Thiruchchikkaaran's Blog

“க‌ட‌வுளை‌க் கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி” என்று சொல்வ‌து ச‌ரியா, உண்மையா?

Posted on: April 9, 2010


 

க‌ட‌வுளைக் கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி  என்று சொல்கிறார்க‌ளே, அது ச‌ரியா, உண்மையா?

 இதை இர‌ண்டு வ‌கையான‌ கோண‌ங்க‌ளில் அணுக‌லாம்.

ஒன்று காட்டுமிராண்டி கால‌ க‌ட்ட‌ ம‌னித‌ன் ம‌ழை, புய‌ல், இடி , மின்ன‌ல் இதை எல்லாம‌ பார்த்து ப‌ய‌ந்து போய் க‌ட‌வுள் என்ப‌வ‌ர் மேலே இருப்ப‌தாக‌க் க‌ருதி இருக்க‌ கூடும். என‌வே க‌ட‌வுள் என்கிற‌ கான்செப்டை உருவாக்கி இருக்க‌க் கூடும்.

இர‌ண்டாவ‌தாக‌ காட்டுமிராண்டிக் கால‌த்தில், ம‌க்க‌ள் எல்லொரும் சேர்ந்து வாழும் நாக‌ரீக‌ம் இல்லாத‌ கால‌த்தில், கொஞ்ச‌ம் விவ‌ர‌மான‌ ம‌னித‌ன்  த‌ன் இன‌  ம‌க்க‌ளை எல்லாம் த‌ன் கீழே கொண்டு வ‌ர‌, அவ‌ர்க‌ளை ஒன்று திர‌ட்டி பிற இன‌ ம‌க்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ இந்த‌ க‌ட‌வுள் எனும் கான்செப்டை உருவாக்கி,  உப‌யோக‌ப் ப‌டுத்தி இருக்க‌ கூடும்.

க‌ட‌வுளுக்கான‌ வெவ்வேறு கான்செப்டுக‌ளை ஆராய்வோம்.

வைய‌த்துள் வாழ்வாங்கு வாழ்ப‌வ‌ன் வானுறையும் தெய்வ‌த்துள் வைக்க‌ப் ப‌டும் என்றார் வ‌ள்ளுவ‌ர்.  இது ஒரு மிக‌ நாக‌ரீக‌மான‌ க‌ருத்து.

இஸ்ரேலியர்கள் கடவுள் பற்றிய ஒரு கருத்தை உருவாக்கி  இருக்கிறார்கள். அது என்ன வென்றால் கடவுள் என்பவர் யூதர்களுக்கு உதவியாக, மற்ற இனங்களை அழிக்க யூதர்களுக்கு உதவி செய்வார் என்பதாக ஒரு கருத்தை அக்காலத்திலே உருவாக்கி உள்ளனர். 

கடவுள் எதற்கு இனப் படுகொலையில்  ஈடு பட வேண்டும்,  இது என்ன காட்டுமிராண்டிக் கருத்தை விட  கொடுமையான கருத்தாக இருக்கிறதே என எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

 ஏதோ நாம் இட்டுக் கட்டி எழுதியதாக எண்ண வேண்டாம்.  பைபிளில் சொல்லப் பட்டு இருப்பதை  தான் எழுதி இருக்கிறோம்.

யூதர்கள் எகிப்து நாட்டில்  குடியேறி அவர்களுக்கு அடிமை வேலை செய்ததாக பைபிள் சொல்லுகிறது.  உலக வரலாற்றில் இது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

கர்த்தர் எனப் படும் கடவுள்    மோசே என்பவருக்கு உதவி செய்து யூதர்களை எகிப்து நாட்டில் இருந்து அரபிய பாலைவனப் பகுதிக்கு அழைத்து வந்தார்  என்று குறிப்பிட்டு   உள்ளனர்.

யாத்திராகமம் அதிகாரம் : 3

 7.அப்போது கர்த்தர் எகிப்தில் இருக்கிற என ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து , ஆளோட்டிக்களினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்கிரலைக் கேட்டேன்.

 
8.அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும் , அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி , கானானியரும் , ஏத்தியரும், எமோரியரும் பெரிசியரும் ஈவியரும் , எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் , தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்திலே கொண்டு போய் சேர்க்கவும் இறங்கினேன்.
 
யாத்திராகமம்,அதிகாரம் : 20
 
 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணிய உன் தேவனாகிய கர்த்தர் நானே.
 
 
 இப்படி எகிப்தில் இருந்து வந்த யூதர்களுக்கு புதிய இடத்தை தருவதாக கர்த்தர் என்னும் கடவுள் சொல்லியிருப்பதாக யூதர்களுக்கு நம்பிக்கை அளிக்கப் பட்டுள்ளது.

மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

“எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது, அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”

“ஒருவரை விடுதலை செய்வது நல்லதே. ஆனால் விடுதலை செய்தவர்களை குடி ஏற்ற ஏன் இன்னொருவரின் இடத்தைப் பிடுங்க வேண்டும். மெய்யான ஜீவனுள்ள கடவுளாக இருந்தால் அவர்கள் குடியேற புது நிலப் பரப்பை உருவாக்கி, அங்கே ஆறுகள்  ஓடும்படி செய்து இருக்கலாமே.

இப்படி இன்னொரு இனத்தை படுகொலை செய்து அவர்களின்  நிலத்தை அடித்துப் பிடுங்க வேண்டியதில்லையே?” என்கிற கேள்வியை அறிங்கர்கள்  முன் வைக்கின்றனர்.

அப்படியானால் இந்தக் கடவுள் என்பது காட்டுமிராண்டிகள் படைத்த கற்பனை என்று சொல்வது சரிதானோ  என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மோசசுக்குப் பிறகு பிறகு  அதே கர்த்தர் என்னும் இன அழிப்பு ஸ்பெசளிஷ்ட்டை   கடவுள் என்றும் அவர் கட்டளை போட்டு, திட்டம் தீட்டி,  கூட இருந்து போர் செய்ததாகவும்  , ஜோஷுவா என்பவர் மூலம் இனப் படுகொலையை தொடர்ந்து நடத்தி உள்ளனர்.  

  View Image

யோசுவாவிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

யோசுவா, அதிகாரம் 6,

2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!

21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

இப்படியாக பல இனங்களைப்  படுகொலை செய்து ஒரு இனத்தை வாழ வைப்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும். இது யூதர்கள் தாங்கள் செய்த இனப் படுகொலைகளை நியாயப் படுத்த உருவாக்கிய கற்பனையோ, என்ற வினா மக்களின் மனதில் எழுகிறது!

இதை எல்லாம் நாம் சொல்லவில்லை. பைபிள் சொல்லுகிறது. பரிசுத்த வேதாகமம் என்ற புத்தகத்தில் இருந்து நமக்கு கிடைத்த பரிசுத்த தகவல்களையே, நாம் இங்கே அப்படியே வார்த்தை பிறழாமல் எழுதி இருக்கிறோம்.

தாங்கள்  கர்த்தர் என்ற பெயரில் ஒரு கடவுள் இருப்பதாகக் கூறி, உருவாக்கிய அதே இன அழிப்புக்  கொள்கை, தங்களுக்கு எதிராகவே பயன்படுத்தப் படும் என யூதர்கள் அப்போது எதிர்பார்க்கவில்லை.

தாங்களே இனப் படுகொலைக்கு ஆளாகியும்,  இப்போதும் பாலஸ்தீனத்தில் நில ஆக்கிரமிப்பு செய்து, பாலஸ்தீன இனத்தை அழிக்கும் செயலை யூதர்கள் செய்து வருவது வருந்தத் தக்க விடயமே.

81 Responses to "“க‌ட‌வுளை‌க் கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி” என்று சொல்வ‌து ச‌ரியா, உண்மையா?"

நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

ஆனால் எனக்கென்னவோ ‘கடவுளைப் படைத்தவன் காட்டுமிராண்டி’ என்கிற ஸ்டேட்மெண்ட் உணர்வுப் பூர்வமாகத்தான் தெரிகிறது.

கடவுளைப் படைத்தவன் யார் என்பது பற்றி இதைச் சொன்னவர்களுக்கு ஒரு பர்ஸெப்ஷன் இருந்திருக்கும் போலத்தான் தோன்றுகிறது.

அந்த ’யாரை’ இழிவு படுத்துவதைத் தவிர வேறு நோக்கங்கள் எதுவும் இதில் இருப்பதாக நான் கருதவில்லை.

கடவுளை ஒருவன் படைத்ததாக நினைப்பதே அறியாமை. இல்லாத அந்த ஒருவனை இழிவு படுத்துவது அதை விடப் பெரிய அறியாமை.

அடாமிக் ஃபிசிக்சை ஒழுங்காகப் படித்தவர்கள் கடவுள் என்பது விஞ்ஞானம் என்பதைப் புரிந்திருப்பார்கள்.

ஜடப் பொருள் என்று சொல்கிற பொருட்களில் கூட அசைந்து கொண்டிருக்கும் எலெக்ட்ரான்கள் இருப்பது வெளிப்படை.

தூணிலும் உளன் அணுவைத் சதகூரிட்ட கோணிலும் உளன் என்று சொன்ன நம் முன்னோர்கள் எலெக்ட்ரான் என்று ஒன்று இருப்பதை முன்னாலேயே தெரிந்து கொண்டு விட்டார்கள்.

அதற்குப் பல வருஷம் கழித்துத்தான் அணுவைப் பிரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். அந்த விஞ்ஞானிகள் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதை ஒப்புக் கொண்டார்கள்.(க்வாண்ட்டம் தியரி)

விஞ்ஞானம் தெரிந்தவர்கள் மெய்ஞானத்தை ஒப்புக் கொண்டார்கள்.

விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டுமே தெரியாதவர்கள் அதை ஒப்புக் கொள்ளாதது ஒன்றும் புரிந்து கொள்ள முடியாததல்ல!

நண்பர் திரு. ஜவஹர் அவர்களே,

கட்டுரையைப் படித்து விட்டு கருத்து தெரிவித்ததற்கு நன்றி.

கடவுளின் பெயரை சொல்லி பல இனங்களை அழித்து, இரத்த ஆறு ஓட விட்டு இருக்கிறார்கள்.

எனவே கடவுள் இருக்கிறார் என்று சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட, அவரின் பெயரால் வெறுப்புக் கருத்துக்களை உள்ளத்திலே திணித்து, நம் கையிலேயும் கத்தியை குடுத்து கடவுளுக்காகப் போராடு என்று சொல்ல மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா?

கையிலே கத்தியைக் கொடுக்காவிட்டாலும், நம் மனதிலே விசத்தை ஏற்றி விட்டு, நம்மையும் வெறுப்புக் கருத்துக்களை சுமப்பவர் ஆக்கி விட்டால் அதுவும் கையிலே கத்தியைக் குடுப்பது போல ஆபத்தானதே.

அறிவியல் பூர்வமாக பார்த்தால் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகள் பல உள்ளன. எரி சக்தி, மின் சக்தி, அணு சக்தி, இப்படி பல சக்திகள் உள்ளன. அவைகளை போல் கடவுள் சக்தி என்று ஒன்று இருப்பதையும் காட்டி விட்டால் கடவுளை ஒத்துக் கொள்ள யாருக்கும் தடை இல்லை. இந்த எரி சக்தி, மின் சக்தி உட்பட பல வற்றையும் கண்டு பிடித்தவன் மனிதனே. அறிவியலை ஆராய்ந்து மனிதன் கண்டு பிடித்தவுடன் உடனே வந்து கடவுள் எவ்வளவு சிறப்பாக படைத்திருக்கிறார் என்று ஒரு பிட்டை நம்பிக்கையாளர்கள் போடுவது சரியா?

கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் அது நம்பிக்கைதான், அதை உண்மை என எப்படி அடித்துச் சொல்ல முடியும் என்று சற்று எண்ணிப் பாருங்கள். அமைதியாக யாரையும் வெறுக்காமல் வழிபடுவதை நாம் குறை சொல்லவில்லை, அது ஆன்மீக வளர்ச்சிக்கு , மன வலிமைக்கு உதவும் வண்ணம் இருந்தால், மக்களிடையே அன்பைப் பரப்பினால் அதை வரவேற்கிறோம் – அப்போதும் அது நம்பிக்கை தான்.

//கடவுளை ஒருவன் படைத்ததாக நினைப்பதே அறியாமை. இல்லாத அந்த ஒருவனை இழிவு படுத்துவது அதை விடப் பெரிய அறியாமை.//

கடவுள் இருப்பதாகச் சொல்லிக் காட்டுமிராண்டிததனத்தை விட கொடுமையான செயல்களை செய்தததால் தான் இந்தக் கட்டுரை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது!

கடவுளின் பெயரால் கொடூரக் கட்டளைகளைப் போட்டு, மக்களிடையே வெறுப்புக் கருத்துக்களை, காட்டு மிராண்டிக் கருத்துக்களை பரப்புவதை தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம். தொடர்ந்து படித்து வாருங்கள் எனக் கோருகிறேன்.

திருச்சிக்காரர் அவர்களே,

///தாங்கள் கர்த்தர் என்ற பெயரில் ஒரு கடவுள் இருப்பதாகக் கூறி, உருவாக்கிய அதே இன அழிப்புக் கொள்கை, தங்களுக்கு எதிராகவே பயன்படுத்தப் படும் என யூதர்கள் அப்போது எதிர்பார்க்கவில்லை.///

இந்தத் தகவல் எனக்கு புதிதாக உள்ளது.ஹிட்லர் யூதர்களை அழித்தது தெரியும்.ஆனால் யூதர்களும் முன்பு இன அழிப்பு செய்தது இப்பொழுது உங்கள் தளம் மூலமாகத்தான் அறிகிறேன்.

கடவுளின் பெயரால் எத்தனைக் கொடூரங்கள் நிகழ்ந்துள்ளன.!!!

திரு. தனபால் அவர்களே,

கட்டுரையைப் படித்து விட்டு கருத்து தெரிவித்ததற்கு நன்றி.

நானாக எதையும் சொல்லவில்லை. பரிசுத்த வேதாகமம் என்று சொல்லப் படும் பைபிளில் இருப்பதையே எழுதி இருக்கிறேன். இத்தனைக் கொடூரங்களுக்கும் வெள்ளை அடிக்கவே இந்த கடவுள் என்கிற கான்செப்டை உபயோகப் படுத்தி உள்ளனரோ என்றே, அறிங்கர்கள் கருதுகின்றனர். அவர்கள் இப்படி இன அழிப்பு செய்ய உருவாக்கிய கடவுள் கான்செப்டை உலகமெங்கும் பரப்பி பல பெண்களை விதைவை ஆக்கி விட்டனர்.

இது ஒரு மாதிரிதான், பாலஸ்தீனியப் பகுதியில் நடந்த இன அழிப்புகள் இன்னும் பல உண்டு!

ஆனால் இதற்க்கு உண்மையில் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை. இது நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது – பைபிளைத் தவிர. எனவே பைபிளை ஒரு ஆதாரமாக நீங்கள் கருதுவதானால் யூதர்கள் இன அழிப்பு செய்ததாக கொள்ளலாம், அல்லது பைபிளில் எழுதப் பட்டுள்ளவை சும்மா மனம் போன போக்கில் எழுதப்பட்டவை என்று கருதப் பட்டால், இன அழிப்பு குற்றம் யூதர்கள் மேல் இல்லை என கூறலாம்.

கடவுள் என்பதற்கு, கிறிஸ்துவர்களின் வேதம் கூறும் தேவனை மையமாக வைத்து எழுதியதற்கு நன்றி. ஏனென்றால் அவரே மெய்யான தேவன்.
ஆனால், அந்த தேவனை பற்றியும், பரிசுத்த வேதத்தை பற்றியும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

//கடவுள் எதற்கு இனப் படுகொலையில் ஈடு பட வேண்டும், இது என்ன காட்டுமிராண்டிக் கருத்தை விட கொடுமையான கருத்தாக இருக்கிறதே என எண்ணத் தோன்றுகிறது அல்லவா?//

அனைத்திற்கும் சகல அதிகாரமுள்ள தேவனுக்கு, தான் படைத்ததை அழிக்க உரிமை இல்லையா? மண்ணை மனிதனாய் மாற்றியவர் அந்த மனிதனை மீண்டும் மண்ணாக்க உரிமை இல்லையா?
என்னுடைய கணிப்பொறியில், நான் fileகளை ஆக்குவதும், அழிப்பதும் என் இஷ்டம். ஒரு fileஐ அழிக்க இன்னொரு file programஆக இருக்க செய்யலாம். சில சமயம் கணினி வைரஸ் பாதிப்பு வந்தால் மொத்தமாக சில அழிப்பு வேலைகளும் செய்யப்படும்.Fileகளை அழிப்பதால் எனக்கு அவற்றின் மீது காழ்ப்புணர்ச்சி எல்லாம் ஒன்றும் இல்லை. எனது கணினியும், அவற்றில் இருக்கும் நல்ல விஷயங்களும் காப்பாற்றபடவே நான் இதை செய்கிறேன்.
Will Continue,
Hard Truth

திரு. Hard Truth அவர்களே,

கடவுள் என்ற ஒரு கருத்தாக்கத்தை வைத்து, எந்த ஒரு கொடூரத்தையும், அநியாயத்தையு,ம் இனப் படுகொலையையும்
சாதரணமாக கருதும் அளவுக்கு, ஒருவரின் மனதிலே மனிதத் தன்மையே இல்லாத அளவுக்கு செய்து விட முடியும், மத
வெறி அந்த அளவுக்கு போதையான விடம் என்பதே அறிஞர்கள் கருத்து.

அதற்க்கு நிரூபணமாக உங்கள் பின்னூட்டம் அமைந்து உள்ளது. மதப் பற்றினால் மனித நேயத்தை மறந்தவர்களை மனித தன்மைக்கு கொண்டு வர நாம் தொடர்ந்து உழைப்போம்.

ஆண் , பெண் , கிழவர்கள், ஆடு மாடுகள் உட்பட எல்லோரயும் வெட்டிக் கொன்று இன அழிப்பு செய்வது, உங்களைப் பொறுத்தவரையில் சாதாரண விடயமாக இருக்கலாம்.

ஆனால் நாகரீக சமுதாயம் அப்படி நினைப்பதில்லை. நாகரீக மனிதன், அந்த இடத்திலே நாமும், நம் மனைவி மக்களும் இருந்திருந்தால் எவ்வளவு வேதனைப் பட்டு துடி துடித்து இறந்திருப்போம் என்று புரிந்து கொள்வான்.

கொடூர இன அழிப்புகளை நியாயப் படுத்த கடவுள் கோட்ப்பாட்டை காட்டுவதை நாகரீக மக்கள் சமுதாயம் இனியும் நம்பி ஏமாறவோ , பயந்து நடுங்கவோ தயாராக இல்லை. ஈவு இரக்கமில்லாமல் பல இனங்களைப் பூண்டோடு அழித்தத கொடியவனை மண்டியிட்டு வணங்கி வாழ்வதை விட விட அவனை எதிர்த்து போராடுவதையே நீதியும், நேர்மையும், நியாயமும், தைரியமும் உள்ள புதிய மக்கள் சமுதாயம் தரும் பதிலாக இருக்கும்.

நிரூபிக்கப் படாத , காட்டப் படாத கடவுளைக் காரணமாகக் காட்டி இன்றைக்கும் பாலஸ்தீனததிலே இன அழிப்பு செய்வது நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுதும் உள்ள மக்களிடம் இன்னும் அதிக விழுப்புணர்ச்சியை ஏற்ப்படுத்துவோம். கடவுளின் பெயரை சொல்லி இரத்தம் குடிப்பவரையும் திருத்துவோம்.

திரு. Hard Truth அவர்களே,

//அனைத்திற்கும் சகல அதிகாரமுள்ள தேவனுக்கு, தான் படைத்ததை அழிக்க உரிமை இல்லையா? மண்ணை மனிதனாய் மாற்றியவர் அந்த மனிதனை மீண்டும் மண்ணாக்க உரிமை இல்லையா?//

இப்படி சொல்லித்தான் ஈவு இரக்கமில்லாமல் இனப் படுகொலையை செய்தனர்.

அதே கொள்கையை – காட்டுமிராண்டிக் கொள்கையை விட கொடூரமான இனப் பட்கொலைக் கொள்கையை – இப்போதும் நியாயமானது போலப் பரப்புகிறார்கள்.

அதனால் தான் கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் என்கிற கருத்தையும் அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் இனப் படுகொலை செய்யும் வக்கிர புத்திக் காரனை கடவுளாக நம்பும் அளவுக்கு மக்கள் முட்டாளாக இருக்க தயாராக இல்லை. எனவே கடவுளை நம்புபவன் முட்டாள் என்னும் கருத்தாக்கத்தின் முதல் படியாக இனப் படுகொலை செய்யும் வக்கிர புத்திக்காரனை கடவுளாக கருதுபவன் முட்டாள் என்கிறதை புரிந்து கொள்ளும் அறிவைப் பெற்று உள்ளதால், அந்த முட்டாள் நிலைக்கு செல்ல நாகரீக மக்கள் விரும்பவில்லை.

தன்னால் அறியப்படாதது, இல்லவே இல்லை என்று முட்டாள் தான் கூறுவான்.
மலத்தில் வாழும் புழுக்களுக்கு, கண்களோ மற்ற பல விஷயங்களோ இல்லை. அவைகளுக்கு நிலாவும், நட்சத்திரமும் தெரியுமா? அந்த புழுக்கள், நிலா என்பதும் நட்சத்திரம் என்பதும் இல்லவே இல்லை என்று கூறுவது போல் உள்ளது உங்கள் கூற்று.
நங்கள் அந்த புழுக்களாக இல்லாமல் இருப்பதற்கே என் தேவனுக்கு ஆயிரம் கோடி ஸ்தோத்திரங்கள்.

Hard Truth

Dear Mr. Hard Truth,

//மலத்தில் வாழும் புழுக்களுக்கு, கண்களோ மற்ற பல விஷயங்களோ இல்லை. அவைகளுக்கு நிலாவும், நட்சத்திரமும் தெரியுமா? அந்த புழுக்கள், நிலா என்பதும் நட்சத்திரம் என்பதும் இல்லவே இல்லை என்று கூறுவது போல் உள்ளது உங்கள் கூற்று.//

வழக்கம் போல உங்களின் வசவுகளை ஆரம்பித்து விட்டீர்கள். மலத்தில் இருக்கும் புழுக்கள் நாங்களா? இன அழிப்புக் கருத்தை சொன்னது, நியாயப் படுத்துவது நானா? இப்போது இனப் படுகொலைக்கு வக்காலத்து வாங்குவது நானா? இனப் படுகொலை கருத்துக்களை நியாயப் படுத்தி அதை பரிசுத்த வேதாகமம் என்ற பெயரில் வெளியிட்டவர்கள் யார்? அதில் உள்ளதை அப்படியே தானே எடுத்து காட்டி இருக்கிறோம்?

//தன்னால் அறியப்படாதது, இல்லவே இல்லை என்று முட்டாள் தான் கூறுவான்.//

இதை எதற்காக எங்களிடம் சொல்லுகிறீர்கள். நாங்கள் காணாத ஒன்றுக்கு சாட்சி கொடுக்கவும் இல்லை. அதே நேரம் எங்கள் ஆராய்ச்சியை விடவும் இல்லை.

நீங்கள் முதலில் எங்களின் கோட்பாட்டை சரியாக தெரிந்து கொண்டு எழுதுமாறு கோருகிறேன்.

I request you to read the following 3 articles of our blog:

1)

இறைவ‌ன் இருக்கின்றானா- 2

//இறைவன் இருக்கின்றானா என்று யாராவது கேள்வி கேட்டாலோ, ஆராய மேற்பட்டாலோ உடனே இறைவன் இருப்பதாக நம்பும் நண்பர்களுக்கு வருத்தமும் , ஆதங்கமும், கோபமும் வருகிறது.

நாம் என்ன சொல்கிறோம்?

கடவுள் இல்லை என்று சொல்லச் சொல்லும்படி யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப் படுத்தவோ இல்லை.

கடவுள் இருக்கிறாரா என்று ஆராய்ச்சி செய்யும் உரிமையை எங்களுக்கு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.//

2)

பகுத்தறிவு

//ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!//

//என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்!

ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப்ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.//

இறைவன் இருக்கின்றானா?

பகுத்தறிவாளர்களுக்கு மற்றவர்களை விட பொறுப்பும், நிதானமும், எச்சரிக்கையும் அவசியமாகும்.

ஒவ்வொரு வார்த்தையையும் பகுத்தறிவாளன் மிகவும் யோசித்தே, பலமுறை சிந்தித்தே கூற வேண்டிய நிலை உள்ளது.

ஏனெனில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல் படுபவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன வேண்டுமானாலும் கூறலாம். முழ‌ம் முழ‌மாக‌ காதில் பூ சுத்தலா‌ம்! கேட்டால் “எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்பார்கள்,
“நான் சாட்சி குடுக்கிறேன்”, என்பார்கள். நேரிலே பார்த்து கை குலுக்கி விட்டு வந்தது போல, அவ்வளவு உறுதியாக சரடு விடுவார்கள்.

ஆனால் பகுத்தறிவுவாதி நேர்மையானவன். அவன் தன்னால் முடிந்த வரைக்கும் உண்மையைத் தேடுவான். தெரிந்த வரையில் கண்டதைக் கூறுவான்.

“கடவுள் இருக்கிறார் என்பதை இது வரை யாரும் எனக்கு காட்டவில்லை. எனவே கடவுள் இருப்பதை ஆதாரம் காட்டி நிரூபிக்காதவரை கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது” என்பதே சரியான பகுத்தறிவு என்பது எனது தாழ்மையான கருத்து.

அன்பர் சுந்தர் அவர்களே. எனது ஆராய்ச்சி கட்டுரைகள் கொஞ்சம் தேவையில்லாத கருத்துக்களை பதிப்பதாக குற்றங்களை சுமந்துகொண்டிருந்தது. உங்களது அருமையான எடுத்துக்காட்டுடன் கூடிய இந்த கட்டுரை என்மீதுள்ள தவறையும் நீக்குமென நம்புகிறேன் ( புரிந்தால் புரியும். ஹா ஹா ஹா.) . அற்ப்புதமான ஒரு கட்டுரை. நாம் என்றும் உரைப்பது கடவுள் என்பது ஒரு நம்பிக்கையே. அது அதில் கொண்டுள்ள ஈடுபாட்டைக்கொண்டு நம்பிக்கையாகவும் மூட நம்பிக்கையாகவும் திரிகிறது! அருமையான ஒரு கட்டுரை வாழ்த்துக்கள்!


நன்றிகளுடன்,
வி.பி.மறவன்!

அன்புக்குரிய நண்பர் வி.பி. மறவன் அவர்களே,

கட்டுரையைப் படித்து விட்டு கருத்து தெரிவித்ததற்கு நன்றி.

நம்பிக்கை என்பது நம்பிக்கையே. அது உண்மை எனக் கருதப் பட வேண்டுமெனில் நிரூபணம் தேவை.

எனவே வெறும் நம்பிக்கையாக இருக்கும் ஒன்றை – அது சாதா நம்பிக்கையா அல்லது மூட நம்பிக்கையா என்பதாக எப்படி வரையறுக்க முடியும்?

அப்படி மூட நம்பிக்கை என்று ஒன்று தனியாக இருந்தால், பிற நம்பிக்கைகள் எல்லாம் அறிவு சார்ந்த நம்பிக்கைகளா? அறிவு பூர்வமாக சிந்தனையின் அடிப்படையில் பகுத்தறியப் படாத , அல்லது தெளிவாக நிரூபிக்கப் படாத எல்லா கருத்துக்களும் மூட நம்பிக்கைகள் தான்.

எந்த நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை. அப்படி இருக்கும் போது எல்லா நம்பிக்கையும், வெறும் நம்பிக்கைதான்.
எல்லா நம்பிக்கையும், மூட நம்பிக்கைதான்.

நம்மைப் பொறுத்தவரையிலே நம்பிக்கையை அதன் விளைவின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம். ஒன்று பிறருக்கோ, மனித சமுதாயத்துக்கோ தீங்கு விளைவிக்காத நம்பிக்கைகள். இரண்டாவது மக்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய நம்பிக்கைகள். மூன்றவது பிறருக்கும், மனித சமுதாயத்துக்கும் கேடு விளைவிக்கக் கூடிய நம்பிக்கைகள்.

ஒரு குழந்தை தான் விளையாடும் பொம்மைக்கு உயிர் இருப்பதாகக் கருதி அதோடு பேசி விளையாடி மகிழ்கிறது. தன அன்னை தன்னை தூங்க வைப்பது போல பொம்மைகளை தூங்க வைக்கிறது. இது பிரச்சினையில்லாத நம்பிக்கை.

ஒரு மனிதன் கடவுள் என ஒருவர் தான் கேட்பதை கொடுப்பார் என எண்ணி, கடவுளை வணங்கினால் தான் காப்பற்றப் படுவோம் என்று எண்ணினால் , அவன் பிறர் வழிபாட்டை வெறுக்காத பட்சத்திலே, பிறர் வழிபாடும் தெய்வங்களை இகழாத பட்சத்திலே, மத அடிப்படையில் எந்த ஒரு மனிதனையும் வெறுக்காத பட்ச்சத்திலே அவன் நம்பிக்கை பிரச்சினை இல்லாத நம்பிக்கை.

ஆனால் கடவுளின் பெயரால் கட்டளைகளைப் போட்டு மனித சமுதாயம் அழிந்தாலும் பரவாயில்லை , என் நம்பிக்கையை எல்லோரும் கைக் கொள்ள வேண்டும், அந்த நம்பிக்கையை போர்வையாக வைத்து இன அழிப்பை செய்தால் அதையும் நியாயப் படுத்த வேண்டும் என்றால், அது அபாயகரமான, இரத்த ஆறை ஓட விடச் செய்த பல இனங்களை அழித்த, இன்னும் பல பேரைக் காவு கொள்ளத் துடிக்கும் கொடூர நம்பிக்கை.

//அனைத்திற்கும் சகல அதிகாரமுள்ள தேவனுக்கு, தான் படைத்ததை அழிக்க உரிமை இல்லையா? மண்ணை மனிதனாய் மாற்றியவர் அந்த மனிதனை மீண்டும் மண்ணாக்க உரிமை இல்லையா?//

கடுமையான உண்மை அவர்களே! அப்பறம் ஏன் ஏசு எல்லார் கிட்டையும் அடிவாங்கினாரு. சிலுவையில தொங்கினாரு. சகல அதிகாரமுள்ளவரு எதிரிகளைப் போட்டு தாக்கிருக்கலாம்ல. ஏன் அடிவாங்கினாரு.

Hi Ram,
That is a wonderful question. Jesus took all those beatings and punishments on our behalf. As a substitute for you and me, he suffered a cruel death on the cross.
The primary purpose of Jesus to come into this world is to be punished on our behalf.

Thanks,
Hard Truth

நல்ல மனிதர்கள் பலரும் மக்களின் நன்மைக்காக, மக்கள் வாழும் வழியைக் காட்ட பல தியாகங்களை செய்து உள்ளனர். கொள்கையில் உறுதியாக இருந்து அதனால் தண்டனை பெற்று உள்ளனர்.

கொள்கையை விட மறுத்த சாக்ரடீஸ் கிரேக்க ஆட்சியாளரால் மரண தண்டனை விதிக்கப் பட்டு விஷம் குடிக்க தண்டனை விதிக்கப் பட்டு இருந்தார்.

திருப்பூர் குமரன் கொடியை விட மறுத்ததால் மண்டையிலே குண்டாந்தடியால் அடிக்கப் பட்டு கொல்லப் பட்டார்.

இயேசு கிறிஸ்துவின் முக்கிய கொள்கை களுள் ஒன்று அவர் தன்னை யூதர்களின் ராஜாவாக கருதியதே. ரோமானிய கவர்னர் பிலாத்தின் முன் இயேசுவின் மீது இந்தக் குற்றச் சாட்டை வைத்த போது அந்தக் கருத்தை இயேசு மறுக்கவில்லை. யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று கலகம் பண்ணினார்கள் , பிலாத்து சிலுவையில் அறைவதானால் அறைந்து கொள்ளுங்கள் என்று விட்டு விட்டா ன்.

இதுதானே நடந்தது. இதை விட்டு விட்டு நீங்கள் இட்டுக் கட்டி எல்லோரின் பாவத்திற்காக இயேசு மரித்தார் என்று சொல்வது உங்கள் கற்பனையே.

நாங்கள் பாவம் செய்தோமா என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நாங்கள் செய்யாத பாவத்தை எங்கள் மேல் சுமத்தி, எங்கள் பாவத்துக்காக இரண்டாயிரம் வருடம் முன் இயேசு இறந்தார் என்று , எங்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது சரியா?

இயேசு தன்னை யூதர்களின் ராஜா என்று சொன்னதால், அந்தக் குற்றத்துக்காக யூதர்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். ஆனால் நீங்களோ, நாங்கள் செய்யாத பழியை எங்கள் மீது சுமத்தி தண்டனை கொடுக்கிறீர்கள்.

இயேசுவைக் கொன்ற யூதர்களை விட நீங்கள் கொடுமையாக நடந்து கொள்கிறீர்கள்.

இயேசு தன்னை யூதர்களின் ராஜா என்று சொல்லிக் கொண்டிருக்காவிட்டால் அவர் சிலுவையில் அறையைப் பட்டிருக்க மாட்டார். தன்னை யூதர்களின் ராஜா என்று இயேசு சொன்னதற்கு அவருக்கு தண்டனை வழங்கப் பட்டது.

முன்பு இயேசு பெற்ற தண்டனைக்கான பழியை இப்போது எங்கள் மீது நீங்கள் சுமத்துவதால், இயேசுவின் தண்டனைக்கான பழியை நாங்கள் சுமக்கிரேம் என்று சொன்னால், அது பொருத்தமாக இருக்கும்.

இயேசுவின் பெயரால் நீங்கள் கக்கும் விஷக் கருத்துக்களினால், இன அழிப்பு , மத வெறி கருத்துக்களினால் உருவான கொடூரங்களை, குற்றமற்ற நாங்கள் சுமக்கிறோம் என்பதே உண்மை.

Mr.Hard truch
இன்னும் இந்த புளுகுமூட்டையை எத்தனை நாள்தான் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் செத்தவர் ஹார்ட் ட்ருத்-துக்காக செத்தாராம். பைபிளில் பாவத்தின் சம்பளம் மரணம் என்று போட்டுள்ளது. இந்து செத்தால் பாவத்தின் சம்பளம் மரணம். கிறிஸ்தவன் செத்தால் கர்த்தருக்குள் மரிக்கப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். நல்ல கொள்கை ஐயா. ஏசு கொலை செய்யப்பட்டது அவர் செய்த பாவத்துக்கு. அல்லது அவர் முன் ஜென்மத்தில் செய்த பாவத்துக்கு. உங்களுடைய பாவத்துக்கு அல்ல. நீங்கள் செய்கிற செயல்களுக்கு நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும். தினை விதைத்தால் தினைதான் அறுக்க முடியும். உங்கள் வயிற்று வலிக்கு உங்கள் வீ்ட்டில் வேறு யாரும் மருந்து சாப்பிட முடியுமா?

Dear Spiritually Blinded Friend,
For my debt, others can pay for it. And Jesus paid it for all who believes in HIM.
Ashok

கடுமையான உண்மை நண்பரே, பதிலுக்கு நன்றி. //substitute for you and me// u tell ur self. y u including my name. u may be a sin person and jesus may come substitute for u. but i m not like u. எனது பாவங்களை நானே அனுபவித்துக்கொள்வேன். ஏசுவை கஷ்டப்படுத்த மாட்டேன். அதனால் பாவம் செய்யாமலும் இருப்பேன். ஆனால் நீங்களோ ஏசு உங்கள் பாவங்களுக்காக பழி ஏற்றார் என்பதை இரண்டாயிரம் வருடங்களாக சொல்லி வருகிறீகள். ஆனால் உங்களில் யாரும் அவருக்காக இரக்கப்படக்கூட தயாராக இல்லை. இத்தைனைக் கோடி கிறிஸ்தவர்கள் சேர்ந்து ஏசு மீண்டும் உங்களுக்காக தொங்க வரப்போகிறார்க் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறீர்கள். அதனால் தானோ என்னமோ கிறிஸ்தவர்கள் இன்னும் கொடிய பாவம் செய்வதை நிறுத்தவில்லை. ஈராக்கில், ஆப்கானிஸ்தானில், ஜப்பானில் என்று கிறிஸ்தவர்கள் அரசியல் என்ற பெயரால் செய்த படுகொலைகளும் பாவங்களும் கொஞ்ச நஞ்சமல்லவே! இதற்கெல்லாம் காரணம் ஏசு மீண்டும் வந்து சிலுவையில் தொங்குவார் என்று தானே! இப்படி பாவங்களை ஏற்க ஒரு substitute எப்பவுமே ரெடிமேடாக இருந்தால் கிறிஸ்தவர்கள் ஜென்மா ஜென்மத்திற்கும் பாவம் செய்துகொண்டே தான் இருக்கப்போகிறீர்கள். அதான் substitute இருக்கே. புடிச்சு தொங்குறதுக்கு. நல்லா தொங்கட்டும். ஆனால் இந்து தர்மத்தில் அப்படி அல்ல. நாம் செய்த பாவத்தின் பலனை ஜென்மா ஜென்மத்திற்கும் நாம் தான் அனுபவிக்க வேண்டும். ஆக ஜென்மத்திற்கு பயப்படுபவன் பாவம் செய்யவும் பயப்படுவான். உங்கள் பாடு ஜாலிதான். உங்களுக்கு தான் substitute இருக்கே.

Dear friends,
have cecked about this with my friend, who is a christian.
He says everything is true. But he is not ready to accept, it as a genocide.
He says it as a war. wat, kiling innocent aa a war.
very funny. I am really angry on hitler. why he left these peoples alive

அன்புக்குரிய நண்பர் இராவணன் அவர்களே,

தளத்தைப் பார்வை இட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தததற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

//I am really angry on hitler. why he left these peoples alive//

உங்களின் கருத்தை சரியாக எல்லோரும் புரிதல் செய்வார்கள் என நம்புகிறேன். இது உங்களின் ஆதங்கத்தினால் உருவான கருத்து. ஐயோ இவ்வளவு கொடுமை நடந்து விட்டதே என வருந்தி இதை சொல்லி இருக்கிறீர்கள். யூதர்கள் உட்பட இந்த உலகில் உள்ள எல்லா மக்களும் காப்பற்றப் பட வேண்டும், உலகம் நாகரீக சமத்துவ சமுதாயம் ஆக வேண்டும் என்பதே நமது கருத்து. அதுவே தமிழர் பண்பாடு.

யூத மக்களை இனப் படுகொலை செய்யத் தூண்டி, திட்டம் வகுத்து , கூட இருந்து செயல் படுத்தியது கர்த்தர் என சொல்லப் படும் கடவுள் என்றே பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ளது. அல்லது ஒரு சிலர் கடவுள் என்ற கான்செப்டை உருவாக்கி அவர் நமக்கு கட்டளையிட்டார் என இன அழிப்புக்கு மக்களை தூண்டி இருக்கக் கூடும்.

இதில் முக்கிய உண்மை கடவுளின் பெயரை வைத்து, மக்களிடம் மத வெறியை உருவாக்கி இனப் படுகொலை உட்பட எந்த ஒரு அநியாயத்தையும் செய்து விடலாம் என்பதே. அந்த இரத்த வெறி பின்னர் குருசெடு போர்கள் என்ற பெயரிலும் , இப்போதும் பாலஸ்தீனிலும், இராக்கிலும் தொடர்கிறது.

நம்முடைய கால கட்டத்தில் வாழும் நம் நண்பர்களும், இனப் படுகொலையை பூசி மொழுகி, இன அழிப்பு செயலை போரில் அப்பாவிகள் கொல்லப் பட்டதாக முலாம் பூசுவது, மத உணர்வு ஒருவரின் மனதில் உள்ள மனித நேயத்தை அழித்து விடுவதற்கு உதாரணமாகவே உள்ளது.

//He says everything is true. But he is not ready to accept, it as a genocide.
He says it as a war. wat, kiling innocent aa a war.
very funny.//

இதை படியுங்கள், ஆத்சோர் என்னும் பகுதியில் வாழ்ந்த எமோரியர் இன மக்களை இனப் படு கொலை செய்து இன அழிப்பு செய்த விவரம் இங்கே.

பைபிள் :

யோசுவா, அதிகாரம் 11

8. கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக் கொடுத்தார்.

10. அக்காலத்திலே யோசுவா திரும்பி ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டிடயத்தினால் வெட்டிப் போட்டான் . ஆத்சோர் முன்னே அந்த இராஜ்ஜியங்களுக்கு எல்லாம் தலைமையான பட்டினமாயிருந்தது .

11.அதிலிருந்த நரஜீவன்களை எல்லாம் பட்டயக் கருக்கினால் வெட்டி சங்காரம் பண்ணினான். சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை. ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.

இது இன அழிப்பு இல்லையா?

ஒருவர் கூட விடாமல் //சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை// சுவாசமே இல்லாமல் இன அழிப்பு செய்துள்ளனர்.

இன்னும் பல இன அழிப்பு கொடூரங்கள் நடை பெற்று உள்ளன, கடவுளின் கட்டளை என்னும் பெயரால்!

Mr.Ram,

//எனது பாவங்களை நானே அனுபவித்துக்கொள்வேன். ஏசுவை கஷ்டப்படுத்த மாட்டேன்.//
Probably you didn’t realize the wages of sin.

//ஆனால் உங்களில் யாரும் அவருக்காக இரக்கப்படக்கூட தயாராக இல்லை.//
We really love him to our best.

// இத்தைனைக் கோடி கிறிஸ்தவர்கள் சேர்ந்து ஏசு மீண்டும் உங்களுக்காக தொங்க வரப்போகிறார்க் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறீர்கள்.//
Jesus need not be cruzified again. He had done his job perfectly. And he paid the every penalty for our sins. Also, the Bible says, who ever has faith on him, will part take with him and their sins also be forgiven because Jesus paid the penalty of sins. Others has to face the consequence of their sins. If you are willing to reject the sacrifice of Christ, no one is going to force you and no one CAN for you. Everyone has their own freewill.

//இப்படி பாவங்களை ஏற்க ஒரு substitute எப்பவுமே ரெடிமேடாக இருந்தால் கிறிஸ்தவர்கள் ஜென்மா ஜென்மத்திற்கும் பாவம் செய்துகொண்டே தான் இருக்கப்போகிறீர்கள். //
I dont know on what basis you are believing that we will have multiple births. We have one life and one chance. Only thru Christ, we can live a sinless life.

//உங்கள் பாடு ஜாலிதான். உங்களுக்கு தான் substitute இருக்கே.//
Very true. We are blessed/lucky/fortunate to have Christ in our life.

Thanks,
Hard Truth

திரு.திருச்சிகாரன் அவர்களே!

உங்கள் கட்டுரையை படித்தேன். அடிப்படையிலேயே பல தவறுகள் உள்ளன. எனக்கு தெரிந்த அளவில் ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.
இந்த ஜோஷுவா, ஜெரிச்சோ கதையை விமர்சனம் செய்வது நீங்கள்
முதல் மனிதருமல்ல. கடைசியான மனிதராகவும் இருக்க போவதில்லை.
Self Proclaimed நாத்திகர்களான Richard Dawkins, Christopher Hitchens
போன்றவர்கள் தங்கள் புத்தகங்களில் பல முறை எடுத்து காட்டியதைத்
தான் நீங்களும் செய்திருக்கிறீர்கள். நோக்கம்தான் வித்தியாசம். அவர்கள்
நாத்திகத்தை பரப்ப செய்தார்கள். நீங்கள் பிற மதங்களின் சாரமற்ற
தன்மையை விமர்சிக்க முயல்கிறீர்கள்.

(1)முதல் தவறு-மத புத்தகங்களை படிக்க வேண்டிய முறை. நீங்கள்
Selective Quotesஐ உங்கள் தேவைக்கேற்ப எடுத்து காட்டுகிறீர்கள்.
Taken out of Contextம் உங்கள் கட்டுரையில் இருக்கிறது.
எப்படி?
பைபிலில் உள்ள 66 புத்தகங்களில் ஜொஷுவாவை எடுத்து கொண்டு
அதிலும் 6ம் அத்தியாயத்தை எடுத்து கொண்டு அதிலும் 3 வாக்கியங்களை
எடுத்து காட்டியுள்ளீர்கள். ஜொஷுவா ஏன் ஜெரிச்சோவின் அவ்வளவு
மக்களையும் விலங்குகளையும் கொன்றார். இதை அறிந்து கொள்ள
பைபிலின் பிற புத்தகங்களை படிக்க வேண்டும். நோவாவின் கதைதான்
இதற்கு பின்புலம். சுருக்கமாக இதை தருகிறேன்.

நோவாவிற்கு மூன்று மகன்கள். ஷெம், ஹாம் மற்றும் ஜாஃபெத். ஒரு நாள்
திராட்சை இரசம் அருந்திய பிறகு நோவா பிறந்த மேனியுடன் இருக்கிறார்.
இதை பார்த்த ஹாம் தந்தையை கிண்டல் செய்கிறார். நோவா ஹாமின்
மகன் கேனானை சபித்து விடுகிறார். (ஏன் ஹாமை சபிக்காமல் ஹாமின்
மகனை நோவா சபிக்கிறார்.? இதற்கு பதில் பிறகு வரும்). இந்த ஹாமின்
சந்ததியினர்தான் (Canaanites) ஜெரிட்சோவில் வசிக்கிறார்கள்.

அடுத்து இந்த ஜெரிட்சோவின் மக்கள் “Sexual Idolatry” “Fertility Cult”
போன்றவற்றை கடைபிடித்தவர்கள்.
மேற்கூறிய காரணங்களை கணக்கில் கொண்டுதான், கடவுள் அசிரிரியின்
துணை கொண்டு ஜொஷுவா ஜெரிட்சோவை கைப்பற்றி அதில் இருந்த
அத்தனை மக்களையும் விலங்குகளையும் கொல்கிறார்.

சரி, உடனே நமக்கு வரும் அடுத்த சந்தேகம். யாரோ சிலர் செய்த
தவறுகளுக்காக ஒரு இனத்தையே அழிப்பது எப்படி சரியாகும்?
இந்த கேள்வியின் அடிப்படையில் ஒரு பிரச்சினை இருக்கிறது.
மனித நாகரிகம் முதிர்ந்தவுடன் நாம் இன்றுள்ள சட்டகங்களின்
அடிப்படையில் முற்காலங்களில் நடந்த நிகழ்வுகளை எடை போடுவது
முற்றிலும் தவறாக முடியும்.
எப்படி?

சில உதாரணங்கள்.
சமுதாயத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் Ethicsன் கூறுகள்
மாறியுள்ளன.

(அ)பீஷ்மர் அம்பா, அம்பிகா மற்றும் அம்பாலிகா என்ற 3 பெண்களை
அவர்களின் விருப்பத்தை கேட்காமலேயே சிறையிட்டு செல்வார். இது
அந்த கால பழக்கத்திற்கு சரி. ஆனால் இன்று தவறு.
(ஆ)சைவ மதப்படி ஒரு நாயன்மாரை தன்னுடைய அடிமை என்று சிவனே
வந்து கூறுவார். அதை அந்த ஊர் பெரியவர்களும் ஒப்பு கொள்வார்கள்.
அதாவது தந்தை தனக்கு அடுத்து வரும் தலைமுறை அனைவரும் ஒருவருக்கு
அடிமை என்றால் அது அந்த காலத்திற்கு சரி. ஆனால் இன்று சரியல்ல.
(இ)கண்ணகி தனக்கு இழைக்க பட்ட அநீதிக்காக மதுரை முழுவதையும்
எரித்தாள். மதுரையில் எத்தனையோ அப்பாவிகளும் இறந்திருப்பார்கள்.
அந்த காலத்தில் அது சரி. ஆனால் இன்று தவறு.
(ஈ) பரசுராமர் தன் தந்தையான ஜமதக்னி முனிவரை கொன்றதற்காக
கார்த்த வீர்யாஜுனனை மட்டும் கொல்லவில்லை.
(என் தந்தையை ஒருவர் கொலை செய்தால் அவரை பழி வாங்க எனக்கு உரிமை இல்லை. காவல் துறைக்குதான் புகார் அளிக்க வேண்டும்.
அந்த கால சட்டம் வேறு.)

