு வேதங்கள் சொல்லாத காரியத்தை நீங்கள் செய்கிறீர்கள்;அதற்கு ஆதாரமே இல்லாதபோது வேதத்திலிருந்து எப்படி காட்டமுடியும்? வேண்டுமானால் அதற்கும் எனது வேதத்திலிருந்தே ஆதாரம் காட்டுகிறேன்;அது எப்படி திரிந்து போனது என்பதையும் நிரூபிக்கிறேன்;

// எங்கள் உருவ வழிபாட்டை குறை சொல்வதற்கு முன்னாள் உங்களிடம் உள்ள உருவ வழிபாட்டை சரிசெய்ய மீண்டும் ஒரு தீவிர பிரச்சார இயக்கத்தை கிறிஸ்தவர்களை நோக்கியே செய்யுங்கள். //

ஒவ்வொருவரும் ஒவ்வொரு புரிதலில் ஒரு குறிப்பிட்ட தவறான இறைவனின் குறியீட்டை வணங்குவதைத் தடுக்க நீங்கள் எதாவது செய்யுங்கள்;1% மட்டுமே தவறாக வணங்குவோரைத் தடுப்பதால் இன்னும் பலர் கெட்டுப்போகாமல் தடுக்கலாமல்லவா?உங்களிலிருந்து வந்தோராலேயே இங்கும் அந்த பழக்கவழக்கங்கள் தொடருகிறது,அது தவிர்க்கமுடியாத‌து;
அதனைத் தடுக்க முனைந்தால் நண்பர் திருச்சிக்காரன் எம்மை வெறுப்புக்கருத்துக்களை பரப்புவோர் எனக் கூறுவார்..!

ராமசாமி வீட்டில் ஒரு எலி ரொம்ப நாளாக வாழ்ந்து கொண்டிருந்தது; ஒருநாள் அந்த எலியைப் பிடிக்க ராமசாமி பொறிவைத்தார்;ஆனால் மகா புத்திசாலியான அந்த எலி…

(என்னுடைய தளத்துக்கு வாருங்கள் ஒரு கதை சொல்லுகிறேன்..!)

திரு chillsam அவர்களே,

உங்கள் கேள்விகள் எல்லாமே ரசிக்கும்படி நன்றாகவே இருக்கிறது.பாராட்டுக்கள்.அதில் சில கேள்விகள் பதிலை எதிர்பார்க்கிறது.வேறு சில கேள்விகள் பதிலை எதிர்பார்க்காமல் தன்னிலேயே திருப்தி அடைகிறது.

உங்களுடைய கேள்விகள் அனைத்தும் ஒரு கோணத்தில் இருந்து கேட்கப்படுகிறது.என்னுடைய பதில்கள் அனைத்தும் வேறு கோணத்திலிருந்து சொல்லப்படுகிறது.அதனால் நான் கூறுவது ஒருவகையில் உண்மையாகவே இருந்தாலும் உங்களுக்கு பொய்யாகவே தோன்றும்.

ஏனென்றால் நீங்கள் பார்க்கும் பார்வை வேறு நாங்கள் பார்க்கும் பார்வை வேறு.

மேலும் உங்கள் கோப்பையில் ஏற்கெனவே தேநீர் நிரம்பியிருக்கிறது…..நான் ஊற்றும் தேநீர் உங்கள் கோப்பையிலிருந்து வழிந்தோடிவிடுகிறது ….இருந்தாலும் மீண்டும் நீங்கள் தேநீர் கேட்கிறீர்கள்…..நான் தேநீர் ஊற்றலாமா? வேண்டாமா? என்று யோசிக்கிறேன்.தேனீர் கீழே வழிந்தொடினாலும்,நீங்கள் கேட்பதால் நான் கொஞ்சம் தேநீர் ஊற்றுகிறேன்.

முதலில் நான் மத சண்டை போட வரவில்லை.என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் என்மதம் மட்டுமே உண்மை என்று கூறவில்லை.அனைத்து மதங்களும், அனைத்து கடவுள்களும் உண்மையே என்று நாங்கள் கூறுகிறோம். கொஞ்சம் சிந்தியுங்கள் உங்களால் அனைத்து மதங்களும் உண்மை என்று கற்பனையில் கூட ஏற்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன்.ஏனென்றால் அப்படி ஏற்றுக் கொண்டால் உங்கள் தெய்வீக செயலான அடுத்தவனின் கடவுள் நம்பிக்கையை கெடுத்து அவனை கிருஸ்தவ மதத்தில் சேர்க்கும் கிருஸ்தவ மத லட்சியமான மதமாற்றச் செயல் என்னாவது? உங்கள் லட்சியமான மத மாற்றத்தை செய்ய முடியாதே.???

ஆனால் நாங்கள் எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே இறைவனையே நாம் கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும் பிரம்மம் என்றும் அழைக்கிறோம் என்று கூறுகிறேன்.ஆனால் நீங்களோ இந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.இதற்க்கான காரணம் நீங்கள் உங்கள் மதம்,உங்கள் கடவுள் மட்டுமே உண்மை மற்ற மதங்கள்,கடவுள்கள் பொய்யானவை என்று கருதுகிறீர்கள்.

எல்லாக் கடவுளும், எல்லா மதமும் உண்மையே என்று ஒருவன் கூறுகிறான் என்றால் அவனின் மதத்தின் பெருந்தன்மையை இது வரை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ,கிருஸ்தவ மதத்தைப் பற்றியோ அறிந்து கொள்ள நான் முதலில் செய்யவேண்டியது பைபிளை படிப்பதே.மற்ற மதத்தவர்கள் யேசுவையோ,கிருஸ்தவ மதத்தையோ தாக்கி எழுதிய புத்தகத்தையோ படிப்பதன் மூலம் இயேசுவின் மற்றும் ,கிருஸ்தவ மதத்தின் மீதும் தவறான புரிதலே நிகழும்.அதே போல் தான் மற்ற மதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த மத புத்தகங்களையே நீங்கள் படிக்க வேண்டும்.அப்படி நீங்கள் என்றாவது இந்து மத புத்தகங்களைப் படித்து இருக்கிறீர்களா?

