பாவத்துக்கு பரிகாரம் என்ன? ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டால் மன்னிப்புக் கேட்டு பரிகாரம் செய்ய வேண்டியது அந்தப் பெண்ணிடமா அல்லது கடவுளிடமா?
Posted May 4, 2010
on:சகோதரர் திரு.. Hard Truth அவர்களின் சில கருத்துகளை ஒட்டிய நம்முடைய கட்டுரையாக இதை வெளியிடுகிறோம்.
//பாவ காரியங்களை செய்யாமல் இருப்பது இரண்டாம்படி, முதலில் இருக்கும் பாவங்களுக்கு என்ன செய்யலாம்? //
இன்னும் கொஞ்சம் சிந்தியுங்கள்.
ஒருவன் பாவம் செய்யாமல் இருந்தால் சமூகத்துக்கு நன்மை. ஒருவன் பாவம் செய்தால் அதனால் இன்னொருவருக்கு பாதிப்பு ஏற்ப்படுகிறது. எனவே எது முதன்மையும், முக்கியய்த்துவமும் வாய்ந்தது?
நம்மால் பிறருக்கு துன்பம் வராமல் பார்த்துக் கொள்வதுதான் முதலில் செய்ய வேண்டியது.
எனவே பாவம் செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதுதான் முதலில் செய்ய வேண்டியது. நம்முடைய பாவத்தை கழுவுவதை பார்ப்போம் என்று நினைப்பது சுயநலமாகத் தானே கருதப் பட முடியும்.
ஏற்கெனவே செய்த பாவங்களுக்கு என்ன செய்யலாம்? யாருக்கு எதிராக பாவம் செய்தோமோ அவரிடம் போய், மனப் பூர்வமான வருத்தம் தெரிவித்து ,நாம் செய்த பாவத்தினால் அவருக்கு உண்டான பாதிப்பை ஈடு செய்வதே சரியான செயல்.
உதாரணமாக, ஒரு பெண்ணை மணம் செய்வதாக ஆசை காட்டி அந்த பெண்ணோடு உறவு வைத்து விட்டு அந்தப் பெண்ணை ஏமாற்றி வேறு வூருக்கு சென்று விட்ட ஒருவன், அந்தப் பாவத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரம் அந்தப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்து விட்டு, அவளை மணந்து கொண்டு இருவரின் வாழ்க்கையையும் வளமாக்குவதுதான்.
ஒருவருக்கு எதிராக பாவம் இழைத்து விட்டு, அதனால் அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டு இன்னொருவரிடம் போய் மன்னிப்பு கேட்பது எப்படி சரியாகும்?
இயேசு கிறிஸ்துவும்
ஆகையால் நீ பலி பீடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து , உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் (Mathews 5-23)
அங்கே தானே நீ பலி பீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து வீட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி , பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து (Mathews 5-24)
என்றதாக சொல்லப் பட்டுள்ளது.
சகோதரனோ , சகோதரியோ, பக்கத்து வீட்டுக் காரனோ யாருக்கு எதிராக குற்றம் செய்து (பாவம் செய்து) இருந்தாலும், அவர்களிடம் சென்று அந்தக் குற்றத்தினால் அவர்களுக்கு உண்டான பாதிப்பை சரி செய்து விட்டு, அப்புறம் கடவுளைக் கும்பிடப் போ என்பதே இயேசு கிறிஸ்துவின் கருத்து என்பது தெளிவு.
80 Responses to "பாவத்துக்கு பரிகாரம் என்ன? ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டால் மன்னிப்புக் கேட்டு பரிகாரம் செய்ய வேண்டியது அந்தப் பெண்ணிடமா அல்லது கடவுளிடமா?"
//ஆகையால் நீ பலி பீடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து , உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் (Mathews 5-23)
அங்கே தானே நீ பலி பீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து வீட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி , பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து (Mathews 5-24)
என்றதாக சொல்லப் பட்டுள்ளது.
//
Dear Mr.Trichy,
As usual you are twisting the verses. Here Jesus Christ is not talking about forgiveness. Here he is talking about offerings that we give to Church. He wanted people to be in peace with each other and the peace between the brethren was considered to be more important than the offerings that is given to the Church.
Hard Truth
//ஆகையால் நீ பலி பீடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து , உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் (Mathews 5-23)
அங்கே தானே நீ பலி பீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து வீட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி , பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து (Mathews 5-24)//
திருச்சிக்காரன் இவ்வளவு பெரிய வேதபுரட்டு ஆசாமியாக இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டது. மேற்கூறிய வேதவசனங்களில், காணிக்கை என்று தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர பாவமன்னிப்பு என்று சொல்லப்படவில்லை.
//இயேசு கிறிஸ்துவின் கருத்தும் அதுவே. நீ யாருக்கோ எதிராக பாவத்தை செய்து விட்டு என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள் என்பதாக இயேசு கிறிஸ்து எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை என்றே கருதலாம்.//
இயேசு, “மன்னிக்கும் அதிகாரம் மனுஷகுமாரனுக்கு (ஏசுவுக்கு) உண்டு” என்று கூறியுள்ளார்.
தேவன் மீது நம்பிக்கை இல்லாத உங்களை போன்றவர்க்கு, பாவமன்னிப்பு என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். தேவனிடம் மன்னிப்பு கேட்பது என்பது, மனிதனிடம் மன்னிப்பு கேட்பதைவிட இலகுவான விஷயமாக தெரியலாம். தேவனின் வல்லமையை, பரிசுத்தத்தை அறிந்தவர்களுக்கு அது எவ்வளவு கடினமான காரியம் என்று தெரியும்.
//இந்த முறை நீங்கள் இயேசு கிறிஸ்துவன் கொள்கைகளை தவறாக பிரச்சாரம் செய்ததால் மக்களுக்கு உண்டான பாதிப்பிற்கான பரிகாரமாக நான் இயேசு கிறிஸ்துவின் சரியான நோக்கத்தை, கருத்தை , புரிதலை மக்களுக்கு தெரியப் படுத்தி விட்டேன். என்னைப் பார்த்து கருத்துக்களை திரிப்பதாக நீங்கள் நியாயமில்லாமல் கோபித்துக் கொள்வதால் உருவான குறைக்கும் என் விளக்கமே பரிகாரமாக இருக்கும். எனவே இதற்க்கு பரிகாரம் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். உங்களின் நம்பிக்கைப் படி காணிக்கைகளை கொண்டு போய் நேரடியாக வைக்கலாம்.//
உங்கள் மீது கோவப்பட நீங்க என்ன பிசாசா? உங்கள் மீது எனக்கிருப்பது பரிதாபமே.
Hard Truth
சகோ.திருச்சிக்காரர் அவர்களே,
///பாவத்துக்கு பரிகாரம் என்ன? ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டால் மன்னிப்புக் கேட்டு பரிகாரம் செய்ய வேண்டியது அந்தப் பெண்ணிடமா அல்லது கடவுளிடமா???///
தலைப்பே கட்டுரையின் கருத்தை தெளிவாகக் காட்டுகிறது.மிக நல்ல கட்டுரை.
//பாவத்திற்கு பரிகாரம் யாரிடம் செய்யப் பட வேண்டும் என்பதுதான் கட்டுரையின் பொருள். //
That is fine. But why do you have to bring the verse about the Offerings. There are many verses of Jesus regarding the forgiveness of sins. But, you brought this verse to twist the meaning of it and make it appear that Christ is also supporting your views.
How much ever you try, truth always wins. 🙂
Thanks,
Hard Truth
//again I thank you for showing relious harmony by quoting the verses from Hindu Script ” Sathyam Eva Jayathe” !//
Ohhh… Cool… now these things also started getting the religious colours…
If truth wins, I will be really happy. And TRUTH ONLY wins.
Hard Truth
திருசிகாரன் ஒரு பித்துக்குளி , இந்த லூசுக்கு என்ன வேணும்னா எல்லா மதமும் பொய். இந்து மதம் தான் உண்மை அப்படின்னு சொல்லணும் , தன்ன முற்போக்குவாதியாகவும் காட்டிக்கணும். அதுக்குதான் இந்த நாகரீக சமுதாயம் பொடலங்கா எல்லாம். இது , தனபால், ராம் இதுங்க எல்லாம் RSS கோஷ்டிங்க. இதுகளுக்கு வேற வேல இல்ல ….
திரு PRADEEP அவர்களே,
“கடவுள் ஒருவரே,.அவரையே ஒவ்வொரு மதத்தவரும் ஒவ்வொரு பெயரில் அழைக்கிறார்கள்.அந்த ஒரே இறைவனையே வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு (மத )வழியில் அடைகின்றனர்.அனைத்து வழிகளும் உண்மையில் இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகளே.”-இது இந்து மதம் கூறும் உண்மை.இதையே நான் கூறிக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் இதை திரு HARD TRUTH அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ???
//அந்த ஒரே இறைவனையே வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு (மத )வழியில் அடைகின்றனர்.அனைத்து வழிகளும் உண்மையில் இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகளே.”-இது இந்து மதம் கூறும் உண்மை.//
How do u say, it is true?
Hard Truth
திரு HARD TRUTH அவர்களே,
//அந்த ஒரே இறைவனையே வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு (மத )வழியில் அடைகின்றனர்.அனைத்து வழிகளும் உண்மையில் இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகளே.”-இது இந்து மதம் கூறும் உண்மை.//
How do u say, it is true?///
இது உண்மை என்றே நம்புகிறேன்.
கடவுள் என்பவர் இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தைப் படைத்தவர்.
கோடான கோடி GALAXY யில், ஒரு குறிப்பிட்ட, நம் GALAXY யில் மட்டும்,
உள்ள கோடான கோடி நட்சத்திரங்களில், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை (நம் சூரியனை) மட்டும்,
சுற்றும் கோள்களில், ஒரு குறிப்பிட்ட கோளான நம் பூமியில் மட்டுமே உயிர்களைப் படைத்தார் என்று கூறி
அவரின் அளப்பரிய சக்தியையும், கருணையையும் நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோடான கோடி கோள்களில் பலவற்றில் உயிர்கள் இருக்கும் என்றே நம்புகிறேன்.
அப்படி வேற்று கிரகங்களில் உள்ளவர்களும் அந்த எல்லையில்லாத கடவுளையே இறுதியில் அடைகின்றனர்.
அங்கே ஏசுவோ, நபிகள் நாயகமோ, இந்து தெய்வங்களோ இருக்கப்போவதில்லை.
அவர்களுக்கென்று ஒரு வழி (மதம்???) இருக்கும்.அதன் மூலமே இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுளை அடைவார்கள்.
நம்மைப் படைத்த கடவுளே அவர்களையும் படைத்திருக்கிறார்.நாம் அடையும் கடவுளையே அவர்கள் வேறு ஒரு வழியில் அடைவார்கள்.
எல்லையில்லாதது என்றால் அது ஒன்றே ஒன்று தானே இருக்கமுடியும்??? எல்லையில்லாத கடவுளும் ஒன்றே ஒன்று தானே.???இந்த எல்லையில்லாத கடவுளையே கர்த்தர் என்றும், அல்லா என்றும், பிரம்மம் என்றும் அழைக்கின்றோம்.இந்த கர்த்தர், அல்லா, பிரம்மம் எல்லாமே அந்த ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களே.
திரு ABDULLAH அவர்களே,
// திருசிகாரன் ஒரு பித்துக்குளி , இந்த லூசுக்கு என்ன வேணும்னா எல்லா மதமும் பொய். இந்து மதம் தான் உண்மை அப்படின்னு சொல்லணும் , தன்ன முற்போக்குவாதியாகவும் காட்டிக்கணும். அதுக்குதான் இந்த நாகரீக சமுதாயம் பொடலங்கா எல்லாம். இது , தனபால், ராம் இதுங்க எல்லாம் RSS கோஷ்டிங்க. இதுகளுக்கு வேற வேல இல்ல ….//
வழிமொழிகிறேன்..///
நான் எல்லா மதமும் உண்மை என்றும், அனைத்து மதங்களும் அந்த ஒரே இறைவனை அடையும் பாதைகளே என்று தான் கூறிக்கொண்டு இருக்கிறேன்.
நான் ஒன்றும் RSS அல்ல.
திரு CHILLSAM அவர்களே,
// எல்லையில்லாத கடவுளையே கர்த்தர் என்றும், அல்லா என்றும், பிரம்மம் என்றும் அழைக்கின்றோம்.இந்த கர்த்தர், அல்லா, பிரம்மம் எல்லாமே அந்த ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களே…//
///நண்பரே, இப்படி சம்பந்த சம்பந்தமில்லாமல் வாதத்தை வளர்த்துக் கொண்டே போவதில் யாருக்கும் எந்த பயனும் இராது;
இந்த கட்டுரையானது யூத – கிறித்தவ நம்பிக்கைகளின் அடிப்படை போதனைகளை விமர்சித்து எழுதப்பட்டுள்ளதை அறிவீர்கள்///
இந்தக் கட்டுரை திரு hard truth அவர்கள் வேறு கட்டுரையில் இட்ட பின்னூட்டங்களின் விழைவால் எழுதப்பட்டது.அந்த பின்னூட்டங்களில் நானும் பங்கெடுத்திருக்கிறேன்.அதன் தொடர்ச்சியாக தான், இவ்வாறு குறிப்பிட்டேன்.