-அடுத்து பரசுராமர் கார்த்த வீர்யாஜுனனின் சந்ததியை மட்டும் கூட
கொல்ல வில்லை. (இன்றுள்ள புரிதலின் அடிப்படையில் ஒருவர் செய்யும்
தவறுக்கு அவரின் சந்ததியை அழிப்பது ஒப்பு கொள்ள முடியாத விஷயம்)

தன் தாயார் 21 முறை மார்பில் அடித்து கொண்டு அழுதாள் என்பதற்காக மொத்த க்ஷத்திரிய இனத்தையும் 21 தலைமுறைக்கு பரசுராமர் அழித்தார்.
ஒரு கிறிஸ்துவ மனநிலையில் இந்த புராண கதையை கவனித்தால் இது
ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையே! ஆனால் ஒரு இந்துவாக அதன்
கலாச்சார பரிமாணங்களை ஒட்டி நாம் படிப்பதால் நம்மால் இதில் தவறு
காண முடியவில்லை.

இதைப்போன்றே பெண்ணுரிமை, சம உரிமை, மனிதம் போன்ற
சொல்லாடல்களின் அடிப்படையில் திருக்குறள், புராணங்கள், திருமுறைகள்
போன்றவற்றை படித்தால் இன்றிருக்கும் புரிதலுக்கு முற்றிலும்
விரோதமாகத்தான் இருக்கும்.

அன்புக்குரிய நண்பர் திரு. பாலாஜி அவர்களே,

கட்டுரையைப் பார்வை இட்டு உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். உங்களுடைய கருத்துக்கு என்னுடைய விளக்கம் கீழ் வருமாறு:

//1)முதல் தவறு-மத புத்தகங்களை படிக்க வேண்டிய முறை. நீங்கள்
Selective Quotesஐ உங்கள் தேவைக்கேற்ப எடுத்து காட்டுகிறீர்கள்.
Taken out of Contextம் உங்கள் கட்டுரையில் இருக்கிறது.
எப்படி?
பைபிலில் உள்ள 66 புத்தகங்களில் ஜொஷுவாவை எடுத்து கொண்டு
அதிலும் 6ம் அத்தியாயத்தை எடுத்து கொண்டு அதிலும் 3 வாக்கியங்களை
எடுத்து காட்டியுள்ளீர்கள்.//

நான் எழுதியது கட்டுரையே. பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் அல்ல. ஒரு கட்டுரையில் எந்த அளவுக்கு விவரங்களைத் தர முடியுமோ அந்த அளவுக்கு விவரங்களை அளித்து இருக்கிறேன்.

நான் ஜோஷுவா பகுதிக்கு வரு முன், யூதர்களின் பின் புலம் பற்றி பைபிளில் கூறியதாக உள்ளதை சுருக்கமாக சொல்லி இருக்கிறேன். இதை நீங்கள் படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

யூதர்களை எகிப்தில் இருந்து கர்த்தர் அழைத்து வந்தது, மற்ற இனங்களை அழித்து அவர்களின் இடத்தை, யூதர்களுக்கு தருவதாக வாக்களித்தது இவற்றை விளக்கி இருக்கிறேன்.

ஜோஷுவாவுக்கு முன்பே மோசஸ் மூலம் கர்த்தர் நடத்திய இனப் படுகொலை பற்றிய குறிப்பும் பைபிளில் இருக்கிறது. பைபிளில் இனப் படுகொலை நிகழ்வுகள் ஏராளம். எவ்வளவு மேற்கோள் காட்ட முடியும்? எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்ட முடியுமா? என்னால் முடிந்த அளவுக்கு கவர் செய்வேன் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

//அடுத்து இந்த ஜெரிட்சோவின் மக்கள் “Sexual Idolatry” “Fertility Cult”
போன்றவற்றை கடைபிடித்தவர்கள்.//

அந்த நகர மக்கள் sexual Idolatory செய்ததாக பைபிளில் எங்கே சொல்லி இருக்கிறார்கள்? மேற்கோள் காட்ட முடியுமா? இது இனப் படுகொலைக்கு சாக்குப் போக்கு சொல்ல பின்னால் அளிக்கப் பட்ட விளக்கமே என்றே பலரும் கருதுகின்றனர்.

ஒரு பேச்சுக்கு அப்படியே அந்த மக்கள் செய்தாலும் அவர்களை அழிக்க வேண்டிய அவசியம் என்ன? ஜெரிக்கோ பகுதி மக்கள் sexual Idolatory செய்தால் அதில் ஜோஷுவாவுக்கு என்ன பிரச்சினை?

அமேரிக்காவில் ஒரு நகரத்தில், கணிசமான மக்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவராக இருந்தால் அந்த நகரத்தை நீங்கள் அணு குண்டு போட்டு நாசம் செய்ய கர்த்தர் உத்தரவிடுவாரா? மக்களுக்கு நல்ல நாகரீகத்தை அளிக்க விரும்பினால் அவர்களிடம் எடுத்து சொல்லி , அவர்களை சீர் திருத்த வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களை முழுமையாக அழிப்பேன் என்று சொல்வது காட்டுமிராண்டித் தனத்தை விட கொடூரமான அநீதி.

இந்த இனப் படுகொலை நிகழ்ச்சி ஜெரிக்கோ பகுதி மக்களை விட பல மடங்கு கொடூரமான காட்டுமிராண்டிகளாகவே ஜோஷுவாவும், கர்த்தரும் இருந்திருக்கிராகள் என்பதையே கட்டுகிறது.

//தன் தாயார் 21 முறை மார்பில் அடித்து கொண்டு அழுதாள் என்பதற்காக மொத்த க்ஷத்திரிய இனத்தையும் 21 தலைமுறைக்கு பரசுராமர் அழித்தார்//

இனப் படுகொலையை செய்தவர் யாராக இருந்தாலும் அதைக் கண்டிக்கிறோம். பரசுராமரை நான் ஆதரிக்கவில்லை. அவர் செய்த செயல்களை நான் கண்டிக்கிறேன். பரசுராமரையும், பீஷ்மரையும் இந்திய மக்கள் வணங்கவில்லை. ப‌ராசுராம‌ர் ஆத்திர‌த்தில் அடாத‌ செய‌ல் செய்த‌தால் அவ‌ர் இந்துக்க‌ளால் புற‌க்க‌ணிக்க‌ப் ப‌ட்டார். ப‌ரசுராம‌ரின் செய‌ல் பாடுக‌ளை நியாய‌ப் ப‌டுத்தி யாரும் பிர‌ச்சார‌ம் செய்ய‌வில்லை.

//இந்த கேள்வியின் அடிப்படையில் ஒரு பிரச்சினை இருக்கிறது.
மனித நாகரிகம் முதிர்ந்தவுடன் நாம் இன்றுள்ள சட்டகங்களின்
அடிப்படையில் முற்காலங்களில் நடந்த நிகழ்வுகளை எடை போடுவது
முற்றிலும் தவறாக முடியும்.//

முற்கால‌த்தில் ம‌னித‌ன் காட்டு மிராண்டியாக‌ ந‌ட‌ந்து கொண்டான், என்றால் அது புரிந்து கொள்ள‌க் கூடிய‌தே. ஆனால் க‌ட‌வுள் எப்ப‌டி கொடூர‌ காட்டு மிராண்டியாக‌ ந‌ட‌ந்து கொள்ள‌ முடியும்? அதனால் தான் காட்டுமிராண்டிக‌ளின் க‌ற்பனையில் உருவாக்க‌ பட்ட‌ க‌ற்பித‌ம் தான் கட‌வுள் என்று சொல்ல‌ப் ப‌டும் க‌ர்த்த‌ரா என்ப‌தே சிந்த‌னையாள்ர் கேள்வி. அதுதான் இந்த‌க் க‌ட்டுறையின் பொருளே!

திரு. திருச்சிகாரன் அவர்களே!

“தாங்களே இனப் படுகொலைக்கு ஆளாகியும், இப்போதும் பாலஸ்தீனத்தில் நில ஆக்கிரமிப்பு செய்து, பாலஸ்தீன இனத்தை அழிக்கும் செயலை யூதர்கள் செய்து வருவது வருந்தத் தக்க விடயமே.”
என்று உங்கள் கட்டுரையை முடித்துள்ளீர்கள்.

உலக வரலாற்றில் இனப்படுகொலையின் தீவீரத்தன்மையை அனுபவித்தவர்கள் யூதர்கள் மட்டுமே. கிரேக்கர்கள். ரோமானியர்கள்,
கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று ஒவ்வொரு இனத்தாலும் பெரிய
அளவில் அழிக்க பட்டார்கள். கடைசியாக ஹிட்லரினால் ஏற்பட்டது.

பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று கூறியுள்ளீர்கள். முதலில் அந்த நிலம் யாருடையது என்பதை நீங்கள்
கவனிக்க வில்லையா!. யூதர்களின் நிலத்தை முஸ்லீம்கள்தான் அபகரித்து
கொண்டார்களே தவிர முஸ்லீம்களின் நிலத்தை யூதர்கள் அபகரிக்க
வில்லை.

ஒரு நிலப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் மோதல் ஏற்பட்டால் இரண்டு
விஷயங்களின் அடிப்படையில் சமரசம் ஏற்பட வேண்டும்.
(1)பூர்வ குடிகள் யார்? அவர்கள் உயிரோடு இருந்தால் அவர்களுக்கே
அந்த நிலப்பகுதி சொந்தமாக வேண்டும்.
(2)அவர்களில் பெரிய அளவில் யாரும் உயிரோடு இல்லை என்றால்தான்
அடுத்தவர்களுக்கு அந்த நிலப்பகுதி சேர முடியும்.

அமேரிக்காவில் “சிகப்பு இந்தியர்கள்” இன்று இல்லவே இல்லை.
ஆஸ்திரேலியாவில் அபோரிஜினிகள் பெரிய அளவில் இல்லை. அல்லது
வெள்ளை இனத்துடன் சேர்ந்து விட்டதால் அவர்களின் பாரம்பரிய
இரத்தம் இல்லை. மேலும் அவர்களே அதற்காக போராடவும் இல்லை.

ஆனால் பாலஸ்தீனத்திலிருந்து யூதர்கள் விரட்ட பட்டார்கள். அவர்கள்
அழியவும் இல்லை. அவர்கள் பெரும்பாலானோர் அவர்களின் இனத்துக்கு
உள்ளேயே திருமணம் செய்வதால் அவர்களின் இன அடையாளங்கள்
இன்றும் உள்ளன. ஆகவே எனக்கு புரிந்த நியாயத்தின் படி ஒவ்வொரு
மனிதனும் இஸ்ரேல் யூதர்களுக்கே சொந்தம் என்பதை ஒப்பு கொள்ள
வேண்டும். காஸா ஸ்டிரிப், கோலான் ஹைட்ஸ் பகுதிகளை பற்றி
எனக்கு முழுதும் புரிய வில்லை. ஆனால் மற்ற இடங்கள் யூதர்களின்
வசமே இருக்க வேண்டும்.

காஸா ஸ்டிரிப்பிலிருந்து 400 இராக்கேட்டுகள் இஸ்ரேலுக்குள் வந்து
விழுந்தாலும் இஸ்ரேல் இந்தியாவைப்போல் தீவிரவாதிகளிடம்
கையை கட்டி கொண்டிருக்க வேண்டுமா!. இஸ்ரேல் காஸா ஸ்டிரிப்பை
பொழுது போகாமல் தாக்குவதில்லை. ஹமாஸ் என்னும் தீவிரவாத
கிறுக்கு அயோக்கியர்களின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலைத்தான்
கொடுக்கிறார்கள்.
தயவு செய்து நீங்கள் இந்த மனித உரிமை மாய்மாலர்களின் வலையில்
விழுந்து விடாதீர்கள்.

இந்த அடிப்படையில் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் அல்லது தனி
நாடாக வேண்டும் என்று கூற முடியுமா!. இன்று மக்கள் தொகையில்
முஸ்லீம்கள் பெரிய அளவில் இருப்பதால் வரலாறு மறக்க பட வேண்டுமா?
காஷ்மீரத்தின் பூர்வ குடிகளான இந்துக்கள் இன்னும் உயிரோடுதான்
இருக்கிறார்கள்.

பாலஸ்தீன முஸ்லீம்கள் இஸ்ரேலை எங்கள் நிலம் என்று உரிமை
கொண்டாடினால் கொடுத்து விட வேண்டுமா? காஷ்மீர் எங்கள் நிலம்
என்று இந்துக்கள் உரிமை கொண்டாடினால் நமக்கு கிடைத்து விடுமா?
முஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறு நியாயமா?

அன்புக்குரிய நண்பர் திரு. பாலாஜி அவர்களே,

நான் முந்தைய‌ பின்னூட்ட‌த்தில் யூத‌ர்க‌ள் உட்ப‌ட‌ ஒவ்வொரு ம‌னித‌ரும் காக்க‌ப் ப‌ட‌ வேண்டும் என‌ எழுதி இருக்கிறென். உல‌கில் உள்ள‌ ஒவ்வொரு ம‌னித‌ரும் முழு பாதுகாப்பு ச‌ம‌ வாய்ப்பு, ம‌ரியாதை பெற‌ வேண்டும் என்ப‌தே ந‌ம‌து குறிக்கோள்.

இன்றைய‌ பாலஸ்தீன‌ பிர‌ச்சினை ப‌ற்றி விரிவாக எழுத‌ வேண்டும். நேர‌மின்மையால் இப்போதைக்கு இதோடு முடிக்கிறேன்.

//இயேசு கிறிஸ்துவின் முக்கிய கொள்கை களுள் ஒன்று அவர் தன்னை யூதர்களின் ராஜாவாக கருதியதே. ரோமானிய கவர்னர் பிலாத்தின் முன் இயேசுவின் மீது இந்தக் குற்றச் சாட்டை வைத்த போது அந்தக் கருத்தை இயேசு மறுக்கவில்லை. யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று கலகம் பண்ணினார்கள் , பிலாத்து சிலுவையில் அறைவதானால் அறைந்து கொள்ளுங்கள் என்று விட்டு விட்டா ன். //
அட கொடுமையே! இயேசுவை சாக்ரெடிஸ், திருப்பூர் குமரன் லிஸ்டில் வைத்து விட்டீர்களே. உலக மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாய் மரித்தவரை, ஏதோ பதவி சண்டையில் மரித்தவர் போல் காட்டியுள்ளீர்களே. ஒருவர் தன்னை அரசன் என்று கூறிகொண்டால், அதனால் ஆட்சியாளர்கள்தான் வருத்தப்படுவார்கள். ஆனால் இயேசுவின் விஷயத்தில் மதத்தலைவர்கள்தானே பிரச்சனை செய்தார்கள். மேலும், இயேசு தெளிவாக தன் ராஜ்ஜியம் இந்த உலகம் சம்பதப்பட்டதல்ல என்று கூறியுள்ளார் (வார்த்தைகளை திரிப்பதில் திருச்சியார் பிசாசையும் மிஞ்சுவார் போலும்).

//இதை விட்டு விட்டு நீங்கள் இட்டுக் கட்டி எல்லோரின் பாவத்திற்காக இயேசு மரித்தார் என்று சொல்வது உங்கள் கற்பனையே. //
இயேசு ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளும் போது யோவான் ஸ்நானகன் என்ன கூறினான் என்று பாருங்கள். இயேசு நம் பாவங்களை தீர்க்கவே மரித்தார் என கூற நிறைய வேதவசனங்களை நான் ஆதாரமாக தர முடியும். ஆனால் திருச்சியார் தூங்குவது போல் நடிப்பவர், அவரை எழுப்ப என்னால் முடியாது.

//நாங்கள் பாவம் செய்தோமா என்று உங்களுக்கு எப்படி தெரியும்? //
உங்களுக்கு மூளை இருக்கிறது என்று எந்த அளவுக்கு நம்புகிறேனோ அதே அளவு உங்கள் மேல் பாவம் இருக்கிறது என்று நம்புகிறேன். இப்போது உயிரோடு இருப்பவனுக்கு மூளை இருக்கிறது என்று எந்த ஞானத்தால் கூறுகிறேனோ, அதே ஞானத்தால் உங்கள் மேல் பாவம் இருக்கிறது என்று கூறுகிறேன். அதற்க்கு எனக்கு சாட்சி எதுவும் தேவை இல்லை.

//இயேசு தன்னை யூதர்களின் ராஜா என்று சொல்லிக் கொண்டிருக்காவிட்டால் அவர் சிலுவையில் அறையைப் பட்டிருக்க மாட்டார். தன்னை யூதர்களின் ராஜா என்று இயேசு சொன்னதற்கு அவருக்கு தண்டனை வழங்கப் பட்டது.//
அடேங்கப்பா! அப்புறம்??

//முன்பு இயேசு பெற்ற தண்டனைக்கான பழியை இப்போது எங்கள் மீது நீங்கள் சுமத்துவதால், இயேசுவின் தண்டனைக்கான பழியை நாங்கள் சுமக்கிரேம் என்று சொன்னால், அது பொருத்தமாக இருக்கும். //
உண்மையிலேயே உன் மேல் உள்ள பழியை நீக்கவேதான் இயேசு தண்டனை பெற்றார்.
நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், உம்மேல் பழி உள்ளது. நீ பாவிதான், மன்னிக்கப்படும்வரை.

//இயேசுவின் பெயரால் நீங்கள் கக்கும் விஷக் கருத்துக்களினால், இன அழிப்பு , மத வெறி கருத்துக்களினால் உருவான கொடூரங்களை, குற்றமற்ற நாங்கள் சுமக்கிறோம் என்பதே உண்மை.//
ரூம் போட்டு முட்டாள்தனமா யோசிப்பீங்க போலிருக்கே?

Hard Truth

//இயேசுவை சாக்ரெடிஸ், திருப்பூர் குமரன் லிஸ்டில் வைத்து விட்டீர்களே. //

விட்டுக் கொடுத்துப் போகும் சமரசக் கருத்துக்களைக் கூறியவர் என்ற வகையிலே இயேசு கிறிஸ்துவை பாராட்டி, மரியாதை செய்கிறோம்.

அதைப் போலவே மக்களை உண்மைப் பாதைக்கு, நாகரீக பாதைக்கு மக்களை இட்டுச் செல்லும் கருத்துக்களைக் கூறிய சாக்ரடீசின் தியாகத்தை மறக்க முடியாது, சாக்ரடீசும் நமது பாராட்டுக்கு, மரியாதைக்கு உரியவரே.

திருப்பூர் குமரன் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தன இன்னுயிரை விட்டவர், பதவிக்காக அவர் போராடவில்லை. திருப்பூர் குமரன் தத்துவ அறிங்கர் அல்ல. ஆனால் கொள்கைக்கான போராட்டத்தில் மரணத்தை தண்டனையாகப் பெற்றவர். கொள்கை உறுதிக்காக மரணத்தை தண்டனையாக பெற்றவர்கள் என்ற வகையிலே தான் திருப்பூர் குமரனை ஒரு உதாரணமாகக் காட்டினோம்.

//உலக மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாய் மரித்தவரை, ஏதோ பதவி சண்டையில் மரித்தவர் போல் காட்டியுள்ளீர்களே. //

இயேசு கிறிஸ்து பதவி சண்டையில் மரித்தார் என்று நான் சொல்லவில்லை. அவர் மீது சுமத்தப் பட்ட குற்றம் என்ன என்பதையே சொன்னேன்.

//உலக மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாய் மரித்தவரை, //

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை தவறாகப் புரிதல் செய்வதோடு, அந்த தவறான புரிதலை எங்களிடம் திணிக்கவும் செய்வது வருத்தமான விடயம்.

பாவத்தை செய்யக் கூடாது என்பதே இயேசு கிறிஸ்துவின் முக்கியக் கருத்து. பாவம் செய்யவே கூடாது என்பதை அவர் வலியுறுத்தி இருக்கிறார். உனது கண் உனக்கு இடறுலுண்டாக்கினால் அதை பிடுங்கி எறிந்து விடு. உன் வலது கை இடறுலுண்டாக்கினால் அதை தறித்து எறிந்து விடு என்று சொல்லும் அளவுக்கு அவர் பாவம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். எனவே பாவம் செய்வதை தவிர்க்கும் படிக்கு நாம் மன உறுதியை மேம்படுத்துவதே சிறந்தது. அதை விட்டு விட்டு நான் பாவம் செய்வேன், இயேசு மன்னிப்புக் குடுப்பார் என்ற கொள்கை கிறிஸ்துவுக்கு எதிரானது. திருடிவிட்டு, கற்பழித்து விட்டு, இயேசு கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்வோம் என்னும் கொள்கையை இயேசுவின் கொள்கையாக் கட்டுவது தவறு.

நான் உங்களிடம் தெளிவாகக் கேட்கிறேன். – “பாவம் செய்யக் கூடாது, ஒரு அங்கம் பாவம் செய்யத் தூண்டினால் அந்த அங்கத்தை வெட்டினால் கூட பரவாயில்லை, ஆனால் பாவம் செய்யக் கூடாது” என்பது இயேசுவின் கொள்கையா? இல்லை “நீ கற்பழித்து விட்டோ, கொலை செய்து விட்டோ வந்து என்னிடம் மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம்” என்பது இயேசுவின் கொள்கையா?

தனக்கு எதிராக இழைக்கப் பட்ட பாவத்தை இயேசு மன்னித்தார். தன்னை சிலுவையில் அறைந்தவர்களை, அறையும் படி சத்தம் போட்டு கலாட்டா செய்த பலரையும் இயேசு மன்னித்தார். அது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எல்லோருமே பிறரின் தவறுகளைப் பொறுக்க வேண்டும் என்பதுவே இயேசுவின் கருத்து, இது நாகரீகக் கருத்தே. இந்தக் கருத்தை திரித்து பாவம் செய்து விட்டு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்ல்வது சரியல்ல.

//நாங்கள் பாவம் செய்தோமா என்று உங்களுக்கு எப்படி தெரியும்? //

உங்களுக்கு மூளை இருக்கிறது என்று எந்த அளவுக்கு நம்புகிறேனோ அதே அளவு உங்கள் மேல் பாவம் இருக்கிறது என்று நம்புகிறேன். இப்போது உயிரோடு இருப்பவனுக்கு மூளை இருக்கிறது என்று எந்த ஞானத்தால் கூறுகிறேனோ, அதே ஞானத்தால் உங்கள் மேல் பாவம் இருக்கிறது என்று கூறுகிறேன். அதற்க்கு எனக்கு சாட்சி எதுவும் தேவை இல்லை.//

மனிதர்கள் நேர்மையான வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை கூட உங்களுக்கு இல்லை, அந்த அளவுக்கு உங்கள் மனநிலை இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

சாட்சியே இல்லாமல் தீர்ப்பு வழங்கும் அளவுக்கு கட்டைப் பஞ்சாயத்தை விட கோரமான ஒரு அநீதியை நீங்கள் சுமத்தக் காராணம், உங்கள் மனதில் திணிக்கப் பட்ட பிற்போக்கு கருத்துக்களே .

//முன்பு இயேசு பெற்ற தண்டனைக்கான பழியை இப்போது எங்கள் மீது நீங்கள் சுமத்துவதால், இயேசுவின் தண்டனைக்கான பழியை நாங்கள் சுமக்கிரேம் என்று சொன்னால், அது பொருத்தமாக இருக்கும். //
உண்மையிலேயே உன் மேல் உள்ள பழியை நீக்கவேதான் இயேசு தண்டனை பெற்றார்.
நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், உம்மேல் பழி உள்ளது. நீ பாவிதான், மன்னிக்கப்படும்வரை.//

நான் பிறந்தது இருபதாம் நூற்றாண்டில். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையைப் பட்டது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு. அதற்க்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று கூக்கிரலிட்ட யூதர்களை குறை சொல்லலாம். நான் என்ன குற்றம் செய்தேன்? நானா இயேசுவை சிலுவையில் அறைந்தேன்? நீங்கள் நல்ல சத்துள்ள உணவுகளை உட்கொண்டு ஓய்வு எடுப்பது நல்லது. குற்றாலம், நயாகரா போன்ற நீர் வீழ்ச்சி பகதிகளில் சில காலம் தங்கினால் புத்துணர்ச்சி கட்டும், நல்ல சிந்தனை அமையும்.