இந்து மத வேதம் அனைத்தும் இயேசுவை பற்றியே கூறுகிறது என்று ஒரு அசிங்கமான சிந்தனையால் எழுந்த குழந்தைத் தனமானக் கருத்துக்கொண்ட ஒரு “அர்த்தமுள்ள இந்து மதம்” (பெயர்கூட சொந்தமாக வைக்க முடியவில்லை,) என்ற சிறு கையடக்க பிரதியைக் கொண்டு எங்கள் வேதத்தை நீங்கள் அறிந்துகொண்டதாகக் கூறுகிறீர்கள்.எங்கள் வேதங்களின் நூல்கள் ஒரு வீடே நிறையும் அளவிற்கு.எண்ணற்றவை.அவ்வளவு பெரிய நூல்களில் உங்கள் ஏசுவைப் பற்றிக் கூறியது ஒரு சிறிய கையடக்கப் பிரதி தானா??? என்ன ஒரு ஏமாற்றம்.

///படைத்தவன் சிவனா,பிரம்மாவா எனும் எனது கேள்விக்கு பதிலில்லை///

எனது நோக்கம் லிங்கம் இந்தியா முழுதும் உள்ள இந்துக்களால் அசிங்கமான பொருளில் வணங்கப்படவில்லை என்பதை விளக்குவதாகவே இருந்தது..அதனால் உங்கள் இந்த கேள்வி எனக்குப் பெரிதாகப் படவில்லை.மேலும் பல்வேறு மக்களின் பல்வேறு மன நிலைக்குத் தக்க இந்தப் பிரபஞ்ச தோற்றம் பற்றி சிறு சிறு மாறுதல்களுடன் கூறப்படுகிறது.அதனால் எழுந்ததே உங்கள் இந்த ///படைத்தவன் சிவனா,பிரம்மாவா /// என்ற கேள்வி.

சிருஷ்டி என்பது படைப்பு அல்ல.வெளிப்பாடே.அந்த இறைவனே தன்னிலிருந்தே இந்த பிரபஞ்சமாக வெளிப்படுகிறான்,தன்னிலேயே ஒடுங்குகிறான்.அதனால் இறைவன் இந்த பிரபஞ்சம் முழுதும்,அனைத்துமாகவும் இருக்கிறான். அந்த இறைவனே,சிவன்,விஸ்ணு,பிரம்மா,சக்தி என்று அழைக்கிறோம்.இறைவன் ஒருவனே அந்த ஒரே இறைவனையே பல பெயர்களில் அழைக்கிறோம்.பிரபஞ்சமாக வெளிபட்டிருப்பவன் கடவுளே,அவனே பிரம்மா,அவனே விஸ்ணு,அவனே சிவன்.அவனே சக்தி,அவனே அல்லா,அவனே கர்த்தர்.
படைத்தவன் பிரம்மாவா?..ஆம் ,சிவனா?…ஆம் ,விஷ்ணுவா?…ஆம், சக்தியா?..ஆம் அல்லாவா?கர்த்தரா? ..ஆம். எல்லாமே அந்த ஒரே கடவுள் தான்.

நீங்கள் எங்கள் மதக் கருத்துக்களை பொய் என்று நிரூபிக்க முயல்கிறீர்கள்.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் அனைத்து மதங்களிலும் முரண்பாடான விசயங்கள் இருக்கிறது chillsam .நான் உங்கள் மதத்திலும் குறைகள் உள்ளன.அதனால் எங்கள் மதத்தை இழிவுபடுத்துவது ஏன் என்றே கேட்கிறேன்.

///படைத்தவனைக் கல்லாக்கியது யார்,மனிதனா அல்லது இறைவன் தன்னை கல்லில் வெளிப்படுத்தினானா?///

உங்கள் வார்த்தை ஜாலம் அருமை.இவை மதப் பிரச்சாரத்திற்கு நன்றாகப் பயன்படும். இந்து மதம் என்றால் கடவுளை உணர்வதின் நேரடி அனுபவமே அதற்க்கு மனக்குவிப்பு செய்வதற்கு ஆரம்ப நிலையில் உள்ளவனுக்கு உருவ வழிபாடு தேவை..இந்த இறைவன் இந்த பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறான் என்று ஒரு இந்து நம்புகிறான்,அதை உணர்வதன் ஒரு தத்துவமே,இந்த கல்லிலும்,மண்ணிலும்,மரத்திலும், விலங்கிலும் அனைத்துமாக ஆகியுள்ள இந்த இறைவனின் அம்சத்தையே வணங்குவது.

உங்கள் நண்பரின் போடோவைப் பார்த்து என் நண்பனை காகிதமாக்கியது யார்?இல்லை காகிதத்தில் என் நண்பன் வெளிப்பட்டானா? என்று கேட்கிறீர்கள்.அந்த போட்டோவை பார்க்கும் பொது உங்கள் நண்பனாகவே பார்க்கிறீர்கள்.காகிதமாகவோ,வண்ண கலவையாகவோ பார்ப்பதில்லை.அதே போல் பிரதிஷ்டை செய்து வணங்கப்படும் லிங்கத்தைப் பார்க்கும் பொது சிவனையே வழிபடுகிறான்.கல்லாக வழிபடுவதில்லை.அப்பனே,சிவபெருமானே,ஈசனே, என்று தான் வணங்குகிறானே தவிர, ஏ …கல்லே…உன்னை வணங்குகிறேன்.எனக்கு நல்ல புத்தியைக் குடு என்று வணங்குவதில்லை.