///கர்த்தரும் அல்லாவும் பிரம்மாவும் ஒருவர் எனில் இந்த கட்டுரைக்கு அவசியமே இருந்திருக்காது;///
நான் குறிப்பிட்டது “பிரம்மம்”….. “பிரம்மா” அல்ல .
“பிரம்மம்” என்றால் காலம், இடம் போன்ற வரையறைக்குட்படாத , உருவமில்லாத எல்லையில்லாத, எல்லையற்ற அன்பும், கருணையும், ஞானமும் சக்தியும் கொண்ட இந்த பிரபஞ்சம் முழுதும் உள்ளும் புறமும் அனைத்துமாகவும்,அனைத்திலும் நிறைந்திருக்கும், கடவுள் என்பதாகும்.
///அதற்கான மத சுதந்தரத்தைக் கொடுக்காமல் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாகத் தொடர்ந்து கிறித்தவர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது///
இந்து மதக்கடவுளை சாத்தான் என்றும் , பூதம் என்றும், பொய்யான கடவுள் என்றும்,
ஏசுவே மெய்யான தேவன் என்றும்,
எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அவன் பாவியே, யேசுவிடம் பாவ மன்னிப்பு பெறாவிட்டால் அவனை கர்த்தர் நிரந்தர நரகத்தில் தள்ளுவார் என்றும்,
இந்து மதத்தில் பிறந்து, இந்துக் கடவுளைக் கும்பிட்ட ஒரே ஒரு காரணத்திற்க்காக ஒரு பாவமும் அறியாத குழந்தைகளைக் கூட,யேசுவிடம் பாவ மன்னிப்பு கேட்க்காத ஒரே ஒரு காரணத்திற்க்காக கர்த்தர் அந்த குழந்தையை நிரந்தர ஏறி நரகத்தில் தள்ளுவார் என்றும்,
எவ்வளவு கொடூர கொலை,கற்பழிப்பு செய்பவனாக இருந்தாலும் யேசுவிடம் மனம் திருந்தி பாவமன்னிப்பு பெற்றுக் கொண்டால் அவன் கர்த்தரிடம் செல்வான் என்றும்,
தான் கும்பிட்டுவந்த இந்துக் கடவுள்களை வணங்குவதை விட்டு விட்டு,இயேசுவை மட்டுமே கடவுளாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் /பாவ மன்னிப்பு பெறாதவர்கள் அனைவருக்கும் நிரந்தர நரகமே என்றும்
கூறி //மத சுதந்தரத்தைக் கொடுக்காமல் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாகத் தொடர்ந்து// கிருஸ்தவர்கள்( திரு HARD TRUTH ) இந்துக்களுக்கு எதிரார பொய்ப் பிரச்சாரம் செய்ததாலேயே தான் இந்தக் கட்டுரை.
///ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட கோவில்களின் நாயகனான பிரம்மாவுக்கும் கர்த்தருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?///
நான் ஏற்கெனவே கூறிய படி “பிரம்மம்” வேறு …. “பிரம்மா” வேறு.
“பிரம்மம்” என்றால் எல்லையற்ற அன்பும், கருணையும், கொண்ட கடவுள் என்பதாகும்.'”
இந்த பிரம்மத்திற்கும் , கர்த்தருக்கும் சம்பந்தம் சிறிது கூட இல்லையா???
பிறவிக் குருடர்கள் யானையை கண்ட கதை உங்களுக்குத் தெரியும்.அதில் ஒருவன் யானையின் வாலை தடவிப் பார்த்து யானை கயிறு போல் இருக்கிறது என்றான், இன்னொருவன் யானையின் காலைத் தடவிப் பார்த்து யானை தூண் போல் இருக்கிறது என்றான், இன்னொருவன் யானையின் காதைத் தடவிப் பார்த்து யானை முறம் போல் உள்ளது என்றான், இன்னொருவன் யானையின் வயிற்றைத் தடவிப் பார்த்து யானை பானை போல் உள்ளது என்றான்.யானையைப் பற்றி தாங்கள் கண்டது தான் உண்மை என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள்.இந்த நான்கு பெரும் சொல்வது வேறு வேறாக தோன்றினாலும் அவர்கள் கூறுவது ஒரு வகையில் யானையைப் பற்றிய உண்மையையே.
இதே போல் ஒவ்வொரு மதமும் இறைவனைப் பற்றி கூறும் உண்மைகள் வேருவேராகத் தோன்றினாலும் அனைத்து மதமும் அந்த ஒரே இறைவனைப் பற்றியே கூறுகின்றன.
மற்ற மதங்கள் தன் மதம் மட்டுமே உண்மை என்று கூறும் பொது இந்து மதம் மட்டுமே அனைத்து மதமும் உண்மை, அனைத்து கடவுளும் ஒன்றே என்று கூறுகிறது.மேலும் நாம் அனைவரும் கடவுளைக் காண வில்லை.கடவுளைக் கண்டவன்,அனுபவத்தில் உணர்ந்தவன், உண்மையை உணர்ந்தவன் தன் கடவுள் மட்டுமே உண்மை என்று சண்டையிடமாட்டான்.நாம் கடவுளைக் காணவில்லை. அதனால் தான் தன் கடவுள் மட்டுமே உண்மை என்று சண்டையிடுகிறோம்.
உலகம் முழுதும் ஒரே மதமாக தன் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நடக்காத காரியமாகும்.உலகம் முழுதும் இந்து மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு இந்து நினைத்தால் அவனைப் போல் முட்டாள் யாரும் இல்லை.இதைப் போலவே மற்ற மதத்தினரும் தன் மதம் மட்டுமே இருக்க வேண்டும் மற்ற மதம் அழிய வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் பைத்தியக்காரர்களே.அப்படிப்பட்ட பைத்தியக் காரர்களே மத மாற்றத்தில் ஈடுபட்டு மற்ற மதத்தை அழித்து வருகிறார்கள். மேலை நாடுகளில் கிறிஸ்த்துவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இஸ்லாமிய மதம் வேகமாகப் பரவி வருவதாகவும் 2050 ஆம் வருடத்தில் உலகில் இஸ்லாமியரே பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.கிருத்தவ மதம். மத மாற்றத்தால் வளர்ந்தது,அதே கருத்துடைய இஸ்லாமிய மத மாற்றத்தால் கிருஸ்தவ மதம் தற்போது மேலை நாடுகளில் வேகமாக அழிந்து வருகிறது.இதனால் இரு மதத்தவருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டு வன்முறை நிகழும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
http://edition.cnn.com/WORLD/9704/14/egypt.islam/
//அவர் பெயராலே நம்முடைய நண்பர்களால் அசோக், சில் சாம் ஆகியோருக்கு போத்தித்து இருக்கிறார்கள் என்றே நாம் கருத இயலும். எனவே நாம் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை சரியாக விளக்கவே செய்துள்ளோம். //
என்னங்க நண்பா, உங்கள் தளத்தில் நான் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது, இன்னும் என்னை நீங்கள் மறக்கவில்லையா?
அன்புடன்,
அசோக்
தங்கள் அன்புக்கு நன்றி திருச்சிக்காரரே,
ஆனால் நான் உங்கள் மந்தையை சேர்ந்த ஆடு அல்ல.
அன்புடன்,
அசோக்
Mr.Trichy,
I don’t think that Bro.Ashok is of ur flock. He has the greatest Sheperd of his own.
//ஆனால் புணர்ச்சி சிறபங்கள் இந்து மதக் கோவிலகளில் இல்லை. //
Why are you lying so bluntly Mr.Trichy? Probably Bro.Chillsam can list out the temples with such சிறபங்கள்.
//பலரும் பாவம் செய்வதும் இல்லை, பரிகாரம் தேடவும் இல்லை. சமதர்ம சமூகம் நேர்மையான குடும்ப வாழ்க்கையை உருவாக்கி உள்ளது.//
Probably you stopped visiting temples these days. People are doiing lots of parigaarams in the temples and (so called) holy rivers sides.
//கடவுள் வந்து அந்தப் பெண்ணுக்கு வாழ்வு தர முடியுமா? //
Only GOD can give life. Nobody else can give. If a person spoils a woman and goes back to her saying “sorry”. What benefit she can get? If that woman or the man is already married, what is the solution that any human can provide it? If GOD wants, GOD can remove the pain (every kind of pain) from the woman, and if GOD wants, GOD can remove every kind of guilt too.
Hard Truth
//ஆனால் நான் உங்கள் மந்தையை சேர்ந்த ஆடு அல்ல.//
Coool Brother. Nice one. Also, you need not thank for his “LOVE” brother. Because there is no real LOVE in him. Everything is just show off. He is just trying to show himself better than Christians. Bible tells about “Wolfs in sheep clothing”. Beware…
Hard Truth.
Mr.Murugan,
//YOU ARE FANATIC, SO YOU CAN NOT ACCEPT THE TRUTH THAT THE TEMPLES WORSHIPPED BY HINDUS DOES NOT HAVE THOSE TYPE OF IDOLS . YOU HAVE TO FIRST GO AND SEE THE TEMPLES WHERE HINDUS WORSHIP BEFORE YOU BLABBER. //
I might be so good in knowing about ur Hinduism. I don’t want to know the path hell that much. Before you blabber, you can see this blog, which is written by Hindus:
http://www.hindu-blog.com/2007/02/why-did-ancient-hindu-temples-have-sex.html
.
// YOU DONT KNOW ANY THING ABOUT OTHER RELIGIONS, (FIRST, IT SEEMS THAT YOU DONT KNOW ABOUT YOUR OWN RELIGION, BECAUSE MR. THIRUCHCHIKKAARAN IS CLARIFYING YOUR RELIGION MORE CORRECTLY)//
First of all, Mr.Trichy himself is blind and trying to show the path to others. And another blind man Mr.Murugan is confirming that the path shown by Mr.Trichy is correct. Very funny.
//THEY ARE DOING PARIGAARAMS FOR THE MOVEMENT OF PLANETS.//
By doing all ur funny parigaarams in temple, these planets are going to change their path??
//ALL YOUR LUNATIC IDEAS ARE CLERALY SELFISH. IF A PERSON SPOILS A WOMEN , HE CAN GO BACK AND SAY SORRY AND GET HER MARRIED AND LEAD A PEACEFUL FAMILY LIFE.//
So, you mean to say that if some girl is raped, then the rapist can marry the victim girl and have “PEACEFUL” life. Wow, amazing. What if the girl is already married? What if the girl doesn’t like that rapist (and no girl will like a rapist) ?
//DOES YOUR GOD GOING TO MARRY THAT GIRL AND LIVE WITH HER ? HAVE YOUR GOD SO FAR DID SO ANYWHERE? //
So, you think that marriage is the only thing in life? If GOD wants she can live a much more meaningful life than any married women. If GOD wants some broadminded man (whom the girl also likes) will come forward to marry the girl. GOD can heal the girl’s past life and hurts.
I know, it is too much for me to expect u guys think in a broad sense.
//BUT PEOPLE ARE NOT READY TO BE FOOLED BY YOU//
No one needs to come and fool u. U r good enough to do that for ur own self.
Hard Truth
Jesus is a great sheperd and his follwers are sheeps. Usually no sheep will try to show itself as a sheep to other sheeps deliberately. Because, since they know that they are the sheeps of the Great sheperd, they will remain as they are. Only the wolf in the sheep’s outfit will try to show off like that. Everyone in this blog knows who is showing off themself to be a sheep deliberately. Everyone knows who is blowing their own trumphet. So guys, beware of wolfs.
Hard Truth
//எவ்வளவு கள்ளத் தனம் பாரு. யாரோ பிலாகுல எல்தினதை வச்சிகினு அதை உண்மை மாறி பீலா உடரதுல இருந்தே நீ ஒரு மத வெறி பிடிச்ச ஆளுன்னு தெரியுதே.//
பல கோவில்களில் சிவலிங்கம் இருக்கிறது. சிவலிங்கம் எதை குறிக்கிறது? என் இந்து நண்பர்கள் கூறியது என்னவென்றால், அது சிவபார்வதியின் புணர்ச்சியே. இது ஒரு சிறு உதாரணம்தான்.
Hard Truth
Murugan,
go thru this site too:
http://www.exoticindiaart.com/article/shivalinga/
Can u plz answer this:
What is Lingam? and what is yoni?
Why both of these has to be representation of Shiva and Shakthi?
I just don’t want to say something for the sake of saying. Yeah, I know that lingam is also a mark of “Yupa Stamba” and “Shapelessness of the Universe”. But, majority of the people (mostly hindus) describes that as Male organ.