//(வார்த்தைகளை திரிப்பதில் திருச்சியார் பிசாசையும் மிஞ்சுவார் போலும்). //

நான் வார்த்தைகளை அப்படியே எடுத்து மேற்கோள் காட்டுகிறேன். எதையும் திரிக்கவில்லை. மற்றபடி வசவுகளை எழுதுவது உங்களுக்கு பழக்கமான ஒன்று. வாயிலிருந்து வருவதினாலேயே ஒருவன் தீட்டுப் படுகிறான் என்று சொல்லப் பட்டு உள்ளது.ஆனால் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளுக்கு எதிராகவே செயல் பட்டு வரும் உங்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? முன்பு, கட்டாயத்தினால் இந்தியப் பெண்கள் குடும்ப வாழ்க்கை வாழ்கிராகள் என்று ஆதங்கப் பட்டு , கல்லானாலும் கணவன் என்று இருந்து விட்டார்களே என்று நக்கல் அடித்து, விவாகரத்தை ஆதரிக்கவில்லை என்று கூறிக் கொண்டே விவாகரத்தை ஆதரித்தீர்கள். அதே போல ஒவ்வொரு பின்னூட்ட த்திலும் புதிய வசவுகளை அள்ளி வீசுகிறீர்கள்.

இயேசு கிறிஸ்துவின் பெயராலேயே கிறிஸ்துவின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பலரும் பரப்பி வருகின்றனர்.

இயேசுவின் பெயரால் நீங்கள் கக்கும் விஷக் கருத்துக்களினால், இன அழிப்பு , மத வெறி கருத்துக்களினால் உருவான கொடூரங்களை, குற்றமற்ற நாங்கள் சுமக்கிறோம் என்பதே உண்மை

//உண்மையிலேயே உன் மேல் உள்ள பழியை நீக்கவேதான் இயேசு தண்டனை பெற்றார்.
நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், உம்மேல் பழி உள்ளது. நீ பாவிதான், மன்னிக்கப்படும்வரை.//

கடுமையான உண்மைக்கு மரியாதை தேய்கிறது. கோபப்படுகிறார் என்றும் தோன்றுகிறது. உண்மை காலியாகிவிட்டால் கோபம் தான் மிஞ்சும்.

//உங்களுக்கு மூளை இருக்கிறது என்று எந்த அளவுக்கு நம்புகிறேனோ அதே அளவு உங்கள் மேல் பாவம் இருக்கிறது என்று நம்புகிறேன்.//

இது என்ன கொடுமை. கண்ணால் கூட காணாத ஒருவருக்கு பாவி என்று சர்டிபிகேட் கொடுக்கிறார் இவர். இப்படி பயமுறுத்தியே அப்பாவி மக்களை மூளை சலவை செய்து மத வியாபாரத்தை கொடிகட்டி பறக்க விடுகிறீர்கள்.

Mr.Trichy and Mr.Ram,
Do you really think that I enjoy bashing you guys? Certainly not. Don’t you think that everyone likes to have a good time with others with peace and joy? I also want to be in peace with everyone. But, for that, I cannot cover up the truth. I am not scolding you, or I am not angry with you. I know that I am using strong language, but to make you realize what I mean. I am just saying what Bible says.

1 John 1 says:
//8If we claim to be without sin, we deceive ourselves and the truth is not in us. 9If we confess our sins, he is faithful and just and will forgive us our sins and purify us from all unrighteousness.10If we claim we have not sinned, we make him out to be a liar and his word has no place in our lives.//

I know that you guys are upset with me (your words are showing it). Because I proclaim the above verses. And I know that you guys will be upset. The Bible also says that in John 15:
// 18″If the world hates you, keep in mind that it hated me first. 19If you belonged to the world, it would love you as its own. As it is, you do not belong to the world, but I have chosen you out of the world. That is why the world hates you. 20Remember the words I spoke to you: ‘No servant is greater than his master.'[b] If they persecuted me, they will persecute you also. If they obeyed my teaching, they will obey yours also. 21They will treat you this way because of my name, for they do not know the One who sent me. 22If I had not come and spoken to them, they would not be guilty of sin. Now, however, they have no excuse for their sin. 23He who hates me hates my Father as well.//

Hard Truth.

Mr. Hard Truth

நீங்கள் சொல்வது எல்லாம் உங்களின் நம்பிக்கையே, ஆனால் அவை உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நம்பிக்கை என்பது வேறு, நிரூபிக்கப் படக் கூடிய உண்மை என்பது வேறு!
நீங்கள் Hard truth என்ற பெயரில் எழுதுவதனால் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என ஆகி விடாது. ஒவ்வொருவரும் அவரவர்களின் மத நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிக்க முயன்று, அதற்காக இழிவான கடுமையான சொற்களைப் பிரயோகிக்கக் கூடாது.

ஜான் என்பவர் அவர் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களை வைத்து மனிதரைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்க கூடும்.

ஜானின் கொள்கைகளை ஒத்துக் கொள்பவர்களையோ , பைபிளை முழுவதும் அப்படியோ ஒத்துக் கொள்பவர்களையோ (அவர்கள் தன்னை பாவி என்று அழைக்கப் பட ஆட்சேபம் தெரிவிக்காத போது), அவர்களை நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்.

பைபிளில் எழுதி இருக்கிறது என்பதற்காக நீங்கள் எங்களை பாவி என்று அழைக்க உங்களுக்கு உரிமை இல்லை.

நான் பைபிளை முழுதும் ஒத்துக் கொள்ளவோ, அதன் கருத்துக்களுக்கு என்னை அடிமைப் படுத்திக் கொள்ளவோ இல்லை. பைபிள் என்பதே மனிதாபிமானமற்ற இனப் படுகொலைகளை புனிதப்படுத்தும் நூலாக இருக்கிறது என்பதை, ஆதாரத்தோடு இந்தக் கட்டுரையில் காட்டி இருக்கிறோம்.

ஜான் வாழ்ந்த சமுதாயத்தின் கலாச்சாரம் வேறு. நாங்கள் வாழும் சமுதாயத்தின் கலாச்சாரம் வேறு. வள்ளுவரோ, கணியன் பூங்குன்றனாரோ, தொல்காப்பியரோ எந்த ஒரு இடத்திலும் தமிழர்களைப் பாவி என்று சொல்லவும் இல்லை, காரணம் தமிழர்கள் நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். நீங்கள் உங்கள் மத நம்பிக்கைக்காக எங்களைத் திட்டக் கூடாது.

அப்படிப் பார்த்தால் இசுலாமியரின் நம்பிக்கைப் படி அல்லாவை மட்டுமே கடவுளாகவும், முகமதுவை தூதராகவும் ஒத்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் காபிர்கள் என்ற அடிப்படியிலே உங்களை காபிர் என அழைத்தால், அதை ஒப்ப நீங்கள் தயாரா. நாளை இன்னொருவர், வேறொரு மதத்தின் அடிப்படையில் உங்கள் குடும்பத்தை இழிவு படுத்திக் கூறினால் அதை ஒத்துக் கொள்ள நீங்கள் தயாரா?

ஒவ்வொருவரும் அவரவர் மத நம்பிக்கையை -அது நம்பிக்கை மாத்திரமே- அவரவர்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். நாகரிக சமூகத்தில்மரியாதையாக அழைக்கவும் பழகவும் வேண்டும். கற்கால காட்டு மிராண்டிப் பழக்க வழக்கங்களைப் போல, அடுத்தவரை எந்த முகாந்திரமும் இல்லாமல் இகழவோ, திட்டவோ கூடாது.

இங்கே தண்டிக்கப் படுவது, ஆக்கினைக்கு உள்ளாவது நாங்கள்தான்.

///அப்படிப் பார்த்தால் இசுலாமியரின் நம்பிக்கைப் படி அல்லாவை மட்டுமே கடவுளாகவும், முகமதுவை தூதராகவும் ஒத்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் காபிர்கள் என்ற அடிப்படியிலே உங்களை காபிர் என அழைத்தால், அதை ஒப்ப நீங்கள் தயாரா. நாளை இன்னொருவர், வேறொரு மதத்தின் அடிப்படையில் உங்கள் குடும்பத்தை இழிவு படுத்திக் கூறினால் அதை ஒத்துக் கொள்ள நீங்கள் தயாரா?///

திருச்சிக்காரர் அவர்களே,

நீங்கள் கூறியக் கருத்து மிகவும் நியாயமானது தான்.பைபிளை ஏற்றுக்கொள்ளாத மற்றவர்களை ஏன் பாவிகள் என்று அழைக்க வேண்டும்?ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்பெல்லாம், நாங்கள் வசிக்கும் பகுதியில் கிருஸ்தவப் பிரச்சாரர்கள் நள்ளிரவிலும், அதற்குப் பின்னும் குழாய் ஒலிபெயர்க்கியின் மூலம் “”பாவிகளே”” என்று அழைத்து, எல்லாருடைய தூக்கத்தையும் கெடுத்து, இயேசுவை ஏற்றுக்கொள்ளுமாறும் இந்து கடவுள்களை சாத்தான்கள் என்றும்,இந்துக் கடவுள்கள் “கண்ணிருந்தும் பார்க்காது,காதிருந்தும் கேட்காது” என்று பைபளில் கூறியிருப்பதாகக் கூறி 2000 த்தில் உலகம் அழிந்திவிடும் என்றும் அதற்குள் இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நீங்கள் பிழைப்பீர்கள் என்றும், இல்லாவிட்டால் முடிவில்லா நரகத்தில் உழல வேண்டியதுதான் என்றும் பிரச்சாரம் செய்வார்கள்.தற்போது சில இந்து அமைப்புகளால்.அவர்களின் கொட்டம் சிறிது அடங்கியுள்ளது..

//இது என்ன கொடுமை. கண்ணால் கூட காணாத ஒருவருக்கு பாவி என்று சர்டிபிகேட் கொடுக்கிறார் இவர். இப்படி பயமுறுத்தியே அப்பாவி மக்களை மூளை சலவை செய்து மத வியாபாரத்தை கொடிகட்டி பறக்க விடுகிறீர்கள்.//
Ram,
Just think, I haven’t even seen you. What worldly benefit, do think that I will be getting, if you accept or reject Christ?

Hard Truth

//நான் பைபிளை முழுதும் ஒத்துக் கொள்ளவோ, அதன் கருத்துக்களுக்கு என்னை அடிமைப் படுத்திக் கொள்ளவோ இல்லை. //
Mr.Trichy,
All these days you were saying that we are twisting Bible, but when sufficient evidences are shown from Bible that what we claim is right, you started saying that Bible itself is wrong.

Hard Truth

Dear Mr. Hard Truth,

//Mr.Trichy,
All these days you were saying that we are twisting Bible, //

Not just you, if any one have twisted the words from Bible, I had clarified the same. Calrifying what is written in Bible is one thing, blindly accepting whatever said in Bible is another thing.

Even in the future also, if you or any one else twist the Bible (may be un intentionally) , I will not hesitate to quote the exact verses from Bible and clarify what is written there and what shall be the meaning of the same. That does NOT mean that I agreed to accept the Bible

I reiterate that- நான் பைபிளை முழுதும் ஒத்துக் கொள்ளவோ, அதன் கருத்துக்களுக்கு என்னை அடிமைப் படுத்திக் கொள்ளவோ இல்லை.

Not only Bible, let it be any other book, we would take up each and every verse of that book. Each and every verse of any book shall be tested in the anvil of Truth. The idealogies shall be tested for Truth based on logic and reasoning. If any principle is found to be useful for the welfare of mankind , it will be appreciated and incorporated. If any principle is found to be detrimental for the mankind they will not be accepted.

Gone are the days that people were thrusted with a book in their hands, and ordered to accept and obey to whatever written in that book!

//ஒவ்வொருவரும் அவரவர்களின் மத நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிக்க முயன்று, அதற்காக இழிவான கடுமையான சொற்களைப் பிரயோகிக்கக் கூடாது. //

எந்த பாவியும் தன்னை அத்தனை எளிதில் பாவி என்று ஒப்புக்கொள்வதில்லை. நீங்கள் மனிதர்களின் எண்ணங்களுக்கு (அவை சரியோ தவறோ) முக்கியதுவமளிக்கிரீர்கள்.நான் கிறிஸ்த்துவுக்கு முக்கியதுவமளிக்கிறேன். உங்களை நான் பாவமற்றவன் என்று கூறுவது, கிறிஸ்த்துவை பொய்யன் என்று கூறுவதற்கு சமம்.

//பைபிளில் எழுதி இருக்கிறது என்பதற்காக நீங்கள் எங்களை பாவி என்று அழைக்க உங்களுக்கு உரிமை இல்லை. //
உங்கள் மீது உங்களுக்கு உரிமை இருக்கிறதா? படைத்தவனுக்கே அனைத்து உரிமையும் உள்ளது. அவனே உங்களை பாவி என்று கூறுகிறான்.
அதையே நானும் கூறுகிறேன்.

//வள்ளுவரோ, கணியன் பூங்குன்றனாரோ, தொல்காப்பியரோ எந்த ஒரு இடத்திலும் தமிழர்களைப் பாவி என்று சொல்லவும் இல்லை, காரணம் தமிழர்கள் நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். நீங்கள் உங்கள் மத நம்பிக்கைக்காக எங்களைத் திட்டக் கூடாது. //
இவர்கள் சொல்லியிருந்தால் ஏற்றுகொள்வீர்களா?

//ஒவ்வொருவரும் அவரவர் மத நம்பிக்கையை -அது நம்பிக்கை மாத்திரமே//
A Faith without deeds is a dead faith. If at all I have to carry a dead faith, I have to become Trichikkaaran.

//இங்கே தண்டிக்கப் படுவது, ஆக்கினைக்கு உள்ளாவது நாங்கள்தான்.//
This is really true. வரும் ஆக்கினைக்கு தப்பி பிழைத்துக்கொள்.

Hard Truth

//எந்த பாவியும் தன்னை அத்தனை எளிதில் பாவி என்று ஒப்புக்கொள்வதில்லை. நீங்கள் மனிதர்களின் எண்ணங்களுக்கு (அவை சரியோ தவறோ) முக்கியதுவமளிக்கிரீர்கள்.நான் கிறிஸ்த்துவுக்கு முக்கியதுவமளிக்கிறேன். உங்களை நான் பாவமற்றவன் என்று கூறுவது, கிறிஸ்த்துவை பொய்யன் என்று கூறுவதற்கு சமம். //

இயேசு கிறிஸ்து என்ன சொன்னார் என்பதை பார்க்கு முன், நான் இதை சொல்ல விரும்புகிறேன்.

கிறிஸ்துவோ, அல்லது வேறு யாரோ, ஏதாவது ஒரு கருத்தை சொன்னால் , அவரை முழுமையாக ஒத்துக் கொள்பவர்கள் தங்களை பாவிகள் என்றோ, வேறு ஏதாவதோ சொல்லி அழைத்துக் கொள்வதை நாங்கள் ஆட்சேபிக்க முடியாது. நீங்கள் ஒரு கிறிஸ்துவரை பாவி என்று அழைத்தால்- அவர் அதை ஆட்சேபிக்கவில்லை என்றால்- நீங்கள் அழைத்துக் கொள்ளலாம், அது அவருக்கும் உங்களுக்கும் இடையிலான விடயம்.

ஜோசி என்று ஒருவர் இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவர் மைக்கா என்பவரை தன மதத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்ளுங்கள். மைக்கா தன்னுடைய வாழ்வில் ஏற்ப்பட்ட சில கசப்பான அனுபவங்களினால் பெண்கள் எல்லோருமே வேசித் தனம் செய்பவர்கள் என்கிற ஒரு கருத்தை உருவாக்கி அதை ஜோசி உட்பட தன்னுடைய மதத்தவருக்கு போதிக்கலாம். ஜோசி அவருடைய மதத்தை சேர்ந்தவரை வேசி மகன் என்று அழைக்கலாம். ஆனால் ஜோசி, தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் வேசி மகன் என்று அழைக்கும் உரிமையை பெறவில்லை.

அடிப்படை நாகரீகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவரை கண்ணியமாக நடத்த வேண்டும்.

இப்போது இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களுக்கு வருவோம். ” நீதி மான்களை அன்று பாவிகளையே இரட்சிக்க வந்தேன்” என்று தெளிவாக கிறிஸ்து சொல்லியுள்ளதை நான் பலமுறை மேற்கோள் கட்டி இருக்கிறேன். “இந்த உலகில் நேர்மையாக வாழும் நீதி மான்கள் பலர் உள்ளனர். அதே நேரம் சூழ்நிலையால் பாவத்தில் சிக்கியவர்களும் இந்த உலகில் உள்ளனர். பாவத்தில் சிக்கியவரையே நான் மீட்க வந்தேன்” என்பதை இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்லி இருக்கிறார். எனவே உங்களுடைய தவறான புரிதலில் இயேசு கிறிஸ்துவை சிக்க வைக்க வேண்டாம் என நான் கோருகிறேன்.

யாரோ சொன்ன கருத்துக்களை எல்லாம் இயேசு கிறிஸ்துவின் மேல் ஏற்றி, அவரைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உருவாக்குகிறீர்கள்.

//உங்கள் மீது உங்களுக்கு உரிமை இருக்கிறதா? படைத்தவனுக்கே அனைத்து உரிமையும் உள்ளது. அவனே உங்களை பாவி என்று கூறுகிறான்.
அதையே நானும் கூறுகிறேன்.//

முதலில் இந்தப் படைத்தவன் என்று ஒருவர் இருப்பதை காட்டுங்கள் அல்லது நிரூபியுங்கள். படைத்தவன் என்று ஒருவர் இருந்தால், அவர் சர்வ வல்லமை உடையவர் என்றால் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக வானில் முழு நிலவு இருக்கும் படி செய்து காட்டுங்கள், என்று எல்லா இறை நம்பிக்கையாளர்களுக்கும் நான் முன்பே சொல்லி விட்டேன். நிரூபிக்கப் படாத, காட்டப் படாத ஒரு கான்செப்டை வைத்து மக்களை பழித்து அடிமையாக்கிய காலம் முடிந்து விட்டடது.

அறிவியல் மற்றும் சிந்தனை வளர்ந்த காலத்திலேயும் உங்களின் மிரட்டல் போக்கை தொடர்கிறீர்கள். கடவுளின் பெயரை சொல்லி, பல அறிவியல் அறிங்கர்களை நெருப்பில் இரட்டுக் கொளுத்தியும், சிறையில் அடைத்து சித்திரவதை செய்ததையும் போல இப்போதும் மிரட்டிப் பாக்க முயன்றால் உங்களின் மிரட்டலுக்கு நாகரிக சமுதாயம் பணியாது.

//வள்ளுவரோ, கணியன் பூங்குன்றனாரோ, தொல்காப்பியரோ எந்த ஒரு இடத்திலும் தமிழர்களைப் பாவி என்று சொல்லவும் இல்லை, காரணம் தமிழர்கள் நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். நீங்கள் உங்கள் மத நம்பிக்கைக்காக எங்களைத் திட்டக் கூடாது. //
இவர்கள் சொல்லியிருந்தால் ஏற்றுகொள்வீர்களா?//

இவர்கள் எல்லாம் நாங்கள் வாழும் சமுதாயத்தில் முன்னோடிகளாக வாழ்ந்து எங்களது காலச்சாரத்தைப் பதிவு செய்து இருக்கின்றனர். இவர்களின் கருத்துக்களையும் திரிக்க முயலாலாம். ஆனால் எளிதல்ல. திரிபு அமபலப் படுத்தப் படும்.

//ஒவ்வொருவரும் அவரவர் மத நம்பிக்கையை -அது நம்பிக்கை மாத்திரமே//
A Faith without deeds is a dead faith. If at all I have to carry a dead faith, I have to become Trichikkaaran.//

உங்கள் நம்பிக்கையை உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். பிறர் மீது சாக்கடையை வாரி இறைக்கக் கூடாது.

//இங்கே தண்டிக்கப் படுவது, ஆக்கினைக்கு உள்ளாவது நாங்கள்தான்.//
This is really true. வரும் ஆக்கினைக்கு தப்பி பிழைத்துக்கொள்.//

நீங்கள் முதலில் மரியாதையாக பேசவும் , எழுதவுமான பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பல முறை உங்களுக்கு பலரும் நட்பு ரீதியில் எடுத்துக் கூறியும் நீங்கள் மரியாதையாக எழுத பாகவில்லை. மத வெறி தலைக்கேறியதால் , ஆத்திரம் வந்து நிலை தடுமாறி மரியாதை இல்லாமல் எழுதுகிறீர்களோ என்னும் படிக்கு உங்கள் நடை இருக்கிறது. ஏக வசனத்தில் எழுதக் கூடாது.

மனிதர்களின் சிலரின் நாகரீகமற்ற வெறித் தன்மையால் எங்கள் மீது பொழியப்படும் வசவு ஆக்கினையைத் தவிர, வேறு எந்த ஆக்கினையும் எங்களுக்கு வரப் போவதாகத் தெரியவில்லை.

குற்றமற்ற எங்களுக்கு ஏதாவது ஆக்கினை தரப் படுமானால், அப்படி குற்றமற்றவனை ஆக்கினைக்குள்ளக்கும் கொடுமைக்காரரின் முன் மண்டியிட்டு தப்புவதை விட, ஆக்கினையை தைரியமாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறிக் கொள்கிறேன்.

வணக்கம் தனபால்,

//இந்து கடவுள்களை சாத்தான்கள் என்றும்//
அவை வெறும் கல்லும், மண்ணும், சித்திரங்களும், கதாபாத்திரங்களும் தானே.

//இந்துக் கடவுள்கள் “கண்ணிருந்தும் பார்க்காது,காதிருந்தும் கேட்காது” //
அவை பார்க்கிறது, கேட்கிறது என்று கூறுகிறீர்களா?

//2000 த்தில் உலகம் அழிந்திவிடும் //
Bible never told that the world will come to an end by 2000.

//தற்போது சில இந்து அமைப்புகளால்.அவர்களின் கொட்டம் சிறிது அடங்கியுள்ளது..//
நீங்கள் தப்பி பிழைக்கும்படி, உண்மையை அறிய அவர்கள் தடையாய் உள்ளார்கள்.
நஷ்ட்டம் அந்த சுவிஷேசகர்க்கு அல்ல. உங்கள் பகுதியில் ரட்சிக்கப்படாதவர்க்கே.

Hard Truth.

//Each and every verse of any book shall be tested in the anvil of Truth. //
Do you know every Truth in this world to test it?

//The idealogies shall be tested for Truth based on logic and reasoning.//
Whose logic? Your logic? Are you that big a logical person? Your logics never failed?

//If any principle is found to be useful for the welfare of mankind , it will be appreciated and incorporated. If any principle is found to be detrimental for the mankind they will not be accepted. //
How do u decide what is good for mankind? And what do u mean by incorporating and accepting. You may accept or reject something just for you and you alone. Apart from that you will just write in the blogs. But, we, the people who work for Truth and GOD, with more love for the mankind can go every part of the world to preach the Gospel and the people will saved for the eternity.

//Gone are the days that people were thrusted with a book in their hands, and ordered to accept and obey to whatever written in that book!//
No dear, it is other way. Gone are the days which bound the people in the name of Culture from knowing and following the truth.

Hard Truth

//Each and every verse of any book shall be tested in the anvil of Truth. //
Do you know every Truth in this world to test it?//

நான் மட்டும் அல்ல. இந்த உலகத்தில் பலரும் ஒவ்வொரு கருத்துக்களில் கூறப் பட்டதையும் ஆராய்ந்து உண்மை இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். உண்மையை சோதிக்க பகுத்தறிவு, நிரூபணம் , சரி பார்த்தல் இப்படி பல வழிகள் உள்ளன. சொல்லப் பட்டதை அப்படியே நம்ப சிலர் தயாராக இருப்பதைப் போல, அதில் உண்மை இருக்கிறதா என ஆராயவும் சிலர் உள்ளனர்.