.ஒரு இந்து பல பிறவிகளைக் கடந்து இறுதியாக இறைவனை நேரடியாகக் காண்கிறான்.ஒவ்வொருப் பிறவியிலும் அவன் பெரும் ஆன்மிக, மற்றும் அனைத்து அனுபவங்களும் மறுபிறவியிலும் தொடர்கிறது.

அதனால் ஒருவன் ஒரு பிறவியில்செய்த முயற்சியும்,அனுபவமும் வீணாவதில்லை.அனைவருமே இறுதியில் இறைவனிடமே செல்வதாக இந்து மதம் சொல்கிறது.நல்லவர்கள் விரைவிலும் தீயவர்கள் அதிகப் பிறவியெடுத்து கால தாமதமாகவும் இறைவனை அடைகிறான் என்று இந்து மதம் கூறுகிறது.

எந்த மதத்தினரும்,எந்தக் கடவுளை வழிபடுகிரவர்களும் இறுதியில் இறைவனையே அடைகின்றனர்.

எந்த ஒரு செயலும் தீவிர மன ஒருமைப்பாடு மூலமாகவே பல பிரமிப்பூட்டும் காரியங்கள் நிகழ்ந்துள்ளன.அதே மன ஒருமைப்பாட்டின் மூலம் தன்னை உணர்வதன் மூலம் இறைவனை உணரலாம்.என்று பலர் இந்து மதத்தில் நிருபித்துள்ளனர். அவர்களையே நாங்கள் ரிஷிகள்,முனிவர்கள்,சித்தர்கள்,மகான்கள் என்று அழைக்கிறோம்.அதனால் எங்களுக்கு கடவுளை நேரடி அனுபவத்தின் மூலம் உணர்வதற்கு, மன ஒருமையை ஏற்படுத்துவதர்க்கு,மற்றும் பக்தி செய்து வழிபடுவதற்கு, இறைவனின் குணத்தைப் பிரதிபலிக்கும் ஓர்
உருவம் தேவை.அதையே சிலை வடிவில் வணங்குகிறோம்.நாங்கள் கல்லில் இறைவனைக் காண்கிறோம்.

ஒரு அழகானப் பெண் மிகச் சிறப்பாக நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்.ஒருவன் அவளின் அழகைப் பார்க்கிறான்.நடனம் தெரிந்தவன் அவளது நடனத்தை பார்க்கிறான்.இது தான் உருவ வழிபாடு பற்றிய நம் இருவரின் கண்ணோட்டமும்..

மேலும் உங்களுக்கு கடவுளின் நேரடி அனுபவம் தேவையில்லை.இறந்தபின் எப்போதோ கர்த்தர் எல்லோரையும் நியாயத் தீர்ப்பு நாளில் எழுப்பி இயேசுவை ஏற்றுக்கொண்டு,தன பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டு பாவம் செய்யாமல் வாழ்ந்தவர்கள் மட்டுமே கர்த்தரிடத்தில்.இடம் மற்ற பெரும்பான்மையான,இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ,மற்ற மதத்தவர்கள் எல்லாம் அவர்கள் மிக நல்லவர்களாக இருந்தாலும்,நிரந்தர ஏறி நரகம் என்று நீங்கள் கருதுவதால் உங்களுக்கு மனக்குவிப்பு தேவையில்லை.போன் பேசுவது போன்ற மன குவிப்பே போதுமானது.

///அப்படியானால் நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்படாத ஒன்றை தெய்வமாக்குதல் தெய்வக்குற்றமல்லவா?///

அப்படி ஒன்றும் வேதத்தில் சொல்லவில்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள்..வேதம் வழிபடுவதற்கு அதிக சுதந்திரத்தை தருகிறது.

///நான்கு வேதங்களிலும் இன்றைக்கு வணங்கப்படும் பிரபலமான தெய்வங்களைக் குறித்து ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா?///

ஆம் கூறப்பட்டுள்ளது,சிவன்,விஸ்ணு,கணபதி,சக்தி போன்ற கடவுள்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.மற்ற தெய்வங்கள் தேவர்களாக சொல்லப்பட்டுள்ளது.

///முக்கியமாக‌ சிவனைக் குறித்து இந்துக்களின் ஆதாரமான நான்கு வேதங்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறது?///

ஆம் சொல்லப்பட்டுள்ளது.

///சிவனின் ரூபம் கல்லானால் அதாவது அம்மிக் குழவியைப் போன்ற நீள்வட்டமானால் சிவனாக வரைந்து காட்டப்படுவது கற்பனை உருவமா?கற்பனை உருவத்தை அல்லது தெய்வமல்லாததை வணங்குவதும் இணைவைப்பதும் எப்படி சரியாகும்?

எல்லையிலாத தொடக்கமும் முடிவும் அற்ற கடவுளையே இந்துக்கள் சிவனாகவும், விஸ்னுவாகவும் வணங்குகிறோம்.நான் சிவன் அம்மிக் குழவியைப் போன்ற நீள்வட்ட வடிவமானவர் என்று எங்கேயாவதுக் கூறினேனா? ஏன் இப்படி வார்த்தை ஜாலம் புரிகிறீர்கள்.மேலும் கடவுள் உருவமுள்ள ஜடா முடியுடன் கூடிய சிவனாக மகான்களின் விருப்பத்திற்க்கேற்ப காட்சி தந்திருக்கிறார்.அதில் சொல்லப்பட்ட தகவலின் படி எப்படி, இயேசு, மேரி படங்கள் வரையப்பட்டதோ,அப்படியே வரையப்பட்டது.