Who ever writing in the name of Murugan is welcome to discuss and argue. But with some decency.
Hard Truth.
//பிருகு என்னும் முனிவர் சிவனை யாரும் அவருடைய உருவத்திலே வழிபாடு செய்ய கூடாது என்று சொல்லி விட்டார்.//
என்னங்க திருச்சி, பிருகு முனிவர் சொன்னால் OK , ஆனால் மோசஸ் சொன்னால் தப்பா? அதுவும், மோசஸ் சொந்தமா அவர் கருத்தை சொல்லவில்லை.
Hard Truth
முருகன்,
நீங்கள் லிங்க உருவத்திற்கு கொடுத்த விளக்கம் உண்மையிலேயே நன்றாக உள்ளது. இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் ஏன் முன்பு அப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை.
ஆனால், பின்பு எதற்க்காக லிங்கம், யோனி என்றெல்லாம் மற்றவர்கள் விளக்கம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை யாரையும், எதையும் கேவலப்படுத்த அவர்கள் இதை சொல்லவில்லை.
Anyways, thank you,
Hard Truth
திரு CHILLSAM அவர்களே,
எல்லா கடவுளும் ஒன்று தான் என்று நான் கூறியதற்காக ///ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட கோவில்களின் நாயகனான பிரம்மாவுக்கும் கர்த்தருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?///
என்று திரு CHILLSAM கேட்கிறீர்கள்..நான் உருவமுள்ள எந்த கடவுளையும் கர்த்தரோடு ஒப்பிடவில்லையே!!! எல்லையற்ற கருணையும், எல்லையற்ற அன்பும், எல்லையற்ற சக்திகளையும் கொண்ட உருவமில்லாத கடவுளைத் தானே கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும்,பிரம்மம் என்றும் கூறினேன்.!!!
இப்பொழுதுள்ள உலகில் உள்ள பழைய மதங்கள் அனைத்திலுமே ஆபாச கருத்துக்கள் நிறைந்துள்ளது.அதில் கிருஸ்தவ மதமும் அடங்கும் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
திரு முருகன் அவர்களே,
///இது உருவமுள்ள கடவுள்களை குறைத்து சொல்லுவது போல இருக்கிறது. உருவமுள்ள கடவுள்கள் கருணையிலோ அன்பிலோ, சக்தியிலோ எதிலுமே குறைந்தவர்கள் இல்லை///
உண்மையிலேயே நான் உருவமுள்ள கடவுளை குறைத்து சொல்லவில்லை.அனைத்துக் கடவுளும் ஒன்றே என்பதை ஏற்றுக்கொள்ளும் முதல் படி உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொண்டாலே மதமாற்றம், மற்றும் என் கடவுள் மட்டுமே உண்மை என்பது போன்ற வெறுப்பை தூண்டும் தன்மை குறையும்..அவர்கள் நம் உருவக் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதியே அவ்வாறு குறிப்பிட்டேன்.
///மற்ற மதங்களைப் பற்றி நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம், அதிலே ஆபாசக் கருத்துக்கள் எதுவும் இல்லை///
நீங்கள் கூறுவது உண்மை தான்.பௌத்தர்கள் காலத்தில் மிக மோசமான அருவருப்பான ஆபாசக் கருத்துக்கள்,மற்றும் காட்டுமிராண்டித் தனமான சடங்குகள் நம் இந்து மதத்தில் புகுத்தப் பட்டன.அதைப் பற்றி விவேகானந்தர் பல இடங்களில் கூறியுள்ளார்.
//உருவத்திலே மனக் குவிப்பு செய்வது எளிதானது. பெரியாரையோ, காமராசையோ, காந்தியையோ மனதில் நினைத்தவாறே மனக் குவிப்பு செய்து பாருங்கள். முதல் ஒரு வாரம் தினமும் 5 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்ய இயலும். அடுத்த வாரம் 10 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்யக் கூடும். ஆறு மாதம் கழித்தால் ஒரு மணி நேரம் கூட அதே உருவத்திலே மனக் குவிப்பு செய்யும் திறனை ஒருவர் பெறக் கூடும். நீங்கள் எல்லையற்ற , உருவமற்ற என்ற ஒரு நிலையிலே மனக் குவிப்பு செய்யச் சொல்லுங்கள். எல்லோராலும் அது இயலாது. அதிக நேரம் மனக் குவிப்பு செய்வது கடினம்.//
தெய்வத்தை வணங்குவதற்கும் மனக்குவிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒருவருடன் பேச நாம் அவர்மேல் நம் மனதை குவிக்கவேண்டுமா? நான் பல பேருடன் தொலைபேசியில் பேசுகிறேன். அவர்கள் உருவம் எனக்கு ஒரு பொருட்டல்ல. என்னை விடுங்கள், இந்தியாவில் பலர் callcenter வேலை செய்கிறார்கள். பலபேருடன் பலநாட்டினருடன் தொடர்பு கொள்கிறார்கள், அவர்கள் அந்த மக்கள் படங்களை வைத்து மனக்குவிப்பு செய்கிறார்களா?
நீங்கள் மனக்குவிப்பு பயிற்சி செய்வதையும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையும் குழப்பிகொள்கிரீர்கள் என்றே நினைக்கிறேன்.
Hard Truth
//உருவ வழிபாட்டை கண்டித்து , எள்ளி நகையாடி முழு நாத்தீகராக திகழ்ந்த பகுத்தறிவாளரான விவேகானந்தர், தான் உருவ வழி பாட்டின் மூலம் மிக உயரிய ஆன்மீக நிலையை அடைந்த ஒருவரின் ( இராம கிருஷ்ணர்) மூலமே தான் மிகப் பெரிய உண்மைகளை உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.//
விவேகானந்தர் கூறியது உண்மை என்று எப்படி நம்புவது? என்ன ஆதாரம் உள்ளது? அது பொய்யாக இருக்க சாத்தியம் இல்லையா?
//உருவத்தை வழிபடுபவனை இழிவாக நினைக்கவோ, அவனை வெறுக்கவோ அவசியம் இல்லை.//
உருவ வழிபாடு செய்பவனை யாரும் இழிவாக நினைக்கவில்லை, அவனை யாரும் வெறுக்கவும் இல்லை. உருவ வழிபாடு செய்வது ஒருவனை நரகத்தில் தள்ளும் என்று நான் நினைத்தால், அவனை நான் வெறுக்கும் பட்சத்தில், அவனை நான் அப்படியே விட்டுவிடுவேன். அவன் மீது அன்பு கொண்ட காரணத்தினால்தான் உங்களை போன்றோர் எங்களை குறை சொன்னாலும் பரவாஇல்லை என்று எங்கள் நேரத்தை செலவிட்டு, நாங்கள் நம்பும் உண்மையை கூறுகிறோம்.
//உருவமற்ற முறையில் கடவுள் இருப்பதாகக் கருதி வழிபடுகிறானோ, உருவத்தைக் கடவுளாகக் கருதி வழி படுகிறானோ, தன்னையே கடவுளாக நினைத்து வழிபடுகிறானோ, எப்படியோ அமைதியாக வழிபட்டால் சரி. //
அதாவது இந்துக்கள் செய்வது சரி மற்றவர்கள் செய்வது/சொல்வது தவறு என்று “நாகரீகமாக” சொல்கிறீர்கள்.
//முதலில் கடவுள் என்று ஒன்று இருப்பதை காட்ட வேண்டும்,
பிறகு கடவுள் உருவம் இல்லாத நிலையில் மட்டுமே இருக்கிறார் என்பதையும் காட்ட வேண்டும்,
பலருக்கும் உருவத்தை அளிக்கும் அவர் தனக்கு ஒரு உருவத்தை எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத நிலையில் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.
இத்தனையும் நிரூபித்து விட்டு அவர்கள் உருவ வழிப்பாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று சொன்னால் அதை நாம் ஒத்துக் கொள்ளலாம்.//
எங்களுக்கு எங்கள் வேதத்தில் கொடுத்த கட்டளை, சத்தியத்தை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளுதல். உண்மையை மற்றவர்க்கு சொல்லுதல். நாங்கள் சொல்கிறோம், சொல்லுவோம். நம்புவதும், நம்பாமல் இருப்பதும், ஒத்துகொள்வதும், ஒத்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். உங்களுக்கு சொல்வதே எங்கள் கடமை, உங்களை ஒத்துகொள்ளவைப்பது எங்கள் கடமை அல்ல.
கிருஸ்துவரில் சிலர் ஆர்வகோளாறால், பிறரை ஒத்துக்கொள்ளவைக்க நினைத்து அவப்பெயரை, அவர்களுக்கும் கிருஸ்துவதிர்க்கும் தேடிகொடுத்தனர்.
ஆனால் உண்மையை சொல்லுதல் மாத்திரம் கண்டிப்பாக நடந்துகொண்டே இருக்கும். நீங்கள் எங்களை காட்டுமிராண்டிகள், முரட்டு பிடிவாதக்காரர்கள், காழ்ப்புனற்சிக்காரர்கள் என்று கூறினாலும், காரி உமிழ்ந்தாலும், துன்புறுத்தினாலும், கொன்றாலும், இது நடக்கும்.
Hard Truth
//ஒருவர் தெய்வத்தை வணங்குவது என்றால் என்ன, அந்த தெய்வத்தை நினைத்து வேண்டுவது, அந்த தெய்வத்திடம் மனக் குவிப்பு செய்வது என்பதே. வழிபாடாக இருந்தால் அதற்க்கு மனக் குவிப்பு வேண்டாமா? மனக் குவிப்பு இல்லாமல் எப்படி வழிபாடு செய்ய முடியும்? வேறு ஏதோ ஒரு சிந்தனையை வைத்துக் கொண்டு தெய்வத்தின் முன் நிற்ப்பதோ, முழங்கால் போடுவதோ வழிபாடு ஆகுமா? //
இதுதான் உருவவழிபாட்டின் முதல் பிரச்னை.
நீங்கள் தெய்வத்தை சுருக்கி ஒரு பொருளாக வைத்தபின் அந்த பொருளின்மேல் மனதை குவிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி குவிக்காவிட்டால் உங்கள் பிரார்த்தனை கடவுளை அடையாது என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள், உங்கள் மனதை குவித்து உங்கள் எண்ணங்களை ப்ரார்தனைகளாய் கடவுளிடம், செலுத்த பார்கிறீர்கள்.
நாங்கள், தேவனால் அனைவரது உள்ளங்களையும் அறிய முடியும் என்று நம்புகிறோம். அவர் சர்வ வல்லவர் என்று நம்புகிறோம். அதனால் எங்களுக்கு எங்கள் பிரார்த்தனையில் மனகுவிப்பும் தேவை இல்லை, அந்த மனக்குவிப்புகாக ஒரு விக்கிரகமும் தேவை இல்லை. என்னை பொறுத்தவரை, தொலைபேசியில் பேச எந்த அளவுக்கு மனக்குவிப்பு தேவையோ அந்த அளவு மனக்குவிப்பு ஒரு நல்ல பிரார்த்தனைக்கு போதுமானது.
வேதம் கூறுகிறது “ஆவியோடும், உண்மையோடும் அவரை தொழுதுகொள்ளுங்கள்” என்று. இதில் மனக்குவிப்பு இடம் பெறவே இல்லை.
Hard Truth
//நாங்கள் யாரை என்ன துன்புறுத்துகிறோம், நாங்கள் தான் எல்லோரின் வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம் என்று சொல்கிறோமே. //
நீங்கள்தான் RSS போன்ற கும்பல்களை வைத்துகொண்டு அடாவடி செய்கிறீர்களே? ஆலய உடைப்பு செய்கிறீர்களே. கொலைகளை செய்கிறீர்களே.
//கொன்றது யார், குருசெடு போர்களை நடத்தி பல கொடிக்கனக்கானவரைக் கோடிக் கணக்கானவரைக் கொன்று குவித்தனர்.//
குருசெடு போர்களின் ஆதரவாளன் நான் அல்ல. இப்போதைய பெரும்பான்மையான கிறிஸ்துவர்களும் அதற்க்கு ஆதரவானவர்கள் அல்ல. ஏசுவும் ஆயுதம் எடுத்து போர் புரிய சொல்லவில்லை.
ஆனால், நீங்கள் குறிப்பிடும்படி குருசெடு போர்கள், கிறிஸ்துவத்தை பரப்ப நடந்த போர்கள் கிடையாது. முன்பு கிருஸ்துவநாடாக இருந்த இடங்களை இஸ்லாமியர் கைப்பற்றினர். அங்கே இஸ்லாத்தை வாளால் பரப்ப முயற்சி நடந்தது. அவற்ற்றை தடுக்கவே, இஸ்லாமிய ஆக்கிரமிப்பை வெளியேற்றவே குருசெடு போர்கள் நடைபெற்றது.
//யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை, நான் சாட்சி குடுக்கிறேன், அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.//
//இதிலே உண்மை என்னவென்றால், ஒரு தரப்பாரும் கடவுளை பார்க்கவில்லை.//
யாரும் பார்க்கவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?
நீங்கள் ஒரு நடுநிளையாலனை போல காட்டிக்கொள்ள நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நடுநிலையாளன் அல்ல என்று உங்கள் வார்த்தைகள் காட்டுகிறது.
ஒரு நடுநிலையாளன், “அவர்கள் பார்த்தும் இருக்கலாம், பார்க்காமலும் இருக்கலாம்” என்றே கூறுவானே தவிர உங்களை போல பேசமாட்டான்.
யாரும் பார்க்கவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? உங்கள் வார்த்தைகள் நீங்கள் நடுநிலையில் இருந்து பேசுவதாக காட்டவில்லை. நீங்கள் உண்மையாய் நடுநிலையில் இருந்து பேசினால், அவர்கள் பார்த்து இருக்கலாம் அல்லது பார்க்காமலும் இருக்கலாம் என்றே கூறுவீர்கள். மற்றபடி, கற்பனை தேவன் என்றெல்லாம் கூறமாட்டீர்கள்.
Hard Truth
//உங்களின் வழிபாட்டை இகழவோ, தவறு என்று சொல்லவோ, வெறுக்கவோ இல்லையே. //
ஏன் எனில் உங்களின் ஒரு சாரார் அரூவ வழிபாடு செய்கிறார்களே. மேலும், மற்றவர் மேல் எங்களை போல் உங்களுக்கு அக்கறை இல்லை.
//நாங்கள் உருவ வாழிபாடுதான் ஒரே வழி என்று சொல்லவில்லையே//
நல்லது.
//பிரச்சினை உங்களுக்குத்தான், உங்களால உருவ வழிபாட்டை சகித்துக் கொள்ள இயலவில்லை.//
அடுத்தவன் கேட்டுக்கு செல்வதை சகித்துக் கொள்ள இயலவில்லை.
Hard Truth
//நீங்கள் பிரேயர் செய்யும போது உங்களின் மனதில் இயேசு கிறிஸ்துவை நினைக்கிறீர்களா இல்லையா?//
Thinking of Christ. Not of any image. No visualizations.
Hard Truth
சகோ. திருச்சிக்காரர் அவர்களே,
.
எல்லா மதத்தினரும் தனது கடவுள் இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததால்,அவர் (இந்த பிரபஞ்சத்தை விட ???)மிகப் பெரியவர், எல்லையில்லாதவர், என்றே கூறுகின்றனர்.அந்த எல்லையில்லாத கடவுள் இரண்டாகவோ, மூன்றாகவோ,பலவோ இருக்கமுடியாது என்பதை நாம் ஓரளவுக்கு அனுமானிக்க முடியும்.இந்த வகையில் எல்லையில்லாத கடவுள் ஒரே ஒருவர்தான் இருக்க முடியும் என்று திரு hard truth போன்ற படித்தவர்களும் புரிந்து கொள்ள முடியும்.ஒரே கடவுளையே வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர் என்பதைப் புரிய வைக்கமே முயன்று கொண்டிருக்கிறேன்.நான் இந்து மதத்தில் சொல்லப்பட்ட உருவமற்ற கடவுளை ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை.அனைத்தும் ஒன்றே என்று புரிய வைக்கவே முயன்றுகொண்டிருக்கிறேன்.
இந்த வகையில் நான் வுருவக் கடவுளை எள்ளளவும் குறைவாகக் கூறவில்லை.அத்வைதத்தை கூறிய சங்கரரே உருவமுள்ள கடவுளை வணங்கியிருக்கிறார்.சக்தியின் மேல் பல ஸ்லோகங்களை இயற்றியுள்ளார்.எண்ணற்ற சித்தர்கள், மகான்கள்,ரிஷிகள் போன்றோரும் உருவக்கடவுள் மூலமே கடவுளை உணர்ந்துள்ளனர்.அருவக் கடவுளை தியானிப்பது மிகக் கடினமே.மிஞ்சிப் போனார் விவேகானந்தர் கூறியது போல் பரந்த வெளியையும்,பரந்த ஆகயத்தையுமே நினைக்க முடியும்.கடவுள் உருவாகவும்,அருவாகவும் இருக்கிறார் என்பதை ராமகிருஷ்ணர் போன்ற பல மாகான்கள் உணர்ந்து கூறியிருக்கிறார்கள் .நானும் உருவக் கடவுளையே வணங்குகிறேன்.
///யூத மதத்தினர், இஸ்லாமியர்கள் இவர்கள் இருவருமே உருவமற்ற நிலையிலே மட்டுமே கடவுள் இருக்க முடியும் என்கிற ஒரு கருத்திலே மிக உறுதியானவர்கள்.///
ஆனால் அந்த உருவமற்ற இரண்டு மத கடவுளும் ஒருவரே என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. உருவமற்ற தங்கள் கடவுள் வேறு,மற்ற உருவமற்ற கடவுள் வேறு என்றே கருதினார்கள்.
நான் எல்லையிலாத கடவுள் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்பதை புரிய வைப்பதே எனது வழியாக இருக்கிறது.அதனால் நான் எழுதியது உருவக்கடவுளை குறைத்துக் கூறுவது போல் கருதினால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர் திருச்சிக்காரர்,
நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்கு ஒத்து வராதவர்களை விரோதியாக பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. நாங்கள் ஏன் உருவ வழிபாட்டை ஆமோதித்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மற்றவர் சுதந்திரத்தை பற்றி பேசும்போது இருக்கும் வேகம், கிருஸ்துவர்கள் சுதந்திரம் மீது இல்லையே. எனக்கு உருவவழிபாடு ஒரு தீமையான விஷயமாக தெரிகிறது. உருவவழிபாட்டில் நான் கலந்துகொள்ளமாட்டேன். அது என் சுதந்திரம் இல்லையா? நாங்கள் ஏதாவது கோவிலுக்கு போய் வழிபாட்டை தடுத்தோமா? அல்லது வீட்டுக்குள் உருவவழிபாடு செய்பவருடன் பிரச்சனை செய்தோமா? அரசியல் செய்வதற்காக, சிலர் அப்படி செய்து இருக்கிறார்கள். அதற்க்கு கிறிஸ்த்துவர்கள் பொறுபேற்க முடியாது. அரசியல்வாதிகள் இந்துத்துவம் பெயரைகொண்டும் பல செயல்கள் செய்கிறார்கள். பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இந்துக்கள் அனைவரும் பொறுபேற்க முடியுமா?
புகைப்பிடிப்பது ஒரு தவறான விஷயம், அறிவியல் ரீதியாக இதை நிரூபிக்க முடியும். புகைபிடித்தல் ஒருவருக்கு மட்டும் அல்ல பலருக்கும் அது பிரச்சனைதான். ஆனால், புகைபிடிக்கும் ஒருவரை பார்த்து “நீங்கள் இதை நிறுத்தவேண்டும்” என்று நாம் சொல்ல முடிகிறதா? ஆனால் அந்த நபர் நமக்கு தெரிந்தவராக இருந்தால் பேச்சுவாக்கில் அது தவறு என்று நான் சொல்கிறேன், ஆனாலும் அதை அழுத்தமாய் சொல்லமுடிவதில்லை. ஏனென்றால் அது அவர் தனிப்பட்ட விஷயமாக உள்ளது.
இப்போதைய உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவியல் ரீதியாக என்னால் நிரூபிக்க முடியாத ஒருவவழிபாட்டு பிரச்னையும் ஏறக்குறைய அப்படிதான். (உங்கள் வழிப்பாட்டை புகைப்பிடித்தலுக்கு ஒப்பிட்டதற்கு என்னை மன்னிக்கவும், உங்களை புண்படுத்துவது என் நோக்கம் அல்ல, என் நிலையை புரியவைக்கவே நான் பாடுபடுகிறேன்). எனக்கு பழக்கபட்டவருக்கு, நான் நல்லது என்று எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன். அதை எடுத்துகொள்வதும், மறுப்பதும் அவர் இஷ்ட்டம். என் கருத்தை அவர் ஏற்க்கவில்லை என்று நான் அவரை பகைக்கமாட்டேன், இகழமாட்டேன். என் குறைகளை நிவர்த்தி செய்வதே எனக்கு பெரிய வேலையாக உள்ளது.
உங்கள் கருத்துக்கள் கிருச்த்துவர்களை, முரடர்களை போலும், கொலை பாதகர் போலும் காட்டுகிறது.
உங்களுடன் சமாதானமாகவும், அன்போடும் பழக உண்மையில் என் மனம் ஏங்குகிறது. நாம் சகோதரர்களே.
நண்பர் தனபாலுக்கு, அவர் அன்புக்கு என் வணக்கம்.
அசோக்
திரு HARD TRUTH ,மற்றும் CHILLSAM அவர்களே,
///பல கோவில்களில் சிவலிங்கம் இருக்கிறது. சிவலிங்கம் எதை குறிக்கிறது? என் இந்து நண்பர்கள் கூறியது என்னவென்றால், அது சிவபார்வதியின் புணர்ச்சியே. இது ஒரு சிறு உதாரணம்தான்.
Hard Truth///
///ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட ///என்று CHILLSAM கூறுகிறார்.
திரு HARD TRUTH ,மற்றும் CHILLSAM
எல்லாமதத்தினரும் தன் கடவுளை எப்படி பக்தியுடன் வணங்குகிறார்களோ, அப்படியே இந்துக்களும் சிவனை லிங்க ரூபமாக வணங்குகிறார்கள்.
எண்ணற்ற சித்தர்கள், மகான்கள், நாயன்மார்கள், துறவிகள், சிவ பக்தர்கள் மற்றும் இந்துக்கள் இந்த சிவலிங்கத்தை ஜோதி சொருபமாக, இந்த பிரபஞ்சத்தை படைப்பவனாக, தந்தையாக வணங்குகிறார்கள்.
எத்தனையோ பேர் இந்த சிவலிங்கத்தை ,பக்தியுடன், ஆனந்தக் கண்ணீருடன், மயிர் சிலிர்க்க வைக்கும் அனுபவத்துடன்,உள்ளத்தை உருக வைக்கும் அனுபவத்துடன், வணங்கியிருக்கிறார்கள், வணங்குகிறார்கள்.
எத்தனை எத்தனை சித்தர்கள், மகான்கள், நாயன்மார்கள், துறவிகள், சிவ பக்தர்கள் இந்த சிவலிங்கத்தை பக்தியுடன் வணங்கி இறைவனுடன் இரண்டறக் கலந்திருக்கிறார்கள்.எத்தனையோ பேர் இந்த சிவலிங்கத்தை பக்தியுடன் வணங்கி நிர்விகல்ப்ப சமாதி அடைந்திருக்கிறார்கள்.
எத்தனையோ பேர் இந்த சிவ லிங்கத்தை வணங்கி காமம், கோபம், வெறுப்பு போன்ற தீய குணங்களை விட்டிருக்கிறார்கள்.
எத்தனையோ பேர் இந்த சிவலிங்கத்தை வணங்கி காமம் சிறிதும் இல்லாத தூய பிரம்மச்சர்ய வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
காம எண்ணம் உள்ளவனும் கூட, பக்தியுடன் சிவலிங்கத்தை வணங்கும் போது அந்த எண்ணம் அவனை விட்டு நீங்கிவிடுகிறது..
அப்படிப் பட்ட சிவலிங்கத்தைப் பார்க்கும் எந்த இந்துவிற்கும் காம இச்சை தூண்டப் படுவதில்லை என்பதை உங்களுக்குத் தெரியப் படுத்த விரும்புகிறேன்.
மேலும், இந்த பிரபஞ்சம், மற்றும் உயிர்களின் படைப்புத் தத்துவமே லிங்க தத்துவம்.
சாங்கியத் தத்துவத்தின்படி கடவுள் (புருஷன்) பிரகிருதியிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார்.பிரகிருதி என்பது தோன்றா நிலையிலுள்ள ஆதி பிரபஞ்சம்.அதாவது இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அணுத் தொகுதிகளால் உருவானதே .அந்த அணுக்களுக்கு முந்தைய நிலையே, எந்தவித இயக்கமும் இல்லாத நிலையே, இந்த பிரபஞ்ச ஒடுக்கத்திற்கும், விரிவிற்கும் இடைப்பட்ட நிலையே “பிரகிருதி” ஆகும்.கடவுள் இந்த பிரகிருதியில் கலந்து, இந்தப் பிரகிருதியை வெளிப்பட,அல்லது விரியச் செய்ததன் மூலமே இந்த பிரபஞ்சமும், உயிர்களும் உருவானது.அதனால் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரிலும்,ஒவ்வொரு அணுக்களிலும் கடவுள் இரண்டறக் கலந்து இருக்கிறார்.அதாவது கடவுளும் , பிரகிருதியும் இரண்டறக் கலந்த நிலையே இந்த பிரபஞ்சமும், உயிர்களும்.