//How do u decide what is good for mankind? And what do u mean by incorporating and accepting. You may accept or reject something just for you and you alone. Apart from that you will just write in the blogs.//

மக்களுக்கு நன்மை தரும் கருத்துக்கள் எவை, இரத்த ஆறு ஓட விட்டு மனிதத்தை நசிப்பிக்கும் கருத்துக்கள் எவை என்பதை உணரும் பகுத்தறிவு மனித சமுதாயத்திற்கு இருக்கிறது.

//But, we, the people who work for Truth and GOD, with more love for the mankind can go every part of the world to preach the Gospel and the people will saved for the eternity.//

இந்த பிரச்சாரம் செய்து பரப்பிய கருத்துக்கள், அமைதியைக் குலைத்து குருசெடு போர்கள் என்னும் தொடர்ச்சியான போர்களை உருவாக்கி , இரண்டு உலகப் போரிலும் இறந்தவர்களை விட அதிகமான பேரிக காவு கொடுத்து விட்டது. இந்த பிரச்சாரங்கள் உருவாக்கிய சமுதாயங்கள் எல்லாம் விபச்சாரத்திலும், விவாக ரத்திலும் சிக்கி, குடும்ப வாழ்க்கை அழிந்து தனிமை வாழ்க்கை வாழும் பரிதாப சமுதாயத்தையே தந்துள்ளது. இங்கே மண்ணிலே தவறு செய்து விட்டு, விண்ணிலே எதை தேட முடியுமோ தேடிப் பாருங்கள் !

//Gone are the days that people were thrusted with a book in their hands, and ordered to accept and obey to whatever written in that book!//
No dear, it is other way. Gone are the days which bound the people in the name of Culture from knowing and following the truth.//

முயற்ச்சி செய்து பாருங்கள். ஆனால் மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். கடவுள் என்ற கான்செப்டை வைத்து நடத்திய காட்டு மிராண்டித் தனத்தை விட கொடூரமான செயல்களை மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

போப் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. பாதிக்கப் பட்டவரிடம் மன்னிப்புக் கேட்கும் மனிதத்தை அவர் புரிதல் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். மக்களைக் கெடுத்து விட்டு ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்பது பொருத்தம் இல்லாதது, முதலில் கண்ணில் தெரியும் மனிதர்களிடம் மன்னிப்புக் கேட்போம், காணாத “கடவுளை” அப்புறம் தேடுவோம் என அவரும் எண்ணியிருக்கக் கூடும்.

//This is really true. வரும் ஆக்கினைக்கு தப்பி பிழைத்துக்கொள்.//
மன்னிக்கவும், தப்பி பிழைத்துக்கொள்ளுங்கள்.

//அதே நேரம் சூழ்நிலையால் பாவத்தில் சிக்கியவர்களும் இந்த உலகில் உள்ளனர். பாவத்தில் சிக்கியவரையே நான் மீட்க வந்தேன்” என்பதை இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்லி இருக்கிறார். //
சூழ்நிலையால் பாவத்தில் சிக்கியவர்கள் என்று வேதத்தில் எங்குள்ளது?

//” நீதி மான்களை அன்று பாவிகளையே இரட்சிக்க வந்தேன்” //
Ofcourse there is no need to save the rightious. But, Jesus says that he didn’t find anyone good (or rightious).

//ஜோசி என்று ஒருவர் இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவர் மைக்கா என்பவரை தன மதத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்ளுங்கள். மைக்கா தன்னுடைய வாழ்வில் ஏற்ப்பட்ட சில கசப்பான அனுபவங்களினால் பெண்கள் எல்லோருமே வேசித் தனம் செய்பவர்கள் என்கிற ஒரு கருத்தை உருவாக்கி அதை ஜோசி உட்பட தன்னுடைய மதத்தவருக்கு போதிக்கலாம். ஜோசி அவருடைய மதத்தை சேர்ந்தவரை வேசி மகன் என்று அழைக்கலாம். ஆனால் ஜோசி தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் வேசி மகன் என்று அழைக்கும் உரிமையை பெறவில்லை.//
First of all, there is no such thing(ur mica and josi story) that happened and it is just your imagination. But, Bible is something which is confirmed by History. Also, Bible is not just one person’s experiance. It is a 66 books, written thru 40 Human authors (inspired by GOD) over the time of 1500yrs approx. And all the books confirms with each other. Bible is more authentic than anything or anyone. For sure, it more authentic than Thiruchchikkaaran.

//இவர்கள் எல்லாம் நாங்கள் வாழும் சமுதாயத்தில் முன்னோடிகளாக வாழ்ந்து எங்களது காலச்சாரத்தைப் பதிவு செய்து இருக்கின்றனர். //
இவர்கள் கலாசாரத்திற்கு கால் முளைத்து ‘காலசாரமாகி’ ஓடி விட்டது. வாழ்ந்த நிலம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம். மற்றதெல்லாம் மாறி மாறி நாகரீகம் என்ற பெயர் வைத்துக்கொண்டு எங்கேயோ போய்விட்டது.

//இவர்கள் எல்லாம் நாங்கள் வாழும் சமுதாயத்தில் முன்னோடிகளாக வாழ்ந்து எங்களது காலச்சாரத்தைப் பதிவு செய்து இருக்கின்றனர். இவர்களின் கருத்துக்களையும் திரிக்க முயலாலாம். //
ஓ… திருக்குறளை வேதத்திற்கு பொருந்துமாறு மாற்றி கூறுவேன் என்று நினைத்தீர்களா? சிலர் அந்த வீண் முயற்ச்சியை செய்தனர். உண்மைக்கு திருக்குறளின் துணையோ, தொல்காப்பியத்தின் துணையோ தேவையே இல்லை.

//உங்கள் நம்பிக்கையை உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். பிறர் மீது சாக்கடையை வாரி இறைக்கக் கூடாது. //
உங்கள் மீதிருக்கும் சாக்கடையை கழுவவே விரும்புகிறேன்.

//மத வெறி தலைக்கேறியதால் , ஆத்திரம் வந்து நிலை தடுமாறி மரியாதை இல்லாமல் எழுதுகிறீர்களோ என்னும் படிக்கு உங்கள் நடை இருக்கிறது. ஏக வசனத்தில் எழுதக் கூடாது.//
இது அன்பு அதிகமானதினால் வந்தது ஐயா. மன்னிக்கவும். நான் இதை திருத்திக்கொள்கிறேன்.
தங்களை பன்மையிலேயே அழைக்கிறேன்.

//மனிதர்களின் சிலரின் நாகரீகமற்ற வெறித் தன்மையால் எங்கள் மீது பொழியப்படும் வசவு ஆக்கினையைத் தவிர, வேறு எந்த ஆக்கினையும் எங்களுக்கு வரப் போவதாகத் தெரியவில்லை. //
உங்களுக்கு ‘தெரியவில்லை’. அதுதான் பிரச்சனையே. எங்களுக்கு தெரிகிறது, அதனால்தான் சொல்கிறோம்.

//குற்றமற்ற எங்களுக்கு ஏதாவது ஆக்கினை தரப் படுமானால்//
See the statement given by you in Tamilhindu.com.
//அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். //
If you dont have sin, for what you wanted to ask the forgiveness?

//கொடுமைக்காரரின் முன் மண்டியிட்டு தப்புவதை விட//
Every knee shall bowdown infront of my Lord. Either now or later. It will be good for you, if it bows down now. Otherwise, later also you will bow down your knee, but that is because of pain and that will not help you.

Hard Truth

நண்பர் Hard Truth அவர்களே,

//மன்னிக்கவும், தப்பி பிழைத்துக்கொள்ளுங்கள்.//

நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது இல்லை. மற்றவரை இகழ்வதை விடுத்து நாகரீக பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை.

//அதே நேரம் சூழ்நிலையால் பாவத்தில் சிக்கியவர்களும் இந்த உலகில் உள்ளனர். பாவத்தில் சிக்கியவரையே நான் மீட்க வந்தேன்” என்பதை இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்லி இருக்கிறார். //
சூழ்நிலையால் பாவத்தில் சிக்கியவர்கள் என்று வேதத்தில் எங்குள்ளது?//

மத்தேயு, அதிகாரம் 6,
13.”எங்களை சோதனைக்கு உட்படப் பண்ணாமல் பண்ணாமல் , தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். “என்று சொல்லப் பட்டு உள்ளது.

சோதனையான சூழ்நிலைகள் ஒருவனை தீமைகளை , குற்ற செயலகளை , பாவத்தை செய்யக் காரணமாக இருக்கிறது என்பது தெளிவு அல்லவா?

//” நீதி மான்களை அன்று பாவிகளையே இரட்சிக்க வந்தேன்” //
Ofcourse there is no need to save the rightious. But, Jesus says that he didn’t find anyone good (or rightious).

//Can you tell us, from which chapter, which verse did you quote the above words?

Can you refer us the chapter no?//
Luke 18:19.

லூக்கா: 18.19: அதற்க்கு இயேசு : நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன். தேவன் ஒருவனைத் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

ஒருவன் நல்லவன் இல்லை என்றாலே அவன் பாவி ஆகி விடுவான் என்பது உங்கள் கோட்பாடு என்றால், உங்கள் கோட்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவையும் நீங்கள் பாவி என்றே கருதுகிறீர்கள் என்பதே தெளிவு. ஏனெனில் இயேசு, தான் உட்பட யாருமே நல்லவன் இல்லை என்கிற கருத்தை சொல்லி இருக்கிறார்.
உங்கள் “நல்லவன் அல்லாதவன் எல்லோரும் பாவி” என்றால், இயேசு கிறிஸ்துவையும் நீங்கள் பாவி என்று கருதுவதாகவே உள்ளது. ஆனால் நாங்கள் இயேசு கிறிஸ்துவை பாவி என்று சொல்லவில்லை. யாருமே பாவியல்ல எனபதே எங்கள் கருத்து. உடலுக்கு சுகமின்மை ஏற்படுவது போல, சில மனிதர் சூழ்நிலையால் பாவத்திற்கு சென்று விடுகிறார்கள் , விரைந்து அவர் நன்மை பாதைக்கு திரும்பி விட முடியும் என்பதே நம் கருத்து. ஒருவர் காலில் அடிபட்டு சிலகாலம் காலை சாய்த்து நடந்தால் அவரை நொண்டி என முத்திரை குத்துவது சரியல்ல. அவர் விரைவில் குணம் பெற்று நன்கு நடக்க இயலும்.

//ஜோசி அவருடைய மதத்தை சேர்ந்தவரை வேசி மகன் என்று அழைக்கலாம். ஆனால் ஜோசி தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் வேசி மகன் என்று அழைக்கும் உரிமையை பெறவில்லை.//
First of all, there is no such thing(ur mica and josi story) that happened and it is just your imagination. //

ஜோசி, மைக்கா என்பது ஒரு உதாரணத்துக்காக எழுதப் பட்டதே. இதற்க்கு முன்பே இசுலாத்தின் “காபிர்” என்று அழைக்கும் கோட்ப்பட்டை உதாரணமாக காட்டினோம். அதையும் நீங்கள் பொருட் படுத்தவில்லை. அதனாலே வேறு ஒன்றை உதாரணமாக காட்டவே இதை எழுதினேன். ஜோசி மைக்கா உண்மை சம்பவம் என்று சொல்லவில்லை. நன்றாகப் படியுங்கள். ஜோசி ஒருவரை வேசி மகன் என்று சொலவது எப்படி தவறோ, அதைப் போலவே எவரும் அவரின் அமைத்த நம்பிக்கையின் படி மற்றவரை பாவி என்று அழைப்பதுவும் தவறே என்பதை சுட்டிக் காட்டவே இது எழுதப் பட்டது.

நான் சொல்வதில் இருக்கும் நியாயத்தை ஆராய்வதோ, ஆராயாமல் புறந் தள்ளுவதோ உங்கள் விருப்பம். நான் சொல்வதை ஒத்துக் கொள்ளும்படி நான் கட்டாயப் படுத்தவில்லை. நான் சொல்வதை மட்டும் அல்ல, இங்கே பல நண்பர்கள் எழுதும் எல்லாக் கருத்துக்களையும் ஆராய்ந்து நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம் என்பதே எனது கருத்து.

//But, Bible is something which is confirmed by History. Also, Bible is not just one person’s experiance. It is a 66 books, written thru 40 Human authors (inspired by GOD) over the time of 1500yrs approx. nd all the books confirms with each other. Bible is more authentic than anything or anyone. For sure, it more authentic than Thiruchchikkaaran.//

முதலில் இந்த authentic என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? உதாரணமாக ஒரு அப்போஸ்தலர் ஒரு நாட்டுக்கு பயணம் செய்தார் என்பதை ஓரளவுக்கு வூகிக்கலாம். ஆனால் அந்த அப்போஸ்தலர் சொல்லிய கோட்பாடு சரி என்பதற்கு என்ன ஆதாரம்?

//written thru 40 Human authors (inspired by GOD)//- இவர்கள் கடவுளால் inspired ஆனவர்கள் என்பதற்கு என்ன Authenticity இருக்கிறது?? முதலில் இந்த கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கு என்ன Authenticity இருக்கிறது?

As an example, I confirm the theory: “Whenever the magnetic flux linking with a circuit changes, there will be an emf induced in the circuit”. I can prove the theory. I can generate emf in a circuit, and can make a electric lamp to Glow. Many people can prove this. இதைப் போல கடவுளை நிரூபித்து Authenticity குடுக்க முடியுமா?

இந்த பைபிள் என்பது பல்வேறு வெறுப்புக் கருத்துக்களை, இன அழிப்புக் கருத்துக்களை, கற்கால கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதற்கு ஆதாரம் பைபிளிலேயே இருக்கிறது. பைபிள் என்பது பல இனங்களை அளித்து, ஒரு இனத்தை வாழ வைக்க உருவாக்கப் பட்ட ஒரு கற்பனை கோட்பாடு என்பதாகவே பல அறிங்கர்கள் ஆராய்ச்சி செய்து பல நூல்களை எழுதி வருகின்றனர். பைபிள் என்பது முரட்டு பிடிவாத சமரச மறுப்புக் கருத்துக்களை கொண்டாதாக உள்ளதால், பல சமுதாயங்கள் வீழ்ச்சி அடைந்ததோடு, பல போர்கள் நடத்தப் பட்டு விட்டன. இதை எல்லாம் உணர்ந்து கொண்ட மக்கள், அமைதிப் பாதைக்கு திரும்ப முடிவு செய்தனர். அதனால் தான் பைபிள் எந்த பிரதேசத்தில் உருவாக்கப் பட்டதோ அங்கேயே அது புறக்கணிக்கப்பட்டு விட்டது. போப் இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார். ஏன் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும், எல்லா பாவங்களையும் மன்னிக்க கூடியவர் ஒருவர் வானிலே இருக்கிறார் என்றால் போப் அவரிடம் மன்னிப்புக் கேட்கலாம் அல்லவா? உங்கள் பாவப் பிரச்சாரத்தை ஏன் போப்பிடம் நடத்தவில்லை?

இத்தனைக்கும் மேலே நீங்கள் பைபிளை பின்பற்ற விரும்பினால், அது உங்கள் விருப்பம். நீங்கள் சர்ச்சில் சந்திப்பவர்களை பாவி என அழைத்துக் கொள்வதானால், அது உங்களுக்கிடையேயான விடயம். ஆனால் இன அழிப்புக் கருத்துக்களை, வெறுப்புக் கருத்துக்களை பரப்பும் பைபிளை அங்கீகரிக்காத எங்களை நீங்கள் எங்களை பாவி என அழைப்பது ஒரு மிகத் தவறான, மனிதாபிமானமற்ற, கற்கால செயலே. அடிப்படை நாகரீகத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

//But, Bible is something which is confirmed by History.//

உலக வரலாற்றில் எகிப்து, சிந்து சமவெளி, சுமேரிய, மஞ்சள் ஆற்று நாகரீகங்கள் பற்றி தான் உள்ளது. யூதர்கள் எகிப்தில் இருந்து தப்பி வந்ததாக சொல்லப் படுவது பற்றி எல்லாம் உலக வரலாற்றில் எந்தக் குறிப்பும் இல்லை.

//இவர்கள் கலாசாரத்திற்கு கால் முளைத்து ‘காலசாரமாகி’ ஓடி விட்டது. வாழ்ந்த நிலம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம். மற்றதெல்லாம் மாறி மாறி நாகரீகம் என்ற பெயர் வைத்துக்கொண்டு எங்கேயோ போய்விட்டது.//

எங்கள் கலாச்சாரம் அப்படியே இருக்கிறது. குடும்ப வாழ்க்கை நடத்தி அமைதியாக வாழ்கிறோம். எங்கள் வூருக்கு வாருங்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பாருங்கள். அமைதியான நேர்மையான குடும்ப வாழ்க்கை வாழ்கிறோம். உணவும் முன்பு உண்ட அதே உணவுதான். உடைகள் , வாகனங்கள் மாறி உள்ளன. அவ்வளவுதான். யாருடைய தீய போதனைகளுக்கும் நாங்கள் செவி சாய்க்க்கவுமில்லை, விபச்சார சமூகமாக வாழவும் இல்லை.

//உங்கள் மீதிருக்கும் சாக்கடையை கழுவவே விரும்புகிறேன்.//

எங்கள் மீது எந்த தவறோ அழுக்கோ , சாக்கடையோ இல்லை. தயவு செய்து எங்களை பாவி என்று அழைத்து எங்களை அசிங்கப் படுத்த வேண்டாம், என்று கேட்டுக் கொள்கிறேன். எங்கள் மீது சாக்கடை இருக்கிறது என்று கூறி எங்களை இழிவு படுத்துவது சரியல்ல. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் எனக் கோருகிறேன்.

//உங்களுக்கு ‘தெரியவில்லை’. அதுதான் பிரச்சனையே. எங்களுக்கு தெரிகிறது, அதனால்தான் சொல்கிறோம்.//

உங்களுக்கு எப்படித் தெரிந்தது? Time Machine ல் ஏறி சென்று எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வந்ததைப் போல சொல்லக் கூடாது. ஒரு புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளதை படித்து விட்டு, அவைகள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இதை சொல்கிறீர்கள். அது உங்களின் நம்பிக்கை மாத்திரமே.

//குற்றமற்ற எங்களுக்கு ஏதாவது ஆக்கினை தரப் படுமானால்//
See the statement given by you in Tamilhindu.com.
//அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். //
If you dont have sin, for what you wanted to ask the forgiveness?///

நான் இவ்வாறு எழுதியது முன்பு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி. பல ஆணடுகளுக்கு முன்பு நாங்கள் மாணவராக இருந்த பொது நடை பெற்ற சம்பவம். அப்போது நாங்கள் எல்லாம் பாவ மன்னிப்பு கேட்க்க வேண்டும் என்று எங்கள் ஆசிரியர் எங்களுக்கு சொல்லி கொடுத்து வந்தார். அப்போது நாங்கள் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்ளும் மனநிலையில் இருந்தோம். நாங்கள் வேகமாகி ஓடி யாரையாவது இடித்து, அவன் கீழே விழுந்து விட்டால், அது நாங்கள் பாவம் செய்ததாக கருத வைக்கப் பட்டது. அப்போது நாங்கள் சிந்திக்க ஆரம்பிக்கவில்லை, கருத்துக்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கவில்லை. அதற்காக நான் என் ஆசிரியரை குறை சொல்லவில்லை. அவர் மீது திணிக்கப் பட்ட கருத்துக்களை அவர் எங்களுக்கு போதித்தார். என் ஆசிரியரை நான் இப்போதும் அன்பு செய்கிறேன்.

//கொடுமைக்காரரின் முன் மண்டியிட்டு தப்புவதை விட//
Every knee shall bowdown infront of my Lord. Either now or later. It will be good for you, if it bows down now. Otherwise, later also you will bow down your knee, but that is because of pain and that will not help you.//

பயமுறுத்தி, மிரட்டியே மக்களை அடிமைப் படுத்தி வந்திருக்கின்றனர். எரி நரகம், நெருப்பிலே போட்டு வாட்டப் படுவீர்கள் என்பது போன்ற பய முறுத்தல்களைக் காட்டி மக்களின் மன நிலையை சிதைத்து , அவர்களை அடிமைப் படுத்தி வந்திருக்கின்றனர். அதே கருத்துக்களை நீங்களும் கேட்டுக் கொண்டு, எங்களை மிரட்டுகிறீர்கள்.

ஆனால் நாங்கள் மிரட்டலுக்கு அஞ்சாதவர்கள். கொடுமையை எதிர்க்கவும் தயங்காதவர்கள்.

வாழ்க்கையில் எத்தனயோ இன்னல்களை சந்தித்து இருக்கிறேன். கடுமையான கட்டங்களைத் தாண்டி இருக்கிறேன். கட்டாயத்துக்கு பயந்து, விரும்பி அடி பணிய மாட்டேன்.

கட்டாயத்துக்கு, அதிகாரத்துக்கு பயந்து பணிய மறுத்த சாக்ரடீஸ் விஷம் அருந்த தயங்காதது போல, நாங்களும் எந்த தண்டனைக்கும் தயார்.

//Otherwise, later also you will bow down your knee, //

later என்ன, இப்போதே பத்து அடியாட்களை அனுப்பி என்னை கையைக் காலைத் தரையிலே அழுத்தி மண்டியிட வைக்கச் செய்ய உங்களால் முடியுமே!

இரக்கமற்ற வகையில் இனப் படுகொலைகளை நடத்தி, சுவாசமுள்ள எல்லா ஜீவனையும் சாகடிக்கும் வகையில் செயல் பட்ட கொடூரரின் முன், எங்களை மண்டியிட சொல்லி மிரட்டும் உங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

திரு HARD TRUTH அவர்களே,

”’//இந்து கடவுள்களை சாத்தான்கள் என்றும்//
அவை வெறும் கல்லும், மண்ணும், சித்திரங்களும், கதாபாத்திரங்களும் தானே”’

“””//இந்துக் கடவுள்கள் “கண்ணிருந்தும் பார்க்காது,காதிருந்தும் கேட்காது” //
அவை பார்க்கிறது, கேட்கிறது என்று கூறுகிறீர்களா?”””

திரு HARD TRUTH அவர்களே,இதே கேள்வியை நானும் உங்களைத் திருப்பிக் கேட்க முடியுமே?இயேசுவின் சிலைகள், படங்கள் போன்றவை கல்,மண்,மரம்,சிமென்ட்,மற்றும் பல வண்ணங்கள் கொண்ட மனிதனால் செய்யப்பட்ட சிலைகளும், வரையப்பட்ட சித்திரங்களும் தானே??? ///அவைப் பார்க்கிறது , கேட்கிறது என்று கூறுகிறீர்களா???///
இந்த தன்னுடைய கடவுள் மட்டுமே உண்மை, மற்றக் கடவுள்கள் எல்லாம் பொய் என்று கூறி மதம் மாற்றும் வெறியினாலேயே எண்ணற்ற படுகொலை நடந்துள்ளது.இந்த கொடூர எண்ணத்திலிருந்து நல்ல எண்ணத்திற்கு,அதாவது அனைத்து கடவுள்களும் ஒன்றே ,அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே என்ற நல்ல எண்ணத்திற்கு நம்மை மாற்றிக் கொள்ளவே இந்தக் கட்டுரை.

“””//2000 த்தில் உலகம் அழிந்திவிடும் //
Bible never told that the world will come to an end by 2000.”””

இப்படி பைபளில் இல்லாத ஒன்றை ஏன் கிருஸ்தவர்கள் கூறி மதம் மாற்ற வேண்டும்??? இப்படி 2000 த்தில் உலகம் அழிந்து விடும் என்று கிருஸ்தவர்கள் பொய் கூறி மதப்பிரச்சாரம் செய்தது நடுத்தரவயதைக் கடந்த அனைவரும் அறிந்தது தானே??? நீங்கள் இதை உங்கள் சிறுவயதில் கேட்டதில்லையா???

ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்பெல்லாம், நாங்கள் வசிக்கும் பகுதியில் கிருஸ்தவப் பிரச்சாரர்கள் நள்ளிரவிலும், அதற்குப் பின்னும் குழாய் ஒலிபெயர்க்கியின் மூலம் “”பாவிகளே”” என்று அழைத்து, எல்லாருடைய தூக்கத்தையும் ஏன் கெடுக்க வேண்டும்???மதம் மாற்றும் வேலையை பகலில் மட்டும் செய்தால் போதாதா?இரவிலும் ஏன் செய்ய வேண்டும்.???நல்ல தூக்கத்தில் உள்ளவர்களை எழுப்பினாலே அவர்களுக்கு கோபம் வரும்.அதுவும் “பாவிகளே எழுந்திரியுங்கள் ” என்று குழாய் ஒலிபெருக்கியின் மூலம் அதிக சத்தத்துடன் எழுப்பினால் யாருக்குத்தான் கோபம் வராது.???

//நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது இல்லை. மற்றவரை இகழ்வதை விடுத்து நாகரீக பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. //
When there is fault at my side. It is good to ask for forgiveness and not to repeat that. Thats why I asked for it. I just dont want to carry that guilt with me.

//13.”எங்களை சோதனைக்கு உட்படப் பண்ணாமல் பண்ணாமல் , தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். “என்று சொல்லப் பட்டு உள்ளது.//
The real meaning is:
The satan is the one who brings temptations. And still we have the choice of choose the good from bad. Here in this prayer, we are asking GOD to provide strength to over come the temptation and avoid doing bad things.

Hard Truth

திரு. Hard Truth அவர்களே,

நீங்கள் சொல்வதும், நான் சொல்வதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

சோதனை என்பது என்ன? ஒருவன் மாலை நேரத்தில் தனிமையில் இருக்கும் நிலை ஏற்பட்டால் அவன் வெளியே உணவு அருந்த செல்லும்போது வழியிலே மதுக் கடையைக் காண நேரிடலாம். மது அருந்த விருப்பம் ஏற்ப்படலாம். ஆனால் அந்த விருப்பத்தைக் கட்டுப் படுத்தி வெறுமனே உணவு அருந்தி விட்டு வீட்டுக்கு சென்று ஒரு நல்ல கதைப் புத்தகத்தை படித்து விட்டோ அல்லது ஒரு நல்ல சினிமாவையோ பார்த்து விட்டு தூங்கலாம்.

மது அருந்தினால் இன்னும் சில தேவை இல்லாத பிரச்சினைகளும் வர வாய்ப்பு உண்டு.

அதே நேரம் மாலையிலே சில நண்பர்கள் அவனை கிரிக்கெட் விளையாட அழைத்து சென்று விட்டால், அவன் கிரிக்கெட் விளையாடிய களைப்பிலே உணவு அருந்தி தூங்கி விடும் வாய்ப்பும் உள்ளது.

யாரும் இல்லாமல் தனிமையில் இருக்கும் போது மதுக் கடையை பார்த்து விட்டால் மது அருந்த விருப்பம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இதுதான் சோதனை.

இவ்வாறாக சூழ்நிலை ஒருவனை பாதிக்கிறது. சோதனையை உருவாக்குகிறது.

மனவுறுதி இருந்தால் எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருந்து சோதனையை வெல்லலாம்.

மதுக் கடைகளே இல்லாத நகரிலே, சூதாட்ட விடுதியோ, விபச்சார விடுதியே இல்லாத நகரத்திலே, ஒருவன் குடும்ப சூழ்நிலயில் வசித்தால் அவனுக்கு ஒரு சோதனையும் வர முடியாது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்ப நேரமானால் அம்மாவோ, மனைவியோ போனைப் போட்டு தாளித்து விடுவார்கள். சாக்கு சொன்னாலும் அமபலமாகி விடும். எனவே சோதனை ஏற்படுவது சூழ்நிலையால் தான்.

மற்றபடி இந்த சாத்தான் கான்செப்ட் யார் சொன்னது? இயேசு கிறிஸ்து ஒருவனின் மனதில் சாத்தான் புகுவதால் அவன் பாவம் செய்கிறான் என்று சொல்லி இருக்கிறாரா? இதை மேற்கோள் காட்டி தர முடியுமா?

//இயேசு கிறிஸ்து ஒருவனின் மனதில் சாத்தான் புகுவதால் அவன் பாவம் செய்கிறான் என்று சொல்லி இருக்கிறாரா? இதை மேற்கோள் காட்டி தர முடியுமா?//
Satan need not get into someone to tempt. The good example can be:
Matthew 4:3
The tempter came to him and said, “If you are the Son of God, tell these stones to become bread.”
Here the satan was tempting Jesus to test his FATHER, which is a sin in the eyes of GOD.

//சோதனை ஏற்படுவது சூழ்நிலையால் தான். //
But, who creates such a situation. And what is the voice that sounds inside the heart to give up to the temptation? Many people had confessed that even though they really don’t want to give up to the temptation, some thing inside them was forcing them to do that.

//மதுக் கடைகளே இல்லாத நகரிலே, சூதாட்ட விடுதியோ, விபச்சார விடுதியே இல்லாத நகரத்திலே, ஒருவன் குடும்ப சூழ்நிலயில் வசித்தால் அவனுக்கு ஒரு சோதனையும் வர முடியாது. //
If some didn’t drink or didn’t go to prostitutes, just only because he didn’t get an oppurtunity, will you consider that man as good man.
A real good man, will not do wrong things even when the oppurtunity knocks his door.
Jesus didn’t wrong anytime, because he didn’t have sin in him.
Hard Truth

Dear Mr. Hard Truth,

//இயேசு கிறிஸ்து ஒருவனின் மனதில் சாத்தான் புகுவதால் அவன் பாவம் செய்கிறான் என்று சொல்லி இருக்கிறாரா? இதை மேற்கோள் காட்டி தர முடியுமா?//
Satan need not get into someone to tempt. The good example can be:
Matthew 4:3
The tempter came to him and said, “If you are the Son of God, tell these stones to become bread.”
Here the satan was tempting Jesus to test his FATHER, which is a sin in the eyes of GOD.//

I asked you one specific question – இயேசு கிறிஸ்து, “ஒருவனின் மனதில் சாத்தான் புகுவதால் அவன் பாவம் செய்கிறான்” என்று சொல்லி இருக்கிறாரா? – can you answer this? Can you refer or quote the verses? OR DID JESUS CHRIST TELL ANY WHERE THAT “A PERSON IS COMMITTING SIN, AS SATAN IS TEMPTING THE PERSON”

//சோதனை ஏற்படுவது சூழ்நிலையால் தான். //
But, who creates such a situation. And what is the voice that sounds inside the heart to give up to the temptation? Many people had confessed that even though they really don’t want to give up to the temptation, some thing inside them was forcing them to do that. //

Its the man who creates situation. You close liquor shops. You close brothel places. The situation for vice will not be there! Honestly, I never felt any force from “any thing inside” to do that. We can also say that this is just an excuse to skip from the responsibility of self control. Jesus Christ kept the responsbilty of avoiding the sin with Individual man. If your hands were the reason for committing sin, remove the hand. I did not find ( to the best of my knowledge) as Jesus told ” you commit sin, because of satan”. Jesus Christ told the man to control himself and wish the situation for sin could not be there, to help the man further!

//மதுக் கடைகளே இல்லாத நகரிலே, சூதாட்ட விடுதியோ, விபச்சார விடுதியே இல்லாத நகரத்திலே, ஒருவன் குடும்ப சூழ்நிலயில் வசித்தால் அவனுக்கு ஒரு சோதனையும் வர முடியாது. //
If some didn’t drink or didn’t go to prostitutes, just only because he didn’t get an oppurtunity, will you consider that man as good man.

You do exercise, you get power in your muscles. You lift weight, your muscles got power – your muscles got power you can lift more weight.

One who does not drink (due to non availability), he enjoy good physical and mental health. A person with more mental maturity and resolute can avoid having the drinks, even when its available.

A person can raise his mental maturity,caution, and awkeness so that he can avoid the sin at all situations.

//Jesus didn’t wrong anytime, because he didn’t have sin in him.// I did not say that Jesus committed sin. I only pointed out that Jesus has NOT told that all the people in this world are sinners. You tried to show something to show that as if Jesus Christ has told all were sinners, but your own argument ends woth pointing Jesus Himself. My intention is to explain you as Jesus Christ”s teachings has been wrongly interpreted , twisted and taught to people. May be you can understand!

Dhanabal,
//இயேசுவின் சிலைகள், படங்கள் போன்றவை கல்,மண்,மரம்,சிமென்ட்,மற்றும் பல வண்ணங்கள் கொண்ட மனிதனால் செய்யப்பட்ட சிலைகளும், வரையப்பட்ட சித்திரங்களும் தானே??? //
It is very true.

//அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே என்ற நல்ல எண்ணத்திற்கு நம்மை மாற்றிக் கொள்ளவே இந்தக் கட்டுரை.//
I dont have any problem to agree with this, if it is true. But, is that true???

//இப்படி பைபளில் இல்லாத ஒன்றை ஏன் கிருஸ்தவர்கள் கூறி மதம் மாற்ற வேண்டும்??? இப்படி 2000 த்தில் உலகம் அழிந்து விடும் என்று கிருஸ்தவர்கள் பொய் கூறி மதப்பிரச்சாரம் செய்தது நடுத்தரவயதைக் கடந்த அனைவரும் அறிந்தது தானே??? நீங்கள் இதை உங்கள் சிறுவயதில் கேட்டதில்லையா???//
I too heard such a crap. But, I can talk for Christ. Not for everyone who claims themselves as Christians and says lies.

//அதுவும் “பாவிகளே எழுந்திரியுங்கள் ” என்று குழாய் ஒலிபெருக்கியின் மூலம் அதிக சத்தத்துடன் எழுப்பினால் யாருக்குத்தான் கோபம் வராது.???//
I never heard any such thing, because of the place I lived. But, I can understand it. If I were in ur place, I also would have lost my cool.

Hard Truth

//One who does not drink (due to non availability), he enjoy good physical and mental health. A person with more mental maturity and resolute can avoid having the drinks, even when its available.

A person can raise his mental maturity,caution, and awkeness so that he can avoid the sin at all situations. //

What you are saying is, to overcome temptation by Strength. But, strength doesn’t make anyone immune towards sin till the end? How long someone can fight the sin? Won’t the get tired?
What we are talking about is, getting a hatred towards sin. We are talking about changing into a new being. You are talking about making a wolf as a vegetarian (forcing a sinner not to sin). We are talking about making that wolf as a cow (so being veggie is natural). I am telling this a anology or example. If someone borns again within Christ, he will be new creation and old (sinfull)man is dead. As a new being, without any past guilts, knowing that he is special to GOD and living for Christ. And with the strength of Christ (not his own strength), he can live a sinless life.
I know that you will come with strong defence/offence for this. But, I just told my frank opinion. You can judge your own issues. I am just sharing my knowledge (you might say that I am creating war and hatred, which will create bloodshed). I am also aware that differences of strong opinions will create problems and sometimes bloodshed. In that case, I dont mind shedding my blood rather than others. I like to be beaten than beating others. After all, that is what I learned from Christ.

Hard Truth

Dear Mr. Hard Truth,

நாங்கள் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை சிறப்பாக பின் பற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்திய சமுதாயம் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக பின்பற்றி வரும் கொள்கைகளும் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளும் ஒன்றுதான். பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது. உண்மையிலே இயேசு கிறிஸ்து விரும்பிய வகையிலே நேர்மையான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து மறு கன்னத்தைக் காட்டும் சமுதாயம், ஆசிய சமுதாயம், குறிப்பாக இந்திய சமுதாயம் தான் என்பது, உங்களுக்கே தெரியும். இவ்வாறாக இயேசு கிறிஸ்து எங்களோடு இருக்கிறார். நாங்கள் இயேசு கிறிஸ்துவோடு இருக்கிறோம். இதில் புதிதாகப் பிறக்க என்ன இருக்கிறது?

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை மிகவும் தவறான வகையிலே உலகம் முழுவது பிரச்சாரம் செய்ததால்தான், பல சமூகங்கள் சீரழிந்து போனதோடு, பல கோடி உயிர்கள் காவு கொடுக்கப் பட்டு விட்டன. எனவே நீங்கள் முதலில் இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிதல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தவறான புரிதலை பிரச்சாரம் செய்து கேட்டுக்குப் போகும் வழியில் தள்ள வேண்டாம்.

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை சரியாக எடுத்து சொல்லி, உணமையான கிறிஸ்தவம் என்ன என்பதை மக்களுக்கு காட்டும் வகையில் அவ்வப் போது பல கட்டுரைகள் நமது தளத்திலே வெளியாகும். நீங்கள் தொடர்ந்து நமது தளத்தைப் பார்வை இட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். இது நம் எல்லோருக்குமான தளம்.

//இரக்கமற்ற வகையில் இனப் படுகொலைகளை நடத்தி, சுவாசமுள்ள எல்லா ஜீவனையும் சாகடிக்கும் வகையில் செயல் பட்ட கொடூரரின் முன், எங்களை மண்டியிட சொல்லி மிரட்டும் உங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?//
I am sharing the information, which I consider as truth. I am not threatening. I am just giving the information that I know and justifying why I believe that. There is no compulsion for you or anyone to believe that. Our only objective is, everyone should know this truth, believing it or not is upto that individual. I cannot stop you from doing anything. But, I will continue to spread the good news of Christ. You cannot stop that.

//later என்ன, இப்போதே பத்து அடியாட்களை அனுப்பி என்னை கையைக் காலைத் தரையிலே அழுத்தி மண்டியிட வைக்கச் செய்ய உங்களால் முடியுமே! //
Do you think that I am that bad? I love Christ and I love his ways. I prefer to show my other cheek than slapping in return.

//எங்கள் மீது எந்த தவறோ அழுக்கோ , சாக்கடையோ இல்லை. தயவு செய்து எங்களை பாவி என்று அழைத்து எங்களை அசிங்கப் படுத்த வேண்டாம், என்று கேட்டுக் கொள்கிறேன். எங்கள் மீது சாக்கடை இருக்கிறது என்று கூறி எங்களை இழிவு படுத்துவது சரியல்ல. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் எனக் கோருகிறேன். //
I didn’t intend to hurt you by saying that. I just told that there is a free gift of GOD is available. If you don’t want to take that, just leave it. If have hurt in the attempt of announcing that gift to you. Forgive me. But, I will continue announcing that gift to others. If they accept it, it is ok, else I will continue with someone else.

Bible never appeared all good all the people. Only a few love that book. I am glad that I love it.

Time will reveal the rest of the things. Thanks for the space that you have given in your forum for my words.
Thanks,
Hard Truth.

திரு HARD TRUTH அவர்களே,

//அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே என்ற நல்ல எண்ணத்திற்கு நம்மை மாற்றிக் கொள்ளவே இந்தக் கட்டுரை.//
I dont have any problem to agree with this, if it is true. But, is that true???///

*இருப்பது ஒன்றே; ஞானிகள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்* என்று வேதம் கூறுகிறது.மேலும் ராமகிருஷ்ணர் ஒவ்வொரு மத வழிமுறைகளையும்,தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து, இறைவனை கண்டு,”அனைத்து மதமும் அந்த ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளேயாகும்” என்று கூறினார்.இந்து வேதம் கூறுவதையோ,இந்திய ஞானிகள்,மற்றும் ராமகிருஷ்ணர் கூறுவது உண்மை என்பதை ஏற்க உங்கள் மத உணர்வோ, பகுத்தறிவோ இடம் கொடுக்காவிட்டாலும்,இந்த உன்னதக் கருத்தால் அனைத்துமதத்தவர்களிடமும்,வெறுப்பு குறைந்து ஒரு சமத்துவம் ஏற்ப்பட வழி பிறக்கும்.
//அதுவும் “பாவிகளே எழுந்திரியுங்கள் ” என்று குழாய் ஒலிபெருக்கியின் மூலம் அதிக சத்தத்துடன் எழுப்பினால் யாருக்குத்தான் கோபம் வராது.???//
I never heard any such thing, because of the place I lived. But, I can understand it. If I were in ur place, I also would have lost my cool.////

இது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடந்தது.அப்பொழுது நான் சிறியவன்.அப்பொழுது எங்கள் பகுதியில் உள்ள பெரியவர்கள்,அப்படி பிரச்சாரம் செய்பவர்களிடம் ஒவ்வொரு முறையும், வாக்கு வாதத்தில்,வாய்ச் சண்டையில் ஈடுபட்டதும்,எனக்கு ஞாபகத்தில் உள்ளது.எனக்கு ஏசுவைப் பிடிக்கும்,ஆனால் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் அவன் கும்பிடும் கடவுளை வணங்க விடாமல் செய்து,இயேசுவை மட்டுமே வணங்கும்படி அதாவது உலகில் கிருஸ்தவ மதம் மட்டுமே இருக்கவேண்டும் ,இயேசு ஒருவர் மட்டுமே கடவுளாக வணங்கப்படவேண்டும்,மற்ற மதமும்,கடவுளும் அழிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கிறிஸ்தவர்களையும்,கிருஸ்தவ மதப் பிரச்சாரம் செய்பவர்களையும் தான் எனக்குப் பிடிக்காது.

திரு HARD TRUTH அவர்களே,

//அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே என்ற நல்ல எண்ணத்திற்கு நம்மை மாற்றிக் கொள்ளவே இந்தக் கட்டுரை.//
I dont have any problem to agree with this, if it is true. But, is that true???///

“அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே”

இப்படித்தான் இந்து மதம் கூறுகிறது.கடவுளை உணர்ந்த பல ரிஷிகளும்,மகான்களும் இதையே கூறியிருக்கிறார்கள்.இந்தக் கருத்தே உலகமக்களுக்கு நன்மைதரக்கூடிய கருத்தாக இருக்கிறது.

எங்கள் மதம் மட்டுமே உண்மை என்ற கருத்தால் இந்த உலக மக்களுக்கு துன்பமே நிகழ்ந்துள்ளது.உங்கள் கருத்து உண்மையென்றால் நிருபியுங்கள்.

“அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே” என்ற கருத்தே மிக உன்னதமான கருத்தாகும்.

திரு HARD TRUTH அவர்களே,

//அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே என்ற நல்ல எண்ணத்திற்கு நம்மை மாற்றிக் கொள்ளவே இந்தக் கட்டுரை.//
I dont have any problem to agree with this, if it is true. But, is that true???///

“அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே”

இப்படித்தான் இந்து மதம் கூறுகிறது.கடவுளை உணர்ந்த பல ரிஷிகளும்,மகான்களும் இதையே கூறியிருக்கிறார்கள்.இந்தக் கருத்தே உலகமக்களுக்கு நன்மைதரக்கூடிய கருத்தாக இருக்கிறது.

எங்கள் மதம் மட்டுமே உண்மை என்ற கருத்தால் இந்த உலக மக்களுக்கு துன்பமே நிகழ்ந்துள்ளது.உங்கள் கருத்து உண்மையென்றால் நிருபியுங்கள்.

“அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே” என்ற கருத்தே மிக உன்னதமான கருத்தாகும்.

/மிகச் சிறந்த மத நல்லிணக்க கருத்துக்களை கூறி இருக்கிறார் சகோதரர் திரு. தனபால்.strong>இது மிக நன்மையான கருத்து என்பது எல்லோருக்கும் தெரியும் இவர் கூறும் முறையைக் கடைப் பிடித்தால் எல்லா மதங்களும் செழிக்கும். மனித உயிர்ர்களும் பிழைக்கும்.

திரு HARD TRUTH அவர்கள், திரு. தனபாலிடம் இந்தக் கருத்து உண்மையா என்று கேட்டு இருக்கிறார். <திரு. தனபால் கூறிய கருத்து உண்மையா என்று கேட்டால், திரு, தனபாலின் கருத்து உண்மையா என்பதற்கு ஆதாரம் கேட்டால் , திரு HARD TRUTH அவர்களே,நீங்கள் கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நீங்கள் இயேசு கிறிஸ்துவை கடவுளே, கடவுளின் மகனான கடவுள் என்கிறீர்கள். இசுலாமியர்கள் இயேசு கிறிஸ்து ஒரு இறை தூதர் என்கிறர்கள்.

நாம் சொல்லுவது என்ன வென்றால் இயேசு கிறிஸ்துவின் சிறந்த கருத்துக்களுக்கு, அவருடைய நல்லெண்ணத்துக்கு , அவருடைய கொள்கை உறுதிக்காக , வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் தெய்வத்துள் வைக்கப் படும் என்ற வகையிலே அவரை தெய்வமாக கருதவோ, வணங்கவோ தயார் என்கிறோம். இதற்க்கு மேல் என்ன வேண்டும்? எப்படி காந்தி, புத்தர், இராமர் இவர்கள் எல்லாம் அவர்களின் தன்னலமற்ற தியாகம், நல்ல செயல்கள், நல்ல போதனைகள் இவற்றுக்காக வணங்கப் படுகிறார்களோ, அதைப் போல இயேசு கிறிஸ்துவையும் மனப் பூர்வமாகவே வணங்கலாம் என்பது பகுத்தறிவுக்கும் ஒப்பே. அப்படி அவர்களை வணங்கும் போது அவர்களுடைய நல்ல கொள்கைகளை நினைவு கூர்வது சமுதாயத்துக்கு நல்லதே. இதுவே நாகரீகம்.

எனவே தனபாலின் கொள்கைக்கு நீங்கள் ஆதாரம் கேட்டால் , உங்கள் கொள்கைக்கு நீங்கள் ஆதாரம் கொடுக்க வேண்டி வருமே! இவ்வளவு பிடிவாதமாக பிற மதங்கள் எல்லாம் பொய், உங்களுடைய மதம் மட்டுமே உண்மை, பிற மதத்தவர் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் பொய்யானவை, நீங்கள் வணங்கும் தெய்வம் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்றால் அதற்க்கான ஆதாரத்தைக் கொடுங்கள்! எந்த வித எரி பொருளும் இல்லாமல், எந்த வித வேதியல், அணு சக்தியோ அல்லது வேறு எந்த சக்தியும் இல்லாமல் தானாகவே சுழன்று 500 மெகாவாட் தரும் வகையில் எப்போதும் சுழலும் இயந்திரத்தை (Perpetual Motion Machine) அந்தக் கடவுள் மூலம் உருவாக்கித் தாருங்கள்!! அப்போது எல்லோரும் நீங்கள் சொல்வதை உண்மை என ஒத்துக் கொள்வார்கள்!

திரு HARD TRUTH அவர்களே,

//அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே என்ற நல்ல எண்ணத்திற்கு நம்மை மாற்றிக் கொள்ளவே இந்தக் கட்டுரை.//
I dont have any problem to agree with this, if it is true. But, is that true???//

“அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே” என்றக் கருத்து உண்மை இல்லை என்று வைத்துக்கொண்டாலும், அதனால் ஒரு மனிதன் கூட கொல்லப்பட மாட்டான்.

ஆனால் “நீங்கள் கூறும் என் கடவுள்,என் மதம் மட்டுமே உண்மை” என்றக் கருத்து ஒரு வேளை உண்மையாக இருந்தாலும் அதனால் பலர் கொல்லப்படுவது உறுதி.

நீங்கள் உண்மை என்று நம்பும் கருத்து பலரைக் கொல்கிறது.நீங்கள் பொய் என்று நம்பும் கருத்து யாரையும் கொல்வதில்லை.

நீங்கள் உண்மையென்று கூறும் கருத்து கடவுளை கொடூரமானவராகக் காட்டுகிறது. நாங்கள் உண்மையென்று கூறும் கருத்து கடவுளை அன்புள்ளவராக, கருனையுள்ளவராகக் காட்டுகிறது

ஒருவன் நல்லவனாக, தூய்மையான மனமுடையவனாக, பிறர் துன்பம் கண்டு,மனம் இறங்கி ,அவர்களுக்கு உதவுபவனாக,ஆனால் ஒரு இந்துவாகவோ,இஸ்லாமியராகவோ,புத்த மதத்தவராகவோ இருந்தால்,கர்த்தரானவர் அவர் கிருஸ்தவ மதத்தில் சேராததால் அவரை மீளா நரகத்தில் தள்ளுவார் என்று கூறுகிறீர்களா?