///ஆரம்ப கற்பிதமே சரியில்லாவிட்டால் முடிவு என்னவாக இருக்கும்?///

ஆதியாகமத்தில் படைப்புத் தத்துவம் அறிவியலின் முன் மண்டியிடுகிறது. மன்னிக்கவும் உங்களிடமும் குறைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டுகிறேன் அவ்வளவே.மேலும் பைபிள் இதுவரை 22 முறை திருத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்.சரியா???

///சரவணபெலகுலா’வில் எதை வணங்குகிறார்கள்?
பிரம்மாண்டமானதொரு நிர்வாண சிலையை நிறுவி அதனை வணங்கச்சொல்லி உங்கள் நான்கு வேதங்கள் சொல்லாத காரியத்தை நீங்கள் செய்கிறீர்கள்;அதற்கு ஆதாரமே இல்லாதபோது வேதத்திலிருந்து எப்படி காட்டமுடியும்?///

அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர்.சமண மதம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.

///வேண்டுமானால் அதற்கும் எனது வேதத்திலிருந்தே ஆதாரம் காட்டுகிறேன்;அது எப்படி திரிந்து போனது என்பதையும் நிரூபிக்கிறேன்///

அமெரிக்கக் கண்டங்களில் வாழும் ஒரு காட்டுமிராண்டி இனங்களில் வாழும் மக்கள் தங்கள் கூட்டத்தில் உள்ள வீரன் ஒருவன் இறந்து விட்டால் அவன் ரத்தம்,அவனின் மாமிசம் இதயம் போன்றவற்றை எடுத்து தின்பதன் மூலம் அவனின் வீரம் தங்களுக்கு கிடைப்பதாக நம்புகிறார்கள்.

கிருஸ்தவ மதத்தில் பாவத்தை ரட்சிக்க தன்னை பலி கொடுத்த இயேசுவின் ரத்தமும்,சதையும் தங்கள் பாவத்தைக் கழுவி சுத்தப்படுத்துவதாக நம்பும் வழக்கம் இந்தக் காட்டுமிராண்டி இனங்களின் பழக்கங்களின் திரிபே.என்று வரலாறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எங்கள் மதத்தில் மஞ்சளும் குங்குமமும் கிருமிகளை அளிக்கவே,வீடு நிலைகளில் பயன்படுத்தப்பட்டது.மஞ்சளுக்கு எறும்போ,கரையானோ வராது,அதனாலேயே நிலைகளில் மஞ்சளும்,மஞ்சளால் ஆன குங்குமமும் பூசப்படுகிறது.மேலும் வாசலுக்கு கிருமி நாசினியான மாட்டுச் சானத்தைத் தெளிக்கிறோம்.

கிருமிகளை உண்டாக்கும் ரத்தத்தை தெளிப்பது எங்கள் கலாச்சாரமல்ல.

மேலும் தான் உண்பதை இறைவனுக்கு படைத்து உண்பதே இந்துக்களின் வழக்கம். சைவமோ,அசைவமோ அவனவனைப் பொருத்தும்,அவனவன் கும்பிடும் தெய்வத்தைப் பொருத்தும் மாறுகிறது.

அசைவம் உண்பவன் ஆடோ, கோழியையோ வெட்டி இறைவனுக்கு படைத்து இறைவன் ஏற்றுக்கொண்டதால் அதைப் பிரசாதமாக உண்கிறான்.பின் தன நலனுக்காகவும், மற்றவர்கள் நலனுக்காகவும் வேண்டுகிறான்.

எந்த இந்துவும் தன பாவத்திற்காண பலியாக ஆட்டையோ,கோழியையோ பலியிடுவதில்லை.

///ராமசாமி வீட்டில் ஒரு எலி ரொம்ப நாளாக வாழ்ந்து கொண்டிருந்தது; ஒருநாள் அந்த எலியைப் பிடிக்க ராமசாமி பொறிவைத்தார்;ஆனால் மகா புத்திசாலியான அந்த எலி…///

மகா புத்திசாலியான அந்த எலி.என்ன செயஞ்சதுன்னு சொல்லுங்க சார்.ஆனா இந்த கதை சொல்லும் உங்களுக்கு இந்த கதையின் மூலம் தெரியக்கூடிய நீதி என்னவென்றால் எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ,அப்படியே தீர்க்கப்படுவீர்கள்.

தனபால், on June 2, 2010 at 22:31 Said:
// உங்கள் கோப்பையில் ஏற்கெனவே தேநீர் நிரம்பியிருக்கிறது;நான் ஊற்றும் தேநீர் உங்கள் கோப்பையிலிருந்து வழிந்தோடிவிடுகிறது; இருந்தாலும் மீண்டும் நீங்கள் தேநீர் கேட்கிறீர்கள்;நான் தேநீர் ஊற்றலாமா? வேண்டாமா? என்று யோசிக்கிறேன்;தேனீர் கீழே வழிந்தொடினாலும்,நீங்கள் கேட்பதால் நான் கொஞ்சம் தேநீர் ஊற்றுகிறேன். //

நண்பரே எனது கோப்பை நிறைய தேநீர் இருக்கையில் நான் ஏன் உங்களிடம் கேட்கவேண்டும்;அது நீங்கள் கொடுத்ததானால் நான் குடித்தபிறகே மேலும் ஊற்றவேண்டும்;நீங்கள் ஊற்ற முயற்சிப்பது தேநீர் கோப்பைகளைக் கழுவிய கழுநீராக இருப்பதாலேயே தடுமாறி நிற்கிறேன்;என் கோப்பையிலிருக்கும் நல்ல தேநீர் மாசுபடாமலும் அதை எப்படியாவது நீங்களும் ருசிக்கவேண்டுமே எனத் தவிக்கிறேன்..!