இந்த படைப்பு பற்றிய சாங்கிய தத்துவத்தையே, புராணங்கள் மூலம் விவரிக்கப் படுகிறது.கடவுள் (புருஷன்) சிவன் என்றும் , இந்த பிரகிருதியையே சக்தி எனவும், கடவுள் – பிரகிருதி சேர்ந்த நிலையிலேயே இந்த பிரபஞ்சமும், உயிர்களும் தோன்றியது என்ற படைப்பு பற்றி சாங்கிய தத்துவத்தை, புராணங்கள் கூறுகின்றன.இது தான் லிங்க தத்துவம்.
நமது உடல் என்பது பிரகிருதியால் உருவானது. அதில் ஆன்மா என்பதே புருஷன் (கடவுள்) .இதுவே படைப்புப் பற்றிய சாங்கிய தத்துவம்.
கடவுள் ஆண், பெண் பால் வேறுபாடற்றவர். தோன்றாத நிலையில் உள்ள பிரபஞ்சமான பிரகிருதியும் பால் வேறுபாடற்றதே.கடவுள், பிரகிருதி ஆகிய இரண்டும் கலந்ததே இந்தப் பிரபஞ்சமும் உயிர்களும்.
இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட தத்துவத்தை குறிக்கும் சிவலிங்கம் தத்துவத்தை தவறாக புரிந்துகொண்டதாலேயே இந்த ஆபாச கருத்து உருவாக்க்கப் பட்டுள்ளது.
இந்த லிங்க தத்துவம் ஆபாசமான கருத்தாக மாறியதற்குக் முக்கிய காரணம் ,பௌத்தர்கள் காலத்தில் வாழ்ந்த ஆபாச கலாச்சாரம் கொண்ட,பண்பாடற்ற இனத்தவர்களே ஆகும்.
பௌத்தர்கள் காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த அனாகரீகமானவர்களைப் பற்றி விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்.
”பிற நாட்டு இனத்தினர் தங்கள் விசித்திரமான மூட நம்பிக்கைகளோடும், பழக்க வழக்கங்கலோடும், கூட்டம், கூட்டமாக உள்ளே நுழைந்தனர்.இதை எண்ணிப் பாருங்கள் துணி உடுத்தக் கூட போதிய பண்பாடு இல்லாதவர்கள், அழுகிய இறைச்சியை தின்பவர்கள் இத்தகையோர், உள்ளே நுழைந்தனர்.அவர்களுடன் நரபலி, மூட நம்பிக்கை, கொடூர வழிபாடுகள் முதலானவையும் தொடர்ந்து வந்தன.” -சுவாமி விவேகானந்தர் ,ஞான தீபம்,7 .பௌத்தர்கால இந்தியா ,பக்கம்-241
“பௌத்த மதத்தின் எழுச்சியால் நேர்ந்த விபரீதங்களை விவரிப்பதற்கு எனக்கு நேரமோ, விருப்பமோ இல்லை.மிகக் கொடூரமான சடங்குகளும், எந்த மனிதனும் கைகளும் இதுவரை எழுதாத, எந்த மூளையும் இதுவரை சிந்திக்காத, மிகப் பயங்கரமான, மிக ஆபாசமான நூல்களும், மதத்தின் பெயரால் இதுவரை செய்யப்பட்டவற்றுள் சகிக்க முடியாத அளவுக்கு மோசமான சடங்குகளும் எல்லாமே, வீழ்ச்சியுற்ற புத்த மதத்திலிருந்து தோற்றுவிக்கப் பட்டவைதான்.”-சுவாமி விவேகானந்தர்.ஞானதீபம்-5 ,இந்திய ரிஷிகள் , பக்கம்.185
மேலும் இந்த சிவலிங்கம் பற்றிய ஆபாசக் கருத்தை விவேகானந்தர் மறுத்துக் கூறியுள்ளார்.
“சிவலிங்கம் இனவிருத்தி உறுப்பின் சின்னம் என்பது, புத்த மதம் அழியத் தொடங்கிய போது, இந்தியாவின் பெருமை குறையத் தொடங்கிய போது யோசனையற்ற முறையில் கூறப்பட்ட கொள்கை ” -சுவாமி விவேகானந்தர்.ஞானதீபம் 11 ,பக்கம்- 467 .
(சகோ.திருச்சிக் காரரும் இதையே தான் கூறியிருந்தார்.
/// ஆண் பெண் புணர்ச்சி யைக் காட்டும் சிற்பங்கள் புத்தமதம் வீழ்ச்சி அடைந்தகாலத்தில் , அதை நிலை நிறுத்த உருவாக்கப் பட்ட ///)
எனவே,புருஷன்- பிரகிருதி மூலம் நிகழும் பிரபஞ்ச படைப்பைக் குறிக்கும் லிங்க தத்தவத்தை பௌத்தர்காலத்தில் இருந்த பண்பாடற்ற, நாகரீகமற்ற மனிதர்களால் புரிந்து கொள்ளமுடியாமல் வெறும் ஆண், பெண் சேர்க்கையாக புரிந்து கொண்டு ஆபாசக் கருத்துக்களை உருவாக்கினர் என்பது விவேகானந்தரின் கருத்துக்கள் மூலம் தெளிவாக அறியமுடிகிறது.
இந்து மதத்திற்கு வேதங்களே அடிப்படை.வேதத்தில் உள்ள உண்மைகளையே, புராணங்கள் மூலம் காலத்திற்க்கேற்றவாறு விவரித்துக் கூறுகின்றனர்.அப்படி கூறும்போது புராணங்களின் ஏதாவது பகுதிகள், வேதங்களிலிருந்து வேறுபடும் போது, வேதங்கள் கூறுவதையே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது விதி.அதையே விவேகானந்தரும் கூறுகிறார்.
அதன்படி வேதத்தில் அதர்வண வேத சம்ஹிதையில் சிவலிங்கம் யூபஸ்தம்பமாக அதாவது யாகத் தூணிலிருந்து தோன்றியதாகவும், முதலும், முடிவும் அற்றதாகவும், நிலையான பிரம்மத்தின் வடிவமாகவும் கூறப்படுகிறது.லிங்க புராணமும் இதையே கூறுகிறது.
எனவே வேதத்தில் லிங்கம் பற்றி எந்த ஒரு ஆபாச புணர்ச்சிக் கருத்துக்கள் இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
இந்து மதத்திற்கு வேதங்களே அடிப்படை.எனவே வேதத்தில் இல்லாத லிங்கம் பற்றிய ஆபாசக் கருத்துக்கள்,ஆதாரமற்ற, அருவருப்பானவர்களின் கருத்துக்களே.
லிங்கம் என்றால் ஒரு அடையாளம், குறியீடு என்பதாகும்.குறிப்பாக நீள்வட்ட வடிவமே லிங்கமாகும்.தொடக்கம் முடிவில்லாத, அருவமாகவும் உருவமாகவும் உள்ள இறைவனை குறிக்க மிகச்சிறந்த வடிவம் லிங்க வடிவமே.அளப்பரிய சக்தியை பல காலம் தேக்கிவைக்க மிகச் சிறந்த வடிவம் லிங்க வடிவமே.சக்திவாய்ந்த அணு சக்தியையும்,பலகாலம் தேக்கி வைக்க, மிகச் சிறந்த வடிவம் லிங்க வடிவமே என்று அறிவியலார் அறிந்த காரணத்தாலேயே, அந்த லிங்க வடிவ அணு கொள்கலன்களையே அணு மின் நிலையங்களில் பயன் படுத்துகின்றனர்.இப்பிரம்பஞ்ச சக்தியின் ஆதிவடிவம் லிங்க வடிவமே.
சிவனை மட்டுமல்ல பல மகான்கள்,யோகிகள், சித்தர்கள், ரிஷிகள் போன்றோர்களையும் லிங்க வடிவிலேயே வணங்குகிறோம்.அதனால் குறிப்பாக சிவனை குறிக்கும் லிங்கத்தை குறிப்பிட சிவலிங்கம் என்று கூறுகிறோம்.
எங்கும் நிறைந்திருக்கும்,ஆகாச தத்துவத்தையும், ஜோதிசொருபத்தையும் குறிக்கும் சின்னமாகவே லிங்கம் உள்ளது.பெரும் நெருப்போ, சிறிய தீ சுடறோ காற்றால் பாதிக்கப்படாமல்,ஆடாமல் அசையாமல் எரியும் போது லிங்க வடிவிலேயே காணப்படும்.
லிங்கம் என்பது தொடக்கமும் ,முடிவும் இல்லாத ,உருவாகவும்,அருவமாகவும் உள்ளதைக் குறிக்கும் ஒரு வடிவம்.
இந்த பிரகிருதியே சக்தி பீடமாக கூறப்படுகிறது. இந்த சக்தி பீடமானது வட்டம்,சதுரம் போன்ற வடிவில் இருக்கும்.மேலும் சில இடங்களில் விநாயகர், முருகர், மற்றும் சக்தி சிலை கூட இந்த ஆவுடையார் என்னும் சக்தி பீடத்தின் மேல் பிரதிஸ்டை செய்யப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
மேலும் லிங்கம், சக்தி பீடம் இல்லாமலேயே பல கோவில்களில் காணப்படுகிறது.
இஸ்லாத்தில் பாவங்கள் இருவகையாக உள்ளன. ஒன்று மனிதன் கடவுளுக்கு செய்யும் பாவம். இரண்டு மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவம்.
இதில் முதல்வகை என்னவென்றால்…
இறைவன் நமக்கு கட்டளையிட்டதை செய்யாமல் இருப்பது.
அதாவது.
இறைவனை வணங்காமல் இருப்பது.
பெற்றோர்களுக்கு பணிவிடை செய்யதிருப்பது.
இறைவன் கொடுத்த செல்வம் இருந்தும் பிறருக்கு தானம் செய்யாமல் இருப்பது.
நாம் நம் உடலுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறுவது( அதாவது தூங்காமல் எந்நேரமும் வழிபடுவதால் கண்ணிற்கு ஓய்வு கொடுக்க தவறுவது.)
இது போன்று பல…
இப்பாவங்கள் மனிதனுக்கும் இறைவனும் இடையில் உள்ளது, இதை இறைவன் நாடினால் மன்னிக்கலாம் அல்லது அதற்கான தண்டனையை வழங்கலாம்.
இரண்டாவது வகை பாவம் என்னவென்றால்
அடுத்தவரின் சொத்தை அபகரிப்பது.
அடுத்தவரின் வீண்பழி சுமத்துவது.
அடுத்தவருக்கு துன்பம் விளைவிப்பது.
தன் வியாபாரம் பெருக அடுத்தவரின் வியாபாரத்து சீர்குலைப்பது.
இது போன்று பல…
இப்பாவங்களை பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்ப்படாத வரையில் இறைவன் மன்னிக்கமாட்டார்.
முதலில் மனிதனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் பிறகு இறைவனிம் மன்னிப்பு கேட்டவேண்டும்
மன்னிக்கப்படாத பாவங்கள்
இறைவனுக்கு இணை கற்பிப்பது.
பெற்றோருக்கு கொடுமை இழைப்பது.
அப்பாவியை கொலை செய்வது ( இதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனை மட்டுமே தீர்ப்பு)
பொய்சாட்சியம் சொல்வது. போன்றதாகும்
கற்பழிப்பது ( இதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனை மட்டுமே தீர்ப்பு)
திரு அசோக் அவர்களே
உங்கள் நண்பர் புகைப்பிடிப்பதை தவறு என்று நீங்கள் சொல்வதாக கூறுகிறீர்கள்.ஆனால் உண்மையில் உங்கள் நண்பர் நெடுநாட்களாகப் உபயோகித்து வந்த BRAND ஐ தான் நீங்கள் தவறு என்று கூறி நீங்கள் உபயோகிக்கும் BRAND சிகரெட்டை கொடுத்து, இது அதைவிட சிறந்தது என்றல்லவா கூறுகிறீர்கள்???
மேலும் உங்கள் நண்பர் இந்திய தயாரிப்பில் உருவான பல்வேறு வகையான பீடி,சிகரெட்,சுருட்டு (குலதெய்வ,சித்தர்,உருவ,மற்றும் அருவ கடவுளை வணங்குவது) போன்றவற்றைப் பயன்படுத்துவராக இருந்தால், உங்கள் வெளிநாட்டுத் தயாரிப்பான ஒரே ஒரு BRAND சிகரெட்டை மட்டும் நீங்கள் தரும்போது அது அவருக்கு நன்மை தரும் என்று கருதுகிறீர்களா ???
///நண்பர் தனபாலுக்கு, அவர் அன்புக்கு என் வணக்கம்.
அசோக்///
உங்கள் அன்பு வணக்கத்திற்கு மிக்க நன்றி.
சகோ.தனபால்,
விக்ரகவழிபாடு யாருடைய விக்ரகத்தை வைத்து செய்தாலும் அது தவறுதான். அதனால், உங்கள் “புகைபிடித்தல்” உவமை என் கருத்துக்கு பொருந்தாது.