அல்லது ஒரு பாவமும் அறியாத ஒரு பிஞ்சுக் குழந்தை ஒரு விபத்தில் இறப்பதாக வைத்துக் கொள்வோம் அந்தக் குழந்தை கிறிஸ்தவக் குழந்தையாக இல்லாததால் கர்த்தர் அந்தக் குழந்தையை நிரந்தர எரி நரகத்தில் தள்ளுவாரா?

கர்த்தர் ஒன்றும் காட்டு மிராண்டி அல்ல திரு HARD TRUTH .தயவு செய்து கர்த்தரை கொடூரமானவராக சித்தரிக்க வேண்டாம்.அவர் அன்பு மயமானவர்,கருணை மயமானவர்.அவர் அந்த தூய மனம் படைத்த இரக்க குணமும், பிறருக்கு உதவும் தன்மையுடைய அந்த மனிதரையும், ஒரு பாவமும் அறியாத அந்தப் பிஞ்சுக் குழந்தையையும்-சராசரி கிறிஸ்தவனைக் காட்டிலும் அதிக அன்போடும்,கருணையோடும், ஏற்றுக் கொள்வார்.இப்படித்தான் கடவுளைப் பற்றி நாங்கள் உண்மையென்று கூறும் கருத்துக் கூறுகிறது.
சகோ திருச்சிக்காரர் அவர்களே,

என் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை BOLD ஆக்கியதற்கு நன்றி.

Dear Dhanabal Sir,

Your comments are fantastic, fit to be engraved in Golden words.

Your comments shows your love, mental maturity and politeness.

I have no hesitation to say that you are writting much better than me.

Thanks & Regards,

Thiruchchikkaaran

சகோ திருச்சிக்காரர் அவர்களே,

பாராட்டுகளுக்கு நன்றி.

///I have no hesitation to say that you are writting much better than me.///

இது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.ஆனால் நீங்கள் அனைத்து தலைப்புகளிலும் அது சம்பந்தமான ஆழ்ந்த அறிவுடன் வாதிடுகிறீர்கள்.உதாரணமாக தமிழ் ஹிந்து தளத்தில் உங்கள் பின்னூட்டங்களைக் கூறலாம்.ஆனால் நான் அப்படியல்ல.நீங்கள் ஒரு வகையிலும், நான் வேறு வகையிலும் கூறியிருக்கிறோம்.அவ்வளவு தான்.

உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தனபால். உங்கள் அணுகுமுறை அருமையா இருக்கு. இப்படி ஒரு அன்பான விவாதத்தில்தான் நாம் தெளிவான தீர்வுக்கானமுடியும்.

//“அனைத்து மதங்களும் ஒரே கடவுளை அடையும் பாதைகளே” என்றக் கருத்து உண்மை இல்லை என்று வைத்துக்கொண்டாலும், அதனால் ஒரு மனிதன் கூட கொல்லப்பட மாட்டான்.
ஆனால் “நீங்கள் கூறும் என் கடவுள்,என் மதம் மட்டுமே உண்மை” என்றக் கருத்து ஒரு வேளை உண்மையாக இருந்தாலும் அதனால் பலர் கொல்லப்படுவது உறுதி. //

நான் மதத்தை பற்றி பேச விரும்பவில்லை. மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. தேவன் கிரிச்த்துவனையோ, இந்துவையோ படைக்கவில்லை. அவர் மனிதனை படைத்தார்.
கொல்லப்படுவது உறுதி என்று எப்படி கூறுகிறீர்கள். இதுவரை அப்படி கொலை செய்தவர்கள், ஏசுவுக்காக அதை செய்யவில்லை. அவர்கள் செய்த கொலைகளுக்கு இயேசுவின் பெயரை வைத்துவிட்டார்கள். உலகபாவங்களை சுமக்கும் இயேசு அந்த பாவத்தையும் இப்போது சுமக்கிறார்.
மறுகன்னத்தை காட்டு என்று கூறியவர் பெயரில் ஒருவன் கொலைசெய்தேன் என்று கூறினால், அவனை பற்றி நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

//நீங்கள் உண்மையென்று கூறும் கருத்து கடவுளை கொடூரமானவராகக் காட்டுகிறது. நாங்கள் உண்மையென்று கூறும் கருத்து கடவுளை
அன்புள்ளவராக, கருனையுள்ளவராகக் காட்டுகிறது//
நான் சொல்லும் கருத்து கடவுளை நீதியுள்ளவராக, நியாயம் உள்ளவராக காட்டுகிறது. கடவுள் கருணை உள்ளவர்தான். அதனால்தான் உலக பாவங்களுக்காக தானே இந்த உலகிற்கு இறங்கிவந்து உலக பாவங்களுக்காக பரிகாரம் செய்தார். எத்தகைய கொடூர பாவியாய் இருந்தாலும். உண்மையாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், அவனை மன்னித்தார், மேலும் மன்னிப்பார்.
அவர் பரிசுத்தாராக, புனிதமாக இருப்பதினால், பாவத்தை (பாவியையல்ல) அவர் வெறுக்கிறார். பாவத்துடன் அவரோடு ஒன்று கலக்க முடியாது. அதானாலேயே அவர் நிராகரித்த இடமான, தேவ அனுக்கிரகம் இல்லாத இடமான நரகதிர்ர்க்கு தள்ளி விடுகிறார்.
தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ கிருபை பெறுவான்.
நீங்கள் மற்றும் திருச்சிக்காரன் எல்லாம் பாவமில்லாதவர்கள் என்றால், விட்டுவிடுங்கள். நான், பாவப்பட்ட, அந்த பாவத்திலிருந்து விடுபட ஏங்கி இருப்பவர்களை தேடி சென்று, இயேசுவை பற்றிய நற்செய்தியை தருகிறேன்.

//ஒருவன் நல்லவனாக, தூய்மையான மனமுடையவனாக, பிறர் துன்பம் கண்டு,மனம் இறங்கி ,அவர்களுக்கு உதவுபவனாக,ஆனால் ஒரு இந்துவாகவோ,இஸ்லாமியராகவோ,புத்த மதத்தவராகவோ இருந்தால்,கர்த்தரானவர் அவர் கிருஸ்தவ மதத்தில் சேராததால் அவரை மீளா நரகத்தில் தள்ளுவார் என்று கூறுகிறீர்களா?//
ஒருவன் ஆயிரம் நல்ல செயல்களை செய்து இருக்கலாம். ஆனால், அவன் பாவியாய் இருந்தால். அவன் பாவம் மன்னிக்கப்படாமல் இருந்தால் அவன் இறைவனை அடைவதில்லை.

ஒரு கிண்ணத்தில் பாலூற்றி அதில் நல்ல நல்ல பாதாம், பிஸ்தா (நற்செயல்கள்) போன்றவை போட்டு, சிறிது விஷம் (பாவம்) கலக்கினால், அதை யாராவது பருகுவோமா? அதில் நல்ல விஷயங்கள் இருந்தால் அந்த ஒரு கேட்ட விஷயம் அனைத்தையும் கெடுக்கிறதே? அந்த பாலை நாம், நாய் கூட குடித்து விடாதபடி புறம்பான இடத்தில் ஊற்றிவிடுகிறோம். பாவமுள்ள மனுஷனும் அந்த பாலை போலவே நடத்தப்படுவான். தெரிந்தோ தெரியாமலோ நம் மனித வாழ்வில் பாவம் கலக்கிறது. அந்த பாவ விஷத்தை, யாரவது மாற்றவேண்டும். இயேசு அந்த விஷத்தை நமக்காக பருகினார் (ஆலகால விஷத்தை சிவன் பருகிதை போல்). அந்த விஷத்தின் விளைவை தானே ஏற்றார். அவரை நம்பி அவரை ஏற்றுக்கொண்டோர், தேவனை அடைவர்.

Hard Truth

(Will Continue…)

//கர்த்தர் ஒன்றும் காட்டு மிராண்டி அல்ல திரு HARD TRUTH .தயவு செய்து கர்த்தரை கொடூரமானவராக சித்தரிக்க வேண்டாம்.அவர் அன்பு மயமானவர்,கருணை மயமானவர்.அவர் அந்த தூய மனம் படைத்த இரக்க குணமும், பிறருக்கு உதவும் தன்மையுடைய அந்த மனிதரையும், ஒரு பாவமும் அறியாத அந்தப் பிஞ்சுக் குழந்தையையும்-சராசரி கிறிஸ்தவனைக் காட்டிலும் அதிக அன்போடும்,கருணையோடும், ஏற்றுக் கொள்வார்.//
தேவன் அன்புமயமானவர், அதே நேரத்தில் அவர் நீதியுள்ள நியாயாதிபதி. அவர் நீதியுள்ளவர் என்பதால்தான், பாவத்திற்கு தண்டனை என்பதும், பரிகாரம் என்பதும் வந்தது. அவர் அன்புள்ளவர் என்பதால்தான், அந்த பாவங்களுக்கு தானே தண்டனையை அனுபவித்து, பாவத்தை பரிகரித்து, மன்னிப்பையும் வழங்கினார் (தன் பாவங்களுக்காக வருந்தி மனம்திரும்புபவர்க்கு). சிறு பிள்ளைகள் விஷயத்தில், தன் முடிவை தானே எடுக்க முடியாதநிலையில் அவர்களை தேவன் தண்டிக்க போவதில்லை. தாழ்மை இல்லாத மனிதன்தான், இவர் என்னை என்ன மன்னிப்பது என்று வீம்புபண்ணுவான். அதனால், அவன் தன் பாவத்தினிமித்தம் நியாயதீர்ப்படைவான். God’s standard on holyness is much higher than man’s standard. You be the judge for yourself and see whether you match the holyness that God is looking. If you feel that you are good enough and you deserve to be with GOD. It is fine. Else seaking for forgiveness to GOD is the only way.

Thanks,
Hard Truth

திரு HARD TRUTH அவர்களே,

//கொல்லப்படுவது உறுதி என்று எப்படி கூறுகிறீர்கள். இதுவரை அப்படி கொலை செய்தவர்கள், ஏசுவுக்காக அதை செய்யவில்லை. அவர்கள் செய்த கொலைகளுக்கு இயேசுவின் பெயரை வைத்துவிட்டார்கள். உலகபாவங்களை சுமக்கும் இயேசு அந்த பாவத்தையும் இப்போது சுமக்கிறார்.
மறுகன்னத்தை காட்டு என்று கூறியவர் பெயரில் ஒருவன் கொலைசெய்தேன் என்று கூறினால், அவனை பற்றி நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்///

எந்த மதமும், எந்தக் கடவுளும் வன்முறையை போதிக்கவில்லை.அன்பையே போதிக்கிறது.அந்த அன்பான போதனைகளையும், அன்பு கடவுளைப் பற்றியும் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்வதே அந்த மத நூல்களை எழுதியவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.ஆனால், நாளடைவில் இது மதம் மாற்றும் செயலாக மாறியது.இந்த மதம் மாற்றும் செயலால் “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு” என்று கூறியவர் பெயரில் பல கொடூரங்கள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.உலகில் உள்ள அனைத்து நாடுகளில் உள்ள கடைசி மனிதன் வரை தன் மதத்தையும், தன் கடவுளையும் மட்டுமே ஏற்று வழிபடவேண்டும் என்று உலகின் பெரிய இரண்டு மதங்கள் மதம் மாற்றும் செயலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது.”என் கடவுள், என் மதம் மட்டுமே உண்மை” என்ற கொள்கை உடைய இந்த இரண்டு மதங்களும் ஒன்றை ஒன்றுமதம் மாற்ற முயற்ச்சிக்கும் போது, ஏற்படப் போகும் புனிதப் போரிலும், சிலுவைப் போரிலும் வன்முறை நடக்காது என்றும் ஒருவரும் கொல்லப்பட மாட்டார்கள் என்றும் உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?

///நான் சொல்லும் கருத்து கடவுளை நீதியுள்ளவராக, நியாயம் உள்ளவராக காட்டுகிறது.///

ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், தீயவனாக இருந்தாலும் அவன் செய்த நல்ல, தீய செயல்களுக்காக அல்லாமலும், தன்னை மட்டுமே கடவுளாக ஏற்காததால், (ஒருவன் தான் செய்த தீமைகளுக்காக மனம் வருந்தி) தன்னிடம் மட்டுமே மன்னிப்புக் கேட்காததால் அவனுக்கு நிரந்தர நரகம் தருபவரா நீதியுள்ளவர்??? நியாயம் உள்ளவர்???.

இந்த மத மாற்றும் கருத்து மட்டும் இல்லாதிருந்தால் கர்த்தராகிய இயேசு எவ்வளவு கருணையுள்ள, அன்புள்ள கடவுளாகக் காட்சி தந்திருப்பார்.

///நீங்கள் மற்றும் திருச்சிக்காரன் எல்லாம் பாவமில்லாதவர்கள் என்றால், விட்டுவிடுங்கள். நான், பாவப்பட்ட, அந்த பாவத்திலிருந்து விடுபட ஏங்கி இருப்பவர்களை தேடி சென்று, இயேசுவை பற்றிய நற்செய்தியை தருகிறேன்///

நான் யாருக்கும் மிகப் பெரிய துன்பம் தரும் பாவங்கள் செய்ததாக தெரியவில்லை.ஆனால் சிறிய அளவில் பாவங்கள் செய்திருக்கிறேன்.அதை நான் கடவுளிடம் “அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த பாவங்களை மன்னித்து காத்து ரட்சிக்க வேண்டும் பகவானே ” என்று வேண்டியுள்ளேன்.இருந்தாலும் நான் செய்த நன்மையின் பலனையும், தீமையின் பலனையும் நானே அனுபவிக்கவே விரும்புகிறேன்.

///சிறு பிள்ளைகள் விஷயத்தில், தன் முடிவை தானே எடுக்க முடியாதநிலையில் அவர்களை தேவன் தண்டிக்க போவதில்லை. ///

அதாவது பட்சிலம் குழந்தைகளுக்கு கர்த்தர் தான் உண்மையான கடவுள், கிருஸ்தவ மதமே கர்த்தரிடம் அழைத்துச் செல்லும் மதம் என்று தன் முடிவை தானே எடுக்க முடியாதநிலையில் அவர்களை தேவன் தண்டிக்க போவதில்லை என்று கூற வருகிறீர்கள் அப்படித்தானே ? தன் முடிவை தானே எடுக்க முடியாதநிலையில், உள்ள மற்ற மதத்தவர்களின் பிஞ்சுக் குழந்தைகளை கர்த்தர் நிரந்தர நரகத்தில் தள்ளமாட்டார் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளதா ??? தயவு செய்து கூறவும்.

///ஒருவன் ஆயிரம் நல்ல செயல்களை செய்து இருக்கலாம். ஆனால், அவன் பாவியாய் இருந்தால். அவன் பாவம் மன்னிக்கப்படாமல் இருந்தால் அவன் இறைவனை அடைவதில்லை.///

ஒருவன் நல்லவனாக, இருந்து ஆனால் அவன் சிறிய அளவில் பாவங்கள் செய்து,(உங்கள் மொழியில் பாவியாக இருந்து), அந்த பாவத்திற்காக மனம் வருந்தி, தன் பாவம் மன்னிக்கப்பட ஒரு இந்து தெய்வத்திடம் முறையிட்டு வேண்டினால் அவனை ஏன் கர்த்தர் மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டார்? நீங்கள் கூறிய படி, இங்கே அவன் தான் செய்த பாவத்திற்காக மனம் வருந்துகிறான், அந்த கடவுளை வேறு பெயரிட்டு அழைத்து, மன்னிப்புக் கேட்கிறான்.அவனை கர்த்தர் மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றால், இங்கே தான், இந்த மத மாற்றக் கருத்தால் தான், கர்த்தர் இரக்கமற்றவராக, கொடூரமானவராக ஆக்கப்படுகிறார்..

அனைத்துக் கடவுளும் ஒன்று தானே??? ஏன் ஒருவன் தான் செய்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டோ, இந்து கடவுள்களிடம் மன்னிப்புக் கேட்டோ இறைவனை அடையக் கூடாது.???

இறுதியாக கடவுள் என்பவர் இந்த ப்ரபஞ்சத்திர்க்கே கடவுள், எல்லை இல்லாதவர். இந்த பிரபஞ்சமே அவரிடமிருந்தே உருவானது.

நாம் வாழும் பூமி என்பது இந்த பிரபஞ்சம் என்னும் கடலின் ஒரு துளி மட்டுமே.நம் சூரியன் என்னும் நட்சத்திரம் போன்று கோடிக்கணக்கான நட்சத்திரம் சேர்ந்ததே ஒரு நட்சத்திர மண்டலம் (GALAXY ).இதைப் போன்ற கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன.(இது பள்ளிக் குழந்தைக்கு கூட தெரிந்ததுதான்.இருந்தாலும் வரிகளின் தொடர்ச்சிக்காக…)

இவ்வளவு மிகப்பெரிய பிரபஞ்சத்தை தன்னுள் கொண்ட, கர்த்தராகிய கடவுள், ஏன் கோடிக்கணக்கான GALAXY யில் ஒன்றான நம் GALAXY -ல் உள்ள, கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றான நம் சூரியனை, சுற்றும் 8 கோள்களில் ஒன்றான நம் பூமியில், உள்ள ஒரு குறிப்பிட்ட கிருஸ்தவ மதத்திற்கு மட்டும் சொந்தக்காரராக கூறுவது அவரின் எல்லையில்லாத் தன்மையை, மிகவும் இழிவு செய்தது போல் ஆகாதா???

இஸ்லாமியரும் அல்லாவை மிகப்பெரியவன் என்றே கூறுகிறார்கள்.இந்துக்களும் கடவுளை எல்லை இல்லாதவன் என்றே அழைக்கிறார்கள்.எல்லா மதங்களும் இறைவனை எல்லாவற்றையும் விட பெரியவன், எல்லையில்லாதவன் என்றே கூறுகிறது.அப்படி எல்லையில்லாத மிகப்பெரிய கடவுள் என்றால் அது ஒன்றே ஒன்று தானே இருக்க முடியும்.

மிகப்பெரிய எல்லையில்லாத கர்த்தர், மிகப்பெரிய எல்லையில்லாத அல்லாஹ், மிகப்பெரிய எல்லையில்லாத பிரம்மம் என்று தனித்தனியாக எப்படி இருக்க முடியும்??? எல்லையில்லாதது ஆதியும்,அந்தமும் இல்லாதது என்றாலே அது ஒன்றாகத்தானே இருக்க முடியும்???.இந்த ஆதியும் அந்தமும் இல்லாத கடவுள் ஒருவராகத் தானே இருக்க முடியும்???

அந்த ஒரேயொரு கடவுளையே பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர்.கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும்,பிரம்மம் என்றும்,சிவன் என்றும்,விஷ்ணு என்றும் அழைக்கின்றனர்.

இதையே “இருப்பது ஒன்றே :ஞானிகள் பல பெயர்களில் அழைக்கின்றனர்”. என்று வேதம் கூறுகிறது.

அந்த ஒரே இறைவனையே நீங்கள் கிருஸ்தவ மதம் மூலமும், நாங்கள் இந்து மதம் மூலமும், இஸ்லாமியர் இஸ்லாமிய மதம் மூலமும் அடைகின்றனர்.

///உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தனபால். உங்கள் அணுகுமுறை அருமையா இருக்கு. இப்படி ஒரு அன்பான விவாதத்தில்தான் நாம் தெளிவான தீர்வுக்கானமுடியும்///

மிகவும் நன்றி.அன்பாகவே விவாதித்து தெளிவான தீர்வைக் காண்போம்.

-அன்புடன் தனபால்.

//ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், தீயவனாக இருந்தாலும் அவன் செய்த நல்ல, தீய செயல்களுக்காக அல்லாமலும், தன்னை மட்டுமே கடவுளாக ஏற்காததால், (ஒருவன் தான் செய்த தீமைகளுக்காக மனம் வருந்தி) தன்னிடம் மட்டுமே மன்னிப்புக் கேட்காததால் அவனுக்கு நிரந்தர நரகம் தருபவரா நீதியுள்ளவர்??? நியாயம் உள்ளவர்???.//
மன்னிக்கவும் தனபால், உங்கள் புரிதல் தவறாக உள்ளது. ஒருவன் தான் செய்த பாவங்களுக்காகதான் தண்டிக்கப்படுகிறான். மன்னிப்பு கேட்காதது பாவம் அல்ல, அவனது தீய செயல்கள்தான் (தேவ நியதிப்படி) அவனுக்கு எதிராக சாட்சியாக இருக்கும்.
ஆனால் தேவனை சரணடைந்தால், தன் பாவங்களுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு கோரி, அவற்றை விட்டுவிட்டால், அவன் அந்த பாவங்களில் இருந்து மீட்க்கபடுகிறான்.
சரணடைதலை பற்றி கூறும்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. பாரதத்தில், பாஞ்சாலியை மானபங்க படுத்தியபோது, கண்ணன் எப்போது வந்தான்?
பாஞ்சாலி மற்றவரை உதவிக்கு அழைத்தபோது வந்தானா? இல்லை.
அவள் தன் சேலையை பற்றிக்கொண்டு தன் சுய பலத்தை நம்பிகொண்டிருக்கும் வரவில்லை.
அனைத்தையும் விடுத்து தன் கையை மேலேதூக்கி,முழுமையாக கண்ணனை சரணடைந்தவுடந்தான் வந்தான். பாஞ்சாலியை ரட்சித்தான். அனைத்து உயிர்களும் நானே என்று கூறிய உங்கள் கண்ணன் ஏன், பாஞ்சாலி மற்றவரை கூப்பிடும் போது, உதவவில்லை? Please think on this sir.
இயேசு கிருஸ்துவே இந்த உலகில் பாவத்தில் இருந்து மனிதரை ரட்சிக்க வந்தவர். அவரிடம் சரணடைந்தாலே பாவத்தில் இருந்து இரட்சிப்பு. வேறு யாரவது பாவத்தில் இருந்து மானுடத்தை ரட்சிக்க வந்தார்களா?

//மிகப்பெரிய எல்லையில்லாத கர்த்தர், மிகப்பெரிய எல்லையில்லாத அல்லாஹ், மிகப்பெரிய எல்லையில்லாத பிரம்மம் என்று தனித்தனியாக எப்படி இருக்க முடியும்??? எல்லையில்லாதது ஆதியும்,அந்தமும் இல்லாதது என்றாலே அது ஒன்றாகத்தானே இருக்க முடியும்???.இந்த ஆதியும் அந்தமும் இல்லாத கடவுள் ஒருவராகத் தானே இருக்க முடியும்???//

Very true. I thank you Mr.Dhanapal. God should be certainly only one. We are on the same page on this.

//அந்த ஒரேயொரு கடவுளையே பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர்.கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும்,பிரம்மம் என்றும்,சிவன் என்றும்,விஷ்ணு என்றும் அழைக்கின்றனர்.

இதையே “இருப்பது ஒன்றே :ஞானிகள் பல பெயர்களில் அழைக்கின்றனர்”. என்று வேதம் கூறுகிறது.//
But, only Jesus is the one, who came into this earth to save the mankind from sin.
And பிரம்மம் is nothing but a creator. Or the Indian version of saying CREATOR.
சிவன் is nothing but LOVE.
விஷ்ணு is nothing but preserver.
அல்லாஹ் means “The GOD”.
And all the above are not specific to any religion. All are common to mankind.
Did any of them came to this world with the purpose of cleansing the mankind from SIN? I am not asking you to change your name to a western name, I am not asking you to changing your country and all. I am just providing an information, that Jesus came to this world to die for our sins. If at all, you want to get rid of your sins, you can surrender to HIM (just like Panjali surrenedered to Krishna), and Jesus can save you.
Otherwise HE will not be interfering with you on the Judgement day.

Hope you understand,
Hard Truth

I want to clarify here that the word “Kaafir” is not a bad or abusive word.
The arabic meaning of that word is “Rejecter of the faith”. It means that who rejectes Islam.
This term was used in Quran to differentiate between Muslims and Non-Muslims. If we are calling anyone as a Non-Muslim, nobody can oppose it. So, it derives that the word “Kaafir” is not an abusive word.
Thanks.

pleae go to the following site for more information:
http://www.milligazette.com/Archives/01052001/Art28.htm

Dear Mr. Ameer,

Thanks for having read the articleand regstered your comments.