// நாங்கள் எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே இறைவனையே நாம் கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும் பிரம்மம் என்றும் அழைக்கிறோம் என்று கூறுகிறேன்.ஆனால் நீங்களோ இந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.இதற்க்கான காரணம் நீங்கள் உங்கள் மதம்,உங்கள் கடவுள் மட்டுமே உண்மை மற்ற மதங்கள்,கடவுள்கள் பொய்யானவை என்று கருதுகிறீர்கள். //

ஆம்,நண்பரே எல்லையற்ற பிரபஞ்சத்தைப் படைத்த சர்வ வல்ல தேவனை (தாந்தொன்றியை…self existent) சாதாரண ஆண் உருவும் பெண் உருவும் ஆக்கி ஆசாபாசங்களும் கோபதாபங்களும் நிறைந்தவராகச் சொன்னால் அதனை எப்படி ஏற்கமுடியும்?

“அர்த்தநாரீஸ்வரர்” எனும் தத்துவத்தையும் தரம் தாழ்த்தி அருவருப்பான உருவமாக்கி விட்டீர்கள்;ஞானிகள் வார்த்தையினால் சொன்னதையெல்லாம் தவறான புரிந்துக்கொள்ளுதலால் நீங்கள் உருவமாக்கியது அவர்களுக்குத் தெரியாது;ஞானிகள் என்று நான் சொல்லவருவது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தவசீலர்களை;

ஆண்,பெண் இருதன்மையும் சேர்ந்த -அதற்கும் மேலான -ஞானம் மிகுந்த- காணக்கூடாதவரான -பயங்கரமான- ஜோதிவடிவமான பரம்பொருளை எதனுடன் ஒப்பிட்டாலும் அது மாபாவம் என்று வேதம் சொல்லுகிறது;

“யாவே” தேவனுக்கும் பிரம்மாவுக்கும் அதாவது சித்தரிக்கப்பட்ட பிரம்மாவுக்கும் அல்லாவுக்கும் அதாவது முகமதுவுக்கு முன்னரும் அரபியரால் வணங்கப்பட்ட சந்திரக் கடவுளான அல்லாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

யூதர்களின் தேசிய கடவுளான யாவே தேவன் ஒருபோதும் எதனுடனும் இணைத்து சித்தரிக்கப்பட்டதில்லை;அது யாராலும் கூடாது;ஏனெனில் அவர்தாமே அதனை கட்டளையாகக் கொடுத்துள்ளார்;

பிரம்மா என்று உங்களால் சித்தரிக்கப்பட்டு சிவன்,விஷ்ணு போன்ற சகோதரக் கடவுளர்களுடன் ஒப்பிடப்படும் தேவர்களே உலகத்தைப் படைத்தனர் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு;ஆனால் அதுகளுடன் சர்வ வல்ல “யாவே” கடவுளை ஒப்பிடுவதால் எங்களைப் புண்படுத்துகிறீர்கள்;

அதுபோலவே இஸ்லாமியருடைய செயலும் வருந்தத்தக்கது;
இறுதித் தூதர் என்று அவர்களால் நம்பப்படும் முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை முறை பரிசுத்த வேதாகமத்தினால் போற்றப்பட்ட தீர்க்கர்களின் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் எதிரானது;

இன்றைக்கு சுமார் 6000 வருட பாரம்பரியம் கொண்ட யூதர்களின் தேசியக் கடவுளான “யாவே” தேவனை “அல்லா” என்று கூறும் துணிகரத்தை அவர்களுக்கு “யாவே” கடவுளே கொடுத்திருக்கவேண்டும்;இல்லாவிட்டால் அது யாராலும் கூடாது;

ஏனெனில் யூதர்களுக்கு வெளிப்பட்ட கடவுள் பெயரை மட்டும் தள்ளிவிட்டு அவரது அற்புத செயல்களையும் கட்டளையும் ஆளுக்கு ஆள் எடுத்தாளத் துவங்கியதாலேயே இத்துணை குழப்பங்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்;

// இயேசுகிறிஸ்துவைப் பற்றியோ,கிறித்தவ மதத்தைப் பற்றியோ அறிந்துக்கொள்ள நான் முதலில் செய்யவேண்டியது பைபிளை படிப்பதே;அப்படி நீங்கள் என்றாவது இந்து மத புத்தகங்களைப் படித்து இருக்கிறீர்களா? //

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்;எனக்கு புத்தி தெரிந்த காலத்திலிருந்து கோவில் கச்சேரிகள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் மூலம் கேட்டு கேட்டு புளித்துவிட்டது;திருவிளையாடல் கதை வசனமும்,அனைத்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களும் மனப்பாடம்;அதுபோக பள்ளிப்பாடத்திலும் (நான் நல்ல மாணவன் அல்ல,நல்ல வாசகன்..!) நூலகங்களிலும் எல்லாம் போக டிவி சீரியலாக இராமாயணமும் மகாபாரதமும்…இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..!