அன்புடன்,
அசோக்
திரு அசோக் அவர்களே,
///கிருஸ்துவ சபைகளே செய்தாலும் குற்றம் குற்றமே. சிலை வழிபாடு, வேதத்திற்கு புறம்பானது///
///விக்ரகவழிபாடு யாருடைய விக்ரகத்தை வைத்து செய்தாலும் அது தவறுதான்.///
இயேசு கிறிஸ்துவின் சிலையை சர்ச்சில் கிருஸ்தவர்கள் வணங்குகிறார்களே இது தவறு என்று கூற வருகிறீர்களா ? தெளிவு படுத்தவும்.
//இயேசு கிறிஸ்துவின் சிலையை சர்ச்சில் கிருஸ்தவர்கள் வணங்குகிறார்களே இது தவறு என்று கூற வருகிறீர்களா ? தெளிவு படுத்தவும்.//
That is also against bible.
Thanks,
Ashok
சகோ.அசோக் அவர்களே,
///சகோ.தனபால்,
விக்ரகவழிபாடு யாருடைய விக்ரகத்தை வைத்து செய்தாலும் அது தவறுதான். அதனால், உங்கள் “புகைபிடித்தல்” உவமை என் கருத்துக்கு பொருந்தாது///
நீங்கள் உருவ வழிபாட்டை புகைப் பிடித்தளுடன் ஒப்பிடீர்கள்.இப்போதுள்ள இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய, புத்த போன்ற பிரபலமான மதங்களில் இந்து மதத்தில் மட்டுமே உருவ வழிபாடு வெளிப்படையாக உள்ளது.அதனால் நீங்கள் கூறும் உருவ வழிபாடு தவறு என்பது இந்து மதம் தவறு என்று தான் வெளிப்படையான பொருள்.அதனால் நீங்கள் கூறிய புகைப் பிடித்தல் உவமை இந்து மதத்தை குறிப்பிடுவதாகவே கருதுகிறேன்.நீங்கள் உங்கள் நண்பரிடம் உருவ வழிபாட்டை தவறு என்று கூறுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை.ஏசுவைப் பற்றியும், கிருஸ்தவ மதத்தைப் பற்றியும் கூறி இயேசுவை ஏற்றுக் கொள்ள, அதாவது கிருஸ்தவ மதத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறீர்கள்.அதனால் நான் கூறிய BRAND சிகரெட் உவமை உங்கள் புகைப்பிடித்தல் உவமையுடன் பொருந்துவதாகவே கருதுகிறேன்.
நண்பர்கள் திரு HARD TRUTH மற்றும் திரு CHILLSAM அவர்களே,
//இயேசு கிறிஸ்துவின் சிலையை சர்ச்சில் கிருஸ்தவர்கள் வணங்குகிறார்களே இது தவறு என்று கூற வருகிறீர்களா ? தெளிவு படுத்தவும்.//
That is also against bible.///_HARD TRUTH
///நிச்சயமாக இது தவறு..!
இயேசுவானவர் தம்மை சிலையாகச் செய்து வணங்கச் சொல்லி யாருக்கும் கட்டளையிடவில்லை;தமது சீடர்களுக்கும் தமது தாயை வணங்கச் சொல்லி கட்டளையிடவில்லை///_CHILLSAM
கிருஸ்தவர்கள் மேரி மாதாவின் உருவ சிலையையோ, இயேசு கிறிஸ்துவின் உருவ சிலையையோ, வணங்குவது நிச்சயமாக தவறு என்றும், பைபிளில் அவ்வாறு கூறப்படவில்லை என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி.
அப்படி என்றால் பெரும்பான்மையான கிருஸ்தவர்கள் வணங்கும் மேற்கூறிய உருவ வழிபாட்டை அல்லவா முதலில் நீங்கள் சரி செய்ய வேண்டும்.??? கிருஸ்தவர்களிடம் அல்லவா முதலில் மாதாவின் உருவ சிலையையோ, இயேசு கிறிஸ்துவின் உருவ சிலையையோ, வணங்குவது பைபிளின் படி தவறு என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.அப்படி செய்ய நீங்கள் எதுவும் முயற்சி செய்துவருகிரீர்களா???
நண்பர்.CHILLSAM அவர்களே,
///நண்பரே, காம உணர்ச்சியைத் தூண்டுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை;///
/// – அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் ///-என்று நீங்கள் தான் கேள்வி எழுப்பியிருந்தீர்கள்..அதற்க்கு சிவலிங்கம் எந்த ஒரு அருவருப்பான இச்சியையும் தூண்டுவதில்லை என்று கூறியிருக்கிறேன்.ஆனால் இப்பொழுது அதுவல்ல பிரச்சனை என்கிறீர்கள்,///
இறைவனின் படைப்புத் திறனை ஆணுறுப்புடன் சம்பந்தப்படுத்தி வழிபடுகிறீர்களா இல்லையா..?///
இதற்க்கான பதிலை ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.மீண்டும் கூறுகிறேன்.இந்துக்களில் 99 % பேர் அவ்வாறு வணங்குவதில்லை என்பதை தெளிவு படுத்திக்கொள்கிறேன்.எனினும் வட இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட முறையான தாந்திரிய வழியைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே இவ்வாறு வழிபடுகிறார்கள்.
ஆனால் இந்த கருத்தோ, வழிபாடோ வேதத்தில் கூறப்படவில்லை என்பதை மீண்டும் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.உங்களுக்கு எப்படி பைபிள் நிருபனமோ அவ்வாறே எங்களுக்கு வேதமே நிருபனமாகும்.சிலுவை வழிபாடும்,இயேசு கிறிஸ்துவின் சிலை வழிபாடும் எப்படி பைபிளில் சொல்லப்படாமல் ஆனால் பெரும்பாலான கிருஸ்தவர்கள் கடைப் பிடிக்கிறார்களோ, அவ்வாறே இந்த வழிபாடும் வேதத்தில் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட 1 % க்கும் குறைவாக தாந்திரிய வழியைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே அவ்வாறு வணங்குகிறார்கள்.
இந்த 1 % க்கும் குறைவான தாந்திரிய வழியைப் பின்பற்றுபவர்களைத் தவிர மற்ற 99 % இந்துக்கள் சிவனையே லிங்க உருவத்தில் வணங்குகிறார்கள்.எந்த வேதத்திலும்,,சைவ சித்தாந்தங்கள் மற்றும் சித்தர் பாடல்களிலும் எதிலும் இவ்வாறு கூறப்படவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்..
பைபிளில் கூறப்படாத மேரி மாதா உருவ வழிபாடு, இயேசு கிறிஸ்து உருவ வழிபாடு, சிலுவை உருவ வழிபாடு போன்றவை எப்படி பாபிலோனிய, கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்களின் பாரம்பர்ய தொடர்பால் நிகழ்ந்தது என்று கூறுகிறீர்களோ ,அதே போல் தான் வேதத்தில் இல்லாத தாந்திரிய முறை லிங்க வழிபாடு, பௌத்தர்கள் காலத்தில் இந்தியாவிற்குள் வந்த வரம்பற்ற முறையில் உறவு கொள்ளும்,நாகரீகமற்ற நிர்வாணக் கூட்டமே தங்கள் பாரம்பர்ய சிந்தனையைப் புகுத்தி லிங்க தத்துவத்தை தவறாகப் பொருள் கொண்டனர்.
சகோ.தனபால்,
சகோ.சில்சாமோ, நானோ, சகோ.Hard Truthஒ இந்துக்கள் மட்டும்தான் உருவவழிபாடு செய்கிறார்கள் என்று சொல்லவில்லை. நாங்கள் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் சக மனிதர் அனைவருக்கும் சொல்கிறோம். இங்கு எந்த ஒரு கத்தோலிக்கரும் வந்து உருவவழிபாடு சரி என்று வாதிடவில்லை, உருவவழிபாட்டை வெறுக்ககூடாது என்று கட்டளை போடவில்லை. இங்கேவந்து பேசாத மனிதருக்கு நாங்கள் இங்கு என்ன சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
ஒரு விஷயம் சரியா தவறா என்று சிந்திப்பதை விட்டு, யாரோ அடுத்தவன் செய்கிறான் அவனை நிறுத்த சொல்லுங்கள் பிறகு நாங்கள் நிறுத்துகிறோம் என்று நீங்கள் சொல்வது சிறுபிள்ளைதனமாய் தெரிகிறது.
மேரிமாதா விக்ரகத்தை வழிபடுகிறவர்களுக்கு நாங்கள் ஏன் முதலில் சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்கள். எங்களை பொறுத்தவரை நீங்களோ, திருச்சியாரோ, ஒரு கத்தோலிக்கரோ, எல்லாம் ஒன்றே. இப்போது இங்கே இந்துக்களான நீங்கள் உரையாடிகொண்டிருப்பதனால், நாங்கள் இந்துக்களை பற்றி பேசுகிறோம். சிவலிங்கத்தை வழிபடுபவரிடம், மேரிமாதா சிலையை வழிபடாதே என்றா சொல்லமுடியும்??
அன்புடன்,
அசோக்
திரு chillsam அவர்களே,
உங்கள் கேள்விகள் எல்லாமே ரசிக்கும்படி நன்றாகவே இருக்கிறது.பாராட்டுக்கள்.அதில் சில கேள்விகள் பதிலை எதிர்பார்க்கிறது.வேறு சில கேள்விகள் பதிலை எதிர்பார்க்காமல் தன்னிலேயே திருப்தி அடைகிறது.
உங்களுடைய கேள்விகள் அனைத்தும் ஒரு கோணத்தில் இருந்து கேட்கப்படுகிறது.என்னுடைய பதில்கள் அனைத்தும் வேறு கோணத்திலிருந்து சொல்லப்படுகிறது.அதனால் நான் கூறுவது ஒருவகையில் உண்மையாகவே இருந்தாலும் உங்களுக்கு பொய்யாகவே தோன்றும்.
ஏனென்றால் நீங்கள் பார்க்கும் பார்வை வேறு நாங்கள் பார்க்கும் பார்வை வேறு.
மேலும் உங்கள் கோப்பையில் ஏற்கெனவே தேநீர் நிரம்பியிருக்கிறது…..நான் ஊற்றும் தேநீர் உங்கள் கோப்பையிலிருந்து வழிந்தோடிவிடுகிறது ….இருந்தாலும் மீண்டும் நீங்கள் தேநீர் கேட்கிறீர்கள்…..நான் தேநீர் ஊற்றலாமா? வேண்டாமா? என்று யோசிக்கிறேன்.தேனீர் கீழே வழிந்தொடினாலும்,நீங்கள் கேட்பதால் நான் கொஞ்சம் தேநீர் ஊற்றுகிறேன்.
முதலில் நான் மத சண்டை போட வரவில்லை.என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் என்மதம் மட்டுமே உண்மை என்று கூறவில்லை.அனைத்து மதங்களும், அனைத்து கடவுள்களும் உண்மையே என்று நாங்கள் கூறுகிறோம். கொஞ்சம் சிந்தியுங்கள் உங்களால் அனைத்து மதங்களும் உண்மை என்று கற்பனையில் கூட ஏற்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன்.ஏனென்றால் அப்படி ஏற்றுக் கொண்டால் உங்கள் தெய்வீக செயலான அடுத்தவனின் கடவுள் நம்பிக்கையை கெடுத்து அவனை கிருஸ்தவ மதத்தில் சேர்க்கும் கிருஸ்தவ மத லட்சியமான மதமாற்றச் செயல் என்னாவது? உங்கள் லட்சியமான மத மாற்றத்தை செய்ய முடியாதே.???
ஆனால் நாங்கள் எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே இறைவனையே நாம் கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும் பிரம்மம் என்றும் அழைக்கிறோம் என்று கூறுகிறேன்.ஆனால் நீங்களோ இந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.இதற்க்கான காரணம் நீங்கள் உங்கள் மதம்,உங்கள் கடவுள் மட்டுமே உண்மை மற்ற மதங்கள்,கடவுள்கள் பொய்யானவை என்று கருதுகிறீர்கள்.
எல்லாக் கடவுளும், எல்லா மதமும் உண்மையே என்று ஒருவன் கூறுகிறான் என்றால் அவனின் மதத்தின் பெருந்தன்மையை இது வரை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ,கிருஸ்தவ மதத்தைப் பற்றியோ அறிந்து கொள்ள நான் முதலில் செய்யவேண்டியது பைபிளை படிப்பதே.மற்ற மதத்தவர்கள் யேசுவையோ,கிருஸ்தவ மதத்தையோ தாக்கி எழுதிய புத்தகத்தையோ படிப்பதன் மூலம் இயேசுவின் மற்றும் ,கிருஸ்தவ மதத்தின் மீதும் தவறான புரிதலே நிகழும்.அதே போல் தான் மற்ற மதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த மத புத்தகங்களையே நீங்கள் படிக்க வேண்டும்.அப்படி நீங்கள் என்றாவது இந்து மத புத்தகங்களைப் படித்து இருக்கிறீர்களா?