As you clarified word Kaafirs were used to denote those who rejected islaamic faith.

In the Arabian peninsula during Mohammed (PBUH)s period, the arabic people were not civilised. By establishing Islam Mohammed (PBUH) aaranged some orderly manner, as those who embarce islam had to obey the strict codes posted by it. Those who did not embarce islam continued their old un orderly way of living, or uncivilised way.

The Kafirs in fact meant to represent those unorderly people. Hence the word “KAFIR” is accompanied with some hatredness, hate directed towards the KAFIRS

Dear Mr.Thiruchchikkaaran,

Peace be with You.

Please understand the word “KAFIR” is mis-understood and mis-represented as an abusive word.
There is no hatredness in the word at all.

It’s like that who accepts Hinduism called “Hindu” and who rejects or not accepts Hiduism called “Non-Hindu”. If you are calling me, You are a non-Hindu. Shall I angry with you? No. I am not.
Please take the dirct meaning of the word.

Thanks.

Dear Mr. Ameer,
Peace be apon you.

Its nice to see your comments. Its very nice to note that you dont attach any hatredness along with the word KAFIR. I thank you for the same. I am more optimistic now, as we want to remove hatredness from people’s mind and induce love instead.

To the best of my knowledge, a Hindu does not use the word ” non- hindu”. May be a Hindu call other person as a Christian, or Buddhist or Muslim.

I have only mentioned, from what I have read in literature. In the Oxford dictionary the word kafir is termed as abusive and offensive term.
There is a notion that if a person is called as KAFIR, he (the KAFIR) may be consdered as a foe.

But with brothers like you , I am assured of peace.

சகோதரர் திரு. அமீர் அவர்களே,

காபிர் என்பதற்கான நேரடி அர்த்தம் என்ன என்பதாக ஒரு நண்பர் என்னிடம் சொல்லியது வருமாறு,

” ” காப் – kaaf ” என்பது அரபி, உருது மற்றும் இந்தி மொழிகளில் உபயோகப் படுத்தப் படும் ஒரு சொல். அதன் பொருள் பயப்படுதல் என்பது. பயப்படுவதை விட இன்னும் அதிகமாக திகிலடைவது என்பதே சரியான பொருள்” என்றார். “காபிர் என்றால் எதிர்ப்பவனைப் பார்த்து திகிலடைபவன், பயந்தாங்குளி என்பதாக கொள்வதே நேரடியான பொருள்” என்றார்.

சமீபத்தில் ஊர்மிளா மண்டோட்கர் நடித்து என்னும் இந்திப் படம் வெளிவந்ததாகவும் அவர் உதாரணம் காட்டினார்.

இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

//அந்த ஒரே இறைவனையே நீங்கள் கிருஸ்தவ மதம் மூலமும், நாங்கள் இந்து மதம் மூலமும், இஸ்லாமியர் இஸ்லாமிய மதம் மூலமும் அடைகின்றனர். //
மதம் மூலம் மனிதன் அடையும் இடம் கல்லறை மட்டுமே. சத்தியமே ஒருவனை இறைவனை அடைய செய்யும்.
Hard Truth

திரு HARD TRUTH அவர்களே,

///மன்னிக்கவும் தனபால், உங்கள் புரிதல் தவறாக உள்ளது. ஒருவன் தான் செய்த பாவங்களுக்காகதான் தண்டிக்கப்படுகிறான். மன்னிப்பு கேட்காதது பாவம் அல்ல, அவனது தீய செயல்கள்தான் (தேவ நியதிப்படி) அவனுக்கு எதிராக சாட்சியாக இருக்கும்.
ஆனால் தேவனை சரணடைந்தால், தன் பாவங்களுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு கோரி, அவற்றை விட்டுவிட்டால், அவன் அந்த பாவங்களில் இருந்து மீட்க்கபடுகிறான்///

மன்னிக்கவும் திரு HARD TRUTH எனது புரிதல் சரியே.

1 . ஒருவன் 99.99% நல்ல செயல்கள் செய்தவனாக இருந்தாலும் 00.01 % பாவம் செய்ததால் அவன் பாவியாகிறான்.அந்த 00.01 % பாவத்திற்காக அவன் யேசுவிடம் பாவமநிப்பு கோராததால்,இவனைக் கர்த்தர் நிரந்தர நரகத்திற்கு அனுப்புகிறார்.அவன் செய்த 99 .99 % நல்ல செயல்கள் இங்கே கர்த்தர் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை .சரிதானே??

2 . ஒருவன் 99.99% பாவியாக, யாருக்கும் சிறிதளவு கூட நன்மை செய்யாமல் தன் வாழ்நாள் முழுதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இன்னும் எல்லா தீய செயல்களையும் செய்பவன் தன் இறுதிக்காலத்தில் உண்மையிலேயே மனம் திருந்தி, பாவிகளை இரட்சிக்கப் பிறந்த யேசுவிடம் பாவ மன்னிப்பு கோருகிறான்.பின் தன் பாவசெயலை விட்டுவிடுகிறான்.இவனைக் கர்த்தர் தன் பரலோக ராஜ்யத்தில் இடமளிக்கிறார்.அவன் செய்த 99.99 % பாவங்கள் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.மன்னிக்கப்பட்டன.சரிதானே???

இதிலிருந்து நீங்கள் கூறவருவது என்னவென்றால் …………

ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அவன் பாவியே.அதாவது உலகில் உள்ள அனைவரும் பாவிகளே. தேவனின் ராஜ்யத்தில் இடமில்லை.

ஒருவன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும்,அவனது பாவங்கள் ஏசுவால் மன்னிக்கப்பட்டால் அவனுக்கு தேவனுடைய ராஜ்யத்தில் இடமுண்டு.

அதாவது யேசுவிடம் பாவ மன்னிப்பு கோருவது என்பதே உங்களுக்கு முக்கியமாகப் படுகிறது.ஒருவன் செய்த நல்ல செயல்களோ தீய செயல்களோ முக்கியமில்லை.ஒருவன் நல்லவனோ கெட்டவனோ யேசுவிடம் பாவமன்னிப்பு பெறுவதே கர்த்தருக்கு முக்கியம்.

உலகில் உள்ள எந்த நல்லவனாவது யேசுவிடம் பாவமன்னிப்பு பெறாமல் கர்த்தரின் ராஜ்யத்தில் நுழைய முடியுமா???

///And பிரம்மம் is nothing but a creator. Or the Indian version of saying CREATOR ///

பிரம்மம் என்பது வேறு பிரம்மா என்பது வேறு.பிரம்மம் என்றால் ஆதி அந்தம் இல்லாத இந்த பிரபஞ்சம் முழுதும் உள்ள ஒவ்வொரு உயிரிலும்,தூணிலும்,துரும்பிலும் மற்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் எல்லையில்லாத,மனத்திற்கும், வாக்கிற்கும் எட்டாத அந்த “மாபெரும் சக்தியான கடவுள்” .

பிரம்மம் என்றாலும் கடவுள் , அல்லாஹ் என்றாலும் கடவுள், கர்த்தர் என்றாலும் கடவுள்.

திரு HARD TRUTH அவர்களே,

//அந்த ஒரே இறைவனையே நீங்கள் கிருஸ்தவ மதம் மூலமும், நாங்கள் இந்து மதம் மூலமும், இஸ்லாமியர் இஸ்லாமிய மதம் மூலமும் அடைகின்றனர். //
மதம் மூலம் மனிதன் அடையும் இடம் கல்லறை மட்டுமே. சத்தியமே ஒருவனை இறைவனை அடைய செய்யும்.
Hard Truth///

வேறு எதன் மூலம் கடவுளை அடையலாம்,வாழ் நாள் முழுதும் கொடூர செயல்களை செய்துவிட்டு மனம் திருந்தி,கிருஸ்தவ மதம் கூறும் யேசுவிடம் பாவமன்னிப்பு பெறுவதன் மூலமா???

PEACE BE UPON WITH US.

Thanks brother Mr. Thiruchikkaran for your understanding and for your valuable comments.

As for as I know, the word “Kafir” in Arabic is derived from the root word “Kufr” which means who rejects the faith of Islam [Oneness of God] or simply we say Unbeliever of Islam.

The word used in Quran to differentiate between Muslims & Non-Muslims in some context [If we are going to state other than “Non-Muslim”, then we have to state Hindu, Jew, Christian, Buddhist etc. etc.
I think that’s the reason, the word used in Quran as “Non-Muslim” and it includes all the people other than Muslims].

Thanks once again and God bless us to reveal the truth at all the time.

நன்றி சகோதரர் அமீர் அவர்களே,

இன்றைய கால கட்டத்தில் ஒரு மனிதனை முஸ்லீமா இல்லையா என்று பிரித்துப் பார்ப்பது அவசியம் இல்லை என நினைக்கிறேன். எல்லோரையும் மனிதனாகப் பார்ப்பதே சரியானது என்பது உங்களுக்கும் தெரியும்.

ஒருவன் முஸ்லீமா, இந்துவா, கிறிஸ்துவனா என்பதை விட அவன் பிறருக்கு கெடுதல் நினைக்காதவனாக இருக்கிறானா, பிறரை வெறுக்காதவனாக இருக்கிறானா என்று தெரிந்து கொண்டாலே போதுமானது.

நம்மில் பெரும்பாலோனோர் நல்லெண்ணம் உடையவர்களாகவே இருக்கிறோம் எனக் கருதுகிறேன். சிலர் தவாறான வழியில் சென்றால் அவர்களையும் நல வழிக்கு கொண்டு வர முடியும் என நம்புகிறேன்.

எனவே இந்த காபிர் போன்ற வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

இதை உங்களை சந்திப்பவர்களிடமும் கூறுங்கள். வெறுப்பு கருத்துக்களை விலக்கி அன்புக் கருத்துக்களை பரப்புவதில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என நம்புகிறேன். அவ்வாறு செய்வதால் மத நல்லிணக்கமும் அமைதியும் உருவாகும்.

PEACE BE WITH ALL OUR BROTHERS & SISTERS.

Thanks Brother Thiruchikkaran.

I assure you that I never called anyone as “Kafir” in my whole life. God should help me to avoid in the future also.

Allah [God] says in Quran: All the people in the world are from one root [Adam & Hawwa].

If we understand and accept this concept whether you are an Indian or American or Hindu or Muslim or christian, we are all from one Father & Mother. Hence, there is no division between us.

We all pray to Almighty God that make Brotherhood between us.

Dear Brother Mr. Ameer,

PEACE BE UPON YOU.

We all thank you and appreciate you for your goodwill.

We can consider each and every one as brothers and sisters.

I hope that Love and Kindness can create brotherhood.

As an honest follwer in Religious harmony, I have respect for all religions. We understand your respect and obedience for Allah. I already mentioned in many articles that I am ready to participate in the Namaaz at Mosque, which I am already doing occassionally.

Referring to the Adam & Hawwa ancestory, we leave that task to Scholars to reserach upon.

But I wish to bring to your attention that the Brothrhood can be built , not necessarily on the Adam and Eve concept.

Becuase the Adam and Eve concept had failed to produce Brotherhood but only bloodshed.

Crusade wars, in which crores of people were killed, were fought between those who accepted the Adam, Eva ancestory concept.

Isrelis construct walls between Philisthine areas, the walls make them to travel many miles to reach the neighbouring street jusust metres away- Both the Isrelis and Philisthines accept the Adam and Eve were their ancestors.

Here we live in adjacent houses, live amicably, go to films together, eat together – Why shall we get into this Adam, Eve concept or any other similar concepts?

//1 . ஒருவன் 99.99% நல்ல செயல்கள் செய்தவனாக இருந்தாலும் 00.01 % பாவம் செய்ததால் அவன் பாவியாகிறான்.அந்த 00.01 % பாவத்திற்காக அவன் யேசுவிடம் பாவமநிப்பு கோராததால்,இவனைக் கர்த்தர் நிரந்தர நரகத்திற்கு அனுப்புகிறார்.அவன் செய்த 99 .99 % நல்ல செயல்கள் இங்கே கர்த்தர் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை .சரிதானே??//
If I give you 99% of milk and 1% of poison, is that safe to drink.

Hard Truth

ஒரு மனிதன் மோட்டார் பைக்கில் செல்லும்போது ஒருவரி இடித்து அவர் கீழே விழுந்து கை முறிந்து விடுகிறது. கை அடிபட்ட நபருக்கு சிகிச்சைக்கான செலவையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.
அவர் செய்த குற்றத்துக்காக

அவருக்கு அபராதமும் ஒரு மாத சிறை வாசமும் வழங்கப் படுவது சரியாக இருக்கலாம்.
அவர் செய்த சிறு குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப் பட வேண்டும் என்பது சரியா?

// ஒருவன் 99.99% பாவியாக, யாருக்கும் சிறிதளவு கூட நன்மை செய்யாமல் தன் வாழ்நாள் முழுதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இன்னும் எல்லா தீய செயல்களையும் செய்பவன் தன் இறுதிக்காலத்தில் உண்மையிலேயே மனம் திருந்தி, பாவிகளை இரட்சிக்கப் பிறந்த யேசுவிடம் பாவ மன்னிப்பு கோருகிறான்.பின் தன் பாவசெயலை விட்டுவிடுகிறான்.இவனைக் கர்த்தர் தன் பரலோக ராஜ்யத்தில் இடமளிக்கிறார்.அவன் செய்த 99.99 % பாவங்கள் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.மன்னிக்கப்பட்டன.சரிதானே???//
Very Correct. When GOD forgives, he really forgives and forgets it (unlike human beings). Also, in that attempt, he is allowing GOD to convert his heart to fit the Heavenly kingdom. He (the Ex-Sinner) is reconciled with GOD to be with him. And he is good enough to be in the Kingdom of GOD.
If you see in the Holy Bible, When Jesus was crusified, one of the Thief who was crusified along with Christ asks for forgiveness in his last moment and Jesus promises him that he will be with him in Paradise.

//ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அவன் பாவியே.அதாவது உலகில் உள்ள அனைவரும் பாவிகளே. தேவனின் ராஜ்யத்தில் இடமில்லை.//
Why I am going to say a good man as a sinner. If someone is good, he is good.
If someone is innocent, he is innocent.
If someone is holy, he is holy.
If someone is a sinner, he is a sinner. And only the people with sin doesn’t have place in the kingdom of GOD.

//ஒருவன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும்,அவனது பாவங்கள் ஏசுவால் மன்னிக்கப்பட்டால் அவனுக்கு தேவனுடைய ராஜ்யத்தில் இடமுண்டு.//
What is your problem, if a sinner is forgiven and given place in Kingdom of GOD? Why do you have to worry, if goodness is happening to someone. Probably, it would be great if you worry for someone who is not going to heaven.

//அதாவது யேசுவிடம் பாவ மன்னிப்பு கோருவது என்பதே உங்களுக்கு முக்கியமாகப் படுகிறது.ஒருவன் செய்த நல்ல செயல்களோ தீய செயல்களோ முக்கியமில்லை.ஒருவன் நல்லவனோ கெட்டவனோ யேசுவிடம் பாவமன்னிப்பு பெறுவதே கர்த்தருக்கு முக்கியம்.//
If you are sinless, you need not ask for forgivness. But, if you are with sin, you NEED to go thru Jesus to take part in the Kingdom of GOD.

//உலகில் உள்ள எந்த நல்லவனாவது யேசுவிடம் பாவமன்னிப்பு பெறாமல் கர்த்தரின் ராஜ்யத்தில் நுழைய முடியுமா???//
Jesus came to the earth for sinners to get saved. If someone is sinless, they can don’t need Jesus. But, only when they are SINLESS. Everyone can examine their own heart to know whether they are sinless or not.

Thanks,
Hard Truth

சகோதரர் Hard Truth அவர்களின் கருத்தில் முன்னேற்றம் இருக்கிறது என நம்புகிறேன்.

ஒரு மனிதன் தன்னைத் தானே சீர் படுத்திக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ முடியும் என்பதை திரு. Hard Truth இப்போது மறுக்கவில்லை. இதை நாம் வரவேற்கிறோம். நீதிமான்களும் இவ்வுலகில் உண்டு என்கிற இயேசு கிறிஸ்துவின் கருத்தை திரு. Hard Truth உணர்ந்து கொண்டு இருக்கிறார் எனவே தோன்றுகிறது.

நியாய வாழ்க்கை வாழ்பவர்களும் இயேசு கிறிஸ்துவின் அன்புக் கருத்துக்களுக்காக அவரை மரியாதை செய்ய தயங்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

பாவத்தை செய்து விட்டு மன்னிப்புக் கேட்பதை விட, இயேசு கிறிஸ்து சொன்னது போல பாவம் செய்யாமல் வாழ்வதே சிறந்தது.

//Why I am going to say a good man as a sinner. If someone is good, he is good.
If someone is innocent, he is innocent.
If someone is holy, he is holy.
If someone is a sinner, he is a sinner. And only the people with sin doesn’t have place in the kingdom of GOD.//

திரு. Hard Truth அவர்களின் இந்தக் கருத்து வரவேற்க்கப் பட வேண்டியது. இதுவும் மத நல்லிணக்கமே. இதுதான் மத நல்லிணக்கத்தின் முதல் படி. திரு. Hard Truth அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

//ஒரு மனிதன் தன்னைத் தானே சீர் படுத்திக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ முடியும் என்பதை திரு. Hard Truth இப்போது மறுக்கவில்லை. இதை நாம் வரவேற்கிறோம். நீதிமான்களும் இவ்வுலகில் உண்டு என்கிற இயேசு கிறிஸ்துவின் கருத்தை திரு. Hard Truth உணர்ந்து கொண்டு இருக்கிறார் எனவே தோன்றுகிறது. //
நான் எதிர்க்கவில்லை, அவ்வளவே.

//திரு. Hard Truth அவர்களின் இந்தக் கருத்து வரவேற்க்கப் பட வேண்டியது. இதுவும் மத நல்லிணக்கமே. இதுதான் மத நல்லிணக்கத்தின் முதல் படி. திரு. Hard Truth அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.//
நான் இந்த உலகின் எந்த ஒரு மதத்தையும் நம்பாதவன். அதனால் மதநல்லிணக்கம் என் குறிக்கோள் இல்லை. அடுத்தவரை நான் நியாயம் தீர்க்கபோவதில்லை, அவரவர் மனசாட்சியே அவர்களை நியாயம் தீர்க்கும். இதனால் என் நம்பிக்கையையோ என் கருத்துக்களையோ நான் மாற்றிக்கொண்டதாக அர்த்தம் இல்லை.

//பாவத்தை செய்து விட்டு மன்னிப்புக் கேட்பதை விட, இயேசு கிறிஸ்து சொன்னது போல பாவம் செய்யாமல் வாழ்வதே சிறந்தது.//
பாவ காரியங்களை செய்யாமல் இருப்பது இரண்டாம்படி, முதலில் இருக்கும் பாவங்களுக்கு என்ன செய்யலாம்? (இதற்காக, உங்களிடம் பாவம் உள்ளது என்று சொல்ல நான் துணியவில்லை).

Hard Truth

//பாவ காரியங்களை செய்யாமல் இருப்பது இரண்டாம்படி, முதலில் இருக்கும் பாவங்களுக்கு என்ன செய்யலாம்? //
இன்னும் கொஞ்சம் சிந்தியுங்கள்.

ஒருவன் பாவம் செய்யாமல் இருந்தால் சமூகத்துக்கு நன்மை. ஒருவன் பாவம் செய்தால் அதனால் இன்னொருவருக்கு பாதிப்பு ஏற்ப்படுகிறது. எனவே எது முதன்மையும், முக்கியய்த்துவமும் வாய்ந்தது?

நம்மால் பிறருக்கு துன்பம் வராமல் பார்த்துக் கொள்வதுதான் முதலில் செய்ய வேண்டியது.

எனவே பாவம் செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதுதான் முதலில் செய்ய வேண்டியது. நம்முடைய பாவத்தை கழுவுவதை பார்ப்போம் என்று நினைப்பது சுயநலமாகத் தானே கருதப் பட முடியும்.

ஏற்கெனவே செய்த பாவங்களுக்கு என்ன செய்யலாம்? யாருக்கு எதிராக பாவம் செய்தோமோ அவரிடம் போய், மனப் பூர்வமான வருத்தம் தெரிவித்து ,நாம் செய்த பாவத்தினால் அவருக்கு உண்டான பாதிப்பை ஈடு செய்வதே சரியான செயல். ஒரு பெண்ணை மணம் செய்வதாக ஆசை காட்டி அந்த பெண்ணோடு உறவு வைத்து விட்டு அந்தப் பெண்ணை ஏமாற்றி வேறு வூருக்கு சென்று விட ஒருவன், அந்தப் பாவத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரம் அந்தப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்து விட்டு, அவளை மணந்து கொண்டு இருவரின் வாழ்க்கையையும் வளமாக்குவதுதான்.

ஒருவருக்கு எதிராக பாவம் இழைத்து விட்டு, அதனால் அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டு இன்னொருவரிடம் போய் மன்னிப்பு கேட்பது எப்படி சரியாகும்? .

//ஒருவன் பாவம் செய்யாமல் இருந்தால் சமூகத்துக்கு நன்மை. ஒருவன் பாவம் செய்தால் அதனால் இன்னொருவருக்கு பாதிப்பு ஏற்ப்படுகிறது. எனவே எது முதன்மையும், முக்கியய்த்துவமும் வாய்ந்தது?//
I will take myself as a example here. Few years back, I have decided not to do any of the sinful activities. And I am doing by level best on it. People around me knows that I am a good man. They have high regards for me. Many come to me to seek my advice / help (my age also could be a reason), irrespective of religious barrier. I am doing my best on it. And I will do my best in this in future too. In this way, I am trying to be good to the society.
My daily actions shows that I am good person. But, what about my heart. I am really not so graceful as I appear. Many times, I get to peak of my anger, but still I show myself cool outside (coz, I dont want to hurt the other person and also dont want to spoil my reputation). Sometimes the movies put me into sensual thoughts (about other women eg:heroine of the movie). Ofcourse I dont go and sleep with other women. But, I had lust for that women in my thoughts atleast for a little time.
God looks into our hearts not our external appearance. Our intension matter a lot to GOD. When I go in my car, if I hit a pedastrian by mistake and that guy dies. I dont think that I am guilty in the sight of GOD. Probably the law of the nation might punish me for that. But, with a thought of killing I hit a person and even if the person escapes from it without any harm. The law of the nation might not punish me, but I will be a murderer in the sight of GOD.

Thanks,
Hard Truth

Dear Mr. Hard Truth,

//will take myself as a example here. Few years back, I have decided not to do any of the sinful activities. And I am doing by level best on it. //
kEEP IT UP!

We wish that you would enhance your mental maturity and avoid all the Sins!

Mental maturity can make one to see the story in a movie and the lust part of the movies wont affect him. Its not easy to the spirit to that level. But it is acheivable. How shall we see a movie, If our sister acted as a heroine?

//But, with a thought of killing I hit a person and even if the person escapes from it without any harm. The law of the nation might not punish me, but I will be a murderer in the sight of GOD.//

I dont think that you will ever think of killing a person. Whay shall we have intention to kill a person? We dont hate any one!

//If our sister acted as a heroine?//
This is a nice piece of advice. Such a thought process can work for me and many. There are few people in this world, who lust towards their own bloods like mother, sister, daughter, etc., I think you might be atleast aware about such people. How those people can escape lust (if they want to)? I know a research student, who came for an advice regarding his “Compelsive Sexual Disorder”. He was forced by sexual thoughts to do something, which he really dont want to do. His tears were saying that how sincere he is trying to overcome such a habit. Now, he had moved to different country and I dont know how is he doing. But I thing I can say, that mental strength or mental maturity is not everything. That guy was one of the top research scholar that time. And research needs lot of mental strength and stability.

//I dont think that you will ever think of killing a person. Whay shall we have intention to kill a person? We dont hate any one!//
I mean, if at all I think about killing someone. That itself is a sin. I need not commit it actually.

Hard Truth

Leave a reply to Hard Truth Cancel reply

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09