இவையெல்லாவற்றினின்றும்
ஞானத்தைத் தேடினேன்,
தொலைந்தேன்; தொலைத்தேன்;
என்னைத் தொலைத்து
நான் தேடியதை
என்னுடையதைத் தொலைத்து
கண்டுபிடித்தேன்;
தொலைந்து போனதாக
எண்ணப்பட்ட நானும்
கண்டுபிடிக்கப்பட்டேன்;
என்னைத் தேடியவரே மகாகுரு,அவரே ஜகத்குரு;
என்னைத் தேட தம்மை தொலைத்தவர்,
தம்மைத் தந்து என்னை மீட்டார்;

// இந்துமத வேதம் அனைத்தும் இயேசுவை பற்றியே கூறுகிறது என்று ஒரு அசிங்கமான சிந்தனையால் எழுந்த குழந்தைத் தனமானக் கருத்துக்கொண்ட ஒரு “அர்த்தமுள்ள இந்துமதம்” (பெயர்கூட சொந்தமாக வைக்க முடியவில்லை,) என்ற சிறு கையடக்க பிரதியைக் கொண்டு எங்கள் வேதத்தை நீங்கள் அறிந்துகொண்டதாகக் கூறுகிறீர்கள்;எங்கள் வேதங்களின் நூல்கள் ஒரு வீடே நிறையும் அளவிற்கு.எண்ணற்றவை.அவ்வளவு பெரிய நூல்களில் உங்கள் ஏசுவைப் பற்றிக் கூறியது ஒரு சிறிய கையடக்கப் பிரதி தானா??? என்ன ஒரு ஏமாற்றம். //

நான் எங்குமே அதுபோலக் கூறவில்லை;”அர்த்தமுள்ள இந்துமதம்” ஏறக்குறைய முழுதொகுதியும் என்னிடமுள்ளது;ஆனால் அது கவிஞர் கண்ணதாசன் எழுதியது;அதனையா இப்படி தூஷிக்கிறீர்கள்?

இயேசுவைக் குறித்து சிருஷ்டிகளெல்லாம் சாட்சி பகர ‘அ’ முதல் ‘ஃ’வரையிலும் ,’க்’ முதல் ‘ள்’ வரையிலும் உயிரிலும் மெய்யிலும் உயிர்மெய்யாக பைபிள் முழுவதுமே அவர் நிரம்பியிருக்க, காமவிகாரங்கள் நிரம்பிய அருவருப்பான புராணங்களிலும் ஆதாரமில்லாத செவிவழி செய்திகளான வேதங்களிலும் அவரைத் தேடவேண்டிய அவசியமென்ன?

Chillsam:
///படைத்தவனைக் கல்லாக்கியது யார்,மனிதனா அல்லது இறைவன் தன்னை கல்லில் வெளிப்படுத்தினானா?///

Dhanapaul:
// உங்கள் வார்த்தை ஜாலம் அருமை…உங்கள் நண்பரின் போடோவைப் பார்த்து என் நண்பனை காகிதமாக்கியது யார்? இல்லை,காகிதத்தில் என் நண்பன் வெளிப்பட்டானா? என்று கேட்கிறீர்கள். //

என்னுடைய நண்பனுடைய போட்டோவைப் பார்த்து ‘என் நண்பனுடைய போட்டோ ‘என்று தான் சொல்லுவேன்; நண்பனையே பார்க்கும்போது ‘உனது போட்டோவைப் பார்த்தேன்,’என்றும் சொல்லுவேன்;ஆனால் நான் ஒருபோதும் பார்த்திராத ஒரு பிணந்தின்னியைப் பார்த்து எனது நண்பன் என்று சொல்லமாட்டேன்;ஒட்டமாக ஓடிவிடுவேன்;

// ஒரு இந்து பல பிறவிகளைக் கடந்து இறுதியாக இறைவனை நேரடியாகக் காண்கிறான் //

நீங்கள் முருகன் ரூட்டைப் பின்பற்றுகிறீர்கள் போலும்;நாங்களோ கணபதியான இயேசுகிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுவதால் அவர் வழியாக ஒரே பிறப்பில் முக்தியடைகிறோம்;கணபதி என்றால் அனைத்து சேனைகளின் அதிகாரி என்பது அருத்தமாம்;அனைத்து சேனை என்பது வான்சேனை,பாதாளசேனை,பூலோகசேனை ஆகியன உள்ளடக்கியது;

Chillsam:
///அப்படியானால் நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்படாத ஒன்றை தெய்வமாக்குதல் தெய்வக்குற்றமல்லவா?///

Dhanapaul:
// அப்படி ஒன்றும் வேதத்தில் சொல்லவில்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள்..வேதம் வழிபடுவதற்கு அதிக சுதந்திரத்தை தருகிறது.//

Chillsam:
///நான்கு வேதங்களிலும் இன்றைக்கு வணங்கப்படும் பிரபலமான தெய்வங்களைக் குறித்து ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா?///

Dhanapaul:
//ஆம் கூறப்பட்டுள்ளது,சிவன்,விஸ்ணு,கணபதி,சக்தி போன்ற கடவுள்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.மற்ற தெய்வங்கள் தேவர்களாக சொல்லப்பட்டுள்ளது.//

Chillsam:
///முக்கியமாக‌ சிவனைக் குறித்து இந்துக்களின் ஆதாரமான நான்கு வேதங்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறது?///

Dhanapaul:
//ஆம் சொல்லப்பட்டுள்ளது.//

அண்ணன் அவர்கள் மிக‌அழகாக மாணவனைப் போல பதிலளித்துள்ளார்; ஆனால் இது ஒரு மார்க் கேள்வியல்ல;பத்து மார்க் கேள்வியாகும்; ஆதாரத்துடன் பதிலளிக்கவும்;

// பைபிள் இதுவரை 22 முறை திருத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன்,சரியா??? //

தவறு;நீங்கள் கூறுவது உண்மையானால் திருத்தப்படாத பிரதியைக் காட்டவேண்டியது நீங்கள்தான்;(கும்ரான் குகையில் கண்டெடுக்கப்பட்ட ஏசாயா புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி அற்புதமான வரலாற்று சான்றாகும்..!)