இந்து மத வேதம் அனைத்தும் இயேசுவை பற்றியே கூறுகிறது என்று ஒரு அசிங்கமான சிந்தனையால் எழுந்த குழந்தைத் தனமானக் கருத்துக்கொண்ட ஒரு “அர்த்தமுள்ள இந்து மதம்” (பெயர்கூட சொந்தமாக வைக்க முடியவில்லை,) என்ற சிறு கையடக்க பிரதியைக் கொண்டு எங்கள் வேதத்தை நீங்கள் அறிந்துகொண்டதாகக் கூறுகிறீர்கள்.எங்கள் வேதங்களின் நூல்கள் ஒரு வீடே நிறையும் அளவிற்கு.எண்ணற்றவை.அவ்வளவு பெரிய நூல்களில் உங்கள் ஏசுவைப் பற்றிக் கூறியது ஒரு சிறிய கையடக்கப் பிரதி தானா??? என்ன ஒரு ஏமாற்றம்.
///படைத்தவன் சிவனா,பிரம்மாவா எனும் எனது கேள்விக்கு பதிலில்லை///
எனது நோக்கம் லிங்கம் இந்தியா முழுதும் உள்ள இந்துக்களால் அசிங்கமான பொருளில் வணங்கப்படவில்லை என்பதை விளக்குவதாகவே இருந்தது..அதனால் உங்கள் இந்த கேள்வி எனக்குப் பெரிதாகப் படவில்லை.மேலும் பல்வேறு மக்களின் பல்வேறு மன நிலைக்குத் தக்க இந்தப் பிரபஞ்ச தோற்றம் பற்றி சிறு சிறு மாறுதல்களுடன் கூறப்படுகிறது.அதனால் எழுந்ததே உங்கள் இந்த ///படைத்தவன் சிவனா,பிரம்மாவா /// என்ற கேள்வி.
சிருஷ்டி என்பது படைப்பு அல்ல.வெளிப்பாடே.அந்த இறைவனே தன்னிலிருந்தே இந்த பிரபஞ்சமாக வெளிப்படுகிறான்,தன்னிலேயே ஒடுங்குகிறான்.அதனால் இறைவன் இந்த பிரபஞ்சம் முழுதும்,அனைத்துமாகவும் இருக்கிறான். அந்த இறைவனே,சிவன்,விஸ்ணு,பிரம்மா,சக்தி என்று அழைக்கிறோம்.இறைவன் ஒருவனே அந்த ஒரே இறைவனையே பல பெயர்களில் அழைக்கிறோம்.பிரபஞ்சமாக வெளிபட்டிருப்பவன் கடவுளே,அவனே பிரம்மா,அவனே விஸ்ணு,அவனே சிவன்.அவனே சக்தி,அவனே அல்லா,அவனே கர்த்தர்.
படைத்தவன் பிரம்மாவா?..ஆம் ,சிவனா?…ஆம் ,விஷ்ணுவா?…ஆம், சக்தியா?..ஆம் அல்லாவா?கர்த்தரா? ..ஆம். எல்லாமே அந்த ஒரே கடவுள் தான்.
நீங்கள் எங்கள் மதக் கருத்துக்களை பொய் என்று நிரூபிக்க முயல்கிறீர்கள்.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் அனைத்து மதங்களிலும் முரண்பாடான விசயங்கள் இருக்கிறது chillsam .நான் உங்கள் மதத்திலும் குறைகள் உள்ளன.அதனால் எங்கள் மதத்தை இழிவுபடுத்துவது ஏன் என்றே கேட்கிறேன்.
///படைத்தவனைக் கல்லாக்கியது யார்,மனிதனா அல்லது இறைவன் தன்னை கல்லில் வெளிப்படுத்தினானா?///
உங்கள் வார்த்தை ஜாலம் அருமை.இவை மதப் பிரச்சாரத்திற்கு நன்றாகப் பயன்படும். இந்து மதம் என்றால் கடவுளை உணர்வதின் நேரடி அனுபவமே அதற்க்கு மனக்குவிப்பு செய்வதற்கு ஆரம்ப நிலையில் உள்ளவனுக்கு உருவ வழிபாடு தேவை..இந்த இறைவன் இந்த பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறான் என்று ஒரு இந்து நம்புகிறான்,அதை உணர்வதன் ஒரு தத்துவமே,இந்த கல்லிலும்,மண்ணிலும்,மரத்திலும், விலங்கிலும் அனைத்துமாக ஆகியுள்ள இந்த இறைவனின் அம்சத்தையே வணங்குவது.
உங்கள் நண்பரின் போடோவைப் பார்த்து என் நண்பனை காகிதமாக்கியது யார்?இல்லை காகிதத்தில் என் நண்பன் வெளிப்பட்டானா? என்று கேட்கிறீர்கள்.அந்த போட்டோவை பார்க்கும் பொது உங்கள் நண்பனாகவே பார்க்கிறீர்கள்.காகிதமாகவோ,வண்ண கலவையாகவோ பார்ப்பதில்லை.அதே போல் பிரதிஷ்டை செய்து வணங்கப்படும் லிங்கத்தைப் பார்க்கும் பொது சிவனையே வழிபடுகிறான்.கல்லாக வழிபடுவதில்லை.அப்பனே,சிவபெருமானே,ஈசனே, என்று தான் வணங்குகிறானே தவிர, ஏ …கல்லே…உன்னை வணங்குகிறேன்.எனக்கு நல்ல புத்தியைக் குடு என்று வணங்குவதில்லை.
.ஒரு இந்து பல பிறவிகளைக் கடந்து இறுதியாக இறைவனை நேரடியாகக் காண்கிறான்.ஒவ்வொருப் பிறவியிலும் அவன் பெரும் ஆன்மிக, மற்றும் அனைத்து அனுபவங்களும் மறுபிறவியிலும் தொடர்கிறது.
அதனால் ஒருவன் ஒரு பிறவியில்செய்த முயற்சியும்,அனுபவமும் வீணாவதில்லை.அனைவருமே இறுதியில் இறைவனிடமே செல்வதாக இந்து மதம் சொல்கிறது.நல்லவர்கள் விரைவிலும் தீயவர்கள் அதிகப் பிறவியெடுத்து கால தாமதமாகவும் இறைவனை அடைகிறான் என்று இந்து மதம் கூறுகிறது.
எந்த மதத்தினரும்,எந்தக் கடவுளை வழிபடுகிரவர்களும் இறுதியில் இறைவனையே அடைகின்றனர்.
எந்த ஒரு செயலும் தீவிர மன ஒருமைப்பாடு மூலமாகவே பல பிரமிப்பூட்டும் காரியங்கள் நிகழ்ந்துள்ளன.அதே மன ஒருமைப்பாட்டின் மூலம் தன்னை உணர்வதன் மூலம் இறைவனை உணரலாம்.என்று பலர் இந்து மதத்தில் நிருபித்துள்ளனர். அவர்களையே நாங்கள் ரிஷிகள்,முனிவர்கள்,சித்தர்கள்,மகான்கள் என்று அழைக்கிறோம்.அதனால் எங்களுக்கு கடவுளை நேரடி அனுபவத்தின் மூலம் உணர்வதற்கு, மன ஒருமையை ஏற்படுத்துவதர்க்கு,மற்றும் பக்தி செய்து வழிபடுவதற்கு, இறைவனின் குணத்தைப் பிரதிபலிக்கும் ஓர்
உருவம் தேவை.அதையே சிலை வடிவில் வணங்குகிறோம்.நாங்கள் கல்லில் இறைவனைக் காண்கிறோம்.
ஒரு அழகானப் பெண் மிகச் சிறப்பாக நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்.ஒருவன் அவளின் அழகைப் பார்க்கிறான்.நடனம் தெரிந்தவன் அவளது நடனத்தை பார்க்கிறான்.இது தான் உருவ வழிபாடு பற்றிய நம் இருவரின் கண்ணோட்டமும்..
மேலும் உங்களுக்கு கடவுளின் நேரடி அனுபவம் தேவையில்லை.இறந்தபின் எப்போதோ கர்த்தர் எல்லோரையும் நியாயத் தீர்ப்பு நாளில் எழுப்பி இயேசுவை ஏற்றுக்கொண்டு,தன பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டு பாவம் செய்யாமல் வாழ்ந்தவர்கள் மட்டுமே கர்த்தரிடத்தில்.இடம் மற்ற பெரும்பான்மையான,இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ,மற்ற மதத்தவர்கள் எல்லாம் அவர்கள் மிக நல்லவர்களாக இருந்தாலும்,நிரந்தர ஏறி நரகம் என்று நீங்கள் கருதுவதால் உங்களுக்கு மனக்குவிப்பு தேவையில்லை.போன் பேசுவது போன்ற மன குவிப்பே போதுமானது.
///அப்படியானால் நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்படாத ஒன்றை தெய்வமாக்குதல் தெய்வக்குற்றமல்லவா?///
அப்படி ஒன்றும் வேதத்தில் சொல்லவில்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள்..வேதம் வழிபடுவதற்கு அதிக சுதந்திரத்தை தருகிறது.
///நான்கு வேதங்களிலும் இன்றைக்கு வணங்கப்படும் பிரபலமான தெய்வங்களைக் குறித்து ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா?///
ஆம் கூறப்பட்டுள்ளது,சிவன்,விஸ்ணு,கணபதி,சக்தி போன்ற கடவுள்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.மற்ற தெய்வங்கள் தேவர்களாக சொல்லப்பட்டுள்ளது.
///முக்கியமாக சிவனைக் குறித்து இந்துக்களின் ஆதாரமான நான்கு வேதங்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறது?///
ஆம் சொல்லப்பட்டுள்ளது.
///சிவனின் ரூபம் கல்லானால் அதாவது அம்மிக் குழவியைப் போன்ற நீள்வட்டமானால் சிவனாக வரைந்து காட்டப்படுவது கற்பனை உருவமா?கற்பனை உருவத்தை அல்லது தெய்வமல்லாததை வணங்குவதும் இணைவைப்பதும் எப்படி சரியாகும்?
எல்லையிலாத தொடக்கமும் முடிவும் அற்ற கடவுளையே இந்துக்கள் சிவனாகவும், விஸ்னுவாகவும் வணங்குகிறோம்.நான் சிவன் அம்மிக் குழவியைப் போன்ற நீள்வட்ட வடிவமானவர் என்று எங்கேயாவதுக் கூறினேனா? ஏன் இப்படி வார்த்தை ஜாலம் புரிகிறீர்கள்.மேலும் கடவுள் உருவமுள்ள ஜடா முடியுடன் கூடிய சிவனாக மகான்களின் விருப்பத்திற்க்கேற்ப காட்சி தந்திருக்கிறார்.அதில் சொல்லப்பட்ட தகவலின் படி எப்படி, இயேசு, மேரி படங்கள் வரையப்பட்டதோ,அப்படியே வரையப்பட்டது.
///ஆரம்ப கற்பிதமே சரியில்லாவிட்டால் முடிவு என்னவாக இருக்கும்?///
ஆதியாகமத்தில் படைப்புத் தத்துவம் அறிவியலின் முன் மண்டியிடுகிறது. மன்னிக்கவும் உங்களிடமும் குறைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டுகிறேன் அவ்வளவே.மேலும் பைபிள் இதுவரை 22 முறை திருத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்.சரியா???
///சரவணபெலகுலா’வில் எதை வணங்குகிறார்கள்?
பிரம்மாண்டமானதொரு நிர்வாண சிலையை நிறுவி அதனை வணங்கச்சொல்லி உங்கள் நான்கு வேதங்கள் சொல்லாத காரியத்தை நீங்கள் செய்கிறீர்கள்;அதற்கு ஆதாரமே இல்லாதபோது வேதத்திலிருந்து எப்படி காட்டமுடியும்?///
அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர்.சமண மதம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.
///வேண்டுமானால் அதற்கும் எனது வேதத்திலிருந்தே ஆதாரம் காட்டுகிறேன்;அது எப்படி திரிந்து போனது என்பதையும் நிரூபிக்கிறேன்///
அமெரிக்கக் கண்டங்களில் வாழும் ஒரு காட்டுமிராண்டி இனங்களில் வாழும் மக்கள் தங்கள் கூட்டத்தில் உள்ள வீரன் ஒருவன் இறந்து விட்டால் அவன் ரத்தம்,அவனின் மாமிசம் இதயம் போன்றவற்றை எடுத்து தின்பதன் மூலம் அவனின் வீரம் தங்களுக்கு கிடைப்பதாக நம்புகிறார்கள்.