Chillsam:
//சரவணபெலகுலா’வில் எதை வணங்குகிறார்கள்?///

Dhanapaul:
//அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர்.சமண மதம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.//

என்ன நண்பரே இப்படி தடாலடியாக நழுவலாமா?
புத்தர்,மகாவீரர் என எல்லாருமே வேதத்தை விளக்க வந்த ரிஷிகள் தானே..?
அப்படியானால் வாரணாசியில் சுற்றிக்கொண்டிருக்கும் நிர்வாண சாமியார்களைக் குறித்தும் ஆணுறுப்பில் புற்றுநோய் வந்து செத்துப்போன
நம்ம ஊர் விசிறி சாமியாரைக் குறித்து ஏதாவது சொல்லுங்கள்..!

// எங்கள் மதத்தில் மஞ்சளும் குங்குமமும் கிருமிகளை அளிக்கவே,வீடு நிலைகளில் பயன்படுத்தப்பட்டது.மஞ்சளுக்கு எறும்போ,கரையானோ வராது,அதனாலேயே நிலைகளில் மஞ்சளும்,மஞ்சளால் ஆன குங்குமமும் பூசப்படுகிறது…//

நம்முடைய வீட்டுப் பெண்களை நீங்கள் இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா?அவர்கள் விருப்பத்துடன் அணியும் மங்கலப் பொருட்களை நீங்கள் இவ்வளவு கேவலப்படுத்தலாமா?

Dhanapaul:
// மகா புத்திசாலியான அந்த எலி.என்ன செயஞ்சதுன்னு சொல்லுங்க சார்.ஆனா இந்த கதை சொல்லும் உங்களுக்கு இந்த கதையின் மூலம் தெரியக்கூடிய நீதி என்னவென்றால் எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ,அப்படியே தீர்க்கப்படுவீர்கள்.//

Dhanapaul:
// இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் செய்ததைப் போலவே தங்கள் வழக்கத்தை மாற்ற முடியாமல் சர்ச்சிலும் செய்கிறார்கள்.இந்துமத பழக்கவழக்கக்களை கிறிஸ்தவத்தில் கலக்கிறார்கள். //

அண்ணே நான் எலி கதையைச் சொன்னதே உங்களது மேற்கண்ட க்ருத்துக்காகத் தான்;எனவே நீங்கள் எந்த விதத்திலும் உங்கள் வீட்டு எலியை எங்கள் வீட்டுக்குத் துரத்துவது மிகவும் அநியாயம்..!

வர்ட்டா..?!

திரு CHILLSAM அவர்களே,

உங்கள் பின்னூட்டங்கள் நன்றாக உள்ளது.பல விசயங்களை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.நீங்கள் எக்காரணம் கொண்டும் மற்ற மதங்களும்,மற்ற மதக் கடவுள்களும் பொய் என்ற கருத்தை மாற்ற மாட்டீர்கள்.என்று தெரிந்து கொண்டேன்.

//அண்ணன் அவர்கள் மிக‌அழகாக மாணவனைப் போல பதிலளித்துள்ளார்; ஆனால் இது ஒரு மார்க் கேள்வியல்ல;பத்து மார்க் கேள்வியாகும்; ஆதாரத்துடன் பதிலளிக்கவும்;///

ஏற்கெனவே பதிவின் நீளம் அதிகரித்து விட்ட நிலையிலேயே இப்படி ஒரு மதிப்பெண் விடை அளித்தேன்.நீங்கள் எங்கள் வேதங்களைப் பற்றியும் பிரஜாபதியைப் பற்றியும் கூறிய உங்களுக்கு சிவனை வேதத்தில் குறிப்பிட்டது எப்படித் தெரியாமல் போனது.”ஓம் நம சிவாய” என்ற மந்திரம் வேதத்தில் உள்ளது தானே??? நான் குடுக்கும் ஆதாரங்கள் வெளியேறும் தேநீர். அதனால் ஆதாரத்தைத் திரட்டும் நேரத்தை மிச்சப் படுத்துகிறேன்.

///என்ன நண்பரே இப்படி தடாலடியாக நழுவலாமா?
புத்தர்,மகாவீரர் என எல்லாருமே வேதத்தை விளக்க வந்த ரிஷிகள் தானே..?///

ஆமாம்.ஆனால் புத்தரைப் பற்றியும்,அவரதுபோதனைகளைப் பற்றியும் சிறிது தெரியும்.ஆனால் மகாவீரரைப் பற்றித் அதிகம் தெரியாது.உயிர்க் கொலை மிகவும் பாவமாக கருதக் கூடியவர் என்பதும், அனைத்து ஆசைகளையும் துரப்பதுவே அவர்கள் கொள்கை என்பது போன்ற அனைவர்க்கும் தெரிந்த அளவே தெரியும்.

///நான் எங்குமே அதுபோலக் கூறவில்லை;”அர்த்தமுள்ள இந்துமதம்” ஏறக்குறைய முழுதொகுதியும் என்னிடமுள்ளது;ஆனால் அது கவிஞர் கண்ணதாசன் எழுதியது;அதனையா இப்படி தூஷிக்கிறீர்கள்?///

எங்கள் வேதங்கள் அனைத்தும் உங்கள் ஏசுவையே பற்றியே கூறுகிறது என்று ஒரு சிறு கையடக்க பிரதி “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற பெயரில் கிருத்தவ பிரச்சாரர்களால் வழங்கப்பட்டது.அதில் கூறப்பட்ட பிரஜாபதி, மற்றும் பாவத்திற்காகவே பலி போன்ற வாக்கியங்களையே (கீழே பார்க்கவும் ) நீங்களும் பயன்படுத்துகிறீர்கள்.அதில் இந்து வேதங்கள் இயேசுவை பற்றியே கூறுகின்றன என்ற ஒரு மகா குழந்தைத் தனமான பொய்யை கூறியது.அந்தப் ஓயரச்சாரப் பிரதி பற்றி உங்களுக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாதா???

///பலியினால் மட்டுமே பரிகாரம் என்பது பொதுவானது///
///ப்ரஜாபதியின் மகாபலியினால் பாவம் நிக்ரஹமாகும் வேதத் தத்துவம் வெளிப்பட்டு நடைமுறைக்கு வந்தது///

///நம்முடைய வீட்டுப் பெண்களை நீங்கள் இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா?அவர்கள் விருப்பத்துடன் அணியும் மங்கலப் பொருட்களை நீங்கள் இவ்வளவு கேவலப்படுத்தலாமா?///
சாது செல்லப்பாவின் கேசட்டில் பைபிளில் உள்ள பழக்க வழக்கங்களே இந்துக்கள் பின்பற்றுகிறார்கள் என்பது போல ஒரு தகவலை கூறுகிறார்.அதற்க்கு பைபிளில் கூறப்பட்டதாகக் கூறி தீய சக்திகள் வராமல் காக்க ஒவ்வொரு வீட்டுமுன்பும்,கதவுகளிலும் ரத்தத்தை தெளித்தும்,பூசியும் வந்தார்கள் என்று கூறுகிறார்.அதையே சிறிது மாற்றி இந்துக்கள் கதவு ,நிலைகளில் சந்தனம், மஞ்சள், போன்ற வற்றைப் தடவி,அதில் இரத்தத்திற்குப் பதிலாக குங்குமத்தால் பொட்டு வைப்பதாகக் கூறுகிறார்.
///அதற்கும் எனது வேதத்திலிருந்தே ஆதாரம் காட்டுகிறேன்;அது எப்படி திரிந்து போனது என்பதையும் நிரூபிக்கிறேன்///
என்று நீங்கள் கூறியதால் மேற்கண்ட புத்தகம்,மற்றும் சாது செல்லப்பாவின் கேசட் போன்றவற்றை பற்றியே கூறப் போகிறீர்கள் என்பதை முன்னறிந்தே அதைக் கூறினேன்.நீங்களும் அவற்றில் கூறப்பட்ட கருத்துக்களை உங்கள் பின்னூட்டத்தில் கூறுகிறீர்கள்.ஆனால் நீங்கள் அந்தப் புத்தகத்தைப் பற்றியும், சாது செல்லப்பாவின் கேசட்டைப் பற்றியும் ஒன்றுமே தெரியாது என்பது போல் கூறுகிறீர்கள்..ஒரு கிறிஸ்தவப் பிரச்சாரரான நீங்கள் இப்படிக் கூறுவது எனக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.
எலிக்கதை நன்றாக உள்ளது.எங்களுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது.உங்கள் மதமும் எங்கள் கலாச்சார நீரோட்டத்தில் கலந்தே ஆகும்,இன்னும் சில நூற்றாண்டுகளில் எங்கள் இந்து மகா சமுத்திரத்தில் உங்கள் கிருஸ்தவ ஆறு கலந்து விடும்.இப்பொழுதே ஓரளவிற்கு கலந்து விட்டன.அப்போது கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு லக்ஷ்மி, வீரத்திற்கு பராசத்தி, ஆஞ்சநேயர், போன்ற தெய்வங்களைக் கும்பிடுவது போல பாவத்தை மன்னிக்க ஏசுவைக் கும்பிடவோம்.

சகோதரர் தன்பால் அவர்களே,

இயேசு பாவம் செய்யக் கூடாது என்பதை வலையிருத்திக் கூறிவுள்ளார்.
பாவம் செய்து விட்டு என்னிடம் வா, மன்னிப்பு தருகிறேன் என்றதாக இயேசு எந்த இடத்திலும் சொல்லவில்லை.

நீங்கள் பொய்ப் பிரச்சாரத்திலே மயங்கி, பாவப் பிராசரத்தால் பாதிக்கப் பட்டு விழுந்து பெரும்பாலான இந்தியர்களையும் பாவிகளாக்கி விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவை வழிபடுவதை நான் வரவேற்கிறேன், உலகில் உள்ள எல்லோரும் இயேசு கிறிஸ்துவை வழிபடலாம் என்பதே என் கருத்து – ஆனால் பாவத்தைக் waive செய்ய வந்தவர் என்ற முறையிலே அல்ல, பாவம் செய்யாமல் தடுக்க வந்தவர் என்ற முறையிலே அவரை வணக்குவோம்.

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,
///நீங்கள் பொய்ப் பிரச்சாரத்திலே மயங்கி, பாவப் பிராசரத்தால் பாதிக்கப் பட்டு விழுந்து பெரும்பாலான இந்தியர்களையும் பாவிகளாக்கி விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.///
நான் கிறிஸ்தவர்களின் ப்ரச்சாரத்திலிருந்தும், பின்னூட்டங்களிலிருந்து புரிந்து கொண்டதையே குறிப்பிட்டேன்.நான் பைபிளை படித்ததில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால் பல மாத இதழ்களை படித்திருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.என் கருத்து தவறென்றால் அது நான் பைபிளைப் படிக்காததும்,பிரச்சாரர்களின் தவறான கருத்தைப் படித்ததும் தான் காரணம்.

சகோதரர் தனபால் அவர்களே,

ஒருவர் எதை சொன்னாலும் அதனை அலசி ஆராயாமல் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது கூடாது என்ற வகையிலே சுவாமி விவேகனந்தர் சொன்னதையும் நீங்கள் படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Leave a reply to thiruchchikkaaran Cancel reply

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09