கிருஸ்தவ மதத்தில் பாவத்தை ரட்சிக்க தன்னை பலி கொடுத்த இயேசுவின் ரத்தமும்,சதையும் தங்கள் பாவத்தைக் கழுவி சுத்தப்படுத்துவதாக நம்பும் வழக்கம் இந்தக் காட்டுமிராண்டி இனங்களின் பழக்கங்களின் திரிபே.என்று வரலாறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
எங்கள் மதத்தில் மஞ்சளும் குங்குமமும் கிருமிகளை அளிக்கவே,வீடு நிலைகளில் பயன்படுத்தப்பட்டது.மஞ்சளுக்கு எறும்போ,கரையானோ வராது,அதனாலேயே நிலைகளில் மஞ்சளும்,மஞ்சளால் ஆன குங்குமமும் பூசப்படுகிறது.மேலும் வாசலுக்கு கிருமி நாசினியான மாட்டுச் சானத்தைத் தெளிக்கிறோம்.
கிருமிகளை உண்டாக்கும் ரத்தத்தை தெளிப்பது எங்கள் கலாச்சாரமல்ல.
மேலும் தான் உண்பதை இறைவனுக்கு படைத்து உண்பதே இந்துக்களின் வழக்கம். சைவமோ,அசைவமோ அவனவனைப் பொருத்தும்,அவனவன் கும்பிடும் தெய்வத்தைப் பொருத்தும் மாறுகிறது.
அசைவம் உண்பவன் ஆடோ, கோழியையோ வெட்டி இறைவனுக்கு படைத்து இறைவன் ஏற்றுக்கொண்டதால் அதைப் பிரசாதமாக உண்கிறான்.பின் தன நலனுக்காகவும், மற்றவர்கள் நலனுக்காகவும் வேண்டுகிறான்.
எந்த இந்துவும் தன பாவத்திற்காண பலியாக ஆட்டையோ,கோழியையோ பலியிடுவதில்லை.
///ராமசாமி வீட்டில் ஒரு எலி ரொம்ப நாளாக வாழ்ந்து கொண்டிருந்தது; ஒருநாள் அந்த எலியைப் பிடிக்க ராமசாமி பொறிவைத்தார்;ஆனால் மகா புத்திசாலியான அந்த எலி…///
மகா புத்திசாலியான அந்த எலி.என்ன செயஞ்சதுன்னு சொல்லுங்க சார்.ஆனா இந்த கதை சொல்லும் உங்களுக்கு இந்த கதையின் மூலம் தெரியக்கூடிய நீதி என்னவென்றால் எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ,அப்படியே தீர்க்கப்படுவீர்கள்.
திரு CHILLSAM அவர்களே,
உங்கள் பின்னூட்டங்கள் நன்றாக உள்ளது.பல விசயங்களை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.நீங்கள் எக்காரணம் கொண்டும் மற்ற மதங்களும்,மற்ற மதக் கடவுள்களும் பொய் என்ற கருத்தை மாற்ற மாட்டீர்கள்.என்று தெரிந்து கொண்டேன்.
//அண்ணன் அவர்கள் மிகஅழகாக மாணவனைப் போல பதிலளித்துள்ளார்; ஆனால் இது ஒரு மார்க் கேள்வியல்ல;பத்து மார்க் கேள்வியாகும்; ஆதாரத்துடன் பதிலளிக்கவும்;///
ஏற்கெனவே பதிவின் நீளம் அதிகரித்து விட்ட நிலையிலேயே இப்படி ஒரு மதிப்பெண் விடை அளித்தேன்.நீங்கள் எங்கள் வேதங்களைப் பற்றியும் பிரஜாபதியைப் பற்றியும் கூறிய உங்களுக்கு சிவனை வேதத்தில் குறிப்பிட்டது எப்படித் தெரியாமல் போனது.”ஓம் நம சிவாய” என்ற மந்திரம் வேதத்தில் உள்ளது தானே??? நான் குடுக்கும் ஆதாரங்கள் வெளியேறும் தேநீர். அதனால் ஆதாரத்தைத் திரட்டும் நேரத்தை மிச்சப் படுத்துகிறேன்.
///என்ன நண்பரே இப்படி தடாலடியாக நழுவலாமா?
புத்தர்,மகாவீரர் என எல்லாருமே வேதத்தை விளக்க வந்த ரிஷிகள் தானே..?///
ஆமாம்.ஆனால் புத்தரைப் பற்றியும்,அவரதுபோதனைகளைப் பற்றியும் சிறிது தெரியும்.ஆனால் மகாவீரரைப் பற்றித் அதிகம் தெரியாது.உயிர்க் கொலை மிகவும் பாவமாக கருதக் கூடியவர் என்பதும், அனைத்து ஆசைகளையும் துரப்பதுவே அவர்கள் கொள்கை என்பது போன்ற அனைவர்க்கும் தெரிந்த அளவே தெரியும்.
///நான் எங்குமே அதுபோலக் கூறவில்லை;”அர்த்தமுள்ள இந்துமதம்” ஏறக்குறைய முழுதொகுதியும் என்னிடமுள்ளது;ஆனால் அது கவிஞர் கண்ணதாசன் எழுதியது;அதனையா இப்படி தூஷிக்கிறீர்கள்?///
எங்கள் வேதங்கள் அனைத்தும் உங்கள் ஏசுவையே பற்றியே கூறுகிறது என்று ஒரு சிறு கையடக்க பிரதி “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற பெயரில் கிருத்தவ பிரச்சாரர்களால் வழங்கப்பட்டது.அதில் கூறப்பட்ட பிரஜாபதி, மற்றும் பாவத்திற்காகவே பலி போன்ற வாக்கியங்களையே (கீழே பார்க்கவும் ) நீங்களும் பயன்படுத்துகிறீர்கள்.அதில் இந்து வேதங்கள் இயேசுவை பற்றியே கூறுகின்றன என்ற ஒரு மகா குழந்தைத் தனமான பொய்யை கூறியது.அந்தப் ஓயரச்சாரப் பிரதி பற்றி உங்களுக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாதா???
///பலியினால் மட்டுமே பரிகாரம் என்பது பொதுவானது///
///ப்ரஜாபதியின் மகாபலியினால் பாவம் நிக்ரஹமாகும் வேதத் தத்துவம் வெளிப்பட்டு நடைமுறைக்கு வந்தது///
///நம்முடைய வீட்டுப் பெண்களை நீங்கள் இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா?அவர்கள் விருப்பத்துடன் அணியும் மங்கலப் பொருட்களை நீங்கள் இவ்வளவு கேவலப்படுத்தலாமா?///
சாது செல்லப்பாவின் கேசட்டில் பைபிளில் உள்ள பழக்க வழக்கங்களே இந்துக்கள் பின்பற்றுகிறார்கள் என்பது போல ஒரு தகவலை கூறுகிறார்.அதற்க்கு பைபிளில் கூறப்பட்டதாகக் கூறி தீய சக்திகள் வராமல் காக்க ஒவ்வொரு வீட்டுமுன்பும்,கதவுகளிலும் ரத்தத்தை தெளித்தும்,பூசியும் வந்தார்கள் என்று கூறுகிறார்.அதையே சிறிது மாற்றி இந்துக்கள் கதவு ,நிலைகளில் சந்தனம், மஞ்சள், போன்ற வற்றைப் தடவி,அதில் இரத்தத்திற்குப் பதிலாக குங்குமத்தால் பொட்டு வைப்பதாகக் கூறுகிறார்.
///அதற்கும் எனது வேதத்திலிருந்தே ஆதாரம் காட்டுகிறேன்;அது எப்படி திரிந்து போனது என்பதையும் நிரூபிக்கிறேன்///
என்று நீங்கள் கூறியதால் மேற்கண்ட புத்தகம்,மற்றும் சாது செல்லப்பாவின் கேசட் போன்றவற்றை பற்றியே கூறப் போகிறீர்கள் என்பதை முன்னறிந்தே அதைக் கூறினேன்.நீங்களும் அவற்றில் கூறப்பட்ட கருத்துக்களை உங்கள் பின்னூட்டத்தில் கூறுகிறீர்கள்.ஆனால் நீங்கள் அந்தப் புத்தகத்தைப் பற்றியும், சாது செல்லப்பாவின் கேசட்டைப் பற்றியும் ஒன்றுமே தெரியாது என்பது போல் கூறுகிறீர்கள்..ஒரு கிறிஸ்தவப் பிரச்சாரரான நீங்கள் இப்படிக் கூறுவது எனக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.
எலிக்கதை நன்றாக உள்ளது.எங்களுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது.உங்கள் மதமும் எங்கள் கலாச்சார நீரோட்டத்தில் கலந்தே ஆகும்,இன்னும் சில நூற்றாண்டுகளில் எங்கள் இந்து மகா சமுத்திரத்தில் உங்கள் கிருஸ்தவ ஆறு கலந்து விடும்.இப்பொழுதே ஓரளவிற்கு கலந்து விட்டன.அப்போது கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு லக்ஷ்மி, வீரத்திற்கு பராசத்தி, ஆஞ்சநேயர், போன்ற தெய்வங்களைக் கும்பிடுவது போல பாவத்தை மன்னிக்க ஏசுவைக் கும்பிடவோம்.
சகோ.திருச்சிக்காரர் அவர்களே,
///நீங்கள் பொய்ப் பிரச்சாரத்திலே மயங்கி, பாவப் பிராசரத்தால் பாதிக்கப் பட்டு விழுந்து பெரும்பாலான இந்தியர்களையும் பாவிகளாக்கி விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.///
நான் கிறிஸ்தவர்களின் ப்ரச்சாரத்திலிருந்தும், பின்னூட்டங்களிலிருந்து புரிந்து கொண்டதையே குறிப்பிட்டேன்.நான் பைபிளை படித்ததில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால் பல மாத இதழ்களை படித்திருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.என் கருத்து தவறென்றால் அது நான் பைபிளைப் படிக்காததும்,பிரச்சாரர்களின் தவறான கருத்தைப் படித்ததும் தான் காரணம்.
1 | Hard Truth
May 4, 2010 at 5:27 pm
//யாருக்கு எதிராக பாவம் செய்தோமோ அவரிடம் போய்//
Yes, We have to ask the forgiveness to the person, against whom we have sinned. Any sin is against the GOD. So, asking the forgiveness from the GOD is the right thing to do. Suppose a person had committed adultery with a prostitute in his past and later realizes that he carrying that sin of adultery. To whom he can ask the forgiveness? He had spoilt the body (that is given by GOD), by commiting adultery with a prostitute. So, he can get the forgiveness from the Lord.
Everything and Everyone in this world is created by GOD. He is a owner for everything. So, when we do anything wrong against anyone for anything, you have to ask for the permission to its/his/her owner. Ofcourse, it is always good to pay or compensate the damage we did.
If you hit a dog with ur two wheeler and broke its leg. Probably, as a good person, you will take that dog for medication. But, won’t apologize to the owner of that dog? Isn’t it necessary to ask the forgiveness from the owner of that dog?
We are not owner of ourselves. That is why we (who ever believes in Christ) call Jesus as our “Lord”. So, if we sin against anyone, we ask for the forgiveness from our Lord. Because we have sinned agains HIS property. Also, if possible, we will try to compensate the damaged property of our Lord.
Hard Truth
thiruchchikkaaran
May 4, 2010 at 7:52 pm
//Yes, We have to ask the forgiveness to the person, against whom we have sinned.//
Thanks. This is good as per logic , reasoning as well as correct by Jesus Christ also.
//Any sin is against the GOD. So, asking the forgiveness from the GOD is the right thing to do. Suppose a person had committed adultery with a prostitute in his past and later realizes that he carrying that sin of adultery. To whom he can ask the forgiveness? He had spoilt the body (that is given by GOD), by commiting adultery with a prostitute. So, he can get the forgiveness from the Lord.//
If a person has comitted adulatry with a prostitute, he has sinned
1) sinned against the prostitute. Insted of having sexual relationship with the prostitute – He could have given the money to the prostitute as a goodwill, , he could have spent some time with her by giving her some tips to ged rid of the prostitution business, then both can had a good sleep (not sleeping together).
2) If the man is married, he sinned against the wife
3) Whether the man is married or not , The man has sinned against his conscience. He let his conscience down
So he has to make amendments for the above three.
//Everything and Everyone in this world is created by GOD. He is a owner for everything. So, when we do anything wrong against anyone for anything, you have to ask for the permission to its/his/her owner. Ofcourse, it is always good to pay or compensate the damage we did.//
இது உங்களின் சொந்தக் கருத்து என்றே நினைக்கிறேன். இந்தக் கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று சொல்வதைப் பற்றி தனியே கட்டுரை எழுதுவோம். நாகரீக சமுதாயத்தைப் பொறுத்த அளவில் பாதிக்கப் பட்டவனிடம் அவருத்தம் தெரிவித்து, பரிகாரம் செய்தால் போதுமானது. இயேசு கிறிஸ்துவின் கருத்தும் அதுவே. நீ யாருக்கோ எதிராக பாவத்தை செய்து விட்டு என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள் என்பதாக இயேசு கிறிஸ்து எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை என்றே கருதலாம்.